கிரேசி மோகன் P1030953  
தாயுமானவன் திருப்புகழ்
——————————

மகப்பேறு காண மருத்துவச்சி ஆகshivan
அகம்புறம் தாயுமான அன்பே -மிகப்பசியாய்
பிள்ளைக் கறியுண்ட பித்தா உனதுலீலைக்(கு)
எல்லைதனை யாரறிவா ரே….(1)….10-3-2009

நோயுமாவான் சாய்ந்திடும் பாயுமாவான் மாற்றிடும்
மாயமாவான் புத்தொளிர் காயமாவான் -நாயன்மார்
நேயமாவான் வெவ்வினையால் காயமானால் காப்பாற்ற
நேயமாவான் நாடாதோர் சீயமாவான் தேற்றிடும்
தாயுமாவான் தந்தை தவித்து….(2)….10-3-2009

 
வேதங்கள் அர்ச்சிக்கும் பாதாம் புயம்பற்ற
போதா உனக்கில்லை பாழ்மனமே -தீதில்
இராப்பகல் தோறும் இருந்தென்ன கண்டாய்
சிராப்பள்ளி ஈசனைச் சேரு….(3)….10-3-200912056_468338519868554_1663975219_n
————————————————————————-

சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ

சாதாரணன் போல வந்தான் -ஏதும்
ஓதாமல் சில நேரம் சும்மா இருந்தான்
வேதா ரண்யம் ஊர் என்றான் -இதில்
சூதில்லை அம்மகாதேவன் தான் என்றான்….(1)….10-3-2009

உண்டென்று ஒன்றுண்டு கேளாய் -அதை
உண்டு நான் உமிழ்கிறேன் ஒவ்வொரு நாளாய்
விண்டவர் கண்டிலர் கண்டாய் -அதைக்
கண்டு நீ கொண்டாட காட்சிகள் உண்டாய்….(2)….10-3-2009

பதி பசு பாசங்கள் மூன்றும் -முறையே
விதி மதி வினை என்ற விவகாரமாகும்
நிதி உந்தன் நெஞ்சிலே காண்பாய் -அது
புதிதல்ல மணம்வீசும் பூத்த மலரான்மா….(3)….10-3-20092

புதிரான பூலோகக் கல்லை -நீ
பொய்யென்றும் மெய்யென்றும் பேரிடத் தொல்லை
அதுவென்றும் இதுவென்றும் இல்லை -சுத்த
அதுவே இதுவாக ஆனந்த எல்லை….(4)….11-3-2009

பண்டைநாள் வந்ததோர் பூச்சி -அது
பலவாய்ப் பெருகிடப் பாரென்று ஆச்சி
கொண்டதோர் கோலமே காட்சி -அதை
உண்டில்லை கண்டிடும் உறுதி ஆராய்ச்சி….(5)….11-3-2009

செத்ததோர் பாம்பிந்த தேகம் -சுக
துக்கமிதில் காண்பது செல்லாத லாபம்
அத்தைக்கு மீசைமேல் மோகம் -அத்தை
சித்தப்பன் பார்த்திட சிரைத்திடும் யோகம்….(6)….11-3-2009

வேடனார் வேடத்தில் இறைவன் -அவனே
விருந்தாகி நீயுண்ண வலைவீசும் இரைவன்
பாடெல்லாம் அவனென்று பறைவாய் -ஜீவ1506395_633641266707576_1028299500_n1
பாவத்தில் பசுபாசம் மெழுகாகக் கரைவாய்….(7)….11-3-2009

பார்முதல் பூதம்நீ அல்ல -பஞ்ச
புலன்களை ஆண்டிட முயலாதே வெல்ல
யாரந்த நானென்று உள்ளே -உன்னிப்
பாரவன் ஆன்மனாய் ஆகுவான் மெல்ல….(8)….11-3-2009

அன்பே சிவமென்ற ஜோதி -அதன்
ஆதார சக்தியே அருளென்ற பாதி
பண்பான பக்தர்கள் மீதி -இந்தப்
பாங்குணர்ந் தோற்க்கில்லை பூலோக வ்யாதி….(9)….11-3-2009

 
போக்கத்த சொப்பனம் நனவு -ஆழ்ந்த
தூக்கத்தில் நிற்பவன் யாரென்று வினவு
சாக்கிதால் சஞ்சலம் தீரும் -ரமணG_T2_313
வாக்கிதை மேற்கொள்ள வழிவந்து சேரும்….(10)….11-3-2009

இறப்பதும் பிறப்பதும் யாரு -இங்கு
இருக்கையில் ஆராய்ந்து யோசித்துப் பாரு
உறக்கமே இறப்பென்ற மாயை -உணர
உறங்காமல் உறங்கிடப் போடான்மப் பாயை….(11)….12-3-2009

நம்பிக்கை அறிவாக நீளும் -அவ
நம்பிக்கை அறியாமை அதுகுப்பைக் கூளம்
எம்பிக்கை போடட்டும் தாளம் -ஆன்ம
ஏகாந்த வாசியின் ஏற்றமே மூலம்….(12)….12-3-20091780843_587204171369869_249422305_n

இல்லாத இகம்சொப்ப னங்கள் -அதில்
இன்பத்தைத் துய்ப்போர்கள் இருள்பெற்ற மாக்கள்
உள்ளது ஓராயி ரங்கள் -உதறி
உணர்ந்திடு உணர்வென்னும் உச்சிப் பனங்கள்….(13)….12-3-2009

சும்மா இருந்திடல் சுகமே -என்று
சொன்னார்கள் முன்னோர்கள் சிவமாகு அகமே
நம்மால் இயன்றது நகமே -அது
நாளாக நாளாக நம்பிக்கை முகமே….(14)….13-3-2009

துன்மார்கப் பாதையில் துன்பம் -அந்த
சன்மார்கமே சச்சிதா னந்த இன்பம்
தென்மார்கம் பார்த்திடும் அன்பன் -மவுன
தத்துவம் தோள்கொடுத் தேவுதவும் நண்பன்….(15)15-3-2009

ஓயாது துழைத்திடும் பெண்மை -சக்தி
ஓங்கார நாதத்தின் ரீங்காரத் தன்மை
தாயாகி அன்பர்க்கு நன்மை -நல்கும்annabiseham sivan1
தத்துவம் அவளந்த பித்தர்க்கும் அம்மை….(16)….19-3-2009

போகாத ஊருக்கு போக -இங்கு
சாகாது சாகிறோம் ஜனனித்து நோக
தேகான்ம பாவம் முடிக்க -சிவ
தேசிகன் சரணார விந்தம் பிடிக்க….(17)…..20-3-2009

செல்லாதா காசிந்த மேனி -இது
இல்லாத போதுமி ருப்பவன் ஞானி
கல்லாலின் கீழுற்ற கோலம் -அது
சொல்லாமல் காட்டிடும் சித்தாந்த ஜாலம்….(18)….20-3-2009

பல்லாண்டு பல்லாண்டு வாழி -அந்த
பரசிவம் ஒன்றுதான் பவுருஷம் தோழி
உள்ளாண்ட போதவன் போதம் -வெளி
உலகத்தில் விளையாட வேடிக்கை பூதம்….(19)….20-3-2009

சூலாயுதம் கொண்ட கையை -சக்தி
வேலாயுதன் வந்த விழிகர்ப்பப் பையை_siva21
ஆலால கண்டத்து மெய்யை -எண்ண
அதுநெஞ்சில் ஊற்றிடும் ஆனந்த நெய்யை….(20)….22-3-2009

பொன்னார் மேனியன் இடையில் -வரிப்
புலித்தோல் பூண்டவன் ஏறுவான் விடையில்
உன்னார்வம் அவனெதிர் பார்ப்பான் -கொள்ள
உண்ணா முலையோடு வந்தருள் சேர்ப்பான்….(21)….25-3-2009

சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ….
——————————————————————————-

படங்களுக்கு நன்றி

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *