Author: கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

  • கிராமிய கவிகளும் இலக்கியமும்

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    நாட்டார் பாடல்கள். இலங்கையின்  கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கரைவாகுப் பற்றுப் பிரிவிலும் (கல்முனை,திகாமடுல்லை) விவசாயம் சம்பந்தமான தொழில் ஈடுபடுபவர்கள்மத்தியில் இந்தப் பாடல்கள் பிரசித்தி பெற்றவைகளாகும்

    ஆண்களை விட பெண்கள்தான் பிரபல்யம்

    ஒருவர் ஆரம்பித்தால் தொடர்ந்து பாடுவதற்கு ஏனையவர்கள் தயாராகி விடுவார்கள்.

    ஆனால் இன்றைய கால கட்டத்தில்,நாட்டார் பாடல்கள் அன்றைய தலைமுறையு டன்  அழிந்து விடுகின்றது .

     நாட்டார் பாடலுக்கு களமே, களத்து மேடுதான்.

    தற்போது அறிமுகமாகியுள்ள நவீன விவசாயமுறைகள்

    ,இயந்திர மயப்படுத்தல்,

    கட்டாயக் கல்வி முறை,

     இவைகளெல்லாம் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி,அடுத்த தலைமுறைக்கு இது இறுவட்டாக மட்டுமே காட்சி அளிக்கும்.

    தன்னைக் கல்யாணம் பண்ண முனையும்,ஒருவரை பெண் வெறுத்து ஒதுக்குவதையே குறிக்கோளாகக் கொண்டபாடல்கள்.தற்போதைய காலத்திற்கு ஏற்றமாதிரிக் கூறுவதானால்,கடலை  போடுபவரைக் கண்டால்,கட்டோடு பிடியாத பெண்ணின் வரி வடிவம்.இதோ

    கச்சான் அடித்த பின்பு -நடுக்
    காட்டில் மரம் நின்றதுபோல்
    உச்சியில் நாலு மயிர்-தலை
    ஓரம் எல்லாம் வழுக்கை

    கண்ணுமொரு பொட்டை-இரு
    காதுகளும் செவிடாம்
    குருத்தெடுத்த வாழை போல-அவர்
    கூன் வளைந்திருப்பார்

    முப்பத்தி இரண்டில் இப்போ -இந்த
    மூணு பல்லுத்தான் மீதி
    காகக் கறுப்பு நிறம்-ஒரு
    காலுமெல்லோ முடமவர்க்கு

    நாணற்பூப்போல -தலை
    நரைத்த கிழவனுக்கு
    கும்மாளம் பூப்போல -இந்தக்
    குமர்தானோ வாழுறது

    தங்கத்தாற் சங்கிலியும் -ஒரு
    தக தகவென்ற பட்டுடையும்
    பட்டணத்துச் செப்புமிட்டு-எனை
    பகல் முழுதுஞ் சுற்றி வாறான்.

    அத்தர் புனுகாம்
    அழகான பவுடர் மணம்
    இஞ்சி தின்ற குரங்குபோல –
    இவருக்கேனோ இச்சொகுசு.

    பட்டுடுத்துச் சட்டையிட்டு -நறு
    பவுசாக நடந்திட்டாலும்
    அரைச் சல்லிக் காசுமில்லை -ஆள்
    ஆறுநாட் பட்டினியாம்.

    சங்கிலியும் தங்கமில்லை –
    சரியான பித்தளையாம்
    இடுப்பிலேயும் வாயிலேயும்-
    இருக்கிறது இரவல் தானாம்…!

    இந்த அருமையான அன்றைய பாடல் இன்றைய சினிப்  பாடலை முந்திவிட முடியாது

    கிராமியக் கவிதைக்கு  புகழ் பெற்ற இடம்  மட்டக்களப்பு.( கிழக்கு மாகாணம் )

     தேனுக்கும் ,பாலுக்கும்,மீனுக்கும்   ,அன்புக்கும் ,விருந்துக்கும்  அறிவுக்கும் புகழ் பெற்றவர்கள்  மட்டக்களப்பு மக்கள்

    கலைகளைபேணி வளர்பதிலும்,  தலைசிறந்து விளங்குகின்றவர்கள்மட்டக்களப்பு மக்கள் .உணர்ச்சி கவிதை நிறைந்த மட்டக்களப்பு நட்டுப் பாடல்கள் பல்வேறு துறைப்பாட்டு, நிறைந்து வழங்குகின்றன.

    கிழக்கிலங்கையின் மூலை முடுக்குகளிலும் ,வயல்வெளிகளிலும் ,வீடுகளிலும் ,வீதியிலும் உலவும் இப்பாடல்களை தொகுத்து வகைப்படுத்தி வெளியிடுவதில் ஒருவரும் பெரிது கவனம்இதுவரை  செலுத்தவில்லையென்பது கவலையாகும்

    .இயற்கை வழ்வில் நின்று விலகி நிற்கும் நாகரிகத்தில் திளைத்து நிற்கும் பலருக்கு இப்பாடல்களின் அருமை தெரியாது.

     நாட்டுப்புற பாமரமக்களுக்கும், நகரமக்களுக்கும் ,வாழ்க்கை முறையிலும் உள்ளப்பாங்கிலும் வேறுபாடு வளர்ந்துகொண்டே வருவதனால்

    பாமரமக்கள் பாடும் பாட்டை கேட்டு மகிழ்கிற மனநிலை படித்தமக்களைவிட்டு ஒரளவிற்கு நீங்கிவிட்டது என்று கூறலாம்.

     நாட்டுப்பாடல்களை படுவோரின் தொகையும் நளுக்குநாள் குறைந்து கொண்டேவருகின்றது. நாளடைவில் நாட்டுப்பாடல்கள் மறைந்து விடக்கூடும்.என்ற அச்சம் என்னைப் போன்ற பலருக்கும்  உண்டு

    கவி என்னும் சொல் மட்டகளப்பிலே அகத்தினை ,நாட்டுப்பாடல்களைக்குறிக்கும்
    சிறப்புசொல்லாக வழங்குகின்றது.

     இக்கவிகளில் அதிகம் ஈடுபாடுடையவர் மட்டக்களப்பு இஸ்லாமிய மக்களே.

     சிறந்த கவிவளைப்பாடவல்லவர் இன்றும் பலர் உளர்.
    இத்தகைய உணர்ச்சிமிக்க காதற்பாடல்களாகிய கவிகள் கூற்றுக்குரியோர் பெயராற் காதலன் கூற்றாய் உள்ளவை,

    காதலி கூற்றாய் உள்ளவை,

    தோழி கூற்றாய் உள்ளவை,

    தாயார் கூற்றாய் உள்ளவை,

     நான்கு பிரிவுகளாகஇவை  வகுக்கப்பட்டுள்ளன.

    இக் காதற்கவிகள் தமிழிலுள்ள அகப்பொருள் மரபுக்கு மாறாகஇருக்ககூடும்

    உதாரணமாகத் தமிழ் இலக்கியத்திற் களவு ஒழுக்கம் பெரும்பாலும் தோழி துணை கொண்டே நடக்கும்.

    தலைவி ஒருபோதும் குறியிடம் கூறமாட்டாள். ஆனால் நாட்டுப்பாடலில் தலைவி தானே தலைவனிடம் குறியிடம் கூறும்வழக்கைகாணலாம்.

    சந்தன மரத்தை மச்சான்
    சந்திக்க வேன்டுமென்றால்
    பூவலடிக்கு மச்சான்
    பொழுதுபட வந்திடுங்கோ.

    கடப்படியில் வந்து நின்று
    காளை கனைக்கும் மென்றால்
    எங்கிருந்த போதும் நாகு
    எழுந்துவர மாட்டாதோ
    போன்ற பாடல்கள் தலைவி தலைவனிடம் குறியிடம் கூறுவதைக் குறிக்கின்றன.

    மட்டகளப்பில் – மழைவளம் குறைந்து, பசியும் பிணியும் பெருகும் காலத்து கண்ணகி தேவிக்குச் சாந்தி செய்யும் போது கொம்புவிளையாட்டு நடத்தி மகிழ்வர்.

    கொம்புவிளையாட்டில் ஊர் முழுவதும் இருகட்சியாகப் பிரியும்.

    ஒன்று கோவலன் கட்சி,

    மற்றது கண்ணகி கட்சி.

    இக்கட்சிகள் வடசேரி, தென்சேரி என்ற பெயர் பெறும்.

    இவ்வாறாக பிரிந்து, போட்டியாக ஒரு சேரியார் இன்னொரு சேரைப்பழித்து வசைப் பாடல்கள் பாடுவர்.
    பால்போல்நிலவெறிக்கப் படலை திறந்தவன ஆர்தோழி
    நான்தாண்;டிவடசேரியான் உனக்கு நழிப்பணம் கொண்டுலாவுகிறேன்.
    என்பன போன்ற தனி வசைப்பாடல்களும் பல உள.

     இப்பாடல் இப்பொழுது கிழக்கு மாகாணத்தில் மண்டூர் ,தமபிலுவில், காரைதீவு, வந்தாறுமூலை, போன்ற ஊர்களில் மட்டும் ஆடப்படுகின்றது.

     துன்பத்தைப்போக்கி இன்பத்தை பெருக்கப் பாடப்படும் இப்பாடல்கள் அழியாமற் காக்கப்படவேண்டியவை.
    ஆயிரக்கணக்கான நாட்டுப்பாடல்கள் பலதுறைப்பட்டு விளங்குகின்றன.

     நாட்டுப்பாடல்களை இறவாமல் காப்பது எல்லோருடைய கடமையாகும்

    தமிழரின் இலக்கிய செல்வத்திலே இப்பாடல்களுக்கு சிறந்த இடம்முண்டு.

    தமிழில் எத்தனையோ இலக்கிய நு}ல்களும், இலக்கண நு}ல்களும், இறந்து போய்விட்டன என்று வரலாறு கூறுகின்றது.

     யாழ் நூலகம் எரிக்கப் பட்டபோது சாம்பலாக்கப் பட்டுவிட்டது மனித ஆத்மாக்கள் கவலைப் படுகின்றது

    மட்டக்களப்பு நாட்டுப்பாடல்களின் முதற் பதிவு 1960 ம் ஆண்டில் வெளிவந்ததுள்ளது

    ஈழத்திலுள்ள அறிஞ்ஞர் பலர் ஈழத்து நாடோடிபாடல்களை அவ்வப்போது சேர்த்துப்பத்திரிகைகளிலும,; துண்டு பிரசுரங்களிலும் வெளியிட்டு வந்துள்ளனர். இவர்களுள் திரு. மு. இராமலிங்கம் அவர்களின் சேவை பாராட்டுக்குரியது.

    நாட்டுப்பாடல், நாட்டார் பாடல் அல்லது நாட்டுப்புற பாடல் எனப்படுவது நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்விலும், தொழிற்களங்களில் பணிநேரங்களில் களைப்பைக் குறைக்கும் வகையிலும், விழாக்களிலும் பாடும் பாடல்களைக் குறிக்கும்.

    இவ்வாறான பாடல்கள் வாய்மொழி மரபாக கையளிக்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலும் அதிக மாற்றத்துக்கு இலக்காகாமல் பேணப்படுகின்றன.

     அதேவேளை இவற்றின் இயற்றுனர்கள் என்று எவரையும் குறிப்பிடமுடியாத வகையில் இவை பொதுவழக்கில் பயன்பாட்டிற்கு வந்துவிடுகின்றன.

    நாட்டுப் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், வாய்மொழி இலக்கியம், ஏட்டில் எழுதாக் கவிதைகள், காற்றில் வந்த கவிதைகள், மக்கள் பாடல்கள், மரபுவழிப் பாடல்கள், பாமரர் பாடல்கள், பரம்பரைப் பாடல்கள், நாட்டார் பாடல்கள் என பல்வகைப் பெயர்களால் நாட்டுப்புறப் பாடல்கள் அழைக்கப்படுகின்றன.

    நாட்டார் பாடலை நாட்டுப்பாடல், தெம்மாங்கு, பாமர ஜனகானம்பொதுஜனகானம்கிராமியபாடல், எனப் பலவாறு அழைப்பர்.

     பழங்குடிகள் தம் கருத்துக்களையும், இன்ப துன்ப உணர்வுகளையும் பிறருக்குப் புலப்படுத்தக்கூடியவாறு மொழி வளர்ச்சி பெற்றிருக்காத சூழ்நிலையில் ஏதோ ஒரு வகையில் ஓசை முறைகளையும் பயன்படுத்தி இருக்கலாம்.

     மொழி துணையாக வந்த போது முதற்பாடல் தோன்றியிருக்கக் கூடும்.

    ஒருவர் ஓர் அடியைப்பாட, மற்றொருவர் மற்றைய அடியைப்பாட வினா விடையாகவும் நாட்டார் பாடல்கள் அமைந்தன.

    சூழலையும் குறிக்கோளையும் பொருத்து நாட்டார் பாடல்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

    தமிழில் முதலில் எழுந்த இலக்கியமான சிலப்பதிகாரமும் ஒரு பழைய கதைப்பாடலை ஆதாரமாகக் கொண்டே எழுந்திருக்க வேண்டும்.

     சங்ககால இலக்கியமான ஐந்திணை தழுவிய அகப்பாடல்களுக்கும், நாட்டு மகளிடையே வழங்கிய காதற்பாடல்களே முன்னோடிகள் எனலாம்.

     சிலப்பதிகாரத்தில் வரும் கானல் வரி, வேட்டுவ வரி, குன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவை என்பனவும் நாட்டார் இசைமரபின் தொடர்ச்சியாகவும் மக்கள் வாழ்க்கை முறையில் பெறும் முக்கியத்துவத்தைத் தெளிவு படுத்தும் விதமாகவும் இருக்கின்றன.

     இளங்கோவடிகளின் துன்ப மாலைப் பகுதியில் வழங்கும் பாடல் கூறுகளும், யாழ்ப்பாண இசை மரபில் வழங்கும் ஒப்பாரிப்பாடல்களும் ஓசை அமைப்பில் ஒருமைப்பாடு உடையன.

    பெரியாழ்வார் கண்ணனை குழந்தையாக உருவகப்படுத்திய தாலாட்டுதமிழ் நாட்டுத் தாய்மார்களிடையே வழங்கி வந்த தாலாட்டுப் பாடல்களையொத்தே உருவாக்கப்பட்டது.

    நாட்டுபாடலில் ஈடுபாடு காட்டிய பாரதியார் தமது பல்வேறு பாடல்களில் நாட்டுப்பாடலின் அமைப்பையும் சந்தத்தையும் பயன்படுத்துகின்றார்

    பாஞ்சாலி சபதம். இவருக்கு முன் கோபாலகிருஷ்ண பாரதியார்,இராமலிங்க சுவாமிகள் முதலியோர் கும்மியாட்டம் போன்றவற்றிற்கான நாட்டுப்படல்களை இயற்றியுள்ளனர்.

    பெரும்பாலும் எழுத்தறிவு பெறாத பொதுமக்களால் இயற்றப்பெறுவதால் நாட்டார் பாடல்களில் வட்டார மொழி வழக்குகளே மிகுந்து காணப்படும்.

     மேலும், பிற இலக்கியங்களைப் போன்றே நாட்டார் பாடல்களில் அவற்றின் காலத்தில் நிகழ்ந்த பெருநிகழ்வுகளும், இருந்த சூழல்களும், வாழ்க்கைமுறைகளும், பண்பாடும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். சில வேளைகளில் பிற இலக்கியங்களில் காணப்படாத காலப்பதிவுகளும் மிகுந்து காணப்படும்.

     எடுத்துக்காட்டாக, தாது ஆண்டுப் பஞ்சத்தின்போது தமிழர் திருமணம் முதலிய சடங்குகள் எவ்வாறு இருந்தன போன்ற தகவல்களையும் இவற்றில் காணலாம்.

    நடுகைக் களத்தில் காதல் பேசும் வகையில் அமைந்த ஒரு எடுத்துக்காட்டுப் பாடல்5]

    நாலு மூலை வயலுக்குள்ளே

    நாத்து நடும் பொம்பிளே

    நானும் கொஞ்சம் ஏழையடி

    நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

    நண்டு சாறு காய்ச்சி விட்டு

    நடு வரப்பில் போற பெண்ணே – உன்

    தண்டைக் காலு அழகைக் கண்டு

    கெஞ்சுறானாம் அஞ்சு மாசம்

    நானும் கொஞ்சம் ஏழையடி

    நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

    பெண்டுகளே! பெண்டுகளே!

    தண்டு போட்ட பெண்டுகளே! – உன்

    கொண்டை அழகைக் கண்டு

    கெஞ்சுறானாம் அஞ்சு மாசம்

    நானும் கொஞ்சம் ஏழையடி

    நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

    நாட்டார் / கிராமிய பாடல்கள் என்ற தொகுதியின் ஆசிரியர் கிண்ணியாவைச் சேர்ந்த கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்களாவார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஏப்ரல் 2011 இல் எழுதத் தொடங்கிய பி.ரி. அஸீஸ் அவர்கள் டிசம்பர் 2011 வரையான ஒன்பது மாதங்களுக்குள் ஒன்பது படைப்புக்களை வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு ஆளுமைகளைக் கொண்டிருக்கும் இவர், அண்மைக் காலங்களில் அதிகமாக இலக்கியத்தில் ஈடுபட்டு தமிழ்த் தொண்டாற்றி வருபவர். நாட்டார் / கிராமிய பாடல்கள் என்ற தொகுதி ரசனைமிக்க பல நாட்டார்

    நாட்டார் பாடல்கள் தொழில்கள் நிமித்தம் புறப்பட்ட உணர்வுகளே. அதிகம் விவசாயம், மீன்பிடி போன்ற தொழில்களோடு சம்பந்தப்பட்ட சோகம், காதல், வெறி, தவிப்பு, பிரிவு ஆகிய பொருள்களில் நாட்டார் பாடல்கள் முத்திரை பதிக்கிறது

    கிராமத்து வாழ்க்கை மிகவும் இனிமையானது. அமைதி நிறைந்தது. உற்சாகம் மிகுந்தது. கிராமிய மக்கள் அன்பும் நல்ல பண்பும் கொண்டவர்கள். அழகியல் சூழலில் ஆனந்தமாக வாழ்பவர்கள். இதமான தென்றலிலும், இதயம் தொடும் பசுமையிலும் அவர்களின் காலம் கழிகிறது. இத்தகையவர்கள் வாழ்க்கையிலும் எத்தனையோ தொல்லைகளும் பிரச்சினைகளும் அவை காதல், சோகம், ஏமாற்றம், வறுமை, விவேகம் என பல்வேறு வகைப்பட்டு நிற்கிறது.

    வாழ்வியல் பிரச்சினைகளை அவர்கள் இனிய கவிகள் மூலம் வெளிப்படுத்துகின்றனர். இக்கவிகள் வாழும் தன்மை கொண்டவையாக விளங்குகின்றன. கிராமிய கவிகளும் இலக்கியமும் ஒவ்வொரு தனிமனித வாழ்க்கையிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

    திருமண பந்தத்தில் இணைய நினைக்கும் ஒரு இளஞ் சோடியின் மன உளைச்சலை வெளிப்படுத்தும் வரிகளாக பின்வரும் வரிகள் (அமைந்துள்ளன. வருமானம் இல்லாத காரணத்தால் கல்யாணம் செய்து கைப்பிடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை தலைவனின் பாடலடிகள் சுட்டி நிற்கின்றன.

    காலயும் புலந்திருக்கு
    கனவெல்லாம் கலைஞ்சிரிச்சி
    மாலையும் கையுமா
    மச்சான் ஒன்ன கண்டிருந்தேன்

    வேலயும் இல்ல மச்சி
    வருமானம் கொறஞ்சிரிச்சி
    தோளிலே ஒன்ன வைக்க
    தோது இல்ல என் கிளியே!

    அடக்கு முறைக்குள் இருந்து வெளிவரத் துடிக்கும் ஒரு யுவதியின் மனோ வலிமையை சுட்டி நிற்கிறன.கீழ் உள்ள வரிகள்  அதில் தனது நியாயமான சுதந்திரத்துக்கு தடைக்கற்களாக விளங்கும் அனைத்தையும் படிக்கற்களாக மாற்றி முன்னேறத்துடிக்கும் பாங்கில் அது அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

    சுற்றி வர நெருஞ்சி முள்ளு
    சுருண்டிருந்து பாத்திருக்கேன்
    தடை தாண்டிப் பாய்ந்து வர
    நல்ல சப்பாத்துக்காய் 
    காத்திருக்கேன்!

    இன்றைய காலத்தில் பெண்களுக்கான அடக்கு முறைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. பெண்கள் பல துறைகளில் முன்னேற்றங்களைக் கண்ட போதும் ஆணாதிக்கத்தின் பலம் குறைந்தபாடில்லை என்பதாக நினைக்கும் ஒரு யுவதியின் மனவெளிப்பாட்டை மேலுள்ள வரிகள் இயம்பி நிற்கின்றன.

    அலைகள் ஒரு போதும் ஓய்வதில்லை. அதேபோல இந்தப் பெண்ணும் தன் நினைவலைகளிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் ஒரு கன்னியின் மன ஏக்கத்தை பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.

    ஓடுகின்ற
    தண்ணியிலே
    ஆடுகின்ற
    அலையெல்லாம்
    தேடுகின்ற
    என் மனதின் 
    ஏக்கங்களைக்
    கூறாதோ!

    தொழில் நிமித்தம் வீட்டைவிட்டு வெளியூருக்குச் சென்ற கணவன் பல நாட்களாக திரும்பி வரவில்லை. அவரது வருகையை எதிர்பார்த்து மனைவி வாடிப் போகிறாள். கணவனை நினைத்து அவள் ஏங்கும்; பாடல்  இப்படி வருகிறது.

    கழுத்திலே மின்னுகிற
    கரிச மணிக் கோர்வையிலே
    கைய வைத்து உருட்டி விடும்
    என் ஆசைக் கண்ணாலா

    தொழிலுக்கு தொலை தூரம்
    போனவரே
    நெடுநாளா சேதியில்ல
    என் நெஞ்சம் வெடிக்குதுகா!

    பருவகால மழை பிழைத்துப் போனால் உழவர்களின் பாடு திண்டாட்டம்தான். உழவர்கள் விளைச்சலை நன்றாகத் தந்தால் தான் நாட்டு மக்கள் நன்றாக சாப்பிட முடியும். விளைச்சலில் பிரச்சினைகள் ஏற்படாமல் அல்லாஹ்வை வேண்டி நிற்கும் சூடடிக்கும் பாடல் இப்படி வருகிறது.

    மாடுகள் வலய வலய
    நெல் மணிகள் குலய குலய
    பாடுகிறோம் பாட்டு
    சூடடித்து முடியும் வர
    சுகமாகக் கேட்டு!

    நாடுகிறோம் அல்லாஹ்வை
    நல் விளைச்சல் கெடச்சிடவே
    தேடுகிறோம்
    கடனெல்லாம் தீர
    ஒரு நல் வாழ்வை!

    சிறுவர்களை மகிழ்விப்பதற்காக அச்சிறுவர்களின் தாயாரோ அல்லது உறவினர்களோ பாடும் பாடல் இது.

     எதுகையும் மோனையும், இயைபுத் தொடையும் மிக இயல்பாக இப்பாடலில் அமைந்துள்ளது. இப்பாடலை மறுவாசிப்பு செய்யும்போது, நம்மையும், இப்பாடல் கரைந்து மோன காலத்திற்குள் தள்ளுகிறது. ஞாபகம் வருகிறதே பாணியில் பின்னோக்கி நம் நினைவின் நிழல்களை நகர்த்தினால், நம் குழந்தைப் பருவத்து நிகழ்வுகள் நினைவுக்கு வரும். இனி பாடலைப் பார்ப்போம்.

    சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

    சாயக் கிளியே சாய்ந்தாடு

    அன்னக் கிளியே சாய்ந்தாடு

    ஆவாரம் பூவே சாய்ந்தாடு

    குத்து விளக்கே சாய்ந்தாடு

    கோயில் புறாவே சாய்ந்தாடு

    மயிலே குயிலே சாய்ந்தாடு

    மாடப் புறாவே சாய்ந்தாடு

    குழந்தைகள் பாடிக்கொண்டு விளையாடும் விளையாட்டுப் பாடல்கள் தனி ரகமானவை. குழந்தைகளின் விளையாட்டோடு, இசையும், இலக்கியமும் கலந்தது வியப்பான விசயமாகும்.

    குழந்தைகளின் விளையாட்டுக்கள் காலாவதியானதுடன், சேர்ந்து அவர்கள் விளையாட்டோடு பாடிய பாடல்களும் காற்றில் கரைந்து விட்டன.

    கண்ணாம் கண்ணாம் பூச்சாரே,

    காது காது பூச்சாரே

    எத்தனை முட்டை இட்டாய்?

    மூணு மூட்டை!

    மூணு முட்டையும் தின்னுப்புட்டு

    ஒரு சம்பா முட்டை கொண்டுவா!

    என்பன போன்ற பாடல்களைப் பாடுவார்கள். இத்தகைய பாடல்களுக்கு நாம் பொருள் விளக்கம் தேடி அகராதியைப் புரட்டிக் கொண்டிருக்கக்கூடாது.இத்தகைய பாடல்களின் இசை அமைதியையும் தாளக்கட்டையும்,சொற்செட்டுகளையும் மட்டும் நாம் அனுபவிக்கவேண்டும். பொருளற்ற வெற்றசைச் சொற்களாகவே இத்தகைய பாடல்களில் வார்த்தைகள் வந்து உக்கார்ந்திருக்கும். சான்றாக,

    மாப்பிள்ளை மாப்பிள்ளே

    மண்ணாங்கட்டி தோப்புளே

    அரைக் காசு வெற்றிலைக்கு

    கதி கெட்ட மாப்பிள்ளே. . .!

    என்ற பாடலைக் கூறலாம்.

    மைத்துனன் முறை உள்ள பையனை மச்சினன் முறை உள்ள பையன் கேலி செய்து பாடுவதாக அப்பாடல் அமைந்துள்ளது.

    சக்கு சக்குடி சருவொலக்கையடி

    குத்தொலைக்கையடிகுமரன் பொண்டாட்டி

    பாளையத்திலே வாழ்க்கைப்பட்ட

    பழனி பொண்டாட்டி. . .

    வெற்றசைச் சொற்களால் ஆன இசைப்பாடல் இது.

    பனை மரமாம் பனை மரமாம்

    பச்சைக் கண்ணாடி

    பல் இல்லாத கிழவனுக்கு

    டபுள் பொண்டாட்டி. . .

    என்ற குழந்தைப் பாடல் இரண்டாம் தாரமாகக் கிழவர் ஒருவர் இளம்பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டதைக் கேலி செய்கிறது. இரண்டு பொண்டாட்டி என்பதை டபுள் பொண்டாட்டி என்று பாடுவது தமிழ் மொழியில் ஏற்பட்ட மொழிக்கலப்பைப் பதிவு செய்கிறது.

    பலிஞ் சடுகுடு அடிப்பானேன்?

    பல்லு ரெண்டும் போவானேன்?

    உங்கப்பனுக்கும் உங்காயிக்கும்

    ரெண்டு பணம் தெண்டம்தெண்டம்!

    என்கிற பாடலிலும் கேலி செய்யும் தொனியே மிஞ்சி நிற்கிறது.

    கிக்கீக்குஸ் கம்பந் தட்டை

    காசுக்கு ரெண்டு கெட்டு

    கருணைக் கிழங்கடா

    வாங்கிப்போடா. . . வாங்கிப்போடா. . .!

    இந்தப்பாடல் கரிசல் காட்டில் தோன்றியதாக இருக்க வேண்டும். கம்மங்கதிர்,கம்பு, கம்மஞ்சோறு, கம்மந்தட்டை என்பவை கரிசல் காட்டிற்கே உரியவையாகும். இப்பாடலும் பொருளற்ற வெற்றசைகளால் நெய்யப்பட்டிருக்கிறது.

    சடுகுடு விளையாடும்போது, பிள்ளைகள் பலவிதமான சிறுபாடல்களைப் பாடிக்கொண்டே விளையாடுவார்கள். அவைகள் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். அத்தகைய குறும் பாடல்களில் சிலவற்றைக் கீழே காண்போம்.

    சடுகுடு மலையிலே

    ரெண்டானை

    தவறி விழுந்ததுதவறி விழுந்தது

    கிழட்டானை. . . கிழட்டானை.

    வெள்ளிப் பிரம்பெடுத்து

    விளையாட வாராண்டா. . .

    தங்கப் பிரம்பெடுத்து

    தாலி கட்ட வாராண்டா. . .

    தாலி கட்ட வாராண்டா. . .

    தூத்தூ நாய்க்குட்டி

    தொட்டியக்குடி நாய்க்குட்டி

    வளைச்சி போடடா. . நாய்க்குட்டி. .

    இழுத்துப் போடடா. . நாய்க்குட்டி. . .!

    அந்தக் குடுக்கை இந்தக் குடுக்கை

    கல்லிலே போட்டா சுரைக் குடுக்கை

    சுரைக் குடுக்கை. . . சுரைக் குடுக்கை. . .!

    ‘கழிச்சிக் கல்’ விளையாட்டு என்று ஒருவித விளையாட்டைச் சிறுவர்கள் சென்ற தலைமுறைவரை விளையாடினார்கள். இந்த விளையாட்டைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்திலும் காணக் கிடக்கிறது.

    சங்ககாலம் முதல் சென்ற தலைமுறைவரை தொடர்ந்து வந்த இந்தக் குழந்தை விளையாட்டை, இந்தத் தலைமுறைப் பிள்ளைகளுக்கும் கடத்த முடியாமல் போனது எதனால்?

    இரண்டாயிரமாண்டுப் பாரம்பரியமிக்க இந்தச் சிறுவர் விளையாட்டை,சமீபத்திய வாழ்க்கை முறையால் நாம் தொலைத்துவிட்டோம்.விளையாட்டிலும், உலக மயமாக்கல் ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிக்கிறது.

    விளையாட்டு என்றதும் மட்டைப் பந்து என்ற கிரிக்கெட்தான் இக்காலத்துப் பிள்ளைகளின் நினைவுக்கு வருகிறது. இந்த மட்டைப் பந்து விளையாட்டு என்பதும் ஒரு காலத்தில் சிறு பிள்ளைகள் விளையாடிய கிட்டிப்புல் என்ற சில்லாங்குச்சி விளையாட்டின், விஞ்ஞானபூர்வமான விரிவாக்கமே!

    ‘கழிச்சிக் கல்’ விளையாடும் பிள்ளைகள் விளையாட்டின்போது ஒவ்வொரு கல்லையும் எடுக்க, ஒருவிதப் பாடலைப் பாடுவார்கள். அத்தகைய பாடல் இதில் ஒன்று முதல் பத்துவரை உள்ள எண்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுட்டப்படுகின்றன!

    கொக்குக்கிக் கொக்கு

    ரெட்டை சிலாக்கு

    மூக்குச் சிலந்தி

    நாக்குலா வரணம்

    ஐயப்பன் சோலை

    ஆறுமுக தாளம்

    ஏழுக்குக் கூழு

    எட்டுக்கு முட்டு

    ஒன்பது கம்பளம்

    பத்துப் பழம் சொட்டு

    இதுவும் பொருளற்ற ஒரு வித இசைப்பாடலே. குழந்தைகளின் நினைவாற்றலை வளர்க்க இத்தகைய பொருளற்ற இசைப்பாடல்கள் உதவின.

    அந்தாதித் தொடை அமைந்த வினா-விடை பாணியிலான சில குழந்தைப் பாடல்கள் கேட்பதற்கும் பாடுவதற்கும் ரஸமாக இருக்கிறது. அத்தகைய பாடல்களில் சான்றுக்கு ஒரே ஒரு பாட்டு

    ஆண்டி. . . ஆண்டி.. .

    என்ன ஆண்டி?

    பான்னாண்டி. .

    என்ன பொன்?

    காக்காப் பொன்.

    என்ன காக்காய். . .?

    அண்டங்காக்காய். . .

    என்ன அண்டம்?

    பூ அண்டம்.

    என்ன பூ?

    பனம் பூ.

    என்ன பனை?

    தாளிப் பனை.

    என்ன தாளி?

    நாக தாளி.

    என்ன நாகம்?

    சுத்த நாகம்

    என்ன சுத்தம்?

    வீட்டுச் சுத்தம்

    என்ன வீடு?

    ஓட்டு வீடு

    என்ன ஓடு?

    பாலோடு

    என்ன பால்?

    நாய்ப் பால்

    என்ன நாய்?

    வேட்டை நாய்

    என்ன வேட்டை?

    பன்றி வேட்டை

    என்ன பன்றி?

    ஊர்ப் பன்றி

    என்ன ஊர்?

    கீரையூர்

    என்ன கீரை?

    அறைக்கீரை

    என்ன அறை?

    பள்ளி அறை

    என்ன பள்ளி?

    மடப் பள்ளி

    என்ன மடம்?

    ஆண்டி மடம்

    என்ன ஆண்டி

    பொன்னாண்டி . . .

    இந்தப் பாடல் இத்துடன் முடிவதில்லை. தேவை எனில் குழந்தைகள் ‘என்ன பொன்?’ என்று கேள்வியை எழுப்பி அதற்கு ‘ஆணிப் பொன்’ என்று விடையும் கூறிச் சங்கிலித் தொடர்போல் பாடலைத் தொடரலாம்.

    மொழிப் பயிற்சிக்கும், உச்சரிப்புப் பயிற்சிக்கும், நினைவாற்றலை வளர்க்கவும் கேட்ட கேள்விகளுக்குத் தயங்காமல் பதில் கூறும் மனத்திறனையும் இத்தகைய பாடல்கள் வளர்க்க உதவின.

    குழந்தைப் பருவம் முடிந்து வளர் இளம் பருவத்தில் அடி எடுத்து வைக்கும் இளங் குமரிப்பெண்கள் மற்ற முறைகாரப் பெண்பிள்ளைகளைக் கேலி செய்து விளையாட்டாகச் சில பாடல்களைப் பாடுகிறார்கள். நேசமிக்க இத்தகைய பாடல்களும் இன்று காணாமல் போய்விட்டன.

    மாதிரிக்கு அத்தகைய பாடல்களில் இந்த ஒன்றை மட்டும் வாசகர்கள் சுவைக்கலாம்

    அத்தான் தங்கையே ராமக்கா

    அரிசிக் காரன் வந்திட்டான்

    சின்ன வீட்டிலே புகுந்துக்கோ

    சிலுக்குத் தாளம் போட்டுக்கோ

    புட்டைப் பிச்சுத் தின்னுக்கோ

    புருசன் கூடப் பேசிக்கோ. .!

    ஒரு காலத்தில் குழந்தைகளின் வாழ்வுலகமும், இளம் பருவத்து வளர் இளம் பெண்களின் கனவுலகமும் வண்ண வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கிய சோலைகளாக இருந்தன!

    இன்று அவர்களின் கனவுலகமே பாலைவனங்களாகிவிட்டன. கட்டற்ற கற்பனை வெளியில், மொழியின் கைபிடித்து இசையின் காலடித்தடம் தேடி அலைந்த பிஞ்சுக் குழந்தைகளின் வாழ்வனுபவம், இன்றைய குழந்தைகளுக்குக் கிடைக்கவில்லை. இந்தக் கலாச்சார மாற்றம் நம்மை மேல் நோக்கி நகர்த்துகிறதா? புதைகுழியில் தள்ளுகிறதா? புரியவில்லை.

    நாடோடிப்பாடல்களில்
    கதை

    இசைப் பாடல்கள்

     கவிதைகள்

    பழ மொழிகள்

    விடுகதைகள்

    ஒப்பாரி

    கவிகள்

    தாலாட்டுக்கள்

    ஊஞ்சல் பாடல்கள்

    கப்பற் பாடல்கள்

    பாலர் விளையாட்டுப் பாடல்கள்

    இவையெல்லாம் நாட்டார் இலக்கியங்களாகும்.

    Share
  • தங்கை நுப்ரா…

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    இன்ஷாத்துக்கு அன்று தூக்கமே வரவில்லை .இப்படியொரு அன்பான அருமையான தங்கை தன் வாழ்வில் குறுக்கிடுவாள் என அவன் கனவு கூட கண்டிருக்கவில்லை .

     

    அப்போதெல்லாம் அவனின் நண்பர்கள் தங்கள் “தங்கைகளை” புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கும் போது இன்ஷாத்தின் மனம் ஊமையாக கண்ணீர்  வடிக்கும். பொறாமையால் அவன் மனம் வெந்து போகும். இப்போது தனக்கு கிடைத்த இந்த தங்கையை அல்லாஹ்வால் தனக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே அவன் மகிழ்ந்துபோவான். அந்தக் கடிதத்தை எத்தனை தடவை பார்த்த போதிலும் அவன் மனம் அலுத்துக்  கொள்ளவில்லை. அவள் அதில் எழுதியிருந்த  அந்த  “நானாவை” மட்டும் தனக்குள் ஆயிரம் தரம் படித்துப் பார்த்து விட்டான் இன்ஷாத். இப்போதும் அந்தக் கடிதம் தான் அவன் கையில் இருந்தது. “அன்புள்ள நானா…! வண்டமிழ் வந்தனங்கள் பல! நான் நலம்! தங்களது நலம் மலராய் செரிந்து மணம் வீச ஏன் பிராத்தனைகள் தென்றலாய்  தடவட்டும்!” “இதுவரை நான் தங்களுக்கு பல கடிதங்கள் அனுப்பியுள்ளேன்.எல்லாவற்றிற்கும் பதில் எழுதி உங்கள் அன்பை வெளிப்படுத்தினீர்கள். நன்றிகள் நிழல்களாக! ” “நானா! நாளை உங்களுக்குத் லீவு நாள். அன்றைய மதிய உணவை தங்களுடன் சேர்ந்து உட்கொள்ள தீர்மானித்திருக்கிறேன். நீங்கள் வராவிட்டால் நான் அன்று முழுவதும் பட்டினியாகவே இருப்பது என முடிவு செய்துள்ளேன். எனவே என் அழைப்பை ஏற்று என் குடிசைக்கு வந்து என்னை  மகிழ்விப்பீர்களென நம்புகிறேன்.

    இப்படிக்கு உங்கள் வரவை எதிர்ப்பார்க்கும் அன்புத் தங்கை நுப்ரா”.

    கடிதத்தை படித்த இன்ஷாத் அப்படியே  தூங்கிப் போய்விட்டான். சகோதரிகள் இன்றிப் பிறந்த இன்ஷாத் எழுத்துத் துறையில் வல்லன். அவன் எழுதும் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், இசையும் கதையும்  ஆகியன பத்திரிகையில் பிரசுரிக்கப்படும். வானொலியில் ஒலிபரப்பாக்கியும் வந்தன. இதனால் இன்ஷாத்துக்கு பல ரசிகர்கள், ரசிகைகள் அவனை பாராட்டி பல கடிதங்கள் வரைந்தனர். இந்த ரசிகைகளில் ஒருத்திதான் இந்த நுப்ரா. அவள் எழுதும் கடிதங்களில் கலக்கமில்லாத தூய அன்பு,பாசம் நிறையவே இழையோடுவதை அவனால் நன்கு உணர முடிந்தது. நானா…நானா… என்று எழுதுவதைப் பார்த்து அவன் பூரித்துப் போவான். அந்த தங்கையை  தன் உடன் பிறவாத தங்கையாகவே நினைத்துக் கொண்டான் இன்ஷாத்.

    தங்கையைப் பார்க்கப் போகும் ஆவல் இன்ஷாத்தை அதிகாலையிலேயே எழுந்து உட்கார வைத்து விட்டது. கைகடிகாரம் மணி ஐந்து  என்பதை சரியாக காட்டிய  போது அவன் அதற்கு மேல் தூக்கம் பிடிக்காமல் எழுந்து கொண்டான். தன் காலைக் கடமைகளை உற்சாகமாக  நிறைவேற்றியவன் தாய் கொடுத்த காப்பியையும் காலைச் சாப்பாட்டையும் சாப்பிட்டு விட்டு நன்றாக “ட்ரெஸ்” பண்ணிக் கொண்டு  தன் தங்கையை பார்க்க புறப்பட்டான். அப்போது நேரம் சரியாக காலை எட்டு மணியைத் தாண்டி விட்டிருந்தது. நுப்ராவின் வீட்டை நெருங்கிய போது பயம் அவன் மனதைபிடித்துக் கொண்டது. மெதுவாக வீட்டுக் கதவை தட்டிய போது “வாருங்கள்” என்ற சந்தோசமான வரவேற்பு அவனை மெய் சிலிர்க்க வைத்தது. அவனுக்காகவே காத்திருந்தது போல் அவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள் அவள். அவளது அன்பான வரவேற்பில் அவள் நுப்ராவாகத்தான் இருக்க வேண்டும் என்பதை அவன்  மனம் உறுதியாகக் கற்பனை பண்ணிக் கொண்டது. இரண்டு, மூன்று வருட பேனா சந்திப்பின் பின் இன்று தான் நேரடியாகச் சந்திக்கின்றான். நுப்ரா ரொம்பவும் அழகாக இருந்தாள். அதைப் போல் வீடும் கவர்ச்சியாக, அழகாக காட்சியளித்தது. நுப்ரா, வாய் ஓயாமல் கதைத்துக் கொண்டிருந்தாள். இடையில், தானும் வேலைக்காரக் கிழவியும் தான் வீட்டில் இருப்பதாக கூறினாள். ஒரு உறவினரின் கல்யாண  வீட்டுக்கு போயிருக்கும் பெற்றோர் நாளை தான் வருவார்கள் எனவும் கூறினாள்.

    கடிதத்தில் “நானா…நானா…” என எழுதும் அவள் இன்ஷாத் வந்து ஒரு மணி நேரமாகியும் கூட ஒரு தடவைக் கூட “நானா” எனக்  கூப்பிடாதது அவன் மனதை என்னவோ செய்தது. பாடசாலை ஆசிரியருமான இன்ஷாத்துக்கு அவள் போக்கு அறவே பிடிக்கவில்லை. அவன் அதிகநேரமாக மௌனமாகவே இருந்தான். “ஏன் பேசாமலே இருக்கீங்க… என்னை உங்களுக்கு பிடிக்கவில்லையா…? என்று கெஞ்சும் குரலில் கேட்டாள் நுப்ரா. இன்ஷாத்துக்கு தூக்கி வாரிப் போட்டது. “நீங்க நுப்ராதானே…?ஆச்சரியத்தோடு கேட்டான் இன்ஷாத். “ஆமாம்” என்றவள் அவனைப் பார்த்து புன்னகைத்தாள். “நீங்க தனியாகத்தான் இருக்கீறீன்களா…?” என்று படபடப்போடு அவன் கேட்ட போது. “ம்… யாருமே  இல்லை…. உம்மா போகும் போது பக்கத்து வீட்டு தோழிகளை துணைக்கு கூப்பிடச்  சொல்லிட்டுப் போனாங்க… ஆனா… நான் யாரையுமே துணைக்கு கூப்பிடப் போறதில்லை… நீங்க தான் துணைக்கு  வந்திட்டீங்களே… இனி  எதற்கு….”  “உங்கள எனக்கு நல்லாப்  பிடிச்சிருக்கு….உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா…..? இதை சற்றும் எதிர்பார்க்காத இன்ஷாத் அப்படியே  விறைத்துப் போய் விட்டான். எத்தனை தூய மனதோடு  அவளை  பார்க்க வந்தவனுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துக் கொண்டிருந்தாள் அவள்.

    “பெண்களே இப்படித்தானோ”என  எண்ணியவன்  “நீ…..நானா…நானா என்று எழுதியதை நன்றாக  நம்பி நான் இங்கு வந்து விட்டேன்… என்னை மன்னித்துக்கொள்”  “எனக்கு உன்னை  அறவே பிடிக்கவில்லை” என்று கூறியவன்  அவள் பதிலை எதிர்பாராமல்  சட்டென எழுந்து கொண்டான். அப்போது தான் அவள் கண்கள் கலங்கி  இருப்பதை அவனால் காண முடிந்தது. கூடவே அறைக்குள்ளிருந்து  நாலைந்து  பெண்களின் சிரிப்பொலி அவன் காதை துளைத்தது.  அத்தனை பேரும் சேர்ந்து  அவனை “நானா ” என அழைத்து, வெறுப்போடு போக இருந்தவனை திரும்பவும்  உட்காரவைத்தார்கள். கூடவே அவள் பெற்றோரும் சிரித்தபடி இன்ஷாத்தை அன்போடு பார்த்தபடி நின்றிருந்தார்கள். இன்ஷாத்துக்கு எதுவுமே புரியவில்லை. பின்னர் அவன் எப்படிப்பட்டவன் என்று பார்ப்பதற்காக  அவர்கள் வைத்த  சோதனை  என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.

    நானா தங்கை என்று பழகுவார்கள் சந்தர்ப்பத்தில் காதலர்கள் ஆகி விடுவார்கள். ஆண்கள் தனியாக பெண்ணைக் கண்டால் மனம் மாறிவிடுவார்கள். ஆனால் தன் மேல் இன்ஷாத் உண்மையான பாசம் தான் என்பதை  நன்றாக உணர்ந்து கொண்டாள் நுப்ரா. இன்ஷாத்துக்கு அறுசுவை உணவு  அந்த வீட்டில்  அன்போடு வழங்கப்பட்டது. நுப்ரா “நானா…….நானா…..” என  வாய்நிறைய அழைத்து உபசரித்ததனால் இன்ஷாத் மகிழ்ந்து போனான். பின்னர் அந்த அன்புத்  தங்கை  நுப்ராவிடம் விடை பெற்ற போது  அவன் கண்கள்  நீரை நிறைத்துக் கொண்டதை  அவனால் தவிர்க்க முடியாமல் போய் விட்டது.

    Share
  • துணைவன் வேண்டும் !

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    சீதனம் எதுவு மில்லை
    சீரமைக்குப் பஞ்ச மில்லை
    ஆதனம் அதுவு மில்லை
    பேதையவள்  வாழ்வில் ஒன்றாய்ப்
    பிணைந்திட வரனும் இல்லை!

    கல்வியும் கற்றவள் – நல்ல
    கனிவினை உள்ளத்தில் பெற்றவள்
    சொல்லினில் தெளிவு கொண்டவள்
    சுயநலம் துளியும் இல்லை
    நல்லதோர் துணைவன் அவளை
    நாடியே வரவும் இல்லை!

    குடிசை தான் வாழ்க்கை
    கோபுரம் அவள் உள்ளம்
    நடிகையாய் வாழ்வில் மாறும்
    நரித் தனம் எதுவும் இல்லை!
    அடிமையாய் அவளை அன்பால்
    ஆண்டிடத் துணைவன் வேண்டும் !

    அந்நிய நாட்டுக் கவளை
    அனுப்பியே உழைக்கத் தூண்டித்
    தின்றிடத் துடிக்கும் பேயர்
    தேவையே இல்லை ஆண்மை
    தன்னகம் கொண்டு வாழும்
    தகைமைசேர் துணைவன் வேண்டும்!

     

    Share
  • மனமாற்றம் வேண்டும்…!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    எழுத்தாளர் என்கின்றார் எழுதுவோருள்
    இவர்தானாம் மாமன்னர் செப்புகின்றார்
    “பழுத்தபழம்” போற்பேசும் இவரோயிங்கு
    படைத்தவையின் பட்டியலோ பூஜ்ஜியம்தான்!
    அழுத்தமுடன் எதைச் சொன்னார் புதுமையாக….?
    அசலுண்மை கடல் நீரா உப்பு என்றார்
    வெளுத்த நிறம் பாலென்றார்  வானில் நீந்தும்
    வெண்ணிலாவின் ஒளி தண்மை என்று சொல்வார்….!

    “நா” மெத்தத் தடித்ததனால் “நான்” நானென்று
    நலங்கெட்டவார்த்தைகளைக் கொட்டுகின்றார்!
    “பா” மெத்தப்படைத்தளித்த பாவாணர் போல்
    பல மேடைகண்டவர் போல் பகருகின்றார்!
    காமத்தைக் கருவாக கொண்டு ஏதோ
    கண்டபடி நாலைந்தைக் கிறுக்கியுள்ளார்
    நாமத்தை அச்சினிலே “பெரிதாய்ப்” போட
    நாய்படாப் பாடுபல படுகின்றாரே…..!

    பெண்ணழகைக் கவி செய்வார் பெண்களே இப்
    பெருவுலகில் பேறென்றும் சாற்றி நிற்பார்!
    பெண்ணொருத்தி எழுத்துலகில் முன்னே நிற்கப்
    பித்தரிவர் “பெருமனது” இடங் கொடாது
    வண்டமிழைக் கொண்டு இவர்வசைகள் பாடி
    வருத்தமுறச் செய்திடுவார் வார்த்தையாலே
    மண்டைதனில் கனம் கொண்டார் அறிவைத்தீட்டி
    மனமாற்றம் பெற்றுய்ய வேண்டுகிறேன்…..!

     

    Share
  • வசந்த காலங்கள்

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    சிந்தனைச் சுழல்கள் என் இதயத்தை வலம் வந்து கொண்டிருந்தன. கடந்து போன என் வாழ்க்கையிலே நடந்து முடிந்த சம்பவங்கள் எத்தனையோ! நான் அநாதையாய் ஆகி விட்ட பின்னும் அன்போடு பராமரிக்கப்பட்டேன். பெற்றோரின் அரவணைப்பைக் காண முடியாத பாவியாகி விட்ட போதிலும் அந்த சுகங்களைக் காணும் பாக்கியத்தை இறைவன் அளித்திருந்தான்.

    ஆமாம்! எனது மாமியினதும் மாமாவினதும் பாசப்பிணைப்பில் நான் பராமரிக்கப்பட்டேன். அன்பை, ஆதரவை ஏன் அனைத்தையும் பெற்றேன். குறைகளின்றியே இன்று  குமரிப் பருவத்தையும் அடைந்து விட்டேன். அந்த மாமி மாமாவின் அன்பை நினைக்கையிலே என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிறையும். என் மாமிக்கு ஒரே ஒரு மகன் தான் இருந்தான். அழகும் அறிவும் கொண்ட என் மச்சான் ருவைஸ் மிகவும் கெட்டிக்காரன். என்னோடு போட்டி போட்டுக் கொண்டே எந்நேரமும் படிப்பான். படிப்பில் மட்டும் தான் போட்டி. மற்றபடி நானும் அவனும் மிக அன்பாகவே இருந்தோம். பாடசாலையில் கூட ஜெபரீன், ருவைஸ் என்றால் எல்லோருக்குமே தெரியும். படிப்பிலே எம்மைத் தவிர யாரும் முந்திக் கொண்டதேயில்லை. மாமிக்கும், மாமாவுக்கும் சந்தோஷம் நிறைந்து வழியும். கண்ணை இமை காப்பது போலக் காத்து வந்தார்கள். இறைவனருளால் நானும் மச்சானும் ஒன்றாகவே படித்து ஒன்றாகவே பல்கலைக்கழகம் சென்று ஒன்றாகவே டாக்டர்களாக வெளியேறினோம்!

    “என்ன ஜெபரீன் யோசிக்கிறீங்க ?” என்று கேட்டவாறே மச்சான் என்னருகில் வந்தததும் நான் யோசனைகளில் இருந்து விடுபட்டேன். “இல்ல….அடுத்த மாசம் களுத்துறைக்கு மாற்றம் கிடைச்சிருக்கு. அதுதான் யோசிக்கிறேன்” என்றேன். “உம்மா கூடச் சொன்னாங்க… என்னையும் உங்களோட  துணைக்குப் போகட்டாம்” என்றார் மச்சான். ஒரு நாளும் இல்லாதவாறு மச்சான் என்னை உற்று நோக்கி அவ்வார்த்தைகளைச் சொன்னதும் எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. இவ்வளவு நாட்களாக இப்படி வெட்கம் வந்ததில்லை. ஆனால் நேற்றில் இருந்து மனமெங்கும் ஒரே பரபரப்பாகவே இருந்தது. அதற்கு காரணமும் இருந்தது. எனக்கு களுத்துறைக்கு இடமாற்றம் கிடைத்ததையிட்டு மாமியும் மாமாவும் முடிவு ஒன்றை எடுத்திருந்தார்கள்.

    ஆமாம்! என்னை மச்சானுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டு ஒன்றாகவே களுத்துறையில் குடியிருத்தவே அவர்கள் நினைத்தார்கள். இதை என்னிடம் மாமி சொல்லிய போது …நான் பதில் சொல்லாமலே  தலை குனிந்தேன். மௌனம் சம்மதத்துக்கு அறிகுறிதானே ! மாமி சிரித்து  விட்டு போய் விட்டார். மச்சானிடமும் அதைச் சொல்லித்தானே இருப்பார்கள். அதுதான் மச்சான் ஒரு நாளும் இல்லாதவாறு இப்படி பார்க்கிறார்! எனக்கு வழமை போல உட்கார்ந்து மச்சானுடன் கதைக்க முடியவில்லை….எழுந்து நிற்கிறேன்.

    “என்ன நான் துணைக்கு வருவது ஜெபரீனுக்கு விருப்பமில்லையா…? இன்னும் யோசிக்கிறீங்களே!” என்றார் மச்சான்.எனக்கு வெட்கத்தில்  வார்த்தை வரவில்லை. நான் ரூமிற்குள் ஓடி விட்டேன். இதைக் கண்ட மாமி சிரித்துக் கொண்டே எமக்கு திருமணம் செய்யும் நாள் பற்றி ஆலோசித்தார்கள். இறைவன் நாட்டம் வேறு மாதிரி இருந்தது! விரைவில் மச்சானை லண்டனுக்கு வரும் படி அழைப்பு வந்திருந்தது. புலமைப் பரிசிலில் அவர் எடுபட்டிருந்தார். மேற்படிப்புக்காக லண்டன் செல்ல அவர் சின்ன வயதில் இருந்தே ஆசைப்பட்டார். அவரின் ஆசைகள் எனக்குத் தெரியும். மாமிக்கு எப்படியும் திருமணத்தை முடித்து விட வேண்டும் என்கிற ஆசை! ஆனால் மச்சானுக்கோ திருமணம் முடிந்தவுடன் என்னைப் பிரிய வேண்டுமே என்ற துயரம். அதனால் நான் தான் சொன்னேன் “மச்சான் படித்து விட்டு வரட்டுமே ” என்று. அது ஒருவாறு தீர்மானமாகி முடிவாகியது. மச்சான் லண்டனுக்குப் புறப்படும் போது என் விழிகள் ஏனோ குளமாகின. என் ரூமிற்குள் வந்த மச்சான் நான் அழுவதைக் கண்டு துடித்து விட்டார். “ஜெபரீன் …! படிக்கத்தானே போறேன்.மூணே மூணு  வருஷம். அப்புறம் வந்து இந்த ஜெபரீனோடேயே இருப்பேன்! ” என்று என் கைகளைப் பற்றி முத்தமிட்டார். அந்த அரவணைப்பும் ஆறுதலும் அப்போது எனக்குத் தேவைப்பட்டது. சிறுபிள்ளை போல நான் மச்சானின் மார்பில் முகம் புதைந்து அழுதேன். நேரம் போனதே தெரியாமல் நான் மச்சானோடு பேசிக்கொண்டு இருந்தேன். மனம் தைரியம் பெற்றது! அவர் லண்டனுக்குப் போய்விட்டார். காலம் தான் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே!

    இன்று வீடு மிகவும் கோலமாக இருந்தது. ருவைஸ் வந்ததும் திருமணம் தான்! எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார்கள். ருவைஸ் மச்சான் நாளைக் காலை கொழும்பு வந்து அங்கிருந்து மட்டக்களப்பிற்கு ரயிலில் வருவதாக அறிவித்திருந்தார். எப்போது விடியும் என்று நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன். தூக்கம் வராமல் புரண்டு புரண்டு விடிந்த பின் அசந்து தூங்கி விட்டேன்! வீட்டிலே பெரிய சலசலப்புக் கேட்டு துடித்து எழும்பிய போது தான் அந்தக் கோரச் சத்தம் எனக்கு எட்டியது! மட்டக்களப்பிற்கு வந்த புகையிரதம் பொலன்னறுவைக்கு  அண்மையில் தடம் புரண்டதால் பல பிரயாணிகள் இறந்ததாகச் செய்தி கிடைத்தது! எனக்கு  எதுவுமே தெரியவில்லை. மயங்கிச் சாய்ந்தேன். நான் விழித்துப் பார்த்த போது புதிய இடத்திலிருப்பது எனக்கு தெரிந்தது. என்னைச் சுற்றிலும் பல ஆட்கள் நிறைந்து நின்றனர்.நடந்தது நினைவுக்கு வந்தது. என் விழிகள் மச்சானைத் தேடின. “உன் மச்சானுக்கு ஒன்னும்மில்ல ஜெபரீன். அவன் பஸ்ஸில தான் வந்திருக்கான்” என்று சொல்லவும் மச்சான் என்னருகில் வரவும்  சரியாக இருந்தது. அழுகையை அடக்க முடியாமல் நான் மீண்டும் மச்சானைக் கண்டு அழத் தொடங்கினேன். என்னை எல்லோரும் தேற்றினார்கள்.வீட்டிற்கு வந்த போது அந்த இனிய நாளை எண்ணி நான் புதிய ஜெபரீனானேன்! மச்சான்  என்னை குறும்புடன் நோக்கினார். நான் இப்போது வெட்கப்படவில்லை! வசந்த காலங்கள் தொடர்ந்தும் என் வாழ்வில் வீசுவதை எண்ணி இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டே தொழுவதற்கு ஆயத்தமானேன்.

    Share
  • சாதனைக் கிங்கில்லை விலைகள் !

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    புதுப்புது இலக்கிய வடிவம்
    பொலிவுடன் பூமியில் படைப்போம்,
    எது சரி; எது பிழை எனவே !
    ஆய்ந்தொரு முடிவுனை எடுப்போம் !

    இலக்கியவாதிகள்! (கவிஞர்கள்) மோதி
    ஈன நிலைக் கடி கோலி
    கலக்கிடும் போக்குகள் வேண்டாம்!
    கை கோர்த் தொழுகுதல் வேண்டும்!

    சுவைஞர் தம் மனப்பசி தீர
    துயர் நிலை அடியோடு மாற
    சமைத்திடுவோம் நவ கலைகள் !
    சாதனைக் கிங்கில்லை  விலைகள் !

    வீழ்ந்தவர் எழுந்திடும் வழிகள்
    விளம்பிடும் கவியொடு கதைகள்
    ஆழ்ந்த நல்அறிவினைப் பிழிந்து
    ஆக்கிடுவோம் ஒன்று கலந்து !

    எழுத்தினுக் கெதிர் முனையாக
    இலக்கிய வாதியின் வாழ்க்கை !
    பிழைபடும் இழிநிலை மாறிப்
    பிழையற ஒழுகுதல் வேண்டும் !

    வாழ்வோரு சிறு துளிஅரிய
    வளர்கலை உலகினில் பெரிது !
    பாழ்நிலை அகன்றிட உழைப்போம்
    படைப் பாளிகள் கைகளைப் பிணைப்போம் !

     

    Share
  • என்ன நீயதி ?

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    மருமகள் நீதா  னென்றார்
    மனைக்கு நீ விளக்கு என்றார்
    திருமகள் நீயே யென்றார்
    தேடிய செல்வம் என்றார்
    அருவருக் கின்றார் இன்று
    அனுதினம் என்னை வை தார்!

    மாமியார் இட்ட வேலை
    மறுத்ததே இல்லை யானும்
    பூமியில் அவரை அன்னை
    போலவே கருதி வந்தேன் !
    நாவினால் அவரோ நாளும்
    நங்கையைத் திட்டு கின்றார்!

    வீட்டிலே அன்னை தந்தை
    விரும்பிய அண்ணன் தம்பி
    பாட்டியோ(டு )அக்கா தங்கை
    பாசத்தை விடவும் மாமி
    வீட்டிலே அன்பு காட்டி
    விட்டதால் மனம் தவித்தேன்!

    மண்ணிலே வாழு கின்ற
    மாமிமார் எல்லாம் வீணாய்
    எண்ணியே மறு மகளை
    ஏய்ப்பதுவும் முறை யாமோ ?
    பெண்களே பெண்ணை வாட்டும்
    பேரிடி என்ன நீயதி ?

     

    Share
  • யாஅல்லாஹ்!

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    உள்ளத்து உணர்வினிலே- ஒருசிறு
    ஏக்கப் பெருமூச்சுவரும் – அந்த
    சுவாசக்  காற்றிலே – நிழலாய்
    நினைவுகள்வந்து நிழலாடும்- அந்தப்
    பாசத்தை தடவியபடியே – தோழமைகள்
    இதயத்தில் வந்தமரும்  – அங்கே
    நட்புத் துளியினாலே பாசம் –
    மனதினை மகிழ்ச்சியாக்கும் !

    அன்புத் தோழிகள் உறவும்   – இப்படிச்
    சொந்த மாகுமெனில்
    என்னை உயர்வெனப் – படைத்தாய்
    என்ன தகுதி யாஅல்லாஹ் ?
    அன்பு உயிர் நாடி  –  என்பதாயின்
    உயிரினில் இணைத்து விடு
    மனமெல்லாம் நிறைந்திட   – அன்புள்ளங்களை
    இன்பமுறச் செய்திடுவேன்!

     

    Share
  • பாரிலே பிறப்பான்….!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    மகிமை மிக்கதோர் மானுடப் பிறவி 
    அணுவிலும் நுண்ணிய கருவினில் இருந்து 
    அன்னை வயிற்றினுள் அடக்கமாய் வளர்ந்து 
    பத்துத் திங்களில் பாரிலே பிறப்பான்….!

    இருண்ட சூழலை மாற்றிய பின்னே 
    ஒளி உலகத்தை உவப்புடன் பார்க்க 
    விழிகள் திறப்பான் விருப்புடன் கை கால் 
    ஆட்டி மகிழ்ந்து அகிலத்தை ரசிப்பான்…..!

    தத்தித் திரிந்து தளர்நடை பயின்று 
    பள்ளிப் பருவ வாசல் ஏறி 
    இளைஞனாகி என்றும் வனப்புடன் 
    உலக அரங்கில் நடிப்பினைத் தொடர்வான்….!

    குருடனாய்,செவிடனாய் குடிக்கு அடிமையாய் 
    அறிஞனாய்க் கலைஞனாய் ஆயிரம் வேஷம் 
    ஏதோ ஒன்றை இட்டுக் கொள்வான்
    எல்லாம் மனம் போல் இகத்தில் செய்வான்….!

    முதுமை தோன்றுமே நரைகள் தாவுமே,
    பிள்ளையைப் பெற்றவன் பேரனைக் காண்பான் 
    போகப் போக நடை தளர்ந்திடுவான் 
    பூமியில் ஒரு நாள் உறுதியாய் இறப்பான்…..!

     

    Share
  • பொன்னாங்கண்ணி

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    பச்சை புல்லொன்று 
    வரப்பிலிருந்து மௌனமாகத் தலையசைத்தது!

    அரக்கொட்டிப் பூச்சியோடு 
    விதைக்கப்படாத தண்டுவொன்று                        ponnanganni-keerai
    சேற்றில் பதியமாகி  
    வயலில் பொன்னாங்கண்ணிகீரையானது! 

    பச்சைப் பசலென்ற நிறத்தோடு  
    நெற் கதிர்களோடு போட்டி போடும்!
    காகம் ,குருவி, கொக்கு ,மைனா கூட்டங்களின்  
    கண்ணில்படாமல்
    ஆடு , மாடு, நாய்களின்
    காலில் மிதிபடாது
    வயற்காரனின் 
    கரங்களுக்குள் நுழைந்து வயிற்றுக்குள் உணவானது…!

    மனதுக்கும் புரிவதில்லை  
    நாவுக்கும் புரிவதில்லை
    வயிற்றுக்கும் புரிவதில்லை
    நோண்டிய கரங்களுக்கும் புரிவதில்லை
    பார்த்த கண்ணுக்கும் புரிவதில்லை
    இறைப் படைப்பின் அற்புதக் கொடைகளில்
    இதுவும் ஒன்றென்று!

     

    Share
  • புதுமாற்றம் கொண்டு வாராய்!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    happynewyear

     

     

     

     

     

     

     

     

     

    ஏகிவிட்ட இரண்டாயிரத்து பத்தி நா(ன்)கைப்  (2014 )போல 
    இல்லாது! நீ மலர்க! இவ்விரண்டாயிரத் துப்பதி னைந்தே !
    சோக நிலை மாறி யொரு சுகந்தம் வீச!

    சுகம் பொங்க! வளம் பொங்க! வாழ்வில் நல்ல
    மோக நிலை கொண்டே தன் மக்க ளெல்லாம்
    முடிவில்லா இன்பத்தைத் துய்க்கும் வண்ணம் 
    இணையில்லா ஆண்டென்று இகமே போற்ற 
    இரண்டாயிரத்துப் பதினைந்தே  நீ இதமாய் வாராய்!

    கொலை மலிந்து தலைபுரளக் கோபம் கொண்டே!
    கொடுவதைகள் செய்வோர்  தம்உள்ளம் மாறி                       
    வலை போலச் சூழ்ந்துள்ள துயரம் நீங்கி
    வசந்தங்கள் வந்தெம்மை மகிழ் விலாழ்த்த 
    விலையில்லா அமைதியினை உலகுக்கீன்று 
    விதிமாற்றி இருளகற்றி ஒளியைச் சேர்த்து 
    கலை மணக்கும் புத்தகமாய்! அகிலந் தன்னில்
    களிப்பூட்ட நீவாராய்பதி னைந்தே!

    இனமென்றும் மொழியென்றும் மதங்களென்றும்
    இடைவெளியை ஏற்படுத்தும் மடமை நீங்கி 
    மனமொன்று பட்டுலக மாந்தரெல்லாம் 
    மாண்போடு சோதரராய் வாழ்ந்து நிற்கத்
    தினந்தொரும்  ஏழ்மையிலே வாடுவோர்கள் 
    செழிப்போடு வாழுநிலை தன்னை ஆக்கிக்
    கனவெல்லாம் வினையாகிக் கண்டு உய்ய
    கனிவோடு புதுமாற்றம்  கொண்டுவாராய்!

     

    Share
  • வாழும் வழி…!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    நடந்ததை நினைத்து வருந்தாமல் – இனி
    நடப்பதில் கவனம் செலுத்தி விடு !
    உடைந்த பாத்திரம் ஒட்டுமுன்னம் – நல்ல
    உயரிய பாத்திரம் படைப்பது மேல்
    இடரினைக் கண்டு அஞ்சாது – அதை
    இதய பலத்துடன் எதிர் கொள்ளு !
    இறைவனைத் துதித்துக் கண்ணியமாய் – தினம்
    கடமையைச் செய்து உயர்வடைவாய்…..!

    போன “பொழுதுகள்” – திரும்பாது என்றும்
    பொய்களும் நிலைத்து வாழாது !
    மானங்காத்து வாழ்பவரை – இங்கு
    மன்பதை என்றும் மறக்காது !
    தேனாய் வாழ்வை அமைப்பதற்கு – நிதம்
    திடமே வேண்டும் நெஞ்சத்தில்
    வானும் மண்ணும் நம் சொந்தம் – என்று
    வாழ்ந்தால் இன்பம் உலகுய்யும்…..!

    சாதிபேதம் தொலைத்தே தான் – நல்ல
    சமத்துவம் வளர்த்தல் பணியாகும் !
    நீதி நேர்மை செயல்நுட்பம் என்றும்
    நெஞ்சில் அன்பு தனை வளர்த்து
    மேதினிதன்னில் ஒற்றுமையாய் – நல்ல
    மிடுக்காய் வாழ்வது வாழ்வாகும் !
    சாதனை வேண்டும் வாழ்க்கையிலே – வரும்
    சந்ததி வாழ்த்த வாழ்த்திடணும்…..!

     

    Share
  • தாய்மை அழகே அழகு!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    மழலையைத் தாங்கிச் செல்லும்
    மாதினில் உண்மையான
    அன்பினைக் கண்டேன் மண்ணில்
    அழகெனிற் தாய்மைப் பேறே…..!

    “குளு குளு” மழலை தன்னைக்
    கொஞ்சிடும் அழகு –  மற்றும்
    அழுகையைப் பாட்டினிலே
    அணைப்பதும் அழகு காண்பீர்…..!

    உலகினில் கருணை வெள்ளம்
    உருகிடும் தாய்மை யுள்ளம்
    மலரவள் குழந்தை பெற்றாள்
    மலர்ந்திடல் மொட்டுத்தானே…..!

    தாய்மையே பெண்மை வாழ்வில்
    தனிநிகர் கனிவு ஆகும்
    காய்களா அழகு இல்லை
    கனிகளா அழகு சொல்வீர்…..!

    விளை நிலம் அழகா சொல்வீர்
    வெறு நிலம் அழகா சொல்வீர்
    அழகில் தாய்மை மேலே
    அடுத்தவை யாவும் கீழே…..!

    Share
  • யாவரும் கேளீர்!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    சாதி மத பேத மின்றி
    சரி சமமாய் மனிதர் நாம்
    மேதினியில் ஒரு குடியாய்                                 friendship
    மிடுக்காய் நிமிர்ந்து வாழ்வோம்….!

    சிறிய குருவிக் கூட்டமெல்லாம்
    சேர்ந்து இனிதே வாழ்கையில்
    அறிவிற் சிறந்த மனிதர் நாமும்
    அழிவுப் பாதை செல்வதா….?

    உலகில் வாழும் மனிதர்க்கெல்லாம்
    ஓடும் குருதி ஒரே நிறம்
    கழகம் பண்ணிக் கடிந்து வாழ்தல்
    காட்டு விலங்கின் இழி குணம்…..!

    பிறப்பில் மனிதர் எவருமிங்கு
    பெரிது சிறிது இல்லையே
    சிறக்கும் வாழ்வில் செயலில் நேசச்
    சிந்தையாலே உயருவார்….!

    பலிகள் செய்து பாவியாகப்
    பாரில் வாழ்வோர் சிறியவர்
    தெளிந்த அறிவு அன்பினோடு
    சேர்ந்து இனிது வாழுவோம்……!

     

    Share
  • கவி பாடினான்‏

    cb

    தமிழ் மண்ணிலே தோன்றியே-நல்ல
    பாவினை ஊட்டினான் மனங்களிலே
    சுவையுடன் கவி பாடினான் -தமிழ்
    உணர்வு யில்லாதோரைத் தூற்றினான் /தூண்டினான் /

    ஆழமாய் கவிதைகளைப் படைத்தான் – கெட்ட
    சாதி பேதங்களை மாற்றினான்
    உழைத்து வாழப் பாடினான் -வீணே
    சோம்பரியாய் கிடப்போரை விரட்டினான்

    கெட்ட உள்ளங்களைச் சாடினான் -அதை
    உயர்வாய் மதித்து போற்றினான்
    பாவினிலே மெரு கேற்றினான் -தமிழ்
    பற்றின் உயர் வினைக் கூட்டினான்

    பெண்ணின் பெருமையை போற்றினான் -அவர்களை
    மதித்து நின்று வாழ்த்தினான்
    மண்ணின் மாணிக்கம் அவளென்று –தான்
    பாடிப் புகழ்ந்து காட்டினான் மானிடர்க்கு

    அடிமைத் தனத்தை சாடினான்
    நாட்டின் நடப்புக்களையும் பாடினான்
    சாவுக் கஞ்சாது எழுதினான் -மண்ணில்
    மாறாப் புகழினை பெற்றிட்டான்

    பாரதிக்கு பா வடிக்கவே -என்
    சிந்தனை துளி உற்றெடுக்கும் வெள்ளமே
    மண்ணில் பிறந்தவன் கவி மனங்களிலே -அந்த
    மா கவி பாரதி விண்ணிலே ..

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை

    Share