Author: கவிஞர்.காவிரிமைந்தன்

  • கவியரசு கண்ணதாசனின் இயேசு காவியம் – கவிதை வாயிலாய் காண்க தரிசனம்

    கவிதை வாயிலாய் காண்க தரிசனம்

    பலவகைக் குருடர் இந்தப்Yesunathar Pesinaal Enna Pesuvaar

    பரந்ததோர் உலகில் உண்டு

    சிலவகைக் குருடர் நோய்க்குச்

    செகத்தினில் மருந்தே இல்லை

    நிலைபெறும் கண்கள் இல்லா

    நிச்சயக் குருடர் தம்மை உலகினைக்

    காண வைத்தார் உன்னத இயேசு நாதர்!

    வழிவழி செல்லும்போது

    தேவனின் மைந்தன் தன்முன்

    விழியிலா இருவர் தோன்றி

    விளித்தனர் கண்கள் கேட்டார்

    அழிவிலா விசுவா சத்தால்

    அன்புடன் கேட்டதாலே விழிகளைப் பெறுவீர் !

    என்றார் விழித்தனர் குருடர் ஆங்கே!

    எத்தனை கோடி செய்திகளோ இங்கு

    இயேசுவைப் பற்றிவரும்

    அத்தனை கோடியில் முத்துக் குளித்தோம்

    ஆசையில் கற்றவரும்

    இத்தனை வந்தது மாலை தொடுத்தோம்

    இதிலொரு சக்தி வரும்

    தத்துவம் ஏதும் விட்டு விட்டிருந்தால்

    தயவுடன் பொறுத்தருளும்!

    மண்ணிடை இயேசு மறுபடி வருவார் என்பது சத்தியமே!

    புண்கள் இருக்கும் வரை மருந்து

    தேவை நித்தியமே

    விண்ணர சமையும் உலகம் முழுதும்

    இதுதான் தத்துவமே

    எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே இயேசுவை நம்புவமே!

    கவியரசு கண்ணதாசன் – இயேசு காவியத்தில்

    இம்மண்ணிலே புண்ணியன் தோன்றி எண்ணரும் இன்னல்கள் ஏற்று … மனிதர் பாவங்கள் கழுவிட தனது இரத்தத்தை ஈந்ததாலே இயேசுவை உலகமக்கள் ஏற்றிட்ட கதையைப் பாரீர்!

    வாசிக்க பலபேர் பாதிரிமார்கள் சூழ கவிதை யோசிக்கவேயின்றி சரம்சரமாகத் தந்தார் கவியரசர் மொழிபெயர்த்த ஏசுவின் வரலாறு ஒரு காவியம்! இத்தகு மேன்மைதன்னை எடுத்துரைத்த கவிஞரே! உங்களுக்கு காவிரிமைந்தனின் நன்றிகள்!!

    அன்புடன், காவிரிமைந்தன் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் பம்மல், சென்னை 600 075

    கவியரசு கண்ணதாசனின் இயேசு காவியம்

    சகோ. மார்கரெட் பாஸ்டின்

    கவியரசு படைத்த காவியம் பற்றி சகோதரியின் வெள்ளை அறிக்கை

    கவியரசு கண்ணதாசனின் இயேசு காவியம் பற்றி சகோதரி மார்கரெட் பாஸ்டின் எழுதியுள்ள இக்கட்டுரை கவியரசு அவர்கள் இயேசுநாதர் மீது கொண்ட பக்தியையும் ஈடுபாட்டையும் பறைசாற்றுகிறது. இதே கவியரசு அவர்கள்தான் இன்றுவரை பல பதிப்புகளைக்கண்டுவரும் அர்த்தமுள்ள இந்துமதம் என்ற சிறப்பான நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்து மதத்தையும், கிறிஸ்துவ மதத்தையும் ஒரே கவிஞரால் போற்றிப் பாராட்டும் வகையில் எழுத முடிகிறது என்றால், அவர் இன்னும் சில காலம் வாழ்ந்திருப்பாரேயானால், நபிகள் நாயகத்தைப் பற்றியும் நற்றமிழ்க் காவியத்தை எழுதியிருப்பார்.

    மதமாச்சரியங்கள் மகாகவிகளுக்குள் இருக்காது. அதனால்தான் அவர்கள் மகாகவிகள்! சொல்லடி சிவசக்தி என்ற பாரதி, அல்லா அல்லா என்றும், இயேசுவின் தந்தை என்றும் கவிதை எழுதினார். இதுதான் மகாகவியின் மாண்பு.

    மகாகவி அல்லாதவர்கள் பல மைல்களுக்கு முன்பே பட்டுப் போய், கெட்டுப் போய், விட்டுப் போய் பிறரைத் தூசிப்பார்கள். தங்கள் சமய அருளாளர்களைப் பற்றியே யோசிப்பார்கள்.

    கவியரசு கண்ணதாசன் பாரதிக்குப் பின்வந்த மகாகவி. பாரதியோ, வள்ளலாருக்குப் பின்வந்த மகாகவிவள்ளலாரோ, தாயுமானவருக்குப் பின்வந்த மகாகவி. இப்படியே பின்னோக்கிச் சென்றால் கம்பனை, இளங்கோவை, வள்ளுவனை நாம் செல்லும் வழியில் சந்தித்துச்சந்தித்துக்கை குலுக்கிக் கொண்டே செல்லலாம்.

    கவியரசு படைத்த காவியம் பற்றி சகோதரியின் வெள்ளை அறிக்கை இது. படியுங்கள். – (பொ.ஆர்.)

    மூன்று லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்த பின்னும் இந்நூல் கிடைக்குமா? என்று கடிதங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய ஆவலைத் தூண்டக்கூடிய ஓர் ஒப்பற்ற காப்பியம் வேறு எதுவுமல்ல, கவிஞர் கண்ணதாசனின் கைவண்ணத்தால் மிளிரும்இறவாக் காவியமான இயேசு காவியம்தான்.

    இறைவன் உலகை எவ்வளவு அன்பு செய்தார் என்று எண்பிக்கத் தம் ஒரே மகனையே உலகிற்கு அனுப்பினார். உலகை மீட்க இறைமகன் இயேசு வருவார் என்பது காலாகாலமாக முன்னுரைக்கப்பட்டது. காலம் நிறைவுற்றபோது அவர் கன்னி மரியிடம் கருவானார். மனித உருவாகி நம்மிடையே வாழ்ந்து நமக்கு வாழ்வளித்ததோடல்லாமல், உலக மக்கள் அனைவரும் இறைமக்களாகும் வழியையும் காட்டிச் சென்றார்.

    வரலாற்று நாயகனான இறைமகன் இயேசுவினது வாழ்வு, வாக்கு, இறப்பு மற்றும் உயிர்ப்பைச் சித்தரிக்கும்மறைநூலான விவிலியத்தை கவிதைகளும் இசைப் பாடல்களும் பொதிந்த ஈடிணையற்றக் காவியமாக்கி அளித்தவர் நம் அனைவரின் உள்ளங்களையும் ஒருசேரக் கொள்ளை கொண்ட தனிப் பெருங்கவி கண்ணதாசன் அவர்கள்.

    இதனை எழுதி முடித்தபின் திருச்சியில் நடந்த விழா ஒன்றில் உரையாற்றிய அரசவைக் கவிஞர் கண்ணதாசன் இயேசு காவியம் என்பது பேச்சு வாக்கிலே துவங்கிய ஒரு முயற்சி. ஆனால் வேலை செய்ய உட்கார்ந்தபொழுது பயம் என்னைப் பீடித்தது, என்ன பிரம்மாண்டமான வேலையில் நாம் கைவைத்து விட்டோம் என்று பீதியடைந்தேன். இயேசு பெருமான்தான் எனக்கு அருள் பாலித்தார்! இதுவரை நான் உழைக்காத வகையில் தொடர்ந்து பதினைந்து நாட்கள் தினமும் எட்டு மணி நேரம் வேலை செய்து இப்பணியைமுடித்தேனென்றால், நிச்சயம் அது இயேசுவின் கருணையே! என்று வியக்கின்றார்.

    இப்பணி நிறைவேறுவதற்கு மிக முக்கியக் காரணமாய் இருந்தவர் கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் நிறுவனரும் 25 ஆண்டுகள் அதன் இயக்குனராய் இருந்து திறம்படத் தமது பணியை ஆற்றியவருமான மறைந்த மொன்சிஞோர் எஸ்.எம். ஜார்ஜ் அடிகளாரும்அவரோடு இப்பணியில் உதவிக்கரம் நீட்டிய அருட்பணியாளர் ஸ்தனிஸ்லாஸ் அடிகளாரும் ஆவர். கலைக்காவிரியையும் கவிஞரையும்இணைக்கும் பாலமாகத் திகழ்ந்தவர் அந்நாளைய இந்நிறுவனப் பணியாளர் திருவாளர் சந்திரமோகன் ஆவார்.

    உன் வாய்ச்சொல்லைக் கொண்டே உன்னை எடை போடுவேன் என்பது வேதாகம வாக்கு. அதன்படி, செவ்விய தமிழில் சிந்து பயின்றவன்

    ஒவ்வொரு சொல்லையும் உருக்கிப் படைத்தவன் கவ்வி இழுத்திடும் கவிதையில் வல்லவன் எவ்விதம் அன்னவன் ஏற்றம் இயம்புவேன்

    என்று பிறிதொரு கவிஞரைப் பற்றிக் கண்ணதாசன் அவர்கள் பாடிய கவிதை கவியரசருக்கே முற்றிலும் பொருந்துமென்று இக்காவியம் உருவாகிய கதையில் அருட்பணியாளர் ஸ்தனிஸ்லாஸ் அவர்கள் கவிஞரை ஏத்திப் போற்றுகின்றார்.

    149 அதிகாரங்களைக் கொண்ட இந்நூல் 432 பக்கங்களால் ஆனது. தனக்குவமையிலாக் கவிஞர் கண்ணதாசனை எதிர்பாராமல் இழந்துவிட்டநிலையில் 1982 ஜனவரி 16ஆம் நாள் 5000 பேர் கூடியிருக்க அந்நாளைய மதுரை பேராயர் ஜஸ்டின் திரவியம் அவர்களால் இயேசுகாவியம் வெளியிடப்பட்டது.

    உலகில் உள்ள அனைத்துத் தமிழ் மக்களின் சார்பாக இதன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டவர் அந்நாளைய தமிழக முதல் அமைச்சர் மாண்புமிகு எம்.ஜி. இராமச்சந்திரன் ஆவார்கள். அவர் தமது வாழ்த்துரையில் இந்த இயேசு காவியத்தை நான் என் கரங்களில்பெற்றுக்கொண்ட நேரம் மங்களகரமானது. இதன்வழி தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்கப்போகின்றது என்று கூறியதோடு நில்லாமல், இந்த நேரத்தில் இங்குநான் ஒன்றை ஆணித்தரமாகக் குறிப்பிட விரும்புகின்றேன். என்னால் இயன்றவரை என் தனிப்பட்ட வாழ்விலும்சரி அரசியல் வாழ்விலும் சரி, இனி யாரையும் எனது வார்த்தைகளால் புண்படுத்தமாட்டேன் என்று உறுதி எடுத்துக்கொண்டார்.

    இதே ஆண்டு ஏப்ரல் மாதம் பர்மாவிலும் இந்நூல் அச்சிடப்பட்டு வெளியானது. 1982-இல் முதல் பதிப்பாக 28000 பிரதிகளும், 1985&இல் 2&ஆம் பதிப்பாக 50000 பிரதிகளும், 1989-இல் 3-ஆம் பதிப்பாக 200000 பிரதிகளும், 1992-இல் 4-ஆம் பதிப்பாக 20000 பிரதிகளும், 1997-இல் 5-ஆம் பதிப்பாக 5000 பிரதிகளும், 2002-இல் 6-ஆம் பதிப்பாக 5000 பிரதிகளுமாகப் பதிப்பிக்கப்பட்டன.

    இவற்றுள் மூன்றாம் பதிப்பானது பிரத்யேகமாக மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 56 அதிகாரங்களை உள்ளடக்கியதாகும்.

    எழுதப் படிக்கத் தெரிந்தவர் யாராயினும் இக் கவிதைகளைப் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்திருப்பதுவே இதன் தனிச்சிறப்பு எனலாம். உள்ளர்த்தம் மாறாமல் இனிய தமிழில் எளிமையாய் இப்பாடல்கள் அமைந்துள்ளன.

    பிறவியிலேயே கண் தெரியாத குருடர் இருவர் தமக்குப் பார்வை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இயேசுவை நாடி வருகின்றனர். எடுத்துக்காட்டாய் ஒரு சோற்றுப் பதம் இதோ :

    பலவகைக் குருடர் இந்தப் பரந்ததோர் உலகில் உண்டு சிலவகைக் குருடர் நோய்க்குச் செகத்தினில் மருந்தே இல்லை நிலைபெறும் கண்கள் இல்லா நிச்சயக் குருடர் தம்மை உலகினைக் காண வைத்தார் உன்னத இயேசு நாதர்!

    வழிவழி செல்லும்போது தேவனின் மைந்தன் தன்முன் விழியிலா இருவர் தோன்றி விளித்தனர் கண்கள் கேட்டார் அழிவிலா விசுவா சத்தால் அன்புடன் கேட்டதாலே விழிகளைப் பெறுவீர் ! என்றார் விழித்தனர் குருடர் ஆங்கே!

    இயேசு காவியத்தில் கம்பனின் வார்த்தைத் திறனும் வீரமாமுனிவரது ஆழ்ந்த கருத்துக்களும் பாரதியின் எளிய நடையும் பாரதிதாசனின் சொல் நயமும் இணைந்து காணப்படுவதால் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும் கர்நாடகாவில் உள்ள மைசூர்பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலும் இது இடம் பெற்றுள்ளது. சிங்கப்பூரின் கல்வித் துறையும் இதனைப் பாடத்திட்டத்தில் இணைத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தனியார் கல்லூரிகள் பலவும் பட்டப்படிப்பின் பாடத்திட்டத்தில் இணைத்துள்ளன.

    சிலர் தங்களது முனைவர் பட்ட ஆய்விற்கே இந்நூலைத் தெரிவு செய்துள்ளனர். சிறையில் உள்ள கைதிகளும் கடிதம் எழுதி இந்நூலைப் பெற்றுப் படித்துவருவது இதன் பெருமைக்கு மற்றுமொரு சான்றாகும். கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இந்நூல் வெளிவரவேண்டுமென்று பலர் தங்களது ஆவலை வெளியிட்டிருப்பது கவிஞரின் கவிநயத்துக்குக் கட்டியம் கூறும் சான்றாக உள்ளது.

    பலவித சந்தங்களில் சில பகுதிகளை இசை அமைப்புக்கு ஏற்றவாறும் இக்காவியத்தை அமைத்திருக்கிறேன் என்று கவியரசரே கூறியுள்ளார். இதனடிப்படையில் எம் கல்லூரியின் கலைக்குழு இயேசு காவியத்தின் சில பகுதிகளைத் தெரிவு செய்து நாட்டிய நாடகமாகவழங்கியுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

    அர்த்தமுள்ள இந்துமதம் என்ற நூலினை 10 தொகுதிகளாக எழுதித் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற இம் மகாகவி தமது வாழ்நாட்களின்இறுதியில் இயேசுவுக்கென்று ஒரு காவியம் உருவாக்கியதோடல்லாமல், இறுதி அதிகாரமாக அமைத்துள்ள மங்களப்பாடலில் அவர் தமது உள்ளக் கருத்தை உறுதியான தொனியில், இரத்தினச் சுருக்கமாகப் பதிவு செய்திருப்பது நம்மை மெய்சிலிர்க்கச் செய்கின்றது.

    எத்தனை கோடி செய்திகளோ இங்கு இயேசுவைப் பற்றிவரும்

    அத்தனை கோடியில் முத்துக் குளித்தோம் ஆசையில் கற்றவரும்

    இத்தனை வந்தது மாலை தொடுத்தோம் இதிலொரு சக்தி வரும்

    தத்துவம் ஏதும் விட்டு விட்டிருந்தால் தயவுடன் பொறுத்தருளும்!

    மண்ணிடை இயேசு மறுபடி வருவார் என்பது சத்தியமே!

    புண்கள் இருக்கும் வரை மருந்து தேவை நித்தியமே

    விண்ணர சமையும் உலகம் முழுதும் இதுதான் தத்துவமே

    எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே இயேசுவை நம்புவமே!

    பல சமயங்களில் பலர் என்னை இறவாக் காவியம் ஒன்று எழுதுங்கள் என்று வற்புறுத்தியதுண்டு. அந்த இறவாக் காவியம் இயேசு காவியம்தான் என்று நான் உறுதியாகக் கூற முடியும் எனத் தன்னுரையில் கண்ணதாசன் அவர்களே கூறியிருப்பதும் இங்குநினைவுகூரத்தக்கது.

    திருச்சி மறை மாவட்டத்தின் 125-ஆவது ஆண்டையொட்டி இந்நூலின் ஏழாவது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகின்றோம்.

    — என்றும் அன்புடன்,

    காவிரிமைந்தன் (மு.இரவிச்சந்திரன்)

    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)

    சென்னை 600 075

    தற்போது – துபாய் – அமீரகம் 00971 50 2519693

    kaviri2012@gmail.com

    Share
  • சிறுகூடற்பட்டி முதல் சிகாகோ வரை.. கவிஞர் கண்ணதாசன்

    கவிஞர் காவிரி மைந்தன்

    மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை 

    அண்மையில் இன்றைய பிரபலமான கவிஞர் ஒருவரோடு உரையாடும்போது.. கண்ணதாசனைப் பற்றி பேச்சு வந்தது.  அவரும்தன் பங்கிற்கு.. கண்ணதாசன் கூட மெட்டுக்காக சில நேரங்களில் வார்த்தைகளை இட்டு நிரப்பிக் கொடுத்திருக்கிறார் என்றார்.  நானும் அதை மறுப்பதற்கு ஆதாரமின்றி அமைதியாக இருந்தேன்.

    ஆம்.. அண்ணன் ஒரு கோவில் திரைப்படத்தில் இடம்பெற்ற  ‘மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை

    சமீபத்தில் சென்னையைச் சார்ந்த திரு.பரசுராமன் அவர்கள் எழுதிய கண்ணதாசன் பாடல்களில் கடவுள் தத்துவங்கள் என்கிற நூலைப் படித்த போது, இந்தப் பாடலுக்கு முழுமையான விளக்கம் கண்டேன்.. ஆனந்தம் கொண்டேன்.

    ‘பூமாலையும் பாமாலையும் தந்த ஆண்டாள், கோ எனப்படும் பசுக்களைக் மேய்த்த கோபாலன் எனும்கண்ணன் அன்றி வேறுயாரையும்  திருமணம் வேண்டேன் என்றவள். அவளைப்போல் நீயும் யாரையாவது விரும்புகிறாயா சொல், உன்னுடைய அந்த அன்புத்துணையை நான் சீக்கிரமாய் அமைத்துத் தருகிறேன்’ என்று சூசகமாய் கேட்கிறான்,அன்பு அண்ணன் தன் தங்கையிடம்.

    தமிழை ஆண்டாள் என கோதைக்குப் பெயர் கொடுத்த கண்ணதாசன் எதற்கு அப்படிக் கூறினார் எனப்பார்த்தால் …..

    நாலாயிர திவ்யபிரபந்தத்தில் உள்ள நாலாயிரம் பாடல்களில் தமிழுக்கே உரிதான ழ என்பதை அதிக அளவில் உபயோகப்படுத்தியது

    ஆண்டாள்தான். திருப்பாவையில் ஆழிமழைக் கண்ணா எனும் பாடலில் ‘ழ’கரம் அதிகம் .11தடவை ‘ழ’ உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.

    “கோதை ஆண்டாள் தமிழை  ஆண்டாள்” என்கிற சொற்ப்ரயோகத்தைப்  பயன்படுத்தியிருக்கிறார் என்றால்..  கவிஞரின் தமிழ் ஆளுமை.. அறிவு..  எத்தனை  ஆழங்கால் பட்டது என்பதை இன்னும் சொல்லவும் வேண்டுமோ?

    அடுத்து….

    தோகைமீனாள் பூவை ஆனாள்

    சொக்கேசன் துணையோடு ஊர்கோலம் போனாள்

    மாலை கண்டாள் கோவில் கொண்டாள்

    மாணிக்க‌ மூக்குத்தி ஒளிவீச‌ நின்றாள்

    தென்றல் தொட்டு ஆட‌

    கண் சங்கத்தமிழ் பாட

    தன் மக்கள் வெள்ளம் கூட

    காவல் கொண்டாள்

    இந்தவரிகளில் கண்ணதாசன் திருவிளையாடல் புராணத் தகவல்களான அம்பிகையின் திருமணப்பருவம்

    சொக்கேசன் துணையோடு ஊர்கோலம்போனாள் என்பது, திக்விஜய யாத்திரையின் போது சிவபெருமான் கூடவந்தது,திருமணம் நடந்தது, அம்பிகையின் அரசாட்சி இவைகளைக் கூறுகிறார்.  மதுரை என்றதும் சங்கம் வளர்ந்ததமிழ்,மீனாட்சி என்றதும் மாணிக்க மூக்குத்தி இவை யாவும் இடம்பெற்றுள்ளன.

    அம்பிகை திக்விஜய யாத்திரையின்போது பரமேஸ்வரனும் உடன் போனார் என்ற தகவல் திருவிளையாடல்புராணத்தில் ஆழ்ந்த பயிற்சி உள்ளவர்களுக்கு) மட்டுமே தெரியும். இத்தகவலை ‘சொக்கேசன் துணையோடு ஊர்கோலம் போனாள்’ என அமைத்து பாமர மக்களிடமும் கொண்டு சென்ற கண்ணதாசனின் கவித்துவம் நம்மை வியக்க வைக்கிறது!

    மாப்பிள்ளை தேடக்கிளம்பிய அண்ணன்,மீனாட்சி கல்யாணத்தையும் ஆண்டாள் கல்யாணத்தையும் சொல்வதாக கண்ணதாசன் அமைத்திருப்பதில் மற்றொரு காரணமும் உண்டு.

    மீனாட்சிகல்யாணத்தில் மாப்பிளையான பரமேஸ்வரன் மீனாட்சியுடன் மதுரையிலேயே தங்கிவிட்டார் (அதாவது மாமனார் வீட்டோடு)

    ஆண்டாளோ புகுந்தவீடு போய் விட்டாள் (திருவரங்கம்)

    ‘அம்மா உனக்கு வீட்டுமாப்பிள்ளையாக பார்க்கட்டுமா அல்லது நீ மாப்பிளைவீட்டுக்குப் போகிறமாதிரியா, எப்படிப் பார்க்கட்டும்?’ என்று உள் அர்த்தமுடன் கேட்பதான கருத்துகொண்டது.

    எப்படி இருந்தாலும் சரி கல்யாணம் நல்லபடியாக நடக்கவேண்டும்; அதுமட்டுமல்ல கல்யாணத்துக்குப் பிறகு

    தன் தங்கை எப்படி இருக்கவேண்டும்? எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை சொல்ல நினைக்கிறான் அண்ணன்.

    ராமரும் சீதையும் வாழ்ந்த வாழ்க்கை நினைவுக்குவருகிறது.

    ராமரும் சீதையும் திருமணம்முடிந்து சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். தந்தை சொல்லைக் காப்பதற்காக ராமன்

    வனவாசம்போக வேண்டியதாகிவிட்டது. சீதை கொஞ்சமும் வருத்தப்படாமல் கணவனுடன் காட்டிற்குப் போனாள். ராவணன் தூக்கிச்சென்று அசோகவனத்தில் சிறைவைத்தான். அப்போது உடல்கள் பிரிந்தனவே தவிர உள்ளங்கள்பிரியவில்லை. ராவணவதம் முடிந்து ராமர் பட்டாபிஷேகம் நடந்தது. லவன் குசன் என்று இரு குழந்தைகள்பிறந்தார்கள்.

    இவ்வளவு நிகழ்ச்சிகளும் அண்ணன் மனதில் ஓடுகின்றன. தன்மனத்து எண்ணங்களை தங்கையிடம் சொல்கிறான் அவளும் அப்படி வாழவேண்டுமென்று..

    மாலை சூடி வாழ்ந்த‌ வேளை

    வ‌ன‌வாச‌ம் போனாலும்

    பிரியாத‌ சீதை

    ராம‌நாமம் த‌ந்த‌ ராக‌ம்

    லவ‌னாக‌ குசனாக‌

    உருவான‌ கீத‌ம்

    கண்ணதாசனின் இந்த வரிகளில் வேறு அற்புதமான தகவல்களும் அடங்கி உள்ளன. நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருப்பதைப்போல கல்யாணம் முடிந்ததும் ராமரும் சீதையும் வனவாசம் போகவில்லை. 12 ஆண்டுகள் சேர்ந்திருந்தனர்.  அதன்பிறகுதான் வனவாசம் .

    மாலை சூடிவாழ்ந்த வேளை என்கிறார் கண்ணதாசன்,

    இனி அந்த வரிகளில் ராமரைப்பற்றி ஏதும் சொல்லவில்லையே என்பவர்களுக்கு கன்ணதாசன் பதில் சொல்கிறார்.

    ‘வேளை’ என்ற வார்த்தைக்கு மன்மதன் என்ற பொருளும் உண்டு; வேளை காலத்தையும் குறிக்கும்.

    மன்மதன் போன்ற அழகு வாய்ந்த ராமனை வனவாசம் போனாலும் பிரியாத சீதை எனும் அர்த்தமும் வருகிறது.

    எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அவைகளை உறுதியுடன் சமாளித்து வாழ்ந்து வழிகாட்டிய அவர்களின் வாழ்க்கையை, அவர்களின் குழந்தைகளான் லவனும் குசனும் ராமாயணம் என்ற பெயரில் கீதம் இசைத்தது (ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே) நாம் அறிந்ததே  இத்தகவல்!

    ராம நாமம் தந்தராகம்

    லவனாக குசனாக

    உருவான கீதம்

    என்றுதெரிவிக்கப படுகிறது.

    அற்புதத்திலும் அற்புதமான வரிகள் இவை .சாதாரண தகவலை ஒருபாமரனின் மனதிலும் ஆழப்பதியுமாறுசெய்த கண்ணதாசனின்

    ஆன்மீக அனுபவத்தை எண்ணி வியக்காமல் இருக்கமுடியாது.

    ஒவ்வொரு முறையும்  ஒவ்வொரு விதமாக.. ஆம்.. காதல் திருமணம்,  வீட்டோடு மாப்பிள்ளை, சுயம்வரம் .. இதில் எந்தவிதம் உனக்கு கணவன் வேண்டும் என்கிற கேள்வியை உள்வைத்து, முத்தாய்ப்பாக கண்ணதாசன் முத்திரை பதிக்கிறார்…

         மாமன் என்று சொல்ல ஓர் அண்ணன் இல்லை அங்கே..

         அந்த அண்ணன் உண்டு இங்கே அள்ளிவழங்க..

     

    ஆண்டாள் திருமணம், மீனாட்சி திருமணம், சீதா திருமணம்..  

    மீனாட்சி ஆண்டாள் சீதை மூவருக்கும் அண்ணன்கள் கிடையாது. ஆனால் உனக்கோ நான் இருக்கிறேன், உன்குழந்தைகள் என்னை மாமன் என அழைக்க, அவர்களுக்கு நான் எல்லாவற்றையும் வாரி வழங்குவேன் என்று அண்ணன் சொல்லிமுடிக்கிறான்.

    கண்ணதாசனின் அற்புதமான பாடல்களில் ஒன்று இது!

    வயிற்றுக்காக இட்டு நிரப்பி  கண்ணதாசன் எழுதிய பாடல் என்று குறிப்பிட்ட இந்தப் பாடலில் இவ்வளவு அர்த்தங்கள் இருக்கிறதென்றால்..  அவ்வாறு குறிப்பிட்ட இன்றைய கவிஞரின் அறியாமையைத்தான்  எண்ண வேண்டியுள்ளது.   உலக அளவில் தேடினாலும் உவமை சொல்ல முடியாத ஒரே கவிஞர் அல்லவா கண்ணதாசன்!!

    மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை 
    அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை 
    பொன் வ‌ண்ண‌ ர‌தமேறி இம்மண்ணில் எங்கும் ஓடி 
    பொன் வ‌ண்ண‌ ர‌தமேறி இம்மண்ணில் எங்கும் ஓடி 
    நல் அன்புத்துணை தேடி நான் த‌ருவேன் 
    மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை 

    சூடிக் கொடுத்தாள் பாவை ப‌டித்தாள் 
    சுட‌ராக‌ எந்நாளும் தமிழ் வானில் ஜொலித்தாள் 
    கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் 
    கோபால‌ன் இல்லாம‌ல் க‌ல்யாண‌ம் வேண்டாள் 
    கன்னித்தமிழ் தேவி மைகண்ணண் அவ‌ள் ஆவி 
    தன் காத‌ல் ம‌ல‌ர் தூவி மாலையிட்டாள் 

    தோகை மீனாள் பூவையானாள் 
    சொக்கேச‌ன் துணையோடு ஊர்கோல‌ம் போனாள் 
    மாலை க‌ண்டாள் கோவில் கொண்டாள் 
    மாணிக்க‌ மூக்குத்தி ஒளிவீச‌ நின்றாள் 
    தென்றல் தொட்டு ஆட‌ 
    கண் சங்கத்தமிழ் பாட 
    தன் மக்கள் வெள்ளம் கூட 
    காவல் கொண்டாள் 
    மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை 
    அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை 

    மாலை சூடி வாழ்ந்த‌ வேளை வ‌ன‌வாச‌ம் போனாலும் 
    பிரியாத‌ சீதை 
    ராம‌நாமம் த‌ந்த‌ ராக‌ம் ல‌வ‌னாக‌ குச‌னாக‌ 
    உருவான‌ கீத‌ம் 
    மாம‌ன் என்று சொல்ல‌ ஒர் அண்ண‌ண் இல்லை அங்கே 
    அந்த‌ அண்ண‌ண் உண்டு இங்கே அள்ளி வ‌ழ‌ங்க‌ 

    மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை 
    அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை 
    பொன் வ‌ண்ண‌ ர‌தமேறி இம்மண்ணில் எங்கும் ஓடி 
    நல் அன்புத்துணை தேடி நான் த‌ருவேன் 
    மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை 

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நடிகை சுமித்ராவும் இப்பாடலில் முழுவதுமாய் வியாபிக்க ..  ஒளிப்பதிவும்… மெல்லிசை மன்னரின் இன்னிசையும் ஒன்றை ஒன்று மிஞ்சுகின்றன பாருங்கள்.. கேளுங்கள்..

    சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான அண்ணன் ஒரு கோயில் .. இது

    http://www.youtube.com/watch?v=GrmF1PIPT78

    கவியரசர் பாட்டுத் திறனைப்  பரிமாறி மகிழ்வோம்!

    என்றும் அன்புடன்..

    காவிரிமைந்தன்
    (மு.இரவிச்சந்திரன்)
    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)
    சென்னை 600 075
    தற்போது – துபாய்.
    00971 50 2519693
    kaviri2012@gmail.com

    Share
  • நிலவு ஒரு பெண்ணாகி…

    கவிஞர் காவிரி மைந்தன்

    உலகம் சுற்றும் வாலிபன் என்கிற வெற்றிச் சித்திரத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் படு சூப்பர்! கவிஞர் வாலியின் கைவண்ணம் மின்னும் பாடல்கள் தாராளம்!  மெல்லிசை மன்னரின் ஈடிலா இசையில் அன்றும் இன்றும் என்றும் கேட்டு மகிழத் தக்க ரகம்!  மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய வண்ணப்படம் இதன் வெற்றிக்குப் பாடல்களே பெரிதும் காரணமாய் விளங்கின.  கவியரசு கண்ணதாசன் அவர்களும் – கவிஞர் வாலி அவர்களும் எழுதியிருக்கும் சொல்லோவியங்கள் சுகமானவை!

     

    காதல் பாடல்களில் இரண்டு விதங்கள்.  ஒன்று காதலனும் காதலியும் இணைந்து பாடுபவை.  மற்றொன்று காதலனோ அல்லது காதலியோ தனித்துப் பாடுபவை.  இவ்வகையில் இரண்டாம் ரகத்தில் பாடல் தேவைப்பட இரண்டு கவிஞர்களும் அள்ளி வழங்கிய முத்துச் சரங்கள் – மோகனப் புன்னகைகள் – மக்கள் திலகத்திற்கு பிடித்துப் போக இதற்காகவே இரண்டு பாடல்களையும் திரையில் இடம் பெறச் செய்தார்.

     

    அவளொரு நவரச நாடகம் – கவியரசு கண்ணதாசன்

     

    நிலவு ஒரு பெண்ணாகி –  கவிஞர் வாலி

     

    ஒவ்வொரு முறை எழுதப்படும்போதும் கவிஞனுக்குள்ளே ஒரு கருத்துப் பிரசவம் நடைபெறுகிறது.  அவனது கவியாற்றல், கற்பனை வளம், இயற்கையில் பெய்யும் மழையாய் முதலில் இதயத்தில் உருவாகி சொற்களின் வடிவில் வெளிப்படுகிற விந்தை – கவிதை.இந்த சுகானுபவம் கவிஞர்களுக்கே சொந்தம்!!

     

     

     

    நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ 

     

     

    நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
    நீரலைகள் இடம் மாறி நீந்ததுகின்ற குழலோ
    மாதுளையின் பூ போலே மலருகின்ற இதழோ
    மான் இனமும் மீன் இனமும் மயங்குகின்ற விழியோ

    புருவம் ஒரு வில்லாக பார்வை ஒரு கணையாக
    பருவம் ஒரு தளமாக போர் தொடுக்க பிறந்தவளோ
    குறுநகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
    தேன் சுவையை தான் குழைத்து
    கொடுத்ததெல்லாம் இவள் தானோ

    பவளமென விரல் நகமும்
    பசும் தளிர் போல் வளைகரமும்
    தேன் கனிகள் இரு புறமும்
    தாங்கி வரும் பூங்கொடியோ
    ஆழ்கடலின் சங்காக நீழ்க்கழுத்து அமைந்தவளோ
    யாழிசையின் ஒலியாக வாய்மொழி தான் மலர்ந்தவளோ

    செந்தழலின் ஒளி எடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
    பொன்பதத்தில் வார்த்துவைத்த
    பெண்ணுடலை என்னவென்பேன்
    மடல்வாழை தொடை இருக்க
    மச்சம் ஒன்று அதில் இருக்க
    படைத்தவனின் திறமை எல்லாம்
    முழுமை பெற்ற அழகி என்பேன்

    நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ……….

     
    http://www.youtube.com/watch?v=F6u_Lsg-Wy8
    http://www.youtube.com/watch?v=F6u_Lsg-Wy8

     

    மாற்றுக் குறையாத தங்கம் என்று சொல்வதா  

     

    மனதை வருடும் இன்பத் தேன் பாடலாஆண்டுகள் பல ஓடிவிட்டபோதும் – நம் நெஞ்சில் பதிந்திருக்கும்  பாடல் அல்லவாஎழுதப்பட்ட இப்பாடல் வரிகளை வாசிப்பதுகூட சுகம்தானே இனிய குரலெடுத்து குழைந்து தரும் டி.எம்.சௌந்தரராஜன்!! வடிவம் மாறாத கவிதை தவழ்ந்து வருகின்ற அழகில் – இதுவரை இப்பாடலில் மயங்காத நெஞ்சங்கள் எங்கே?வாலி எழுதிய பாடல்களில் – இது ஒரு அழகியலின் பால் பதிவு!!

    உங்கள் அரும் கருத்துக்களை அள்ளி வழங்குங்கள்!!

    அன்புடன்..

    காவிரிமைந்தன்

    Share
  • தாயில்லாமல் நானில்லை – கவிஞர் ஆலங்குடி சோமு

    கவிஞர் ஆலங்குடி சோமு

     

    தாயில்லாமல் நானில்லை

     

    பொற்காலப் பாடல்களின் பூக்கோலங்கள் எனும் தலைப்பில் வெள்ளி தோறும் வருகின்ற இந்தத் தொடரில் …  பல்வேறு பாடலாசிரியர்களின் பாடல்கள் இடம் பெறவிருக்கின்றன.  சென்ற வாரம் புலவர் புலமைப்பித்தன்.  இந்த  வாரம்  கவிஞர் ஆலங்குடி சோமு.

    தாயின் காலடியில் உள்ளதடா சொர்க்கம் என்று நபிகள் நாயகம் கூறுகிறார்.  அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறது நன்னெறி! தாய் எந்த உயிருக்கும் ஆதாரமானவள்!  தாயை வணங்குதல் தரணியில் சிறந்ததென சான்றோர் முதலாய் சரித்திரம் சொல்லும்!  தாய்க்கு ஈடாக இவ்வுலகில் ஏதும் கிடையாது என்பதும் யாவரும் அறிந்ததே!

    அன்பு, கருணை, பரிவு, பாசம் இவைகளின் மொத்தப்படைப்பு தாய்மை!  ‘அவள் அன்னை மட்டுமல்ல!  வாழ்வின் ஆதாரம்!  கடவுள் ஒவ்வொரு உயிருடனும் இணைந்திருக்க இயலாத காரணத்தால் ‘தாயை’ படைத்தான் இறைவன் என்பார்.

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தாயன்பு மிக்கவராய் வாழ்ந்தார் என்பது மட்டுமின்றி தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் ‘தாய்’ என்கிற உறவுக்கு பெரிதும் முக்கியத்துவம் அளித்து தனது கோடான கோடி ரசிகர்களின் இதயங்களிலெல்லாம் தாய் மீது பாசம் மேலிட காரணமானார் என்பதுவும் மிகையில்லை!

    எம்.ஜி.ஆர் பிக்ஸர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட அடிமைப் பெண், கே. சங்கர் இயக்கத்தில் வெற்றிப் படைப்பாக வரலாற்றுப் பின்னணியில் வரையப்பட்ட கதை, திரைக்கதையில் முதல் பாடல் தாயைப் பற்றி அமைய வேண்டுமென எண்ணி பல்வேறு பாடலாசிரியர்களை வரவழைத்து எழுதிப்பெற்றார். வரையப்பட்ட பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் வழக்கம்போலவே அதற்கான பணத்தை அள்ளித்தந்தார். ஆனாலும் தான் திருப்தியடைகிற அளவு பாடல் வரப்பெறாமல் மேலும் மேலும் கவிஞர்களை எழுத வைத்தார்.  40 பாடல்கள் எழுதப்பெற்ற பின் 41வது பாடலாக கவிஞர் ஆலங்குடி சோமு அவர்கள் எழுதிய இப்பாடல் வரிகளில் ஒரு தெய்வ தரிசனம் கண்டார்.  அதையே படத்தில் இடம் பெறச் செய்தார்.

    தாயில்லாமல் நான் இல்லை
    தானேஎவரும் பிறந்ததில்லை
    எனக்கொரு தாய் இருக்கின்றாள்
    என்றும் என்னை காக்கின்றாள் (தாயில்லாமல்)

    • ·       
      ஜீவநதியாய் வருவாள்
      என்தாகம் தீர்த்து மகிழ்வாள்
      தவறினை பொறுப்பாள்
      தர்மத்தை வளர்ப்பாள்
      தரணியிலே வளம் சேர்த்திடுவாள் (தாயில்லாமல்)

    தூயநிலமாய் கிடப்பாள்
    தன்தோளில் என்னைசுமப்பாள்
    தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
    தாய்மையிலேமனம்கனிந்திடுவாள் (தாயில்லாமல்)

    மேகவீதியில் நடப்பாள்
    உயிர்மூச்சினிலே கலந்திருப்பாள்
    மலைமுடி தொடுவாள்
    மலர்மணம் தருவாள்
    மங்கலவாழ்வுக்கு துணைஇருப்பாள்
    மலர்மணம்தருவாள் (தாயில்லாமல்)

    ஆதிஅந்தமும் அவள்தான்
    நம்மை ஆளும் நீதியும் அவள்தான்
    அகந்தையை அழிப்பாள் ஆற்றலைகொடுப்பாள்
    அவள்தான் அன்னை மகாசக்தி(தாயில்லாமல்)

    அந்த தாய் இல்லாமல் நான் இல்லை
    தானே எவரும் பிறந்ததில்லை
    எனக்கொரு தாய் இருக்கின்றாள்
    என்றும் என்னை காக்கின்றாள்
    தாயில்லாமல் நான்இல்லை

     

    திரைக்கதையின்படிதன்னைப் பெற்ற தாயை முதன் முறையாகப் பார்க்கச் செல்லும் காட்சி!  அத் தாயின் காலில் அடிமை விலங்கு பிணைக்கப்பட்டிருக்கிறது!  அதை அகற்றும் முயற்சியில் தனயன் ஈடுபடதாயோ.. இந்த நாட்டில் எத்தனையோ பெண்கள் அடிமைகளாக்கப்பட்டு அவர்களின் கால்களில் அடிமை விலங்கு பூட்டப்பட்டிருக்கிறது.. அவைகளை எல்லாம் அகற்றிவிட்டு கடைசியாக உன் அன்னையின் விலங்கை அகற்ற வா மகனே.. என்று ஆணையிடுகிறார்.

    அம்மாவின் காலடியில் ஆசிபெற்று மகன் தன் கடமையாற்றப் புறப்படுகிற உணர்ச்சிகரமான கட்டம்உயிரூட்டும் பாடல் வரிகள் திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில் ஓங்கார நாதத்துடன் பாடிட டி.எம்.செளந்திரராஜன்

    திரையில் ஐந்து வடிவங்களாய் தோன்றும் எங்கள் எம்.ஜி.ஆர்.. அங்கே அன்னையின் முகம் விண்ணில் தோன்றி வாழ்த்துச் சொல்ல.. தாயைப் போற்றி.. அவள் சக்தியை எடுத்துரைக்க.. இந்த ஒற்றைப்பாடலுக்கு சக்தி உண்டு என்று எந்த சபையிலும் என்னால் கூற முடியும்!

    எம்.ஜி.ஆர் பாடல்களில் இந்தப்பாடல்.. தாய்க்காக தனயன் முழக்கும் ராஜபாட்டை!

    எம்.ஜி.ஆர்  தாய் பற்றி எடுத்துக்கூறிய எத்தனையோ சிகரங்களில் இப்பாடல் நிச்சயம் ஒரு இமயம்!

    http://www.youtube.com/watch?v=2K096xYEtsY

     

    மேற்கண்ட பாடல் பற்றிய தங்கள் உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கிறேன்.  இன்னும் இன்னும் இனிய பல தகவல்களோடு உங்கள் வாசலில்  காத்திருப்பேன்.

     

     

    அன்புடன்..

    காவிரிமைந்தன்

    Thai Illamal Naan Illai HD Song
    Share
  • சிறுகூடற்பட்டி முதல் சிகாகோ வரை..

    பொன்னை விரும்பும் பூமியிலே..

     

     

    மண்ணில் பிறந்த மனிதருக்கு இயல்பான ஆசைகள் மூன்று.. மண், பெண், பொன் என்பார்கள். இந்த மூன்றிலிருந்தும் விடுபட்டு வாழ்பவர்கள் ஞானியாகிறார்கள். எனினும் அஃது அத்தனை எளிதன்று!

    ஆசைகள் சிறகடிக்க.. சிறகடிக்க.. நாமும் கற்பனை வானத்தில் பறக்கிறோம். கைகூடவில்லையெனும்போது கதறியழுகிறோம். அளவான ஆசையை வைத்து வாழ்பவனே வளமாக வாழ்கிறான். எல்லாம் மனதின் பாகுபாட்டின் விளைவுகளே!

    காலையும் மாலையும் அந்திவானம் சிவப்பதும் அழகுதானே! செக்கர் வானம் சிவப்பது உழைப்பாளிகளின் இரத்தத்துளிகளாய் ஒரு கவிஞனுக்குப் படுகிறது! அந்த வானம் சிவப்பது தன் காதலியின் கன்னமென இன்னொரு கவிஞனுக்குப் படுகிறது. பொருள் ஒன்றுதான். எடுத்து ஆளும்விதம்தான் மாறுபடுகிறது! இதயம் இடம் மாறும் அதிசயம் காதலில் நடப்பதுண்டு என்றாலும் இடம் பார்த்தே காதல் வருகிறது என்பதே உண்மை. இப்படிப் பலபேர் இருந்துவிட்டுப் போகட்டும்! என்னை விரும்புவது நீயல்லவா? நீ பொன்னுக்காகவோ.. பொருளுக்காகவோ.. என்னை விரும்பவில்லையே! என்னை எனக்காகவே நீ விரும்புகிறாய்! அன்பு மலரே.. என் ஆனந்த மலரே.. இன்பம் நீயே.. என்று காதலன் தன் காதலியைக் கொண்டாடும் இன்பம் இருக்கிறதே கேளுங்கள்..

    ஆலயமணியில் உருவான திரைப்பாடல்.. நடிகர் திலகத்துடன் அபிநய சரஸ்வதி – இணைய கண்ணதாசன் – விஸ்வநாதன் ராமமூர்த்தி வெற்றிக் கூட்டணியில் விளைந்த முத்தமிழ்ப் பாடலிது! தென்றலோடு நடந்துபோகும் சுகம் காணுங்கள்!

    பொன்னை விரும்பும் பூமியிலே
    என்னை விரும்பும் ஓருயிரே
    புதையல் தேடி அலையும் உலகில்
    இதயம் தேடும் என்னுயிரே
    பொன்னை விரும்பும் பூமியிலே
    என்னை விரும்பும் ஓருயிரே
    புதையல் தேடி அலையும் உலகில்
    இதயம் தேடும் என்னுயிரே

    ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
    ஆலயமணியின் இன்னிசை நீயே(2)
    தாய்மை எனக்கே தந்தவள் நீயே
    தங்க கோபுரம் போல வந்தாயே
    புதிய உலகம் புதிய பாசம்
    புதிய தீபம் கொண்டு வந்தாயே
    (பொன்னை விரும்பும் பூமியிலே)

    பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
    பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்(2)
    அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
    அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
    இந்த மனமும் இந்த குணமும்
    என்றும் வேண்டும் என்னுயிரே
    (பொன்னை விரும்பும் பூமியிலே)

    ஆலமரத்தின் விழுதினைப் போலே
    அணைத்து நிற்கும் உறவு தந்தாயே(2)
    வாழைக் கன்று அன்னையின் நிழலில்
    வாழ்வது போலே வாழவைத்தாயே
    உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
    உள்ளம் ஒன்றே என்னுயிரே

    (பொன்னை விரும்பும் பூமியிலே)
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி
    திரைப்படம்: ஆலயமணி

    http://www.youtube.com/watch?v=5c6fQL-diJg

    http://www.youtube.com/watch?v=5c6fQL-diJg

    கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எளிமைக்கு சான்று. அது பற்றிய செய்திகள்.. விவரங்கள்.. இனிமை.. சொல்லாட்சி.. இவை பற்றிய வாசகர்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன்.
    அன்புடன்
    காவிரிமைந்தன்

    Share
  • கவிஞர் வாலி

    மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள்..

    இருபெரும் கவிஞர்களென்று இதயம் திறந்து பாராட்ட வேண்டுமென்றால் கவியரசு கண்ணதாசன் அவர்களையும் காவியக்கவிஞர் வாலி அவர்களையுமே சேரும்! திரைப்பாடல்கள் வரிசையிலே எளிய இனிய தமிழை ஏந்தி வந்த இவ்விருவரும் பல நேரங்களில் கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் கவிஞர் கண்ணதாசனால் இயற்றப்பட்டது என்கிற எண்ணம் மக்கள் மத்தியில் பலருக்கு உண்டு. இதுபற்றி மேடையிலே கவிஞர் வாலி அவர்கள் “எனது பாடலை தங்கத்தோடுதான் ஒப்பிடுகிறார்களே தவிர, தகரத்தோடு அல்ல” என்று பெருமை பொங்க குறிப்பிட்டார்.

    இருமலர்கள் என்னும் திரைச்சித்திரத்தில் ஒரு பாடல் காட்சி! சித்திரம்போல் இருவர் கல்லூரியில் நடைபெறும் கலைவிழா ஒன்றில் – காதலன் காதலியாக நடிக்க வேண்டம். பாத்திரப்படைப்புகளாக.. பொறுப்பேற்றவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களும் ஆவர். இக்காட்சியில் இடம்பெற்ற பாடல் .. மாதவிப் பொன்மயிலாள்.. தோகை விரித்தாள்.. கவிஞர் வாலியின் கைவண்ணம் மின்னுகிறது பாருங்கள்..

    ஆம்.. சங்ககாலப் புலவர்களின் சமகால வாரிசோ என்று எண்ண வைக்கும் இனிய வரிகள்.. இலக்கியத்தரம் மிகுந்த அற்புதப் பாடலாய் அமைந்திருந்த இப்பாடல் படமாக்கப்பட்டிருந்த விதமும் நம்மை ஒரு இலக்கிய காலத்திற்குள் கடத்திச் சென்றுவிடுகிறது. மெல்லிசை மன்னரின் இன்னிசையில் விளைந்த அனைத்து கீதங்களும் இன்ப நாதங்கள்!!

    குறிப்பாக கதையின் நாயகி பத்மினி அவர்களின் முகபாவனைகள், நாட்டியம் என மனக் கண்ணில் இன்றும் நீங்காத பாடலாய் நிலைபெறுகிறது. திரைப்பாடலிலும் இத்தனை இலக்கிய ரசம் பொங்கி வழிய முடியுமென இதோ வாலியின் வரிகள் வரிந்துகட்டிக் கொண்டு வருகின்றன பாருங்கள்!

    வானில் விழும் வில்போல் புருவம் கொண்டாள்.. இளம்
    வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்..
    கூனல் பிறைநெற்றியில் நிலவாட.. அந்த நிலவொளியில்
    நிழலாட.. அந்த விழி வழி ஆசைகள் வழிந்தோட..
    மாதவிப் பொன்மயிலாள் தோகைவிரித்தாள்.. வண்ண மையிட்ட ..

    முதலில் குறிப்பிட்டதைப் போல திரைப்படம் வெளியானபோது, அமோக வெற்றி பெற்றது மாதவிப் பொன்மயிலாள் பாடல்! இப்பாடல் கவிஞர் கண்ணதாசனால் எழுதப்பட்டது என்றே கவிஞர் கண்ணதாசன் இல்லத்திற்கு ரசிகர்கள் கடிதங்கள் வந்து குவிந்தன. கடிதங்களைப் படித்த கண்ணதாசன் இந்தப் பாடல் நான் எழுதவில்லையே.. தம்பி வாலி எழுதியது! அவற்றையெல்லாம் ஒரு மூட்டைகட்டி வாலியின் வீட்டில் கொண்டுபோய் கொடுக்கச் சொல்லி தனது உதவியாளரிடம் உத்தரவிட்டதுடன் கவிஞர் வாலிக்கு தொலைபேசியில் அழைப்புவிடுத்து இந்தப் பாடலைப் பற்றி மனம் திறந்து பாராட்டினார் என்பதும் அத்துடன் தனது பரிசாக ‘ரம்’ எனப்படும் மதுவகை பானம் ஒன்றையும் அனுப்பியதும் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் மேதாவிலாசத்திற்கு ஒரு சான்று!

    http://www.youtube.com/watch?v=8OH8Fdl0ack

    பாடல்: மாதவிப் பொன் மயிலாள்
    திரைப்படம்: இரு மலர்கள்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் வாலி
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    ஆண்டு: 1967

    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
    காதல் மழை பொழியும் கார்முகிலாய்
    காதல் மழை பொழியும் கார்முகிலாய் – இவள்
    காதலன் நானிருக்கப் பேரெழிலாய்
    காதல் மழை பொழியும் கார்முகிலாய் – இவள்
    காதலன் நானிருக்கப் பேரெழிலாய் – இங்கே
    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
    வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள் – இளம்
    வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
    வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள் – இளம்
    வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
    கூனல் பிறை நெற்றியில் குழலாட – கொஞ்சும்
    குளிர் முகத்தில் நிலவின் நிழலாட
    கூனல் பிறை நெற்றியில் குழலாட – கொஞ்சும்
    குளிர் முகத்தில் நிலவின் நிழலாட – கலை
    மானின் இனம் கொடுத்த விழியாட
    ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
    ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆ
    மானின் இனம் கொடுத்த விழியாட – அந்த
    விழி வழி ஆசைகள் வழிந்தோட – நல்ல
    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
    காதல் மழை பொழியும் கார்முகிலாய் – இவள்
    காதலன் நானிருக்கப் பேரெழிலாய் – இங்கே
    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் – நல்ல
    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
    காதல் மழை பொழியும் கார்முகிலாய் – இவள்
    காதலன் நானிருக்கப் பேரெழிலாய் – இங்கே
    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
    கரிதநிதபமகரி ஸரிகாமபதநி மாதவிப் பொன் மயிலாள்
    கரிதநிதநிபதநிஸ்ரிநீ தபதமபமகரி
    ஸரிகாமபதநி மாதவிப் பொன் மயிலாள்
    ஸ்ரிரிகமநீ நிஸ்ஸ்ரிகதா தநிநிஸ்ரி பாதமாபமகரிஸ
    ரிகமநி ஸ்ரிக மபதமா பதநி ஸ்ரிக நிரிஸ்தநி நித
    மாபதநிஸ்கரி மாதவிப் பொன் மயிலாள்
    தகிட தகிட திமி தகிட தகிட திமி தகிட தகிட திமி தகிட தகிட திமி
    தா ஜிம் கிடதகதரிகிடதோம் தா ஜிம் கிடதகதரிகிடதோம்
    தா ஜிம் கிடதகதரிகிடதோம் தாததிம்த தத்திம் தத்திம்
    பதநிஸ்நித தணதஜம் தபஜுணுத ஜம் ஜம்
    பதநி பதப ஜம் தஜம் தமதணகு ஜம் ஜம்
    பமபதீம் தகிட நிதம ஜம் ஸ்ரித ஸ்நித சுகம் தகிட கரிநிதஜம்
    பதநிஸ் தஜம் ஸ்ரிகம தகிடதஜம் கரிநீ ததரித ஜம்
    ரிகமபா பதா தஜம் தணம் ஸ்கரி நிரிஸ் தணதா ப ஜணும்
    ஸ்ரிகமாபதநீஸ்ரி கரிநீத தரிகிணதோம்
    ஸ்ரிகாமபதாநிஸ் ரிஸ்நீத தரிகிணதோம்
    ரிககாரி நிஸ்தாநி கரிநீத தரிகிணதோம் தரிகிணதோம் தரிகிணதோம்
    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்

    http://youtu.be/8OH8Fdl0ack

    http://youtu.be/8OH8Fdl0ack

    கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எளிமைக்கு சான்று.  அது பற்றிய செய்திகள்.. விவரங்கள்.. இனிமை..  சொல்லாட்சி.. இவை பற்றிய வாசகர்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன்.
     
     
    அன்புடன் 
    காவிரிமைந்தன் 
    Share
  • சிறுகூடற்பட்டி முதல் சிகாகோ வரை..

    கட்டித்தங்கம் வெட்டியெடுத்து..

       ஆயிரமாயிரம் உணர்வுகளை அழுத்தம் திருத்தமாய் சொல்வது கதை!

     

    அதனிலும் அடர்த்தியாய் ஒரு சில வரிகளில் உரைப்பது கவிதை!  கதையும் கவிதையும் கைகோர்த்து நடத்திய ஊர்வலம் திரைப்படம்! இன்னிசை  என்னும் பின்னணியாலே இதயத்தைத் தொடுகின்ற கலையை நம் திரைக்கலைஞர்கள் செவ்வனே செய்தளித்திருக்கிறார்கள் என்பதற்கு இன்றும் நம் இதயம் தொடுகின்ற அப்பாடல்களே சாட்சி!!

    மக்கள் திலகத்தை வைத்து அதிகமான திரைப்படங்களைத் தயாரித்த மாபெரும் தயாரிப்பாளர்  சாண்டோ சின்னப்பத் தேவர் ஆவார்.  அத்தனைப் படங்களிலும் அற்புத இசையமைப்பு கே.வி.மகாதேவன் அவர்கள்.  பாடல்கள் அனைத்தும்  கவியரசு கண்ணதாசன் அவர்களே!!

    தேவர் படங்களென்றால் விறுவிறுப்பும்சண்டைக் காட்சிகளும் விலங்குகளைச் சாகசம் செய்ய வைத்த வித்தியாசமான படைப்பாகவும் ஒருபுறமிருக்கதேனான இசையில் நம்மை மயக்கும் தெள்ளுத் தமிழ்ப்பாடல்களுக்கும் பஞ்சமில்லை. இவ்வரிசையில் அமைந்திருக்கும் நூற்றுக்கணக்கான பாடல்கள் – இன்றும் சாகாவரம் பெற்றவையாக மக்கள் மனதில் உலா வந்து கொண்டிருக்கின்றன.  திரைக்கதையின் ஓட்டத்தில் தொய்வின்றி இருக்க தேவரின் பார்முலா’ ஒவ்வொரு இருபது நிமிட இடைவெளியிலும் சண்டைக் காட்சிகளும் பாடல் காட்சிகளும் இடம் பெற வேண்டுமென்பதாகும்.

    தாய்க்குப் பின் தாரம் எனத் தொடங்கி.. ’ வரிசையில்.. அதுவும் மக்கள் திலகம் கதாநாயகனாக.. தர்மம் தலைகாக்கும்தாயைக் காத்த தனயன்தாய் சொல்லைத் தட்டாதே.. தனிப்பிறவி என பட்டியல் நீளும்!

    இவ்வரிசையில் அமைந்த தாயைக் காத்த தனயன்’ திரைப்படத்தில் விளைந்த பாடலொன்று காதல் சாம்ராஜ்ஜியத்திற்குப் பட்டாபிஷேகம் நடத்தியதுபோல விளங்குகிறது!

    ஒரு பெண்ணை வர்ணித்துப் பாடல் புனைவது.. மரபாக நடந்து வருகின்ற ஒன்றுதான்..  அதிலே கண்ணதாசன் பாணி இதுவோ..

    கட்டித்தங்கம் வெட்டியெடுத்து..
    கட்டித் தங்கம் வெட்டி எடுத்து
    காதல் என்னும் சாறு பிழிந்து
    தட்டிதட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா!-அவள்
    தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!… (கட்டி)

    தொட்டுத் தொட்டு நின்றன கைகள்!
    சுட்டுச் சுட்டுக் கொன்றன கண்கள் – தான்
    கிட்டக் கிட்ட வந்தது கண்டு 
    எட்டி எட்டிச் சென்றது வண்டு!… (கட்டி)

    தங்கரதம் போல வருகிறாள்! – அல்லித் 
    தண்டுகள் போலே வளைகிறாள்!
    குங்குமப் பூப்போல் சிரிக்கிறாள்-இன்பக்
     
    கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்!… (கட்டி)

    காலையில் மலரும் தாமரைப் பூ! – அந்திக் 
    கருக்கலில் மலரும் மல்லிகைப் பூ!
    இரவில் மலரும் அல்லிப்பூ! – அவள்
    என்றும் மணக்கும் முல்லைப் பூ!… (கட்டி)

    காதல் ரசம் பொழியும் பாடலாகவே எல்லோரும் நோக்கும் இந்த வரிக்கு (பம்மல்) கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கத் தலைவி பேராசிரியை டாக்டர் சரசுவதி ராமனாதன் அவர்கள் தந்த விளக்கமிதோ..

    குங்குமப் பூ போல் சிரிக்கிறாள்..

    ஒரு பெண் குங்குமப்பூ போல் சிரிக்க வேண்டும். குங்குமப்பூ எப்படியிருக்கும்இதழ் எப்படியிருக்கும் என்பதை நோக்கும்போது .. மிகச் சிறிய கோடு விழுந்ததுபோல். தெரியுமாம்.. அதுதான் அந்தப்பூவின் இதழ் திறப்பு.. பெண்கள் அப்படித்தான் மெல்லிய புன்னகை புரிந்தால்தான் அழகு! (எனவேதான் பொம்பளை சிரிச்சா போச்சு என்கிற பழமொழி கூட வந்துள்ளது).

     

    கட்டித்தங்கம் வெட்டியெடுத்து..

     

    கட்டித் தங்கம் வெட்டி எடுத்து
    காதல் என்னும் சாறு பிழிந்து
    தட்டிதட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா!-அவள்
    தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!… (கட்டி)

    தொட்டுத் தொட்டு நின்றன கைகள்!
    சுட்டுச் சுட்டுக் கொன்றன கண்கள் – தான்
    கிட்டக் கிட்ட வந்தது கண்டு 
    எட்டி எட்டிச் சென்றது வண்டு!… (கட்டி)

    தங்கரதம் போல வருகிறாள்! – அல்லித் 
    தண்டுகள் போலே வளைகிறாள்!
    குங்குமப் பூப்போல் சிரிக்கிறாள்-இன்பக்
     
    கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்!… (கட்டி)

    காலையில் மலரும் தாமரைப் பூ! – அந்திக் 
    கருக்கலில் மலரும் மல்லிகைப் பூ!
    இரவில் மலரும் அல்லிப்பூ! – அவள்
    என்றும் மணக்கும் முல்லைப் பூ!… (கட்டி)

     
    http://www.youtube.com/watch?v=1VbkvbbJ4p4
    http://www.youtube.com/watch?v=1VbkvbbJ4p4

     

    காவிரிமைந்தன்

    கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எளிமைக்கு சான்று. அது பற்றிய செய்திகள்.. விவரங்கள்.. இனிமை.. சொல்லாட்சி.. இவை பற்றிய வாசகர்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன்.
    அன்புடன்
    காவிரிமைந்தன்

    Share
  • பொற்காலப் பாடல்களின் பூக்கோலங்கள்…

     காவிரிமைந்தன் 

    அன்றுதொட்டு இன்றுவரை அர்த்தமுள்ள பாடல்கள் மக்கள் மனதில் பசுமையாய் நிறைந்திருக்கின்றன.அப்பாடல் வரிகள் பசுமரத்தாணிபோல் பதிவாகியிருக்கின்றன.கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கும் கவிஞானி வாலி அவர்களுக்கும் தனித்தனியே நூல்வடிவம் தந்தபின்னர், ஏனைய பல கவிஞர்கள்-திரைப்பாடலாசிரியர்கள் நெஞ்சில் உலா வந்த வண்ணம் உள்ளனர்.

    மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை முதல் புலவர் புலமைப்பித்தன் என நெஞ்சில் குடிகொண்ட பாடல்களை வடித்தெடுத்த படைப்பாளர்களை – கால நிமித்தமாய் அவர்களின் மறக்கவொண்ணாப் பாடல்களைப் பற்றிய பகிர்வுகளை உங்களுடன் பரிமாற விழைகின்றேன்!

    இந்த நூலுக்கு பொற்காலப் பாடல்களின் பூக்கோலங்கள் என்று பெயரிட்டுள்ளேன்.இதிலே விடுபட்டுப் போகாத வண்ணம்,தமிழ்கூறும் நல்லுலகம் தந்த சீர்மீகு பாடலாசிரியர்களை பட்டியலிட்டுத்தான் இப்படைப்பைத் துவங்குகிறேன்.  மேலும் இவர்களால் எழுதப்பெற்று மக்கள் மன்றத்தில் வெற்றி பெற்ற பாடல்கள் நாளைய தலைமுறைக்கு சேர்த்தாக வேண்டம் என்கிற வேட்கையும் இந்நூல் வடிவம் பெறக் காரணமாகும்.

    உண்மையைச் சொல்வதென்றால், இப்பாடல்கள் எழுதப்பெற்ற திரைப்படங்களைத்தாண்டி, மக்கள் வாழ்வியலோடு கைகோர்த்து கால இடைவெளி வென்று வாழுகின்றன என்பதற்கு சத்திய சாட்சியாக மக்கள் பல்லாயிரம், பல இலட்சம், பல கோடி என பரப்பளவு விரியும்.

    சொல்லாட்சி, பொருள், கருத்து, உணர்ச்சி, வாழ்க்கை தத்துவம், என எண்ணிலாத் தளங்களில் இப்பாடல்கள் மேலோங்கி நிற்பதும் அதற்கேற்ற இசை வடிவம் நம்மை இன்னும் நெருங்கச்செய்யவும் பொற்காலப் பாடல்களின் பூக்கோலங்கள் என்கிற பெயருக்கு கட்டியங்கூறும்!

    வார்த்தைப் பூக்களாகவும், சில நேரம் புரட்சிக்கு வித்திடவும், வார்த்துத் தந்த கவிஞர் பெருமக்களை ஒருசேரப் போற்றி பாராட்டவும் வணங்கிடவும் கடமைப்பட்டுள்ளேன்!  இந்நூல் கவிஞர் பெருமக்கள் பலரையும் உள்ளடக்கமாய் வடிவம் பெறுவதால், அனைத்துப்பாடல்களும் இடம்பெற வழிகளில்லை!

    எனினும் இடம்பெற்றுள்ள பாடல்கள் அக்கவிஞர்களின் மேன்மையினை பறைசாற்ற ஏதுவாக அமையும் என்கிற நம்பிக்கை எனக்குத் திடமாக உண்டு.  வெறும் கற்பனைகளைக் காற்றில்பிடித்து பட்டம் விடுபவர்களாக நில்லாமல், தங்கள் தமிழ் ஆற்றலை – இந்தச் சமுதாயத்திற்கு ஏதோ ஒரு வகையில் தந்துவிட வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியோடு ஆற்றிய பணிகளால் விளைந்த முத்துக்களிவை என்பதனை முன்மொழிவது என் கடமையாகிறது!

    புலவர் புலமைப்பித்தன்

    • ·         இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவில் தொட்டிலைக் கட்டிவைத்தேன்..

    திரைப்பாடல் என்றாலும் எல்லோரையும் திரும்ப வைத்த பாடல்!  கருத்துப் பெட்டகத்தைத் தன் கவி வண்ணத்தால் புலவர் புலமைப்பித்தன் புனைந்து தந்த பாடல்!  மக்கள் திலகத்திற்காக மலர்ந்த பாடலிது – மக்கள் மனதிலெல்லாம் நிறைந்திருக்கும் பாடல்! மெல்லிசை மன்னரின் இன்னிசையில் விளைந்த பாடல்! திரையில் இரு வேறு கட்டங்களில் இரு வேறு குரல்களில் இடம்பெற்ற பாடல்! மறைந்த எஸ்.வரலட்சுமி அவர்களின் கம்பீரக்குரலில் தவழ்ந்திடும் தாலாட்டாகவும் பத்மஸ்ரீ கே.ஜே.யேசுதாஸ் குரலில் குழைந்திடும் அன்பின் நீலாம்பரியாய்  நீதிக்குத் தலைவணங்கு திரைப்படத்தில் பிறந்து இந்த பூமியில் என்றும் தவழும் பாட்டு!

    பாட்டுடைத்தலைவன் கதாநாயகனாக.. வளர்ந்த பின்னரும் அடம்பிடிப்பதும். அன்னைக் காட்டும் பரிவில்..  மலர்ந்த முகம் காட்டி..கண்ணுறங்கும் காட்சியில்.. புலவர் புலமைப்பித்தனின் கனிந்த வரிகள் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இனிய ஸ்வரங்களில் இறக்குமதியாக.. தங்கள் குரலால் அதைப் பரிமாறியிருக்கிறார்கள்.  இதில் கவி விருந்தும் உண்டு!  நல்லிசையால் செவி விருந்தும் உண்டு!

    தாய் பாடும் பாட்டல்லவா தாலாட்டு! தங்கக் கிண்ணம், வெள்ளித்தட்டு, இவைகளைக் காட்டிலும் மதிப்பிடமுடியாத தாயின் பாசம் பரிணமிக்க.. தன் பிள்ளையின் கொள்ளை அழகை.. கொட்டி அளக்கிறார் பாடலில்..

    நின்றுநிமிர்ந்து என் பிள்ளை நடக்கையில் ராஜநடை தோற்கும்..

    எழில் நீந்தும் உடலினை காணும்பொழுதினில் சிற்பம் அதைக் கேட்கும்!”

    பொன்மனச் செம்மலுக்கு புகழாரமாய் அமைந்த பாட்டு!  பலகோடி தமிழ்மக்களின் நெஞ்சங்களில் குடியிருக்கும் தலைவனுக்கு –தாயை முதல் கடவுள் என்று வாழ்ந்து காட்டிய தலைமகனுக்கு – அந்த தாயே பாடிய அன்பின் நீராட்டு!

    மற்றுமொரு முறை தன் தாய் பாடிய பல்லவியைக் கொண்டு, இந்தச் சமுதாயத்திற்கு நீதிகளையும் நெறிகளையும் தன் ஒவ்வொரு திரைப்படத்திலும் சொல்லிவந்த எம்.ஜி.ஆர். பாடும் பாடலாய்..

    • இந்தப்பச்சைக்கிளிக்கொருசெவ்வந்திப்பூவில்
      தொட்டிலைக்கட்டிவைத்தேன் அதில்
      பட்டுத்துகிலுடன்அன்னச்சிறகினை
      மெல்லெனஇட்டுவைத்தேன்
      நான்ஆராரோஎன்றுதாலாட்ட
      இன்னும்ஆராரோவந்துபாராட்டஎந்தக்குழந்தையும்நல்லக்குழந்தைதான்
      மண்ணில்பிறக்கையிலே
      எந்தக்குழந்தையும்நல்லக்குழந்தைதான்
      மண்ணில்பிறக்கையிலே
      பின்நல்லவராவதும்தீயவராவதும்
      அன்னைவளர்ப்பதிலேநான்ஆராரோஎன்றுதாலாட்ட
      இன்னும்ஆராரோவந்துபாராட்ட

      தூக்கமருந்தினைப்போன்றவை
      பெற்றவர்போற்றும்புகழுரைகள்
      நோய்தீர்க்கும்மருந்தினைப்போன்றவை
      கற்றவர்கூறும்அறிவுரைகள்
      கூறும்அறிவுரைகள்  (இந்தப்பச்சைக்கிளிக்கொரு)

    ஆறுகரையில்அடங்கிநடந்திடில்
    காடுவளம்பெறலாம்
    தினம்நல்லநெறிகண்டுபிள்ளைவளர்ந்திடில்
    நாடும்நலம்பெறலாம்

    நான்ஆராரோஎன்றுதாலாட்ட
    இன்னும்ஆராரோவந்துபாராட்ட

    பாதைத்தவறியகால்கள்விரும்பிய
    ஊர்சென்றுசேர்வதில்லை
    நல்லபண்புத்தவறியபிள்ளையைப்பெற்றவள்
    பேர்சொல்லிவாழ்வதில்லை

    இந்தப்பச்சைக்கிளிக்கொருசெவ்வந்திப்பூவில்
    தொட்டிலைக்கட்டிவைத்தேன்  அதில்
    பட்டுத்துகிலுடன்அன்னச்சிறகினை
    மெல்லெனஇட்டுவைத்தேன்
    நான்ஆராரோஎன்றுதாலாட்ட
    இன்னும்ஆராரோவந்துபாராட்ட ம்…ம்…ம்…ம்..

    பொதுவாக பெண்மைதான் தாலாட்டுப் பாடும்!  பொன்மனச் செம்மலின் இதயம் எவ்வளவு மென்மை வாய்ந்தது என்பதற்கு இந்தப் பாடலில் அவர் முகம் காட்டும் அத்தனை நளினங்களும்.. பாவங்களும்.. கதையின் நாயகியை மட்டும் கண்ணுறங்கச் செய்யவில்லை!  நம்மையும்தான்!!

    எத்தனையோ ஆசிரியர்கள் எத்தனையோ நாட்களாய் நடத்தினாலும்கூட இத்தனை அருமையாய்.. இத்தனை அழுத்தமாய் நம் இதயங்களில் இடம் பெற வைத்துவிட முடியுமா?

    வாழ்க்கைக்கு விளக்கம்!  பயணத்திற்கு பாதை!  உள்ளத்தில் ஏந்த வேண்டிய இலட்சியம்!  சராசரி மனிதர்களுக்காகவே சமைக்கப்பட்ட பாடல்!  சரித்திரம் படைக்கவும் நம்மை உசுப்பிவிடும் வரிகள்! எளிய சொற்களால் புரியும் விதத்தினில் கற்பனை கலக்காத கருத்துப் புதையலிது!

    கேட்கும் நேரம் கண்ணுறங்கலாம்!  கேட்கும்போதே உள்ளம் விழிக்கலாம்!   உலகம் முழுவதும் உயர்ந்த பாடல் வரிசயைிலே நிச்சயமாய் இடம் பெற்ற பாடல்!  இதன் படைப்பாளர்களை .. கூட்டணியை நாம் போற்றியே பாராட்டுவோம்!

    http://www.youtube.com/watch?v=ApWApnJisy0
    Intha pachai HD Song

     

    காவிரிமைந்தன்

    கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எளிமைக்கு சான்று.  அது பற்றிய செய்திகள்.. விவரங்கள்.. இனிமை..  சொல்லாட்சி.. இவை பற்றிய வாசகர்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன்.
     
     
    அன்புடன் 
    காவிரிமைந்தன் 

     

    Share
  • சிறுகூடற்பட்டி முதல் சிகாகோ வரை.. – கவியரசு

    கவிஞர். காவிரிமைந்தன்

    தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா

    காலம் எத்தனையோ கவிஞர்களை பிரசவித்திருக்கிறது! அவர்களும் தங்கள் திறமையால்.. தமிழ் மொழியில் அற்புதங்களைப் படைத்துச் சென்றிருக்கிறார்கள். கண்ணதாசன் அவர்களும் இந்தவழியில்தான் வந்து சென்றார்! ஆனால் சாதாரண ஜீவமரண கணக்குக்குள் அடங்கிவிடாத ஜீவநதியாய் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறார் தன் படைப்புகளால்! அவரின் கவித்துவம் எளிமையில் பிறக்கிறது! நீங்களும் நானும் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளைத்தான் அவரும் கைப்பிடிக்கிறார். ஆனால் கவிஞரின் வசப்பட்டதும்.. அந்த வார்த்தைகள் பெருமையுறுகின்றன. நம்மை உடனே வியப்பில் தள்ளிவிடுகின்றன!

    இயற்கையாக நடக்கும் எதுவும்கூட கவிஞனின் கைவண்ணத்தால் இன்னும் மெருகேறுகிறது! இறைவனை .. இந்த உலகில் கண்ணதாசன் இழுத்துவந்ததைப் போல் இன்னொருவர் செய்ததுண்டா என்றால் சந்தேகமே!

    கடவுளை வணங்கிப் போற்றி வந்தனை செய்தவர்தான் என்றாலும் பாடல் வரிகளில் நியாயம் கேட்கத் தயங்காத எதார்த்தவாதியாக பரிணமிக்கிறார்! பாடலின் பல்லவி தவிர மூன்று சரணங்கள்.. திரைக்கதைக்காக எழுதப்பட்ட பாடல்தான் என்றாலும்.. இதில் உள்ள நியாயங்கள் திரைப்படத்தைத் தாண்டியும் உணரப்படுகிறதே!

    தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
    நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா
    ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா
    ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா
    இது இறைவனுக்கு ஓய்வு நேர விளையாட்டம்மா

    பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன்
    படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா
    அம்மா அம்மா அம்மம்மா
    பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன்
    படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா – மீண்டும்
    பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா – மீண்டும்
    பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா

    பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும்
    இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா
    அம்மா அம்மம்மா
    பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும்
    இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா – என்றும்
    இது தான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா – என்றும்
    இது தான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா

    திரைப்படக்காட்சியில் புன்னகை அரசி கே.ஆர்.விஜயாவின் பண்பட்ட நடிப்பில் பார்ப்பவர்கள் கண்ணில் நீர்வரும்! இசையின் வடிவமோ திரையிசைத்திலகத்தின் கைவண்ணத்தில் உணர்வுகளை மீட்ட வருகிறது! ஏ.பி.நாகராஜன் அவர்களின் இயக்கத்தில் சரஸ்வதி சபதம் திரையோவியம். இப்பாடலைக் கேட்கும் போது இதயத்தின் துடிப்பு ஏனோ இருமடங்காகிறது!!

    http://youtu.be/xjiRbHe-VG4

    தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
    நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா
    தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
    நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா
    ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா
    ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா
    இது இறைவனுக்கு ஓய்வு நேர விளையாட்டம்மா

    தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
    நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா

    பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன்
    படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா
    அம்மா அம்மா அம்மம்மா
    பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன்
    படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா – மீண்டும்
    பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா – மீண்டும்
    பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா

    தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
    நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா

    பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும்
    இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா
    அம்மா அம்மம்மா
    பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும்
    இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா – என்றும்
    இது தான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா – என்றும்
    இது தான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா

    தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
    நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா

     

    Song: தாய் தந்த பிச்சையிலே – thai thantha pichchaiyile
    Movie – திரைப்படம்: சரஸ்வதி சபதம்
    Singers: P. Suseela பாடியவர்: P. சுசீலா
    Lyrics: Poet Kanndasan இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    Music: K.V. Mahadevan, இசை: K.V. மஹாதேவன்

    கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எளிமைக்கு சான்று.  அது பற்றிய செய்திகள்.. விவரங்கள்.. இனிமை..  சொல்லாட்சி.. இவை பற்றிய வாசகர்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன்.
     
     
    அன்புடன் 
    காவிரிமைந்தன் 

     

    Share
  • வாழும் தமிழே வாலி! (1)

    தமிழ்த்திரையுலகில் தமிழ் மொழியை தங்க சிம்மாசனத்தில்

    தம் பாடல் வரிகளால்  அமரவைத்த பெருமைக்குரியவர்களில் காவியக்கவிஞர் வாலி அவர்களும் முக்கிய இடம் வகிக்கிறார்.  ஏறத்தாழ 55 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்தம் எண்ணங்கள்எழுத்துக்கள் – வண்ணத்தமிழ் உலாவாக மக்கள் மனதில் நடைபெற்றது  என்பதனை..

    காவியக் கவிஞர் வாலியின் புகழ்பாடி

    காவிரிமைந்தன் எழுதும்

    வாழும் தமிழே வாலி!

    தொடர் ஆரம்பம்!!

     

    போற்றுதலுக்குரிய இவர்தம் தமிழ்ப்பணி இவரை அங்குலம் அங்குலமாக உயர்வுபெறச் செய்திருக்கிறது.  மறக்க முடியாத மாணிக்க வரிகளுக்குச் சொந்தக்காரராகத் திகழும் கவிஞர் வாலி அவர்களின் பெயரில்  உள்ள அர்த்த புஷ்பங்கள் ஆச்சர்யம் தரவைக்கின்றன. புராணத்தில் வருகின்ற வாலி’ எனும் பாத்திரப் படைப்பின்படி. எதிரே உள்ள பலசாலியின் பலத்தில் பாதியைப் பெற்றுவிடுவதாக உள்ளது.  அஃது உண்மையோ என்னவோ.. தமிழ்த்திரையுலகில்  தமிழ்மொழிக்கு அணிகலன்கள் பூட்டிய கவிஞர் பெருமக்கள் தஞ்சை ராமையாதாஸ்உடுமலை நாராயண கவிகவிஞர் மருதகாசிபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்கவியரசு கண்ணதாசன் முதலான ஜாம்பவான்கள் முன் – அவர்தம் திறமையெல்லாம் கலந்த கலவையாய்.. முத்தமிழில் இவர் இயற்றியுள்ள அரும்பெரும் பாடல்கள் – வார்த்தை வளம்அர்த்தச் செறிவுகள்மொழியின் ஆளுமைஇசையோடு இணைந்த அற்புதங்கள்,உள்ளடக்கம்பொருளடக்கம்மென்மை என எண்ணிலா இன்பங்களை படிக்க.. படிக்க.. ரசிக்க.. ரசிக்க.. கேட்க.. கேட்க.. இன்பம் தருகின்ற கற்பகத்தருவாய் நிலைத்து நிற்கின்றன.

    மேலும்வாலிபம் என்கிற சொல்லிலும் முன்பாதி தான்’ என்பதை முழுக்க முழுக்க உண்மையாக்கிடும் இவர்தம் காதல் பாடல்கள் கனிரசம் சொட்டச் சொட்டத்  ததும்பி வழிவதை எவர் மறுக்க முடியும்?  அருமையான கவிஞர் இவரை தமிழ்த்திரையுலகம் சரியாகக் கண்டெடுத்துஆதரித்துஊக்குவித்து உயர்வுபெறச் செய்தது தமிழுக்கு கிடைத்த பெருமையென்றே சொல்லலாம்.  இவர்தம் பாட்டுமொழி கலந்த பல்சுவைகலந்த தேவாமிர்தம்! இவரின் தமிழாற்றல் நாடறிந்த ஒன்றுமட்டுமின்றி எந்த ஒரு தமிழனையும் தன் வசமிழுக்கும்! 

    இவரின் பாடல்களில் முகிழ்த்தல் என்பது ஒரு சுகானுபவம்! இவரின் கற்பனைச் சிறகுகள் எட்டியிருக்கும் உயரம் அளவிடற்கரியது!  எளிமையான சொற்களையே கையாண்ட போதும்.. அவை தக்க இடத்தில்.. இடம்பெறுவதால் வலிமை மிக்கவையாய் காட்சி தருகின்றன! காட்சியமைப்புகதையோட்டம்பாத்திரப் படைப்பு இவற்றின் தன்மைகளை ஒட்டுமொத்தமாய் வார்த்தைகளில் வடித்துக் காட்டும்போது கவிஞரின் கைவண்ணம் மிளிர்கிறது.  பட்டுத் தெறிக்கும் முத்துச் சரங்களாய்  வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் நம் உள்ளத்திரையிலும் நிழலாடுகின்றது.  இத்தகு கவிஞரை நேரிலே  கண்டு நெஞ்சம் நிறைய உரையாடி மகிழ்ந்திருக்கிறேன் என்பது மட்டிலா ஆனந்தம் கொள்ளச் செய்கிறது!  கட்டுக்கடங்காத காவிரிபோல்  சொற்களின் சுவையூட்டம்பேசுகின்ற போதிலும் வெட்டவெளிச்சமாய் தென்பட்டதை மறக்க முடியுமா?  உள்ளம் திறந்து பேசுகின்ற ஒரு உன்னத மனிதரை எண்ணியெண்ணி நெகிழ்கிறேன்.

    அவரின் கவியாற்றலைஎனது சிறுவயது முதற்கொண்டு பல்வகைகளில் கேட்டுச் சுவைத்த ஒரு ரசிகனாய்.. குறிப்பாக நான் கடவுளாக வணங்கும் என் கண்ணதாசனைக் காணுகின்ற பேற்றினை ஒருமுறைகூடப் பெறவில்லை என்கிற ஆதங்கம் தீர.. அவரோடு நேரில் பலமுறை சந்தித்து உரையாடுகின்ற அதிர்ஷ்டசாலியாய்.. என்ன ஓய்.. என்று ஓங்காரமாய் அழைக்கின்ற பாக்கியம் பெற்றவனாய் – அவர்தம் 108 பாடல்கள் பற்றி  நான் எழுதிய வாழும் தமிழே வாலி என்கிற நூலை அவரிடம் சமர்பித்து கவிஞரின் பரிபூரண ஆசிகளைப் பெற்றதோடு.. கண்ணதாசனுக்கும் வாலிக்கும் நீதான் பாலம் என்று அத்திருமகன் மொழிந்ததைப் பெரும்பேறாகக் கருதுகிறேன்.

    அதில் ஒரு பங்களிப்பாக.. வாழும் தமிழே வாலி என்கிற இந்தத் தொடர் இன்றுமுதல் தொடங்குகிறது! உங்கள் பார்வைக்காக.. உங்கள் பின்னூட்டங்களுக்காக.. உங்கள் ரசனைக்காக!!

    இஃது திரைப்பாடல்கள் மக்கள் மனதில் எத்தனை தாக்கத்தை தந்திருக்கின்ற என்பதற்கான சாட்சியாகும்.  நன்றிப் பெருக்கோடு இனிமையான அந்த வார்த்தைப் பிரயோகங்களால் கட்டுண்டுபோன இதயங்களின் சார்பாக.. கவிஞர் வாலி அவர்களின் ஆகச்சிறந்த பாடல்களைப் பற்றிய என் கருத்துக்குவியல்களை உங்கள் முன் படைக்கிறேன்.  இதில் உள்ள சிறப்புகள் அனைத்தும் காவியக் கவிஞர் வாலி அவர்களுக்கே காணிக்கையாக்குகின்றேன்!

    காற்று வாங்கப் போனேன்..

    காலங்களை வென்று சில நூறு பாடல்களே சிரஞ்சீவிதம் பெற்றுத் திகழ்கின்றன எனில் அதற்கு காரணம் வார்த்தை வளம், கருத்துச் செறிவு, கற்பைன அழகு, பொருத்தமான இசையமைப்பு, பாடிய குரல் என்று இதற்கான கூட்டணி நம் கண்முன்னே நிழலாடுகிறது.

    பலமுறை கேட்ட பாடலிது என்றாலும்  மறுமுறை கேட்கத்தூண்டினால் அதுவே பிரசித்தி பெற்ற பாடலாகும். இதோ.. அவ்வரிசையில் காவியக் கவிஞர் வாலி அவர்களின் கற்பனை முகிழ்ப்பில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையருவியில் ஏழிசை மன்னர் டி.எம்.செளந்திரராஜன் அவர்களின் குரலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் திரையில்  தோன்றிடும் கலங்கரை விளக்கம் பாடலுக்கு இன்னும் சில விளக்கங்கள்.. அல்ல.. சுவையான சம்பவம் ஒன்று!!

    இப்பாடல் இயற்றப்பட்ட நாளில் நடந்த அந்த சுவையான சம்பவம் கவிதைபோலவே இனிமையானது! ரசிக்கத்தக்கது!! சரவணா பிலிம்ஸாரின் தயாரிப்பில் அமரர் கே.சங்கர் இயக்கத்தில் உருவான இப்பாடல் பதிவின்போது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்கள் கவிஞர் வாலி அவர்களிடம் தான் அணிந்திருந்த விலைமதிப்பான தங்கச் சங்கலியைக் கழற்றி ஆர்மோனியத்தின்மீது வைத்து நான் பாராட்டும் அளவிற்கு ஒரு அருமையான பல்லவியைத் தந்து இந்தச் சங்கலியை எடுத்துக் கொள்ளுங்கள் என்றாராம். கவிஞரும் தனது கற்பனா வானத்தில் உலவி..

    காற்றுவாங்கப் போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்..

    அதைக் கேட்டுவாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்னவானாள்?

    என்கிற பல்லவியை எழுதிக்காட்டினாராம்.  மெல்லிசை மன்னர் அப் பல்லவியை மெச்சிப் பாராட்டி.. தனது தங்கச் சங்கலியை எடுத்து வாலி  அவர்களுக்கு வழங்க.. அதை மறுத்த வாலி அவர்கள்.. தான் இதைவிட மதிப்புமிக்க ஒன்றையே  பெற விரும்புவதாக தெரிவித்தாராம்!  திடுக்கிட்ட மெல்லிசை மன்னர் இதைவிடவா என்று திரும்பக் கேட்டார்.  ஆம்.. உங்கள் அன்பும் ஆசியும் என்றென்றும் வேண்டும் என்றார்  வாலி!  கவிஞரின் உள்ளம் கண்டு ஆனந்த லஹரியில் மூழ்கிய எம்.எஸ்.வி. இதயம் நிறைய வாழ்த்தியதோடு.. என்றும்  அவருடன் கைகோர்த்து தமிழ்த்திரைக்கு பல்லாயிரம் பாடல்கள் வழங்கியிருக்கிறார் என்பதே வெற்றிச் சரித்திரம்!

    பாடல் வரிகளில் ஒவ்வொரு சரணத்திலும் உள்ள கோடி சுகம் என்ன என்பதை நான் கொஞ்சம் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்..

    என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை..

    என் பார்வை நீந்துமிடவோ அவள் பருவமென்ற ஓடை..

    நடை பழகும்போது தென்றல் விடை சொல்லிக் கொண்டு போகும்

    அந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளிக்கொண்டு போகும்!

    இதுபோல் பாடல் பிறந்த கதைகள் எத்தனையோ இருந்தாலும் செவிக்கு வந்து சேர்ந்தவை சிலதான் எனும்போது இதற்காக ஒருவரை ஒவ்வொரு கவிஞரும் நியமித்திருந்தாலும் நலமாகவே இருந்திருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது!!

    http://www.youtube.com/watch?v=8rL9RjU8A6U

    http://www.youtube.com/watch?v=8rL9RjU8A6U

     
    நான் காற்று வாங்கப் போனேன்

    நான் காற்று வாங்கப் போனேன்
    ஒரு கவிதை வாங்கி வந்தேன்
    அதைக் கேட்டு வாங்கிப் போனால்
    அந்தக் கன்னி என்ன ஆனாள்
    (நான்..)

    நடை பழகும்போது தென்றல்
    விடை சொல்லிக்கொண்டு போகும்
    நடை பழகும்போது தென்றல்
    விடை சொல்லிக்கொண்டு போகும்
    அந்த அழகு ஒன்று போதும்
    நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்
    அதைக் கேட்டு வாங்கிப் போனால்
    அந்தக் கன்னி என்ன ஆனாள்
    (நான்..)

    நல்ல நிலவு தூங்கும் நேரம்
    அவள் நினைவு தூங்கவில்லை
    நல்ல நிலவு தூங்கும் நேரம்
    அவள் நினைவு தூங்கவில்லை
    கொஞ்சம் விலகி நின்ற போதும்
    என் இதயம் தாங்கவில்லை
    அதைக் கேட்டு வாங்கிப் போனால்
    அந்தக் கன்னி என்ன ஆனாள்
    (நான்..)

    என் உள்ள என்ற ஊஞ்சல் 
    அவள் உலவுகின்ற மேடை
    என் உள்ள என்ற ஊஞ்சல் 
    அவள் உலவுகின்ற மேடை
    என் பார்வை நீந்தும் இடமோ
    அவள் பருவம் என்ற ஓடை
    அதைக் கேட்டு வாங்கிப் போனால்
    அந்தக் கன்னி என்ன ஆனாள்
    (நான்..)

    படம்: கலங்கரை விளக்கம்
    பாடியவர்: TM சௌந்தர்ராஜன்

     

    காவிரிமைந்தன்

     
     
     
     
     
    Share
  • சிறுகூடற்பட்டி முதல் சிகாகோ வரை.. – கவியரசு

    கவிஞர் காவிரிமைந்தன்

    நாளை முதல் குடிக்க மாட்டேன்…

    கவிஞரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். 2002ஆம் ஆண்டுவிழாவின் அழைப்பிதழைக் கொடுப்பதற்காக ராகப்ராவகம் சுந்தர் அவர்களது இல்லத்திற்கு சென்றபோது.. அங்கே இருந்த விருந்தினர் இருவர் எமக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிவசு எனப்படும் சிவசுப்பிரமணியன் அவர். சன் தொலைக்காட்சியில் வணக்கம் தமிழகம் பகுதி நிகழ்ச்சி தயாரிப்பாளர் என்பது கிடைத்த தகவல்.

    சந்தித்த சில நிமிடங்களிலேயே ஒரு பெரிய பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்தார். ஆம். கவிஞரின் பிறந்தநாளில் இடம் பெற வேண்டிய வணக்கம் தமிழகம் பகுதியில் கவிஞரின் உதவியாளர் திரு. இராம கண்ணப்பன் அவர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும் என்பதே அப்பநியாகும். கொட்டும் மழையிலும் என்னுடன் இணைந்து வந்த நண்பர்.. கண்ணதாசனின் பக்தர் வேலுமணி அவர்களின் மூலம். எதோ ஒரு சில காரணங்களால் இது போன்ற பேட்டிகளைத் தவிர்த்து வந்த திரு இராம கண்ணப்பன் அவர்களை பங்கேற்கச் செய்தது இனிய செய்தியாகும்.

    மேலும் சிவசு அவர்களிடம் நாங்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், அழைப்பிதழின் மேலுறையில் இடபெற்றிருந்த கவியரசின் உருவப்படத்தைப் பார்த்து கவிஞரைப் பற்றி அவர் கூறிய சில வார்த்தைகள்.. இமயமென உயர்ந்து எங்கள் மனதில் என்றும் நிலைக்கத் தக்கவை. ஆம். இந்த உலகில் நான் இவரைத்தான் மிகவும் நேசிக்கிறேன். ஒருவர் அன்னை தெரசா .. அடுத்து கவிஞர் கண்ணதாசன். ஏன் என்பதற்கும் அவரே தந்த விளக்கம் அசர வைத்தது. அன்னை தெரசா பற்றி அகிலம் அறியும். ஆனால் கண்ணதாசனைப் பற்றி அவர் என்ன சொன்னார் தெரியுமா?

    உலகம்போற்றும் உத்தமர் காந்தியடிகள் தனது சத்தியசோதனையில் தன்னைப்பற்றிய செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும்போது தான் செய்த சில தவறுகளையும் பதிவு செய்து மக்கள் மனதில் உயர்ந்தார். அதைவிட பல மடங்கு.. ஏன் தன் வாழ்க்கை முழுவதையுமே தான் செய்த தவறுகளையெல்லாம் முழுக்க முழுக்க பேச்சிலும் ஏட்டிலும் ஒளிவு மறைவின்றி திறந்த புத்தகமாய் வாழ்ந்து மறைந்தவர் கண்ணதாசன் மட்டுமே. ஒரு தனி மனிதர் தன்னைப்பற்றிய நல்ல குணாதிசயங்களை மட்டுமே இவ்வுலகம் அறியச் செய்வது இயல்பு. எந்த வேளையிலும் எந்த ஒரு தனி மனிதனும் இதற்கு விதிவிலக்கல்ல! வாழும் இந்த உலகில் சிவசு அவர்களின் கணிப்பு எங்களைச் சிந்திக்க வைத்தது! இவற்றையும் தாண்டி கவிஞரின் புகழ் நிரந்தரமாக்க எப்படி முடிந்தது? தமிழ் அல்லவா கவிஞரை இன்றும் நம்மோடு இணைத்து வைத்துள்ளது?

    என்னைப்போல் வாழாதீர்கள்.. நான் எழுதியது போல் வாழுங்கள் என்பது தானே கண்ணதாசன் செப்பு மொழி!

    ‘நீதி’ என்கிற திரைப்படத்தில் மது அருந்தும் பழக்கம் கொண்ட கதாநாயகன் பாடுன்கின்ற பாடல் ஒன்று இடம் பெற வேண்டிய நிலையில் மெல்லிசை மன்னர் மெட்டமைத்து கவிஞருக்காக காத்திருந்தபோது.. தனக்கு தோன்றிய பல்லவியை வைத்து இசை அமைப்பில் இணைத்திருந்தார். கவிஞர் அங்கே வந்தவுடன்.. தான் வைத்திருந்த பல்லவியையும் இணைத்து கவிஞரிடம் காட்ட.. கதாநாயகன் .. இனி நான் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்வதாக காட்சி..

    இன்று முதல் குடிக்க மாட்டேன் – சத்தியமடி தங்கம் என்கிற பல்லவியை பார்த்து கண்ணதாசன் மெல்லிசை மன்னரிடம் தன் பாக்கெட்டிலிருந்த பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்து உன் பல்லவிக்கான சந்மனமிது. ஆனால் எந்த குடிகாரனும் இன்று முதல் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய மாட்டான். எனவே, நாளை முதல் குடிக்க மாட்டேன் என்று மாற்றி படலை எழுதித் தந்த வரலாறு இப்பாடலுக்கு உண்டு
    .
    ஏழைகள் வாழ்வில் விளையாடும் இறைவா நீ கூட குடிகாரன் .. என்கிற வைர வரிக்காக கண்ணதாசனை உளமாரப் பாராட்டத் தோன்றுகிறது
    .
    கவியரசே உன்னால் மட்டுமே படைத்தவன் மேல் இப்படி பகிரங்க குற்றம் சாட்ட முடிந்திருக்கிறது. இதிலிருந்து தப்ப.. முடியாமல் பரமனும்.. பிரம்மனும் அல்லவா சங்கடப் படுவது போல் தோன்றுகிறது..

    http://www.youtube.com/watch?v=XYWxPuf7BIk

     

    http://www.youtube.com/watch?v=XYWxPuf7BIk

    கருத்துக்களை வரவேற்கிறேன்.. கவிஞரைப் பற்றிய தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் பற்றிய புளித்துப்போன .. உதவாத கேள்விகளைத் தவிர்த்து அவர்தம் பாடல்களில் உள்ள சுவைதனை, தமிழினை.. இன்னுமின்னும் இன்பம் வாசகர்கள் பெறுவார்கள் என்கிற நம்பிக்கையுடன்..

    காவிரிமைந்தன்

    Share