திருமால் திருப்புகழ் (55)
கிரேசி மோகன்
——————————————-
தத்ததன தனன தான தன தத்ததன தனன தான தன,
தத்ததன தனன தான தன -தனதான….
—————————————————————————————————————–
’’அத்திகிரி’’ என்றழைக்கப்படும் காஞ்சி நகர் வரத ராஜப் பெருமாள்….
————————————————————————————————————–
பூவிருந்தவல்லி மூன்று கருட சேவை
”உற்றவுற வழுகை வீடு வரை, கட்டியம னையழுகை வீதிவரை,
பெற்றதுகள் அழுகை காடு வரை,-அதனாலே,
எத்தனெமன் எருமை ஏறி வர, செத்தவுட லெனபி ராணம் விடு
வித்தவனி டம்நசி கேத னென -சமராடி,
குற்றமர ணபயம் சாக, நகர் விட்டருணை அசல ஆல மரம்
பற்றிவளர் கொடிகு மார குரு -ரமணேசர்,
சொற்படிஉ லகிலு லாவி நிதம், கற்பனைம னமுரை பேத மற,
பக்தியிலு னதனு பூதி பெற -அருள்வாயே.
வெற்றியுடன் மயிலில் ஏறி பகை,யுற்றுவரும் பதும சூர னுயிர்,
விட்டமர உலகி லேள, உமை -அளிவேலை
விட்டெறிவி ழியிமை யாம கள்கு றத்தியும் உலவு தோளன்,சிவ
சக்தியினி ளையகு மாரன், குகன் -முறைமாம.
கற்பறிய மனைவி ஜான கிநெ ருப்பில்நனை, நெறியி னோன்ர விகு
லத்தில்வரு, திலக மான ரகு -அவதார
அத்தனையும் நினது தேச மதில், எத்தகைய வரமும் தூவும் பதி
அத்திகிரி வரத ராஜ னெனும் -பெருமாளே
—————————————————————————————————————-
படங்களுக்கு நன்றி:
http://narasimhar.blogspot.in/2013_06_01_archive.html
http://3.bp.blogspot.com/-JpI6obm7jyY/UarITyThTVI/AAAAAAAAOLM/EnYYiAjsfG0/s1600/pg21.jpg


