நவராத்திரியில் கொலு வைப்பதுடன், பாட்டுப் பாடி, அன்னையை இசையால் ஆராதிப்பது நம் மரபு. சென்னையில் ஜெயந்தி சுப்ரமணியன் தம் வீட்டில் கொலு வைத்துப் பாடுகிறார். உளுந்தூர்பேட்டை சண்முகம் இயற்றி, உயர்புகழ் பெற்ற ‘சின்னஞ்சிறு பெண்போலே’ பாடலை அவரது குரலில் கேளுங்கள். அவர் வீட்டுக் கொலுவைக் கண்டுகளியுங்கள்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.