கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
உண்டில்லை என்றுனை இங்கிரு சாரர்கள்
விண்டுரைத்த போதும் விசுவமே -கண்டுகொண்டேன்
மித்யை ஜகத்தென்றும் சத்தியம் நீயென்றும்
வித்தை பழகும் விதம்….கிரேசி மோகன்….!
வாவென்றால் வாலிபன், வாக்கில் வயோதிகன்
’ஆ’வென்றால் கற்பக அம்மாவாம் -சோவென்று
மாரியருள் பெய்கின்ற காரிருள் கண்ணனே
வேறிருள் போக்கும் விளக்கு….கிரேசி மோகன்….!