விண்வெளியின் முற்றத்தினுள்ளே
நட்சத்திரக் கோலங்களின் வழியே
தவழ்ந்துவரும் முழுநிலவே!
யாரைக் கேட்டு இங்கு வந்தாய்?
நீ இருக்க நான் பார்த்தது
அவள் முகம்தானே!
அவள் அனுமதித்தே வந்தாயா
இல்லை அழவைத்து வந்தாயா?
அவளிடத்தில் இல்லையேல் நீ அழகில்லை
உன் அழகே அவள் தானே
நீயில்லாமல் அவளைப் பார்க்கலாம்
அவளில்லாமல் உன்னை….
அழகிற்கு மறுபெயர் அவள்
அவளுக்கு பின் தானே நீ!
நீ தரும் வெளிச்சமே அவள்தானே
அவளில்லாமல் நீ இல்லை,
ஏன்!
நானும் இல்லை.
படத்திற்கு நன்றி


Leave a Reply