Author: கிரேசி மோகன்

  • திருமால் திருப்புகழ் (59)

     

     

    கிரேசி மோகன்

    mambalamramar2
    மாம்பலம் கோதண்ட ராமர்….
    ———————————————————

    தான்தன தானந்த தான தான்தன தானந்த தான
    தான்தன தானந்த தான -தனதான….

    ————————————————————-

    ramar08-horz

    ”பாண்டியன் ஊர்வந்த போது, மாண்டது யாரென்ற கேள்விimages (3)
    தூண்டிடும் நானந்த மூலம் -தனைநாடி,
    பாம்பணை சாய்கின்ற மாலன் பூந்தவ நூலுந்தி நாதன்
    சேர்ந்தறி யாசம்பு சோணை-மலையேறி

    வேண்டுதல் வீணென்ற மோன வேங்கட ராமன்சு பாவ
    சாம்பசி வானந்தம் காண-அருள்வாயே
    பாண்டவர் போர்வென்று பூமி ஆண்டிட தேர்நின்று கீதை
    காண்டிபர் காதன்று கூவும் -நவநீதா

    தோண்டிய போதன்று வேலை ,மூண்டெழு ஆலங்கொள் ஈசர்
    தீண்டிடும் மாதங்கி மீனாள் -அபிராமி
    சாம்பவி யாள்சம்பு பாக னாங்கிச தாலிங்க னோடு
    தாந்த்ரிக மாய்நின்ற காளி -முதியோனே.

    காண்டமு லாசுந்த ரேசர், தாங்கத சாகண்டன் சாய,
    சோம்பலி லாதம்பி யோடு -வனமேகும்,
    கோன்ஜன கானந்த சீதை ஆம்படை யானென்று வாழும்,
    மாம்பலம் கோதண்ட ராம -பெருமாளே
    ———————————————————————–

    mambalamramar4

    mambalamramar4-horz

     

     

    படங்களுக்கு நன்றி:

    http://www.dinamani.com/religion/2014/01/21/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0/article2012318.ece

    Share
  • திருமால் திருப்புகழ் (58)

     

    கிரேசி மோகன்

    crazy
    பஞ்சமுக ஆஞ்சனேய பெருமாள்….
    ————————————————————————————————————-

    தந்ததன தந்ததன தந்ததன தந்ததன
    தந்ததன தந்ததன -தந்ததான…..

    ————————————————————————————————————————-
    இந்தவுடல் கந்தையைஅ கந்தைமன பந்தமென,

    நன்றி: டிவி. வரதராஜன்
    நன்றி: டிவி. வரதராஜன்

    கண்டறிய வந்தவழி -சென்றுமூலம்,
    ஒன்றுமிலை என்றுணர, அஞ்சிலொரு குன்றமதில்
    தங்கியுரை எங்கள்குரு, -வெங்கடேசர்

    உந்துவழி சென்றிவனி ருந்தயிடம், உந்தனெழில்
    பொங்குநதி சங்கமஅ -ரங்கமாக
    தந்தருளும், சங்கரனின் அன்புமகன் பந்தளனை
    திங்களிறு ஐந்துதினம் -பம்பைதீரம்

    உந்தியில்சு மந்தவன மங்கையென வந்தநர
    சிங்கமுக செந்திகிரி -சங்கபாணி,
    சங்கரிசு மங்கலியின் தந்தமகன் தம்பிகுகன்
    மங்கையர்கள் தந்தைமுறை -வந்தமாமன்,

    எந்தைரகு நந்தனுயிர் நண்பனவன் நங்கையிடம்
    கண்டுவர, லங்கைநகர் -சென்றுமீளும்.
    சுந்தரன்சிவ னன்புமுக இந்திரியம் வென்றபதி
    மந்தவெளி பஞ்சமுக -அஞ்சனேயா
    ——————————————————————————

     

     

     

     

     

     

    Share
  • திருமால் திருப்புகழ் (57)

    கிரேசி மோகன்

     krishna_india_authentic_by_lalitkr007

    தான தன தானத் தான தன தானத்
    தான தன தானத் -தனதான….

    ——————————————————————————————————————–

    “ஞான வழி தேடிச் சோணை மலை நாடிப்

    ஓவியம் : கிரேசி மோகன்
    ஓவியம் : கிரேசி மோகன

    போன ரம ணேசத் -தவராஜன்,
    போல யம தூதப் பாச வலை மீளப்,
    பாழும் உல கேகித் -தவியாது,
    நானொ ழிவி சாரத் தால றிசி வாயத்
    தேனொ ழுக, மாயப் -புலநாகம்
    வாயு மிழு ஆலத் தாலு டலம் ரோகத்
    தாலி டும யானத் -திடைசேரா,
    மோன அனு பூதிக் கூட ருள வாஅக்
    கோகு லமு லாவிப் -பசுமேய
    பீலி மயில் சூடிப், பீத கமு ராசப்,
    பீடு நடை யோடுக் -குழலூதி,
    கானில் வெயி லேறப், ப்ராணி நலம் பேணக்,
    கூடி உற வாடிப், -புவிவாழ்வில்
    பால னுரு வாயப் பாக வத லீலைக்
    காக, அவ தாரப் -பெருமாளே”
    ———————————————————————————————————

    படத்திற்கு நன்றி :

     

    http://lalitkr007.deviantart.com/art/krishna-india-authentic-104817999

    Share
  • திருமால் திருப்புகழ் (56)

     

     

    கிரேசி மோகன்

     

    கட்டவாக்கம் விஸ்வரூப நரசிம்மப் பெருமாள்’’
    ——————————————————————————————

    ஸ்ரீவிஸ்வரூப நரசிம்மர் நன்றி: சுப்பிரமணியம்

    தத்ததான தனதான தத்ததான தனதான
    தத்ததான தனதான -தனதான….

    ———————————————————————————————————————–
    பித்தமோடு கபவாதம், ரத்தசோகை குதமூலம்,

    விஸ்வரூப நரசிம்மர் நன்றி : சுப்பிரமணியம்
    விஸ்வரூப நரசிம்மர்
    நன்றி : சுப்பிரமணியன்

    உப்புசீனி உயர்வாகி -தடியூனி,
    எட்டுநாலு புதையீறு பற்களாட, நரைமேவ
    சொட்டையான தலைநோவில் -விழிசோர,

    முத்தவ்யாதி கிழமாகி, சத்திலாது பிணமாக,
    கொட்டுமேள மனையாளும், -மகனோடு,
    கட்டிஓல மிடகாடு உற்றபோது,
    ’’ஒருகாதும்
    அற்றஊஸி’’ வருமோசொல்-துணையாக.

    குப்பைமேனி தனிலாடும் தப்புநானின் விபரீதம்
    செப்பலோசை இசையாலே-ரமணேசர்,
    அப்பளாமை இடுவேளை, புத்திகூற அழகாயி(தாயார் அழகம்மை)
    உற்றஞானம், அடியேனும்-பெறவேணும்.

    அப்பன்கேள, ஒருதூணில் நெட்டைமாலன் உளதாக,
    அச்சிறானின் மொழிவாழ, -பலதூணில்
    பக்தராஜன் மனம்போல, பெத்தசாமி(விஸ்வரூப) வடிவான
    கட்டவாக நரசீய -பெருமாளே
    ————————————————————————–

    Share
  • திருமால் திருப்புகழ் (55)

     

    கிரேசி மோகன்

    ——————————————-
    தத்ததன தனன தான தன தத்ததன தனன தான தன,
    தத்ததன தனன தான தன -தனதான….

    slide3

    —————————————————————————————————————–

    ’’அத்திகிரி’’ என்றழைக்கப்படும் காஞ்சி நகர் வரத ராஜப் பெருமாள்….
    ————————————————————————————————————–

    pg21

    பூவிருந்தவல்லி மூன்று கருட சேவை

    ”உற்றவுற வழுகை வீடு வரை, கட்டியம னையழுகை வீதிவரை,img1110113052_1_1
    பெற்றதுகள் அழுகை காடு வரை,-அதனாலே,
    எத்தனெமன் எருமை ஏறி வர, செத்தவுட லெனபி ராணம் விடு
    வித்தவனி டம்நசி கேத னென -சமராடி,

    குற்றமர ணபயம் சாக, நகர் விட்டருணை அசல ஆல மரம்
    பற்றிவளர் கொடிகு மார குரு -ரமணேசர்,
    சொற்படிஉ லகிலு லாவி நிதம், கற்பனைம னமுரை பேத மற,
    பக்தியிலு னதனு பூதி பெற -அருள்வாயே.

    வெற்றியுடன் மயிலில் ஏறி பகை,யுற்றுவரும் பதும சூர னுயிர்,
    விட்டமர உலகி லேள, உமை -அளிவேலை
    விட்டெறிவி ழியிமை யாம கள்கு றத்தியும் உலவு தோளன்,சிவ
    சக்தியினி ளையகு மாரன், குகன் -முறைமாம.

    கற்பறிய மனைவி ஜான கிநெ ருப்பில்நனை, நெறியி னோன்ர விகு
    லத்தில்வரு, திலக மான ரகு -அவதார
    அத்தனையும் நினது தேச மதில், எத்தகைய வரமும் தூவும் பதி
    அத்திகிரி வரத ராஜ னெனும் -பெருமாளே
    —————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி:

    http://narasimhar.blogspot.in/2013_06_01_archive.html

    http://3.bp.blogspot.com/-JpI6obm7jyY/UarITyThTVI/AAAAAAAAOLM/EnYYiAjsfG0/s1600/pg21.jpg

     

    Share
  • திருமால் திருப்புகழ் (54)

     

    கிரேசி மோகன்

    1525641_626146487476900_1682786536_n
    தனத்தனந்த தானா தனன
    தனத்தனந்த தானா தனன
    தனத்தனந்த தானா தனன-தனதானா….

    ————————————————————————————————————————

    “மனத்தகந்தை நானார் அழிய சிவக்கொழுந்து சோணா சலனைday1
    அணைத்துணர்ந்த ஞானா சிரியன் -ரமணேசர்
    உரைத்தஅந்த தேகான் மவலை விரிப்பிலுழன்று மீனாய் புலனின்
    புழுக்களுண்டு சாகா வகையை -அருள்வாயே
    கனைத்தியங்கும் பாலா ழிவளர் பணத்தனந்தன் மீதே றிவள
    தனத்தணங்கு சீர்பா தமுற -துயில்வோனே,
    தவிப்படைந்த ஆய்பா டியரின், பொறுப்புணர்ந்து சேயாய் மழையில்
    பொருப்புகந்து வானோர் கருவம் -ஒழிமாலே.
    சினத்தகஞ்ச மாமா அழிய ,மதர்த்துவந்த மாவா னையுடன்
    எதிர்க்கவந்த கோமா ளிகளை -பலராமன்
    துணைக்கரங்கள் தோதா கநில வரைக்குள்சென்று தாயார் சமேத
    தகப்பன்விலங்கு தூளா கவட -மதுராவின்
    ஜனத்தரங்கின் ராஜா வெனஅ ரசுக்குகந்து பாமா உருகும்
    மணிக்கமைந்த தோளாய் வயதில் -பெரிதாகி
    வெளுத்தசங்கை வாயூ திகுரு களத்தில்நின்று பூபா ரமதை
    குறைக்கவந்த கீதா சிரிய -பெருமாளே”
    ——————————————————————————————–

    படங்களுக்கு நன்றி:

    https://www.facebook.com/rameshnagaprop

    கூகிளார்

    Share
  • திருமால் திருப்புகழ் (53)

    கிரேசி மோகன்

    kari_varadar
    தன்னத் தனத்த தனதனன தான தன்னத் தனத்த தனதனன தான
    தன்னத் தனத்த தனதனன தான -தனதான….

    ———————————————————————————————————————–

    ’’எண்ணப் பிணத்தை எழயெழவி டாதுdownload

    நய்யப் புடைக்கும் சுடுதடிஉ பாயம் (OR)

    மண்ணுக் களிக்கும் சுடுதடிவு பாயம்
    தன்னைக் கொடுத்த தவஅருணை ஞானி-ரமணேசர்
    என்னைப் பிடிக்க இழுபறியி லாது
    முன்னைப் பிறப்பு பழவினைகள் போக
    உன்னைத் துதித்து உருகுமெனை ஆள-அருள்வாயே

    கண்ணைப் பறிக்கும் சுழலும்சுட ராழி
    விண்ணுக் கொலிக்கும் வலவளைவு சோழிG_T4_1972
    பொன்னைப் பழிக்கும் கதையுமுடை வாளும்-சிலைவாளி
    முன்னக் களிற்றின் உதரமுறு ஆழி
    தன்னைப் பறிக்க கரணமிட காது
    கன்னச் சிவப்பு றயிழுகர நாலில்-உடையோனே

    மண்ணுக் கொருத்தி குறமகளும் தேவர்
    விண்ணுக் கொருத்தி களிறெனவு லாவ
    வண்ணக் கழுத்து மயிலிலமர் வேலன் -முறைமாம
    கண்ணப் பிறப்பை கமுசன்செவி கேள
    மண்ணுக் குரைத்த முதலிலவ தார
    அன்னைக் கடுத்து அவனிபுகு சோத -ரமுராரிG_T4_1593

    தன்னைப் பழித்த இரணியனை வாசல்
    திண்ணைப் பரப்பில் மடியுருள ஆவி
    தன்னைக் குடிக்க நரஹரிசொ ரூப -அவதார
    உன்னைக் கலக்க உருகுமடி யார்கள்
    இம்மைப் பிறப்பில் மறுமையுற ஞான
    கண்ணைத் திறக்கும் கரிவரத ராஜ -பெருமாளே

    —————————————————————————————————————-

    படத்திற்கு நன்றி:

    http://narasimhar.blogspot.in/2014/03/blog-post.html

     

    Share
  • திருமால் திருப்புகழ் (52)

     
    கிரேசி மோகன்

    Tamil-Daily-News-Paper_75638544560
    தத்தன தனத்ததன தத்தன தனத்ததன
    தத்தன தனத்ததன -தனதான….

    ——————————————————————————————————-
    “கற்பனை யுதிப்பதுவும் ,அற்புதம் அளிப்பதுவும்969181_504980929606941_408884359_n
    சிற்றலை சமுத்திரம -தனிலாடும்
    நச்சர வமெத்தைவளர் பச்சைநி றவெற்பனைய
    அச்சுத மயக்கமதின் -அசைவாலே

    நிர்குண சலிப்பிலுற முக்குணம் படைத்துலகில்
    தற்பரம் தனக்குவமை -தனில்மூழ்க
    பற்பல வுயிர்த்தொகைகள் நிற்பதும் நடப்பதுவும்
    பத்தென வுதித்தவனின் -பரலீலை

    அற்பம னவச்சமட புத்திநி லைபெற்றுவுயர்
    சத்திய வழிக்குவர -அருள்வாயே
    இத்தனை எதற்கிறைவ, இப்பொழு தெனக்கருள
    சத்குரு முறைப்படி -வருவாயே

    விற்கலை விரக்தியுற வித்தகம் உரைத்தவனை
    வெற்றியில் செலுத்தரதம்-விடுவோனே
    திட்டிட இடைச்சி,மணல் அப்புஇ தழுக்குள்அவள்
    சொக்கிட விசித்ரமருள் -பெருமாளே”
    ————————————————————————————————————–

    படங்களுக்கு நன்றி

    Share
  • திருமால் திருப்புகழ் (51)

     
    கிரேசி மோகன்

    Vittal-krishna
    ‘’நாதவிந்து கலாதீ நமோ நம’’ சந்தத்தில்….

    ———————————————————————————————–
    “ஏழு கொண்டல வாடா நமோ நமG16
    ஏளும் நஞ்சணை சேடா நமோ நம
    ஏறும் அன்பர்கள் தோழா நமோ நம -குருபீஷ்மர்
    ஆயி ரம்புகழ் நாமா நமோ நம
    தேச மெங்கிலும் ஆழ்வார் கள்பாடிய
    ஆயி ரம்தொழு மாலே நமோ நம -கலிலேறி

    வாழும் பண்டரி நாதா நமோ நம
    ஏழை சங்கட தீர்வே நமோ நம
    ஏழ்சு ரங்களின் ராகா நமோ -மஹனீயர்
    ராயர் கும்பிடு மூலா நமோ நம
    வாயு அஞ்சனை சேயார் சிநேகித
    ராம சந்திர ராஜா நமோ நம -கலிதோறும்
    ஊழில் உண்டுமிழ் சேயே நமோ நம
    ஆதி யந்தமி லாதோய் நமோ நம
    கேர ளம்குரு வாயூர் துலாபளு -சமனாகி
    தீர அன்பர்கள் பாடா னபாடது
    ஏறும் அம்பல கோபா லகோகுல
    கேளி சம்பவ லீலா நமோ நம -இரணீயன்

    வீழ கம்பமு லாநா ரகேசரி
    மீன மந்தர மாமே ருகூர்மவ
    ராக அந்தண மூணா னராமமு -ரளியூதி
    பூமி மங்கையின் தாளா தபாரமும்
    பாத கம்புரி கீழோர் கள்மேலுற
    நேமி சங்குவில் வாளோ டுகோலணி -பெருமாளே”
    —————————————————————————————–

    படங்களுக்கு நன்றி

     

    Share
  • திருமால் திருப்புகழ் (50)

     

     

    கிரேசி மோகன்

    lord-venkateswara-sunil-kumar-lakkakula
    தனத்த தனத்தன தனத்த தனத்தன
    தனத்த தனத்தன -தனதான….

    ———————————————————————————————————————-
    “வனத்தில் குறத்தியை துரத்தும் விருத்தனின் images (2)
    கருத்த நிறத்தொளிர் -முறைமாம,
    வலத்தில் சுடர்ப்பொறி, இடத்தில் உரத்தொலி
    எழுப்பு வலச்சுழி -கடலாழி,
    வனத்து தளத்தினை பருத்த புயத்தினில்
    பரத்தி, இலக்குமி -மணிமார்பில்
    இருத்தி, பறப்பன விரட்டி முகட்டினில்
    உதித்து, வரத்தினை -உனைநாடும்
    மனத்து குணத்தவர் துதிக்க இறைத்திட,
    இமைக்கும் கணத்தினில்-வருவோயே
    கடித்த பழத்தினை கொடுத்த கிழத்தினை
    பரத்தில் இணைத்திடும் -ரகுநாத images (3)
    சினத்தில் ,இருப்பினை பழித்த அரக்கனை
    இடுப்பு இருப்பினில் -இரையாக
    கிடத்தி நகத்தினை புதைத்(து)உ திரத்தினை
    குடிக்க குதித்திடும் -பெருமாளே”
    —————————————————————————————————

     

     

     

    படத்திற்கு நன்றி

    http://images.fineartamerica.com/images-medium-large/lord-venkateswara-sunil-kumar-lakkakula.jpg

    Share
  • திருமால் திருப்புகழ்…. (49)

     

    கிரேசி மோகன்
    வடுவூர் ராமர்
    ————————–

    Vaduvur Ramar04

    தனனா தனதான தனனா தனதான
    தனனா தனதான -தனதான….

    —————————————————————————————————————–

    Vaduvur Ramar13

     

    ஒருநாள் இசைபாடும், மறுநாள் வசைபாடும்Vaduvur Ramar15
    அதனால் மதியீனம் -அறிவாயே
    நதிபோல் மதிமூலம் அறிவோர் மனமேளும்
    அறிவால் அறியாமை -இருள்போகும்

    அருணா சலஈசர் அகமாய் உருவாகி
    குருவாய் ரமணேசர் -உபதேசம்
    பெறநான் சமுசார கடல்சூழ் புவிசேரா
    பிறவா வரம்காண -அருள்வாயே

    மறைநான் கருள்ஓமின் பொருளோ தபிதாவின்
    மடிசேர் மகனான -குமரேசன்Vaduvur Ramar07
    குறமா துடனானை மயிலே றவுலாவும்
    திருவே ரகவேலன் -முறைமாம

    திருஜா னகிசேடர் இளையோன் வரகானில்
    மறுதாய் பணியாக -திரிவோனே
    அனுமான் எஜமான அவதா ரசொரூப
    வடுவூர் சிலைராம -பெருமாளே

    ——————————————————————————————————————-

     படங்களுக்கு நன்றி :

    http://periyathiruvadi.blogspot.in/2012/02/blog-post_10.html

    Share
  • திருமால் திருப்புகழ் … (48) – பெருமாள் துவாதச நாமத் துதி..

    கிரேசி மோகன்

    அயிகிரி நந்தினி மெட்டில் பெருமாளின் த்வாதச நாமத் துதி….
    —————————————————————————————————————

    “கேசவாய , நாராயணாய ,மாதவாய, கோவிந்தாய , விஷ்ணுவே ,திரிவிக்ரமாய ,வாமனாய,சீதராய ,ரிஷிகேசாய ,பத்பனாபாய ,தாமோதராய ,மதுசுதனாய”…..ஆக பெருமாளின் 12 திவ்ய நாமங்கள்….கிரேசி மோகன்….
    ———————————————————————————————————————-

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    கேசவன்
    ——————

    “களமுற பார்த்தனின் கலவர வேர்த்தலைக்
    கழுவிடு தீர்த்தமாம் கீதையதால்
    உளமுரம் கூட்டினை ஒருரதம் ஓட்டினை
    பலமுற காட்டினை பாதையதை
    பொலபொல என்றுதி காலையை முந்திடும்
    பரவசக் கோதையின் பாசுரத்தால்
    அலைகடல் விட்டுயர் பட்டரின் பெட்டையை
    கட்டிடக் கேட்டிடும் ”கேசவனே”….(1)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    ———————————————————————————————————————

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    நாராயணன்
    ————————–
    “சரியபி தாம்பரம் நழுவக தாயுதம்
    பிளிறும்க ஜேந்திரன் குரல்கேட்டு
    பறவைசு தாகரம் விரையவ னாந்திரம்
    எறியசு தர்சனம் விரல்விட்டு
    துரிதநி வாரண முனிகள்த போவனம்
    பறையும்க தாம்ருத காரணனே
    முரளிம னோகர கமலப தாம்புய
    அனந்த”ந ராயண” பூரணனே”….(2)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    —————————————————————————————————————

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    மாதவன்
    ——————

    “அவையென இவையென அளவிடல் தவறென
    கவிமணி மலையணில் கூட்டியதை
    புவிதனில் ஏழையை பிள்ளையை வேழனை
    மகிழ்வுறச் செய்ததைக் காட்டினையே
    தவியுற ஆய்க்குடி தளிர்விரல் தூக்கிட
    குளிர்மழை காத்தனை யாதவனே
    கவிகளின் காப்புக் கடவுள்முன் தோப்புக்
    கரணம்செய் காக்கும் ”மாதவனே”….(3)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    ——————————————————————————————————————

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    கோவிந்தன்
    ————————

    “அலமுவை கட்டினை அதிகடன் பட்டனை
    அடைத்திடத் தொட்டனை ஏழுமலை
    பலரிட உண்டியில் சிலறையை ஒண்டியாய்
    புகல்ஜர கண்டியில் வாழயிலை
    துளசியை மென்றிட குறையிலை என்றிடும்
    நிலைதர நின்றிடும் ”கோவிந்தா”
    அலைகடல் சேடனில் அணிமகள் கூடலில்
    வளர்துயி லாடிடும் வைகுந்தா”….(4)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    ——————————————————————————————————————–

    ஓவியம் ; கேஷவ்
    ஓவியம் ; கேஷவ்

    விஷ்ணு
    —————-

    “செதிளதில் ஆரணம் முதுகினில் மேருவும்
    முகநுனி தாரணி கொண்டவனே
    சதையுறி உந்தியில் பதபலி புந்தியில்
    விதவித பந்தியில் உண்டவனே
    விதையுழு ராமனும் மழுமுனி ராமனும்
    தொழுரகு ராமனும் பாகவதக்
    கதைசொலும் க்ருஷ்ணனும் பலபல ஸ்ருஷ்டியும்
    சதைவுயிர் ”விஷ்ணுவின்” சாகசமே”….(5)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    ——————————————————————————————————————-

     

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    திருவிக்ரமன்
    —————————-

    “அளிவரம் முக்ரமம் ஒளியரி அக்ரமம்
    உணர்குரு சுக்கிரர் கட்டளையை
    பலியிட அக்கணம் குறள்”திரு விக்ரம”
    வடிவினில் திக்கது தொட்டனனே
    புலனுரு வாமனம் பழகிட நீமனம்
    பெருகுவை ஆணவ கந்தையிலே
    சலணரு ணேசரின் சிசுரம ணேசரை
    சரணடை கோவண சந்நிதியில்”….(6)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    ————————————————————————————————————-

    ஓவியம்: கேஷவ்
    ஓவியம்: கேஷவ்

    வாமனன்
    ——————

    “சிறைவசு தேவகி கருவச மாகிட
    இரவினில் ஏகினன் கோகுலமே
    கறவைகள் மேய்த்தனன் கம்சனை சாய்த்தனன்
    தீர்த்தனன் ஆயரின் வ்யாகுலமே
    மறைதிரு மச்சமும் அரைதனில் கச்சமும்
    குடுமியின் உச்சமும் பூமணமாய்
    குறளுரு வாயொரு குடைபுயம் சாய்வுற
    களபலி சேய்வளர் ”வாமனனே” ….(7)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….
    ——————————————————————————————————————-

    ஓவியம்: கேஷவ்
    ஓவியம்: கேஷவ்

    சீதரன்
    ————

    “இலைமரு தாணியின் மணமுறை மேனியள்
    திருமகள் பூணிடும் ”சீதரனே”
    அலைகலை மங்கையர் அடிதொழும் சுந்தரி
    மலைசிவ சங்கரி சோதரனே
    அலைகடல் சங்கொடு நந்தகி ஆழியும்
    சிலைபரு தண்டமும் கண்டவுடன்
    விலையென ஏறிடும் வெவ்வினை ஆறிடும்
    விடுமெமை வேறிடம் சேருமதே”….(8)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    ——————————————————————————————————————–

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    ரிஷிகேசன்
    ——————–
    “அசுரநி சாசரர் அதரும நீசர்கள்
    அழியச ராசரம் வந்தவனை
    தசவித வேஷனை முனிமன வாசனை
    தவ”ரிஷி கேசனை” வந்தனம்செய்
    தசமுகன் சாகவும் குசலவர் ஏகவும்
    ரகுபதி ராகவ ரூபமெடு
    தசரத மைந்தனை குகனோடு ஐந்தென
    தரணியில் உய்ந்தவன் தாபமுறு”….(9)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    ——————————————————————————————————————–

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    பதுமநாபன்
    ————————
    “கரனுடன் தூஷணை வனஉழை வேஷனை
    தசமுக பூஷனை இம்சைதரும்
    இரணிய ராட்ஷசன் இணையிரண் யாட்ஷகன்
    துரியனின் சூழ்ச்சியை ,கம்சனையும்
    குறைசிசு பாலனை மதுகைட பாணனை
    வதம்புரி மாலனை நம்பிடுவாய்
    பிரமனுய் நாபனை புவியுமிழ் நாபனை
    ’’பதுமம்கொள் நாபனை’’ கும்பிடுவாய்”….(10)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    —————————————————————————————————————–

    ஓவியம் : ராஜா ரவிவர்மா
    ஓவியம் : ராஜா ரவிவர்மா

    தாமோதரன்
    ————————-

    “கரமொடு களவாய் பிடிபட உனதாய்
    உரலிட இழு”தா மோதரனே”
    மரமதை சாய்த்தனை மருதிடை வாய்த்தவர்
    மறுவுல கேத்திடும் ஆதரவே
    புரிவிஷ மத்தினில் முடிவில்ந லத்தினை
    வெளியுற வைத்திடும் யவ்வனனே
    சரியென தப்பென அறியும்ம னத்தினை
    அரிகழல் வைத்தறு வெவ்வினையே”….(11)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    ——————————————————————————————————————–

    images (3)
    மதுசூதனன்
    ———————

    “மகளிர்உ டுப்பினை மறைவிளோ ளித்தனை
    பிறகுஅ ளித்திடும் திட்டமொடு
    துகிலுரி துட்டனை தளர்வுற கொட்டினை
    துருபதைக் எட்டிட பட்டதனை
    புகுவிட பூதனை விடவுடல் வேதனை
    முலையுறி மா”மது சூதனனே”
    புகுகருங் காளியுன் பிறவியைக் கோளிட
    வ்ரஜநிலம் ஏளிய சோதரனே….(12)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….
    ————————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி:

     

    Share
  • தாயுமானவன் திருப்புகழ்

    கிரேசி மோகன் P1030953  
    தாயுமானவன் திருப்புகழ்
    ——————————

    மகப்பேறு காண மருத்துவச்சி ஆகshivan
    அகம்புறம் தாயுமான அன்பே -மிகப்பசியாய்
    பிள்ளைக் கறியுண்ட பித்தா உனதுலீலைக்(கு)
    எல்லைதனை யாரறிவா ரே….(1)….10-3-2009

    நோயுமாவான் சாய்ந்திடும் பாயுமாவான் மாற்றிடும்
    மாயமாவான் புத்தொளிர் காயமாவான் -நாயன்மார்
    நேயமாவான் வெவ்வினையால் காயமானால் காப்பாற்ற
    நேயமாவான் நாடாதோர் சீயமாவான் தேற்றிடும்
    தாயுமாவான் தந்தை தவித்து….(2)….10-3-2009

     
    வேதங்கள் அர்ச்சிக்கும் பாதாம் புயம்பற்ற
    போதா உனக்கில்லை பாழ்மனமே -தீதில்
    இராப்பகல் தோறும் இருந்தென்ன கண்டாய்
    சிராப்பள்ளி ஈசனைச் சேரு….(3)….10-3-200912056_468338519868554_1663975219_n
    ————————————————————————-

    சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ

    சாதாரணன் போல வந்தான் -ஏதும்
    ஓதாமல் சில நேரம் சும்மா இருந்தான்
    வேதா ரண்யம் ஊர் என்றான் -இதில்
    சூதில்லை அம்மகாதேவன் தான் என்றான்….(1)….10-3-2009

    உண்டென்று ஒன்றுண்டு கேளாய் -அதை
    உண்டு நான் உமிழ்கிறேன் ஒவ்வொரு நாளாய்
    விண்டவர் கண்டிலர் கண்டாய் -அதைக்
    கண்டு நீ கொண்டாட காட்சிகள் உண்டாய்….(2)….10-3-2009

    பதி பசு பாசங்கள் மூன்றும் -முறையே
    விதி மதி வினை என்ற விவகாரமாகும்
    நிதி உந்தன் நெஞ்சிலே காண்பாய் -அது
    புதிதல்ல மணம்வீசும் பூத்த மலரான்மா….(3)….10-3-20092

    புதிரான பூலோகக் கல்லை -நீ
    பொய்யென்றும் மெய்யென்றும் பேரிடத் தொல்லை
    அதுவென்றும் இதுவென்றும் இல்லை -சுத்த
    அதுவே இதுவாக ஆனந்த எல்லை….(4)….11-3-2009

    பண்டைநாள் வந்ததோர் பூச்சி -அது
    பலவாய்ப் பெருகிடப் பாரென்று ஆச்சி
    கொண்டதோர் கோலமே காட்சி -அதை
    உண்டில்லை கண்டிடும் உறுதி ஆராய்ச்சி….(5)….11-3-2009

    செத்ததோர் பாம்பிந்த தேகம் -சுக
    துக்கமிதில் காண்பது செல்லாத லாபம்
    அத்தைக்கு மீசைமேல் மோகம் -அத்தை
    சித்தப்பன் பார்த்திட சிரைத்திடும் யோகம்….(6)….11-3-2009

    வேடனார் வேடத்தில் இறைவன் -அவனே
    விருந்தாகி நீயுண்ண வலைவீசும் இரைவன்
    பாடெல்லாம் அவனென்று பறைவாய் -ஜீவ1506395_633641266707576_1028299500_n1
    பாவத்தில் பசுபாசம் மெழுகாகக் கரைவாய்….(7)….11-3-2009

    பார்முதல் பூதம்நீ அல்ல -பஞ்ச
    புலன்களை ஆண்டிட முயலாதே வெல்ல
    யாரந்த நானென்று உள்ளே -உன்னிப்
    பாரவன் ஆன்மனாய் ஆகுவான் மெல்ல….(8)….11-3-2009

    அன்பே சிவமென்ற ஜோதி -அதன்
    ஆதார சக்தியே அருளென்ற பாதி
    பண்பான பக்தர்கள் மீதி -இந்தப்
    பாங்குணர்ந் தோற்க்கில்லை பூலோக வ்யாதி….(9)….11-3-2009

     
    போக்கத்த சொப்பனம் நனவு -ஆழ்ந்த
    தூக்கத்தில் நிற்பவன் யாரென்று வினவு
    சாக்கிதால் சஞ்சலம் தீரும் -ரமணG_T2_313
    வாக்கிதை மேற்கொள்ள வழிவந்து சேரும்….(10)….11-3-2009

    இறப்பதும் பிறப்பதும் யாரு -இங்கு
    இருக்கையில் ஆராய்ந்து யோசித்துப் பாரு
    உறக்கமே இறப்பென்ற மாயை -உணர
    உறங்காமல் உறங்கிடப் போடான்மப் பாயை….(11)….12-3-2009

    நம்பிக்கை அறிவாக நீளும் -அவ
    நம்பிக்கை அறியாமை அதுகுப்பைக் கூளம்
    எம்பிக்கை போடட்டும் தாளம் -ஆன்ம
    ஏகாந்த வாசியின் ஏற்றமே மூலம்….(12)….12-3-20091780843_587204171369869_249422305_n

    இல்லாத இகம்சொப்ப னங்கள் -அதில்
    இன்பத்தைத் துய்ப்போர்கள் இருள்பெற்ற மாக்கள்
    உள்ளது ஓராயி ரங்கள் -உதறி
    உணர்ந்திடு உணர்வென்னும் உச்சிப் பனங்கள்….(13)….12-3-2009

    சும்மா இருந்திடல் சுகமே -என்று
    சொன்னார்கள் முன்னோர்கள் சிவமாகு அகமே
    நம்மால் இயன்றது நகமே -அது
    நாளாக நாளாக நம்பிக்கை முகமே….(14)….13-3-2009

    துன்மார்கப் பாதையில் துன்பம் -அந்த
    சன்மார்கமே சச்சிதா னந்த இன்பம்
    தென்மார்கம் பார்த்திடும் அன்பன் -மவுன
    தத்துவம் தோள்கொடுத் தேவுதவும் நண்பன்….(15)15-3-2009

    ஓயாது துழைத்திடும் பெண்மை -சக்தி
    ஓங்கார நாதத்தின் ரீங்காரத் தன்மை
    தாயாகி அன்பர்க்கு நன்மை -நல்கும்annabiseham sivan1
    தத்துவம் அவளந்த பித்தர்க்கும் அம்மை….(16)….19-3-2009

    போகாத ஊருக்கு போக -இங்கு
    சாகாது சாகிறோம் ஜனனித்து நோக
    தேகான்ம பாவம் முடிக்க -சிவ
    தேசிகன் சரணார விந்தம் பிடிக்க….(17)…..20-3-2009

    செல்லாதா காசிந்த மேனி -இது
    இல்லாத போதுமி ருப்பவன் ஞானி
    கல்லாலின் கீழுற்ற கோலம் -அது
    சொல்லாமல் காட்டிடும் சித்தாந்த ஜாலம்….(18)….20-3-2009

    பல்லாண்டு பல்லாண்டு வாழி -அந்த
    பரசிவம் ஒன்றுதான் பவுருஷம் தோழி
    உள்ளாண்ட போதவன் போதம் -வெளி
    உலகத்தில் விளையாட வேடிக்கை பூதம்….(19)….20-3-2009

    சூலாயுதம் கொண்ட கையை -சக்தி
    வேலாயுதன் வந்த விழிகர்ப்பப் பையை_siva21
    ஆலால கண்டத்து மெய்யை -எண்ண
    அதுநெஞ்சில் ஊற்றிடும் ஆனந்த நெய்யை….(20)….22-3-2009

    பொன்னார் மேனியன் இடையில் -வரிப்
    புலித்தோல் பூண்டவன் ஏறுவான் விடையில்
    உன்னார்வம் அவனெதிர் பார்ப்பான் -கொள்ள
    உண்ணா முலையோடு வந்தருள் சேர்ப்பான்….(21)….25-3-2009

    சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ….
    ——————————————————————————-

    படங்களுக்கு நன்றி

     

     

     

    Share
  • திருமால் திருப்புகழ்…. (47)

     

    கிரேசி மோகன்

    rajagopalaswamy
    தன்னாதன தான தானான தன்னாதன தான தானான
    தன்னாதன தான தானான -தனதான….

    ——————————————————————————-

    முன்நூல்புரி வேதன், மாலோலன், கண்ணால்முடி பாதம் காணாத, IMGP0774
    அண்ணாமலை ஈசன் நாலாவ -துகுமாரன்
    தன்ஆர்வவி சாரம் நானாரை என்னாலெளி தாக ,தேரேறி
    அந்நாளில்விஜ யோன்வில் போராட -தெளிகீதை,

    சொன்னோய்அது போலென் காதோரம்,அம்மாபொருள் ஓதி நாயேனை,
    சும்மாயிரு நாதர் போலாக,-அருள்வாயே.
    விண்ணோர்மகிழ் வாக சூர்மாய, அன்னார்மகள் ஆனை,ஆலோல
    பெண்ணோ(டு)அலை வாயில் வேலோடு-மயிலேறி,

    நின்னோனுமை பாலன், ஈராறு கண்ணான்,படை ஆறன், தீவீசு
    கண்ணார்மகன், சேவல் தோளோனின் -முறைமாம.
    முன்னாள்இலை ஆலில் ஈரேழை, உண்ணோய்உமிழ் வாயோய், பேரூழி
    கண்ணாகுரு வாயூர் கீதாசி -ரியபாலா,

    பெண்ணாறலை வீசும் காவேரி தன்னால்வளர் சோலை பூவாசம்
    முன்னேவரும் சோழ மாகாணம் -அதில்மேயும்,
    உண்ணாமுலை மாதர் சீராட அம்மாயென ஓடும் சேயாகும்,
    மன்னார்குடி ராஜ கோபால -பெருமாளே….

    ————————————————————————————————————

    images (7)

     

    படங்களுக்கு நன்றி

    Share
  • அன்புசிவ வெண்பாக்கள்

     

    கிரேசி மோகன் 

    Lord Shiva HD Wallpapers 6

    காப்பு
    ——–
    பழமளித்த தந்தை புரமெரித்த போது12056_468338519868554_1663975219_n
    தொழமறக்க தேர்கால் துணித்த -அழகா
    தளைதட்டா வெண்பாக்கள் தந்ததில் பக்திக்
    களைகட்ட கற்பகச்சேய் காப்பு….03-07-2011
    ————————————————————-
    நூல்
    ——-

    அப்பர் தமிழ்கேட்டு வெப்பக் களவாயை
    அப்பிய சந்தனமாய் ஆக்கியோய் -தப்பில்
    குதியிட்டுத் தாழ்ந்தேன் மதியில் சதங்கை
    ஜதியிட்டுத் தாண்டவ மாடு….(1)

     
    அசையும் உயிரில் அசைவாய் இருந்து
    அசையாது நிற்கும் அரனே -அசைந்து or இசைந்து
    பசையாய் இடபாகம் பற்றிய உமையும்
    அசைந்திடத் தாண்டவ மாடு….(2)

    எண்ணாத போதிலும் எண்ணும் எழுத்துமாய்bhimashankar jyotirling famous shivaji temple at india pictures
    உண்ணா முலைசமேத ராகஉந்தன் -முன்னாலே
    அண்ணா மலையான் அடியெடுத்து வைத்திடுவான்
    பின்னாலே நீசுற்றும் போது….(3)….02-04-2008

     
    இல்லையென்று சொல்வோர்(கு) இயம்ப பதிலில்லை
    தில்லையில் என்வீட்டுத் திண்ணையில் -இல்லையேல்
    கொல்லையில் நான்மட்டும் காண்பதற்கு இல்லையென்று
    சொல்லாது தாண்டவம் ஆடு….(4)

     
    இல்லம் புகந்தன்று பிள்ளைக் கறியுண்டு
    வெள்ளை மனச்சிறுத் தொண்டர்தம் -உள்ளத்தை
    சோதித்த ஆண்டவா சொக்கநாதா என்நெஞ்சில்
    தாதித்தை தாண்டவம் ஆடு….(5)

     
    கால்கட்டு சுந்தரர்க்கு கைகட்டு போட்டவரின்
    மால்கட்(டு) அவிழ்த்த மகாதேவா -நூல்கட்டிMallikarjuna_ShivLing_500x375
    ஆட்டுவிக்கும் அம்பலனே ஆடுமிந்த பொம்மையை
    ஆட்படுத்த தாண்டவம் ஆடு….(6)

    காளை அமர்ந்தோனுன் காலைப் பணியுமென்
    வேளை வரவேண்டும் வெண்பாவில் -காளமேகம்
    போலாக்கு முத்தமிழில், நின்புகழை முப்புரி
    நூலாக்கிப் பூணுமென் நெஞ்சு….(7)….23-1-2009

    நஞ்சானால் நெஞ்சில் நதியானால் நீள்முடியில்
    மஞ்சானால் மாகயிலை மாடியில் -பஞ்சானால்
    தீக்கண் புகுந்தேனும் தீய்ந்திடுவேன் ஏனெதற்கு
    போக்கத்துப் போனேன் பிறந்து….(OR)
    போக்கத்த மாயப் பிறப்பு….(8)….23-1-2009

    தலைப்பிள்ளை ஆறு தலைப்பிள்ளை சூழOMKARESHWAR2-18082011-052309._omkareshwar-jyotirlinga-shiva-temple-khandwa-mp
    மலைப்பெண் மதங்கர் மகளோ(டு) -அலைப்பெண்
    கலைப்பெண் சமேத கயிலைக் குடும்பி
    முளைத்தென் மனதில் மலர்….(9)….23-1-2009

    நீறாணை காற்று நிலமனல் நீள்விசும்பு
    நீரானைப் போற்றி நெகிழ்ந்திட -நீராணை
    இட்டால் நினக்குள்ளே கட்டாயம் வந்திடுவான்
    பிட்டால் சுமந்தான்மண் பண்டு….(10)….23-1-2009

    அம்போவென்(று) என்னை அகிலத்தில் ஆடவிட்ட
    சம்போ மகாதேவா சிந்திப்பாய் -உன்போல்
    மனையாள், இரண்டு மகன்கள் பெற்ற
    இணையாம் எனக்கேன் இழிவு….(11)….22-1-2009

    எனையாளும் ஈசா எனதுயிர் ஸ்வாசா
    வினையாள லாமோசர் வேசா -துணையாவாய்Mahakal_Ujjain
    மன்றாடிக் கேட்கின்றேன் மாயப் பசிநீக்கி
    அன்றாடங் காய்ச்சிக்(கு) அருள்….(12)….22-1-2009

    சுகம்தரும் சொல்லை சிவனென்று கண்டேன்
    புகலெனெக்(கு) உந்தனிரு பாதம் -பகலிரவாய்
    தொந்திரவு செய்வேன் திருவருள் கிட்டிட
    உன்தயவு ஒன்றே உரம்….(13)

    தில்லை சபேசா திகம்பர வேஷாகேள்
    இல்லை பணிவென் இதயத்தில் -வள்ளலே
    வாயென்மார் மீதேறி வாலையுடன் வந்தாடி
    நாயன்மா ராக நிமிர்த்து….(14)….21-1-2009

    விடையவரே கேளும் வினாவினை தீ£ரும்trayambakeshwar-jyotirlinga-2
    அடைய முடியவில்லை ஆன்மா -தடையாய்
    மனம்நெஞ்சு மூளை மதியுள்ளம் என்று
    பிணம்தின்னும் பஞ்சவரைப் போக்கு….(15)….21-1-2009

    பனிமலை வாசா பரசிவ வாச
    முனிமன நேசா மஹேசா -இனிவரை
    காத்திருக்கும் என்னுள்ளே காத்திருக்கும் போதேநீ
    தூத்திவிடு தேடல் திளைப்பு….(16)….21-1-2009

     
    கண்ணாலே முப்புரத்தைக் காமனைத் தீயிட்ட
    அண்ணா மலையுன் அடிமுடியை -எண்ணிலேன்
    முப்புறமும் காமத்தில் மூழ்கியயித் தீயோனை
    அப்பனே ஆதரித்(து) ஆற்று….(17)

     
    கழுதை மனமே பழுதைச் சுமந்துthe temple of india  maharastra at  grishneshwar jyotirling  photo gallery free download
    பொழுதைக் கழித்தது போதும் -தொழுது
    வணங்கிட பார குணங்களை ஏற்பான்
    அணங்கை சுமக்கும் அரன்….(18)

    மண்சுமந்து பிட்டுக்குப் புண்சுமந்தாய் மேனியில்முக்
    கண்சுமந்து கந்தனைக் கண்டெடுத்தோய் -பெண்சுமந்த
    பாகத்தோய் நஞ்சுண்ட தாகத்தோய் என்நெஞ்சில்
    ஆகமத் தாண்டவம் ஆடு….(19)

     
    முடவனன்று வேண்ட தடதடவென்(று) ஓடி
    குடமுழுக்(கு) ஆடிய கும்பேசா -விடமுண்டோய்
    ஆடை கரித்தோல் அணிந்தெனது நெஞ்சமாம்zzzevaijnath9
    மேடையில் தாண்டவம் ஆடு….(20

    நாம்நமதை விட்டு நமச்சிவாய நாமத்தை
    ஒம்நமஹ சேர்த்தென்றும் உச்சரிப்போர் -காமமதை
    வென்றிடக் கைகொடுக்கும் விஸ்வேசா என்நெஞ்ச
    மன்றிடைத் தாண்டவம் ஆடு….(21)

    நாரதன் தும்புரு நந்தி மிருதங்கம்
    பாரதி வீணை பயின்றிட -வாரிதி
    வானைப் பிடித்திட வையம் அறிந்திட
    தாணுவே தாண்டவம் ஆடு….(22)

     
    நாவாரப் பைந்தமிழில் தேவாரப் பிள்ளைக்குப்
    பாவூற வைத்த பரமசிவா -பூவாரம்
    கொன்றையும் கங்கையும் கொண்டையில் சூடியோய்
    என்றென்முன் தாண்டவம் ஆடு….(23)

    lord-shiva-31v
    ஒருமுறை யேனும் அருணா சலத்தை
    கிரிவலம் செய்யக் கிடைக்கும் -கருவினில்
    தோன்றி இடுகாட்டில் தூங்கும் பரிட்சையைத்
    தாண்டிக் கயிலாயத் தேர்வு….(24)

     
    பதினாறைப் பெற்றோன் பெருவாழ்வைப் போக்க
    அதிகாரம் செய்த எமனை -குதிகாலால்
    எட்டி உதைக்க எழுந்த பதமென்மேல்
    பட்டிடத் தாண்டவம் ஆடு….(25)

     
    பெரிய புராணம் படித்தறி யேனேimages (4)
    நரியைப் பரியாக் கியவா -இறைவாநான்
    நாயன்மார் ஆகிஉன் நாமம் ஜபித்திட
    நீயென்மார் தாண்டவம் ஆடு….(26)

     
    பிரிவோடு வாழ்ந்த திருநீல கண்டன்
    உறவோடு சேர உகந்தோய் -திருவாரூர்
    த்யாகேசா தில்லை நடராசா நெஞ்சத்(து)
    ஆகாசம் தாண்டவம் ஆடு….(27)

     
    பூசலா நாயனாரின் மாசிலா நெஞ்சத்து
    வாசியாக கோயில் வளர்த்தோய் -காசிக்கு
    வந்துன்னைக் காண்போரை வாழ்விப்போய் என்நெஞ்சில்images (3)
    தந்தனத்தோம் தாண்டவம் ஆடு….(28)

     
    தவக்களை வாயினால் தத்துவம் பேசி
    சவக்களை ஆனது சிந்தை -தவக்களை
    வீச இமயத்தே வீற்றோய் எனக்கருள்
    ஓசை அடங்கிய ஓம்….(29)

     
    தேனீக்குப் போட்டியாய் மாணிக்க வாசகன்தன்
    ஆணிப்பொன் பாக்கள் அருந்தியுந்தன் -தீவிக்கும்
    கண்டத்து நஞ்சை அமுதாக்கிய சங்கரா
    பண்டைஊழ் தாண்டவம் ஆடு….(30)

    bhimashankar jyotirling famous shivaji temple at india pictures
    விழிமலர்த் தூவி வழிபட்ட வேடன்
    அழிவிலா நாயன்மா ராக -வழிவகுத்தோய்
    நானார் அறிந்திட நீயென்னுள் ஆனந்தக்
    கோனாராய் தாண்டவம் ஆடு….(31)

    அறையாய் உமைக்கு அரையை அளித்த
    அரனே அடியார்க்(கு) அரணே -அறமே
    பொருளே சுகமாம் பயனே பரமே
    மருளே வராது மகிழ்த்து….(32)….23-1-2009

     

    மாசில் வீணையும் பாதிப்பில்
    ————————————-

    சங்கீதம் சந்திரன் சாத்வீக மாருதம்images (7)
    இங்கிதம் கூட்டும் இளவேனில் -தங்கித்தேன்
    தின்னும் கருவண்டின் தீர்த்தக் கரையாம்முக்
    கண்ணன்தன் சீதக் கழல்….(OR)
    கண்ணன் குளிர்ந்த கழல்….(33)….24-1-2009

    கொழிக்கும் புலனைவர் கூட்டத்தின் கொட்டம்
    அழிக்கும் கடவுளே அன்பாய் -விழிக்கும்
    சிவனே உமையாள் கவனம் தவிர்த்து
    இவனே கதியென்(று) இரு….(34)

    முதற்பிள்ளை நெஞ்சில் நுதற்பிள்ளை கண்ணில்
    சதிர்க்கென்று மேனியில் சக்தியுமை -முதற்குன்றாம்images (8)
    வெண்வரை வாசா வறியவனென் வாய்மூட
    மந்திர மானது நீறு….(35)….24-1-2009

    கொழிக்கும் புலனைவர் கூட்டத்தின் கொட்டம்
    அழிக்கும் கடவுளே அன்பாய் -விழிக்கும்
    சிவனே உமையாள் கவனம் விலக்கி
    இவனே கதியென்(று) இரு….(36)….24-1-2009

    கூத்தபிரான் தீமையைத் தீர்த்தபிரான் தென்முகம்
    பார்த்தபிரான் வாமபாகம் பார்வதியை -சேர்த்தபிரான்
    தீர்த்தபிரான் வெண்ணீறால் நீர்த்தபிரான் (OR) ஆனைத்தோல் போர்த்தபிரான் அன்புக்குத்
    தோற்த்தபிரான் சேவடி தொழு….(37)….17-2-2009

    ஆடிய பாதன் அயன்மால் அடிமுடி Mahakal_Ujjain
    தேடிய பாதன் திருவிளை -ஆடிய
    பாதன் அடியவர் பேதம் அறுத்திடும்
    நாதன் திருவடி நண்ணு….(38)….16-2-2009

    கூடலில் சொக்கேசன் ஆடலில் அம்பலத்தோன்
    பாடலில் நாயன்மார் பண்ணாவான் -தேடலில்
    தென்முகம் நோக்கித் தவம்செய்யும் நாயகனின்
    பன்முகம் எண்ணாநாள் பாழ்….(39)….17-2-2009

    வெளுத்த உடலும் வரிப்புலித் தோலால்
    வளைத்த இடைவாழ் வனப்பும் -திளைத்த
    இமய மலையில் இமைகள் குவித்து
    அமையும் அரன்தொழில் அன்பு….(40)….17-2-2009

    கைவல்யம் கேட்கிலேன் கைலாசம் வேண்டிலேன்images (11)
    பொய்மல்கும் வாழ்விலாடி பிம்பமாய் -செய்யென்னை
    தெய்வமே தேசிகா உய்ய உபதேசம்
    செய்வாயா சங்கரா செப்பு….(41)….17-2-2009

     
    துன்மார்கப் பாதையில் அந்தக னாய்ச்சென்று
    கண்வேர்த் திடநான் களைப்புற்றேன் -சன்மார்க
    பந்துவே சங்கரா ஈசான்ய மூலைக்கு
    வந்தென்னைத் தள்ளி விடு….(42)

     
    வரத்தினால் பூமிக்கு வல்லூறாய்ப் போன
    மருத்துவனைக் காலால் மிதித்தோய் -சிறுத்தimages (10)
    விகார அகந்தை விலகதிரு வெண்கா
    அகோரமூர்த்தி

    நோயுமாவான் சாய்ந்திடும் பாயுமாவான் மாற்றிடும்
    மாயமாவான் புத்தொளிர் காயமாவான் -நாயன்மார்
    நேயமாவான் வெவ்வினையால் காயமானால் காப்பாற்ற
    நேயமாவான் நாடாதோர் சீயமாவான் தேற்றிடும்
    தாயுமாவான் தந்தை தவித்து….(44)….10-3-2009

    ஆர்வம் முறுக்கிட ஆசை கிழித்திட
    போர்வை மனது பலநூறு – நார்நாராய்
    கந்தையா னாலும் கசக்கிக் கட்டிட
    புந்தியை ஈசா பிழி….(45)

    சம்பந்த அண்ணனும் கம்பத்து பிள்ளையும்shiva-statue-nageshwar-jyotirlinga-temple-dwarka
    அம்பைஉண் ணாமுலையும் சூழ்ந்தாலும்-நம்பந்தம்
    நீக்கிடுவான் ஸ்ரீரமணர் ஆக்கிடுவான், நானொழிய
    ஆக்கிரமித்(து) ஆள்வான் அரன்….(46)….24-03-2008

    கண்ணாலே முப்புரத்தைக் கற்பூரம் ஆக்கிய
    அண்ணா மலையுன் அடிமுடியை-எண்ணிலேன்
    முப்புறமும் காமத்தில் மூழ்கியயித் தீயோனை
    அப்பனே ஆதரிப் பாய்….(47)….25-03-2008

    மதுரை மதர்-அரவிந்தர் சொஸைடிக்கு செல்கையில்
    —————————————————————-

    அச்சம், அசூயை, அகங்கார, ஆணவ
    எச்ச மிகுதியால் இவ்வுலகில் -அச்சனே!
    பொய்யில் எழுதும் புலவன் எனக்குன்மெய்
    செய்யுள் எழுதுசொக் கா….(48)….17-9-2010

    விட்டலனைப் போல்மதுரை வீதி விளையாடி
    பிட்டலைந்து தின்று பிரம்படி -பட்டவனேtumblr_ljtqdfVCcs1qf0agqo1_r1_500
    எக்களங்க மும்வாரா ஏற்றம் எனக்குவர
    சொக்கலிங் காயென்சொல் கா….(49)….17-9-2010

    இரா.முருகனுக்கு எழுதியது
    ————————————-
    எந்தையே உந்தன் இரண்டாம் மகனுனக்கு
    முந்தை ஒருநாள் உபதேசம் -தந்தனன்
    அந்த முருகன் இராமுருகன் ஆகிட
    சிந்தைகொள் சங்கரா சட்னு….(50)….23-1-2009

    கோளரி கோவிந்தன் நூலறி நான்முகன்
    தாளறி தோளறியா தோற்றத்தில் -தீயெரி
    வெற்பாய் வளர்ந்தோய் வணங்குகிறேன், பத்தினி
    கற்பாய் இருந்தளி காப்பு….(51)….24-1-2009

    பெண்ணுமை பாகனே கண்ணுதல் நாயகா
    ஷண்மத ஸ்தாபகா சங்கரா -தண்மதி
    பாகீ ரதிசூடும் நாகா பரணனே
    தேஹி பவதி பிட்சாம்….(52)….28-1-200912056_468338519868554_1663975219_n

    போகம்போம் போக்கியம்போம் போசனம்போம் புன்மைபோம்
    மோகம்போம் மூர்கம்போம் மும்மலம்போம் -நாகம்பூண்
    நஞ்சுண்ட நாதனை நன்ணும் அடியார்க்கு
    நெஞ்சுண்ட நோய்கள்போம் நீர்த்து….(53)….17-2-2009

    கலைகங்கை நாகம் கமழ்கின்ற கொன்றை
    மலைமங்கை கொண்டமகா தேவன் -நிலையை
    சிவராத் திரியன்று சிந்தித்(து) இருப்போர்க்கு
    கவிராத் திரிபகலும் காண்….(54)….23-2-2009
    மகப்பேறு காண மருத்துவச்சி ஆக
    அகம்புறம் தாயுமான அன்பே -மிகப்பசியாய்
    பிள்ளைக் கறியுண்ட பித்தா உனதுலீலைக்(கு)
    எல்லைதனை யாரறிவா ரே….(55)….10-3-2009

    வேதங்கள் அர்ச்சிக்கும் பாதாம் புயம்பற்ற
    போதா உனக்கில்லை பாழ்மனமே -தீதில்
    இராப்பகல் தோறும் இருந்தென்ன கண்டாய்
    சிராப்பள்ளி ஈசனைச் சேரு….(56)….10-3-2009shiv parivar-3r

    ஏகனை தேவியுமை பாகனை தீந்தமிழ்ப்
    பாகனை தேவார ராகனை -நாகணை
    தேகனை நற்றவர்தம் யூகனை நந்திஹேச
    வாகனனை வாயாற வாழ்த்து….(57)….5-4-2009

    ரிஷப வாகனத்தன்று எழுதியது
    —————————————–

    மாடமர்ந்த கற்பகமும், கோடொடிந்த பிள்ளையும்
    ஆடகச் செம்பொன் அழகனும் -கூடவர
    வீடுவிட்டு வேடிக்கை மாடவீதி பார்க்கின்ற
    தோடுதொட்டக் காதனைத் தொழு….(58)….5-4-2009

    பாகீ ரதியைப் பிறைமான் மழுவினைom_namah_shivaya-god-825
    பாகீ சதியுடன் தாங்கிடும் -த்யாகேசா
    வாகனம் வாயில்லா ஜீவன் வதையுறுமே(or)
    வாகனக் காளையின் வேகம் குறையுமே
    நீகனம் ஆனதே னோ….(59)….5-4-2009

    பிக்ஷாடணர் அன்று எழுதியது
    ————————————-
    மெய்யடி யார்கள் மிகுந்த மயிலையில்
    ஐயம் உனக்கேன் அமுதீசா -ஐயம்
    விடுத்து எடுப்பாய் தொடுத்தமலர் மாலை
    இடத்து உமைதோள் இட….(60)….8-4-2009

    திருமயிலை திருக்கல்யாண அழைப்பிதழ்
    —————————————————-
    செல்வன் கபாலியை செல்வியுமை கற்பகம்
    கல்யாணம் செய்தவன் கைத்தலம் -செல்லும்
    தினம்நாளை சேர்வீர் திருமயிலா பூருக்கு
    இனம்ஜாதி இல்லை இதற்கு….(61)….8-4-2009images (12)

    கைத்தலம் பற்றி கபாலியும் கற்பகமும்
    நெய்த்தலம் சுற்றி நடந்தனர் -மெய்த்தவ
    வேதியர் மாலயன் வானோர் குழுமிட
    பாதியில் பாதி பிணைந்து….(62)….9-4-2009

    அன்னைக்கு தந்தைக்கு அர்த்தமதன் சொல்லுக்கு
    புன்னைக்கு பூங்கொடி பெண்ணுக்கு -இன்னைக்கு
    கையோடு கைகோற்கும் கல்யாண உற்சவம்
    மொய்யெழுதும் நேரமிது மெய்க்கு….
    மொய்யெழுத வாரீர் முனைந்து….(63)….9-4-2009

    குங்குமமும் வெண்ணீறும் கூடிக் கலந்தின்றுunnamed
    சங்கமம் ஆகுது சன்னிதியில் -தங்களை
    வாயாறக் கேட்கிறேன் வந்திதைக் காணவினை
    நோயாறிப் போகும் நொடித்து….(64)….9-4-2009

    திருவாதிரை அன்று எழுதியது
    —————————————
    பாதியுறை பார்வதி பங்கனுக்(கு) இன்றுதிரு
    ஆதிரை நன்நாள் அனைவரும் -ஆதியிறை
    தில்லை நடேசன் திருவடி நாடிடுவீர்
    கொல்லையில் பூக்கும் களிப்பு….(65)….22-12-2010

    மதுரை பேராசிரியர் ஞானசம்பந்தன் ஈற்றடிக்கு
    ———————————————————–

    பாலமார் கண்டன் பதினாறாய் வாழ்வதற்கு
    காலன் உயிர்குடித்த காளியின் -காலெனக்கு
    ஏதானால் நானும்தான் எத்துவேன் கூற்றினை
    பாதியின் பாதியளிப் பாய்….(66)….

    N.C.ஸ்ரீதர் காளஹஸ்தி பிரார்த்தனைக்குimages (13)
    ————————————————-
    மூளத்தீ முப்புரத்தை மூழ்கடித்த முக்கண்ணா
    காளத்தி நாதரே, கண்ணப்பன் -காலொத்திக்
    கண்ணைக் கொடுத்த கருணைக்கு நாயன்மார்
    சின்னம் அளித்தோய் சரண்….(67)….07-05-2011

    சடையில் குளிர்ந்த ஜலமும் கலையும்
    இடையில் இமவான் மகளும் -உடலில்
    களபம் அரனே, கதகதப்பாய் எந்தன்
    உளப்பாவத் தீக்குள் ஒதுங்கு….(68)….28-01-2010

    ஒதுங்கி இருந்து ஒருகாலில் தங்கச்
    சதங்கை அணிந்து சபையில் -மதங்க
    மகளிணைந்து ஆடும் மகாதேவன் பாதத்
    துகளணிந்து நெஞ்சே துலங்கு….(69)….30-07-2011images (14)

    துலங்குவெண் நீறு துனிப்பிறைக் கோடு
    இலங்க ஜதியின் இசைக்கு -மலங்க
    விழித்துமையாள் மண்பார்த்து வெட்க அரவக்
    கழுத்தரனின் கூத்தே களிப்பு….(70)….30-07-2011

    களியா திரையோன்தென் கல்லால் இறையோன்
    வளிவான் நதிமதி வேய்ந்தோன் -புலியா
    சனத்தில் அமர்ந்து சுகத்தில் திளைப்போன்
    மனத்துப் பிணிக்கு மருந்து….(71)….30-07-2011

    மருந்தவன் நீறு விருந்தவன் நாமம்
    அருந்தவன் ஆடல் அழகு -பெருந்தவம்
    சும்மா இருந்தந்த சோணா சலன்நினைவில்
    உம்மால் முடிந்தவரை உன்னு….(72)….31-07-2011images (15)

    உன்நுதற் கண்கொண்டு உற்றெனைப் பார்த்திடு
    என்னிதய காமன் எரிந்திட -பின்னதை
    நெற்றியில் பூசிடு நீறாய், நிகழ்ந்திடும்
    வெற்றிக் குமாரசம்ப வம்….(73)….31-07-2011

    வம்புக்(கு) இழுத்திடு வாயாடி கீரன்போல்
    சம்புயெதிர் வந்துன்னை சந்திப்பான் -நம்பிதை
    காட்டில் எரிதலினும், பாட்டால் பொசுங்கிட
    ஏட்டிலுன் பேரிருக்கு மே….(74)….31-07-2011

    மேய்ந்து மகளிர் முலைபற்றி மந்தமாய்
    சாய்ந்து கிடக்காதே சோம்பேறி -பாய்ந்துimages (16)
    வருகங்கை வீச்சை விரிகுழல் ஏந்தி
    தருசங் கரன்தாள் தழுவு….(75)….31-07-2011

    தழுவுசிவ மார்கம் கழுவுபவ ரோகம்
    மழுவுமான் ஏந்தும் மஹேசன் -குழுவில்
    அடியார்க்(கு) அடியாராய் ஆகும் பணிக்கு
    துடியாய்த் துடித்தல் தவம்….(76)….31-07-2011

    தவமெதற்கு தான தருமம்தான் ஏனோ
    சிவமிருக்க சிந்தையில், ஜீவன் -அவமனைத்தும்
    சூரியன்தன் முன்தோன்றி சூம்பிப் பனியுருகி
    நீரிழந்த ஆவி நிலைப்பு….(77)….31-07-2011

    நிலைப்படியில் நின்று நமனழைக்கும் நேரம்
    குலப்படிப்பு கோத்திரங்கள் கூறி -களைப்படையாய்
    மார்கண்டன் ஆர்த்தநஞ்சு நீர்கண்டன் பேர்சொல்ல
    பார்கண்டம் போகும் பணிந்து….(78)….31-07-2011

    பணிந்தாய் பதர்முன் குனிந்தாய் குதிர்முன்1780843_587204171369869_249422305_n
    துணிந்தாய் எளியோரைத் தூற்ற -மனிதா!
    கனிவாய் திருவல்லிக் கேணியோன் சொன்ன
    பணிருத் திரத்தைப் பழகு….(79)….31-07-2011

    பழகப் புளிக்கும் பெரும்பாலும் காமம்
    அழகின் கதியும் அதேதான் -முழுகு
    சிவாய நமவென்ற சிந்தையில் நாளும்
    அவாவைம் புலன்கள் அழிவு….(80)….31-07-2011

    அழிப்பது போலிருக்கும் ஆனால் அவனோ
    கழித்தபின் கூட்டும் கணக்கன் -ஒழித்த
    உயிரைப் பெருக்கி உலவவிட்டு ஆன்ம
    பயிரை வகுக்கும் பரம்….(81)….31-07-2011

    பரம்பரை கர்வம், பணத்திமிர், மோகம்
    இரும்பினில் நாரெடுக்கும் இன்பம் -புரம்தனை
    தீக்குள் தொலைத்தவனை பாக்குள் பிடித்திடும்
    சாக்கில் சிவத்தை சுகி….(82)….31-07-2011

    சுகம்பிறக்கும் முன்னால், அகம்சுரக்கும் பின்னால்images (4)
    இகம்பரத்தை ஈர்க்கும் இயல்பாய் -யுகம்பொருத்து
    சொக்கனாய், சங்கரனாய், சுந்தரனாய்த் தோன்றிய
    முக்கண்ணன் ஈசனை மொய்….(83)….01-08-2011

    மொய்யெழுதப் போனவன் மாப்பிள்ளை, தன்பெயரை
    கையெழுத்துப் போடாதோன் கல்விமான் -தையெழுங்கால்
    மட்டுமல்ல ஈசனருள் கிட்டுமா யின்நிற்கும்
    எட்டுவித சித்தி எதிர்….(84)….01-08-2011

    எதிர்படும் கூற்றின் எருமை மிரளும்
    விதிர்த்தகுப்தன் ஏடு வதங்கும் -குதித்த
    மறலிக்கை பாசம் மருக்கொழுந்தாய் வீசும்
    திறலக்கை ஈசன் தயை….(85)….01-08-2011bhimashankar jyotirling famous shivaji temple at india pictures

    தயாபரன், கங்கை மயானத்தில் செல்வோர்
    பயாஅபயம் போக்கப் பரிவாய் -கயாபுரத்து
    விஸ்வநாதன் கர்ணத்தில் வாசிக்கும் மந்திரத்தால்
    பஸ்மமாகும் செத்தோர் பிறப்பு….(86)….01-08-2011

    பிறப்பறுக்கும் நூலோன், மறக்கடிக்கும் மாலோன்
    இறப்பெதிர்க்கும் சூலோன் இதுதான் -இருப்பதற்கு
    எங்கும் இருந்தாலும் தங்கும் அடியார்மேல்
    பொங்கும் கருணையின் பால்….(87)….01-08-2011

    பாலவன் பாதிநிறம்,பச்சையவன் மீதிநிறம்
    ஆலவன் ஜோதியமர் ஆசனம் -மூலவன்
    ஆகம நூலவன் அல்லாது போலவன்
    தேகமில் தேவனவன் தான்….(88)….01-08-2011images (17)

    தான்தோன்றி ஜாலமவன், கான்தோன்றும் காலனவன்
    ஆண்போன்றும் பெண்போன்றும் ஆனதவன் -”நான்”தோன்ற
    ஜீவனாய் வீண்தோன்றி, ஜம்பமாய் வான்தோன்றி
    தேவனாய் வந்தடைவான் தீர்வு….(or)
    ஆவலாய்வந் தான்மா அவன்….(90)….01-08-2011

    அவனர லிங்கம் ,அவனரி சிங்கம்
    அவனலர் தங்கும் அயனும் -அவனவனி
    வந்த மனிதன் விழியிமையா வானவன்
    எந்த பொருளுமவ னே….(91)….02-08-2011

    நேற்றின்று நாளையவன், காற்றுவான்மண் தீநீராய்
    போற்றப் படுகின்ற பூதமவன் -தோற்றம்
    இலாதவன், தோன்றும் கலாதரன், சொல்லிச்
    சொலாதவன் ஆலில் ஜபித்து….(92)….02-08-2011images (18)

    ஜபமாலை தாங்கி, சதுர்மறை ஏந்தி
    அபயவர ஹஸ்தம் அமைந்து -தபஸாய்
    சனகா தியர்சூழ சங்கேதம் பேசும்
    முனிதக் ஷிணாமூர்த்தி மாண்பு….(93)….02-08-2011

    மான்மழு சூலம் மலைமகள் பார்வதி
    வான்விழு கங்கை வளர்பிறை -ஊன்தழுவ
    வெள்ளி மலையேறி வாசம் புரிந்திடும்
    சொல்லில் அடங்கா சிவம்….(94)….02-08-2011

    சிவானந்த சாகரத்தில் சிந்தை குளிக்க
    அவாவந்த ஐம்புலன்கள் ஆசு, -முவாசைகள்,
    நானெ னுமகந்தை தானெனும் தற்பெருமைtrayambakeshwar-jyotirlinga-2
    வீணெனவிட் டோடும் வெளுத்து….(95)….02-08-2011

    வெளுத்ததெலாம் பாலாய் வழித்துண்ணும் மூடா
    களித்ததால் வந்த கருப்பு -குளித்திட
    எந்நாளும் போகாது உன்னாசை சொக்காயை
    வண்ணானச் சொக்கன்முன் வை….(96)….02-08-2011

    வைகறையில் நீராடி வாயாறத் தேவாரம்
    மெய்கரைய ஓது மடநெஞ்சே -மைகரையா
    வண்டு நிகர்த்த விழியாள் வலத்தினில்
    கொண்ட சிவன்தாள் குனி….(97)….02-08-2011

    குனிந்திடக் குட்டு துணிந்திடப் பட்டு
    நினைந்திடாய் கூடாத நட்பு -அணிந்திடுவாய்OMKARESHWAR2-18082011-052309._omkareshwar-jyotirlinga-shiva-temple-khandwa-mp
    மந்தா கினியை மதியை குழல்சூடும்
    அந்தாள் நமச்சிவாய அஞ்சு….(98)….02-08-2011

    அஞ்சை அடக்கிடலாம் அஞ்சா(து) இருந்திடலாம்
    அஞ்சிரெண்டு மாதகர்பம் ஆட்படாய் -அஞ்சிலொன்றில்,
    அஞ்சிலொன்றைத் தாண்டிய அஞ்சனசேய் அம்சமான
    அஞ்செழுத்துக் காரன் அளிப்பு….(99)….02-08-2011

    அளியினம் பூவென்(று) அணுகிடும் பாதத்
    துளிமக ரந்தத்தை துய்க்க -கலிகொண்ட
    அல்வினை சேரா(து) அணைத்தருளும் கற்பகச்
    செல்வி கபாலி சரண்….(100)….03-08-2011….

    ————————————————————————————————————————–

     

    படங்களுக்கு நன்றி:

    http://www.hoparoundindia.com/travel-blogs/172/12-jyotirlingas-of-india—jyotirlinga-temples.aspx

    Share