Blog

  • இ‌ந்த‌ச் செலவு தேவை தானா? | மினிமலிசம் என்றால் என்ன?

    இ‌ந்த‌ச் செலவு தேவை தானா? | மினிமலிசம் என்றால் என்ன?

    அளந்து செலவிடு, சிறுகக் கட்டிப் பெருக வாழ், சிக்கனமாய் இரு போன்றவை எல்லாம் எங்கோ கேட்டாற்போல் இருக்கிறதா? நம் முந்தைய தலைமுறை வரைக்கும் இதுவே இயல்பான வாழ்க்கை முறையாக இருந்தது. இன்றைய நுகர்வுக் கலாசாரத்தில் பொருள்களை வாங்கிக் குவிக்கிறார்கள். ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிகிறார்கள். தாம்தூம் செலவுகள் ஏராளம். இந்நிலையில், மினிமலிசம் என்பது ஓர் இயக்கமாகப் பரவி வருகிறது. இதன் அடிப்படை என்ன? இந்தச் செலவு தேவைதானா என நம்மை நாமே ஏன் கேட்க வேண்டும்? வாங்கிக் குவிக்கும் மோகத்திலிருந்து விடுபடுவது எப்படி? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சென்னியோங்கு 5 & 6 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    சென்னியோங்கு 5 & 6 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் அருளிய விருத்தம், சென்னியோங்கு. இதில் தம் இதயத்துள் எம்பிரான் மலர்ந்த அருட்கோலத்தை அழகுற விவரிக்கிறார். இதன் ஐந்தாம், ஆறாம் பாடல்களை நீலமேகம் குழுவினர் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இந்திய மோனா லிசா

    இந்திய மோனா லிசா

    சி. ஜெயபாரதன், கனடா

    இந்திய மோனா லிசா

    மொட்டு முறுவல் பூக்கும் மோனா லிசா
    மேல் வைத்த விழிகள் மீளா காவியம்.
    காந்த முகம்  ஈர்க்கும் ஆயிரம்  இதயம்
    இந்திய மோனா லிசா  உயிர் ஓவியம்.

    மொட்டு முறுவல் பூத்த குஷ்பூ
    கட்டான மேனி வாலிப வனப்பூ
    காந்த விழிகள் பூத்த களிப்பு
    ஊர்வசி, மேனகா ஓவியப் படைப்பு

    பாரத மோனா லிசா ஓவியம் வரைய
    பூரண ரவி வர்மா பிறப்பார் ஒருநாள்
    மைக்கேல் ஆஞ்சலோ கையால் வரைய
    பாரத பன்னிறத் தூரிகை தேவை

    ****************

    உலக மோனா லிசா

    உலக மோனா லிசா  உதட்டில்
    புன்னகை பூக்க வில்லை  மெய்யாய்,
    நளினம்  இல்லை,  மலர்ச்சி இல்லை.
    களிப்பு இல்லா, கடுமை  ஓவியம் !

    Share
  • திக்குவாய் கண்டிப்பாகக் குணமாகும் | ஹரிப்ரியா

    திக்குவாய் கண்டிப்பாகக் குணமாகும் | ஹரிப்ரியா

    திக்குவாய் கண்டிப்பாகக் குணமாகும். நான் திக்குவாயிலிருந்து குணமாகி, இப்போது திக்குவாய் உள்ளவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறேன் என்கிறார் ஹரிப்ரியா. தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தில் ஒலித்த இவரது அசத்தல் பேச்சு இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • செண்டை மேளம்

    செண்டை மேளம்

    கவிஞர் ஆசுவின் மகள் சு.பிரியா – அருண் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் அருண்வர்ஷன் ஆகியோரின் திருமண வரவேற்பு, இன்று சென்னை, கோவிலம்பாக்கத்தில் விமரிசையாக நடைபெற்றது. நண்பர்கள் பலரையும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கே சந்தித்து மகிழ்ந்தேன். இதில் மண்டபத்தின் வாயிலில், செண்டை மேளம் முழங்க வரவேற்றனர். அந்த அதிரடி இசையின் ஒரு பகுதி இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • டாக்டர் ஆர்.சந்திரசேகர் நகைச்சுவை உரை

    டாக்டர் ஆர்.சந்திரசேகர் நகைச்சுவை உரை

    டாக்டர் ஆர்.சந்திரசேகர், இந்தியக் கடற்படையில் பணியாற்றியவர், முனைவர், பேராசிரியர், தலைமை ஆசிரியர், எழுத்தாளர், நடிகர் எனப் பன்முகத் திறமை படைத்தவர். தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் ஜூன் மாதக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். நகைச்சுவையின் சிறப்பு என்ற தலைப்பில் இவர் வழங்கிய நயமான உரை இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குறளின் கதிர்களாய்…(457)

    குறளின் கதிர்களாய்…(457)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(457)

    வேட்பன சொல்லி வினையில வெஞ்ஞான்றுங்
    கேட்பினுஞ் சொல்லா விடல்.

    -திருக்குறள் -697(மன்னரைச் சேர்ந்தொழுகல்)

    புதுக் கவிதையில்…

    அரசர் விரும்பும்
    ஆட்சிக்குப் பயன்தரும் செய்திகளை,
    அவர் கேட்காதபோதும்
    சொல்ல வேண்டும்,
    அவரே கேட்டாலும்
    பயன்தராத செய்திகளை
    அவரிடம் சொல்லாமல்
    விட்டிட வேண்டும்…!

    குறும்பாவில்…

    அரசர் விரும்பும் செய்திகளை
    அவர் கேட்காதபோதும் சொல்லவேண்டும், பயன்தராதவற்றை
    அவரே கேட்டாலும் சொல்லவேண்டாம்…!

    மரபுக் கவிதையில்…

    நாட்டை யாளும் மன்னனவன்
    நாடிக் கேட்கா நிலையினிலும்
    ஆட்சிக் குதவும் செய்திகளை
    அவரே யறியச் சொல்லவேண்டும்,
    நாட்டுக் கேதும் பயன்தராத
    நலமே யில்லாச் சேதிகளைக்
    கேட்ட போதும் சொலவேண்டாம்
    கெடுத லில்லை யதனாலே…!

    லிமரைக்கூ…

    நலந்தரும் செய்திகளைச் சொல்லு
    நாட்டரசர் கேட்காதபோதும், பயன்தராதவற்றை அவரே
    கேட்டாலும் சொல்லாதே நில்லு…!

    கிராமிய பாணியில்…

    சொல்லணும் சொல்லணும்
    நல்ல சேதியாச் சொல்லணும்,
    நாட்டு ராசாகிட்ட சொல்லணும்..

    ராசாவுக்கு விருப்பமான
    நாட்டுக்கு நன்ம தருற சேதியள
    அவுரு கேக்கல்லண்ணாலும் சொல்லணும்,
    நன்மயே தராத சேதியள
    ராசாவே கேட்டாலும்
    சொல்லப்பிடாது..

    எப்பவும்
    சொல்லணும் சொல்லணும்
    நல்ல சேதியாச் சொல்லணும்,
    நாட்டு ராசாகிட்ட சொல்லணும்…!

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 13

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 13

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


     

     

    Share
  • முதியோர் காப்பக  நுழைவு அனுபவம் – 2

    முதியோர் காப்பக நுழைவு அனுபவம் – 2

    சி. ஜெயபாரதன், கனடா

    படிப்பினை-2 முதியோர் இல்லப் புலப்பெயர்ச்சி – தவிர்க்க முடியாத ஒரு சிறை அடைப்பு

    ரிவெல்லா முதியோர் இல்லத்தில் 50 பேர் தனித்தனி அறைகளில் ஐந்தாறு மாதங்களோ, ஓரிரு வருடங்களோ வசித்து வருகிறார். தம்பதிகள் ஒரு பெரும் அறையிலே தங்கி இருக்கிறார்.  சேர்ந்த முதல் நாள் காலை  உணவு தின்னக் கூடியிருந்த குழுவுக்கு ஹாலில் நான் அறிமுகம் செய்யப்பட்டேன். சேர்ந்த சில தினங்கள் யாரும் என்னைப் பாராதவர் போல் நடந்துகொண்டார். நான் செவ்வாய்க் கோளில் முதன்முதல் தடம் வைத்தது போல் ரிவெல்லா இல்லத்தில் உணர்ந்தேன்.  சில நாட்களில் சில மாதர், வயோதிகர் என்னைப் பேர் சொல்லி அழைத்தார்கள்.

    உணவு, உறவு, ஓய்வு இம்மூன்றும் முதியோர் இல்லத்தில் ஒருவர் வசிக்க முணுமுணுக்கும் தாரக மந்திரம். இம்மூன்றில் எது ஒன்று முதியோர் இல்லத்தில் ஒருவருக்கு நீண்ட காலம் குன்றி விடுகிறதோ அப்போது  அவரது மனம் மீளாதபடி  உடைகிறது! படாத பாடு படுகிறது.  பழமொழி: உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே. எந்த உணவு?   ஒருவருக்குப் பிடித்த உணவு.  தினமும்  மூன்று வேளை காலை 8 மணி, பகல் 12 மணி, மாலை 5 மணிக்கு உணவு தயாராகி அனைத்து முதியோரும் ஒருங்கே அமர்ந்து ஹாலில் உண்கிறார்.

    வட அமெரிக்க மாமிச உணவுகள் பலவகை, இந்தியருக்குப் பிடிப்பதில்லை. யாராவது வீட்டில் இந்திய உணவு [அரிசி சாதம், சாம்பார் சப்பாத்தி, குருமா] சமைத்து ஒரு சில தினங்கள் உண்ணலாம். ஆனால் அந்த வசதி நீடிப்பதில்லை. இட்லி, தோசை, உப்புமா, அரிசி சாதம், சாம்பார், புலாவ், தயிர் சாதம் சுவையாக உண்ட தமிழருக்கு உணவு ஒன்றே தீராத முதல் பிரச்சினையாகி விடுகிறது.

    அடுத்தது உறவு. அதாவது ஆண்-பெண் நெருக்க உறவு. [intimate mates] ரிவெல்லா முதியோர் இல்லத்தில் சேர்ந்தது முதல் என்னைக் கொல்லாமல் கொன்றது தனிமை உணர்வு.  மனைவி இறந்த பிறகு, மூன்று தனிப்பட்ட மாதரை அணுகி உடன்வாழ நேராகவே கேட்டேன், துணையாக வாழ்வதற்கு.  அவரை மணந்து கொள்ளவும் தயார் என்றும் சொன்னேன்.. ஒரு மாது, கணவனை இழந்தவர், மும்பையில் வாழ்ந்த [1959-2009] போது நன்கு பழக்கமான தமிழ் மாது. 65 அல்லது 70 வயது இருக்கலாம். அந்த வயதிலும் அழகிய கவர்ச்சி மாது. இனிய குரல். கணவர் சகோதரன் போல் என்னை நடத்திய நண்பர்.  கனடாவில் வாழ்பவர். ஆனால் நான்  எவ்வளவோ முயன்றும் என்னை மணக்க மறுத்துவிட்டார். ஒருத்திக்கு ஒரு கணவன் தான் ஒரு திருமணம் தான், என்ற கொள்கை உடையவர்.

    அடுத்த மாது, பஞ்சாபிப் பெண் 60 அல்லது 65 வயதிருக்கலாம்.  மிகவும் பழக்கமான பஞ்சாபி நண்பர் மனைவியின் தங்கை. திருமணம் ஆகாத மாது.  கனடாவில் தமையனுடன் வசிப்பவர்.  நேராக நான் மணந்துகொள்ள முயன்றும் நண்பரின் மனைவி அதற்கு உடன்படவில்லை.

    எழுபது, எண்பது வயதில ஆணுக்குப் பெண்ணுறவு, பெண்ணுக்கு ஆண் உறவு, மிகவும் தேவைப்படுகிறது.  Reach out & love someone, touch someone. Body heat, intimate relations.  உடல் உறவல்ல, உடல் நெருக்கம் முதியோர் இருபாலாருக்கும் அவசியம் கிடைக்க வாய்ப்புகள் அமைய வேண்டும்.  வயிற்றுப் பசி, அடுத்தது உடற்பசி இந்த இரண்டு மனித இச்சைகள் முதியோருக்குப் பூர்த்தியாக வேண்டும்.  தனிமையில் தவித்து இறக்கும் முதியவர் அநேகம். மகாத்மா காந்தி, ஈவேரா பெரியார், டாக்டர் அம்பேத்கார், போன்றோர் ஒருசில உதாரணங்கள்.

    [தொடரும்]   

    Share
  • மொரீசியஸ் நாட்டில் ஒரு கைலாசம்

    லண்டன்வாழ் தமிழ்க் கவிஞர் சக்தி சக்திதாசன், அண்மையில் மொரீசியஸ் நாட்டுக்குச் சென்று வந்தார். இதன் தலைநகரான போர்ட் லூயிஸ் பெருநகரில் கயிலாயம் (கைலாசம்) என்ற பெயரில் சிவன் கோவில் உள்ளது. சொக்கலிங்கம் மீனாட்சி அம்மன் கோவில் என்றும் இதனை அழைப்பர். இந்தக் கோவிலுக்குச் சென்று வணங்கிய சக்திதாசன், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற அடிப்படையில் நாமும் இதைக் காண, பதிவு செய்து அனுப்பியுள்ளார். இந்த அழகிய கோவிலுக்குள் இதோ ஓர் உலா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வேலைன்னு வந்துட்டா ஜப்பான்காரன்

    வேலைன்னு வந்துட்டா ஜப்பான்காரன்

    வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என மோனைக்காகச் சொல்வது உண்டு. உண்மையில் அதை வேலைன்னு வந்துட்டா ஜப்பான்காரன் என்று தான் சொல்ல வேண்டும். ஜப்பானியர் வேலை அணுகுமுறை எத்தகையது? மற்றவர்களிடமிருந்து எப்படி வேறுபட்டது? அமெரிக்கர்கள், ஜப்பானியரைப் பார்த்து வியந்த பண்பு எது? ஜப்பானியர்களின் அதிவேக வளர்ச்சிக்கான அடிப்படை என்ன? ஜப்பானிய நிறுவனத்தில் பணியாற்றிய தமது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார், கோவை லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சென்னியோங்கு 3 & 4 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    சென்னியோங்கு 3 & 4 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் அருளிய விருத்தம், சென்னியோங்கு. இதில் தம் இதயத்துள் எம்பிரான் மலர்ந்த அருட்கோலத்தை அழகுற விவரிக்கிறார். இதன் மூன்றாம், நான்காம் பாடல்களை நீலமேகம் குழுவினர் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • முதியோர் காப்பக  நுழைவு அனுபவம் – 1

    முதியோர் காப்பக நுழைவு அனுபவம் – 1

    RVilla Senior Home

    விக்கலோ கக்கலோ வேதனைச் சிக்கலோ
    பொக்கெனப் போகும் உயிர்.

    சி. ஜெயபாரதன், கனடா

    ரிப்லி முதியோர் காப்பில்லத்தில் என்னைச் சேர்த்து நாலு வாரம் ஆகிறது. சொல்லப் போனால் அது ஒரு முதுமைச் சிறை வாசம் தான்.  அங்குப் போக மாட்டேன் என்று சின்னப் பிள்ளை போல் மகளிடம் பன்முறை தர்க்கம் புரிந்தேன்.  மனைவி இறந்த பின் என் இல்லத்தில் இதுவரை தனியாக, சுதந்திரமாக, இனிதாக வாழ்ந்த நாட்கள், இனிமேல் திரும்பி வருமோ?  பார்க்கின்சன் முடக்குவாத நோய் பத்து ஆண்டுக்கு மேல்  என்னை ஆக்கிரமித்துக்கொண்டு வேதனை தாங்க முடியாமல் தவித்து வருகிறேன்.  அத்துடன் அடுத்து மாரடைப்பு வேறு என்னை எதிர்பாராத நேரத்தில் தாக்கிவிட்டது.  எனக்கு 911 எண்ணை அடித்து அவசர வாகன ஆம்புலன்சைக் கூப்பிட கையில் வலுவில்லை.  தடுமாறி எப்படியோ எதிர்த்த வீட்டு நண்பரை போனில் அழைத்ததும், அவர் பக்கத்து வீட்டு நண்பருடன் ஓடிவந்தார். இருவரும் என் நிலையை நன்கு அறிந்தவர்கள்.  ஒருவர் 911 எண்ணை அடித்து  டெலிபோன் மாதுக்கு என் நிலையை விளக்கினார். ஐந்து நிமிடத்தில், ஒரு வாகனம் வந்து நின்றது. நான் மூச்செடுப்பு குன்றி பேஸ்ட், பிரஸ், சேவர், மெடிகல் கார்டு, மருந்து பில்ஸ் லிஸ்ட் மற்றும் தேவையான உடைகளை மெதுவாய் பையில் எடுத்துக்கொண்டு ஆம்புலன்சில் நானே ஏறினேன்.  மீண்டும் இந்த வீட்டுக்கு வருவேனா என்பது கேள்விக்குறியானதால்,  திரும்பவும் ஒருமுறை என்னில்லத்தைப் பார்த்துக்கொண்டேன்.  எனக்கு மாரடைப்பு வந்துள்ளதை அப்போது நான்  அறியவில்லை.

    படிப்பினை – 1: முதுமையில் நலமாக உள்ள போதே அவசர உடல் நிலைக்குத் தயாராக இரு

    மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் பறந்தது. நண்பர் என் சின்ன மகளுக்குத் தகவல் கொடுத்தார் போனில். சுதந்திர வீட்டு வாழ்வு தடையாகி, மருத்துவமனைச் சிறையில் ஒரு வாரமோ பல வாரமோ, சிக்கிக்கொள்ள இடர்களை இடையூறுகளை தாங்கிக்கொண்டேன்.  தினமும் இரத்த சோதனை. 15 பவுண்டு எடை எப்படியோ போய், எடுக்க இரத்தமில்லை. கைகளில் குத்த இடமில்லை. 24 மணி நேரம் நிரந்தர இரத்தம் திணிவு குறைய,  மருந்து வீல் கம்பத்தை இழுத்துக் கொண்டு கழிப்பறை, குளிப்பறை, நடைபாதையில் போவது கண்கொள்ளாக் காட்சி. இருதய மென் தகடு பம்புக்கு இரத்தம் அனுப்பும் குழலில் அடைப்பு.

    அருகில் காற்றுப் பைகள் பழுதாகி, ஆக்சிஜன் சிலிண்டரை இழுத்துக்கொண்டு ஒருவரைப் படுக்கையில் கிடத்தினார்கள். அவர் போட்ட இருமலில் காங்கிரீட் மனையே ஆடியது.  அவரை வேறு பெரிய மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றார்கள், ஒரு வாரத்தில் அவர் இறந்து போனார்.

    ஆராவாரம், அலறல், இருமல் சத்தங்கள் உள்ள மருத்துவ மனையில் 21 நாட்கள் இரவு சரிவரத் தூங்காமல் சுவர்க் கடிகாரத்தைப் பார்த்து எப்போது விடியும் என்று விழித்திருந்தேன். அங்கிருந்து ஓரளவு சுகமாகி, ரிப்லி முதியோர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகிறது.  புது சுற்றுப்புறம்.  45 முதியோர் [ஆடவர், மாதர்]-தங்கி வருகிறார். நான்தான் முதல் தங்கும் தமிழன்.  ஆனாலும்  முதல் சில நாட்கள் தனிமை உணர்ச்சி கொன்றது. பார்க்கின்சன் நோயில் துன்புற்று வரும் நான் இப்போது மாரடைப்பு வந்து, வலுவில்லாமல், கைத்தடி ஊன்றி பெங்குயின் போல் ஊர்ந்து வருகிறேன்.  மருத்துவமனைச் சிறையிலிருந்து இப்போது முதியோர் காப்பு இல்லத்தில் சிக்கிக்கொண்டு உண்டு, உறங்கி, எழுந்து ஊர்ந்து வருகிறேன்.  அது பெரிய சிறை.  நிமிர்ந்து நாலு சக்கர நடப்பு சாதனத்துடன் ஊர்ந்திடும் மனிதன் நான் ஒருவன் தான்  பலர் முதுகு வளைந்து தள்ளாடும் வயோதிகர். அவர்கள் நிலை என்னை விட இரங்கத் தக்கது.

    [தொடரும்]

    Share
  • பாமா கோபாலன் நினைவலைகள் | பட்டுக்கோட்டை பிரபாகர் உரை

    பாமா கோபாலன் நினைவலைகள் | பட்டுக்கோட்டை பிரபாகர் உரை

    சென்னையில் நடைபெற்ற எழுத்தாளர் பாமா கோபாலன் நினைவஞ்சலிக் கூட்டத்தில் பட்டுக்கோட்டை பிரபாகர் ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பாமா கோபாலன் நினைவலைகள் | திருப்பூர் கிருஷ்ணன் உரை

    பாமா கோபாலன் நினைவலைகள் | திருப்பூர் கிருஷ்ணன் உரை

    சென்னையில் நடைபெற்ற எழுத்தாளர் பாமா கோபாலன் நினைவஞ்சலிக் கூட்டத்தில் திருப்பூர் கிருஷ்ணன் ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share