திருமால் திருப்புகழ் (52)
கிரேசி மோகன்

தத்தன தனத்ததன தத்தன தனத்ததன
தத்தன தனத்ததன -தனதான….
——————————————————————————————————-
“கற்பனை யுதிப்பதுவும் ,அற்புதம் அளிப்பதுவும்
சிற்றலை சமுத்திரம -தனிலாடும்
நச்சர வமெத்தைவளர் பச்சைநி றவெற்பனைய
அச்சுத மயக்கமதின் -அசைவாலே
நிர்குண சலிப்பிலுற முக்குணம் படைத்துலகில்
தற்பரம் தனக்குவமை -தனில்மூழ்க
பற்பல வுயிர்த்தொகைகள் நிற்பதும் நடப்பதுவும்
பத்தென வுதித்தவனின் -பரலீலை
அற்பம னவச்சமட புத்திநி லைபெற்றுவுயர்
சத்திய வழிக்குவர -அருள்வாயே
இத்தனை எதற்கிறைவ, இப்பொழு தெனக்கருள
சத்குரு முறைப்படி -வருவாயே
விற்கலை விரக்தியுற வித்தகம் உரைத்தவனை
வெற்றியில் செலுத்தரதம்-விடுவோனே
திட்டிட இடைச்சி,மணல் அப்புஇ தழுக்குள்அவள்
சொக்கிட விசித்ரமருள் -பெருமாளே”
————————————————————————————————————–
படங்களுக்கு நன்றி
