Author: கிரேசி மோகன்

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180706a Vatsalya A4 lr

    சத்ததின் ஆனந்தம் சித்தின் விளையாட்டு

    அத்தனையும் வாத்ஸல்யம் ஆகப்பார் -புத்தி

    மனமுள்ளம் நெஞ்சென்ற மாயங்கள் நால்வர்

    உனையுண்ணத் தூக்கும் உறவு….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170704 A tale of two monkeys – ref to Sugreeva and Hanuman -Ramayana A4 watercolour lr

    ‘அங்கதன் கையில் அதுயிது வேண்டி,
    சங்கரனோ(அனுமார் -ருத்திராம்ஸம்) காலில் சரண்புகும்: -இங்கிரெண்டும்
    மந்திதான் ஒன்று மனிதாம்ஸம்(அங்கதன்), மாருதியோ
    அந்தரி பாகன்(பாகமுடைய) அரன்’’….கிரேசி மோகன்….!
    (அல்லது)
    சரண்புகும் அன்பே சிவம்’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்

    180704 Krishnapremi – (Rajagopala) watercolour A4 lr

    MIND Made மனுஷன்….!(மந்தி)….!
    —————————————————————

    “மனமற்றுப் போனால்தான் மானுடா சாந்தி
    தினமுற்றுப் புள்ளிவை; தெய்வ -குணமுற்றால்
    வைக்கலாம் புள்ளியை , வாழ்வெதிர் பார்க்குமேல்
    பொய்க்கமா போட்டுப் பழக்கு”….கிரேசி மோகன்….!

    ’மாதவர்கைப் பற்றிடும் மந்திமனம் மாறுது
    தீதுபுரி யாது திருடுது-சீதை
    எஜமான்(ராமர்) வருகை எதிர்பார்த்து இருப்பாள்:
    நிஜமான ஊழியனாய் நில்….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180621_New Forever- wm-A4

    உண்டில்லை என்றுனை இங்கிரு சாரர்கள்
    விண்டுரைத்த போதும் விசுவமே -கண்டுகொண்டேன்
    மித்யை ஜகத்தென்றும் சத்தியம் நீயென்றும்
    வித்தை பழகும் விதம்….கிரேசி மோகன்….!

    வாவென்றால் வாலிபன், வாக்கில் வயோதிகன்
    ’ஆ’வென்றால் கற்பக அம்மாவாம் -சோவென்று
    மாரியருள் பெய்கின்ற காரிருள் கண்ணனே
    வேறிருள் போக்கும் விளக்கு….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180701 Yashoda Krishna-A4 -600dpi -lr

    வந்ததும் மண்ணினை வாய்நிறைய உண்டுநீ
    அந்தநாள் அன்னை அனுபவித்த -விந்தையை
    காட்டுவாயா நீயெனக்கு மாட்டிடையா நானுக்கு
    ஊட்டிடுவேன் வெண்ணை உவந்து….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்

    180630 -Lakshman rekha -Krishnapremi series-lr A4 Canson 300gsm

    (Mind Is A Monkey)
    வாட்டம்ஏன் வானரமே வாத்ஸல்ய வட்டமிட்டார்
    ஆட்டம் முடிய அழித்திடுவார் -காட்டம்ஏன்
    அந்திம நாளேனும் அய்யோ மனமேநீ
    நந்த குமாரனை நம்பு….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    தெய்வத்திற்கும் உண்டு பிராரப்தம்….!ஆனாலும்….குறைக்கவல்ல கண்ணபிரான்….!
    ————————————————————————————————————————————————-

    180627 Yashoda lr 10×14 inch Arches 300gsm prem.

    பேய்ச்சி முலைநஞ்சுப் பாலின், பிராரப்த
    சூழ்ச்சியை வெல்ல சிசுகண்ணன் -ஆய்ச்சியவள்
    கொஞ்ச, மடிதனில் பஞ்சாய்ப்(பூபாரம் இல்லாமல்) படுத்திருந்து
    நஞ்சளவு போக்கும் நயம்….கிரேசி மோகன்….!

    பூதனை நச்சுப் பாலொடு அவளின்
    வேதனை தீரக் குடித்துக் களைத்தவன்
    சீதரன் கோமளன் ஸ்யாமளன் என்னுளத்
    தீதினை விரட்டித் தூங்க வருகவே….கிரேசி மோகன்…..!

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180626 Kamadhenu -watercolour-wm-10×14

    காமதேனு கண்ணபிரான் கல்கி அவதாரம்
    ராமன்பின் சந்தி ரவம்சத்து -ஜாமவண்ணன்
    வெஞ்சிறையில் தேவகியை வாட,யசோதையார்
    கொஞ்சிட வந்ததோர் கன்று’’….கிரேசி மோகன்….!

    (அல்லது)
    எளியோரைக் காக்க வலியோரை வாட்ட
    புளியோதரை(சீச்சீ இந்தத் தரை புளிக்கும் என்றே, விடாது கருப்பு(கண்ணன்)….) வந்த புருஷன் -தளிகையாய்(வந்த வேலையாய்)-
    கோக்களை மேய்த்தனர் கோபால விம்சதி
    ’ஆ’க்கள் மாதா(கோமாதா) அடுத்து….கிரேசி மோகன்….!

    Share
  • ’’ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’

     

    இசையமைத்து பாடியவர் ’’குரு’’….!ஏனோ தெரியவில்லை அமரர் ‘’மெல்லிசை மன்னர்’’ அடியேன் நினைவுக்கு வந்தார்….!

    ’’ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’
    ————————————————-

    ‘’சங்குசக்ரம் சாரங்கம் தெண்டம்வாள் நந்தகி
    அங்கையேந்தும் அவதார விஷ்ணு
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(1)

    ‘’மூணுமோர் மறைகள் மீட்க மீனமாய்க் கடலுள் சென்ற
    வானவைகுந்தனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(2)

    ‘’கடல்கடைந்த போதன்று வடவரையை வழுவிடாது
    உடல்சுமந்த ஆமையே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(3)

    ’’கொம்பிலே குவலயத்தை கால்சிலம்பில் கோள்குலுங்க
    நெம்பிய வராகரே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(4)

    ‘’தானாடும் துட்டனைத் தரைமட்டம் ஆக்கிட
    தூணாடும் துரைசிங்கனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(5)

    ‘’வந்தபின் வரம்வாங்கி அந்தவான் உலகளந்த
    அந்தணன் வாமனனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(6)

    ’’ராமபரசு ராமஅரசு ராமபல ராமனாய்
    நாமமொன்று நடிப்புவேறு
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(7)

    ‘’பூபாரம் போக்கவன்று பாரதப் போர்முடித்த
    கோபாலக் கண்ணனே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….(8)

    ———————————————————————-

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    150426 Vatsalya lr 5x7in

    குன்றேந்தி கண்ணபிரான் கன்றேந்தித் தண்ணீரில்
    நின்றேந்தல் ’’ஆ’’சமன ஞாபகமோ -நன்றிதை
    நம்முடைய கேசவ்ஜி நன்கு வரைந்தனர்
    அம்(அழகு)மவர் பிரஷ் அமுது….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    150426 Gajendra and the crocodile – watercolour sketch in 5”x7” (12.5×17.5cms- elephant dung paper) – lr

     

    ”புஜேந்திரர் மல்லில், நிஜேந்திரர் சொல்லில்,
    கஜேந்திரர் கத்த கருட -விஜயேந்த்ரர்,
    அந்தநாள் பார்(உலகம்)மூலம், இந்தநாள் நீர்மூலம்,
    வந்தனன் நந்தன் வளர்ப்பு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180622 New Forever lr 10×14 in

    சரணா கதியென்று சார்ந்து கிடப்போர்க்(கு)
    அரணாய் இருக்கும் அரியே -நரனாய்ப்
    பிறந்து வளர்ந்து பிணியென்ற சாக்கில்
    இறந்தில்லை யாவ(து) எதற்கு!….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    180621 Lord of Paradox -watercolour – Arches 10×14” 300 gsm -lr

    முரணெனப் பட்டாலும் மூலமே நின்னை
    வரவழைக்கக் கண்டேன் வழியை -இரணியன்போல்
    இல்லை இறையென்று சொல்லி இரையாக
    மல்லுக்(கு) அழைப்பேன் முனைந்து….கிரேசி மோகன்….!

    Share