Blog

  • அறுபது ரூபாய் படுத்திய பாடு!

     

    வெங்கட் சாமிநாதன்

    நினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 54)

    கொஞ்ச நாட்கள்  கழிந்தன. எந்த இடத்திலிருந்தாவது  ஏதும் ஆர்டர் வருமா என்று  காத்திருப்பு. இன்னும் wanted column-ல் ஏதும் எனக்கு ஏற்ற விளம்பரங்கள் வருமா என்ற காத்திருப்பு. ஒரு மாதம் இரண்டு மாதங்கள் கழிந்திருக்கும். முதலில் வந்தது Northern Railway-யிலிருந்து. எனக்கு வேலை கிடைத்துவிட்டது. சந்தோஷமாக இருந்தது. முதல் தடவையாக நானே முயன்று பெற்ற வேலை அல்லவா? இங்கு யாரும் ராஜாவோ, செல்ல ஸ்வாமியோ சொல்லி ஒரு முரளீதர் மல்ஹோத்ரா கருணை மனம் கொண்டு, ”boys service-ல் எடுத்துக்கொள்,” என்று தனிச் சலுகை காட்டிப் பெறவில்லையே. எத்தனையோ பேருடன் போட்டி போட்டல்லவா கிடைத்திருக்கிறது. அந்த சமயத்தில் அந்த சந்தோஷம் தகுதியில் பெற்றதாகத்தான் தோன்றியது.

    எல்லோரிடமும் சொல்லிச் சந்தோஷப்பட்டேன். அவர்களுக்கும்  சந்தோஷம் தான். ஆனால், ”இன்னம்  பொறு. மூன்று இடங்களுக்குப் போய் வந்திருக்கிறாயே, அவை என்ன ஆகிறது என்று பார்க்கலாம்,” என்று மிருணாலும், என் செக்‌ஷன் அதிகாரி தேஷ் ராஜ் பூரியும் சொல்லவே, அது சரியாகத்தான் பட்டது. இரண்டாவது நான் வேலைக்குச் சேர பிக்கானீர் போகவேண்டும். பாலைவனம். வெயில் வறுத்து எடுக்கும். இங்கேயே ஆறு வருடங்கள் அஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட கூரையில் காய்ந்து வரண்டாயிற்று. பிக்கானீர் போவதா என்ற தயக்கம் ஒரு மூலையில் எட்டிப் பார்த்தது. இங்காவது ஆறு வருடங்களோடு போயிற்று. பிக்கானீர் போனால் ஆயுள் முழுக்க அல்லவா கஷ்டப் படவேண்டும். இந்த நினைப்பு மற்ற இடங்களிலிருந்து என்ன வருகிறது என்று பார்க்கலாம் என்று ஆலோசனை சொன்னதால் வந்ததா இல்லை, பிக்கானீர் பாலைவன தகிப்பின் காரணமாக மற்றவர்கள் சொன்ன ஆலோசனைப்படி காத்திருக்கத் தீர்மானித்தேனா தெரியவில்லை. இரண்டுமே இருக்கலாம்.

    பிக்கானீர் ஆர்டர் வந்த பத்திருபது நாட்களுக்குள்ளேயே Eastern Railway  யிலிருந்தும் கடிதம் வந்தது. கல்கத்தாவில் வேலைக்குச் சேரவேண்டும். எங்கு நான் சொதப்பிவிட்டு வந்ததால் வேலை கிடைக்காது என்று நினைத்தேனோ அங்கிருந்தும் வேலைக்கு ஆர்டர் வந்தது. இரண்டு இடங்களிலிருந்தும், கல்கத்தாவுக்கும் பிக்கானீருக்கும் பயணம் செய்வதற்கான ரயில்வே பாஸும் உடன் வைக்கப்பட்டிருந்தன. எங்கு சேர்ந்தாலும் வாழ்நாள் பூராவும் இலவசமாக ரயிலில் பயணம் செய்யலாம். எனக்கு ஏதோ லாட்டரி விழுந்த மாதிரித்தான் சந்தோஷம். “ஔர் க்யா சாஹியே சாலே, குதா சப்பர் ஃபாட்கே தேதியா? மௌஜான் ஹி மௌஜான்” (இன்னம் என்ன வேணும் உனக்கு. கடவுளே கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கறார் உனக்கு, கொண்டாட்டம் தான்) என்று பஞ்சாபி நண்பர்கள் சந்தோஷத்தோடு கேலியும் செய்தார்கள். ஆக, பிக்கானீர் தான் போயாகணும்னு இல்லை. கல்கத்தா போகலாம். கிடைக்காது என்று நிச்சயமாக நினைத்த இடத்தி லிருந்தே வேலை கிடைக்கிறதே. அந்த இண்டர்வ்யூ போர்டுலே இருந்த மனுஷன் ரொம்ப நல்ல மனுஷனா இருக்கணும், அவர்களையெல்லாம் மரியாதையாக, “ஸார்” னு சொல்லாததுக்காக வேலை கொடுக்காமல் இல்லை. இந்த உலகத்திலும் சில நல்ல மனுஷங்களும் இருக்கத் தான் செய்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.

    இப்படி இந்த மயக்கத்தில் கொஞ்ச நாட்கள் கழிந்து கொண்டிருக்கும்போதே தில்லியிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. மத்திய உள்விவகாரத் துறையிலிருந்து. வேலை தில்லியில் மத்திய அரசாங்கத்தில். புது இடம் சம்பளமும் அதிகம். கல்கத்தா பிக்கானீர் வேலைகளைவிட கிட்டத்தட்ட அறுபது ரூபாய்கள் அதிகம். வேலையில் க்ரேடும் வேறு. உயர்ந்த அடுக்கில் உள்ளது. பின் என்ன வேண்டும்.? பிக்கானீர் பாலவன வெயிலில் சுட்டெறிய வேண்டாம். கல்கத்தா வேலையை விட சம்பளம் அதிகம்  அது தானே அன்று எனக்கு வேண்டியது! தில்லி தான் என்று மனதுக்குள் நிச்சயப்படுத்திக்கொண்டேன். ஒரே ஒரு குறை. தில்லியில் வேலைக்கு அழைப்போடு இலவச ரயில் பாஸ் இல்லை. சொந்த செலவில் தான் போகவேண்டும்.   இலவச பயணம் என்ற கனவிலிருந்து விழித்தெழ வேண்டும். சரி. இப்போது கிடைக்கும் அதிக சம்பளம் அறுபது ரூபாய் போகப்போக இன்னும் அதிகமாகாதா என்ன? பதவி உயருமே? அதுவும் எனக்கு அதிக சம்பளம் தருமே? இப்படியேவா இருக்கப் போகிறது எல்லாம் எப்போதும்?

    ஒரு மாதிரியான  தீர்மானம் மனதுக்குள் ஆனதும் முதலில் நான் இச்செய்தியைச்  சொன்னது மிருணாலிடம்தான். அவன் அப்போது மஞ்சு சென்னோடு உட்கார்ந்து வம்பளந்து  கொண்டிருந்தான். போய்ச் சொன்னேன் ஒரே ஆரவாரம். இருவருக்கும் ரொம்ப சந்தோஷம் “இது என்ன இது. தினம் தினம் வந்து உங்களுக்கு ஒரு புது ஆர்டர் வந்திருக்குன்னு சொல்கிறீர்கள்? இது எத்தனாவது ஆர்டர்?….” என்றாள் மஞ்சு முகத்தில் வியப்பும் பூரிப்பும் பொங்க. “oh hundreds” என்றான் மிருணால். “அவன் சும்மா கேலி பண்றான். மூணு இடத்துக்குப் போனேன். மூணு இடத்திலிருந்தும் வேலைக்கு அழைப்பு வந்துவிட்டது. இது எப்படி நூற்றுக் கணக்காகும், மிருணால் அப்படித்தான் சொல்வான்” என்றேன்.

    சரி எங்கே போகிறதுன்னு  தீர்மானிக்கமுடியாது, இப்படி தினம் இவ்வளவு இடத்திலேயிருந்து அழைப்பு வந்தால், இல்லையா?” என்றாள் மஞ்சு.

    தில்லி போகலாம்னு  நினைக்கிறேன். புதிய இடம். தலைநகரம். அதெல்லாம் போக, இந்த தில்லி மத்திய மந்திரி அலுவலகம். அறுபது ரூபாய் அதிகம் கிடைக்கும்.” என்றேன்.

    புர்லாவில் இருந்த அந்த கடைசி நாட்களில் எங்கே  போவது அடுத்து? என்று தீர்மானித்தது அந்த அதிகப்படியாக கிடைக்க விருந்த அறுபது ரூபாய் தான். அதை இன்று நினைத்துப் பார்க்கப் பார்க்க   நான் திகைத்துப் போகிறேன். அறுபது ரூபாய் ஆசை காட்டி இழுத்த தில்லி, என்னையும் என் வாழ்க்கையையும் என் சிந்தனைகளையும் முற்றிலும் மாற்றி அமைத்தது கால் பதித்த தினத்திலிருந்தே தொடங்கிய தில்லி வாழ்க்கை தான். பார்க்கக் கண்களை விழித்திருந்தால் காட்சி தர தில்லி தன்னுள் நிறைய கொண்டிருந்தது தில்லி. தேடத் தொடங்கினால அது என் முன் விரித்த உலகம் வித்தியாசமானதாக, புதியதாக என்னை முற்றிலும் புதிய மனிதனாக ஆக்க தன்னிடம் நிறைய கொண்டிருந்தது. சுற்றியிருந்த ஜன்னல்கள் எத்தனையோ அத்தனையையும்  திறந்தால் அது காட்டும் உலகம் தேடுபவர்களுக்கு மாதிரமே காட்சி தரும் ஒன்றாக இருந்தது. அந்த ஜன்னல்கள் எதையும் திறக்காது, ஜன்னல்களையோ மூடியிருக்கும் அதன் கதவுகளையோ காணாது, தன் இருந்த அறைக்குள் தனக்குப் பழக்கமான பாளையங்கோட்டையையோ, மன்னார்குடியையோ விருத்தாசலத்தையோ உருவாக்கி அதனுள் தம் ஆயுளைக் கழித்த பெருந்தகைகள அங்கு இருந்தனர். அது பற்றிய அவர்கள் பெருமையை, சமயம் வாய்க்கும் போதெல்லாம் சொல்லிச் சொல்லி தாம் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டிருப்பதைப் பற்றி கர்வம் கொண்டனர். “தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்ற வரிக்கு தம் உணர்வில் புதிய அர்த்தங்களை உருவாக்கிக்கொண்டவர்கள் அனேகர்.

    புர்லா மண்ணிலிருந்து  என்னை அழைத்து  ஆசை காட்டியது அறுபது ரூபாய் அதிகம் தரும் வேலை தான். ஆனால் வெகு சீக்கிரம் அதை பின்னுக்குத் தள்ளி தில்லி என்னை வேறு மனிதனாக்கியது.

    ”அது மட்டுமில்லை, செல்லஸ்வாமி அங்கு தானே இருக்கிறார்?. எனக்கு உதவவும், புது இடத்தில் வழிகாட்டவும் தான் அவர் எனக்கும் முன்னால் போய் அங்கு எனக்காகக் காத்திருப்பது போல் இருக்கிறது” என்றேன்.

    “அப்போ எங்களையெல்லாம் விட்டுப் பிரிகிறதாத் தீர்மானம் ஆயாச்சு, இல்லையா?” என்றாள் மஞ்சு. இந்த உணர்வு மிருணாலிடம், மஞ்சுவிடம் என்னிடமும் எப்போதும் ஒரு மறைவிடத்தில் ஒளிந்து இருந்து கொண்டேதான் இருந்தது. கடைசியில் தான் அது மெல்ல தலை நீட்டும். இப்போது மறுபடியும் தலை நீட்டியது.

    உடன் யாரும் பேசமாட்டார்கள். ஒரு அசாதாரண மௌனம் நிலவும். எங்கோ மனமும் பார்வையும் திரும்பும்.

    “என்ன செய்ய? இன்னம் கொஞ்ச  நாளில் நாங்களும் எங்கேயாவது தான் போகவேண்டியிருக்கும். அதை எப்படித் தவிர்ப்பது? எல்லோரும் போய்க்கொண்டிருக்கிறார்கள். நாமும் ஒவ்வொருவராகப் போகத்  தான் வேண்டும்.” என்று மூவரும் ஆளுக்கொரு வார்த்தையாக, சொல்லி சமாதானம் கொண்டோம்.

    முதலில் சம்பல்பூர் Chief Medical Officer- இடம் போய் உடல் ஆரோக்கியத் தகுதிச் சான்று வாங்க வேண்டும். அங்கு நான் போன சமயம் கட்டக்கில் என்னோடு நேர்காணலுக்கு வந்திருந்த ஏ. ஸ்ரீனிவாசன் போற்றியும், டி.ஆர்.ஜி. பிள்ளையும் இருந்தனர். அவர்களும் இந்த அணைக்கட்டிலேயே வேலை பார்த்த போதிலும், கட்டக்கில் பார்த்துத்தான் ஒருவரை ஒருவர் ஹிராகுட் அணை சகாக்களாக அறிந்து கொண்டிருந்தோம். எங்கோ மூலையில் அவர்கள் வேலை பார்த்திருக்க வேண்டும். சிப்ளிமாவோ, பர்கரோ, இப்படி இன்னும் எத்தனை இடங்கள் இருக்கின்றனவோ. ஆனால், ஆறு வருஷங்கள் கழித்து புர்லாவைவிட்டுப் போகும் போதாவது. ஒருவரை ஒருவர் பரிச்சயம் செய்துகொண்டு இணைந்தோமே. இப்போது அவர்களுக்கும் தில்லி ஆர்டர் கிடைத்துவிட்டதால், தில்லி போகும் போதாவது ஒன்றிணைந்து போவது என்று தீர்மானித்துக் கொண்டோம். பயணத்திலும், பின் அங்கு புது இடம் தில்லியில் ஆரம்ப நாட்களில் தங்குவதற்கும் ஒன்றிணைந்து கொண்டால் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளலாமே. அன்றே சி.எம்.ஓ எங்களுக்குத் தகுதிச் சான்றிதழ் கொடுத்து விட்டார். எந்தக் கையூட்டு பற்றியும் அவருக்கும் சரி, எங்களுக்கும் சரி, அந்த மருத்துவமனையின் வேலையாட்களுக்கும் சரி, அந்த நினைப்பே தோன்றாத பொற்காலம். அது. ஒரிஸ்ஸாவில் சம்பல்பூரில் 1956- டிஸம்பரில் ஒரு தினம் அது.

    எல்லோரும் சேர்ந்தே தில்லிக்குப் பயணப்படுவது என்று தீர்மானித்துக்கொண்டோம். நாங்கள் எங்கு எந்த மூலையில் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நாள் சாயந்திரம் சம்பல்பூரிலிருந்து ஜர்ஸகுடாவுக்குப் போகும் சாயந்திர ரயில் 5.00 5.30 மணிக்கு சேர்ந்துகொள்வது என்று முடிவாயிற்று.

    செக்‌ஷன் அதிகாரி தேஷ் ராஜ் பூரி முன்னாலேயே கொடுத்த  வாக்கு இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும்  தடை சொல்லாது பணியிலிருந்து விடுவிப்பதாக. வீட்டில் ஒரு சின்ன பையன் சில மாதங்களாக வந்து சேர்ந்திருக்கிறான். வேலை தேடிக்கொண்டு. அவ்வப்போது ஏதோ வேலை கிடைத்து வருகிறது. என் வீட்டை அதிகாரப்பூர்வமாக பங்குகொண்டிருக்கும் சிவராம கிருஷ்ணன் பார்த்துக்கொள்வான் அந்த புதிதாக வந்த பையனை. இன்னும் யாருக்காவது என் இடத்தில் அந்த வீடு ஒதுக்கப்பட்டாலும், ஒரு காலத்தில் 12 பேர் இருந்த இடம். அவனுக்குத் தெரியும். இப்போது அந்த 20 வயது பையனுக்கா இடம் இராது.? அதிக பந்தங்கள் இல்லை. தகர ட்ரங்க் ஒன்று. பின் படுக்கை. தில்லியில் அதிகம் குளிரும் என்றார்கள். அவர்கள் சொன்ன ஆலோசனையில், இரண்டு கம்பளி ஸ்வெட்டர் வாங்கிக் கொண்டேன். வேறு என்ன? மிகுந்தது புத்தகங்கள். அவற்றைத் தூக்கிக் கொண்டு போகமுடியாது. மூன்று பெரிய கள்ளிப்பெட்டி களில் அடுக்கி சுற்றி ஸ்டீல் டேப் போட்டு பத்திரப்படுத்தினேன். ‘இவை இங்கேயே இருக்கட்டும். பத்திரமாகப் பார்த்துக்கொள். பின் அங்கு இருக்கும் இடத்தின் சௌகரியத்தைப் பொருத்து நான் சொல்லும்போது இவற்றை ரயிலில் அனுப்பி வை. செய்வாயா?” என்று கேட்டேன். “இதென்ன பெரிய காரியம். நீங்கள் கவலைப் படாமல் சௌகரியமாகப் போய் வாருங்கள். இப்போது இதை யெல்லாம் எப்படி எங்கு தூக்கிக் கொண்டு போக முடியும்?. அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம், என்னிடம் விட்டு விடுங்கள்” என்றான். நான் பழகி ஒரு சில மாதங்களில் அவன் சாதுவாகவும் சொன்ன காரியத்தைச் செய்பவனாகவும் தெரிந்தான்.

    தேஷ் ராஜ் பூரி கொடுத்த  வாக்குப் படியே எனக்கு தடை ஏதும் செய்யவில்லை. அப்போது நிர்வாக அதிகாரியாக இருந்த கிர்தாரி லால் எனக்குக் கொடுத்த Relieving Order-ல் ஒரு விஷமம் செய்திருந்தான். அதாவது நான் என் இஷ்டத்துக்கு வேலையை விட்டுப் போவதால் ஹிராகுட் அணைக்கட்டுத் திட்டத்திலிருந்து வேலையை விட்டு நீங்க அனுமதிப்பதாக அந்த ஆர்டர் எழுதியிருந்தது. இந்த நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் செய்யும் சில விஷமங்கள் உடனே சட்டெனெ புரிவதில்லை. எனக்கும் அப்போது புரியவில்லை. நான் சந்தோஷமாக அந்த ஆர்டரை எடுத்துச் சென்றேன்.

    அருகில் இருந்த நண்பர்களுக்கும்  ஹிராகுட்டிலிருந்த எஸ்  என் ராஜாவுக்கும் நான் தில்லி போவதைப் பற்றிச் சொன்னேன். அவர் சந்தோஷப்பட்டார். ”முடிந்தால் எழுதிக்கொண்டிரு. அங்கு போய் விலாசம் தெரிவி,” என்றார். இது சம்பிரதாய வார்த்தை என்று தான் தோன்றும். ஆனால் இந்த சம்பிரதாயங்களில் எவ்வளவு அர்த்தங்கள், அவசியங்கள், காரியங்கள் இருந்தன என்பது எனக்கு வெகு சீக்கிரம் தெரிய வந்தது.

    கடைசியாக என்னுடன் சம்பல்பூர் வரை வந்து வழியனுப்ப புறப்பட்டது மிருணால் தான். ஏதும் வண்டி கிடைக்கவில்லை. ஒரு ரிக்‌ஷா தான் கிடைத்தது. அதில் நானும் மிருணாலும். ஒரு பெட்டி படுக்கை. இவ்வளவு தான். சைக்கிள் ரிக்‌ஷா நேரத்துக்கு என்னை சம்பல்பூரில் கொண்டு சேர்க்கும் என்று தோன்ற வில்லை. ஆனாலும் செய்வதற்கு ஏதும் இல்லை. மகாநதிப் பாலம் தாண்டியதும் பின்னாலிருந்து ஒரு லாரி வந்தது. ரிக்‌ஷாவிலிருந்து இறங்கி அந்த லாரியை நிறுத்தி, ”எனக்கு மிக அவசரமாக சம்பல்பூரி போய் தில்லிக்கு ரயில் ஏறவேண்டும். உதவ முடியுமா?” என்று கேட்டேன். ”சரி ஏறிக்கொள்,” என்றான். ரிக்‌ஷாவுக்கு பேசிய பணத்தைக் கொடுத்துவிட்டு நானும் மிருணாலும் லாரியில் ஏறிக்கொண்டோம். லாரி ஓட்டுபவர்கள் இந்த மாதிரி சமயங்களில் உதவுவார்கள். காசு கேட்க மாட்டார்கள். மிஞ்சி கடக்க வேண்டிய ஆறு மைல் தூரத்தை வெகு சீக்கிரம் கடந்து சம்பல்பூரில் ரயிலைப் பிடிக்க முடிந்தது.

    தில்லிப் பயணம் அந்த நாட்களில் அவ்வளவு சுலபம் இல்லை. முன் பதிவு இல்லாத நாட்கள் அவை. எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். எந்த வண்டியிலும் எங்கும் பயணம் செய்யலாம். டிக்கட் கிடைக்க இல்லை என்ற பேச்சு இல்லை. ஆனால் கூட்ட நெரிசலில் இடிபட  வேண்டியிருக்கும். நீண்ட தூரப் பயணங்கள் சிரமம் தருபவை. தூங்கவும் சாப்பிடவும். அத்தோடு நாலைந்து இடங்களில் இறங்கி வண்டி மாறவும் வேண்டும். 1956-ல் நான் தில்லி சென்ற மார்க்கம் இதோ. சம்பல்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஜார்ஸகுடா. ஜார்ஸ குடாவில் வண்டி மாறி பிலாஸ்பூர். பிலாஸ்பூரிலிருந்து பினா. பின் மறுபடியும் வண்டி மாறி கட்னி. கட்னியில் இறங்கி பின் தில்லிக்கு வண்டி மாற வேண்டும். எத்தனை ஆயிற்று? அவ்வப்போது மாறும் வண்டிகளில் இருக்க இடம் பொருட்களை வைக்க இடம், சாப்பிட கிடைக்கும் வசதி இரவுகளில் தூங்கக் கிடைக்கும் வாய்ப்புகள் இவை என்ன கிடைக்கின்றனவோ அனுபவித்து வதை படத்தான் வேண்டுமே ஒழிய அவற்றை நீட்டி முழக்கி எழுதுவது இன்றைய தலைமுறையினருக்கு வெறுப்பேற்றும்.

    ஜார்ஸகுடாவில் ஏ. ஸ்ரீனிவாசன் போற்றியும், டி.ஆர்.ஜி பிள்ளையும் சேர்ந்து கொண்டார்கள். அது பயணத்தின் கடுமையை அவ்வப்போது மறக்க உதவியது.

        புது தில்லி ரயில் நிலையத்தை இரண்டு நாள் பயணத்துக்குப் பின் டிசம்பர் 30-ம் தேதி இரவு ஏழு மணிக்கோ எட்டு மணிக்கோ போய்ச் சேர்ந்தோம். ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து பார்த்தேன். ஸ்டேஷனும் புதிதாகக் கட்டப்பட்ட ஒன்று. வெளியே அகன்று பரந்திருந்த சாலை மரங்கள் அடர்ந்து அழகாக இருந்தது. விளக்குகள் சிறிய எட்டடி ஸ்தம்பங்களில் குளிர்ச்சியாக ஒளி வீசியதும் அழகாக இருந்தது. வெளியே கேட்டை விட்டு வந்ததும் சாலையில் கண்ட காட்சி ஆச்சரியப்பட வைத்தது. சாலையின் இரு மருங்கிலும் குதிரை பூட்டிய டாங்கா வண்டிகள். இடையிடையே சில பாரம் எடுத்துச் செல்லும் வண்டிகளை ஒட்டகங்கள் இழுத்துச் சென்றன. எத்தனை நூற்றாண்டுகளை ஒரே சமயத்தில் தில்லி வாழ்ந்து காட்டுகிறது என்ற திகைப்பு. வெளியே வலது பக்கம் ஒரு நீண்ட சாலையின் எதிர்ச்சாரியில் ஒரு கட்டிடத்தின் இரண்டாவது மாடியின் மேலே Star Hotel என்று விளம்பரம் செய்யும் நியோன் விளக்குகள் மின்னின. பக்கத்திலேயே ஹோட்டல் இருக்கிறதே. இன்று இரவோ அல்லது இன்னும் வசதியான இடம் கிடைக்கும் வரையோ இந்த ஹோட்டலிலேயே தங்கலாமே என்று சொன்னதும் அவர்களும் உடன் சம்மதித்தார்கள். அன்று இரவு ஸ்டார் ஹோட்டலில் ஒரு அறை எடுத்து தங்கினோம். ஆளுக்கு ஒரு நாள் வாடகை ரூபாய் ஆறு. என்றார்கள். அந்த சாலைக்கு குதப் ரோட் என்று தெரிந்தது. தில்லியில் கால் பதித்த முதல் நாள் இரவே நாங்கள் தங்கியது குதப் ரோடில் என்பதில் ஒரு விசேஷம் இருந்தது மறு நாள் காலையில் அலுவலத்தில் பணிக்கு சேர்ந்ததும், அங்குள்ளவர்களின் அட்டஹாச கேலிச் சிரிப்பில் எங்களுக்குத் தெரிய வந்தது.

    பி.கு. இத்துடன் ஹிராகுட் வாழ்க்கை முடிகிறது. அடுத்து தில்லி வாழ்க்கையின் தொடக்கம்.

     

    Share
  • அருட்கவி கு.செ. இராமசாமியின் கனல் மணக்கும் பூக்கள்-கவிதைத் தொகுப்பு நூல் விமர்சனம்

     

     

    முனைவர் மு.பழனியப்பன்

     

    கனல் மணக்கும் பூக்கள்,

    அருட்கவி கு.செ. இராமசாமி,

    23ஃ15 சிவன்கோயில் தெற்குத் தெரு,

    சிவகங்கை,630561,

    விலை ரூ. 120, 2012

        கவிதை பூமி சிவகங்கை. எண்ணற்ற கவிதையாளர்களின் இருப்பிடம், பிறப்பிடம், துவங்கிடம் சிவகங்கை. இங்கு அருட்கவி கு.செ. இராமசாமி என்ற பழுத்த தமிழ்ச் சான்றோர்- இசை, சோதிடம், ஆன்மீகம் என்ற பல துறைகளைச் சார்ந்தவர், தனது எண்பதாம் வயதிலும் சிவகங்கையைக் கவிதை பூமியாக்கிக் கொண்டுவருகிறார். எண்ணற்ற கவியரங்குகள், கண்ணதாசனின் நெருக்கம், பாவேந்தரின் பழக்கம், காரைக்குடி அழகப்பா கல்லூரியின் செல்லப்பிள்ளை, வ.சுப. மாணிக்கம் என்ற அறிஞரின் வளர்ப்பு, மன்னார்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை அரசு கல்லூரிகளின் தமிழ்த்துறைத்தலைவர் என்று எண்ணற்ற புகழுக்குச் சொந்தமானவர் இவர். இவரின் இசை செறிந்த பக்திப்பாடல்கள் பழனி பாதயாத்திரை, பாகம்பிரியாள் பாதயத்திரை ஆகியனவற்றை அருள் மெருகேற்றிக் கொண்டுவருகின்றன. பக்தர்களைக் களியாட்டம் போட வைக்கின்றன.

        சிவகங்கைச் சிவன் கோயில் அருகில் பழுத்த பழமாக வீற்றிருந்த அவரை அவர் சொற்றொடரில் சொல்வதானால் “தவத்திற்கு ஒருவர், தமிழுக்கு இருவர்” என்ற நிலையில் பல நாள்கள் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.  நாங்கள் இருவராக அவரின் அரசுப்பணி நெளிவு சுளிவுகளை, ஐhதகர்களின் மனதை, தமிழ்க்கவிதையின் ஆற்றலைப் பகிர்ந்துகொள்ள சிவகங்கைச் சிவன் கோயில் அருகில் உள்ள அவரின் இல்லம் களமானது. மாடி வைத்த பழங்கால வீடு. மீராவின் வீட்டருகில் என்று சொன்னால் பலருக்குப் புரியும். மாடிக்குத் தற்போது அவசியமே இல்லை. அவருக்கு ஏறமுடியாத உயரத்தில் மாடி இருக்கிறது. நடக்கமுடியாத தூரத்தில் சிவன் கோயில் இருக்கிறது. நினைவில் நிற்கும் செய்திகளுடன் சிறிதளவு உணவுடன், பெருமளவு மருந்துடன், நிறைந்த அருள்உள்ளத்துடன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளக் காத்துக்கிடக்கும் அவரின் தற்போதைய கவிதைத் தொகுப்பு கனல் மணக்கும் ப+க்கள்.

        கடந்தகால, நிகழ்கால, எதிர்காலச் சிந்தனைகளை, மரபு சார்ந்த கவிதைகளாக, புதுக்கவிதைகளாக, கதைக்கவிதைகளாக தந்துள்ள அவரின் படைப்புள்ளம் இளமையாகச் சுடர்விடுகிறது.

        பூக்களை அவர் அனுபவிக்கும் விதம் சுவையானது. நெடியது. பூவின் தொடர்பைத் தமிழின் தொடக்ககாலம் முதல் விரிவான கவிதையாக வடித்துள்ளார். கனல் மணக்கும் பூக்கள் என்ற அக்கவிதையின் தலைப்பே இத்தொகுப்பின் தலைப்பாக உள்ளது. நெடிய கவிதை. உயிர்ப்புள்ள கவிதை. சுவைக்கின்ற கவிதை என்ற அளவில் அக்கவிதையின் ஆளுமை அவரை நம்முன்னால் கவிதை நாற்கலியில் உயரவைக்கின்றது.

        நீர்ப்பூ, நிலப்பூ
        கோட்டுப்பபூ, கொடிப்பூ
        பூக்களில் நான்கு வகை
        அகத்திணை ஐந்துக்கும்
        ஐவேறு மலர்கள்
        புறத்திணை
        ஏழென்றால் ஏழுக்கும் ப+ ஏழு
        அவற்றால் புரிபடும்
        அக்காலப் போர்க்கூறு
        எட்டாவதாய் வரும் திணை வாகை
        வெற்றி
        கிட்டியவனுக்கு அது தலைப்பாகை
        முல்லைப்பூ கற்புக்கு
        வாகைப்பூ வெற்றிக்கு

    சங்கப் பூக்களின் மணம் கூறும் நல்ல கவிதை இது. குறிஞ்சிப்பாட்டில் கபிலர் 99 மலர்களைக்  கூறியுள்ளார் என்று தமிழாசிரியர் சொன்னதும் கபிலர் ஏன் “செஞ்சுரி அடிக்கவில்லை” என்கிறார் மாணவர். கு.செ. இராமசாமி இதோ மாணவர்கள் மொழியில் செஞ்சுரி அடிக்கிறார்.

        குறிஞ்சிப்பாட்டு அகவல்
        அதில்
        தொண்ணூற்றொன்பது மலர்கள்
        நூறாகத் தேவை ஒருமலர்
        அந்த ஒன்று
         தலைவி என்னும் திருமலர்

    குறிஞ்சிப்பாட்டின் தலைவியே ஒரு பூ என்றால் அவள் தனக்குச் சூட்டிக்கொண்ட 99 மலர்களும்  பூவிற்குப் ப+ச்சூட்டியது போலல்லவா இருக்கும். அழகான வளமான கற்பனைக்கு இடம் வைக்கிறார் கவிஞர். இந்தக் கவிதை சீதை, கண்ணகி இருவரையும் கனல் மணம் பரப்பும் திருமலர்களாகக் கொண்டுவந்துக் காட்டுகின்றது. இன்னும் இந்தக் கவிதைக்குள் மற்றொரு நுட்பம் இருக்கின்றது.

        பதுமை என்பதால் பாவை
        தினம்
        புதுமை என்பதால் பூவை

    என்று இல்லறத் தலைவியைத் தினம் மலரும் புதுமைப் பூவாகக் காண்கிறார் கவிஞர். தினம் தினம் பற்பல பூக்களைத் தேடும் ஆண்வண்டுகளுக்கு தினம், தினம் புதுமைப் பாவை தலைவி என்னும் பூவை என்பதை இந்தக் கவி வரிகள் எடுத்துரைக்கின்றன.

        மேல்நாட்டுக் காதலுக்கும் தியாகம், ரசனை உண்டு என்பதை இத்தொகுதியின் மற்றொரு கவிதை எடுத்துக்காட்டுகின்றது. டெல்லா, ஜிம் என்ற இளந்தம்பதிகள் வறுமையின் பிடியில் சிக்குண்டு அன்பை மட்டுமே அனுபவித்து வாழ்ந்து வந்தனர். அந்நேரத்தில் வந்த கிறிஸ்துமஸ் விழாவிற்காக இருவரும் இருவருக்காக ஏதாவது பரிசுப் பொருள்களை வாங்கத் தனிதனியாக முடிவெடுக்கின்றனர். இவள் தன் நீளமான கூந்தலை விற்று அவனுக்காக கடிகாரச் சங்கிலி வாங்குகிறாள். அவனோ கடிகாரத்தை விற்று அவளுக்குச் சீப்புகள் வாங்குகிறான். இருவரும் கிறிஸ்துமஸ் நாளில் தங்களின் பரிசுகளை ஒருவருக்கு ஒருவர் அளிக்கின்றனர். அவன் தந்த சீப்புகளால் இவள் சீவிக்கொள்ள தலையில் நீண்ட முடியில்லை.  இவள் தந்த கடிகாரச் சங்கிலியைத் தன் கையில் கட்ட அவனிடம் கடிகாரமே இல்லை. இந்தச்சூழலில் கவிஞரின் கவிதையடிகள் பிறக்கின்றன.

        கடிகாரம் இல்லை, அதைக் கட்டும் சங்கிலி உண்டு
        கூந்தல் தலையில் இல்லை. அதைக் கோதும் சீப்புகள் உண்டு
        ஒன்றை இழந்தால் ஒன்று, தியாகம் உயர்த்திப் பிடிக்கும் நின்று

     இதுவே காசற்ற காதலின் மேன்மை. அன்புடைய காதலின் அருமை. காட்சிகளின் வழியாக கதையை நடத்திச் செல்லும் கிடைக்காத கவிதைப்பணி கு.செ. இராமசாமியின் கவிதைப்பணி.

        காதலிக்காகக் கண்களை இழக்கிறான் ஒரு காதலன். காதலி கண்ணொளி இல்லாதவள். அவளைக் காதலிக்கிறான் அவன். அவள் “எப்படியாவது கண்ணொளி பெற்றுத் தாருங்கள், உங்களை மணக்கிறேன்” என்கிறாள் அவள். அவனும் படாதபாடு பட்டான். ஆனால் அவளுக்குக் கண்ணொளி கிடைத்த பாடில்லை. நிறைவில் ஒருநாள் அவளுக்கு கண் மாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது. அவள் கண்ணொளி பெற்றாள்.

        “அன்பே, உனக்குப் பார்வை அளிக்க
         என்னிரு கண்களை நான்தான் ஈந்தேன்.”
        “மிக்க மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி
         கண்தந்த உமக்குக் கைகுவிக்கின்றேன்.
         திருடனை மணந்து தெருவில் நின்றாலும்
         குருடனை மணக்க நான் குருடியா இன்னும்?”

    மேற்கண்ட உரையாடல்தான் முன்னாள் குருடியான காதலிக்கும், இந்நாள் குருடனான காதலனுக்கும் இடையே நடைபெற்றது. முன்னர் காட்டப் பெற்ற கவிதையில் இருந்த காதலின் தியாகம், பின்னர் உள்ள இக்கவிதையில் இருக்கும் சுயநலத்தின் முகத்திரையைக் கிழிப்பதாக உள்ளது. ஆயிரம் மனித உள்ள வேறுபாடுகள் நிறைந்தது இந்த உலகம் என்பதை இந்த முரண்பாடுகளுடைய கவிதைகள் உணர்த்திநிற்கின்றன.

        காதலும் ஆன்மீகமும் இலக்கியமும் கைகோர்த்து அணிவகுத்து நிற்கும் நல்ல கவிதைத் தொகுதி இது. ஐயப்பன், கிருஷ்ணர், இராமகிருஷ்ணர், குருநானக், ஒஷோ போன்ற பலரின் கருத்துகள் இக்கவிதைத் தொகுதியில் எடுத்தாளப் பெற்றுள்ளன. கவிஞரின் ஆன்மீக ஆற்றல் கொண்டு ஆன்மீகத்தின் தூய வாசலைப் பின்வரும் கவிதை திறக்கின்றது.

        சாமி கனம் ஆசாமிகளின் கனம்
        அழுத்தி நெரிக்க அலங்கார வண்டியை
        இழுத்து வருமே இரண்டு காளைகள்
       
        வழியெல்லாம் அடடா, வாணவேடிக்கை
        கூட்டம் கூட்டமாய்க் கும்பிடுவோர்கள்
        எல்லாம் தமக்கென எண்ணி மாடுகள்
        செம்மாந்து நடக்கும், திமிரோடு பார்க்கும்

    என்று சாமியைத் தூக்கிவரும் மாடுகளின் பார்வையை அளக்கும் இக்கவிதை விடிந்தவுடன் அம்மாடுகள் வில்வண்டியில் ப+ட்டப்பட்டு நேற்றை அலங்காரம் எதுவும் இல்லாமல் இருக்கும் சூழலையும் எடுத்துரைக்கின்றது,

        ~~வேகமாய் அதட்டி வீதியில் ஓட்டுவார்
        வீதியில் வானவேடிக்கைகளும்,
        கூடித் திரண்டு கும்பிடுவோரும்
        காணாமல் சற்றே கலங்கி அதன்பின்
        “வேதகோஷம் நாதம் சங்கீதம்
        ஏதும் நமக்காக இல்லை இல்லை
        தலைக்குமேலே நாம் தாங்கி வந்த
        சிலைக்கே அத்தனை சிறப்பும்”
        என்ற தெளிவு வந்தது.
    காளைகளின் கௌரவத்தை நேற்றும் இன்றும் கொண்டு அளக்கிறது இக்கவிதை.

        இதுபோன்று ராஜாக்களின் இயல்பினையும் இக்கவிஞர் அளந்து காண்கிறார். ஒரு ராஜா பாதையெல்லாம் முள், கல் இருப்பதைக் கண்டு வீதிகள் எல்லாவற்றையும் தோல் கொண்டு மூடிட உத்தரவு இட்டானாம். அவ்வரசனின் அவையில் இருந்த விகடகவி “ வீதிக்குத் தோல் போடுவதை விட்டுவிடு, பாதத்தைத் தோல் மீது வைக்கத் தைத்துக்கொடு” என்று அறிவுறுத்தினானாம். இதன் காரணமாய்க் கவிஞர் மனித குல வரலாற்றில் செருப்பினை உயர்ந்த கண்டுபிடிப்பாகக் கருதுகிறார்.

        “நெருப்பைக் கண்டுபிடித்தது முதல் முயற்சி
        செருப்பைக் கண்டுபிடித்த -இது
        படிவளர்ச்சி”

    என்று நெருப்பையும் செருப்பையும் பாடுகிறார் கவிஞர்.

        உடல்வலு குறைவதாலும், நாள்களின் எண்ணிக்கை தேய்வதாலும் வாழ்நாள் நிறைவைக் கவிஞரின் உள்ளம் எண்ணிப் பார்க்கின்றது.

        வீணை மீட்டுவதில் நேரம் கழிகின்றது
        வாசிக்க முடியவில்லை
        சருகு சேர்ப்பதில் பொழுது கழிகின்றது
        தீக்காய முடியவில்லை
        ஆக்குவதி;ல் நாள் கழிந்தது
        அருந்த முடியவில்லை
        சேர்ப்பதில் காலம் கழிந்தது
        செலவழிக்க முடியவில்லை
        சீவிச் சிங்காரித்துப் புறப்பட்டேன்
        தேர் நிலை குத்திவிட்டது

    என்ற இந்தக் கவிதை தாகூரின் கீதாஞ்சலியை நினைவுபடுத்துகின்றது. இவரின் நிறைவுக்கால வாழ்வின் சோகத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கின்றது.

        எதையும் சிரிப்பாய்ச் சொல்வது இவரின் இயல்பு. சாகக் கிடக்கும் ஒருவரை இவர் பார்த்துவர ஒருமுறை இவர்  சென்றார். அவரோ ‘நான் சாகப்போகிறேனே’ என்று இவரிடம் கூறியதும்  இவர் அவரைப் பார்த்துச் சொன்னாராம் ‘உனக்குச் சாவே வராது. நீ சிரஞ்சீவி’ என்றாராம். அதற்கு அவர் ‘பிறந்தவரெல்லாம் இறப்பதுதான நியதி’ என்றதும்

        ~~வாழ்ந்தவர் தானே சாவார், நீயோ
        வாழ்ந்ததே இல்லையே? வாழ்ந்தால்தானே
        சாவதற்கு”

     என்றாராம். நகைச்சுவையான வாழ்க்கை இது. பிறருக்கு நடந்தால் நகைச்சுவை. நமக்கு நடந்தால் இழிவு.

        வாழ்வதற்கான, வாழ்ந்தற்கான அறிகுறிகள் என்று பின்வருவனவற்றைக் கவிஞர் பட்டியலிடுகிறார்.

        நல்ல உணவை உண்டதில்லை.
        நல்ல ஆடை உடுத்ததில்லை
        மனையாளுக்கு மல்லிகைப்ப+வோ
        சிறுகளுக்குச் சீனிமிட்டாயோ
        வாங்கிக் கொடுக்கும் வழக்கமில்லை
        எது சொன்னாலும் அதை அவன் கேளான்
        எது நடந்தாலும் அதை அவன் பாரான்
        தெருவில் அழகுத் தேர்வந்தாலும்
        தெப்பம் பார்;க்க ஊர் சென்றாலும்
        சினிமா,சர்க்கஸ், திருமணம், கோவில்,
        ஊர்வலம், கோஷம் ஒன்றையும் மதியான்
        சாதி சனத்தார் சண்டி என்பார்
        அலுவலகத்தில் அமுக்குளி என்பார்
        நண்பர்கள் வடையைக் ரசித்துக் கடிக்க
        சூடான தேநீர் சுழற்றிக் குடிக்க
        பார்த்துப் பார்த்தே இவன் பசியாறிவிடுவான்
        வாங்கவும் மாட்டான் வழங்கவும் மாட்டான்.
        … மனிதனா நடக்கும் மரமா என்ற
        புனித வாக்கிற்குப் பொருத்தமானவன்
        மரத்திலும் கோந்து வடிவதுண்டு
        கல்லிலும் பாசி கப்புவதுண்டு
        வறண்ட பாலையாய் வாழ்ந்தவன்

    இத்தனை அடையாளங்களும் வாழாதவனின் அடையாளங்கள். இந்தப் பட்டியலில் ஏதேனும் ஒன்றில் யாரேனும் இருந்தாலும் அதிலிருந்து விடுவித்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் அர்த்தம் இருக்கும். வாழ்வதில் அர்த்தம் இருக்கும். சாவதில் அர்த்தம் இருக்கும்.

        கதைகளையும் நிகழ்வுகளையும் எளிமை கலந்து சொல்லும் எண்பது வயதுக் கவிஞரின் வற்றாத கவியாற்றின் ஒரு சாரல் இது. இன்னும் பற்பல இவரால் படைக்கப் பெற்றிருக்கின்றன. அத்தனையும் படிக்க அவரையும் சந்திக்க வாருங்கள் சிவகங்கைக்கு

    முனைவர் மு.பழனியப்பன்
    தமிழ்த்துறைத் தலைவர்
    மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி
    சிவகங்கை

    Share
  • கரைசேரா ஓடங்கள்

     

    தமிழ்முகில்

     

     

     

     

     

     

     

     

     

     

    கண்ணின் இமையென
    பாதுகாத்து நின்ற
    தாயும் நினைவிற்கு
    வரவில்லை !!!
    உந்தன் உயர்வே
    எந்தன் மனக்கனவு
    என்றிருந்த தந்தையும்
    மனக்கண் முன்
    தோன்றவில்லை !!!
    உனக்கு விட்டுக் கொடுக்கவே
    எனது இந்த  அவதாரம்
    என்றுரைத்த உடன் பிறப்பும்
    மறந்து போய்விட்டது !!!
    ஏனோ ??  
    காதல் – கண்ணை
    மறைத்து விட்டது !!!
    வாழ்க்கை சமுத்திரம் கடக்க
    காதல் ஓடம்  ஒன்றே
    போதுமென்றெண்ணி விட….
    ஓடமும் தான் சென்றது –
    நீரின் மேல்
    மெல்லிறகாய் சிலகாலம் !!!
    தென்றலில் மட்டுமே
    அசைந்தாடிப் பழகியிருந்தபடியால்
    புயலைக் கண்டதும்
    நிலை தடுமாறிட …..
    தத்தளித்து நின்று
    கரை சேர நினைத்த போது தான்
    தெரிந்தது – தான் நிற்பது
    நடுச் சமுத்திரத்தில் என்று !!!
    சமுத்திரத்தில் மூழ்கி
    முத்தெடுக்கவும் முடியவில்லை …..
    கரை தேடி ஒதுங்கவும்
    இயலவில்லை ……
    வாழ்வும் இங்கு
    தள்ளாடுது – கரை சேரா ஓடமாய் !!!

    Share
  • கல்

     

    மணி ராமலிங்கம்

    அப்துல் கசாப் இப்படி கொல்லப்பட்டிருக்க கூடாது.

    மீடியாக்கள் மறுபடி பிளிர ஆரம்பித்தன. செய்திகள், விமர்சனங்கள், விவாதங்கள், மக்கள் கணிப்புகள். ட்விட்டர்கள், முகநூல் கருத்துரைகள் என எங்கும் அல்லோகலம்.

    விசாரிப்புக்கோ, அல்லது வேறு எதற்கோ ஆர்தர் ரோடு ஜெயிலிருந்து கொண்டு சொல்லும் போது கல்லெறிந்து கொல்லப்பட்டான் கசாப்.

    இத்தனை செக்யூரிட்டிகளுக்கு  இடையே தூக்கு தண்டனையோ ஏற்போ, நிராகரிப்போ வராத நிலையில் ஆர்தர் ரோட்டிலிருந்து எதற்காக அவன் வெளியே எடுத்துச் செல்லப்பட வேண்டும் ?

    நேரம், இடம், பொருள் தெரிந்து யாரோ ஏவிய கல் ஒன்று நகர்ந்து கொண்டிருந்த கசாப்பின் மீது பட்டு, அவன் தடுக்கி விழுந்தானாம். அவன் தடுக்கி விழுந்த நேரத்திலும் சரமாரியாக கற்கள் உடலின் முக்கியமான உயிர் ஸ்தானங்களில் பட்டு, அந்த அதிர்ச்சியில் உயிர் பிரிந்திருக்கலாம் என்றன செய்திகள்.

    எல்லோர் முன்னாடியும் மைக் நீட்டியது மீடியா.

     “ எல்லோரையும் அவன் இப்படித்தானே கொன்னான்.. அவனுக்கு மட்டுமென்ன ராஜா சாவு “

    “ தூக்கு தண்டனை அறிவிக்கும்  வரைக்கும் காத்திருந்திருக்க  வேண்டும். இது சரியான செயல் அன்று. அண்டை நாடுகளுடன் அமைதியை நிலைநாட்ட விரும்பும் இந்தியாவிற்கு நல்லதன்று “

    “ இது இந்தியாவில்  எழுந்து வரும் ஜனநாயகத்திற்கு எதிராக மறைமுக வேலை செய்யும் மதவாத சக்திகளின் கைவேலை தான் “

    “ இவ்வளவு நாள், நம்மை கொன்று, நம் காசில் உடம்பை வளர்த்த அவனை பகிங்கரமாய்  தூக்கு போட்டிருக்க வேண்டும்.. பரவாயில்லை.. மன்னித்து பக்கத்து நாட்டிடம் ஒப்படைக்காமல், பயந்து போய் பின்லேடனை போல கடலடியில் கரைக்காமல், இந்தியன் ஓருவனாலே கொல்லப்பட்டான் என்ப்து மகிழ்ச்சி தான்.. “

    “ இது உலக அரங்கில் நமது பாதுகாப்பின் நற்பெயருக்கு ஒரு கரும்புள்ளி. நம் நாட்டில் என்றைக்குத்தான் விரைவாய் நீதி கிடைத்திருக்கிறது. நீதி கிடைக்க கொஞ்ச நாள் ஆனால் தான் என்ன தப்பு. அதற்குள் எதற்கு கொல்ல வேண்டும் ? “

     “ கசாப்பின் மரணத்திற்கு பழிக்கு பழி வாங்குவோம் “ தாலிபான்கள்.

    “ அவன் இறந்தான் என்பது ஒரு ஜோடிப்பு “ –

    “ தூக்கு தண்டனை என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்வதேயில்லை.. அது யாராகயிருந்தாலும் சரி.. விசாரணை முடிந்து தீர்ப்பு வருமுன்னரே இப்படி நடந்திருக்கிற செயல்கள் மிகப் பெரிய சந்தேகத்தை கிளப்புகின்றன.. நாம் கற்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோமா ? “

    “ அவனின் இறப்பு, கலவரத்தின் போதைய உயிர்களை திருப்பி தராவிட்டாலும், ஒரளவு ஆறுதலையாவது தரும்.. “

    “ நாடாளுமன்றத்தை தாக்கியவர்களையும் இப்படி ஏதாவது கல்போட்டு எறிந்தால் இனிமேல் இந்தியாவினுள் ஊடுருவும் தீவிரவாதிகளுக்கு பயம் வரும்.. “

    ’போலிஸே உள்ளே விசம் வைத்து கொன்றுவிட்டு இப்படி கதை கட்டியிருப்பார்கள். அவனை கொல்லாவிட்டால் நமது அரசியல் தலைவர்களின் பல உட்கதைகள் வெளியே வந்துவிடும் ‘ ஒரு மாநில அரசியல் கட்சியின் வியாஞ்ஞானம்.

    ” இது போல நூதனமான முறையில் பல உலகத்தலைவர்கள், பிரமுகர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். [நூதன முறைகளை, தலைவர்களை ஒரு தாளில் எழுதி கொண்டு வந்து வாசித்து காட்டினார் ] உடல், மன இயக்கம் அறிந்து எந்த கருவி கொண்டும் உடலின் சில பகுதிகளை ஒரே நேரத்தில் தாக்குவதன் மூலம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இதயத்தை நிறுத்தலாம். இந்த முறை பயிற்சிகள் இஸ்ரேல், ஜெர்மனி, ஆப்பரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஒரு சில பகுதிகளில் மட்டும் இரண்டாம் உலகப் போரின் போது பிரசித்தியாய் இருந்தது ”  ஒய்வுப் பெற்ற க்ரைம் ப்ராஞ்ச் அதிகாரி.

    ”மக்களுக்குத்தான் பாதுகாப்பில்லை, மக்களை சராமாரியாக சுட்டுக்கொன்ற ஒருத்தனை கூடவா நீதிவிசாரணை முடியும் வரை அல்லது தூக்குத் தண்டனை முடியும் வரை காக்க முடியவில்லை “ ஒரு எதிர்கட்சி தாளித்தது.

    மீடியாவில் மறுபடி மக்கள் கோப்ப்பட்டார்கள், தலைவர்கள் துக்கப்பட்டார்கள்.

    *

    அசுரத் தீனி மீடியாவிற்கு எப்போதும் அவசரம். இந்த நான்கு வருடங்களில் கசாப்பை பற்றித் தான் எத்தனை செய்திகள்.

    அவனுக்கு ஜெயிலில் கிடைக்கும் பிரியாணி பற்றியும், வசதிகள் பற்றியும் அவனால் இந்திய அரசாங்கத்திற்கு செலவாகிற சில ஆயிரம் கோடிகள் பற்றியும் எத்தனையோ கதைகள்.

    வழக்கம் போல நம் அரசியல் கட்சிகளுக்கு அவன் ஒரு வரப்பிரசாதமானான். அகிம்சை பஜனையும், அவனை கொன்றால் தான் இந்தியாவின் ஆத்மாவே சாந்தியாகும் என்று இரு நிலைகள். இரு பிரிவினரும் இரத்தம் கொதிக்க வைக்கும் உரையாற்றினர்.

    பேச்சுகள். பேச்சுகள். ஓயாத பேச்சுகள். பெரிய ஊழல், கிரிக்கெட் மேட்சு, தேர்தல் எதுவும் இல்லாத போது கசாப்பே மீடியாக்கள், ரயில், பஸ், அலுவலகம் முழுக்க பேச்சாகயிருந்தான்.

    கசாப் மீடியாவின் டிஆர்பி அட்சய பாத்திரமானான். மீடியாக்கள் யாகத்தில் நெய் வார்த்துக்கொண்டிருந்தன.

    திடீரென்று ஒரு  விமானம் கட்த்தப்பட்டு  கசாப்பை விட்டால்தான் பயணிகள்  விடுவிக்கப் படுவர் என்று  சொல்லப்பட்ட்தாக விசயம் கசிந்த்து. அரசாங்கம் மெளனித்தது.

    ஒரு முறை கசாப்பின்  பிறந்த நாளை பெரும்பாலான  ரயில் பெட்டிகளில் கொண்டாடினோம். அந்த நக்கலான ஜனநாயக எதிர்ப்பை மறுபடியும் மீடியா பேசியது.

    பக்கத்து நாட்டு அதிபர் வந்த போதும், ஐநாவில்  வெளியுறவு அமைச்சர்கள்  கை குலுக்கியபோதும் விசயம் மறுபடி மேலெழுந்து, மறந்து போனது.

    ஒரு மும்பை செய்திப்பத்திரிக்கை பொய்த் துப்பாக்கிகளோடு ரயில் பெட்டிக்குள் போய் சின்ன நாடகம் நடத்தி அதையும்  ‘போலி பாதுகாப்பு’ என்று பிரசங்கப்படுத்தியது. இன்னொரு கசாப் வந்தாலும் இதே கதை தான் மறு ஓளிபரப்பாகும் என்று மீடியாக்கள் இரைந்தன.

    தேசயானையின் செவியில் எறும்புகள் அசைவுகளுக்கு இடமிருக்குமா என்ன ?

    ஆனாலும் மீடியாக்கள்  விடுவதேயில்லை. ஏதாவது ஒரு மீடியா, கசாப்பை உயிர்ப்பித்துக்கொண்டிதானிருந்தன. கசாப் மீடியாவில் வாழ்ந்து கொண்டிருந்தான்.

    இப்போது மறுபடியும் கசாப். இன்னும் கொஞ்சம்  நாட்களுக்கு அவனின் இறப்பு, யாரோ, எங்கிருந்தோ, எப்படியோ நூதனமாய் கல்லால் எறிந்து கொலை செய்யப்பட்டது மீடியாக்களுக்கு முழுச் சாப்பாடு.

    *

    உங்களோடு டிவி பார்த்து கொண்டிருக்கும் நான் ஒரு மும்பைவாலா.

    மும்பை தாக்குதலின்  துர்கணங்களின் போது மெழுகுவர்த்தி  ஏற்ற போகவில்லையென்றாலும், நாள் முழுக்க உட்கார்ந்து  டீவி பார்த்திருக்கிறேன். பயந்து போய் நான் தினமும்  போகின்ற இடமானதால், உணர்ச்சி பொங்க பக்கத்து நாட்டை திட்டியிருக்கிறேன். ஒரு நாளைக்கு சராசரியாய் நாலு மணி நேரம் பயணம். மின்சார ரயில் பெட்டி ஸ்நேகிதர்களோடு இதை விவாதித்திருக்கிறேன்.

    ஒரு அவசர மும்பைவாலா அதற்கு மேல் என்னதான் செய்ய  முடியும்.

    கசாப்பின் தண்டனைக்கு முன்னான இந்த செய்தியையும் வீட்டிக்குள் உட்கார்ந்து பார்த்துக் கொண்டே ரொம்பவே கோப்ப்பட்டேன்.

    ” திஸ் இஸ் பிளடி நாட் குட்..  வாட் த ஹெல் ஹெப்பனிங் இன் திஸ் கண்ட்ரி [ This is bloody not good. What is happening in these country ? ]“

    கசாப் போட்ட ஜனாதிபதி கருணை மனு கிட்டதட்ட நிராகரிக்கப்பட்டு அமுக்கமாய் அவன் பின்லேடன் போல தண்டிக்கப் படுவான் என்று எல்லோரும் நினைத்து கொண்டிருந்த வேளையில் எதற்காகவோ வெளியே எடுத்து செல்லப்படும் வேளையில் தொடர் கல்லெறிதல் ( Continuous stoning ) மூலம் கசாப் கொல்லப்பட்டிருப்பது மகா ஆச்சரியம்தான்.

    இன்னும் நிறைய  நாள் இது பேசப்படும்.  இதை  வைத்து நானும் நாளை மின்சார  ரயிலில் நிறைய பேச வேண்டும். இப்படி பேசுவதற்கும் நான் மீடியாக்களிலிருந்துதான் கருத்துக்களை சாப்பிட வேண்டியிருக்கிறது. அவைகளை சாப்பிட்டு, போகும் ரயில் நேரத்தில் வாந்தியிட்டு, ஏப்பமிட்டு.

    இரண்டு மணி  நேரத்தில் பல கருத்துக்களையும் என் கருத்தாகவே பேசிவிட  என்னால் முடியும். மீடியாக்கள் இல்லாவிட்டால் கருத்தென்பதே இல்லாமலிருக்குமோ ?

    அவன் இறந்தது  சரியா, தவறா, உண்மையா, இல்லையா, – ஆம், இல்லை, சரி,தவறு, என்கிற விவாதங்கள், நூற்றூக் கணக்கான  அநுமானக் கதைகள், ஊகங்கள் இவற்றை நீங்களும் மீடியாவில் படித்திருக்கலாம். பார்த்திருக்கலாம். அவை உங்களுக்கு பிடித்திருக்கலாம். புளித்திருக்கலாம்.

    ஓகே, அதுவல்ல நம் கதை.

    *

    அவன் பெயர் எங்களுக்குத் தெரியாது. அவனை ‘ஏ..அம்பர்நாத்வாலா..’ என்று அழைப்பதே வழக்கம். லவண்டி அம்பர்நாத் வாலா, சாலா அம்பர்நாத் வாலா, சூ.. யா அம்பர்நாத்வாலா, பே.. யா அம்பர்நாத்வாலா என்று பல பெயர்களோடு அந்த கம்பார்ட்மெண்டே அழைக்கும். மரியாதையாய் நாம் அம்பர்நாத்வாலா என்றே அழைக்கலாம்.

    ஒரு நாள் ஏதோச்சையாய்  அந்த கம்பர்மெண்டில் நுழைய  அவனின் வசீகரம் என்னை ஈர்த்தது. கொஞ்சங்கூட முதல் வகுப்பிற்கு பொருந்தாத ஆடையலங்காரம். போஜ்புரி படகதாநாயகன் போல கலர் சட்டைகள். எப்போதும் தப்பாத மெல்லிய அழுக்கு பார்டர். உள்ளே துருத்திவிடப்பட்ட கைக்குட்டையாலான காலர். தெரியவேண்டுமென முனைப்போடு அணியப்பட்ட டாலர், அழுக்கேறிய பேரஸ்லேட், கொஞ்சம் சிவப்பு, நிறைய சிவப்பு என வலக்கை மணிக்கட்டில் கட்டப்பட்ட தாயத்துகள். சட்டைக்கு தவறியும் பொருந்தாத பேண்ட். ஒரு கை மடித்து, இன்னொரு பக்கம் முழுக்க போட்ட பித்தானோட சட்டை.

    எப்போதும் வழிக்கப்படாத முகம். குறைந்த தாடி, மிதமான தாடி, காடு போல தாடி என சீரற்ற முகம். கறைகளின் நடுவே அங்காங்கே பற்கள். எதையாவது மென்று கொண்டிருக்கும், சலிக்காமல் காறித்துப்பும் வாய். சிரித்தால் குழி விழும் கன்னம், தாடிதாண்டி தெரியும். அழுக்காயிருந்தாலும் அவனிடமிருந்து எந்த துர்வாடையும் வந்ததுமில்லை.

    முகம் நிறைய பெரிய  குங்குமப்பொட்டு, சாக்ஸ் போடாத சூ. முதல் வகுப்பிற்கு பொருத்தமில்லாத பாவங்கள். அலங்காரங்கள். அவன் அலுவலகம் அவனுக்கு பாஸ் வழங்கியிருக்கிறதாம்.

    இத்தனை அவலட்சணம் தாண்டியும் அவன் வசீகரம் அந்த பெட்டியில் பிரசித்தம்.

    அவனுக்கான ரசிகர்கள்  எப்போதும் உண்டு. அந்த பெட்டியில் நான் தானே(thane) ஸ்டேசனிலிருந்து மட்டுமே ஏறுவதால் அவனின் ரயிலில் ஆற்றும் லீலைகள் பற்றிய முன் புராணம் அறியும் வாய்ப்பும், அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் எனக்கில்லை.

    ரசிகர்களில் கூட  அவனோடு முற்றிலும் இயைந்த, கொஞ்சம் இயைந்த மற்றும்  தள்ளியிருந்து ரசிக்கும் கூட்டம் என பிரிவினர் உண்டு. நான் கடைசி ரகம்.

    ஏதோ அலுவலகத்தில் – சாய் கொடுத்து, பேங்கில் செக் போட்டு, வாடிக்கையாளரிடமிருந்து செக் வசூலித்து, மதிய வேளைகளில் மிட் டேவில் பொம்பளை படம் பார்த்து, உள்ளூர் அரசியல் பேசி, ‘போலியே சாப்.. ‘ என சலாம் அடித்து, பொய்ப் பணிவு காட்டி  – அவன் ஆபிஸ் பாயாக, மேனாக இருக்கலாம். வேறெதாவாகவும் இருக்கலாம்.

    ஆனால் இந்த ரயில் பெட்டியில் அவன் அறிவிக்கப்படாத கதாநாயகன். உற்சாக ஊற்று. அவனின் ரிப்ளெக்சனும், சார்ப்னசும் அவனோடு ஓட்டிப் பிறந்த கவச குண்டலங்கள்.

    இத்தகைய பேர்வழிகளோடு எனது அநுபவம் அவ்வளவு நல்லதாக அமையாதலால், நான் தள்ளியிருந்து ரசிக்கும் ரசிகானகவே இருக்க ஆசைப்பட்டேன். எனது ஹிந்தியும், மராத்தியும் சொல்லாமலே என்னை சால மதராசியாகவோ, வோ அண்ணா.. என்றோ காட்டிக் கொடுத்துவிடும்.

    எந்த மண்ணிலும் அந்நியப்படுவது போல அசெளகரியமான விசயம் எதுவுமில்லை.

    *

    கம்பியை பிடித்து வெளியே தொங்கிக்கொண்டே வருவான். எலெக்ட்ரிக்  கம்பிகள் நெருங்குவதை பார்த்து, நான் முதல் முறை பயங்கொண்டேன். “ ஹாய்.. கேட்.. இன் “ பதட்டினேன்.

    அவன் கண்டு கொள்ளவேயில்லை. அது நெருங்க நெருங்க  என்னில் பயம் அதிகரித்து அவனை பிடித்து இழுக்க முயற்சித்தேன். அவன் ஏதோ மலிவான பாலிவுட் பாட்டை சீழ்ட்டியடித்துக் கொண்டே வந்தான்.

    எனது சர்வநாடியும் ஒடுங்கி  பயந்து போன கடைசி, கடைசி  தருணத்தில் சடக்கென உடல் லேசாய் இழுத்துக்கொண்டான். கொஞ்சமான, ரொம்பவே கொஞ்சமான இடைவெளியில் அவன் தப்பினான். ஒரிரூ விநாடிகள் தாமதித்திருந்தாலும் அவன் தலையும், உடலும் பிரிந்திருக்கும்.

    எனது பயம் தெளிந்து பார்க்க, அந்த டப்பா முழுக்க என்னைப் பார்த்து சிரித்தது. அவனோ “ ஹாய்.. கேட்.. இன்.. ஹாய். கேட்.. இன் “ என்று மராட்டி வாடையடிக்க என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான். கோபமும், ஆச்சரியமும் என்னை மெளனமாக்கின.

    ’சீப். தேர்ட் ரேட்டட் சாப்’  – மனதில் திட்டல். இன்றைக்கு நான் பக்ரா (பலி ஆடு).

    இவ்வாறான நிறைய சாகச லீலைகள்  அவன் செய்வது வழக்கம் என்றும்  ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு  பக்கராக்கள் என்றும் தெரிந்து கொண்டேன்.

    கொஞ்ச நாளில், என்னை அறியாமலே அவனது சாகச லீலைகளை மீது ஒரு கவனிப்பு வந்ததும் உண்மை தான்.

    *

    எதிர் ட்ராக்கில் நிற்கும் வண்டிகளில் சில நொடிகள்  தாவிப் போய் ஏறிவிட்டு, மறுபடியும் அவனது வண்டிக்குள் புகுந்து விடுதல். இது ஒரு சில  கணங்களுக்குள் நடந்துவிட  வேண்டும். அந்த ஒரு சில  கணங்களுக்குள் எதிர் ட்ராக் வண்டியில் பயணம் செய்யும் நபர்களுக்கு கிசுகிசு மூட்டவோ, காதில் கெட்ட வார்த்தை சொல்லிவிட்டோ, வெறுமனே கத்திவிட்டோ வந்துவிட் வேண்டும்.

    பெரும்பாலும் சிக்னல்களுக்காக  நிற்கும் வண்டிகளில் அவனது  சாகசங்கள் பெரும் சிரிப்பை வரவழைப்பதாயிருக்கும்.

    ராக்கித் தினத்திற்கு முந்திய நாள். எதிர் நின்ற பெண்கள் டப்பாவில் குதித்தான். அங்கிருந்த பெண்களும் கச்சு மூச்சென்று கத்த, ‘க்யா பேன்.. க்யா பேன். “ என்று பேசிப் பேசியே மன்னிப்பு கேட்டபடியே பத்திருபது ராக்கி கட்டி, இருநூறு சம்பாதித்து விட்டான். எங்கள் சகபயணி தேஸ்பாண்டேவோடு போட்ட பந்தயம் என்று பின்பு தெரிந்தது. அழுது கொண்டே தேஸ்பாண்டே முன்னூறு ரூபாய் கொடுத்தார்.

    “ ஏ.. சாலா.. குச்சுபி கரேகாரே.. “ [ இவன் என்ன வேணா செய்வான்யா. ]

    விக்ரோலியில் இரவு ஸிப்டை முடித்துவிட்டு களைத்த முகத்தோடு திரும்பும் பெண்களை கண்டால் அவனுக்கு மிகுந்த குஸியாகிவிடும்.

    “ வேய்கா.. வெல்கம்  மேடம்.. கேன் ஐ ஹால்ப் யூ சார்.. ஐ ஆம்.. மேரினா க்யூர்.. “

    மூன்றாவது ப்ளார்பாரத்தில்  வேகமாய் போகும் ரயிலிலிருந்து  அவன் கொடுக்கும் கத்தல்கள் மொத்த ரயில்நிலையத்தையே லேசாய் அசைக்கும்.

    “ ஓ. மேடம்.. வாட் கேன் ஐ டூ பார் .. யூ “ என்று  ரயிலிருந்து தொங்கிக்கொண்டு அவர்களைப் போலவே மிமிக் செய்யும் அவனை அவர்களில்  சிலருக்கு பிடிக்கலாம். சிலர் வெறுக்கலாம். ஆயினும்  அவன் இருத்தல் அந்த ஸ்டேசனில்  பதிவு செய்யப்படும்.

     

    விக்ரோலி தாண்டி வருகிற நீளமான கோத்ரோஜின் பகுதிகளை அவன் கல்லெறிந்து  கடப்பான். அவன் கல்லெறிதல் போல இதுவரை நான் எங்கும்  பார்த்த்தில்லை. அவனுக்காக  டப்பாவில் அவனது ரசிகப் பெருமக்கள் சின்ன சின்னதான கற்களை அம்பார்நாத்திலிருந்து பொறுக்கி, தோள்பையில் போட்டு கொண்டுவந்திருப்பார்கள்.

    ஏதோ சாப்பாட்டுக்கூடை போல தொங்கும் அந்த கல் பேக் அவனை நோக்கி பிராயணப்படும். ஓற்றைக் கையால் கற்களை எடுத்தல், மறுகையால் அதை தூக்கி எறிதல். தொடர்ந்து செய்தல்.

    அது காண கண்கொள்ள நிகழ்வு. எடுத்தது கண்டிலன். எறிந்தது பார்த்திலன். அவ்வளவு வேகம். துல்லியம்.

    ஒரு சில நாள்களில்  தவளையை குத்தும். மலம் தின்று கொண்டிருந்த காக்கையை விரட்டும். சில நாட்களில் ஓரமாயிருந்த நாயின் பின்பகுதியை கிழிக்கும். இல்லை முன்னேயிருந்த ரயில் கம்பத்தில் பட்டு லேடீஸ் டப்பா மீது பட்டு அங்கிருந்து அய்யோ குய்யோவென சத்தம் வரவைக்கும்.

    தவளைக்கு கண், காக்கைக்கு வயிறு, பன்றிக்கு குதம், பல்லிக்கு  கழுத்து – எங்கு கல் பட்டால் விமோசனம் எளிதாகவும், எந்த சத்தமின்றியும் உறுதிப்படும் என்று அவனுக்கு பழக்கத்தினால் தெரிந்திருந்தது.

    ஒரு சில விலங்குகளுக்கு ஒரு கல் போதாது. தொடர்ந்து நாலைந்து எறிய வேண்டும். எறியும் அவனும், ஓடும் அவைகளும் நகர்ந்து கொண்டேயிருக்கும் போதும், குறிப்பிட்ட விசையோடு எறிதல் முக்கியம்.

    கேரம் போர்டின் காய் போல ஒரு முனைப்பட்டு  மறுமுனையில் ஸ்பின் பெளலிங்  போல திரும்பி அடிக்கும்  என்று வேறு யாராவது சொல்லியிருந்தால் நானும் நம்பியிருக்க மாட்டேன் தான். ஆனால் அவனுக்கோ அத்தகைய அர்ஜீனன் குறி.

    சில சமயம் எறிந்த கல் ஏழு பெட்டிகளை தாண்டி ரயில் முன்னாடி விழுந்திருக்கிறது. ஓவ்வொரு நாளும் சில கற்களாவது  எறிந்து விடவேண்டும். ஹோலியின் போது மற்ற சிறப்பு தினங்களிலும் கற்களோடு மற்ற சில சிறப்பு பொருட்களும் சேர்ந்து எறியப்படலாம்.

    விக்ரோலி தாண்டி வருகிற வித்யவிகாரில் கல்லூரி  கூட்டம். பெரிய பூவில் மொய்க்கிற  ஈக்கள் போல ஜீனியர், சீனியர்  மற்றும் மேனெஜ்மெண்ட் கல்லூரிகளின் ஆண், பெண் மாணவ, மாணவிகளின் கூட்டம்.

    அவனின் பிளிறல்  ஆரம்பமாகும். ஆள் பார்த்து கமெண்டோடு பிளிறுவான்.

    “ ஏய்.. தம்பி.. கவனமாயிருப்பா.. இந்த சிவப்பு சுடிதார். போன  வாரம்.. இன்னொத்துனுக்கு  முக்குல முத்தம் கொடுத்திட்டிருந்தா.. “

    “ என்னம்மா.. நீலக்கலர்  சன்னியா சோலி.. (*) .. ரொம்ப  டல்லாயிருக்க.. அதுவா.. [ மூன்று விரல்களை காட்டுவான்] “

    ரயிலின் சக பயணிகள்  சில நேரம் அவனிடம் சவால்  விடுவதுண்டு. எல்லா சவாலுக்கும் ஏதாவது ஒரு பெட்டிங் இருந்தது.

    “ ஏய்.. சாலா.. காட்கோபர்  ஸ்டேசனுக்கு முன்னாடி.. அந்த ப்ராத்தல் வீடு வர்றதுல்ல.. அதுல யாருக்கும் அடிபடாமா.. சன்னல் வழியா.. இதை தூக்கி போட முடியுமா.. “

    சின்ன கல்லோடு, ஆணுறைத்தாளும்  தரப்பட்டது. நூல், சின்ன கல், அதை சுற்றி தர்மாக்ஸ் பொட்டலம், அதன் மேல் ஆணுறை எல்லாம்  சுற்றப்பட்டு, குறிபார்த்து அடிக்க மிகச் சரியா அது  சன்னலில் அடித்து, அங்கே  சுற்றிக்கொண்டு சத்தம் எழுப்பியது. சத்தம் கேட்டு ஒரு மத்திய வயது பெண்மணி சன்னல் வழியே பார்க்க, ரயில் டப்பாவே ஹோவென கத்திற்று.

    “ யே. லவுண்டி.. நேத்திக்கு நான் யூஸ் பண்ணின பாக்கெட், மறந்துட்டு வந்துட்டேன்.. “ என்று எறியச் சொன்னவன் கத்த, அவள் புடவை தூக்கி கெட்ட வார்த்தை பொழிந்தாள். இடுப்பு முன்னும், பின்னும் ப்யங்கரமாய் ஆட்டியபடியே அவளின் வசவுக்கு எறியச் சொன்னவன் எதிர்ப்பாட்டு பாடினான்.  தன் குறி தப்பாததில் அம்பார்நாத்வாலவுக்கு ரொம்பவே குஸியாகிவிட்டது.

    எறியச் சொன்னவன், அந்த வெள்ளிக்கிழமை செளபாட்டி  ஹோட்டலில் தண்ணி வாங்கிகொடுத்து, கிரிஸ்டல் ஹோட்டலில் ராஜ்மா சாப்பாடு தரவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    பெட்டிங்  இல்லாமல் அவன் சந்தித்த சவாலும்  ஒன்று உண்டு. அது அவனுள் ஏற்படுத்திய அகமாற்றம்  அளவிடமுடியாது.

    *

    ஓருநாள், மஜீத்  ஸ்டேசனுக்கும் விடி ஸ்டேசனுக்கும்  நடுவே இரயில் மெல்ல போய்க்கொண்டிருந்த  போது, ஒரு மத்திய வயது சிறுவன் தனது ட்ரவுசரை அவுத்து, பெண் பெட்டியின் முன்னால் தனது மேல் தோல் சீவப்பட்ட குறியை முன்னும், பின்னும் இழுத்து காட்டினான்.

    எப்போதாவது  இது போல் நடக்கும் செய்கைகள்  பயணிகளுக்கு அதிர்ச்சி  கொடுப்பதில்லை. மூக்கை பொத்திக்கொண்டோ, முகத்தை திருப்பிக்கொண்டோ, மனதை மூடிக்கொண்டோ நடக்க மாநகர ரயில் எல்லோரையும் பழக்கப்படுத்தியிருக்கிறது.

    ஆனாலும் அந்த சிறுவன் அதை தினமும்  செய்தான். தொடர்ந்து செய்தான். ஓவ்வொரு நாளும் கூடும் அடர்த்தியான  வன்மத்தோடு செய்தான். நிறைய பேரின் அதிர்ச்சி, ஆவல், கவனம் அவனுக்கு உற்சாகத்தை கொடுத்ததோ என்னவோ..

    பெண்கள் பெட்டி வரும்போது சிறுவன் கெட்ட வார்த்தைகளை பாலிவுட்டின் கிங்கான்கள் பேசுவது போலான மிமிக் குரலில் பேசிக் காட்டினான்.

    ஒரிரூ நாள் சிரித்தும், பின் சகித்தும் கொண்டிருந்த  கூட்டம் மெல்ல மெல்ல சகிப்புத்தன்மை இழந்தது. இந்த மலிவான செய்கை, பெண்களுக்கு மிகப்பெரிய மன உளச்சலை, வெறுப்பை, கசப்பை ஏற்படுத்தியிருக்கும்.

    மாநகர ரயில்  எப்போதும் வெறும் இரும்பல்ல. அதற்கு மற்றவர்களின் மனச் சங்கடத்தை ஓரளவு கடத்தும் மென் கடத்தியும் கூட. எங்கள் பெட்டிக்கு பக்கத்திலிருந்த  பெண்களின் சங்கடம், மன அவஸ்தை எங்களுக்கு புரிந்தது. சில  பெண்களில் கண் பயம் கூட எனக்குத் தெரிந்தது.

    பாசை கொச்சை, மற்றும் படிப்பின் காரணமாய் எதுவும் பேசமால் இருக்கும்  நான் அன்று, அதுவரைக்கும் இல்லாத வகையில் தன்னிலை இழந்து அவனை நோக்கி, ரயில் சத்தம் நோக்கி கெட்ட வார்த்தையால் திட்டினேன்.

    ~ ஹோய்.. கெட்  இன்.. சாந்தியார். [ அமைதி.. அமைதி..] ~ என்று அம்பர்நாத்வாலா என் தோள் தட்டிச் சொன்னது ஆறுதலாய் இருந்தது.  

    அடுத்த சில நாட்கள் அம்பர்நாத்வாலா அவனை திட்டிப்பார்த்தான். பின்பு கொஞ்சம் கடினமாய திட்டிப் பார்த்தான். சில நாட்களுக்கு மிரட்டிப் பார்த்தான்.

    ஓன்றும் பலனளிக்காது  போகவே, அவனுக்காக சிறப்பான சின்ன கல்லும், அதன் நுனியில் முட்கள் நிறைந்த செடியும் சுற்றப்பட்டு தயாரானது. ஒரு வெள்ளிக்கிழமை சுபதினம் சுருக்கென்று எறியப்பட்ட கல்லின் சத்தம் வீடி வரை கேட்டுக் கொண்டேயிருந்தது. ஒரு அடிப்பட்ட சொறிநாயின் பிளறல் போல இருந்த்து.

    அடுத்த நாட்களில், பெண்கள் டப்பாவிலிருந்து  ஓரிரு மத்திம வயது பெண்கள்  அம்பர்நாத் வாலாவுக்கு நன்றி  சொன்னார்கள்.

    மறுநாள் அவனது ரயில் பயணத்தின் நாமாவளி எந்த குந்தகமும் இல்லாமல் தொடர்ந்தது.

    விக்ரோலியில் கால் செண்டர் கேலி, கல்லெறிந்து  பழகுதல், காட்கோபரில் குஜராத்திகள் பற்றி கேலி, வித்யாவிகாரில் கல்லூரி பெண்களிடம் கேலி, சயானில் ட்ராக்கில் செம்போடு முகம் மூடி உட்கார்ந்திருப்பவர்களை அண்ணா.. என்று அழைத்து கேலி, பின்பு தாதரிலிருந்து மஜ்ஜீத் வரை உள்ளே உட்கார்ந்திருப்பவர்களை, அன்றைய செய்திகள் வைத்து கேலி,  வீடி ஸ்டேசனில் தலைவாரிக்கொண்டு பொட்டு வைத்து பயபக்தியாய் வேகமாய் அலுவலகம் ஏவுதல் –  என்று அவன் வழக்கம் தொடர்ந்தது.

    அவன் எந்த பெட்டிங்கும் இல்லாமல் செய்த  காரியம். மற்றவருக்காக நல்லது செய்கிற காரியத்தினால்  உள்ளத்தில் உடையும் தேன் கூட்டின் சுவையை அவன் உணர்ந்திருக்கலாம். அது எந்த பெட்டிங்கின் மலிவான விலையை விட எவ்வளவு உயர்ந்தது என்று அநுபவித்திருக்கலாம்.

    ஆக, மற்றவர் வந்து சொன்ன அந்த நன்றி – அவனுக்குள்ளே நிறைய மாறுதல்களை விதைத்தது என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

    *

    இன்னொரு நாள், என்னைப் போலவே, ஒரு புதிய ஆள் ஏறினார். வயது நாற்பத்தைந்து – ஐம்பதிருக்கலாம்.

    வயதை குறைக்கும் இளமையான மெலிந்த கட்டு  உடல். பின்பக்கம் வெட்டிய  முடி, சின்னதாய் ட்ரீம் செய்யப்பட்ட  மீசை. நுனி முறுகியிருந்த்து. சப்பாரி மாதிரியான உடை. விரைப்பாய் ஊன்றி நின்ற  கால். பாலீஸ் செய்யப்பட்ட  ஷூ. வாசலில் நின்றபடியே பயணம் செய்தார்.

    அம்பர்நாத்வாலாவின்  லீலைகள் அவருக்கு பதற்றம்  கொடுத்தன. அவரும் என்னைப் போலவே பதற்றப்பட்டது எனக்கு வேடிக்கை பொருளாயிருந்தது.

    “ உள்ள வாங்க தம்பி  “ என்று அவர் சொல்ல, ஆகா இன்னொரு குருவி சிக்கிருச்சு.. என்று எங்கள் டப்பாவில் சந்தோசம்.

    புதுப் பதற்றங்களை பார்த்து, அம்பர்நாத் வாலாவுக்கு அதிக குஸீயாகும். அதிக குஸீ, அதீத குரங்குச் சேட்டைகள். வித்தைகள். அன்று அதிக பேச்சு, அதிக வித்தைகள். முலூண்டிலிருந்தே அவனது நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று. பேச்சும்.

    “ லைப்ல பயம் கூடாது சார்.. பம்பேயில.. இருந்துட்டு  பயம்னா.. எத்தனை கிலோ.. “

    “ எல்லோரும் சாகத்தான போறோம்.. என்ன பயம் வேண்டியிருக்கு.. “

    “ சார் நான் வந்தா.. வண்டிக்கே உயிரு சார்.. “ [அமிதாப்பச்சன் குரலில்]

    பேச்சு. சீண்டல்  பேச்சு.. அவரும் ஏதோ சொல்லிக்கொண்டே வந்தார்.

    “ஏன்பா.. இந்த குரங்குத்தனம்.. “ அந்தப் புது ஆள் கேட்டார்.. ஓவ்வொரு முறையும் அவரின் பயமும், குரலில் எதிர்ப்பும் கூடிக்கொண்டே வந்த்து. சில நேரம் கழித்து, எக்கேடு கெட்டு ஓழி என்று மெளனமாய் இருந்தார். அப்போதும் அம்பர்நாத்வாலேவே ஏதாவது பேசி அவரை இழுப்பான்.

    இந்த விளையாட்டு எனக்கு பரிச்சியமானது. என் மீது விளையாடப்பட்டது. அது இன்னொருத்தரின் மீதும் விளையாடப்படும் போது அதன் ஓவ்வொரு அசைவையும் ரசிக்க முடிந்தது.

    “ இது என்ன சார்.. இப்ப பாருங்க.. அங்க என்ன வருது.. “

    எதிர்முனையிலிருந்து இன்னொரு வேக ரயில் வந்து கொண்டிருந்த்து.

    “ ஏ.. ட்ராயின்ரா.. பாஸ்ட் ட்ராயின்ரா.. “ அந்த ஆள் வேக வேகமாய் படபடத்தார்.

    “ அதுனால.. என்ன .. “  சொல்லிக்கொண்டே தொங்கினான். ரொம்பவே தொங்கினான். எங்களை அறியாமல் நாங்கள் எல்லோரும் வாசலிருந்து இன்னும் எங்களை உள்ளே அழுத்திக்கொண்டோம்.

    இன்று அவன் விளையாடுவது நிலையாக நிற்கும் போஸ்ட் கம்பம் இல்லை. இரண்டுமே வேகமாய் நகரும் ஜந்துக்கள். அவன் சமாளித்து விடுவான் என்றாலும், மெலிதான பயத்தோடும், ஆர்வத்தோடும் அந்த கடைசி விநாடிக்காக எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.

    நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம் என்பதை அறிந்து அவனின் முகம் அஸ்ட கோணாலாக்கி எங்களை மேலும் குஸிப்படுத்திக்கொண்டிருந்தான்.

    எதிர்வண்டி பக்கத்தில் வர, வர, புது ஆளின் பயம் உச்சத்தை தொட்டது. அவரின் முகம் எனது பழைய முகத்தை எனக்கு ஞாபகப்படுத்தியது.

    பதிவுபோல சடக்கென்று கடைசி விநாடியில் உள்ளே  உடம்பை இழுத்தான். ரொம்ப கீழிறிந்து எழும்பி வந்ததால், உள்ளே வந்துவிட்டாலும் நடுவில் நின்றிருந்த, பிடித்திருந்த கம்பியில் தலை மோதிக்கொள்ள வேண்டியிருந்தது. அந்த அதிர்ச்சியில் அவன் இலேசாய் ஆட, சுற்றியிருந்தவர்கள் பிடித்துக்கொண்டார்கள்.

    சுற்றியிருந்தவர்களுக்குத்தான் அது அதிர்ச்சி.. அவன் ரொம்ப  அமைதியாகத்தானிருந்தான். அதே கேலிகள், அதே வார்த்தைகள்.. நாங்கள் சகஜ நிலைமைக்கு திரும்ப, புது ஆள் பேய் அறைந்தது போலாகிவிட்டார்.

    “ உசுருன்னா, உனக்கு மசுராடா.. “ ரொம்ப நேரம் கழித்து அமைதியாய் கேட்டார்.

    “ யே. பெரிசு.. என்ன பயந்துட்டியா.. இதெல்லாம்  பெரிசேயில்லைப்பா.. “ என்று  மராத்தியில் அவரை ஏளனமாய் பேச ஆரம்பித்தான்.

    அவர் அமைதியானார். வீடி ஸ்டேசன் வரைக்கும்  எதுவும் பேசவில்லை. கொஞ்சம்  கூட்டம் குறைந்து நாங்கள்  எல்லோரும் வீடியில் இறங்கும்போது, அம்பர்நாத்வாலைவை பிடித்து தனது ஸீவை கழட்டி பளீரென்று  அடித்தார்.

    “ உன் உசுரு முக்கியமில்லைன்னா, சூ.. யா, கசாப்பை கொண்ணுட்டு சாகேன்டா.. “ கத்தினார்.

    நாங்கள் விலக்கிவிட்டி, அவரை திட்டி, இவனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தோம்.

    *

    வெளியூர் பயணம், மாற்றம்  அது, இதுவென சுழன்று, திரும்ப  இப்போதுதான் வரமுடிந்தது. அதே வண்டி. அதே பெட்டி, அதே விவாதம் – ரொம்ப நாள் கழித்து பழைய நண்பர்களை பார்த்து, நிறைய விசயங்களை சுடச்சுட விவாதிக்க, வாழ்க்கை திரும்பிற்று.

    விக்ரோலி வந்த பிறகுதான்  தெரிந்தது, அம்பர்நாத் வாலா ரொம்ப நாளாக அங்கு வரவில்லையென்று.

     

    Share
  • வேதியியல் வரலாற்றில் இன்றியமையாத ஒரு முக்கியக் கண்டுபிடிப்பு

     

    தேமொழி

    இதுவரை உலகில் 120  தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இத்தனிமங்கள் அனைத்தையும் தனித்தனியாக அவற்றின் பண்புகளை அறிந்து நினைவில் கொள்வது கடினம்.

    இதற்கு உதவுவது தனிம வரிசை அட்டவணை. தனிம வரிசை அட்டவணையில்,  தனிமங்களை  அதன் பண்புகளின் அடிப்படையில் தொகுதிகளாகப் பிரித்து அட்டவணையாக வரிசைப்படுத்திய விதம் தனிமத்தின் வேதியியல் பண்புகளை நினைவில் நிறுத்திக் கொள்ள உதவுகிறது. தனிம வரிசை அட்டவணையானது மனிதகுலம் உருவாக்கிய, மனித குலத்தின் அறிவாற்றலைக் காட்டும் ஒரு ஈடு இணையற்ற படைப்பாகும்.

     

     

    டோபரின்னர், ஜான் நியூலேண்ட், லோதர் மேயர் போன்ற அறிவியியல் அறிஞர்கள் தனிமங்களின் பண்புகளை அடிப்படையாகக்கொண்டு அவற்றை வரிசைப்படுத்த முயன்றுள்ளனர்.  ஆனால், ரஷ்ய வேதியியல் அறிஞர் ‘டிமிட்ரீ மெண்டலீயா’ (Dmitri Mendeleev) என்பவர் 1871ஆம் ஆண்டில் உருவாக்கிய தனிம வரிசை அட்டவணை அனைத்தையும் விட மிகச் சிறப்பானது.

    மெண்டலீயா தனிமங்களை அவைகளின் அணுநிறைகளின் அடிப்படையில், குறைந்த அணுநிறையிலிருந்து அதிக அணுநிறை உள்ள தனிமங்களை இடமிருந்து வலமாக (நாம் எழுதுவதுபோல) அட்டவணைப்படுதினார். அவர் அவ்வாறு வரிசைப்படுத்தி ஆராய்ந்த பொழுது, வரிசையில் ஒத்த தன்மை இல்லாத தனிமங்களுக்கு இடையில் வெற்றிடம் விட்டு  அங்கு  இடம்பெற வேண்டிய பண்புகளையுடைய  தனிமங்கள் இனிமேல்தான் கண்டறியப்பட வேண்டும் என நிர்ணயித்தார். இதுதான் மிகவும் ஆச்சரியகரமான அறிவியியல் கண்டுபிடிப்பு. 

     

    Mendelejevs_periodiska_system_1871

     

    இவ்வாறு வெற்றிடங்களில் இடம் பெற வேண்டிய தனிமங்கள் என அவர் குறிப்பிட்டவை  அவர் அட்டவணையைத்  தயாரித்த காலத்தில் கண்டறியப் பட்டிருக்கவில்லை. எனினும்,  இன்னமும் கண்டறியப்படாத அந்த தனிமங்களின் பண்புகளை அட்டவணையில் அவை இடம் பெற்ற இடத்தினையும், அருகே சூழ்ந்திருக்கும் மற்ற தனிமங்களின் பண்புகளையும் அடிப்படையாகக் கொண்டு யூகிக்க முடியும்.  இதுவே இவரது தனிம அட்டவணையின் சிறப்பிற்குக்  காரணம்.

    அவ்வாறு தனிம அட்டவணையில் இடம் பெற வேண்டிய தனிமங்களின்  இடத்தினை  கருத்தில் கொண்டு, அவற்றின் பண்புகளை யூகித்து  சில தனிமங்களை  ‘எகா  அலுமினியம்’ (அலுமினியத்தின் பண்பினை ஒத்தது), ‘எகா சிலிக்கான்’ (சிலிக்கானின் பண்பினை ஒத்தது)  என்று குறிப்பிட்டார்.  ஆனால் அது போன்ற பண்புகளைக் கொண்ட தனிமங்கள் அப்பொழுது கண்டறியப் பட்டிருக்காவிட்டாலும், பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது மெண்டலீயா யூகித்தது போன்றே அவற்றின் பண்புகளும் இருந்தன.

    மெண்டலீயா 1871 ஆம் ஆண்டு எகா  அலுமினியத்தின் பண்புகளைக் குறிப்பிட்டார். அதன் பிறகு 1875 ஆம் ஆண்டு ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘பால் எமிலி லெகாக் டி பாய்ஸ்பவுட்ரன்’ (Paul Emile Lecoq de Boisbaudran) ‘காலியம்’ (gallium) என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார். ஃபிரான்ஸ் நாட்டினைக் குறிக்கும் ‘கால்’ (Gaul) என்ற சொல் இந்தப் பெயரினையிட அடிப்படைக் காரணமானது. இந்த தனிமத்தின் பண்புகள் அலுமினியத்தைப் போன்றே இருக்கிறது.  காலியத்தைத் தவிர ஸ்கேண்டியம், ஜெர்மானியம், ரேனியம் ஆகிய தனிமங்களின் பண்புகளையும் அவைகளைக் கண்டுபிடிக்கப்படும் முன்பே மெண்டலீயா குறிப்பிட்டு விட்டார். 

    மெண்டலீயா ‘எகா மாங்கனீஸ்’ எனக் குறிப்பிட தனிமம் பிறகு கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு ‘டெக்னீடியம்’ என்று பெயரிடப்பட்டது. டெக்னீடியம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1937, அதாவது மெண்டலீயா அத்தனிமத்தின்  பண்புகளை குறிப்பிட்ட பின்பு ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்குப் பிறகே, அவர் இறந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகே கண்டு பிடிக்கப்பட்டது.

    நோபெல் பரிசுகள் கொடுக்க ஆரம்பித்த ஆரம்ப ஆண்டுகளில், 1907 ஆம் ஆண்டு மெண்டலீயா இறந்துவிட்டதால் அவரது கண்டுபிடிப்புக்கு நோபெல் பரிசு கிடைக்காமல் போனது. ஆனால், 1955 ஆம் ஆண்டு கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகம் (University of California, Berkeley) உருவாக்கிய, அணுஎண்  101 ஐக் கொண்ட தனிமத்திற்கு மெண்டலீயாவினைப் போற்றும் விதமாக மெண்டலீயம் (mendelevium) எனப் பெயரிடப்பட்டது. இந்த கெளரவம் நோபெல் பரிசை விட உயர்ந்தது. இதுவரை நோபெல் பரிசை 800 க்கும் அதிகமானவர் பெற்றிருக்கிறார்கள். ஆனால், தனிம வரிசை அட்டவணையில் இடம் பிடித்த அறிவியியல் அறிஞர்கள் 15  பேர்கள் மட்டுமே, அவர்களில் மெண்டலீயாவும்  ஒருவர்.

     

    Periodic_table

     

    mendaleviyam

     

    இவர் பிறந்த ரஷ்யாவில் இவரைப் போற்றும் வண்ணம் பல பல்கலைக் கழகங்களின்  ஆராய்ச்சிக் கூடங்களுக்கு மெண்டலீயாவின் பெயர் சூட்டப் பட்டுள்ளது.  ‘மெண்டலீயா தங்கப் பதக்கம்’ என்ற பரிசும் 1962 ஆம் முதல் சிறந்த அறிவியியல் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    ___________________________________________________

    ஆதாரம்: TED Ed – The genius of Mendeleev’s periodic table

    படம் உதவி:
    http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c8/DIMendeleevCab.jpg/427px-DIMendeleevCab.jpg
    http://upload.wikimedia.org/wikipedia/commons/5/55/Mendelejevs_periodiska_system_1871.png
    http://upload.wikimedia.org/wikipedia/commons/8/84/Periodic_table.svg

     

     

    Share
  • குரங்கா, குழந்தையா?

     

     கவிநயா

     

    இப்பல்லாம் எல்லாப் பொருளும் கூடவே ஒரு கைந்நூலோடதானே (அதாங்க, நம்ம கூட சுத்தத் தமிழ்ல manual-ன்னு சொல்வோமே) வருது… மின் ஆட்டுக்கல்லோ (கிரைண்டர்), மின் அம்மியோ (மிக்ஸி) வாகனமோ, தொ(ல்)லைக்காட்சியோ, எது வாங்கினாலும், கூடவே ஒரு புத்தகமும் குடுத்துருவாங்க. (அதை நாம படிக்கிறோமா இல்லையாங்கிறது வேற விஷயம்!) அதே போல இந்த உலகத்தில் எப்படி வாழறதுங்கிறதுக்கு “Life For Dummies” மாதிரி ஒரு புத்தகம் இருந்தா நல்லாருக்கும்தானே!

     

    எந்தெந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எப்படியெப்படி நடந்துக்கணும், எந்தெந்த இடத்தில் எப்படியெப்படி பேசணும், எந்தெந்த மாதிரி பிரச்சனைகளை எப்படியெப்படி தீர்க்கலாம், இதெல்லாம் சொல்லித் தர்ற மாதிரி ஒரு புத்தகம் இருந்தா? முக்கியமா, அவசர ஆபத்துக்கு யாரைக் கூப்பிடலாம் அப்படிங்கிறதுக்கு ஒரு தொலைபேசி எண்ணோ, இல்லை ஒரு மின்னஞ்சல் முகவரியோ இருந்தா? (பக்க விளைவுகள் தெரிஞ்சுதான் இறைவன் மின்னஞ்சலெல்லாம் வெச்சுக்கலை போல!)

     

    இப்படியெல்லாம் வேடிக்கையா சொன்னாலும், நிஜமாவே ‘எப்படி வாழணும்’ அப்படின்னு பெரியவங்கல்லாம் ஏற்கனவே எழுதி வெச்சுட்டுதான் போயிருக்காங்க. ஆனா நாமதான் manual –ஐப் படிக்காமலேயே பொருட்களைப் பயன்படுத்தற ஆளுங்களாச்சே. அதே மாதிரி இங்கேயும், பெரியவங்க சொல்லி வெச்சுட்டுப் போனதையெல்லாம் கண்டுக்கிறதும் இல்ல, படிக்கிறதும் இல்ல, பயன்படுத்தறதும் இல்ல.

     

    கண்ணன் சொன்ன கீதை அப்படிப்பட்ட புத்தகம்தான். நிறைய பெரியோர்கள் சொல்வதும் இதுதான். நாமதான் அதெல்லாம் ‘ஆன்மீகம்’ அப்படின்னும், வயசான பிறகு, ஓய்வெடுத்த பிறகு, தெரிஞ்சிக்கிட்டா போதும்னும், தள்ளி வெச்சிட்டோம்.

     

    கொஞ்சம் பக்கத்தில் போய் பார்த்தாதான் தெரியுது… இதெல்லாம் முக்தி அடையறதுக்கான வழியோ இல்லையோ, ஆனா இதையெல்லாம் கடைப்பிடிச்சா நிச்சயமா மன அமைதியோட வாழலாம் அப்படின்னு.

     

    எந்த மதத்தை எடுத்துக்கிட்டாலும், அதனோட போதனைகள் கிட்டத்தட்ட ஒண்ணாதான் இருக்கும். குறிப்பா நற்குணங்களை வளர்த்துக்கறது, தீய குணங்களை விட்டுத் தள்றது. புறம் பேசாம இருக்கறது. சக உயிர்களிடம் அன்பாக இருக்கறது. அறத்தின் படி நடக்கறது. இந்த மாதிரி. யோசிச்சுப் பாருங்க,  இப்படியெல்லாம் இருந்துட்டாலே மன அமைதி தன்னால வந்துடும்.

     

    ஒரு அறைக்குள்ள நிறைய்ய தட்டுமுட்டுச் சாமான்கள் இருக்குன்னு வைங்க. ஒரு குட்டி இடம் கூட விடாம அவ்வளவு சாமான்கள் கிடக்கு. ஒண்ணு மேல ஒண்ணா கிடக்கு. அடுத்தடுத்து கிடக்கு. கதவைத் திறக்கக் கூட இடம் இல்லாம கிடக்கு. இப்படிப் பட்ட அறைக்குள்ள எப்படிப் போவீங்க? சூரிய ஒளியோ காற்றோ கூட இங்கே போக முடியாது. தூசியும் தும்பும்தான் சேர்ந்துக்கிட்டே வரும்.

     

    நம்ம மனசுக்குள்ளயும் இப்படி நிறைய தட்டு முட்டுச் சாமான்கள் கிடக்கு. ஆசை, பாசம், எதிர்பார்ப்பு, கோபம், தாபம், வருத்தம், பொறாமை, கவலை, கண்ணீர், இப்படி எக்கச்சக்கமா கிடக்கு. இப்படி அடைச்சுக் கிடக்கிற மனசுக்குள்ள அமைதியும் ஆனந்தமும் எப்படிப் புக முடியும்?

     

    இந்த மாதிரி அடைசல் சேரச் சேர, சுத்தம் பண்ற வேலை கஷ்டமாயிடும். தேங்கிக் கிடக்கிற தண்ணீர் சாக்கடையா மாற ரொம்ப நாளாகாது. பூட்டிக் கிடக்கிற அறைக்கும், தேங்கிக் கிடக்கிற தண்ணிக்குமே இந்த கதின்னா, நம்ம மனசு என்ன ஆகும். அதனால மனசை அப்பப்ப சுத்தம் பண்றது ரொம்ப அவசியம். அப்பதான் அமைதியும் சந்தோஷமும் மனசுக்குள்ள வர்றதுக்கு வழி ஏற்படும். இப்படிப்பட்ட கசடுகளைச் சேர்த்துக்காம இருக்கறதுக்கான வழிகளைத்தான் ஆன்மீகம் சொல்லுது.

     

    எண்ணம், வாக்கு, செயல் மூன்றும் ஒன்றாக இருந்தாலே மனசு தானாக சுத்தமாயிடுமாம்,  சரியாயிடுமாம்.  சொல்றதுக்கு எவ்வளவு சுலபமா இருக்கு! செய்து பார்த்தாதான் தெரியும், இந்த மூன்றும் ஒன்றாக இருக்கும்படி நடந்துக்கிறது எவ்வளவு கஷ்டம்னு.

     

    எல்லாத்துக்கும் அடிப்படை எண்ணங்கள் தான். எண்ணங்கள் ரொம்ப வலிமை வாய்ந்ததாம். நம்முடைய போன பிறவியில் நமக்கு ஏற்பட்ட எண்ணங்களாலும், அவற்றால் ஏற்பட்ட ஆசாபாசங்களின் படியும் தான் நம்மோட இந்தப் பிறவியும்,  வாழ்க்கையும் அமையுது அப்படின்னு சொல்றார், ஸ்ரீயோகானந்தர். அந்த அளவுக்கு அடுத்த பிறவியையே நிர்ணயிக்கும் சக்தி எண்ணங்களுக்கு இருக்குன்னா, நம் இப்போதைய வாழ்க்கையில், அடுத்த நாட்களில், நிமிடங்களில் நடக்கிறதும் நம் எண்ணங்களைப் பொறுத்துதானே இருக்கு!

     

    அதனால, நம்ம மனசுக்குள்ள அப்படி என்னதான் ஓடிக்கிட்டிருக்குன்னு அப்பப்ப திறந்து பார்க்கணும். கவனிக்கணும். ஒரு சாதாரண இயந்திரத்தில் தொடங்கி, எல்லாத்துக்குமே பராமரிப்புங்கிறது (maintenance) ரொம்ப முக்கியம். அப்பதான் அது ரொம்ப நாளைக்கு சிறப்பா உழைக்கும். அப்படி இருக்கும் போது மனசை மட்டும் கண்டுக்காம விடலாமா?

     

    மனசு இருக்கே, அது குரங்கு மாதிரின்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா குரங்கா இருக்கறதைக் குழந்தையா மாத்தறது நம்ம கையில்தான் இருக்கு.

     

    சரிதானே நான் சொல்றது J

     

    எல்லாரும் நல்லாருக்கணும்.

     

     http://tlc.howstuffworks.com/family/how-to-draw-a-monkey.htm

    Share
  • யாரைக் கேட்டு இங்கு வந்தாய்?

     

    விசாகை மனோகரன்

    விண்வெளியின் முற்றத்தினுள்ளே 

    நட்சத்திரக் கோலங்களின் வழியே

    தவழ்ந்துவரும் முழுநிலவே!

    யாரைக் கேட்டு இங்கு வந்தாய்?

     

    நீ இருக்க நான் பார்த்தது

    அவள் முகம்தானே!

    அவள் அனுமதித்தே வந்தாயா

    இல்லை அழவைத்து வந்தாயா?

     

    அவளிடத்தில் இல்லையேல் நீ அழகில்லை

    உன் அழகே அவள் தானே

    நீயில்லாமல் அவளைப் பார்க்கலாம்

    அவளில்லாமல் உன்னை….

     

    அழகிற்கு மறுபெயர் அவள்

    அவளுக்கு பின் தானே நீ!

    நீ தரும் வெளிச்சமே அவள்தானே

    அவளில்லாமல் நீ இல்லை,

    ஏன்! 

    நானும் இல்லை.

    படத்திற்கு நன்றி

    Share
  • தாய்மை ஒரு வரமா அன்றி சாபமா?

     

    பவள சங்கரி

    தலையங்கம்

    ஒரு உயிரை அழிப்பது என்பது பாபமான செயல்தான் என்றால், அழிந்து கொண்டிருக்கும் அந்த உயிரினால் பெரிய உயிர் போவதைத் தடுக்காமல் இருப்பதும் பாவம்தானே. இதற்கு சட்ட திட்டங்கள் என்ற பெயரில் எந்த விதத்தில் நியாயப்படுத்த முடியும்? சமீபத்தில்  கர்நாடகாவைச் சேர்ந்த, சவீதா என்ற 31 வயதான பல் மருத்துவர், கொடூரமாக உயிரிழந்தது நெஞ்சை உருக்குவதாக உள்ளது. அயர்லாந்து

    நாட்டில் கால்வே எனும் நகரில் பொறியாளராகப் பணிபுரியும் பிரவீன் என்பவரின் மனைவியான இவருக்கு வயிற்றில் உண்டான கரு இயல்பான நிலையில் இல்லையென்பதை,  வயிற்று வலி ஏற்பட்டபோது,  மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு சொல்லப்பட்டுள்ளது. 17 வார கருவே என்பதனால் கோளாறு உள்ள கருவை  கலைத்து விடும்படி வேண்டியும், தங்களுடைய கத்தோலிக்க கிறித்துவ நாட்டின் சட்டப்படி கருவைக் கலைக்க முடியாது என்று மருத்துவர்கள் மறுத்துவிட்ட நிலையில் அக்கரு வயிற்றிலேயே இறந்துள்ளது. அதன் விடம் தொப்புள் கொடி வழியாக தாயின் இரத்தத்தில் பரவி, அவர் உயிரையேக் குடித்துள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் அளவிற்கு இப்பிரச்சனை பெரிதாகி, இந்தச் சட்டத்தின் விதிகளைத் தளர்த்த வேண்டும் என்று 2000 மக்கள் தலைநகர் டப்ளினில் நாடாளுமன்றத்திற்கு வெளியே பேரணி நடத்தினர். ச‌விதாவின் மரணம் குறித்து விசாரணைக்கு அந்நாட்டு சுகாதாரத்துறை ஜேம்ஸ் ரெய்லி உத்தரவிட்டுள்ள நிலையில் இது குறித்து அயர்லாந்து பிரதமர் எண்ட கென்னி கருக்கலைப்பு செய்யாததால் இந்தியப் பெண் மரணமடைந்துள்ளது. துர்பாக்கியமாதென்றாலும், இது இந்த நாட்டு மக்களின் பன்னெடுங்கால நம்பிக்கை என்பதால் கருக்கலைப்பு சட்டத்தில் தீடீர் என்று எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார். சட்டங்கள் என்பது மக்களின் வாழ்வைக் காப்பாற்றுவதற்காக என்பது போய், அச்சட்டத்தின் காரண்மாகவே இது போன்று இன்னும் எத்தனை உயிர்கள் போயிருக்கிறதோ என்று யோசிக்க வைக்கிறது. வளர்ந்த நாடுகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் சில சம்பவங்கள்கூட அம்பலமாகி பலத்த எதிர்ப்பும் கிளம்புவது, இனி இதுபோன்ற பிரச்சனைகள் எழாமல் இருப்பதற்கான ஆரோக்கியமான சூழலாகவே இருப்பதோடு இது. மனதிற்கு ஆறுதல்ளிக்கக்கூடிய விசயமாகவும் இருக்கிறது.

    இது ஒரு புறமிருக்க இதே துர்பாக்கிய நிலை நம் நாட்டின் பல பிற்பட்ட கிராமங்களிலும், கல்வியறிவற்ற மக்களின் மத்தியிலும் விழிப்புணர்வற்ற நிலையில் எத்தனையோ சவிதாக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். சமீபத்திய உலக சுகாதார மைய கணக்கெடுப்பின்படி, தென் மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் இந்தியாவிலேயே அதிகப்படியான பாதுகாப்பற்ற கருக்கலைப்பு நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல பின் தங்கிய கிராமங்களில் சுகாதாரமற்ற முறையில் கருக்கலைப்பு செய்யும் முறை இன்றளவிலும் புழக்கத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. முரட்டுத்தனமான மற்றும் சுகாதாரமற்ற பல வழிமுறைகளில் கருக்கலைப்பு செய்வதால் ஏற்படும் தொற்று மற்றும் இரத்த இழப்பினால் சில காலங்களிலேயே நோய்வாய்ப்பட்டு காரணம் அறியாமலேயே இறந்து போகும் அபாயமும் கூட ஏற்படுகிறது.

    நம் நாட்டில் கருக்கலைப்பு சட்டப்படி தவறானதொன்றில்லையென்றாலும் பல காரணங்களுக்காக கிராம மக்கள் மருத்துவமனைகளில் சென்று கருக்கலைப்பு செய்வதை தவிர்த்துவிடுகிறார்கள். சுகாதாரமற்ற  முறையில் சில பழக்கங்களைத் தொடர்வதால் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிவருகிறது. நம் இந்தியாவில் மத்திய பிரதேசம், தமிழ்நாடு, உ.பி.போன்ற பல மாநிலங்களின் பிற்பட்ட கிராமங்களிலும் இது போன்ற கருக்கலைப்புகள் பல உயிர்களை பலி வாங்குவது வெளியில் தெரியாமலே போய்விடுவதும் உண்டு. இதன்அபாயம் எந்த அளவிலானது என்ற விழிப்புணர்வும் கூட இல்லாமலே மக்கள், குறிப்பாக பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் துர்பாக்கிய நிலையே காணமுடிகிறது.

    மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வே சுத்தமாக இல்லாத நிலையும் இதற்கொரு முக்கியமான காரணம். நுகர்வோர் உரிமைச் சட்டம் குறித்து அறிந்துள்ள அளவிற்குக்கூட இலவச மருத்துவ காப்பீடு திட்டம் பற்றி அறியாதவர்கள் உள்ளனர். “அட இப்படி ஒரு திட்டம் இருக்கிறதா, அதனால் என்ன பயன்?” என்று கேட்பவர்களே இன்று கனிசமாக இருக்கிறார்கள். இது போன்ற திட்டங்கள் பெண்களைச் சென்று அடைந்தால்தான் கருக்கலைப்பினாலோ அல்லது பிரசவத்தினாலோ, குழந்தைகளுக்கோ ஏற்படும் பிரச்சனைகளுக்காக மருத்துவமனையின் உதவியை நாடுவார்கள். இல்லையென்றால் அரசாங்க மருத்துமனைகளில் பல மணி நேரங்கள் காத்திருப்பதற்கு அஞ்சியும், தனியார் மருத்துவமனைகளின் அதிகமான கட்டணங்களுக்கு அஞ்சியும் தம் உயிரைப் பற்றியும் கவலைப் படாமல் முறையான பயிற்சி இல்லாதவர்களிடம் கருக்கலைப்பும், பிரசவமும் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். மருத்துவமனைகள் எல்லாம் சேவை மையங்கள் என்ற நிலை மாறி இன்று வியாபார மையங்களாக மாறியுள்ளதால் ஏழை எளிய மக்களுக்கு தாய்மை என்பது ஒரு சாபமாக ஆகும் நிலையே ஏற்படுகிறது.  ஏட்டளவிலேயே பிரகாசித்துக் கொண்டிருக்கும் சில திட்டங்கள் குறித்த முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லையெனில்  அதற்குரிய பயன்கள் தேவையானவர்களுக்குச் சென்று சேராமல் உயிரிழப்புகளும் ஏற்பட்டுக் கொண்டுதானிருக்கும். சவிதாவின் மரணம் இந்த அவல நிலைகளுக்கு ஒரு அபாய மணியாக ஒலிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.

     

     

    Share
  • கார்த்திகை தீப ஒளித் திருநாள்

     

    ராஜ ராஜேஸ்வரி  ஜெகமணி

    ”அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக
    இன்புருகு சிந்தை இடுதிரியா – என்புருகி
    ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
    ஞானத் தமிழ் புரிந்த நான் ”

    கார்த்திகை மாதத்தில்  மாலையில் விளக்கேற்றி வழிபட அருமையான துதி !

    சிவனுடன் சக்தி சேர்ந்த பொன்னாள்

    ஆறுமுகம் அவதரித்த சுப நாள் கார்த்திகை  தீபத் திருநாள்..!

    அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவது அஷ்டலட்சுமிகளும்  இல்லத்தில் இஷ்டமாக வந்து குடியேறி மங்களங்கள் மலர்விக்கும் பொன்னாளாகத் திகழ்கிறது…

    தமிழ் மக்களின் வாழ்வியலில் கலாசார பண்பாடுகளில் சிறப்புக்குரிய  ஒளித்திருநாளாக கார்த்திகைத் தீபம் கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தன்று கொண்டாடப்படுகிறது….

    .

     பஞ்சபூதங்களான நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்  இவைகளால் ஆனதே பிரபஞ்சம்.

    அவற்றுள் நெருப்பை வழிபடுவதுதான் தீபத் திருவிழா.

    நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் கார்த்திகை மாதத்தில்தான். மகா தீபம் ஏற்றப்பட்டு பதினேழு நாட்களுக்கு பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.

    கார்த்திகைப் பெளர்ணமியில் பார்வதிதேவி சிவபெருமானின் இடப்பாகம் அமர்ந்தால் சிவசக்தி ஐக்கிய சொரூபமான அர்த்தநாரீஸ்வரராக அன்று இறைவன் இருக்கிறான்.
     
    நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

    தீபத் திருவிழா நாட்களில் தேரோட்டம் நடைபெறும்;

    உண்ணா மலை அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்துச் செல்கிறார்கள்….

    தீபத் திருநாளன்று அதிகாலையில் மலையடிவாரத்தில் பரணி தீபமும், மாலையில் மலையுச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகின்றன.

    திருவண்ணாமலை ஜோதிக்கு நிகர் வேறெதுவும் இல்லை. பஞ்சபூத லிங்கத்தில் அக்னி லிங்கமாய் முதன்மையாய் விளங்குவது திருவண்ணாமலையாம் அருணாசலமே.

    திருவண்ணாமலை கிரிவலத்தில் முதல் அடியில் உலகை வலம் வந்த பலனும்,
    இரண்டாவது அடியில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனும்,
    மூன்றாவது அடியில் அஸ்வமேத யாகம் செய்த பலனும்,
    நான்காவது அடியில் அஷ்டாங்கயோகம் செய்த பலனும் கிடைக்கும்.

    திருவண்ணாமலையில் குன்றின் சிகரத்தில் கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் ஜோதியானது, உலகம் முழுதும் உள்ள அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞான ஒளியைப் பரப்பும் சிவஞான ஜோதியாகப் பிரகாசிக்கும் என்பது ஐதீகம்.

    அருட் பெருஞ்ஜோதியாம் ஆண்டவன் அருவமாகவும், உருவமாகவும் விளங்குவது போன்று அக்னியும் பிரகாசிக்கின்றது.

    அக்னியிலே பல விதமான தீபங்கள் தோன்றுவது போல் ‘சிவம்’ என்ற நாமம் ஒன்றே பல தத்துவங்களைக் கடந்து பற்பல ஜோதி ஸ்வரூபமாகக் காட்சி தருகிறது.

    அக்கினியின் சக்தியால் அழுக்கு களையப்படுகிறது.

    பிரம்மாவும், திருமாலும் சிவபெருமானின் அடி, முடியைக் காணாது தோல்வியுற்றனர்.

    ஆதி அந்தம் கடந்தவனை, முதலும் முடிவுற்றவனை இறுதியில் ஜோதிப் பிழம்பாக திருவண்ணாமலையில் கண்டு களித்தனர்.

    அதுவே ”லிங்கோத்பவ மூர்த்தி” ஆகும்.

    சிவ கார்த்திகை, விஷ்ணு கார்த்திகை என கார்த்திகை இரண்டாக கொண்டாடப்படுகிறது.

     திரிபுர அசுரர்களை அடக்கிய திருநாள் சிவகார்த்திகை என்றும்,

    மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்க விஷ்ணு வாமன அவதாரம் எடுத்த நாள் விஷ்ணு கார்த்திகை என்றும் கொண்டாடப்படுகிறது.

    கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்ம ஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள்.

    கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் இல்லங்களில் தீபங்களை ஏற்றி வழிபடுபவர்கள் புண்ணிய பலனை அடைவர்

    கார்த்திகைத் திருநாளன்று அவல் பொரியில் வெல்லத்தைப் பாகு காய்ச்சி ஊற்றி ‘கார்த்திகைப் பொரி’ செய்து நைவேத்தியம் செய்து வழிபடுவது சிறப்பு.

     கார்த்திகைப் பொரியில் ஒரு தத்துவம் உண்டு. வெண்மையாகவும், தூய்மையாகவும் இருக்கும் பொரியுடன் தேங்காய் துருவலைச் சேர்க்கிறோம்.

    தூய்மைக்கு அடையாளமாக வெல்லத்தைச் சேர்க்கிறோம்.

    வெண்ணீறு பூசிய சிவபெருமானை இந்த வெண்மையான நெல் பொரியும், வள்ளல் தன்மை கொண்ட மாவலியை தேங்காய் துருவலும் உணர்த்துகிறது.

    பக்திக்கு வசப்படும் இறைவன், பொரிக்குள்ளும் தோன்றுவான் என்பதே கார்த்திகைப் பொரி நமக்கு உணர்த்தும் தத்துவம்.

    சொக்கப்பானை வேய்ந்து பனை ஒலையால் சுவாமியை எழுந்தருளச் செய்து சொக்கப்பானைக் கொளுத்துவர். ‘சொக்கப்பானையை வணங்குவது சொக்கப்பனை………’.

    சொக்கப்பனாகிய சிவனை ஒளிவடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப்பனை .

      கார்த்திகை சோமவாரத்தன்றும், தமிழக புராதன சிவாலயங்கள் யாவற்றிலும் அந்திப்பொழுதில் அதுவும் மகா பிரதோஷ காலத்தில் “நூற்றியெட்டு” சங்காபிஷேகம் இறைவனுக்குச் செய்யப்பட்டு வருவது வழக்கம்.

    இயற்கையாகவே ஐப்பசி, கார்த்திகை மாதத்தில், அதிக மழை பெய்யும்.  காலங்களில் பூச்சிகள் அண்டாமல் இருக்கவும், இல்லம் வெளிச்சம் பெறவும் வீட்டு வாசலில் விளக்குகளை ஏற்றி வைப்பதும், சொக்கப் பனை போன்ற தீபங்களை ஏற்றுதலும் வேண்டும்

    கார்த்திகைதீபம் உயரமாக மலைமீது ஏற்றப்படுவத்ற்கு விஞ்ஞான விளக்கம் உண்டு..

    சுழல் காற்றை சமன் செய்யும் குணம் அக்னிக்கு உண்டு..

    தை மாதம்  அறுவடையாக வேண்டிய பயிர்கள் பால்பிடிக்கும் பருவத்தில் காற்று சுழன்றடித்தால் விளைச்சல் பாதிக்கப்ப்டும்..

    அதனைக்குறைத்து திசைதிருப்பவே மலைமீதான தீபமும், வீடுகள் தோறும் ஏற்றிவைக்கும் தீபமும் பல்வழிகளில் பயன்படுகின்றன்..

    ஆன்மீகத் தேனில் குழைத்துத் தந்த அருமையான விழா..

    பன்முகப்பயன்பாடு..

    சந்திர ஒளிக்கிரணங்கள்,,,மலையின் ஆன்மீகக்கதிவீச்சு எல்லாம் கிடைக்கும் அரிய தத்துவ விளக்கம்…

    சகல ஜீவராசிகளும் பயன் பெறும் ஜீவகாருண்ய விழா.  

    ஐப்பசி பட்டாசு வெடிப்பும் வாணவேடிக்கைகளும் வெறும் விளையாட்டல்ல.. மழை அந்தப்பருவத்தில் பெய்தால் பயிர்கள் பாதிக்கப்படும்

    பட்டாசுகளின் கந்தகப்புகை மழை மேகங்களை கலைத்து வானிலையை சமப்படுத்தச் செய்த அற்புதக்கொண்டாட்டம்!  

    சமுதாயமாகசேர்ந்து பல கைகள் தட்டினால் ஓசை பெரு வெடிப்பாய் நிகழ்வதைப்போல வானிலை கால நிலையை மாற்றவே தீபத்திருநாட்கள் கொண்டாட்டம்.

    பெரும் புயலைத் தடுக்கும் வெப்பம் ..

    காற்றை திசைதிருப்பும் அழல்.

    உணர்ந்து மெய்சிலிர்க்கிறோம் நம் மெய்ஞானிகளை..

    Share
  • அண்ணாமலை தீபம்

     

    விசாலம்

    ஆறுமுகம் அவதரித்த  சுப நாள் இது
    கார்த்திகை மாதத் திருநாள் இது
    தீபங்கள்   ஏற்றும் நன்னாள் இது 
    சிவன் . சக்தி சேர்ந்த  பொன்னாள் இது,

    பரணி தீபம் எங்கும் சுடர
    கார்த்திகைத் தீபம் மறுநாள் ஒளிர,
    அண்ணாமலையில்  விளக்குகள் மின்ன ,
    மக்கள் கடலலை  மோதி வழிய ,
    ரதோத்சவம் சக்கைப்போடு போட ,
    ரிஷப வாஹனத்தில் சிவனும் அமர
    அண்ணாமலையார்  பல்லக்கில் ஆட
    அர்த்தநாரீஸ்வரருக்கு  தீபார்த்தனைக்காட்ட
    கூடவே அண்ணாமலை ஜோதியும்  எரிய
    எங்கும் கோஷம் எங்கும் பரவசம் .
    எங்கும் உத்சவம்  எங்கும் உத்சாஹம் ,
    அண்ணாமலையானுக்கு  அரஹரோஹரா  ‘
    ஓம் நமசிவாய ,ஓம் நமசிவாய ,
    நாமும் சேர்ந்து   முழங்குவோம்
    அவன் தாளைப் பற்றுவோம் ,
    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

    படத்திற்கு நன்றி :

    http://www.maalaimalar.com/2012/11/26141612/thiruvannamalai-karthigai-deep.html

     

    Share
  • வார ராசி பலன்: (நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 வரை)

     

    காயத்ரி பாலசுப்பிரமணியன்
     
    மேஷம்: குடும்பத்தில் நடக்கும் சந்தோஷமான நிகழ்ச்சிகளால் கலகலப்பும் உற்சாகமும் கூடும். மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லி வந்தால், எந்த வம்பும் அருகே வராது. ஆரோக்கியம் வியாபாரிகளின் பரபரப்புக்கு ஈடுகொடுக்கும் விதமாக அமைவதால், புதிய ஒப்பந்தங்களுக்காக அதிகம் உழைப்பார்கள். பணியில் இருப்பவர்கள் நண்பர்களிடம் உரிமை எடுத்துக் கொள்வதிலும் வரையறை இருப்பது நல்லது. கலைஞர்கள் புறம் கூறுபவர்களின் பேச்சிற்கு செவி சாய்க்காமல் இருப்பது அவசியம். பொறுப்பில் உள்ளவர்கள் விவாதங்களில், சர்ச்சைக்கு இடம் தராதவாறு பேசுவது புத்திசாலித் தனம்.  

    ரிஷபம்: இந்த வாரம் வியாபாரிகள் சரக்குகளுக்குரிய பாதுகாப்பை தக்க நேரத்தில் அளித்தால், நஷ்டத்தைத் தவிர்க்கலாம். உங்களை ஆட்கொள்ளும் காரணமற்ற சோர்வுகளை நீக்க, பெண்கள் எளிமையான உடற்பயிற்சி செய்து வாருங்கள். கலைஞர்கள் முக்கியமான காரியங்களில், தீவிர சிந்தனை மற்றும் திட்டத்தோடும் செயல்படுவது அவசியம். முதியவர்கள் அறிவுரைகளை இங்கிதமாகச் சொன்னால், குடும்ப உறவுகளின் இனிமை கெடாமல் இருக்கும். மாணவர்கள் இரவலாய்ப் பெற்ற விலை உயர்ந்த பொருளை பயன்படுத்துவதில் கவனமாக இருந்தால், வீண் செலவுகளையும், வேண்டாத மன உளைச்சலையும் தவிர்த்து விடலாம்.

    மிதுனம்: இந்த வாரம் தொழில் வகையில் ஏற்படும் மாற்றங்கள், சுய தொழில் புரிபவர்க ளின் உயர்வான நிலைக்கு அடித்தளமாக அமையும். இதனை நல்ல முறையில் பயன்ப டுத்திக் கொண்டால், அதிக லாபம் பெறலாம். முதியவர்கள் ஆரோக்கியத்திலும் சற்று கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக நேரம் செலவு செய்ய லாம். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் உள்ள ஏற்ற இறக்கங்களை உணர்ந்து செயல்படுவது அவசியம். பெண்களின் புத்திசாலித்தனத்தால், சேமிப்பும், வாழ்க்கை வசதியும் அதிகரிக்கும். கலைஞர்கள் பணிவாக நடந்துகொண்டால், மூத்தோரின் ஆசியும், ஆதரவும் தக்க சமயத்தில் கிடைக்கும்.

    கடகம்: பணியில் இருப்பவர்கள் அவ்வப்போது சில சுணக்கங்களை எதிர்கொண்டாலும் உங்கள் மன உறுதியால், அனைத்தையும் கச்சிதமாக முடித்து விடுவீர்கள். மாணவர் கள் படிப்பில் இருந்த மந்த கதி மாறுவதால், புதிய உற்சாகத்துடன் வலம் வருவார்கள். பெண்கள் இனிமையாகப் பேசி பணம் கறப்பவர்களை, இனங்கண்டு ஒதுக்கி விட்டால், செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கலைஞர்கள் சூழலுக்குத் தக்கவாறு முடிவெடுப்ப தன் மூலம் பல பிரச்னைகளை முளையிலேயே கிள்ளிவிடலாம். பொது வாழ்வில் உள்ள வர்கள் தங்கள் கருத்துக்களை கோர்வையாக சொல்லுவது மூலம் பல சலுகைகளைப் பெறுவதோடு, தங்களுக்கு வேண்டிய ஆதரவையும் தக்க வைத்துக் கொள்வது சாத்தியமாகும்.

    சிம்மம்: இந்த வாரம் மாணவர்கள் புதிய விஷயங்களை அறிந்து கொள்ளும் துடிப்புடன் செயலாற்றுவார்கள். பெண்கள் பிறர் கூறும் குறைகளை பெரிது படுத்த வேண்டாம். பெற்றோர்கள் பிள்ளைகளின் சிறிய உபாதைகளை அலட்சியப்படுத்தாமல் தகுந்த மருந்துகளை தருவதன் மூலம் அவர்களின் ஆரோக்கியம் நலிவடையாமல் பார்த்துக் கொள்ளலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் வெளியில் காட்டும் பரிவு, இல்லத்திலும் இருக்குமாறு பார்த்துக் கொண்டால், இல்லத்தில் அமைதி எப்போதும் நிலவும். வியாபாரிகள் சரக்குகளின் தட்டுப்பாடு இல்லாதவாறு, நல்ல முறையில் திட்ட மிட்டால், வாடிக்கையளர்களின் வரவு எப்போதும் போலவே இருக்கும்.
     
    கன்னி: பெண்கள் அன்றாட வரவு செலவு கணக்குகளை எழுதிவாருங்கள். வீண் செலவுகளைக் கண்டுபிடிப்பதோடு அவற்றைக் குறைக்கவும் முடியும். மாணவர்கள் பேச்சில் உள்ள கட்டுப்பாட்டை உணவிலும் கடைபிடித்தால்,எந்த தொந்தரவும் இன்றி படிப்பில் கவனம் செலுத்த முடியும். பொது வாழ்வில் உள்ளவர்கள் தங்கள் செல்வாக்கை நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனமாகும். எளிதில் முடியக்கூடிய சொத்து விவகாரங்கள், இந்த வாரம் சற்றே இழுத்தடிக்கக் கூடும். வியாபாரிகள் சரக்குகளுக்குரிய பணத்தைப் பட்டுவாடா செய்யும் முன்பு, நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொண்டால் உங்களின் நாணயம் குறையாது.

    துலாம்: கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை ஒத்துக் கொள்ளும் முன் அதில் உள்ள சாராம்சத்தை அறிந்து கொள்வது அவசியம். மாணவர்கள் பேச்சு வார்த்தைகளில் கவனமாய் இருந்தால் நினைத்த காரியம் கைகூடும். பண விஷயங்களில், நண்பர்களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் . நீங்கள் போட்டிருந்த கடன் மனுக்கள் மூலம் கிடைக்கும் பணம் சற்றே தாமதத்திற்குப் பின் கிடைக்கலாம். எனவே அதற்கேற்றவாறு திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இந்த வாரம் பணியில் இருப்பவர்கள் உடனிருப்ப வர்க ளின் செய்கையால், சங்கடமான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உறவு கள் தரும் ஆதரவு மனதுக்கு இதமாய் இருப்பதால், மன இறுக்கம் குறையும்.

     
    விருச்சிகம்: மாணவர்கள் படாடோபத்தைத் தவிர்த்து எளிமையாய் இருந்தால், அனைவரும் உங்கள் பக்கமே! பணியில் இருப்பவர்கள் மேலதிகாரிகளுடன் கருத்துப்பரிமாற்றம் செய்கையில் இதமாகவே நடந்து கொண்டால், உங்கள் கருத்துக்கு மதிப்பிருக்கும். பொது வாழ்வில் உள்ளவர்கள் சந்தேகத்துக்கு இடமளிக்காத வகையில் உங்கள் செயல்பாட்டை செம்மையாக்கிக் கொள்வது நல்லது. வியாபாரிகள் எழுத்துப் பூர்வமாகவே ஒப்பந்தங்களை முடிப்பதில் கவனமாக இருந்தால், அதிக லாபம் பெறலாம். சில நேரம், பெண்கள் பிள்ளைகளின் விஷயத்தில் முடிவெடுக்க இயலாமல் குழப்பமான நிலை இருக்கும். எனவே பொறுமை காப்பது அவசியம்.

     
    தனுசு: பணவரவு அதிகரிப்பதால், இந்த வாரம் பல செயல்கள் கிடுகிடுவென்று நடந்தே றும்.பெண்கள் பிள்ளைகளுடன் விரும்பிய இடங்களுக்கு சென்று மகிழ்வீர் கள்.மாண வர்கள் நண்பர்களிடையே பணம் கைமாற்றாக கொடுப்பதை நாசுக்காகத் தவிர்த்து விடுங்கள்.நட்பு கெடாமல் இருக்கும். பெண்கள் தெளிவான சிந்தனையுடன் செயலாற்றி னால் தடுமாற வேண்டியிருக்காது. கலைஞர்கள் பிறரிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாமல் அளவாகப் பழகுதல் அவசியம். பணியில் உள்ளவர்கள் வேலை செய் யும் இடங்களில் மனதில் பட்டத்தை சொல்லுவதை விட,மற்றவர்க்கு தேவையான செய்திகளை மட்டும் பரிமாறிக் கொள்வது நல்லது.  

    மகரம்: மாணவர்கள் பகல் கனவு காண்பதைவிட, உங்கள் உழைப்பை நம்புவது நல்லது. பெண்கள் நிறைவு என்பது பொருளில் இல்லை, மனதில்தான் உள்ளது என்ப தை உணர்ந்தால், வாழ்க்கை அமைதியாக செல்லும்.,சில சமயம் பிள்ளைகளின் போக்கு புரிந்து கொள்ள முடியாமல் இருந்தாலும், பெற்றோர்கள் கனிவாக நடந்து கொண்டால், அவர்களின் அன்பை சம்பாதித்துக் கொள்ளலாம். கலைஞர்கள் பேச்சில் நிதானமும், சமயோசிதமும் இருந்தால், எதனையும் சாதிக்க முடியும் என்பதை உணர் ந்து செயல்படுங்கள். பொது வாழ்வில் உள்ளவர்கள் உங்களின் பிடிவாதத்தை சற்று குறைத்துக் கொண்டால், வெற்றி உங்கள் அருகில் நிற்கும்.

    கும்பம்: பெண்கள் நினைத்த காரியத்தில், விரும்பத்தகாத மாற்றங்கள் உருவானாலும், பொறுமையாய் இருந்தால், விரும்பிய காரியத்தை சாதித்துக் கொள்ளலாம். பணியில் உள்ளவர்கள் சோர்வு, சோம்பலின்றி செயல்பட்டு வந்தால், பணிகள் தேங்காது. மாணவர்கள் அவசர கதியில் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொண்டால், தேக நலன் சீராக இருக்கும். புதுமையான எண்ணங்களுக்கு தகுந்த நேரத்தில், பங்கு தாரர்கள் பச்சைக் கொடி காட்டும் சூழல் இருப்பதால், வியாபாரம் முன்னைக் காட்டிலும் சுறுசுறுப்பாக நடக்கும். இந்த வாரம், சுப காரிய விஷயங்களில் இருந்த சிக்கல்கள் விலகி நல்ல முன்னேற்றம் காணலாம்.  

    மீனம்: குடும்பத்தில் சில குழப்பங்கள் உருவாகும் சூழல் இருப்பதால், பெண்கள் தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டு வருவது புத்திசாலித்தனம். விருந்து, விசேஷம் ஆகி யவற்றிற்கு மகிழ்வுடன் பணம் செலவழியும் . தொழிலதிபர்கள் வழக்கு தொடர் பான விஷயங்களில், நேரடியாக கவனம் செலுத்துவது அவசியம். எதிர் பாராமல் மேற் கொள் ம் பயணங்களால் முதியவர்களின் ஆரோக்கியத்தில் சற்றே நலிவு உண்டாகலாம். மறதி, குழப்பம், ஆகியவை எட்டிப் பார்க்கும் வாய்ப்பிருப்பதால், வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான ஆவணங்களை பத்திரமாக வைப்பது நல்லது. மேலும் அறிமுகமில்லாத நபர்களிடம் சரக்கு பரிமாற்றம் செய்வதில் எச்சரிக்கையாய் செயல்படவும்.  
     
     
     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 47 (26.11.12)

     

    மலர் சபா

     

    புகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை

     
    வைகறையில் கடற்கரைக் காட்சி
     
     

    வண்ணக் கலவைகள், சாந்து வகைகள்,
    மலர்கள் சுண்ணப் பொடிகள்
    பணியாரம் முதலான தீனிவகைகள்
    இவை விற்போர் வைத்திருந்த விளக்குகள்;
     
     
    செய்யும் தொழிலில் வல்லவரான
    கம்மியர்(தட்டார்)
    அணிகலன் செய்யுமிடங்களில்
    வைத்திருந்த விளக்குகள்;
     
     
    பிட்டு வாணிகர்கள்
    வரிசை வரிசையாய்
    ஏற்றி வைத்திருந்த விளக்குகள்;
     
     
    அப்பம் விற்கும் வாணிகர்
    குடத்தண்டில் ஏற்றி வைத்திருந்த
    கரிய அகல்விளக்குகள்;
     

    பண்டங்கள் பலவும் விற்கும் பெண்கள்தம்
    கடையில் வைத்த விளக்குகள்
     

    ஆங்காங்கு இடையிடையே
    மீன் விற்பவர்கள் வைத்த விளக்குகள்
     

    கடலின் இடத்து துறை எதுவென்று அறியாது
    ஓடுகின்ற மரக்கலங்களை
    அடையாளம் காட்டி அழைக்கவென்று
    வைத்த்திட்ட விளக்குகள்
     

    மீன்களைக் குறுக்கிட்டுத் தடுத்து
    வலையில் அகப்படுத்தும்
    பரதவர் வைத்திட்ட
    மீன் திமில் விளக்குகள்
     
    வேற்றுமொழி பேசும் தேசத்தவர்
    வைத்திட்ட விடிவிளக்குகள்
     
     
    பெரிய பெரிய பண்டங்களையுடைய
    பண்டகசாலைக் காப்பாளர்கள்
    வைத்திட்ட விளக்குகள்
     
     
    எண்ணுவதற்கு அரிய அளைவினதாய் விளக்குகள்
    எங்கு காணினும் பொருந்தி இருந்தன.

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 134 – 145

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram16.html

    படத்துக்கு நன்றி:

    http://aammaappa.mywebdunia.com/2008/11/20/1227199500000.html

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

     

    திவாகர்

    பொதுவாகவே தமிழர்களாகிய நாம் பெருமைப்படவேண்டிய பெருமையான விஷயம் எதுவென்றால் சிற்பக் கலையில் நாம் சிறந்தவர்களென்பதை மிகவும் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம், காவியத்தில் இருப்பதைக் கண் முன்னே காட்ட சிற்பிகள் எத்தனையோ சிரமங்கள் மேற்கொண்டு கடினமாக உழைத்து உளி கொண்டு நேர்த்தியான கலைப் படைப்புடன் செதுக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல.

    இந்தச் சமயத்தில்தான் இந்த சிற்பங்களைப் பற்றிய ஒரு கட்டுரை குழுக்களில் காண நேர்ந்தது. நண்பர் உதயன் அவர்கள் ’மூதாதையரைத் தேடி’ என ஆரம்பித்து ஊர் ஊராகத் தேடிச் சென்ற கட்டுரை அது. இந்த வாரத்தில் அந்தக் கட்டுரையில் திருப்பரங்குன்றத்து குகைச் சிற்பங்களைப் பற்றியும் தான் தேடிய விவரங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். திருப்பரங்குன்றம் குடைவரைச் சிற்பங்கள் காலத்தின் சிதைவில் அதிகமாக பாதிக்கப்பட்டாலும் இன்னமும் நம்மை ஆச்சரியத்துக்குள்ளாக்குபவை என்பதை அவைகளை நேரில் பார்த்தோர் மட்டுமே உணரலாம். புதுப்புது அர்த்தங்கள் கொடுக்கும் சிற்பங்கள் அவை. இந்தச் சிற்பங்களை தனது அழகிய புகைப்படக் கருவியில் பதிவு செய்து வெளியிட்ட பாங்கு மிகவும் கவர்ந்தது. இவருடைய விடாமுயற்சியைப் பற்றிய ஒரு சிறு பகுதியை அவர் எழுத்திலேயே பார்ப்போம்.

    https://groups.google.com/group/vallamai/browse_thread/thread/925727a7cf67ae52#

     

    குடைவரை கோவிலில் படம் எடுத்து முடித்ததும் அங்கிருந்த பாதுகாவலர் நிலையூர் திருப்பத்தில் படுக்கைகள் உள்ளன என்றார். அங்கேயும் போய்விடக் கிளம்பினேன். அவர் சொல்லியபடி அந்த இடம் அடைந்ததும் காம்பவுண்ட் போல் அமைந்திருந்த வீட்டைத் தாண்டி முட் செடிகளைத் தாண்டி பாதை தெரியாமல் மலையேறி நான் பாறை இடுக்கில் சரிந்து மாட்டிக் கொண்டேன். காலையிலிருந்து ஆகாரம், தண்ணீர் அருந்தாமல், சோர்வுடன்  இருந்தாலும் மலை ஏறிவிட வேண்டும் என்ற முனைப்புடன் ஏறிவிட்டேன். நிலையூர் திருப்பத்தில் இருந்த பலகை. மலை சுற்றி வரும் பாதையில் நிலையூர் திருப்பம் இடப்புறம் வரும், அதைத் தாண்டி வலப்புறமாகவே பார்த்து வந்தால் இந்தப் பலகை தெரியும், காம்பவுண்ட்,  முட்செடிகளினூடேதான் பயணிக்க வேண்டும். ….”

    திரு உதயன் அவர்கள் பழகுவதற்கு இனிய பண்பாளர்.  அவரின் விடாமுயற்சியும் உழைப்பும் நம் தமிழ் மரபைப் பற்றிய வேர்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் எல்லோராலும் விரும்பத்தக்கதே.. ’திக்கெட்டும் சென்று கலைச் செல்வங்களைக் கொணர்வீர்’ என்ற நம் மகாகவியின் கட்டளைகளுக்கேற்ப சிற்பச் செல்வங்களை நமக்கு சேகரித்துத் தருவது என்ற உதயனின் சேவை மென்மேலும் தொடர வேண்டும். அவரது தேடலை, அவரது கலையார்வத்தை மகிழ்ச்சியாக வரவேற்றும், இந்த வாரம் பதிப்பித்த அவரது சிற்பச் செல்வங்களை மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொண்டும், இந்த வார வல்லமையாளர் விருதினை அதே மகிழ்ச்சியுடன் வல்லமை குழுவினர் சார்பில் வழங்கி சிறப்பிப்பதில் எனக்கும் மகிழ்ச்சிதான் (உதயன் என்றதும் ஒரு வார்த்தையில் எத்தனை மகிழ்ச்சிகள் பாருங்கள்..). வல்லமையாளரான திரு உதயன் அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: திருமலைசோமு’வின் ‘மனிதன் எனும் விருட்சம்’ கவிதையில் வரும் வரிகள்தான் இந்த வாரக் கடைசி பாராவில் இடம் பெறுகிறது.

    துளி விந்தின்
    விருட்சம் மனிதன்…

    தன்
    நெடும் பயணத்தில்
    நீண்ட வெற்றிகளை
    நெற்றிக்குள்
    குவியலிட்டுக் கொண்டவன்
    விரல் நுனிக்குள்
    உலகை இயக்கும்
    நூதனம் அறிந்தவன்

    மனிதன்
    மனிதனாய் மட்டுமல்ல
    இறைவனாகவும்
    அவதரிப்பவன்.

     

    Share
  • பொம்மை

     

    சு. கோதண்டராமன்

    குழந்தையை அழைத்துக்கொண்டு
    பொம்மை வாங்க
    கடைத்தெருவுக்குப் போனேன்.

    “இந்தக்கடையில் வாங்கலாம்பா”
    “வேண்டாம்மா,
    இது வேறே ஜாதிக்காரன்
    நடத்தற கடை.”

    “இதுப்பா?”
    “இதுவும் அப்படித்தான்.”

    பல கடைகளைத்தாண்டி
    என் ஜாதிக்காரர் நடத்தும்
    கடையைக் கண்டுபிடித்தேன்.
    அங்கு பல சேல்ஸ்மென்.

    இவர் நெற்றியில்
    நாமம் போட்டிருக்கிறார்,
    வேண்டாம்.

    இவர் நெற்றியில் கரிக்கோடு
    வேண்டாம்.

    இதோ இவர்கள் எல்லாம்
    என்னைப் போலவே
    விபூதி பூசியிருக்கிறார்கள்.

    இவர் தெலுங்கு பேசுகிறார்,
    இவர் மலையாளம்,
    இதோ இவர்கள்
    என்னைப்போலவே
    தமிழ் பேசுகிறார்கள்.

    “என்ன ரேஞ்சுலே பொம்மை வேணும் சார்?”
    என் கையில் பத்து ரூபாய் இருந்தது
    நூறு இருநூறு என்கிற
    பொம்மை எல்லாம்
    எனக்குக் கட்டுபடி ஆகாது.
    அஞ்சு ஆறு ரூபா பொம்மை எல்லாம்
    என் கௌரவத்துக்கு
    குறைச்சல்.

    “பத்துப் பதினஞ்சு ரூபாயிலே எடப்பா”
    பேரம் செய்து
    ஒன்றிரண்டு குறைச்சுக்கலாம்
    ஒன்று இரண்டு பணம் குறைந்தால்
    கடன் சொல்லிக்கலாம்.

    பொம்மை உற்பத்தி ஆன தேதிக்கும்
    என் குழந்தை பிறந்த தேதிக்கும்
    பொருத்தம் இருக்கிறதா என்று பார்த்து
    “இந்தப் பொம்மை அழகாயில்லை,
    வேண்டாம்.
    இது வேலைக்காரன் பொம்மை,
    வேண்டாம்.
    இது வியாபாரி பொம்மை,
    வேண்டாம்.”

    அப்பா ! கடைசியில் கிடைத்தது,
    ஐ.டீ இஞ்சினீயர் பொம்மை.
    இதை விற்பவர்
    நல்ல குடும்பத்தைச்
    சேர்ந்தவர்கள் தானா என்பதை
    விசாரித்து,
    திருப்தி அடைந்து,
    பேரம் பேசி,
    ஒரு வழியாக பொம்மையை வாங்கி,
    கையில் எடுத்துக்கொண்டு பார்த்தால் —  

    குழந்தையைக் காணோம் !

    குழந்தை, குழந்தை !
    ஐயோ என் குழந்தை !
    தேடினேன், தேடினேன்.

    கடைசியில் ஏதோ ஒரு கடையில்
    இதுவரை நான் ஒதுக்கி வந்த
    பொம்மைகளில் ஒன்றை
    கையில் வைத்துக்கொண்டு
    குழந்தை சிரித்துக் கொண்டிருக்கிறாள்

    குழந்தை ஆசைப்பட்டது என்று
    கடைக்காரர்
    இனாமாகக்  கொடுத்து விட்டார் போலும்

     பொம்மை என்பதற்குப் பதிலாக மாப்பிள்ளை என்று வாசிக்கலாமா ?

    உங்கள் இஷ்டம்.                                                                                                                                   

    Share
  • ஒரு புறம் வேடன்…மறு புறம் நாகம்!

     

    முகில் தினகரன்

    அந்த பங்களா வீட்டின் முன் வெள்ளிங்கிரி வாத்தியார்; வந்து நின்ற போது அதிகாலை ஐந்து மணி.  பக்கத்துத் தெரு கோவிலிலிருந்து சுப்ரபாதம் காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தது.  இருட்டு விலகாத அந்தத் தெரு வெறுமையாயிருந்தது.  அவ்வப்போது ஒன்றிரண்டு பால்காரர்கள் மட்டும் சைக்கிள் மணியை ஒலித்தபடி கடந்து சென்றனர்.

    “கவுன்சிலரய்யா எந்திரிச்சுட்டாரா?” கேட்டிலிருந்த வாட்ச்மேனிடம் சன்னமான குரலில் கேட்டார் வெள்ளிங்கிரி வாத்தியார்.

    “ம்…ம்…எந்திரிச்சுட்டார்…ஆனா…ஏழு மணிக்கு மேலதான் ஜனங்களைப் பார்ப்பாரு…அப்படிப் போய் ஓரமா நில்லுங்க…அவரு ஆபீஸ் ரூமுக்கு வந்ததும் நானே கூப்புடறேன்!” அந்த நேரத்தில் கூட அவன் வாயில் பீடி.

    “ஹூம்…கவுன்சிலர் வீட்டு வாட்ச்மேனுக்குக் கூட மனசுல கலெக்டர்ன்னு நெனப்பு!” தனக்குள் சொல்லிக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து காம்பெளண்ட் சுவரோரம் ஒண்டி நின்று கொண்டார்.

    பொழுது ‘பல…பல”வென விடிந்து தெருவில் ஜன நடமாட்டம் ஆரம்பித்ததும் மறுபடியும் வாட்ச்மேனிடம் வந்தார் வாத்தியார் “அய்யா…ஆபீஸ் ரூமுக்கு வந்துட்டாரா?”

    “யோவ் பெருசு!…அதான் சொன்னேனில்ல?..ஏழு மணிக்கு மேலதான்னு…சும்மா வந்து எதுக்கு தொண தொணக்கறே?” எரிந்து விழுந்தான் வாட்ச்மேன்.

    “அப்படியா சார்?…கொஞ்சம் கையைத் தூக்கி மணியைப் பாருங்க சார்!” வாத்தியார் கிண்டலாய்ச் சொல்ல

    வாட்ச்மேன் சட்டென்று மணியைப் பார்த்தான்.  7.20.

    “அது வந்து…இப்ப வந்துடுவார்…நீங்க இப்படியே நேராப் போயி…அதோ அந்த  போர்ட்டிகோவுக்கு இடது பக்கம் ஒரு ரூம் தெரியுது பாருங்க?…அங்க வெய்ட் பண்ணுங்க!”

    மெலிதாய்ச் சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்த வாத்தியார் அவன் காட்டிய அறையைத் தொட்டு அதன் வாசலில் கிடந்த நாற்காலியில் அமர்ந்தார்.

    உள்ளே கவுன்சிலர் யாருடனோ பேசிக் கொண்டிருந்தது இங்கே கேட்டது.

    தன்னைப் பார்த்தும் பார்க்காதது போல் நடந்து சென்ற வேலைக்காரனை வலிய அழைத்துச் சிரித்தார் வௌளிங்கிரி வாத்தியார்  அவனும் வேண்டா வெறுப்பாய் ஒரு சிரிப்பை எறிந்து விட்டுச் சென்றான்.

    அறைக்குள் சென்ற அந்த வேலைக்காரன் “அய்யா…அந்த வாத்தியார் வந்திருக்காரு?” என்றான் கவுன்சிலரிடம்.

    “யாரு?…அந்த ஸ்ட்ரீட் லைட் சிகாமணியா?” கேட்டு விட்டு வாய் விட்டுச் சிரித்தார் கவுன்சிலர்.

    தான் குடியிருக்கும் தெருவுக்கு தெரு விளக்கு கோரி தினமும் நடையாய் நடப்பதால் அவருக்கு அந்தப் பெயரை வைத்திருந்தார் கவுன்சிலர்

    “ஆமாங்கய்யா…அதே வாத்தியார்தான்!” சொன்ன வேலைக்காரன் முகத்திலும் ஒரு இளக்காரப் புன்னகை.

    “நான் இல்லேன்னு சொல்லிடுப்பா!”

    “அப்படிச் சொல்ல முடியாதுங்கய்யா…ஏன்னா உங்க பேச்சுக்குரல் அதுவரைக்கு நல்லாவே கேட்குதுங்கய்யா!”

    “ப்ச்…அட என்னய்யா?…”சலித்துக் கொண்டவர் “சரி…வரச் சொல்லு!” என்றார்.

    “வணக்கம்” தன் கணீர் குரலில் சொல்லியபடியே உள்ளே வந்த வௌளிங்கிரியை அமரச் சொன்னார் கவுன்சிலர்.

    அமர்ந்தவர் “தெரு விளக்கு கேட்டு மனு கொடுத்திருந்தேன்…கிட்டத்தட்ட மூணு மாசமாச்சு…ஒரு பதிலும் இல்லை..கெணத்துல போட்ட கல்லாட்டமிருக்கு!”

    “பெரியவரே…நீங்க இன்னும் உங்க காலத்துலேயே இருக்கீங்க!…உங்களுக்குப் பிறகு மனு குடுத்தவங்கெல்லாம் தெரு விளக்கு வாங்கிட்டாங்க தெரியுமா?”

    ‘தெரியும்….அது தெரிஞ்சுதான் கேக்கறேன்”

    “இங்க பாருங்க பெரியவரே!….நானே கவுன்சிலர்ன்னுதான் பேரு!…எனக்கு எந்தப் பவருமே கெடையாது!…நீங்க குடுக்கற மனுவை உங்க சார்புல கொண்டு போய் கார்ப்பரேஷன்ல கொடுக்கறேன்!…அவங்க சாங்ஷன் பண்ணிக் குடுத்தா வாங்கிட்டு வந்து தர்றேன்!…அவ்வளவுதான்!”

    “அப்ப மத்தவங்களுக்கு சாங்ஷன் பண்ணின கார்ப்பரேஷன் எங்களுக்கு ஏன் பண்ண மாட்டேங்குது?”

    “நீங்க செய்ய வேண்டிய ஃபார்மாலிட்டீஸ் செய்யலை…அதான்!”

    “அதென்ன ஃபார்மாலிட்டீஸ்?” அப்பாவியாய்க் கேட்டார் வௌளிங்கிரி வாத்தியார்.

    “என்ன பெரியவரே….தெரியாத மாதிரி கேக்கறீங்க?….சம்திங்  வெட்டணும் தலைவா!.அப்பத்தான் காரியம் ஆவும்!…ஈஸ்வரன் கோயில் வீதிக்காரங்க வீட்டுக்கு அம்பது…நூறுன்னு வசூல் பண்ணி என் கிட்டக் குடுத்தாங்க!…அதைக் கொண்டுதான் நான் அவங்களுக்கு சாங்ஷன் வாங்கினேன்!”

    “அப்ப லஞ்சம் குடுத்தாத்தான்..காரியமாகும்!…அப்படித்தானே?” வெள்ளிங்கிரி வாத்தியார் முகத்தில் எரிமலை உக்கிரம்.

    “அதுல துளிக்கூட சந்தேகமில்லை!”

    “தேவைதான்…உனக்கு ஓட்டுப் போட்டு உன்னைய கவுன்சிலராக்கினோம் பாரு!…எங்களுக்கு இதுவும் தேவைதான்…இன்னமும் தேவைதான்!”

    “ஹலோ…நல்லாப் புரிஞ்சுக்கங்க…நீங்க எத்தனை மாசம் நடையா நடந்தாலும்..காசு குடுக்காம அங்க காரியம் நடக்காது…வீணா எதுக்கு நேரத்தையும் எனர்ஜியையும் வேஸ்ட் பண்ணறீங்க!”

    “பாக்கறீங்களா…அஞ்சு பைசா கூடக் குடுக்காம தெரு விளக்கு போட்டுக் காட்டறேன் பாக்கறீங்களா?” சொல்லி விட்டு வேகமாய் எழுந்தார் வௌளிங்கிரி வாத்தியார்.

    “அடடே…சவாலா?” கவுன்சிலர் முகத்தில் சிரிப்பு.

    “அப்படியே வெச்சுக்கங்க!” விருட்டென வெளியேறினார்.

    ****

    அடுத்த வாரத்தில் ஒரு நாள்

    விஸ்கியின் உபயத்தால் அரை மயக்கத்திலிருந்த கவுன்சிலரை போன் தொந்தரவு செய்தது. “ச்சை!” சலித்துக் கொண்டே எழுந்து “ஹ…ல்…லோ…வ்!” என்றார் குழறலாய்.

    மறுமுனையில் மேயர்.

    “சார்…வணக்கம் சார்!…சொல்லுங்க சார்!”

    “என்ன ரகுபதி…உங்க வார்டுல என்ன பிரச்சினை?”

    “பிரச்சினையா?…ஒண்ணுமில்லையே!”

     
    “என்னய்யா…ஒண்ணுமில்லைன்னு வெகு சாவகாசமாச் சொல்லுறே…அங்க ஒரு பெருசு….நாலஞ்சு நாளா உண்ணாவிரதமிருந்து இப்பவோ…அப்பவோன்னு கெடக்குதாம்”

    “அது…வந்து சார்…நான் அஞ்சாறு நாளா ஊர்ல இல்லை…இன்னிக்கு காலைலதான் வந்தேன்…அதான் விபரம் தெரியலை…விசாரிக்கறேன் சார்!”

    “நீயொண்ணும் விசாரிக்க வேண்டாம்…நானே விசாரிச்சிட்டேன்…யாரோ ஒரு வாத்தியாராம்…தெரு விளக்கு கேட்டு மனு கொடுத்தாராம்… இழுத்தடிச்சிருக்கீங்களாம்…ஏன்?”

    “ஆமாம் சார்…வர வேண்டியதெல்லாம் வரலை…அதான்…

    “வேண்டாம்யா…விஷயம் பெரிசாயிருச்சு…பிரஸ்காரங்களும்…லோக்கல் டி.வி.க்காரங்களும்…. அந்தாளைப் பத்தி செய்தி போட்டு அவனை ஹீரோவாக்கிட்டாங்க!…. ஜனங்களும் ஓரளவுக்கு விஷயம் புரிஞ்சுக்கிட்டாங்க…இனி பைசாவை எதிர்பார்த்தா விஷயம் கோட்;டை வரை கூடப் போய்டும்..அதனால விட்டுடு!…”

    “சார்…கார்ப்பரேஷன்ல…கமிஷனர்கிட்ட….”

    “அவங்ககிட்டயெல்லாம்…நான் சொல்லிக்கறேன்…நீ உடனே புறப்பட்டு வா!…நாம ரெண்டு பேருமே போயி அந்தப் பெரிசைப் பார்த்துப் பேசி…உண்ணாவிரதத்தை முடிக்கச் சொல்லிடலாம்!”

    “சரி சார்!..நான் இப்ப வந்துடறேன் சார்!”

    மேயரும் கவுன்சிலரும் நேரில் வந்து ஒரே வாரத்தில் தெருக்கு விளக்குப் போட்டுக் கொடுப்பதாக உறுதியளித்த பின்னரே தன் உண்ணாவிரதத்தைக் கை விட்டார் வௌளிங்கிரி வாத்தியார்.
     
    இது நம்ம நாடுதானா?” என்று எல்லோருமே வியக்கும் வண்ணம் மறுநாளே தெருவிளக்குப் போடும் பணி ஆரம்பமாக வௌளிங்கிரி வாத்தியாரின் புகழ் நாலாப்புறமும் பரவியது.  மீடியாக்கள் அவரை எவரெஸ்டில் கொண்டு போய் அமர்த்தி வைத்தன.

    ****

    வெயிலுக்கு குடை பிடித்தபடி நின்று மேற் பார்வை பார்த்துக் கொண்டிருந்த கார்ப்பரேஷன் அதிகாரியை கண் ஜாடை காட்டி அழைத்தான் தியாகு. வெள்ளிங்கிரி வாத்தியாரின் ஒரே மகன்.

    தயங்கியபடியே வந்த அந்த நபர் “என்ன சார்?..என்ன விஷயம்?”

    “அது…வந்து…உங்ககிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்!”

    “பரவாயில்லை இங்கியே சொல்லுங்க!”

    “வந்து…நம்ப வீட்டு வாசலை ஒட்டி ஒரு தெரு விளக்கு போடணும்….நீங்க மனசு வெச்சா முடியும்!…ஹி…ஹி..” அசிங்கமாய்ச் சிரித்த அவனை அருவருப்பாய்ப் பார்த்த அந்த அதிகாரி.

    “எது…உங்க வீடு?” கேட்டார்.

    “அதோ…அதுதான்!”

    தியாகு காட்டிய வீட்டைத் திரும்பிப் பார்த்த அதிகாரி கண்களால் அளந்து விட்டு உதட்டைப் பிதுக்கினார். “ம்ஹூம்….அந்த இடத்துல வராது!….கொஞ்சம் தள்ளித்தான் வரும்!…” என்றார்.

    “தெரியும் சார்…அது தெரிஞ்சுதான் உங்ககிட்ட வந்திருக்கேன்!…ஹி…ஹி”

    “சரி..இப்ப நான் என்ன பண்ணனும்கறே?”

    “கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணனும்”

    “புரியலை”

    “நீங்க எதையும் கண்டுக்காம…நம்ம வீட்டு வாசல்ல ஒரு விளக்குக் கம்பத்தைப் போடுங்க!…நான் வேணா உங்களைத் தனியா கவனிக்கறேன்….ஹி…ஹி”

    அதுவரையில் உறுதியாயிருந்த அந்த அதிகாரி மெல்ல மெல்ல நிறம் மாறத் துவங்கினார்.

    “அது…வந்து எனக்கு மேலதிகாரி ஒருத்தர் இருக்கார்…அவரு இன்ஸ்பெக்ஷன் ரிப்போர்ட்டுல “ஓ.கே!”ன்னு கையெழுத்துப் போடணும்…அதுக்கு அவரையும் சரிக் கட்டணும்!”

    “அதென்ன…பண்ணிட்டாப் போச்சு!” வௌ;ளிங்கிரி வாத்தியார் மகன் அசிங்கமாய்ச் சிரித்தபடி சொன்னான்

    “சரி..சரி..ஆளுங்க பார்க்கறாங்க…நாம பேசிட்டு நிக்கறதைப் பார்த்தா சந்தேகப்படுவாங்க…நீங்க நகருங்க…நான் பார;த்துக்கறேன்!” அந்த அதிகாரி பணத்தாசை வசமாகிச் சொல்ல

    நகர்ந்தான் வௌளிங்கிரி வாத்தியார் மகன் தியாகு.

    ****

    சோடியம் வேப்பர் ஒளியில் அந்தத் தெரு கெஜ்ஜோதியாகக் காட்சியளித்தது.

    லேசான மழைத் தூறலும் இதமான குளிர் காற்றும் அந்த அழகுக்கு இனிமை சேர்த்துக் கொண்டிருக்க,

    நடந்து கொண்டிருந்த வௌளிங்கிரி ஆசிரியரின் நெஞ்சம் நிறைந்திருந்தது. “ஆஹா….எத்தனை வருஷக் கனவு…இன்னிக்கு நிறைவேறியிருக்கு….. ஹூம்…இதை நிறைவேத்தறதுக்குள்ளாரதான் எத்தனை தடைகள்…எத்தனை தடங்கல்கள!”

    தன் வீட்டு வாசலை அடைந்தவர் அங்கு நின்று கொண்டிருந்த மகனிடம் “பாத்தியாடா…நம்ம தெருவை?…”

    “ம்..ம்..பார்த்தேன்..பார்த்தேன்…”

    “இந்தத் தெருவுக்கு தெரு விளக்கு கெடைச்சதுகூட எனக்கு பெரிய சந்தோஷமில்லை….ஒரு பைசா கூட லஞ்சம் குடுக்காம இதை வாங்கினேன் பாரு அதுதாண்டா பெரிய சந்தோஷமாயிருக்கு!….….அதாவது…மக்கள் நெனச்சா…மக்கள் மனசு வெச்சு உறுதியா எதிர்த்து நின்னா இந்த நாட்டுல எல்லா இடத்திலுமே புரையோடிக் கெடக்கற லஞ்சம்ங்கற புற்று நோயை கண்டிப்பா அழிச்சிடலாம்னு தெரியுது…என்ன நான் சொல்றது…?” அப்பாவியாய்க் கேட்டார் வௌ;ளிங்கிரி வாத்தியார்.

    தர்ம சங்கடமாய் விழித்த அவர் மகன் தியாகு “அது…வந்து…ஆமாம்…ஆமாம்ப்பா!” என்றான் திக்கித் திணறி.  அப்போது அவன் பார்;வை அவனையுமறியாமல் தன் வீட்டு வாசலில் ஒளி வீசிக் கொண்டிருந்த அந்த சோடியம் வேப்பா; மின் விளக்கு அண்ணாந்து பார்த்தது.

    (முற்றும்)

     

    Share