கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்

MIND Made மனுஷன்….!(மந்தி)….!
—————————————————————
“மனமற்றுப் போனால்தான் மானுடா சாந்தி
தினமுற்றுப் புள்ளிவை; தெய்வ -குணமுற்றால்
வைக்கலாம் புள்ளியை , வாழ்வெதிர் பார்க்குமேல்
பொய்க்கமா போட்டுப் பழக்கு”….கிரேசி மோகன்….!
’மாதவர்கைப் பற்றிடும் மந்திமனம் மாறுது
தீதுபுரி யாது திருடுது-சீதை
எஜமான்(ராமர்) வருகை எதிர்பார்த்து இருப்பாள்:
நிஜமான ஊழியனாய் நில்….கிரேசி மோகன்….