Blog

  • நவராத்திரி தேவியர்

    நவராத்திரி தேவியர்

    சென்னை, அண்ணாநகரில் சிந்தாமணி விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. அதில் அருள்மிகு கருமாரியம்மனுக்கு இந்த நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான அலங்காரம் செய்தார்கள். அவற்றை இயேகாம்பரம், தினமும் பதிவு செய்தார். அவற்றின் தொகுப்பு இங்கே.

    படங்கள் – இயேகாம்பரம்
    ஓவியங்கள்: ஜெயந்தி சங்கர், வி.கிருத்திகா, சாந்தி ஜெயராமன்
    Music: Bruce Miller

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நிஜமுன்னை நம்பினேன் நீலாயதாட்சி

    நிஜமுன்னை நம்பினேன் நீலாயதாட்சி

    பாபநாசம் சிவன் இயற்றிய ‘நிஜமுன்னை நம்பினேன் நீலாயதாட்சி’ என்ற புகழ்பெற்ற பாடலை, தம் வீட்டுக் கொலுவில் திருமதி ரஞ்சனி சதீஷ் பாடுகிறார். நீலாயதாட்சியிடம் நேரில் பேசுவது போன்ற இந்தப் பாடலைக் கேட்டு மகிழுங்கள்.

    படப்பதிவு – வெ.சுப்ரமணியன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சென்செக்ஸ் ஒரு லட்சம் புள்ளிகளைத் தொடும்

    சென்செக்ஸ் ஒரு லட்சம் புள்ளிகளைத் தொடும்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    தினந்தோறும் புதிய புதிய உச்சங்களைத் தொட்டுக்கொண்டிருக்கும் மும்பை பங்குச் சந்தை, இப்போதைய 61 ஆயிரம் புள்ளிகளிலிருந்து ஒரு லட்சம் புள்ளிகளைத் தொடும் என்கிறார், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக். அவருடன் ஒரு நேர்காணல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இந்தியாவின் ஏவுகணை நாயகன்

    இந்தியாவின் ஏவுகணை நாயகன்

    -மேகலா இராமமூர்த்தி

    ஆர்ப்பரிக்கும் இயல்புகொண்ட கடலும் அமைதியாய்த் தவழும் அதிசயபுரியாம் இராமேசுவரத்தில், எளிய இசுலாமியக் குடும்பத்தைச் சேர்ந்த ஜைனுலாப்தீன் ஆஷியம்மா இணையருக்கு  மகனாய் அக்டோபர் 15, 1931இல் பிறந்தவர் அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) எனும் இயற்பெயர்கொண்ட  ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்கள்.

    இராமேசுவரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தமது பள்ளிப்படிப்பைத் தொடங்கிய அவர் குடும்பத்தின் வறிய சூழல் காரணமாய்ப் பள்ளி நேரம் தவிர்த்த பிறநேரங்களில் செய்தித்தாள் விநியோகிக்கும் பணியையும் மேற்கொண்டுவந்தார்.

    பள்ளிக் கல்விக்குப் பின் திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரியில் (St. Joseph’s College) சேர்ந்து 1954ஆம் ஆண்டு இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். எனினும் இயற்பியல் துறையில் அவருக்கு அதிக நாட்டமிருக்கவில்லை. பின்பு 1955இல் சென்னையிலுள்ள எம்.ஐ.டியில் விண்வெளிப் பொறியியல் (aerospace engineering) படிப்பில் சேர்ந்தார்; 1960இல் அத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்று, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDOவில் (The Defense Research and Development Organisation) வானூர்தியில் மேம்பாடு செய்யும் (Aeronautical Development Establishment) பிரிவில் முதன்மை அறிவியலாளராய்ப் பணியில் சேர்ந்தார். இந்திய இராணுவத்துக்காகச் சிறிய ஹெலிகாப்டர் வகையைச் சேர்ந்த கவிகை ஊர்தியை (hovercraft) அப்போது வடிவமைத்துக் கொடுத்து தம் பணியைத் தொடங்கினார் கலாம் .

    புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளரான டாக்டர் விக்ரம் சாராபாய் (Dr. Vikram Ambalal Sarabhai) தலைமையின் கீழ், கேரளாவில் உருவாக்கப்பட்ட இராக்கெட் ஏவு மையத்தில் (Equatorial Rocket Launching Station) விண்வெளி ஆய்வுக்காக அமைக்கப்பட்ட இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் குழுவிலும் (INCOSPAR) உறுப்பினராய்க் கலாம் இருந்தார்.

    1963இலிருந்து 1971 வரையிலான அந்தக் காலக்கட்டத்தில் டாக்டர் சாராபாயோடு தாம் பணிபுரிந்த காலத்தை ஓர் அற்புதமான அனுபவம் என்று குறிப்பிடும் கலாம், அது குறித்து விவரிக்கும்போது…

    ”திருவனந்தபுரம் விண்வெளி மையத்தில் ஓர் இளம் பொறியாளராகக் கலவைப் பொருட்கள் தொழில்நுட்பம் (composite technology), வெடிபொருள்களை உருவாக்கும் முறைகள் (explosive systems), இராக்கெட் தொழில்நுட்ப முறைகள் (rocket engineering systems) என்று எனக்கான பணி இலக்குகளில் ஈடுபட்டிருந்த நான், டாக்டர் விக்ரம் சாராபாயிடமிருந்து அபாரமான ஆற்றலை உள்வாங்கிக்கொண்டேன். தொழில்நுட்பக் களத்தில் பிஞ்சுக்குழந்தையாக இந்தியா தத்தித் தவழ்ந்துகொண்டிருந்த அச்சமயத்தில், சொந்தமாகவே செயற்கைக்கோள் ஏவுகலங்களை (rockets) தயாரிப்பது பற்றிக் கனவுகண்டவர் டாக்டர் விக்ரம் சாராபாய். அந்த அளவுக்கு இந்திய அறிவியல் சமுதாயத்தின்மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகின்றார்.

    1969ஆம் ஆண்டு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (ISRO) மாற்றப்பட்ட கலாம், அங்கு இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் செலுத்தி வாகனம் (SLV-3) திட்டத்தின் இயக்குநர் ஆனார். இந்த வாகனம், உரோகிணி செயற்கைக்கோளைப் புவிச்சுற்றின் அருகே 1980ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெற்றிகரமாய் ஏவியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் கலாம் பணிபுரிந்த காலத்தில் அவர் நிகழ்த்திய மிகப்பெரிய சாதனையாக இது கருதப்பட்டது.

    அவருடைய இந்தச் சாதனையைப் பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷண் விருதினை 1981இல் அளித்துப் பெருமைப்படுத்தியது.

    1974இல் மேற்கொள்ளப்பட்ட இந்தியாவின் முதல்அணு ஆயுதச் சோதனையான புன்னகைக்கும் புத்தர் (Smiling Buddha) திட்டத்தைக் காண்பதற்காக ராஜா ராமண்ணா எனும் இயற்பியல் அறிஞரால் DRDOவின் பிரதிநிதியாக அழைக்கப்பட்டார் கலாம்.

    அக்னி ஏவுகணை, கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையான ப்ரித்வி போன்றவற்றை உருவாக்கும் திட்டங்களில் அப்துல் கலாம் தலைமைப் பங்கு வகித்தார்.  அதனால் ‘இந்திய ஏவுகணையின் தந்தை’ என்ற சிறப்பை அவர் பெற்றார். எனினும் இவற்றுக்கான பொருட்செலவு, காலவிரயம் குறித்து  அப்போது சில விமர்சனங்களும் எழவே செய்தன.

    1990ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதையும் இந்திய அரசு அவருக்கு வழங்கிக் கௌரவித்தது.

    1992ஆம் ஆண்டு ஜூலை முதல் 1999ஆம் ஆண்டு டிசம்பர் வரை பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDOவின் செயலாளராகவும் திகழ்ந்தார் அப்துல் கலாம். 1998 மே மாதத்தில் நிகழ்ந்த பொக்ரான் (Pokhran-II) அணுகுண்டுச் சோதனைகளில் அரசியல் ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் கலாமின் பங்களிப்பு இருந்தது. அதன் முதன்மைத் திட்ட ஒருங்கிணைப்பாளராக இயற்பியல் அறிஞர் ஆர். சிதம்பரத்தோடு இணைந்து பணியாற்றினார் அவர். நாட்டின் உயர்மட்ட அணு அறிவியலாளராக ஊடகங்களால் அப்போது அடையாளப்படுத்தப்பட்டார் டாக்டர் கலாம். எனினும் அந்தத் திட்டத்தின்மீதும் சில விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அவற்றைக் கலாமும், சிதம்பரமும் திட்டவட்டமாக மறுத்தனர்.

    1998ஆம் ஆண்டு இதயவியல் நிபுணர் சோம ராஜு (B. Somaraju) என்பவரோடு இணைந்து இதய இரத்தக் குழாய்களில் பொருத்துவதற்கான கொரோனரி ஸ்டெண்ட் ஒன்றைக் கலாம் உருவாக்கினார். அது கலாம்-ராஜு ஸ்டெண்ட் (Kalam-Raju Stent) என்று அழைக்கப்பட்டது. இவ்விருவரும் இணைந்து 2012ஆம் ஆண்டு, காலநிலை மாறுபாடுகளால் பழுதடையாத கைக்கணினி (tablet) ஒன்றைக் கிராமப்புறங்களின் மருத்துவப் பயன்பாட்டுக்காக உருவாக்கினர்; அதன்பெயர் கலாம்-ராஜு கைக்கணினி (Kalam-Raju Tablet) என்பதாகும்.

    2002ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11ஆவது குடியரசு தலைவராக 2002 ஜூலை 25ஆம் நாள் பதவியேற்றார் கலாம்.

    திரு. ஆர். வெங்கட்ராமனுக்குப் பிறகுத் தமிழர் ஒருவர் குடியரசுத் தலைவர் ஆகிறார் என்ற வகையில் தமிழர்களுக்கு அது பெருமிதத்தைத் தந்தது.

    அதற்கு முன்னதாகவே கலாம் அவர்கள் மத்திய அரசால் பாரத் ரத்னா விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டிருந்தார். சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், ஜாகிர் ஹுசைன் எனும் இரு இந்தியக் குடியரசுத் தலைவர்களைத் தொடர்ந்து, இந்தியாவின் மிக உயரிய விருதான ’பாரத் ரத்னா’ விருதை வென்ற மூன்றாவது குடியரசுத் தலைவர் கலாமே ஆவார். அத்தோடு, குடியரசுத் தலைவர் பதவியை ஏற்ற முதல் அறிவியலாளர் எனும் பெருமையும் அவரையே சாரும். 2007ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த கலாமை “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவரும் அன்போடு அழைத்தனர்.

    2007ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு சில காரணங்களால் அந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பாமல் விலகினார். ஆனால் அதன் பின்னரும் கல்விசார்ந்த தம் பணிகளுக்கு அவர் ஓய்வளிக்கவில்லை.

    ஷில்லாங்க், அகமதாபாத், இந்தோர் ஆகிய இடங்களிலுள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் (Indian Institute of Management) வருகைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். திருவனந்தபுரத்திலுள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேந்தராகவும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் விண்வெளிப் பொறியியல்துறைப் பேராசிரியராகவும், மேலும் பல கல்விக்கழகங்களில் சிறப்புநிலைப் பேராசிரியராகவும் பணிபுரிந்த பெருமைக்குரியவர் டாக்டர் கலாம்.

    இவ்வாறு இந்திய இளைஞர்களோடு தொடர்ச்சியாக உரையாடுவது, அவர்களுக்குப் பாடம் நடத்துவது போன்றவற்றில் இறுதிவரை தணியாத தாகமும் விருப்பமும் கொண்டவராகவே விளங்கினார் அவர்.

    ‘அக்கினிச் சிறகுகள்’ என்ற பெயரில் தமிழிலும், Wings of Fire என்ற பெயரில் ஆங்கிலத்திலும் வெளியான அவருடைய தன்வரலாற்று நூலானது (Autobiography) இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் நூலாக இன்றும் விளங்கிவருகின்றது. இவையல்லாமல் இந்தியா 2020, எழுச்சி தீபங்கள், எனது வானின் ஞானச் சுடர்கள், ஊக்கமூட்டும் யோசனைகள் போன்ற பல நூல்களைப் படைத்துள்ளார் கலாம்.

    இளைஞர்களே எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள். அவர்கள், ஜே.ஆர்.டி. டாட்டா, விக்ரம் சாராபாய், சதீஷ் தவான் போன்றோரை ஒத்த அறிவாற்றலும், தொலைநோக்குச் சிந்தனையும் கொண்டோராய் இருத்தல் அவசியம் என்று தம்முடைய ‘எழுச்சி தீபங்கள்’ என்ற நூலில் குறிப்பிடும் கலாம், தொழில்நுட்பத்தில் நாம் தொலைநோக்கோடு முன்னேறுகின்ற அதேவேளையில், நம் ஆன்மிக முன்னேற்றத்தையும் விட்டுவிடலாகாது என்று அழுத்தமாகக் கூறுவது ஆன்மிகத்தையும் அறிவியலையும் பிரித்து எண்ணாமல் இரண்டையும் தம் வாழ்வின் இரு கண்களாக அவர் கருதியமையை நமக்குப் புலப்படுத்துகின்றது.

    இந்தியா 2020 என்ற நூலில் இந்தியா அறிவிலே வல்லரசு நாடாகவும், வளர்ந்த நாடாகவும், 2020ஆம் ஆண்டிற்குள் மாறுவதற்குரிய மாதிரித் திட்டத்தை அவர் தெரிவித்திருந்தார்.

    வாழ்வில் உயர இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டியது மிக அவசியம் என அப்துல் கலாம் வலியுறுத்தினார். மைசூரில் நடந்த விழாவொன்றில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வோர் இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு ஒழுக்கம் ஒரு பாடமாக இல்லாமல், வாழ்க்கை முறையாகவே மாறும்” என்று குறிப்பிட்டார்.

    அப்துல் கலாம் அவர்களின் பேச்சிலும் எழுத்திலும் மிளிர்ந்த அனுபவம் செறிந்த பொன்மொழிகள் பல. அவை இன்றைய இளைஞர்களும் அறிந்து பயன்கொள்ளத் தக்கவை.

    சான்றுகளாகச் சில…

    • கனவென்பது நம் உறக்கத்தில் வருவதன்று; நம்மை உறங்கவிடாமல் செய்வது!
    • யாருக்காகவும் உங்களுடைய தனித்தன்மையை மாற்றிக்கொள்ளாதீர்கள்; ஏனெனில், இவ்வுலகிற்கான உங்கள் பங்களிப்பை உங்களைவிடவும் திறம்பட வேறுயாரும் செய்துவிடமுடியாது.
    • உங்கள் கைரேகையைப் பார்த்து உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்காதீர்கள்! ஏனென்றால் கையே இல்லாதவனுக்குக் கூட எதிர்காலம் உண்டு.

    அனைவருக்கும் பிடித்த அவரின் பொன்மொழி ஒன்று இருக்கிறது, அதுதான்…“உன் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்; ஆனால் உன் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்” என்பது.

    தம் வாழ்க்கையில் திருமணமே செய்துகொள்ளாமல் மிகுந்த கட்டுப்பாட்டோடு வாழ்ந்த கலாம் அவர்கள், சாதி மதம் இனம் மொழி போன்ற வேறுபாடுகளையெல்லாம் கடந்த உன்னத மனிதராய்த் திகழ்ந்தார். இராமாயணம் பைபிள் பகவத்கீதை குரான் என்று அனைத்து நூல்களையும் மதக் காழ்ப்பின்றிப் படித்துப் பின்பற்றும் பக்குவம் அவரிடமிருந்தது.

    மென்மையான மனமும் மேன்மையான குணங்களும் கொண்டிருந்த அவருக்கு நுண்கலைகளிலும் நல்ல ஈடுபாடிருந்தது. வீணை இசைப்பதிலும் அவர் தேர்ச்சிபெற்றிருந்தார்.

    2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் நாள் மேகாலயா மாநிலத் தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (IIM) மாணவர்களிடையே அவர் ஆர்வத்தோடு உரையாற்றிக் கொண்டிருந்த மாலை வேளையில் திடீரென்று மயங்கிவிழுந்தார். அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார்.

    கலாம் அவர்களின் பிறந்தநாளான அக்டோபர் 15, இளைஞர்களின் எழுச்சி நாளாகத் தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும்; அதற்கு வலுவூட்டும் வகையில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது’ ஒவ்வோராண்டும் சுதந்தர தினத்தன்று வழங்கப்படும் என்று 2015ஆம் ஆண்டு அறிவித்தார் அப்போதைய தமிழக முதல்வரான ஜெ. ஜெயலலிதா அவர்கள்.

    அப்துல் கலாம் குறிப்பிட்டதுபோல அவர் பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தபோதிலும் இறக்கும்போது ஒருசரித்திர நாயகனாகத்தான் அவர் இறந்தார்.

    எளிய குடும்பத்தில் பிறந்து, அறிவியல் கல்வியால் சிறந்து, ஏவுகணை நாயகனாய் உயர்ந்து, குடியரசுத் தலைவராய்ச் சிகரம் தொட்டவர் டாக்டர் அப்துல் கலாம். அவருடைய அறிவுரைகளையும் வாழ்வியல் முறைகளையும் அறிந்து பின்பற்றினால் நாமும் நம் வாழ்வில் வெற்றிச் சிகரத்தை எட்டிப் பிடிக்கலாம்.

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. https://en.wikipedia.org/wiki/A._P._J._Abdul_Kalam
    2. https://ta.wikipedia.org/wiki/ஆ._ப._ஜெ._அப்துல்_கலாம்
    3. http://www.abdulkalam.com/kalam/theme/jsp/oath/oath.jsp

     

    Share
  • பழகத்தெரிய வேணும் – 87

    பழகத்தெரிய வேணும் – 87

    நிர்மலா ராகவன்

    அச்சம்தான் வெற்றிக்கு முதற்படி

    பொறுக்கமுடியாத சந்தர்ப்பங்களில் மனிதர்கள் இரு விதமாக நடப்பதுண்டு – எதிர்த்துப் போராடுவது, இல்லையேல் அங்கிருந்து தப்பி ஓடிவிடுவது (FIGHT OR FLIGHT).

    அச்சம் அளவுக்கு மிஞ்சினால், இவற்றில் ஒன்றைக்கூடச் செய்ய இயலாது, பயந்து நிற்க நேரிடும்.

    `பிறர் என்ன சொல்வார்களோ!’ என்ற பயம் சிறுவயதிலிருந்தே நம்முள் விதைக்கப்பட்டுவிடுகிறது.

    அதற்குப் பதில், `பிறர் பாராட்டும்படியாக, துணிந்து ஏதாவது செய்!’ என்று தூண்டியிருக்கலாம்.

    எது தவறு?

    `தவறு செய்துவிடுவோமோ?’ என்று பயந்தே காலங்கழிப்பதுதான் தவறு.

    வாழ்க்கை எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. மாறிக்கொண்டே இருக்கும். இது புரியாது, அல்லது அஞ்சி, ஒத்துக்கொள்ள விரும்பாது, பழைமையிலேயே ஊறிக்கிடந்தால் அப்படி இருப்பவருக்கு மட்டுமல்லாது, அவரது குடும்பத்துக்கும் துன்பம்தான்.

    துணிந்து செய்

    எல்லா அனுபவங்களும் நல்லவிதமாக முடியும் என்பதல்ல. ஆனாலும், ஏதாவது நன்மை விளையக்கூடும்.

    நாம் எதற்கு அஞ்சுகிறோமோ, அதைச் செய்துபார்ப்பதுதான் அச்சத்தை வெல்லும் வழி.

    கதை

    நான் நீச்சல் பழக ஆரம்பித்து இரு மாதங்களுக்குப்பின், எதிர்த்திசையில் கண்களை மூடிக்கொண்டு நீச்சலடித்தவரால் அடிவாங்கி, தண்ணீருக்கு அடியில் போனேன். சில நிமிடங்கள் மேலே வரத்தெரியாது திணறினேன். (நெடுநேரமென்றுதான் அப்போது அடைந்த கலவரத்தில் தோன்றியது).

    ஒரு கரம் என்னை மேலே இழுத்து, கரை சேர்த்தது. (நீச்சல் காவலர் அதற்கென்றே நியமிக்கப்பட்டிருந்தார்).

    கவனித்துக்கொண்டிருந்த ஒரு சீனர், “உடனே நீங்கள் பயத்தை வெல்லவேண்டும்,” என்று அழுத்தமாகக் கூறினார்.

    ஒரு பெண்மணி, “என்னையும் இப்படித்தான் ஒருமுறை காப்பாற்றினார்கள்,” என்று அசட்டுச்சிரிப்புடன் ஒத்துக்கொண்டாள்.

    எதையாவது கற்கவேண்டுமென்றால், துணிச்சல் மிக அவசியம். `புதிய அனுபவம் எப்படி இருக்கும்?’ என்ற ஆர்வத்தை வளர்த்துக்கொள்பவர்களை அச்சம் தொடராது.

    “நீங்கள் மூச்சைப் பெரிதாக இழுத்துக்கொண்டு தண்ணீரின் அடியில் போய், பிறகு எம்பி, நீந்துவதுபோல் கைகளையும் கால்களையும் ஆட்டியபடி மேலே வாருங்கள். மேலே வந்ததும் மூச்சை விடலாம்,” என்று சொல்லிக்கொடுத்தார்.

    நான் தயங்கியபோது, “உங்களால் முடியாவிட்டால், நான் தூக்கிவிடுகிறேன்,” என்று பலமளிக்க, துணிந்து அவர் சொற்படி செய்தேன். அவர் உதவி தேவைப்படவில்லை.

    நான் கரையேறியதும், அவர் பெரிதாகச் சிரித்தார். “நீங்கள் முழுகவே மாட்டீர்கள். எவ்வளவு நேரம் மூச்சைப் பிடித்துக்கொண்டிருந்தீர்கள்!”

    `முடியாது’ என்று நினைத்ததைச் செய்துவிட்ட பெருமை அப்போது எழவில்லை. களைப்புதான் மிகுந்தது.

    வீடு திரும்பியதும், நடந்ததை என் பெண்களிடம் கூற, தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்: “நாங்கள் (ஏழு வயதில்) நீச்சல் கற்கும்போது, மாஸ்டர் எங்களை இருபது அடி உயரத்திலிருந்து தண்ணீரில் பிடித்துத் தள்ளிவிடுவார். தத்தளித்தபடி மேலே வந்துவிடுவோம். அதன்பின் பயம் இருந்தால், பால் கலக்காத சூடான காப்பி குடிக்கவேண்டும்”.

    (மூன்று மாதங்களே ஆன குழந்தையை ஆழமான தண்ணீர் தொட்டிக்குள் விட்டால், மேலே வந்துவிடும். தாயின் கருப்பையில் நீந்திய நினைவு அதற்கு மறக்கவில்லை).

    பாதுகாப்பு

    பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டதும், அம்மாவின் புடவையை இறுகப் பற்றிக்கொண்டு, சில குழந்தைகள் அழுது ஆர்ப்பாட்டம் செய்வதுண்டு. பழகிவிட்டால், `டீச்சர் திட்டினாலும், வீட்டுப்பாடம் கொடுத்தாலும் போகிறது, பள்ளிக்கூடத்தில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்களே!’ என்று பிடித்துப்போய்விடும்.

    அதேபோல், திருமணமாகி, முதன்முறையாகப் புக்ககம் செல்லும் பெண்களும் அழுவார்கள். `இதுதான் தாம்பத்தியம்,’ என்று புரியும்போது, பயம் விலகிவிடும்.

    பழகிப்போன சூழ்நிலையை மாற்றினால், வேறொரு இடத்தில் எப்படி இருக்குமோ என்ற அச்சம்தான் எல்லாவற்றிற்கும் காரணம்.

    இதே காரணத்தால்தான் பொறுக்கமுடியாத தாம்பத்தியம் அமைந்தாலும், அதைவிட்டு விலகத் துணியமாட்டார்கள் சில பெண்கள்.

    மரண பயம்

    வயது முதிர்ந்த நிலையில், படுக்கையிலேயே காலம் கழிக்கவேண்டிய நிலை ஒரு பெண்மணிக்கு. இறக்கப்போகிறோம் என்று சந்தேகமறத் தெரியும். ஆனாலும், இவ்வுலகைவிட்டு நீங்கியபின் என்ன ஆகுமோ என்ற பயம்.

    “உயிர் பிரியும் தறுவாயில் உங்களுக்குப் பிடித்தவர்கள் எல்லாரையும் மீண்டும் பார்க்கமுடியும்,” என்று ஆறுதல் கூறினேன்.

    பலமுறை விளக்கம் கேட்டார்.

    இறக்கும் தறுவாயில், என்றோ மாண்டுபோன பெற்றோர், சகோதர சகோதரியர் ஆகியோர் அவர் கண்ணுக்குத் தெரிவார்கள், அவரை வரவேற்பார்கள் என்று நான் எப்போதோ படித்ததை எடுத்துச்சொன்னேன்.

    இறுகியிருந்த முகத்தில் மலர்ச்சி. ஒரு வாரத்திற்குப்பின், தூக்கத்திலேயே மரணத்தைத் தழுவிக்கொண்டார்.

    அச்சம் தன்னம்பிக்கையின் வித்து

    மேடையில் உரையாற்றவோ, பாடவோ, நடிக்கவோ வருகிறவர்கள் எத்தனைமுறை அப்படிச் செய்திருந்தாலும், ஆரம்பிக்குமுன் சிறிது படபடப்பாக உணர்வார்கள். அந்த அச்சத்தை எதிர்கொள்ளும்போது தன்னம்பிக்கையும் கூடிக்கொண்டேபோகும்.

    எதையாவது கற்கும்போது ஆர்வத்துடன் ஆரம்பித்தாலும், போகப் போக, `இதற்கொரு எல்லையே கிடையாதா!’ என்ற மலைப்பும், பயமும் எழும். அரைகுறையாக நிறுத்திக்கொள்ளத் தோன்றிவிடும்.

    இசை, நாட்டியம், அல்லது வேறு எந்தத் துறையிலுமே கரைகாண்பது என்பது நடக்காத காரியம். இது புரிந்து, சிறுகச் சிறுக முயற்சிக்க, பயமும் போய்விடும். பயம்தான் கனவுகளின் எதிரி என்பார்கள்.

    அச்சுறுத்துகிறவர்கள்

    நம்மைக் கண்டு பயப்படுகிறவர்கள் தம் உணர்ச்சியை நம் பக்கம் தள்ளிவிட முனைகிறார்கள். அது புரிந்து, நாம் பயப்படாவிட்டால், அவர்களுடைய அச்சம் அதிகரித்துவிடும். சுவரில் வீசிய பந்துபோல்தான்.

    பெண்களிடம் முறைதவறி நடக்க முயலும் ஆண்களுக்கு இந்த விளக்கம் பொருந்தும்.

    அழகு, செல்வம், அறிவு — இப்படி ஏதோ ஒரு விதத்தில் தன்னைவிட உயர்ந்த நிலையில் ஒரு பெண் இருக்கிறாள் என்று கருதினால், துரத்தாத குறையாக, அவளை நெருங்க பெருமுயற்சிகள் எடுப்பார்கள். அவள் வயது ஒரு பொருட்டில்லை. அப்போது அவள் அடையும் அச்சம் அவர்களுக்கு வெற்றி.

    அந்தப் பெண் எதிர்த்துப் பயனில்லை. பொதுவாகவே, பெண்கள் சொல்வதும் செய்வதும் எதிர் எதிராக இருக்கும் என்று தப்புக்கணக்கு போட்டுவிடுவார்கள்.

    முதலில் பெண்ணுக்குச் சிறிது பயம் ஏற்பட்டாலும், துணிச்சலுடன் அதை எதிர்கொண்டால், அவமானம் அந்த ஆண்களுக்கு.

    பயத்துடன் கோபமும் உடன்வரும்.

    வேகமாக வரும் காரின் குறுக்கே ஒருவர் நடந்தால், காரோட்டிக்குக் கோபம் எழும்.

    ஏன் கோபம்? விபத்து நடந்துவிடுமே என்ற பயம்தான் கோபமாக மாறுகிறது.

    எதற்காவது பயந்து, அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தால், கோபம் அதிகரித்துக்கொண்டே போகிறது. அப்போது ஏற்படும் மன இறுக்கம் உடல்நிலையைப் பாதித்துவிடுமே!

    என்ன பயம் வேண்டியிருக்கிறது!

    நம்மை நாமே உணர ஒரு வழி இது.

    தன்னால் ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்யமுடியும் என்ற நம்பிக்கை ஒருவருக்கு இருந்தால், `பிறர் என்ன சொல்வார்களோ!’ என்ற தயக்கமோ, `தோல்வியடைந்தால் அவமானம்!’ என்ற எண்ணமோ எழாது.

    துணுக்கு

    எனக்கு என்னென்னவோ சாதிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், பயம் குறுக்கே வந்நது எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது.

    என்ன பயம்?

    தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயம்தான்!

    போட்டிகளிலோ, விளையாட்டுகளிலோ பங்கெடுத்துக்கொள்பவர்களில் எத்தனைபேர் முதலிடத்தைப் பிடிக்கிறார்கள்?

    அப்படி இல்லாதவர்கள் தோல்வி அடைந்தவர்கள் அல்லர். பங்கெடுத்துக்கொள்ளவாவது துணிந்தார்களே!

    தமிழ்ப்படங்களிலிருந்து பாடம்

    அண்மையில் வெளியான கர்ணன், அசுரன் போன்ற திரைப்படங்களில், சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களைப்பற்றிக் காட்டுகிறார்கள்.

    வயது முதிர்ந்தவர்கள் தமக்கு நியாயம் கிடைக்காது என்ற அச்சத்திலேயே தழைந்துபோய்விடுகிறார்கள்.

    இளவயதினரோ, காலம் காலமாகத் தம்மை இந்த நிலையிலேயே இருக்கச் செய்யும் மேட்டுக்குடியினரைத் துணிச்சலுடன் எதிர்க்கிறார்கள். துன்பம் அனுபவித்தாலும், மனம் தளர்வதில்லை.

    இறுதியில், கல்வியால்தான் ஒரு சமூகம் உயரமுடியும் என்று உணர்கிறார்கள். அதற்கும் எதிர்ப்பு. ஆனால், பலரும் இணைந்து எதிர்த்தால், வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்ற பாடம் புகட்டப்படுகிறது.

    பயம் இயற்கையான உணர்வுதான். ஆனால், அதை எதிர்கொள்ளும்போதுதான் வாழ ஆரம்பிக்கிறோம்.

    Share
  • 2050ஆம் ஆண்டில் பூஜிய விஷ வாயுக்கள் உறுதியா?

    2050ஆம் ஆண்டில் பூஜிய விஷ வாயுக்கள் உறுதியா?

    சி. ஜெயபாரதன், கனடா

    சூடேறிப் போச்சு நமது
    பூகோளம்!
    வீடேறி வந்திருச்சு பற்பல
    சீர்கேடு!
    நாடெங்கும் நோய்நொடி
    பீடிப்பு!
    பருவ காலநிலை மாறி
    நீடிப்பு
    உருமாறிப் போச்சு
    உலகு!
    தீக்கனல் வளையத்தில்*
    நில நடுக்கம்,
    பூகம்பம் நேருது!
    குப்பென
    எரிமலை வெடித்து
    கரித்தூசி எங்கும் பொழியுது!
    தீப்பிழம்பு
    எரிமலைக் குழம்பு
    ஆறுகளாய்ச்
    சரிவுகளில் ஓடுது!

    பூகம்பத்தால்
    பூமியின்
    சுழல் அச்சு சாயும்!
    எரிமலைக்
    குழம்பு வெளியேறுவதால்
    ஈர்ப்பு மையம்
    இடம் மாறி விடும்!
    வட அமெரிக்காவில் சூறாவளி
    பேய் மழை பெய்யும்!
    வெப்பக் கனல் அடிப்பதால்
    எங்கெங்கு
    நோக்கினும் காடுகள்
    தீப்பற்றி எரியும்!
    புகை மூட்டம்
    போர்த்திய
    ஊர்கள், நகரங்களில்
    மூச்செடுக்க முடியாது!
    கண்ணெரிச்சல் மிகுந்திடும்,
    எண்ணற்ற மாந்தர்,
    எல்லாம் இழந்து
    அனாதைகளாய் வேறிடப்
    புலப்பெயர்ச்சி!

    பூகோளச் சூடேற்றம்
    நூறாண்டுப் போராட்டம்
    அடுத்த 2100
    நூற்றாண்டிலும்
    காஸலீன் கார்கள் ஓடும்
    விஷ வாயுக்கள்
    கக்கும்!
    புவித் தொழிற்சாலை போல்
    பூமியும்
    எரிமலைகள் வெடித்து
    கரிச் சாம்பல்
    விஷ வாயுக்கள்
    தரணி எங்கும்
    பரப்பும்!
    2050ஆம் ஆண்டிலே எப்படி
    பூஜிய வீச்சு உறுதி
    அளிப்பர்
    புவி மாந்தர்?

    *Ring of Fire: VOLCANO ERUPTIONS

    Share
  • ஜெயந்தி சுப்ரமணியன் வீட்டுக் கொலு

    ஜெயந்தி சுப்ரமணியன் வீட்டுக் கொலு

    சென்னை, கோயம்பேட்டில் வசிக்கும் ஜெயந்தி சுப்ரமணியன் வீட்டுக் கொலு விழாவைக் கண்டுகளியுங்கள். அவர் பாடும் ‘நான் ஒரு விளையாட்டுப் பொம்மையா?’ என்ற பாடலைக் கேளுங்கள். பொம்மைகள் அணிவரிசைக்கு இந்தப் பாடல், ஏகப் பொருத்தம். நமது மரபின்படி, வருகை தந்த விருந்தினர்களுக்குப் பிரசாதம் அளித்துக் கௌரவிப்பதையும் பாருங்கள்.

    படப்பதிவு – வெ.சுப்ரமணியன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கலைவாணி நின் கருணை தேன்மழையே!

    கலைவாணி நின் கருணை தேன்மழையே!

    கலைமாமணி கே.சோமு இயற்றி, இசையமைத்த ‘கலைவாணி நின் கருணை தேன்மழையே’ என்ற பாடலை ஜெயந்தி சுப்ரமணியன் குரலில் கேட்டு மகிழுங்கள். இந்தச் சரஸ்வதி பூஜைத் திருநாளில் கலைவாணியின் அருளைப் பெறுங்கள்.

    படப்பதிவு – வெ.சுப்ரமணியன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • துர்க்கைத் தாண்டவம்

    துர்க்கைத் தாண்டவம்

    ஹரி நாராயணனின் துர்க்கைத் தாண்டவம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எனை நீ மறவாதே | ரஞ்சனி சதீஷ்

    எனை நீ மறவாதே | ரஞ்சனி சதீஷ்

    எம்.‌எம். தண்டபாணி தேசிகர் இயற்றிய ‘எனை நீ மறவாதே அங்கயற்கண்ணி எனை நீ மறவாதே’ என்ற பாடல், புகழ் பெற்றது. இதை ஜெயந்தி சுப்ரமணியன் வீட்டுக் கொலுவில் பாடுகிறார், திருமதி ரஞ்சனி சதீஷ். இந்த இனிய பாடலைக் கேட்டு மகிழுங்கள்.

    படப்பதிவு – வெ.சுப்ரமணியன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நியூசிலாந்தில் துளசி கோபால் வீட்டுக் கொலு

    நியூசிலாந்தில் துளசி கோபால் வீட்டுக் கொலு

    நியூசிலாந்தில் வாழும் துளசி கோபால், உலகின் பல பகுதிகளுக்குப் பயணித்தவர். ‘ஆஹா அற்புதம்!’ எனக் கொண்டாடத்தக்க வகையில், நுணுக்கமான கலைப்பொருள்களுடன் இந்த நவராத்திரி கொலுவை வடிவமைத்துள்ளார். Over to Newzealand.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நித்திலாவின் யோசனைகள் – 4

    நித்திலாவின் யோசனைகள் – 4

    நித்திலாவின் புதிய யோசனை இதோ. உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பணியாரம் செய்வது எப்படி?

    பணியாரம் செய்வது எப்படி?

    பணியாரம் செய்வது இவ்வளவு எளிதா? இதோ நான்கே நிமிடத்தில் சுடச் சுடப் பணியாரம். செய்து காட்டுகிறார் மஞ்சுளா லோகநாதன். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • போர்க்கலைகள் பயிலல் – 8

    போர்க்கலைகள் பயிலல் – 8

    மீனாட்சி பாலகணேஷ்

    (புதிய பருவங்கள்- ஆண்பால் பிள்ளைத்தமிழ்)                   

    பாடலே பெறாத புதிய பிள்ளைப்பருவங்கள் எனும் இத்தொடரில் நாம் வளர்ந்துவரும் பெண்மக்கள் சிறுபருவத்திலிருந்தே விளையாட்டாகவோ உண்மையாகவோ பயிலும் கலைகளைக் கண்டோம். இப்போது ஆண்மக்களுக்கான பருவங்களைக் காணலாம். பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் கடவுளர்கள் மீதே (முருகப்பெருமான், திருமாலின் அவதாரங்கள்) பாடப்பட்டுள்ளன. சிலவே அரசர்கள் மீது பாடப்பட்டவை (குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், முதலியன). இதில் வியப்புக்குரிய செய்தி என்னவெனில் முருகன், திருமால், அரசன் குலோத்துங்க சோழன் ஆகியோரின் வீரதீரப் பிரதாபங்கள் பல இடங்களில் பல பருவங்களில் பொருத்திப் பாடப்பட்டுள்ளன. பிள்ளைத்தமிழுக்கு இலக்கண நூல்கள் வகுத்துக் கூறும் பல பருவங்களுள் ‘கச்சினொடு சுரிகை காமுறப்புனைதல்’ என்பதும் ஒன்றாகும். இதனைக் கதிரகாமப் பிள்ளைத்தமிழ் ஆசிரியர் ஒருவரே மூன்றே மூன்று பாடல்களில் உடைவாள் செறித்தல் என்று நயமுறப் பாடியுள்ளார். (உடைவாள் செறித்தல், மீனாட்சி பாலகணேஷ், வல்லமை இதழ்)

    எனது குறுகிய வாசிப்பில், அரச குடும்பத்து ஆண்மக்கள் போர்க்கலை பயில்வதனை எந்தக்காப்பியத்திலும் விளக்கியதனைப் பற்றி அறியேன். தெரிந்த பெரியோர்கள் சுட்டிக்காட்டினால் பெரிதும் நன்றி பாராட்டுவேன்.

    எந்தக்கலையையும் இளம்வயதிலேயே குழந்தைகளுக்குப் பழக்குவார்கள். கல்வி, இசை, நடனம், சித்திரம், சாத்திரங்கள் முதலியன. போர்க்கலை மட்டும் இதற்கு விதிவிலக்கல்லவே! ஆகவே கார்த்திகைப்பெண்களால் வளர்க்கப்பட்டு வரும் சிறுமுருகன், வில், வாள்வீச்சு பயின்று, குதிரை, யானையேற்றம் பயில்வதனைப் பாடி மகிழப் போகிறோம். யார் முருகனுக்கு ஆசான்? அவரைப் பெயரிடாமல் ஆசான் என்றே கூறுவோம். தந்தைக்கே ஆசானான அண்ணலுக்கு நாம் யாரை ஆசான் எனக்கொள்வதாம்?

    நீலமயில் மீதுலவு நெட்டிலைவேல் மயிலோனே!
    ஆலகால முண்டவனின் அருள்பெரு குங்குமரனே!
    வேலைவீசி கிரவுஞ்சவெற்பைப் பொடித்தவ னேகடம்ப
    மாலைதவழ் மார்பனே! மடக்குறத்தி மணாளனே!

    தாயுமையாள் கைதந்த ஆயுதத்தைக் கொண்டந்த
    மாயவவுணர் கூட்டத்தைச் செற்றொழித் துத்தொல்லை
    யோயவெஞ்சி னங்கொண்டக் கூட்டத்தை வேரறுத்த
    மாயவன்திரு மருகா! மகிழ்வள்ளி மணவாளா!

    போர்க்கலை பயின்றதெங்கோ! பயிற்றுவித்த துவும்யாரோ!
    கார்க்காலமே கங்கள்போலெழு கயவன்மேற் கணையேவி
    யேர்க்கோல உலகமது எழில்கொண் டேற்றமுற்றிலங்க
    ஆர்க்கும்நல் சேவறனை யிரதத்தின் கொடிகொண்டாய்!

    வீரத்திரு மகனே! வெற்றிவடி வேலனே!
    சக்தியுமை பாலனே!
    ஆரத்தழு விடவுன் அருமைத் திருவடியை
    ஆவல்மிகப் பெருகுதே!
    நேரம்சென் றிடுதே! வீரம் தனைப்பாட
    என்நாவால் இயலாமை
    யோரம்நின் றுந்தன் ஓங்கும் வீரத்தை
    ஒண்டமிழால் போற்றுவேன்!

    எத்தனையோ முறை முயன்றும் முருகப்பெருமான் போர்க்கலை பயின்ற திறத்தைப் பாடல்களில் வடிக்க இயலவில்லை. இதுவும் முருகன் திருவிளையாடல் போலும்! என் இயலாமையைக் கூறியே அவன் போர்த்திறத்தைப் போற்றிச் சில பாடல்கள் புனைந்துள்ளேன். அனைத்தும் அவன் கருணை!

    Share
  • கல்வித் தெய்வமானவளே கருணையுடன் அருள்புரிவாய்!

    கல்வித் தெய்வமானவளே கருணையுடன் அருள்புரிவாய்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேர்ண், ஆஸ்திரேலியா 

    கற்பனையாய் வருவாய் கவிதையாய் வருவாய்
    காவியமாய் வருவாய் கருத்துப் பெட்டகமாவாய்
    சொற்பதமாய் வருவாய் சுந்தரமாய் வருவாய்
    நற்பதத்து நாயகியே நாளுமெமக் கருள்புரிவாய்

    வெள்ளைக் கமலத்தை விரும்பியே ஏற்றாயே
    வீணையினைக் கரமேந்தி மீட்டுகிறாய் அறிவிசையை
    தெள்ளுதமிழ் நாம்பாட செய்தவளும் நீயன்றோ
    நல்லதமிழ் கொண்டுன்னை நாம்பரவி நிற்கின்றோம்

    குழந்தை மொழியினிலும் குயிலின் குரலினிலும்
    கொஞ்சும் கிளியினிலும் குடிபுகுவாய் நீயென்றும்
    வஞ்ச மனமுடையார் வண்ணமுற வருவதற்கு
    வாண்மையுடை கல்வியினை வழங்கிடுவாய் கலைமகளே

    கல்வியினை நாடாதார் கணக்கின்றி இருக்கின்றார்
    கல்விகற்க விருப்புடையார் வசதியின்றித் தவிக்கின்றார்
    கல்வியினைக் காசாக்கும் கசடர்பலர் பெருகிவிட்டார்
    கல்வியினைப் பெற்றுநிற்க கருணைகாட்டு கலைமகளே

    கல்வியெனப் பலபட்டம் பெற்றிட்டார் நாட்டினிலே
    கண்ணியத்தைக் குழிதோண்டி புதைத்துமே நிற்கின்றார்
    கல்வியதன் பெறுமதியைக் கருத்திலவர் கொள்ளாமல்
    கயமைக்குணம் கொண்டுள்ளார் கண்பாராய் கலைமகளே

    குருவாகி நிற்கின்றார் குறைகளையும் கொண்டுள்ளார்
    குருநாடிப் போவோர்க்கு குந்தகமும் கொடுக்கின்றார்
    குருமாரின் குறைகளைய கொடுத்திடுவாய் நற்பாடம்
    குருவாகி இருக்கின்ற குணக்குன்றே வேண்டுகிறோம்

    கல்வியெனும் பெருங்கடலில் கசடுபல கலக்கின்றார்
    கல்வியெனும் பெருங்கடலின் கசடறுப்பாய் கலைமகளே
    கல்வியெனும் பாற்கடலை கருத்துடனே சுவைப்பதற்கு
    கல்வித் தெய்வமானவளே கருணையுடன் அருள்புரிவாய்

    Share