விசாலம்

ஆறுமுகம் அவதரித்த  சுப நாள் இது
கார்த்திகை மாதத் திருநாள் இது
தீபங்கள்   ஏற்றும் நன்னாள் இது 
சிவன் . சக்தி சேர்ந்த  பொன்னாள் இது,

பரணி தீபம் எங்கும் சுடர
கார்த்திகைத் தீபம் மறுநாள் ஒளிர,
அண்ணாமலையில்  விளக்குகள் மின்ன ,
மக்கள் கடலலை  மோதி வழிய ,
ரதோத்சவம் சக்கைப்போடு போட ,
ரிஷப வாஹனத்தில் சிவனும் அமர
அண்ணாமலையார்  பல்லக்கில் ஆட
அர்த்தநாரீஸ்வரருக்கு  தீபார்த்தனைக்காட்ட
கூடவே அண்ணாமலை ஜோதியும்  எரிய
எங்கும் கோஷம் எங்கும் பரவசம் .
எங்கும் உத்சவம்  எங்கும் உத்சாஹம் ,
அண்ணாமலையானுக்கு  அரஹரோஹரா  ‘
ஓம் நமசிவாய ,ஓம் நமசிவாய ,
நாமும் சேர்ந்து   முழங்குவோம்
அவன் தாளைப் பற்றுவோம் ,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

படத்திற்கு நன்றி :

http://www.maalaimalar.com/2012/11/26141612/thiruvannamalai-karthigai-deep.html

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அண்ணாமலை தீபம்

  1. அண்ணாமலையானை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறீர்கள். நன்றி. அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.