திருமால் திருப்புகழ் (53)
கிரேசி மோகன்
தன்னத் தனத்த தனதனன தான தன்னத் தனத்த தனதனன தான
தன்னத் தனத்த தனதனன தான -தனதான….
———————————————————————————————————————–
நய்யப் புடைக்கும் சுடுதடிஉ பாயம் (OR)
மண்ணுக் களிக்கும் சுடுதடிவு பாயம்
தன்னைக் கொடுத்த தவஅருணை ஞானி-ரமணேசர்
என்னைப் பிடிக்க இழுபறியி லாது
முன்னைப் பிறப்பு பழவினைகள் போக
உன்னைத் துதித்து உருகுமெனை ஆள-அருள்வாயே
கண்ணைப் பறிக்கும் சுழலும்சுட ராழி
விண்ணுக் கொலிக்கும் வலவளைவு சோழி
பொன்னைப் பழிக்கும் கதையுமுடை வாளும்-சிலைவாளி
முன்னக் களிற்றின் உதரமுறு ஆழி
தன்னைப் பறிக்க கரணமிட காது
கன்னச் சிவப்பு றயிழுகர நாலில்-உடையோனே
மண்ணுக் கொருத்தி குறமகளும் தேவர்
விண்ணுக் கொருத்தி களிறெனவு லாவ
வண்ணக் கழுத்து மயிலிலமர் வேலன் -முறைமாம
கண்ணப் பிறப்பை கமுசன்செவி கேள
மண்ணுக் குரைத்த முதலிலவ தார
அன்னைக் கடுத்து அவனிபுகு சோத -ரமுராரி
தன்னைப் பழித்த இரணியனை வாசல்
திண்ணைப் பரப்பில் மடியுருள ஆவி
தன்னைக் குடிக்க நரஹரிசொ ரூப -அவதார
உன்னைக் கலக்க உருகுமடி யார்கள்
இம்மைப் பிறப்பில் மறுமையுற ஞான
கண்ணைத் திறக்கும் கரிவரத ராஜ -பெருமாளே
—————————————————————————————————————-
படத்திற்கு நன்றி:
http://narasimhar.blogspot.in/2014/03/blog-post.html