பேத்திக்கு திருக்குறள் கிளாஸ் எடுத்துவிட்டு(இன்றைய குறள் ‘’யாகாவா ராயினும் நாகாக்க’’)….!

 

‘’யார்போட்ட அட்சதையோ, யாதுமாகி நின்றோமே!
பேர்கெட்டுப் போனதே பாழகந்தைப் -பாற்பட்டு,
யாகாவா ராயினும் நாகாக்கா மல்பேசி,
சோகாப்பர் ஆனோம் சிறுத்து’’….கிரேசி மோகன்….!

”பலனெதிர் பாரா பழக்கத்தைக் கொண்டால்,
கலம்சேரும் தானாய் கரைக்கு, -புலனஞ்சும்,
இன்னாசெய் தாலும் இவைநா ணயிருசும்மா,
தன்னால் பிறக்கும் தவம்’’….கிரேசி மோகன்….!

”குறள் வெண்பா’’
——————————–

‘’கடுக்கன் வருங்கால் கலகலப்பா கும்நாம்
இடுக்கண் வருங்கால் இளிப்போம்(நகுக):-படுக்கையில்(தூங்கும்போது)
பண்டிதன், பாமரன், பாரபட்சம் ஏதய்யா!
வண்டிதன் போக்கில் விரை’’….கிரேசி மோகன்….!

’’குறள் வெண்பா’’
——————————–

‘’திட்டினாலும் நாமத்தைத் தீட்டினாலும் ,கண்ணிநுண்
கட்டினாலும் கண்ணா கலங்காதே, -எட்டிநில்:
அகழ்வாரைத் தாங்கும் அடிவாரம் போல
இகழ்வார் பொறுத்தல் இருப்பு’’….கிரேசி மோகன்….!

‘குறள் வெண்பா’’
—————————–

‘’தகரம் முதல்மனி தன்வரையில் சொர்க(பரமபதம் எப்படி வேணா வச்சுகலாம்)-
நகரம் அடைய நகரும் -நுகர்வோனே(Customer)-
ஆதி பகவனின் அன்பில் ஒடுங்கலை,
ஓதி உணர்த்த உலகு’’….கிரேசி மோகன்….!

’’குறள் வெண்பா’’….
——————————————-
கல்வியைப் பற்றி யோசிக்கையில் ஸ்ரீ ரமணரின் ’’சப்தஜால மஹாரண்யம் சித்த பிரமண காரகம்’’….சூரி நாகம்மாள் ஸ்ரீரமணாஸ்ரம லேகுலுவில் படித்த பகவானின் பதில் நினைவுக்கு வந்தது

’’கற்றோர்கள் செல்லுமிடம் காண்பர் சிறப்பானால்
பெற்றோர்கள் பக்கமுளல் பாண்டித்யம்: -சுற்றாதே!
சொற்கள் பெருங்காடு, சித்தம் கலங்கவைக்கும்,
நிற்கும் நடுத்தெருவே நன்று’’….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *