Author: கிரேசி மோகன்

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180329 – Dialogue with Arjuna – lr -icam -A4

    ”பேடித்தனம் காண வேடிக்கை யாயிருக்கு
    வாடிய அக்கினியே வீரியம்கொள் -சூடிய
    உள்ளத் தளர்ச்சி ஒழிக, நிமிர்ந்தெழு
    கொல்லத் துணிவதே கடன்”….கிரேசி மோகன்….!

    ”you too அருச்சுனா!, யானை அமர்ந்தவர்
    cuteடாக நிற்க கிளியோவா(கிளியோபாட்ரா)! -dutyயாய்
    ஸீஸராய்க் கண்ணனவர் போஸ்கொடுத்து ஆண்டனியை
    ஏஸியபின், கீதை எடுப்பு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180328 The Listener -DWA -icam

     

    பகவான் உவாச
    ———————-
    ”காரியம் அற்றசோர்வு வீரன் உனக்கெதற்கு
    சூரிகள் விண்ணிடை சேர்ப்பாரோ ! -நாரியாநீ(பெண்ணா நீ)!
    தேரையும் போரையும் தேர்ந்தெடுத்த என்னைக்கேள்(LISTEN)
    நூறை ஒடுக்க நிமிர்”….கிரேசி மோகன்….!

    ”கலக்கம் உறாதே விலக்கொணா கர்மம்
    நிலத்தில் பிறப்பும் இறப்பும் -இலக்கணம்
    பார்க்க இதுகவிதை இல்லைகாண் பார்த்தனே!
    பார்த்தால் புசிக்கும் பகை”….!

    ”விரையற்ற பூக்கள் விரயமாதல் போலே
    உரையற்ற சொற்கள் உதிர்ப்பர் -மறையுற்ற
    வாசகத்தில் மேம்போக்காய் மீதுலாவி கற்றோரைப்
    பேசுவார் கேலி புரிந்து’’…..கிரேசி மோகன்….!

    Share
  • ரமணர்

    திருவா திரைமுன், திருச்சுழி ஊரில்
    கருவாய் அழகம்மை கர்பம் -உருவாய்
    பெருந்தவம் செய்த பகவான் ரமணர்
    பிறந்து துறந்தார் பிறப்பு!….கிரேசி மோகன்….!

    Share
  • ஈகோவை விட….!

     

    ’ஈகோவை விட்டு இரைந்து சிரித்திடப்
    போகோவைப்(TV) பார்பேரன் பேத்தியொடு, -ஆகாகா!
    சாகா வரம்பெற்ற சோட்டாபீம் கார்டூனால்,
    தேகாபி மானம் தொலைப்பு’’….கிரேசி மோகன்….!

     

    Share
  • ”குறள் வெண்பா’’….!

     

    பேத்திக்கு திருக்குறள் கிளாஸ் எடுத்துவிட்டு(இன்றைய குறள் ‘’யாகாவா ராயினும் நாகாக்க’’)….!

     

    ‘’யார்போட்ட அட்சதையோ, யாதுமாகி நின்றோமே!
    பேர்கெட்டுப் போனதே பாழகந்தைப் -பாற்பட்டு,
    யாகாவா ராயினும் நாகாக்கா மல்பேசி,
    சோகாப்பர் ஆனோம் சிறுத்து’’….கிரேசி மோகன்….!

    ”பலனெதிர் பாரா பழக்கத்தைக் கொண்டால்,
    கலம்சேரும் தானாய் கரைக்கு, -புலனஞ்சும்,
    இன்னாசெய் தாலும் இவைநா ணயிருசும்மா,
    தன்னால் பிறக்கும் தவம்’’….கிரேசி மோகன்….!

    ”குறள் வெண்பா’’
    ——————————–

    ‘’கடுக்கன் வருங்கால் கலகலப்பா கும்நாம்
    இடுக்கண் வருங்கால் இளிப்போம்(நகுக):-படுக்கையில்(தூங்கும்போது)
    பண்டிதன், பாமரன், பாரபட்சம் ஏதய்யா!
    வண்டிதன் போக்கில் விரை’’….கிரேசி மோகன்….!

    ’’குறள் வெண்பா’’
    ——————————–

    ‘’திட்டினாலும் நாமத்தைத் தீட்டினாலும் ,கண்ணிநுண்
    கட்டினாலும் கண்ணா கலங்காதே, -எட்டிநில்:
    அகழ்வாரைத் தாங்கும் அடிவாரம் போல
    இகழ்வார் பொறுத்தல் இருப்பு’’….கிரேசி மோகன்….!

    ‘குறள் வெண்பா’’
    —————————–

    ‘’தகரம் முதல்மனி தன்வரையில் சொர்க(பரமபதம் எப்படி வேணா வச்சுகலாம்)-
    நகரம் அடைய நகரும் -நுகர்வோனே(Customer)-
    ஆதி பகவனின் அன்பில் ஒடுங்கலை,
    ஓதி உணர்த்த உலகு’’….கிரேசி மோகன்….!

    ’’குறள் வெண்பா’’….
    ——————————————-
    கல்வியைப் பற்றி யோசிக்கையில் ஸ்ரீ ரமணரின் ’’சப்தஜால மஹாரண்யம் சித்த பிரமண காரகம்’’….சூரி நாகம்மாள் ஸ்ரீரமணாஸ்ரம லேகுலுவில் படித்த பகவானின் பதில் நினைவுக்கு வந்தது

    ’’கற்றோர்கள் செல்லுமிடம் காண்பர் சிறப்பானால்
    பெற்றோர்கள் பக்கமுளல் பாண்டித்யம்: -சுற்றாதே!
    சொற்கள் பெருங்காடு, சித்தம் கலங்கவைக்கும்,
    நிற்கும் நடுத்தெருவே நன்று’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    MIND Made மனுஷன்….!(மந்தி)….!
    —————————————————————

    180327 Krishnapremi A4 -lr

    “மனமற்றுப் போனால்தான் மானுடா சாந்தி
    தினமுற்றுப் புள்ளிவை; தெய்வ -குணமுற்றால்
    வைக்கலாம் புள்ளியை , வாழ்வெதிர் பார்க்குமேல்
    பொய்க்கமா போட்டுப் பழக்கு”….!

    Share
  • WORLD THEATRE DAY….

     

     

    ’’நாட கமேவுலகம் நாமார்ட்டிஸ்ட், ஆடியன்ஸ்,
    போடுகின்ற வேடங்கள் பொய்சாட்சி, -வீடு
    வரையுறவு வீதி வரைமக்கள் ஆகத்
    தரையுறவு மேக்கப்பில் தான்’’….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180326 – Disciple- Dialogue with Arjuna (2:7) A4
    Indian ink -watercolour -wm

     

    சீடன் சரணமுற, சங்கீதைக் கண்ணனின் 
     பாடம் கீதையாம் , பாகுபலி -நாடகம் 
    மேகம் கிடந்தன்று மாருதி கேட்கின்றார் 
    சோகமென்ன சொல்லர் சுனா”….!கிரேசி மோகன் ….!
                          சொல்அர் சுனா”….!
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ‘ஸ்ரீராம நவமி’’ ஸ்பெஷல்….பெருமாள் திருப் புகழ்….
    திருவள்ளுர் வீர ராகவ பெருமாள்….

    பெருமாள் திருப் புகழ்….
    திருவள்ளுர் வீர ராகவ பெருமாள்….

    தய்யான தான தானன தய்யான தான தானன
    தய்யான தான தானன -தனதான

    “பொல்லாத நோயில் வாடிட தள்ளாது தேகம் ஆடிடும்
    செல்லாத காசு ஆகுவை -அதனாலே,
    அவ்வேளை சோணை மாமலை உள்ளுறும் தீயில் ஸ்நானம்செய்
    வல்லானவ் ஆல வாய்மகன் -ரமணேசர்

    சொல்லாத மோன பாஷையை அவ்வாறே நானும் பேசிட
    செவ்வேளின் தாயின் சோதர -அருள்வாயே
    செய்யாளின் மீது ராவண ஒவ்வாத காம மோடுயிர்
    கொய்யேவு வாளி வீசிடும் -ரகுராமா

    கல்லேறி சாபம் தீரவும் ,முள்ளேறி பாதம் நோகவும்
    கள்ளுறும் கேச ஜானகி -இளையோனும்
    அய்யாவுன் கூட ஏகினும் ,மெய்யான போதும் மானுட
    பொய்யான மாய மேனியில் -தளர்வாகி

    புள்ளுர்தி ஆழி நாகணை செல்லாழி சோழி யாவையும்
    கொள்ளாது ஒய்வு காணவும் -புயமாளும்
    வில்லோரம் வீசி சாலியர் நல்லோரின் மீது ஊணிடும்
    வள்ளுரின் வீர ராகவ -பெருமாளே”….(33)

    “எவ்வுள்” எனக் கேட்க ,சாலிஹோத்ர ரிஷி காட்டிய அவ்வுள்ளில் காட்டில் நடந்த களைப்பும் ,ராவணனைக் கொன்ற சோர்வும் தீர திரு +எவ்வுள்+ஊர் =திருவள்ளூரில்
    வீர ராகவ பெருமாள் சாலியர் மீது கரத்தை வைத்து கிடந்த கோலத்தில் காட்சி தருகிறார் என்பது ஸ்தல புராணம்….
    ——————————————————————————————————————————————————–

    Share
  • ’’ஷிரடியில் ஸ்ரீ ராம நவமி விஷேஷம்’’….! – படமும், பாடலும்….!

     

    ஷீரடி பாபா வெண்பாக்கள்
    ———————————-


    அக்கல்கோட் ராஜன் அவதார மானவா
    சிக்கல்கட் டாமிந்த சம்சாரம் -வெக்கங்கெட்
    டீரடியும் சேற்றினில் வைத்திங்கு சீரழிந்தோம்
    ஷீரடி ஆற்றில் செலுத்து….(1)

    சுகவாணி சாயி கமலவாசி சாயி
    மகமாயி சாயி அயனரியரன் -சாயி
    முகமதுவும் சாயி முனியேசு சாயி
    அகமதை ஷீரடியாய் ஆக்கு….(2)….

    மோதக மூக்கனே சாதக வாக்கனே
    தீதற போக்கிடும் போக்கனே -மாதவா
    சாயி மஹராஜா தாயின் அருள்சொரியும்
    ஆயி மகமாயி ஆவ்….(3)….

    தாயினால் மண்தோன்றி நோயினால் மண்மூடும்
    காயமிது பொய்யென்று காணுவாய் -மாயமாய்
    ஆயிரம் ஒன்றாகும் ஒன்றா யிரமாகும்
    சாயிராம் சேவடியில் சேர்….(4)

    விண்டுரைக்க வொண்ணா விளையாட்டுப் பிள்ளையை
    பண்டரிக்குள் வாழும் பகவானாய் -கண்டறிவாய்
    ஷீரடி சாயியவன் சேவிப் பவர்க்கருள
    வேரடி பாயும் விழுது….(5)

    உதியெடுத்(து) உந்தன் நுதலிலே பூசி
    கதியென்று சாயி கமலப் -பதமிரெண்டை
    பற்றிவாழ பாவங்கள் பற்றாது, பாபாவை
    சற்றுநேரம் சிந்திக்க சித்து….(6)

    நட்டநடு கானகம் நாற்புரமும் சாகரம்
    எட்டுவித கோணலாய் இவ்வாழ்க்கை -விட்டுவிட
    புத்தியில்லை, வெற்றிபெற சக்தியில்லை சத்குருவே
    பித்தனிவன் பேதமையைப் போக்கு….(7)

    தாயி தகப்பன் தெய்வமே ஷீரடி
    சாயி மகராஜா சத்குரு -சேய்நான்
    படித்த உமது சரித்திரம் பாடி
    முடிக்க அருள்வீர் மகிழ்ந்து….(8)

    சாதுவாய் ஷீரடி சொந்தங்கள் காத்திட
    கோதுமை மாவை அரைத்தது -தீதுரு
    காலரா நோயை வாலறுத்(து) ஓட்டிடும்
    போலோராம் சாயிநாதன் போக்கு….(9)

    வாயினால் பேசி வசனத்தை உச்சரிக்க
    சாயிராம் வாக்கை சரியாக்கு -தூயவா
    ஷீரடி வந்துன்னை சேவிக்கும் நாளன்று
    கூறிடுவேன் நன்றிக் கடன்….(10)

    சகிப்பு, வினயம், சகோதர பாவம்
    உகக்கும் அனைத்தையும் ஒன்றாய் -அகத்தும்
    புறத்தும் சமரச சன்மார்கம் காண
    சிரத்தினில் ஷீரடி சூடு….(11)

    கெட்டபுத்தி செய்கைகள் விட்டகன்(று) ஓடிட
    புட்டபர்த்தி பாதம் பணிந்திடு -பட்டுமலர்
    நித்தியமும் நெஞ்சில் நிறுத்த நிறுத்திடும்
    சத்யம் சிவசுந் தரத்து….(12)

    பத்திரம் பாதுகாப்பு பாபாவின் ஷீரடி
    சத்திரச் சாவடியில் சாஸ்வதம் -நித்திரை
    சொப்பனம் மற்றும் சகஜத்தில், சாயிராம்
    எப்பவும் காப்பு எமக்கு….(13)

    பன்றிக் காய்ச்சல் ஊரில் பரவிய போது….
    ——————————————————
    வந்திருக்கும் பன்றி வியாதி வெகுண்டோட
    எந்திரத்தில் முன்போல இட்டரைப்பாய் -உன்திறத்தைக்
    காட்டருள் பாபா கலங்குகிறோம், நீயல்லால்
    கூட்டெமெக்கு வேறிங்கார் கூறு….(14)

    ஆறடி மண்ணில் அடங்கும் உடலோடு
    மாரடித்துப் பார்த்தேன் முடியவில்லை -ஷீரடி
    நாதா சரண்புகுந்தேன் நின்னை, எனக்கருள்
    ஏதே னுமனுபூதி யை….(15)

    ஆள்காட் டிவிரல் அடுத்தவிரல் வாயிலாய்
    தாள்காட்டும் கட்டைவிரல் தீண்டிட -மால்கட்டின்
    வேரடிக்குப் பாய்ந்து வினைமரம் சாய்த்திடும்
    ஷீரடி பாபா செயல்….(16)

    மாபாவம் செய்தும் மகனீயர் ஷீரடி
    பாபா சரணம் புகுந்தோரை -ஆபாச
    இச்சைகள் அண்டாது என்றென்றும் காத்திடும்
    உச்சியில் இட்ட உதி….(17)

    வேப்ப மரத்தடியில் வீற்று மருந்தாக
    காப்பிடும் சாயி கசப்பாக -சாப்பிடத்
    தந்தாலும் நோய்க்கு தருகற் பகமாகி
    வந்தோர்க்கு வாழ்வில் வலுவு….(18)

    காம துனியெரித்து நாம உதியெடுத்து
    தாமசம் தீர்ப்பாய் தகப்பன்சாய் -ராமனே
    வேம்பாமென் நெஞ்சில் விளைந்த குருஸ்தானில்
    ஆம்பிளை அம்மா அமர்….(19)

    கந்தலா னாலுமதைக் கொண்டுத் திரம்கட்டி
    மந்திரமாய்த் தொங்கும் மரவணையில் -அந்தரத்தில்
    எங்கணம் ஏறினீர், அங்கணம் பாபாவே
    இங்கெனெக்கோர் உச்சி இடு….(20)

    தீர்த்தங்கள் ஏழும் தளும்பிடும் ஷீரடி
    மூர்த்தியின் பாதத்தில் MunNiiraai -ஆர்த்தி
    எடுபுத்தி, அன்பாம் எரியூட்டி, ஆர்வத்
    துடன்பக்தி நூலே திரி….(21)

    அச்சுதன் சம்பு அயனுரு ஆனவா
    சச்சிதா னந்தகுரு சாயிராம் -இச்சிறை
    ஆறடிப் பொந்தில் அடைபட்(டு) உழல்கிறேன்
    ஷீரடியில் சேர்ப்பாய் சரண்….(22)

    ஆயிரம் அம்மாக்கள் ஆகுமோ ஈடாக
    சாயிராம் தாய்க்குச் சமானமாய் -நோயினால்
    ஆறடி ஓய்ந்தாலும் ஆன்ம சுகம்தரும்பார்
    ஷீரடி மாயி சிரிப்பு….(23)

    ஆடை கபினி அணிந்தடி யார்களின்
    பாடை அதற்குள் பதுக்கிடும் -வீடை,
    அறம்பொருள் இன்பம் அளித்திடும் வேப்ப
    மரம்நிழல் சாயி மகான்….(24)

    ஆரத்தி நேரத்தில் ஆலயம் சென்றுனது
    பாரத்தை பாபாவின் பாதத்தில், -ஈரத்தில்
    கண்கள் பளபளக்க கைகூப்பி சேர்க்கமனப்
    புண்கள் மலராய் பிறப்பு….(25)

    “உதிநுதல் சூடி, நதிகங்கை ஆடி(நீராடி)
    சதிபதியாய் ஷீரடி சாயி, -அதிபதி,
    பாபா வழிசென்று, பக்கிரிப் பிக்ஷையில்,
    தீபா வளிகாண் தினம்”….(26)…கிரேசி மோகன்….

    உதி-விபூதி, நுதல்-நெற்றி….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180324 – Vanvihari -icam -wm -21.5×21.5 cms watercolour handmade paper

    ”கால மரத்தடியில், கோள(கிரகங்கள்) வனமமர்ந்த,
    பால கிருஷ்ணனைப் போற்றுவோம்: -நாளுமே
    வண்ணமாய் கேசவ்கை வந்திடும் கார்மேகக்
    கண்ணனை நெஞ்சே கருது’’….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180323 – Vishwaroopa – DWA handmade paper- 63×21.5cms -wm

    ‘’விசுவரூபம் காட்டி விரட்டியும் பார்த்தன்
    விசன விரக்தியில் வாட, -கொசுவரூபம்
    ஏற்றவன் தேரினில் வீற்ற பரந்தாமர்
    மாற்றினார் கீதை மொழிந்து’’….கிரேசி மோகன்….

     

    Share
  • ”HINDU FRIDAY REVIEW”….!

    ‘’மரத்தடி நீழல், கரத்திடைக் கூழும்
    பரத்திடப் புல்மெத்தை, பிக்‌ஷை -இரைத்திடத்தாய்: -(தாயொத்த மாந்தர்)
    ஆன்மனைத் தேடு அவசிய நாடகம்:
    நான்,மனை மக்கள் நடிப்பு’’….கிரேசி மோகன்….!

    (OR)
    ‘’மரத்தடி நீழல், கரத்திடைக் கூழும்
    பரத்திடப் புல்மெத்தை, பிக்‌ஷை -இரைத்திடத்தாய்: –
    ஏஸியில், சோறுண்டு ஏகாந்த வாழ்வினை
    லேஸியாய் க்ரேஸி லயி’’….கிரேசி மோகன்….!

     

    Share
  • கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்

    கண்ணன்கை கோர்த்து காண்டீபர் செல்வதை
    கண்ணில்லா மன்னரதைக் கேட்டதும் -கண்ணன்காண்
    மந்திரி சஞ்சயா மன்னனெனை வாட்டாதே!
    எந்திரி போநீ எழவு’’….!

    திருதராட்டிரன் கோபம் கண்டு சஞ்சயன் சுதாரித்து….!

    அந்தக மன்னன் அறிவுசால் மந்திரி
    சஞ்சயன் கண்டதைக் கேட்டனன் -வெஞ்சமர்
    கூடிநின்று பாண்டவர் கூடா கெளரவரை
    வாடிநின்று பார்த்த விதம்….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கிருஷ்ணகாளி
    ———————-


    “யாதுமாகி நின்றவள் எங்கும் நிறைந்தவள்
    யாதவனாய் இங்கே எழுந்தருளி -ஊதுகுழல்
    கண்ணனாய் காட்சி கொடுக்கின்றாள்(ன்), கல்கத்தா
    மண்ணின் மயானத்தின் மீது”….கிரேசி மோகன்….

    Kannamma!

    Kali and Krishna are one and the same. Both names mean “Black”…

    Picture below is from Krishnakali Mandir in Kolkata… Where Krishna and Kali are seen as a single form! The temple
    stands on a cremation ground associated with the great Kalighat Temple in Kolkata…

    Share