டாக்டர் ஆர்.சந்திரசேகர், இந்தியக் கடற்படையில் பணியாற்றியவர், முனைவர், பேராசிரியர், தலைமை ஆசிரியர், எழுத்தாளர், நடிகர் எனப் பன்முகத் திறமை படைத்தவர். தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் ஜூன் மாதக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். நகைச்சுவையின் சிறப்பு என்ற தலைப்பில் இவர் வழங்கிய நயமான உரை இதோ.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.