கிரேசி மோகன்
வடுவூர் ராமர்
————————–

Vaduvur Ramar04

தனனா தனதான தனனா தனதான
தனனா தனதான -தனதான….

—————————————————————————————————————–

Vaduvur Ramar13

 

ஒருநாள் இசைபாடும், மறுநாள் வசைபாடும்Vaduvur Ramar15
அதனால் மதியீனம் -அறிவாயே
நதிபோல் மதிமூலம் அறிவோர் மனமேளும்
அறிவால் அறியாமை -இருள்போகும்

அருணா சலஈசர் அகமாய் உருவாகி
குருவாய் ரமணேசர் -உபதேசம்
பெறநான் சமுசார கடல்சூழ் புவிசேரா
பிறவா வரம்காண -அருள்வாயே

மறைநான் கருள்ஓமின் பொருளோ தபிதாவின்
மடிசேர் மகனான -குமரேசன்Vaduvur Ramar07
குறமா துடனானை மயிலே றவுலாவும்
திருவே ரகவேலன் -முறைமாம

திருஜா னகிசேடர் இளையோன் வரகானில்
மறுதாய் பணியாக -திரிவோனே
அனுமான் எஜமான அவதா ரசொரூப
வடுவூர் சிலைராம -பெருமாளே

——————————————————————————————————————-

 படங்களுக்கு நன்றி :

http://periyathiruvadi.blogspot.in/2012/02/blog-post_10.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.