- Tuesday, February 14, 2012, 12:46
- இலக்கியம், நறுக்..துணுக்...
நறுக்.. துணுக்..... (14)
இன்னம்பூரான்
மதுரை மாவட்டத்தின் ஊமச்சிக்குளம் போலீஸ், கணவனை அடித்துக் கொன்ற மனைவியை, இ.பி.கோ. 100 என்ற ஷரத்தின் கீழ் , தற்காப்பு - கொலை என்று சொல்லி, விடுவித்தனர். குடும்பத்தினரை தொந்திரவு செய்பவன் என்று போலீஸ் ஆவணங்கள் கூறும் ஜ்யோதி பாசுவுக்கும், அவன் மனைவி உஷா ராணிக்கும் 1995 லிருந்து பிரச்சனைகள் - கிட்டத்தட்ட 20 வருடங்கள். 10.02.2012 அன்று அவன் வீட்டில் புகுந்து, மனைவியை அடித்தான். தன்னுடைய பெண்ணையே கற்பழிக்க முயன்றான். மனைவி அவனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றாள். கிரிக்கெட் மட்டை வாழ்க. சட்டரீதியான ...
Full story
- Tuesday, February 14, 2012, 10:51
- பொது
ஒஸ்தி பட வெற்றிக்குப்பின் பாலாஜி ரியல் மீடியா, ‘சமரன்’ படத்தை தயாரிக்கிறார்கள். விஷால், திரிஷா, மனோஜ் பாஜ்பாய், ஜெ,டி. சக்ரவர்த்தி, அனைவரும் நடிக்க, திரு சினிமாட்டோகிராபி ரிச்சர்ட் எம் நாதன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், விரைவில் வெளிவர இருக்கிறது.
...
Full story
- Monday, February 13, 2012, 6:08
- பொது
கிபிஷேக் பிலிம்ஸ் டினு வர்மா இயக்கத்தில் காட்டுப் புலி
அர்ஜுன் நடிப்பில் பாலிவுட்டில் புகழ்பெற்ற சண்டைக்காட்சி இயக்குனர் டினு வர்மா இயக்கத்தில் காட்டுப்புலி மும்பை மற்றும் அதனைச்சுற்றிய காட்டுப்பகுதிகளைக் கதைக்களமாகக் கொண்டு திகில் நிறைந்த காட்சிகளாக உருவாக்கியுள்ளது.
சமூகத்தைப் பாதுகாக்கும் முக்கியமான மூன்று துறைகளான அரசியல், காவல் மருத்துவம் ஆகியவற்றில் புனிதமான துறையாகக் கருதப்படும் மருத்துவத்துறையில் நுழையும் புல்லுருவிகளால் சமூகத்திற்கு எவ்வளவு ...
Full story
- Friday, February 10, 2012, 5:00
- நறுக்..துணுக்...
கவிநயா
நறுக்... துணுக்......(13)
சில நாட்களுக்கு முன்னால் வெளியூர் போக வேண்டியிருந்தது. வழக்கமாகப் போகிற ஊர் இல்லை, அதனால் வழி எல்லாம் புதுசாக இருந்தது. போகும் போது பரவாயில்லை, ஆனா வரும்போது இருட்டு; எக்கச்சக்க போக்குவரவு; கூடவே மழை வேறே. அதனால வண்டி சாரத்தியம் அத்தனை சுலபமாக இருக்கலை. வழி சொல்கிறவங்க (அதாங்க GPS) அவங்களே தொலைஞ்சு போயிட்டாங்க. அதனால சில சமயம் வழியில் நிறுத்திக்கிட்டு, வரைபடத்தை வச்சு பார்த்துக்கிட்டு, இப்படியே மெதுவா வர வேண்டியதாயிடுச்சு.
இந்த ...
Full story
- Tuesday, February 7, 2012, 11:33
- செய்திகள், பொது
உலகளாவிய கல்விக்கு வித்திடும் சேவாலயா மற்றும் லண்டன் கல்வி முறை திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே உள்ள கசுவா கிராமத்தில் அமைந்துள்ள சேவாலயாவின் மகாகவி பாரதியார் மேநிலைப்பள்ளியில் 06.02.2012 அன்று காலை 10 மணியளவில் பிரிட்டிஷ் கவுன்சிலின் மூலம் உலகளாவிய கல்விக்கு வித்திடும் பாடப் பயிற்சி வகுப்புகள் துவங்கப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் லண்டனைச் சார்ந்த கன்னிகாம் ஹில் பள்ளியின் தலைமையாசிரியர் திரு.ரிச்சர்ட் டாசன் மற்றும் அப்பள்ளியின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
சேவாலயா பள்ளி மாணவர்கள் ...
Full story
- Tuesday, February 7, 2012, 11:09
- சிறப்புச் செய்திகள், பொது
நண்பர்களே,
போட்டியில் கலந்து கொள்ள முடிவு தேதி பிப்ரவரி 10 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்னும் தங்கள் படைப்புகளை அனுப்பாதவர்கள் அனுப்பலாமே. போட்டியின் முடிவுகள் மார்ச் மாதம் முத்ல் வாரத்தில் வெளிவரும். கலந்து கொண்டவர்களுக்கும், கலந்து கொள்ளப் போகிறவர்களுக்கும் வாழ்த்துகள்!
புத்தாண்டில் முதல் முயற்சியாக புற்றுநோய்விழிப்புணர்வு குறித்த இந்த போட்டிகளுடன் நேசம் தன் பணியை துவங்குகிறது. மார்பகம், கர்ப்பபைவாய், ரத்தம், எலும்பு, நரம்பு, தொண்டை, நுரையீரல் என்று உடம்பில் எந்த பாகத்திலும் ...
Full story
- Saturday, February 4, 2012, 18:30
- நறுக்..துணுக்...
இன்னம்பூரான்
நறுக்.. துணுக்...(13)
2ஜி உரிமங்களை ரத்து செய்து, உச்சநீதிமன்றம் அளித்த தீர்வு ஆட்சிபீடத்தை ஆட்டிவிட்டது என்றாலும், நொண்டி சாக்குகளும், சால்ஜாப்புகளும் வெளி வந்த வண்ணமே இருக்கின்றன. எந்த அமைச்சரோ, பிரதமரோ ராஜிநாமா செய்வது பற்றி, அதிகார வட்டங்களில் பேச்சு எழவேயில்லை. இங்கிலாந்தில் முந்திய ஆட்சியின் உள்துறை அமைச்சர் டேவிட் ப்ளங்கட் பதவியிலிருந்து விலக நேரிட்டது: குற்றச்சாட்டு: தன் ஆசைக்கிழத்தியின் தாதியின் பயண அனுமதி பற்றி லேசாக விசாரித்தது. அவருடைய காதலைப் பற்றி யாருக்கும் கவலையில்லை. இங்கிலாந்து போற்றும் ...
Full story
- Tuesday, January 31, 2012, 15:00
- செய்திகள், பொது
அண்ணல் காந்தியடிகளின் நினைவு தினமான ஜனவரி 30 அன்று தியாகிகள் தினம் என்றும் தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு தினம் என்றும் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்காக முனைவர் திரு. பி. கே. கோபால் அவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக இந்தியாவிலும், 18 உலக நாடுகளிலும் தொடர்ந்து சமூக சேவை ஆற்றி வருவதற்காக இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு “பத்மஸ்ரீ விருது” வழங்க இந்த ஆண்டு குடியரசு தினத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழுநோய்க்கான ...
Full story
- Saturday, January 28, 2012, 10:24
- பொது
“சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை - பாரபட்சமான பொருளாதார நிலைமைகளை மாற்றியமைத்து உழைப்போர் சுரண்டப்படுவதைத் தடுக்க வேண்டும்” என்ற பெருநோக்கில் ‘உலகத் தொழிலாளர்களே.. ஒன்று கூடுங்கள்..” என்று சமூக மாற்றத்திற்கான விஞ்ஞானத்தை விதைத்தவர் மார்க்ஸ். சமூக மறுமலர்ச்சிக்கு, புதிய தலைமுறையின் விடியலுக்கான அந்தப் பாதையில் விளைந்தது தான் தொழிற்சங்கங்களும், தொழிலாளர் அமைப்புகளும். பாடுபடும் தொழிலாளர்களுக்கு நியாயமான, நேர்மையான ஊதியத்தைக் கொடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், நியாயமான, நேர்மையான ஊதியம் எது? ...
Full story
- Saturday, January 28, 2012, 9:20
- திரை, பொது
தமிழில் 'கஸ்தூரிமான்', 'மிளகா', 'சொல்ல சொல்ல இனிக்கும்' படங்களிலும், தெலுங்கில் நாகவள்ளி', மற்றும் கன்னடத்தில் 'ஆப்தரக்ஷகா' ஆகிய படங்களில் நடித்த சுஜா தற்போது தனது பெயரை சுஜா வாருனீ என மாற்றியுள்ளார்.
வாருனீ - மழைக்கடவுளின் பெயர். பெயர் மாற்றம், புதிய படங்கள் என தனது ட்ராக்கை மாற்றியிருக்கும் வாருனீயிடம் பேசினால்...
"எப்போதும் எல்லா படங்களையும் பண்ணிக்கொண்டிருக்கமுடியாது. குடும்பம் முக்கியம். அம்மா, தங்கை இவர்களை ஒரு ஆணாக நின்று பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை ...
Full story
- Monday, January 23, 2012, 15:22
- திரை, பொது
உலக அளவில் முதல் முறையாக அனைத்து போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் சுமார் 5000 பேர்கள் இணைந்து பி அண்ட் வி எண்டர்டெய்ன்மெண்ட் பி.லிட் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் மிகப் பிரம்மாண்டமாகத் தாயரிக்கும் படம் ’முயல்’.
இப்படத்தில் புழச், கண்டுபுடி கண்டுபுடி ஆகிய படங்களில் நடித்த முரளி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘பேராண்மை’ படத்தில் நடித்த சரண்யா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் ராஜ்முமார், பிரபு, ஷிவானி, ஐஸ்வர்யா, மீரா கிருஷ்ணன், நெல்லை சிவா, முத்துக்காளை, ரஞ்சனி மற்றும் பலர் நடிக்கிறார்கள்....
Full story
- Sunday, January 22, 2012, 14:30
- நறுக்..துணுக்...
நறுக்.. துணுக்... (11)
மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற உயரிய குறிக்கோளுடன் வாழும் நம் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இலங்கையின் கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு உதவத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் இலங்கைப் பயணம் சென்றிருந்த கலாம், தலைநகர் கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கையில் அனைத்து மக்களுக்கும் 2013ம் ஆண்டுக்குள் சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் கல்வி அளிக்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்ததோடு, இத்திட்டத்தை செயல்படுத்த தான் உதவி செய்யத் ...
Full story
- Tuesday, January 17, 2012, 14:39
- செய்திகள், பொது
TBO தொலைக்காட்சி நிறுவத்தினர் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பிற்காக மலேசிய நாட்டிற்குச் சென்று அங்கு வாழும் தமிழர்களுடன் சிறப்பு பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.
இந்த சிறப்பு பிரம்மாண்டப் பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை மோனிகா கலந்து கொண்டு, பொங்கல் வைத்து, மலேசிய தமிழ் மக்களுடன் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக திரைப்பட நடிகர் புழல் படத்தின் நாயகனுமான முரளி உடன் சென்றார்.
08 ஜனவரி 2012 காலை 9 மணிக்குத் துவங்கிய இப்படப்பிடிப்பு மாலை வரை தொடர்ந்து நடைபெற்றது. பொங்கல் வைத்து ...
Full story
- Thursday, January 12, 2012, 15:00
- பொது
தி.சுபாஷிணி
சென்னையில் ஒரே பரபரப்பு! மக்கள் வெள்ளம்! அறிவின் பிரவாகம் பொங்கிச் சாலையெல்லாம் வழிந்து ஓடுகிறது! வாகனங்கள் ஈடு கொடுக்க இயலாது திணறுகின்றன. போக்குவரத்துக் காவலர்கள் விழிகள் பிதுங்கி நிற்கின்றனர். பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளியின் வளாகத்தில் நடக்கும் 35-வது புத்தகத் கண்காட்சிக்கு செல்லும் வழியில் தான் இந்த அறிவுக் கொண்டாட்டம். படைப்பாளிகளும், படைப்புகளும் பறந்து செறிந்து கிடக்கும் நூல் திருவிழா!
சாகித்ய விருது பெற்ற காவல் கோட்டக்கார சு. வெங்கடேசன், சென்ற ஆண்டில் இதே ...
Full story
- Wednesday, January 11, 2012, 16:26
- திரை, பொது
சாம்ராஜயத்தின் எழுச்சி in 3D
ஹாலிவுட் படங்களில் இரண்டு வகை த்ரில்லர்களுக்கு எப்போதும் மவுசு உண்டு. அறிவியல் பின்னணியிலான கதைகள் ஒரு பக்கம் வெற்றி பெறுகின்றன. நவீன ஆயுதங்கள், வேற்று கிரக வாசிகள் என்று இப்படிப்பட்ட கதைகள் களை கட்டும். இன்னொரு பக்கம் மந்திர வாதிகள், ரத்தக் காட்டேரிகள் என்பவை சம்மந்தப்பட்ட கற்பனைகளும் வரவேற்பு பெறும். பழமையை கதையில் சொன்னாலும் அந்த கால கட்டத்தில் தங்களை பொருத்திக் கொண்டு ரசிகர்கள் ரசிக்கத்தான் செய்கிறார்கள்.
இந்த வகை பழமையும் நம்பிக்கையும் மர்மமும் மனத்தின் ரகசிய ...
Full story
- Wednesday, January 11, 2012, 16:12
- செய்திகள், பொது
ஜனவரி – 7, சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவ நேயப்பாவணர் அரங்கத்தில் விளம்பரப்பட உலகின் முன்னனி இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரியின் தந்தையரின் நினைவாக ராபர்ட்-ஆரோக்கியம் அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் சாரல் விருது இவ்வருடம் எழுத்துலகின் முன்னனி எழுத்தாளர்களான திரு. வண்ணநிலவன் மற்றும் திரு. வண்ணதாசனுக்குவழங்கப்பட்டது.
இவ்விருது சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதி அவர்களால் உருவாக்கப்பட்ட கலைநயமிக்க விருது சிற்பமும் ஐம்பதாயிரம் ரூபாய் பரிசுத்தொகையும் அடங்கியது.
எழுத்தாளர் திரு. வண்ணநிலவனின் “எதையேனும் சார்ந்திரு” பாடலோடு விழாவை திரு. ரவிசுப்ரமணியன் அவர்கள் தொடங்கினார்.
இயக்குநர் திரு. ...
Full story
- Wednesday, January 11, 2012, 1:27
- Featured, பொது
- Monday, January 9, 2012, 17:01
- செய்திகள், பொது
ஈழத் தமிழர்களை சிறையில் அடைத்தது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை பின் வருமாறு:
"இலங்கையின் வட பகுதியிலுள்ள புங்குடு தீவில் பிழைப்பிற்கு வழியின்றி, பட்டிணி கிடந்து, பெரும் அச்சுறுத்தலுக்கும், அல்லலுக்கும் ஆளாகி, தங்கள் உயிருக்குப் பாதுகாப்புத் தேடி புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாபட்டிணம் கடற்கரையில் அகதிகளாக வந்திறங்கிய ஈழத் தமிழ்ச் சொந்தங்களை நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்திருப்பது மனிதாபிமானமற்ற, கொடூரமான நடவடிக்கையாகும்.
சிறு பிள்ளைகளுடன் உயிர் பிழைக்க தமிழ்நாட்டிற்கு வந்தவர்களை ...
Full story
- Thursday, January 5, 2012, 7:51
- நறுக்..துணுக்...
நறுக்.. துணுக்... ( 10)
பவள சங்கரி
தமிழ்மொழி 50,000 ஆண்டு வரலாற்றுப் பழமை பெற்ற மொழி. தமிழ்மொழி உலக மொழிகட்கு 1800 வேர்ச் சொற்களும், 180 மொழிகட்கு உறவுப்பெயரும் தந்துள்ளதை ஆய்வுகள் உணர்த்தியுள்ளன. அதிலும் சிவசமயம் 22,000 ஆண்டுகள் பழமை கொண்டதாம். திருமந்திரம் என்பது 8000 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய சித்தர் நெறி நிற்கும் மந்திர, தந்திர வழிபாட்டு நூல். திருக்குறளும், திருமந்திரமும் நம் தமிழ்த்தாயின் இரு கண்கள் என்று போற்றத்தக்க தெய்வாம்சமும், வாழ்க்கை நெறிகளும் கொண்டனவாகும். ...
Full story
- Saturday, December 31, 2011, 23:59
- பொது
செழியன்
பனி பொழியும்
மார்கழியில் மலரும் புத்தாண்டே !நீ வருக !வருக ! வருக !வளமும் நலமும் தருக !தருக !தருக!மனம் உருக வேண்டுகிறோம் .நீ ...எங்களுடன் உறவு கொள்வது என்னவோ 12 திங்கள் அந்த 12 மாத உறவு காலத்தில் விதைகள் முளைக்கிறது .முளைத்த செடிகள் அரும்பு வைக்கிறது .அரும்பு மொட்டாகிறது .மொட்டு மலராக விரிகிறது .மணம் வீசுகிறது ....
Full story
- Tuesday, December 27, 2011, 18:07
- பொது
கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வந்த நார்வே தமிழ் திரைப்பட விழா மூன்றாவது முறையாக வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நார்வே நாட்டின் தலைநகர் ‘ஆஸ்லோ’ (Oslo) மற்றும் ’லாரண்ஸ் கூ’ (Lawrence Co) ஆகிய நகரங்களில் நடைபெற இருக்கிறது.
ஐந்து நாட்கள் நடைபெற இருக்கும் இத்திரைப்பட விழா, கடந்த இரண்டு ஆண்டுகளை விட, முற்றிலும் வேறுபட்ட பல புதிய நிகழ்ச்சிகளுடன் நடைபெற ...
Full story