Blog

  • மனமகிழ மனமுறையும் பெருவிழாவே  நவராத்திரி!

    மனமகிழ மனமுறையும் பெருவிழாவே நவராத்திரி!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஒன்பது என்பது எண்களிலும் முக்கியமானது. ஜோதிடங்களிலும் முக்கிய மானது.எண்கணித ஜோதிடத்திலும் இன்றியமையாததாய் இருக்கிறது.இந்த ஒன் பதை நவ என்னும் பெயரினைக் கொடுத்து இராத்திரியுடன் இணைத்து நவராத்திரி என்றும் அழைக்கின்றோம்.நவராத்திரி என்றாலே ஒன்பது இரவுகள் என்பதையும் எல்லோரும் அறிவோம். நவ – என்றால் இன்னுமொரு கருத்தும் இருக்கிறது. அதாவது புதுமை என்பதையும் கருத்திருத்த வேண்டும். நவநாகரிகம் என்று – புதிய அம்சங்களுடன் வந்தமைந்த நாகரித்தைப் பெயரிட்டு அழைக்கிறோம் என் பதையும் யாவரும் அறிவோம்.புதுமைகள் பல வாழ்வில் தொடர்ந்து வரவேண்டும் என்னும் எண்ணத்தினால்த்தான் வருடந் தோறும் நவராத்திரியினைப் பக்தி பூர்வமாக அனுஷ்டித்து வருகிறோம் என்றும் எண்ணிடத் வைக்கிறதல்லவா !

    நவராத்திரி என்றவுடன் பெண்மைதான் முன்னே வந்து நிற்கும். பெண்மை என்றதும் அங்கு தலைமை தாங்குவது தாய்மைதானே! தாயினைத் தெய்வமாக வணங்கும் முறை தொன்று தொட்டு சமூகத்தில் இருந்து வருகிறது என்பதை வரலாற்றால் அறிந்து கொள்ளுகிறோம்.எம்மைப் படைத்த ஆண்டவனையே “அம்மையே” என்றுதான் அழைத்து ஆராதிக்கின்றோம். மணிவாசகப் பெருமானே “அம்மையே அப்பா ஒப்பிலாமணியே அன்பினில் விளைந்த ஆரமுதே” என்று தாயினையே முன்னிறுத்தி அந்தப் பரம்பொருளை விழிக் கின்றார். ” தாயினும் நல்ல தலைவர் என்றடியார்” என்றும், “தாயும் நீயே தந்தையும் நீயே” என்றும். சம்பந்தப் பெருமானும் தாயினை முன்னிறுத்திப் பாடுவதும் நோக்கத்தக்கதே.தமிழ் மூதாட்டி ஒளவையார் எத்தனையோ அறிவு ரைகள் பகர்ந்தவர். அவர்கூட கொன்றை வேந்தனை ஆரம்பிக்கும் வேளை “அன்னையும்” என்றுதான் முதலடியாகக் கொண்டு ஆரம்பிக்கிறார்.

    நாம் வாழும் பூமியைய் தாய் என்கின்றோம். வாழ்வினுக்கு அவசியமான பொறுமையைத் தாய் என்கின்றோம். அனைவரின் அகத்திலும் அமரவேண்டிய கருணையையும் தாய் என்றுதான் சொல்லுகிறோம். ஓடுகின்ற ஆறுகளுக்கும் தாய்மையைக் கொண்ட பெண்களின் பெயர்களையே சூட்டி பெருமைப்படுத் துகிறோம் அல்லவா!

    உலகிலே யாவராலும் மதிக்கப்படுவதும், புனிதமாய் கருதப்படுவதும் என்ன வென்று பார்க்குமிடத்து  அஃது தாய்மையாய்த்தான் மலர்ந்திருக்கிறது எனலாம். தாய்மைக்கு ஈடாக எதுவுமே இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனவேதான் தாய்மையை வழிபாட்டு நிலைக்கு எங்கள் முன்னோ ர்கள் உயர்த்தினார்கள் எனலாம். அந்தத் தாய்மையினை நவராத்திரியுடன் இணைத்து – ஒன்பது இரவுகளையுமே தாய்த் தெய்வ வழிபாடாக எங்களின் முன்னோர்கள் அமைத்து விட்டார்கள். பெண்மை என்றாலே பெருஞ்சக்தி என்றுதான் போற்றப்படுகிறது. அந்த வகையில் பெருஞ்சக்தியாக உருவெடுக்கும் தெய்வத்துக்கு ஒப்பிட்டுத்தான் சக்தி வழிபாடு என்பதே தொடங்கி இருக்கலாம் என்று கருதமுடிகிறதல்லவா! அகிலத்தின்  இயக்கத்துக்கு அந்தச்சக்தியே முதன்மையாய் இருக்கிறது அல்லவா! அப்படிப்பட்ட சக்தியானது இல்லாவிட்டால் இந்த அகிலத்தின் இயக்கமே அற்றுவிடும் அல்லவா? இந்த அடிப்படையில் சக்தியை மையமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டதே பக்தி பூர்வ மான நவராத்திரி விழாவாகும்.

    சிவ என்றால் ஏகன் என்பதே அர்த்தமாகும். ஏகம் என்றால் ஒன்று என்றுதானே பொருள்.அதனால்த்தான் சிவனுக்கு உரிய ராத்திரியான சிவராத்திரியை ஒன்றாக் கினார்களோ தெரியவில்லை. நவ என்றால் ஒன்பது. நவசக்திகளைக் குறிக்க நவ ராத்திரியை ஏற்படுத்தியும் இருக்கலாம் அல்லவா! சக்தி பெரிதா சிவன் பெரிதா என்று எடுத்து வீண் வாதம் மட்டும் செய்து விடவே கூடாது. சக்தி இல்லையேல் சிவம் இல்லை. சிவம் இல்லையேல் சக்தியும் இல்லையே என்றாகிவிடும். இரண்டுமே பிரிக்க முடியா நிலையாகும். இதனால்த்தான் “மன்னுயிர்கள் சாரத் தருஞ் சக்தி – பின்னமிலான் எங்கள் பிரான்” என்று திருவருட்பயன் காட்டி நிற்கிறது.

    வடக்கே காஷ்மீர் தொடக்கம் தெற்கே கன்யாகுமரிவரை, மேற்கே பாஞ்சால த்திலிருந்து கிழக்கே பர்மா வரை, ஈழத்தில் பல பகுதிகளிலும் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. சைவர், வைணவர், சாக்தர், காணாபத்தியர், என்று எல்லா மதத்தவர்களுமே நவராத்திரியை அனுஷ்டிக்கிறார்கள் என்பதும் நோக்கத்தக்க தேயாகும். நவராத்திரி எப்பொழு ஆரம்பிக்கப்பட்டது என்று பார்க்கும் பொழுது – பாரத காலம், இராமாயண காலம் என்று நீண்ட காலமாகவே நவராத்திரி கைக்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது என்றுதான் அறிய முடிகிறது.

    நவராத்திரி என்பது சக்தியை மையப்படுத்திய பூஜையாக இருப்பதால் – இதனைப் பல பெயரில் அழைத்து அனு‌ஷ்டித்து வருவதும் நோக்கத்தக்கது. அம்பாள் எனக் காஷ்மீரிலும், பவானி என ராஜஸ்தானிலும், கல்யாணி என கூர்ஜரத்திலும், உமையென்று மிதிலைப்பகுதியிலும், அழைத்துப் போற்றிப் பரவுகின்றனர்.இதனை விடவும் – மீனாட்சி, காமாட்சி, சாமுண்டி, சரஸ்வதி, துர்க்கை, பகவதி என்றும் பெயரிட்டு சக்தியை போற்றி வருவதையும் காணக்கூடியதாகவும் இருக்கிறது.

    சக்தியினைப் பரவி நிற்கும் நவராத்திரி என்பது ஒன்றல்ல. நவராத்திரி என்பது வருஷத்தில் நான்கு முறை வருகிறது. மஹா நவராத்திரி என்னும் பெயருடன் தையில் வருகிறது. வஸந்த நவராத்திரி என்பது பங்குனியில் வருகிறது, ஆனியில் வருவது ஆஷாட நவராத்திரியாய் அமைகிறது. புரட்டாசியில் வருவது சாரதா நவராத்திரி. இந்த சாரதா நவராத்திரியைத்தான் இந்தியா தொடக்கம் ஈழம்வரை சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள். இந்தியாவின் வடபகுதியில்  ‘தசரா” என்னும் பெயருடன் கலைமகளின் விழா அமைகிறது. நாங்கள் நவராத்திரி விழாவாக எடுக்கின்றோம். நவராத்திரியின் நிறைவினை விஜயதசமி என்று அழைக்கிறோம். விஜயதசமியையும் உள்ளடக்கியே வடக்கில் “தசரா” என்றார்களோ என்றும் கருதக்கூடியதாக இருக்கிறதல்லவா!

    நவம் என்றால் ஒன்பது  எண்ணிக்கை என்று பார்த்தோம்.. அது எண்ணிக்கை மட்டுமல்ல – புத்துணர்ச்சி என்னும் கருத்தையும் தாங்கியே நிற்கிறது. கலைகளைப் போற்றி நின்று கொண்டாடும் வழிபாட்டு விழாவாக நவராத்திரி அமைகிறது எனலாம். கலைகளை முன்னிறுத்தி அனுஷ்டிக்கும் பொழுது அங்கு புத்துணர்வு மேலிடுவது இயல்பான ஒன்றல்லவா? இதனால் நவராத்திரி புத்துணர்வினை நல்கி புதுத்தெம்பு பெருகி வாழ்வில் மகிழ்வினை நல்கிட உதவும் விரதமாய், கொண்டாட்டமாய் அமைகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

    எங்களின் சமயம் எங்கள் வாழ்வுடன் இணைந்தே வருகிறது. ஆனபடியால்த்தான் வளர்ந்து கொண்டே வருகிறது.  தளர்வுண்டு போகாதிருப்பதற்குக் காரணம் அதன் தொடர் நிலை என்றுதான் என்ண முடிகிறது. அப்படித் தொடர்வதற்குக் காரணம் –  நாங்கள் சமயத்தை வாழ்வியல் ஆக்கிக் கொண்டதே முக்கிய நிலை எனலாம். கடவுளையே உறவு முறையில் அழைத்து கடவுளுக்கே குடும்பமும் வைத்து வாழ்வியயோடு இணைத்து நிற்கும் சமயத்தை உலகில் எங்குமே காணமுடியாது. அதனால் வாழ்வுக்கு வாழ்வியலுக்கு எவை எல்லாம் இன்றியமையாதனவோ அவற்றையெல்லாம் இறையுடன் இணைத்து அவற்றுக்கு பெருமையும் பெறுமதியும் காட்டி நிற்பதுதான் எங்கள் சமயத்தின் உன்னதம் எனலாம். கர்த்தர், கருணாநிதி, பிதா, பிள்ளை, அண்ணல், அரும்பொருள், நாயகன், நடுநிலையாளன், மாண்புடையான், மெய்ப்பொருளானவன், தலைவன், தோழன், என்றெல்லாம் அன்பு பாராட்டி அழைக்கின்றார் அந்தப் பரம்பொருளை. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக “தாய்” என்று அழைப்பதே சிறப்புடையதாகும் என்று தவசிரேஷ்டர்கள் எண்ணுகிறார்கள்.

    தாயிடத்துப் பிள்ளை உரிமையுடன் எதையுமே கேட்கும் நிலை இருக்கிறது. தாயான சக்தியிடம். வாழ்வினில் செம்மையாக வாழ எவையெல்லாம் எமக்குத் தேவை என்பதைத் காட்டி நிற்பதுதற்கு நவராத்திரி எல்லோருக்கும் வரமாய் வாய் த்திருக்கிறது எனலாம்.

    நல்ல நலம் வேண்டும். இவ்வுலகில் வாழுதற்கு நல்ல வளம் வேண்டும். நலமும் வளமும் வாய்த்துவிடுவது மட்டும் முக்கியமல்ல. அத்துடன் தெளிவும் வரவேண்டும். நலமென்னும் என்னும் பொழுது வீரமாகிறது.வளம் என்னும் பொழுது செல்வம்  ஆகிறது.தெளிவென்னும் பொழுது கல்வி வந்து அமைகிறது தெளிவைத் தரும் கல்வியையும், வளத்தைத் தரும்   செல்வத்தையும், நலத்தைத் தரும் வீரத்தையும் தந்தருளவாய் தாயே என்று மனமுருக  வேண்டிப் பிரார்த்தி த்து நிற்பதுதான் நவராத்திரியாய் வந்து அமைகிறது. வீரத்துடனும், செல்வத்துட னும் அறிவு அதாவது கல்வியானது இணைய வேண்டும். அப்படி இணைந்தால் த்தால் வீரமும் செல்வமும் ஒழுங்கான முறையில் பயனை அளிக்கும். அப்படி அமையும் பொழுது அங்கே வெற்றி என்னும் வெளிச்சம் பிரகாசமாய் வந்து நிற்கும். இதுதான் உண்மை. இதுதான் நிச்சயம். இதனை உணர்த்துவதாய் அமைவதுதான் நவராத்திரி. இந்த வெற்றியையே உணர்த்தி நிற்பதைத்தான்  விஜயதசமி என்று கொண்டாடி மகிழ்கிறோம்..

    சக்தியின் வடிவங்கள் பற்பல. எந்தத் தேவைக்கு என்ன சக்தி தேவையோ அந்தச் சக்தியாய் – தாயாய் விளங்கும் ஆதிசக்தி வந்து நிற்பாள். நாட்டின் ஆட்சி அதிகார த்தை நடத்தும் மந்திரிசபையில் பாதுகாப்பு, கல்வி, நிதி என்பதை நடத்துவதற் கென்று இருபது போல் – ஆதி சக்தியானவளும் உலக இயக்கத்துக்கு இன்றியமை யமையாதனவாகிய வீரம், செல்வம், கல்விக்கும் பொறுப்பான சக்தியாய் வருவதை நவராத்திரி விளக்கி நிற்கிறது எனலாம். துர்க்கை எனும் சக்தி வீரத்துக்கும்,   இலக்குமி எனும் சக்தி செல்வத்துக்கும், சரஸ்வதி எனும் சக்தி கல்விக் குமாய் அமைந்திருக்கிரது என்பது நோக்கத்தக்கதாகும்.

    தாய்மை என்பதைப் பெண்மையில்த்தான் காணலாம். பெண்மை என்றால் மென்மை என்றும் பொருள் இருக்கிறது. அந்த மென்மைக்குள்ளே பொறுமையும் இருக்கிறது. மோலோங்கும் சினமும் இருக்கிறது. பெண்மை அடங்கி நிற்கும் பொழுது அங்கு  மென்மை மேலோங்கும். அதே  பெண்மை பொங்கிடும் வேளை யாவுமே பொசுங்கிவிடும் வெம்மையே வெளிப்பட்டு நிற்கும். பெண்மையினை மென்மையாய்த்தான் அணுகவேண்டும். சக்திகளாய் அமைகின்ற – மலை மகளையும், அலைமகளையும், கலைமகளையும், அன்புடன் அணுகினால் வாழ்வினிலே நலமும் வரும், வளமும் வரும், நல்ல தெளிவும் வரும்.

    நல்நலமும், நல்வளமும், நல்லறிவும், ஒன்றாக இணையும் பொழுதுதான் வாழ்க்கையென்பது பூரணமாகிறுது. இதில் ஒன்று குறைந்தாலும் அஃது நிறைவுடைய வாழ்வாக அமையவே மாட்டாது.இவை மூன்றையும் பெற்றிட மனம் மொழி மெய்களால் உருக வேண்டும். நம்மை மறந்து சலனமற்ற அந்தச் சக்தியிடம் சரணடைதல் வேண்டும். கிடைத்த வளத்தை கீழாக்குவதோ பாழாக் குவதோ பொருத்தமில்லா நிலையாகும்.

    இறைவனைக் குறித்து உண்ணாமல் , உறங்காமல், உயிருக்கு வருகின்ற ஊறுகளைப் பாராமல், தவமியற்றி அதன் பயனாக வரத்தால் பல பெற்றிட்ட பலர் – கிடைத்தற்கரிய அத்தனையையும் , தங்களது ஆணவம் என்னும் அகந்தையினால் பொல்லாவழியில் செலுத்து – முடிவில் வரமும் போய் வாழ்வும் அழிந்ததை இதிகாசங்கள், புராணங்கள் வாயிலாக அறிகின்றோம்.

    சுத்தம் என்னும் பதத்தின் முன் அகரம் வந்தால் அது “அசுத்தம்” ஆகி விடுகிறது. சுரர் என்னும் பதத்தின் முன் அகரம் வரும்பொழுது “அசுரர்” வந்துவிடுகிறார். சுத்தமாய் இருப்பவர் “சுரர்”. அசுத்தமாய் இருப்பவர் “அசுரர்” என்றாகி விடுகிறதல்லவா! நவராத்திரி பற்றிய சிந்தனையில் இஃது அவசியாமா என்று எண்ணிடத் தோன்றுகிறதா? இறைவனிடம் வரம்பல பெறுவதற்கு நீண்ட நாட்கள்…. ஏன் வருடக்கணக்கில் தவமியற்றி பெறுதற்கு அரிய பேறுகளை எல்லாம் பெற்றதன் பின்னர் – அத்தனையையும் அறமில்லா வழியில் செல்லவிட்டு, ஆணவத்தின் உச்சிக்கே சென்று, முடிவில் வரமும் இழந்து, வாழ்வும் முடிந்துபோன நிலையினைப் புராணங்கள் இதிகாசங்கள் காட்டுகின்றன.

    சிவ பக்தனானா இராவணன், சிவனிடம் வரம் பெற்ற பத்மாசூரன், சிவனிடம் வரம் பெற்ற சூரபதுமன், ஹம்சன், இரணியன், மகுடாசூரன் என்று இந்தவரிசை நீள்கிறது.வீரம், செல்வம், கல்வி மூன்றும் வந்தாலும் – அங்கு அகந்தை மட்டும் வந்துவிடக்கூடாது. அறிவுடன் அதாவது நல்லறிவுடன் சேரும் வீரமும் , செல்வமுமே நிலைக்கும். பயன் அளிக்கும். பல்கியும் பெருகும். மாறாக நடப்பின் அத்தனையும் பயனற்றே போய்விடும் என்பதை மனமிருத்த வேண்டும். அந்த அருமையான தத்துவத்தைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் பக்திபூர்வமான நிலைதான் “நவராத்திரி” என்பதையும் அனைவருமே அகமிருத்துவது அவசிய மாகும்.

    நவராத்திரி என்பது விரதமா அல்லது கலைகளின் விழாவா என்று எண்ணும் பொழுது – விரதத்துடன் இணைந்த கலைவிழாவாகத்தான் நவராத்திரியைப் பார்க்கின்றோம். நவராத்திரி தொடங்கி விட்டாலே – ஆடலுக்கும், பாடலுக்கும் குறைவே இருக்காது. கலைஞர்கள் அனைவரும் சங்கமிக்கும் விழாவாக நவராத்திரி அமைவது அனைவருக்கும் பேரானந்தமாகும். வீட்டிலும் பாட்டு. வெளியிலும் பாட்டு. கல்லூரிகள், கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழில்பார்க்கும் இடங்கள், யாவற்றிலும் நவராத்திரி மிகவும் சிறப்பாகக் கலை விழாவாகவும், பக்தி பூர்வமான சமய நிகழ்வாக அமைவதைக் காணக்கூடியதாக இருக்கும்.அதே வேளை அனைத்து ஆலயங்களிலுமே நவராத்திரி பக்திபூர்வமாய் நடைபெறுவதையும் காணலாம்.

    நவராத்திரி என்றதும் மனமெல்லாம் ஒருவித பூரிப்பே ஏற்படும். ஏனென்றால் கலைகளின் விழாவாக இருப்பதால். இந்த விழாவில் “கொலு” வைப்பது என்பது வீட்டிலும் இருக்கும்.ஆலயங்களிலும் இடம் பெறும். “கொலு” என்றால் அழகு என்பதுதான் அர்த்தமாகும். கொலு என்பது ஆடம்பரத்துக்காக வைக்கப்படுவது அல்ல. கொலு வைப்பதிலும் அர்த்தங்கள் பொதிந்தே இருக்கின்றன என்பதையும் கருத்திருத்தல் அவசியமேயாகும்.

    கொலுவைப்பதிலும் சில நடைமுறைகள் வழக்கில் இருந்தே வருகின்றன. அதாவது ஒற்றைப் படையில் அமையுமாறுதான் கொலுவின் படிகளை அமைத்து வருகிறார்கள்.ஆனால் அவரவர் வசதிக்கு ஏற்பவும் கொலுவினை வைத்து வரு வதையும் காணமுடிகிறது.ஒன்பது படிகளாக வைப்பதை விஷேடம் என்று கருதும் நிலையே பரவலாகக் காணப்படுகிறது.

    “ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணாலாகிய பொம்மைகளால் என்னைப் பூஜித்தால், நான் பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், செளகரியங்களையும் அளிப்பேன்” என்று தேவி பாகவதத்தில் – அம்பாள் கூற்றாக வருவது கொலு வைப்பதற்கு முன்னோடியாக அமைந்திருக்கலாம் அல்லவா !

    கொலு மேடையில் கீழிருந்து முதற் படியிலே – ஓரறிவான, புல், செடி போன்ற வற்றையும், இரண்டாம் படியில், ஈரறிவுடைய நத்தை, சங்கு போன்றவற்றையும், மூன்றாவது படியில், மூன்றறிவுடைய கறையான், எறும்பு போன்றவற்றையும், நான்காம் படியில் நான்கறிவான நண்டு, வண்டு, போன்றவற்றின் பொம்மை களை யும், ஐந்தாம்படியில் ஐந்தறிவான மிருகங்கள், பறவைகளின் பொம்மைகளை வைத்தல் வேண்டும். ஆறாவது படிதான் எங்களுக்கு உரியதாகும். சிந்திக்கும் அறிவுடைய நிலை மனிதர்களுக்கே இருப்பதால் இந்தப் படியில் மனிதர்களின் பலவகைப் பொம்மைகள் இடம் பெற்றிருக்கும்.ஏழாவது படியானது – மனிதனாய் இருந்தும் உயர்நிலையினை எய்திய ரிஷிகளுக்கு உரியதாய் அமைகிறது.அங்கு ரிஷிகளின் பொம்மைகள் வைக்கப்படும். மனிதருக்கும் ரிஷிகளுக்கும் அப்பால் தேவர்கள் வருகிறார்கள்.எனவே எட்டாம் படியில் தேவர்கள் இடம் பெறுவார்கள். இதில் நவக்கிரகங்கள், அட்டதிக்கு பாலகர்கள், தேவைதைகளின் பொம்மைகள் வைக்கப்படும்.ஒன்பதாம் படிதான் கடவுளருக்கு உரிய இடமாகும்.பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெருந் தெய்வங்களும், ஸரஸ்வதி , லக்‌ஷ்மி, பார்வதி ஆகிய முப்பெருந் தேவியரும், இடம் பெறுவர். நடுநாயகமாய் ஆதிபராசக்தியின் பொம்மை வீற்றிருக்கும்.

    வெறும் பொம்மைகளைக் கொண்டதாக கொலு அமைந்து விட்டது என்று எண்ணிவிடக்கூடாது. மனிதன் என்பவன் தன்னுடைய ஆன்மீக சிந்தனைகளை வளர்த்துக் கொண்டே வருகிறான்.அவனின் ஆன்மீகச் சிந்தனை பிரகாசிக்கும் நிலையில் முடிவில் இறைவனுடன் கலக்கவே வேண்டும். அப்படியான ஒரு தத்துவார்த்தத்தை உணர்த்துவதாகவே நவராத்திரியில் வைக்கப்படும் கொலு காட்டி நிற்கிறது என்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.       .

    இறை சக்தியால் நாமெல்லாம் இயங்குகிறோம். இறைசக்தியே எமக்கு இயக்க சக்தியாகும். அந்தச் சக்தியே அறிவை செல்வத்தை ஆற்றலை அளிக்கிறது. அந்த அளவிட முடியாத சக்தி அளித்த ஆற்றலை – அந்தச் சக்தியின் ஆசியுடன் வாழ்வில் கையாண்டால்  “வாழ்க்கை வழமாகும். வாழ்க்கை வையத்துள் வசந்தமாக அமையும்.”  இப்படி வாழ்வியலோடு இணைந்த சக்தியாய் அமைவது தான் நவராத்திரி விழாவின் கருப்பொருள் எனலாம்.

    மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய்!
    ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே!
    ஏதாயினும் வழிநீ சொல்வாய் எமதுயிரே!
    வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே.

    வாணி கலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
    ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
    காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்
    மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே

    பொன்னரசி நாரணனார் தேவி, புகழரசி
    மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்
    அன்னையவள் வையமெல்லாம் ஆதரிப்பாள், ஸ்ரீதேவி
    தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே

    Share
  • சின்னஞ்சிறு பெண்போலே | ஜெயந்தி சுப்ரமணியன்

    சின்னஞ்சிறு பெண்போலே | ஜெயந்தி சுப்ரமணியன்

    நவராத்திரியில் கொலு வைப்பதுடன், பாட்டுப் பாடி, அன்னையை இசையால் ஆராதிப்பது நம் மரபு. சென்னையில் ஜெயந்தி சுப்ரமணியன் தம் வீட்டில் கொலு வைத்துப் பாடுகிறார். உளுந்தூர்பேட்டை சண்முகம் இயற்றி, உயர்புகழ் பெற்ற ‘சின்னஞ்சிறு பெண்போலே’ பாடலை அவரது குரலில் கேளுங்கள். அவர் வீட்டுக் கொலுவைக் கண்டுகளியுங்கள்.

    படப்பதிவு – வெ.சுப்ரமணியன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சாந்தி ஜெயராமன் வீட்டுக் கொலு

    சாந்தி ஜெயராமன் வீட்டுக் கொலு

    கொலு எப்படி வைக்க வேண்டும் என்ற இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டு, இதோ. சென்னை, விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள சாந்தி ஜெயராமன் வீட்டுக் கொலுவை இணையம் வழியே கண்டுகளிக்க வாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஓவியர் ஜெயராஜ் நேர்காணல் – 3

    ஓவியர் ஜெயராஜ் நேர்காணல் – 3

    கலையை விற்கலாமா? கலை என்ன வியாபாரப் பொருளா? என்று கேட்டால், ஆமாம், கலை வியாபாரம்தான் என அடித்துச் சொல்கிறார் ஓவியர் ஜெயராஜ். அவருடன் ஓவியர் ஸ்யாம் நிகழ்த்திய உரையாடலின் மூன்றாவது பகுதி, இதோ. பத்திரிகை உலகின் இன்னொரு முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் அதிரடி நேர்காணலைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குழந்தைகள் அடம்பிடித்தால் | நிர்மலா ராகவன்

    குழந்தைகள் அடம்பிடித்தால் | நிர்மலா ராகவன்

    குழந்தைகள் அடம்பிடித்தால் என்ன செய்வது? அவர்களை அவர்கள் போக்கில் விட்டால் என்ன ஆகும்? மிக முக்கியமான ஆலோசனையை வழங்குகிறார் நிர்மலா ராகவன், இந்த உரையாடலைப் பார்த்துப் பயன்பெறுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சாய் ஐஷ்வர்யா வீட்டுக் கொலு

    சாய் ஐஷ்வர்யா வீட்டுக் கொலு

    சென்னையில் ஆறாம் வகுப்புப் படிக்கும் சாய் ஐஷ்வர்யா, தங்கள் வீட்டுக் கொலுவை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். மூன்று தலைமுறைகளாகப் பாதுகாக்கப்படும், 100 ஆண்டுகள் பழைமையான ஓவியத்தைக் காட்டுகிறார். மரபின் செழுமை கொண்ட இந்தக் கொலுவைக் கண்டு களிக்க வாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கடலைப் பருப்புச் சுண்டல் செய்வது எப்படி?

    கடலைப் பருப்புச் சுண்டல் செய்வது எப்படி?

    நவராத்திரி என்றாலே கொலுவும் சுண்டலும் நமக்கு நினைவுக்கு வரும். அந்தச் சுண்டலிலும் ஏராளமான வகைகள் உண்டு. கடலைப் பருப்புச் சுண்டல் செய்வது எப்படி என்பதை இன்று செய்து காட்டுகிறார், ஜெயந்தி சுப்ரமணியன். உடன் உரையாடுகிறார், வெ.சுப்ரமணியன். இதை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஒன்றாக வாழுகின்றோம். ஒன்றாகவா வாழுகின்றோம்

    ஒன்றாக வாழுகின்றோம். ஒன்றாகவா வாழுகின்றோம்

    கௌசி

    எழுதப்படாத சட்டங்கள், மனிதாபிமானங்கள், விட்டுக்கொடுப்புகள், பிறரை மதிக்கும் பண்புகள் போன்ற காரணங்களினால், பல அமைப்புகள், பல குடும்பங்கள், பல நண்பர்கள் காலவேறுபாடுகள் அற்று ஒன்றாக வாழுகின்றார்கள். ஆனால், ஒன்றாகவா வாழுகின்றார்கள்? என்ற கேள்வியுடன் இக்கட்டுரை ஆரம்பிக்கின்றது.

    ஐந்து விரல்களும் ஒன்றாக இருப்பதில்லை உண்மைதான். ஒன்றாக இல்லை என்பதற்காக அதனை வெட்டி எறிந்துவிட முடியாது. அதனால், சமாளித்து சகித்துக் கொண்டு போக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. ஒன்றை உயர்த்திப் பார்க்க நாம் ஆசைப்படுகின்றோம். வேண்டிய சக்தி எல்லாவற்றையும்  தாரை வார்க்கின்றோம். ஆனால், அங்கு ஒத்துழைப்புக்கள் கிடைக்கவில்லை என்றால், வைத்த பற்றும் இணைந்து பயணித்த அனுபவங்களும் எம்மை மௌனமாக வழிநடத்த அடுத்தவர் கண்களுக்கு ஒன்றாக வாழுகின்றோம். ஆனால், மனதால் ஒன்றாகவா வாழுகின்றோம்?

    இப்போது ஒரு குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றது. கணவனுடைய மனதுக்கு ஏற்ற மனைவியாக வாழ அவளுக்குத் தெரியவில்லை. அவன் விருப்பு வெறுப்புகளுக்குத் தன்னை அர்ப்பணிக்கத் தெரியவில்லை. அவனைப் புரிந்து நடக்கத் தெரியாது போகத் தானும் வாழாது கணவனையும் மகிழ்ச்சியுடன் வாழ விடாது மனைவி வாழுகின்றாள். இதேபோல் மனைவியின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கத் தெரியாத மனிதனாக கணவன் வாழுகின்றான். இந்த நேரத்தில் போட்டிபோட்டுப் போராட்ட வாழ்க்கையைக் காலம் முழுவதும் கணவனும் மனைவியுமு; வாழ்கின்றனர். குடும்பத்தைக் கொண்டு நடத்த புரிந்துணர்வுகளும் விட்டுக் கொடுப்புகளும் தேவை. பெற்றெடுத்த பிள்ளைகளின் நலன், சமூகப் பார்வை போன்றவை எழுதப்படாத சட்டங்களாக இருக்க குடும்பங்கள் ஒன்றாக வாழுவதாகத் தெரிகின்றன. ஒன்றாகவா வாழுகின்றார்கள்?

    அக்கால இலக்கியங்களில் காணப்படும் இவ்வாறான நிலைமைகள் எமக்குப் பாடம் கற்றுத் தந்திருக்கின்றன. பரத்தை ஒழுக்கத்தை விரும்பி கணவன் போகின்றான் என்று தெரிந்தும் மனைவி அவனுடன் ஒன்றாகவே வாழுகின்றாள். கணவனைப் பரத்தை வீட்டிற்குக் கூடையில் சுமந்து சென்று விடுகின்றாள். இந்தக் கதை எமக்கு எதைப் போதிக்கின்றது? கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்னும் தத்துவத்தையா? இல்லை. மனதை அடக்கிக் கணவன் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதையா? இல்லாவிட்டால் இப்படித்தான் வாழ வழியில்லாத பேதைப் பெண்கள் வாழ்க்கையில் ஒன்றாக இல்லை ஆனால், ஒன்றாகவே வாழுகின்றார்கள் என்பதையா சொல்லித் தருகின்றது.

    “மந்தப் பரத்தையோடும் வருமொழியாரோடும்”  சேர்ந்து கோவலன் தன் பொருள்களை எல்லாம் இழந்தான். மாதவி சேர்க்கைக்குப் பின் கோவலன் வணிகர் கடமையாகிய பொருளீட்டல் தொழிலைச் சரிவரச் செய்யவில்லை. மன்னர்களுக்கே கடன் கொடுக்கக் கூடிய பணக்காரனாக இருந்த கோவலன் தன்னுடைய செல்வங்களை எல்லாம் இழக்கின்றான்.

    பாடமை சேக்கையுட் புக்குத் தன்பைந்தொடி
    வாடிய மேனி வருத்தங்கண் டியாவுஞ்
    சலம்புணர் கொள்கைச் சலதியொ டாடிக்
    குலந்தரு வான்பொருட் குன்றந் தொலைந்த
    இலம்பாடு நாணுத் தருமெனக் கென்ன

    என்று கூறிக் கோவலன் கண்ணகியை அடைகின்றான். இத்தனையும் அறிந்திருந்தும் கண்ணகி கோவலனுக்காகவே வாழ்ந்தாள். கோவலனைப் பிரிந்த வருத்தம் இருந்தாலும் அறச் செயல் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால், வாழ்ந்தாள்.

    அக்காலப் பெண்கள் அறம் செய்வதாக இருந்தாலும் கணவன் மனைவியுடன் இணைந்துதான் செய்யவேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் இருந்தது. இராமனும் சீதையும் வனவாசம் செய்த காலகட்டத்தில் இராமன் இல்லாத சமயத்திலே அறச்செயலில் ஈடுபட்ட காரணத்தினாலேயே இராவணனால் சீதை கடத்தப்பட்டாள் என்று உரைக்கிறது இராமாயணக் காட்சி.

    காரைக்காலம்மையார் சிறந்த இலக்கியவாதியாக இருந்த போதிலும் கணவன் பரமதத்தனுடன் ஒன்றாக வாழ்ந்தாள். சிவபக்தர்களைப் போற்றும் பண்புள்ளம் கொண்ட காரைக்காலம்மையார் மாங்கனி விடயத்தில் கணவன் அறியாது சிவபக்தனுக்கு உணவளித்த அறச் செயலை மறைப்பதற்காக  இறைவனை வேண்டி மாங்கனி பெற்றாள். பரமதத்தனுடன் வாழ்ந்தாலும் மனதளவில் அவள் வாழ்க்கை எதனை நாடியது? ஒன்றாகவே வாழ்ந்தாள். ஆனால், ஒன்றாகவா வாழ்ந்தாள்?

    புத்தரைத் திருமணம் செய்த போதே தன்னை விட்டுப் பிரியப் போகின்ற ஒரு ஞானியுடனேயே நான் குடும்பம் நடத்துகின்றேன் என்று யசோதரை தெரிந்துதான் புத்தருடன் வாழ்ந்தாள். புத்தரை குடும்ப வாழ்க்கைக்குள் அமிழ்த்திவிட முயற்சி செய்தாள். ஆனால், புத்தர் ஒன்றாக வாழ்ந்தார். வாழ்க்கை முழுவதும் துறவற சிந்தனையுடன் வாழ்ந்தார். ஒன்றாகவா வாழ்ந்தார்? இறுதியில் 29 வயதிலேயே யசோதரையை விட்டுச் சென்று விட்டார்.

    நிடத நாட்டு மன்னன் நளனை கலி பிடித்து ஆட்டுகின்றது. அரசாட்சியைத் துறந்து தமயந்தியுடன் கானகம் போகின்றான். ஒன்றாக வாழந்தான். ஆனால், தன்னோடு தன் மனைவி தமயந்தி கானகத்தில் அவலங்களை அனுபவிப்பதை நாளும் பொழுதும் அவதானித்தான். கலியின் சூட்சியினால் தன் ஆடை இழந்த வேளையிலே தன் மனைவியினுடைய ஆடைக்குள் தன்னுடைய மானத்தைக் காப்பாற்றினான். இதனால், நடுநிசியில் ஆடையைக் கிழித்து இரவில் தனியே அவளை விட்டுச் சென்றான்.

    “கானகத்துக் காதலியைக் காரிருளில் கைவிட்டுப்
    போனதுவும் வேந்தர்க்குப் போதுமோ – என்று
    சாற்றினான் அந்தவுரை தார் வேந்தன் தன்செவியில்
    ஏற்றினான் வந்தான் எதிர்”

    தான் இல்லாவிட்டால், தன் மனைவி தன்னுடைய தந்தையிடம் சென்றுவிடுவாள் என்று எண்ணம் கொண்டான். இங்கு கானகத்தில் நளன் தமயந்தியின் அர்ப்பணிப்பு எடுத்துக் காட்டப்படுகின்றது.

    இராமகிருஸ்ண பரஹம்ஸர் தன் மனைவி சாரதா அம்மையாருடன் ஒன்றாக வாழ்ந்தார்.  காமத்தின் சாயல் கூட இல்லாது இருவரும் ஒன்றாகவே வாழ்ந்தார்கள்.

    இவற்றைவிட மன்னன் தலைமையில் அவைக்களப் புலவர்களாக கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, ஒளவையார் சீத்தலைச் சாத்தனார் போன்ற புலவர்கள் ஒன்றாகவே அவையிலே வீற்றிருந்தார்கள். ஆனால், ஒன்றாகவா இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் இடையில் புலமைப் போட்டிகளும் அரண்மனை பஞ்சாயத்துகளும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன.

    தவறு கண்ட இடத்தில் எழுத்தாணியால் தன் தலையிலே குத்திக்கொள்ளும் சீத்தலைச்சாத்தனார் போலே எத்தனையோ பேர் பொருந்தாத உறவுக்குள், அமைப்புக்குள், குடும்ப வாழ்க்கைக்குள் புகுந்து தம்மைத்தாமே காயப்படுத்திக் கொண்டு ஒன்றாகவே வாழுகின்றார்கள். இது எழுதப்படாத சட்டம்.

    Share
  • கூட்டுக் குடும்பத்தில் அமைதி நிலவ | நிர்மலா ராகவன்

    கூட்டுக் குடும்பத்தில் அமைதி நிலவ | நிர்மலா ராகவன்

    இன்று இரண்டு பேர் சேர்ந்து வாழ்வதே கூட்டுக் குடும்பம்தான் என ஒரு நகைச்சுவைத் துணுக்கு உண்டு, இந்தக் கூட்டுக் குடும்பத்தில் அமைதி நிலவ என்ன செய்ய வேண்டும்? மிக முக்கியமான ஆலோசனையை வழங்கியுள்ளார் நிர்மலா ராகவன், இந்த உரையாடலைப் பார்த்துப் பயன்பெறுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    உங்கள் குடும்பத்தில் அல்லது உங்கள் நண்பர்கள் குடும்பத்தில் ஏதும் சிக்கல் இருந்தால், நீங்கள் அதுகுறித்து நிர்மலா ராகவனிடம் இலவச ஆலோசனை பெறலாம். உங்கள் கேள்விகளை இந்தப் பதிவிற்கு மறுமொழியாக இடலாம். அல்லது, annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பெருகட்டும்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தொட்டிச் செடி (சிறுகதை)

    தொட்டிச் செடி (சிறுகதை)

    த. ஆதித்தன்

    அது உணவு இடைவேளைக்கு முந்தைய வகுப்பு. வகுப்பறையில் ஆர்வத்தோடு பாடம் நடத்திக்கொண்டிருந்தாள் தன்வி டீச்சர்.

    திடீரென சாப்பாட்டு வாசம். யாரோ ஒரு மாணவன் மதிய உணவைத் திறந்ததால் வந்த வாசம் அது.

    கோபத்தோடு அனைவரையும் உற்றுப் பார்த்த தன்வி, “டிபன் பாக்ஸ் திறந்தது யாருனு மரியாதையா சொல்லிடுங்க என்றார். யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. கத்தித் தீர்த்துவிட்டாள். இயல்புக்கு வந்து வகுப்பினைத் தொடர பத்து நிமிடம் ஆயிற்று.

    கரும்பலகையில் தன்வி எழுதும்போது இரண்டாம் வரிசையில் இருந்து மெதுவான பேச்சுக்குரல். யாரென மிகச் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆவேசமாகி அடங்கினாள். மீண்டும் ஐந்து நிமிடம் வீணாயிற்று.

    பாடம் தொடர்கையில், நான்காவது வரிசையாக இருக்க வேண்டும் வைபரேட் மோடில் ஏதோ ஒரு மொபைல் ஃபோன் அதிரும் உணர்வு. இவள் பார்வையைத் திருப்ப…. அமைதியானது ஃபோன். “ஃபோனை மரியாதையா குடுத்திட்டீங்கனா…. போகும்போது குடுத்திடுறேன். நானா எடுத்தா இந்த வருசம் முழுதும் கிடைக்காது”. என்னன்னமோ பேசியும் யார் ஃபோன் என்பதை அறிய இயலா ஆத்திரத்தை அடக்கி, அறிவுரை கூறி முடிக்கையில் வகுப்பும் முடிந்தது. போராட்டம் போல் தோன்றினாலும், வகுப்பறையை விட்டு வெளிவரும்போது திருப்தியுடன் மனது.

    இந்நிகழ்வுகளை அசைபோட்டபடியே நேரலை இணையவழி வகுப்பிற்காகக் கணினியை இயக்கினாள் தன்வி. அறையினைச் சிக்கெனப் பூட்டியபடி தடையில்லாமல் பாடம் நடத்தினாள் தன்வி. மிக நன்றாக நடத்தினாலும் ஏனோ உயிர்ப்பில்லாத உணர்வு.

    கணினியை அணைத்துத் திரும்புகையில் கண்ணில் பட்டது அறைக்குள் இருந்த தொட்டிச் செடி. அழகுக்காய் வெட்டப்பட்டு செடியாய் மாறியிருந்தது அந்த மரம். சன்னல் திறந்தாள். வெளியே உயர்ந்து வளர்ந்த மரம். அதில் அணில் பழத்தைத் தின்றபடி…, குருவிகள் சலசலப்புடன் மரத்தினுள் மறைந்து விளையாடின…, காற்றின் வருடலில் கிளைகள் அசைந்தன.

    Share
  • நற்கருணை நாயகியே நலமருள வேண்டுகிறோம்!

    நற்கருணை நாயகியே நலமருள வேண்டுகிறோம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா,
    ஆஸ்திரேலியா 

    நற்கருணை நாயகியே நலமருள வேண்டுகிறோம்
    பொற்பதத்தைத் தினம்பரவி நற்கருணை வேண்டுகிறோம்
    நிற்பதுவும் நடப்பதுவும் நீநினைத்தால் நடந்துவிடும்
    உற்பதங்கள் வாராமல் உதவிடுவாய் மலைமகளே

    நாடழிக்கும் பேரரக்கன் தாண்டவத்தை ஆடுகிறான்
    நீயெழுந்து பேரரக்கன் நிட்டூரம் அழித்திடுவாய்
    கோரமுடை முகமுடைய கொரனோவாம் கொடியரக்கன்
    கொட்டமதை அடக்குதற்கு விரைந்துதிடுவாய் மலைமகளே

    துர்க்கையெனப் பெயர்தாங்கும் தூயவளே மலைமகளே
    துயர்துடைக்க நீவருவாய் எனநம்பி இருக்கின்றோம்
    பற்பலவே துன்பவலை படர்ந்தெம்மைச் சூழ்கிறது
    பார்காக்க கடைக்கண்ணால் பார்த்திடுவாய் மலைமகளே

    தளரா மனந்தந்து தயைதருவாய் மலைமகளே
    தயைகருணை மனம்நிறைய தானருள்வாய் மலைமகளே
    நிலையான ஆரோக்கியம் நீயருள வேண்டுகிறோம்
    நின்பாதம் தொழுகின்றோம் நீயருள்வாய் மலைமகளே

    வீரமெனப் பலரெண்ணி வீழ்த்துகிறார் மானுடத்தை
    வீரமதைப் பலபதர்கள் வீணாக்க வந்துள்ளார்
    வீரமதைச் சக்தியாய் கொண்டியங்கும் மலைமகளே
    தாரணியில் வீரமதைத் தர்மமாய் காட்டிடம்மா

    நின்பாதம் சரணடைந்தோம் நீதருவாய் நல்வீரம்
    நின்னருளால் நல்நினைப்பை நெஞ்சமெலாம் நிறைத்துவிடு
    நீதிநிறை வீரமதை நிலவுகில் நிறுத்திவிடு
    நின்சக்தி நிச்சயமாய் காத்துவிடும் மலைமகளே

    Share
  • சாணி யுகம் மீளுது

    சாணி யுகம் மீளுது

    சி. ஜெயபாரதன், கனடா

    சாணி யுகம்
    மீண்டும்
    வரப் போகுது!
    கிரீன் எரிசக்தி!
    மீள்புதிப்பு எரிசக்தி!
    வீட்டுக்கோர்
    மாட்டுக் கொட்டம்!
    சாணம் வீட்டுக்கு
    எரிசக்தி!
    நாட்டுக்கு மலிவு
    மின்சக்தி!
    இரட்டைக் காளைகள்
    இழுக்கும் வண்டி,
    வயலை
    உழுதிடும் ஏர்கள்,
    ஒற்றைக் குதிரை இழுக்கும்
    வண்டி,

    சைக்கிள் மிதிவண்டி,
    இவைதான்
    எதிர்காலத்தில் இயங்கும்
    சூழ்வெளி சுத்தமான
    வாகனங்கள்!
    ஆராய்ச்சி
    தேவை இல்லை!
    ராக்கெட்
    விஞ்ஞான மில்லை!

    Share
  • நின்னைச் சரணடைந்தேன் | மகாகவி பாரதியார்

    நின்னைச் சரணடைந்தேன் | மகாகவி பாரதியார்

    மகாகவி பாரதியின் ‘நின்னைச் சரணடைந்தேன்’ பாடலுடன் இந்த நவராத்திரியைக் கோலாகலமாகக் கொண்டாடுவோம். அன்னை மகாசக்தியை வணங்கி வேண்டுவோம். அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட, நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!

    பாடியவர் – கிருஷ்ணகுமார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உயர்வகைப் பொருளும் இரண்டாம்கைப் பொருளும்

    உயர்வகைப் பொருளும் இரண்டாம்கைப் பொருளும்

    சந்தைப் பொருள்களில் பல அடுக்குகள் உண்டு. உயர்வகைப் பொருள்களுக்கும் இரண்டாம்கைப் பொருள்களுக்கும் இடையில் எவ்வளவு விலை வேறுபாடு இருக்கிறது? இவற்றுக்குப் பின்னால் உள்ள வாய்ப்புகள், கணக்கீடுகள், அணுகுமுறைகள், மனநிலைகள் என்னென்ன? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார்.

    உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 147 (தம்சரணத்து)

    சேக்கிழார் பாடல் நயம் – 147 (தம்சரணத்து)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல்

    அருள்செய்த  மொழிகேளா , அடல்சரிகை  தனைஉருவிப்
    பொருள்செய்தாம்  எனப்பெற்றேன்  எனக்கொண்டு பூங்கொடிதன்
    இருள்செய்த  கருங்கூந்தல் அடியிலரிந்  தெதிர்நின்ற
    மருள்செய்த பிறப்பறுப்பார்  மலர்க்கரத்தின்  இடைநீட்ட,

    வரலாறு

    ஏயர்கோன் இல்லத்திலிருந்து மணம்பேச வந்த முதிய அறிஞர்களை  முறைப்படி  வரவேற்றார். அவர்கள் மணம்  புரிந்தேற்க விரும்பியது கேட்டு,  ‘’எங்கள்  குலவழக்கப்படி மனமகளைத் தரும் வகையில் தருவோம்!’’ என்று அனைவரின் மனமும் மகிழும்படி உரைத்துத் திருமணத்துக்கு இசைவு தந்து அனுப்பினார்.

    சென்றவர் இருவீட்டாரும் இசைந்து  சோதிட நூல் கூறிய வண்ணம் திருமண நாள் குறித்தனர். அவ்வாறே திருமணம் புரிவிக்க விரும்பிப் பெண்ணைப்  பெற்ற   தம்சுற்றத் தாருடன் மிகவும் மகிழ்ந்து, வெண்மையான முளைப் பாலிகை, பொற்கலங்களுடன் மலர்கள் பூத்த அந்த ஊரிலேயே திருமண அலங்காரங்கள் செய்வித்தார்.

    மானக்கஞ்சாறர் மகளைக் கைப்பிடிக்க வந்த  ஏயர்குலக்கோனும் தம் சுற்றத்தாருடன் மேகத்துடன்  முரசும் முழங்கும் கஞ்சாரூரின் எல்லையில் வந்தார் . இவ்வுலகம் உய்ய மானக்கஞ்சரனார் மனத்திலுள்ள இறைவனும் இத்திருமணத்திற்குப் புறப்பட்டார்.

    தம் தலையை மழித்து நடுவில் சிகையில் கோத்து  அணிந்த எலும்பு மணியாக முன்பு திருமாலின் அங்கத்தில் இருந்த எலும்பைக் கடைந்து செய்த வெண்முத்து விளங்க , காதில் குண்டலம், என்புமணி கோத்த அழகிய தாழ் வடம், திருத்தோளில் அரவை நீக்கி அணிந்த உத்தரீயம், கரிய மயிரால்  முறுக்கப்பெற்ற பூணூல், அடியார் பிறவியை நீக்கும் திருநீற்றுப்பை, இவற்றோடு . முன்கையில் எலும்புமணி  கோத்த கயிறும், அரிய மறையாகிய கோவணத்தின்மேல் மறைத்த ஆடையும் அணிந்து, நிலத்தில் படிந்த திருவடியில் பதுமம், சங்கம், மகரம், சக்கரம், தண்டம்  ஆகிய பஞ்ச முத்திரை விளங்க, சாம்பல் மூடிய தழல் போல மேனியில் பூசிய திருநீறு அணிந்தவராய் , கொடிகள் நிறைந்த வீதியில் வந்து தம் அவர் இல்லம் புகுந்தார்!

    மாவிரத முனிவர் வடிவில் வந்த இறைவனைக் கண்டு, மகிழ்ச்சியுடன்  எதிர் சென்று மானக்கஞ்சாறர் ‘’அடியேன் இல்லத்துக்கு எழுந்தருளியமையால் நானும் உய்வடைந்தேன்‘’ என்று கூறி, வந்து சேர்ந்த மாவிரத முனிவரைக்கண்டு எதிரே சென்று, பணிந்தார். முனிவர் ‘’இங்கு எதோ மங்கல  நிகழ்ச்சி நடக்கிறது போலும்! ‘’என்றார். அதற்கு விடையாக , ‘’ என் ஒரே மகளின் திருமணம் நிகழ விருக்கிறது!’’ என்றார். உடனே முனிவர் உமக்கு எல்லா நலமும் உண்டாகுக’ என்றார். ஞானம் நிறைந்த தவ முனிவர் திருவடி  பணிந்து, வீட்டுக்குள்  புகுந்து, தேன் நிறைந்த மலர்களால் புனையப்பெற்ற கூந்தலையுடைய செல்வமகளை அழைத்துக் கொண்டு வந்து, திருநீல கண்டத்தை மறைத்து வரும் அந்த முனிவரை வணங்கச் செய்தார்.

    தம்மைத் துதிப்பவர்களுக்குத் தமது திருவடித்தலம் கொடுப்பவராகிய சிவபெருமான்; தமது திருவடிகளில் வீழ்ந்து வணங்கி எழுந்து நின்ற மடமையுடைய கொடிபோல்வாரது மேகம் தழைத்ததுபோலத் தழைத்து வளர்ந்த மலரணிந்த கூந்தலின் புறத்தை நோக்கி;  கும்பிட்டு நின்ற உண்மைத் தொண்டனாரைப் பார்த்து; “அணங்கு  போல்வா ளாகிய இவளது மயிர் நமக்குப் பஞ்சவடிக்கு ஆகும்” என்று சொன்னார்.

    பாடல்

    அருள்செய்த  மொழிகேளா , அடல்சரிகை  தனைஉருவிப்
    பொருள்செய்தாம்  எனப்பெற்றேன்  எனக்கொண்டு பூங்கொடிதன்
    இருள்செய்த  கருங்கூந்தல் அடியிலரிந்  தெதிர்நின்ற
    மருள்செய்த பிறப்பறுப்பார்  மலர்க்கரத்தின்  இடைநீட்ட,

    பொருள்

    இதைக்கேட்ட மானக்கஞ்சாறர் ‘’என்மகள் கூந்தல் சிவந்னடியாரின் பஞ்சவடிக்கு ஆம் ‘’என்று  கேட்கப்பெற்றேன்  என்றெண்ணி உடைவாளை உருவி பூங்கொடிபோல்  மலர்வைத்த தம் மக்களின் கருங்கூந்தலை அரிந்து, நம் பிறப்பறுக்க வந்தவரின் மலர்ந்த கரத்தில் அளிக்க

    விளக்கம்

    பொருளல்லாத இதனையும் பொருட்படுத்தி “இது பஞ்சவடிக்கு ஆகும்” என்றுசொல்லும் பேறு பெற்றேன் என்க. இதற்கு  முற்பிறப்பிற் செய்த நல்லகருமம் என்று உரைகொண்டு, முன் செய்த நற்றவத்தால் இவ்வாறு கொடுப்பது ஒருவர்க்குக்கிட்டும்; நான் என்ன புண்ணியஞ் செய்தேன்? என்று உரைகொள்வர் மகாலிங்கையர்.

    இதனை மறுத்து, மொழிகேட்டு அதற்கு உண்மைப் பொருள் செய்து, அதன்படி செய்யத்துணிந்து, இதனை ஆம் என்று செய்யும்பேறு பெற்றேன் என மகிழ்ந்து என்று கூறுவர் ஆலாலசுந்தரம்பிள்ளை.

    இருள் செய்த என்ற தொடர்  கருநிறங்குறித்து நின்றது. ஆகுபெயர். இருள் செய்த, இருள் – மயக்கம் எனக்கொண்டு, கூந்தல் அழகியது – உடற்கூறு அழகியது என்றெல்லாம் இவ்வுடலைப் பற்றிக் கொண்டு அலையும் உலகியல்பு குறித்ததாக உரைப்பதுமாம். உலகர் அவ்வாறு மயங்காவண்ணம் காட்டும்நிலையில், இதுவரை இருள் செய்த – மயக்கம் செய்த – இனி உண்மை காணக் காரணமாயின- கூந்தல் என்று இப்பொருட்குக் குறிப்பு உரைத்துக்கொள்க.

    மானக்கஞ்சாறனார்போல் “மெய்ப்பொருளை யறிந்துண”ராத  ஏனை உலகர்க்கு மகளிரது கூந்தல் முதலியவை இருள் – மயக்கம் – செய்வன என்ற பொது இலக்கணமாகக் கூறியதாகக் கொள்க. இதனைத் தொடர்ந்து மருள் செய்த பிறப்பறுப்பார் என்றதும் உன்னுக. இருள் – ஆகுபெயராய் மேகத்தை உணர்த்தியதெனவும், செய்த – உவம உருபெனவும் கொண்டு மேகம் போன்ற கரிய கூந்தல் என்றலுமாம். மேல் மஞ்சுதழைத்தென என்றது காண்க.

    அடியில் அரிந்து என்ற தொடர்,  அந்தப் பற்றுச் சிறிதும் எஞ்சி நில்லாவகை அடியோடு களைந்து என்பதைக்  குறித்தது. . “பாசப் பழிமுதல் பறிப்பார்போல” என்றதுகாண்க.

    எதிர்நின்ற – முன்னே நின்றவராகிய பிறப்பறுக்கு முதல்வர். “தாவியவனுடனிருந்தும் காணாத தற்பரன்” என்றபடி எதிரேவரக் காணமுடியாதவர் இவருக்கு எதிர்வந்து நின்றார் என்பது குறிப்பு. எதிர்நின்ற மருள் என்று கொண்டு, உயிர்களை அறிவு மயங்கச்செய்து தம் இனமாகிய தலைவனை யடையாமல் எதிர்த்துக்கட்டி அதுகாரணமாகப் பிறப்பில்வீழ்த்தும் மயக்கம் என்றுரைக்க நிற்பதும் சிந்திக்க.

    “பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும்,
    மருளானாம் மாணாப்பிறப்பு”

    என்ற திருக்குறட் கருத்து இங்குத் தோற்றுவதனையும் உன்னுக. கூந்தல் முதலியனவாய் மெய் என்று பேர்பெற்ற பொருளல்லாத பொய்யினைப் பொருளெனக் கொண்டு அவற்றுக்காவனவே செய்து இறந்து பிறந்துழலும் மருளினால் ஆகிய மானிட வாழ்க்கையை நோக்கி இவ்வாறு கூறினார் என்பதும் காண்க.

    இனி, உலகபோகப் பொருள்கள் பொருளல்ல என்று தள்ளுதலும், அவையே பொருளாம் என்று கொண்டுழலுதலும் ஆகிய இரண்டும் தவறுடையன; சிவனுக்கும் அடியாருக்கும் பயன்படும் அவ்வளவிற்கே பொருளாம் என்றுணர மருள் செய்த பிறப்பறும் என்று சேர்த்துரைத்துக்கொள்ளுதலும் ஆம்.

    மருள்செய்த பிறப்பு அறுப்பார் , என்ற தொடர்,

    “மையல் செய்திம் மண்ணின்மேற் பிறக்கு மாறு காட்டினாய்” என்றபடி மருளினாலாகிய பிறவியினை அறுத்துத் திருவடித்தலம் கொடுப்பதற்காக எதிர்நின்று செய்த இச்செயல் முடிகின்ற இடமாதலின் இங்கு இத்தன்மையாற் கூறினார்.

    பிறப்பு அறுப்பார் மலர்க்கரம் , என்ற தொடர்  தமது கையினாற் காட்டும் ஞானமுத்திரையால் பிறப்பு அறும்வகை கூட்டுவார் என்ற குறிப்பும் காண்க. (மானக்கஞ்சாறர்) – நீட்ட – (அவர்) – மறைந்து – வந்தார் என வரும்பாட்டுடன் கூட்டி முடிக்க. பெற்றேன் என – கொண்டு – அரிந்து – நீட்ட என்ற வினைகட்கு, மானக்கஞ்சாறர்  என எழுவாய் வருவிக்க.

    இப்பாடலில்,  தம் மகளின் திருமணத்துக்குக் கூந்தலில் மலர் சூட வேண்டுமே என எண்ணாமல், இறைவனடியார்  வேண்டியதை அப்போதே வழங்க வேண்டும்  என்ற  உறுதியம் , அடியாரை இறைவனாகவே கருதும் சிவத்தொண்டும் புலனாகின்றது!

    Share