சென்னையில் ஆறாம் வகுப்புப் படிக்கும் சாய் ஐஷ்வர்யா, தங்கள் வீட்டுக் கொலுவை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். மூன்று தலைமுறைகளாகப் பாதுகாக்கப்படும், 100 ஆண்டுகள் பழைமையான ஓவியத்தைக் காட்டுகிறார். மரபின் செழுமை கொண்ட இந்தக் கொலுவைக் கண்டு களிக்க வாருங்கள்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.