180328 The Listener -DWA -icam

 

பகவான் உவாச
———————-
”காரியம் அற்றசோர்வு வீரன் உனக்கெதற்கு
சூரிகள் விண்ணிடை சேர்ப்பாரோ ! -நாரியாநீ(பெண்ணா நீ)!
தேரையும் போரையும் தேர்ந்தெடுத்த என்னைக்கேள்(LISTEN)
நூறை ஒடுக்க நிமிர்”….கிரேசி மோகன்….!

”கலக்கம் உறாதே விலக்கொணா கர்மம்
நிலத்தில் பிறப்பும் இறப்பும் -இலக்கணம்
பார்க்க இதுகவிதை இல்லைகாண் பார்த்தனே!
பார்த்தால் புசிக்கும் பகை”….!

”விரையற்ற பூக்கள் விரயமாதல் போலே
உரையற்ற சொற்கள் உதிர்ப்பர் -மறையுற்ற
வாசகத்தில் மேம்போக்காய் மீதுலாவி கற்றோரைப்
பேசுவார் கேலி புரிந்து’’…..கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.