-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

நடந்ததை நினைத்து வருந்தாமல் – இனி
நடப்பதில் கவனம் செலுத்தி விடு !
உடைந்த பாத்திரம் ஒட்டுமுன்னம் – நல்ல
உயரிய பாத்திரம் படைப்பது மேல்
இடரினைக் கண்டு அஞ்சாது – அதை
இதய பலத்துடன் எதிர் கொள்ளு !
இறைவனைத் துதித்துக் கண்ணியமாய் – தினம்
கடமையைச் செய்து உயர்வடைவாய்…..!

போன “பொழுதுகள்” – திரும்பாது என்றும்
பொய்களும் நிலைத்து வாழாது !
மானங்காத்து வாழ்பவரை – இங்கு
மன்பதை என்றும் மறக்காது !
தேனாய் வாழ்வை அமைப்பதற்கு – நிதம்
திடமே வேண்டும் நெஞ்சத்தில்
வானும் மண்ணும் நம் சொந்தம் – என்று
வாழ்ந்தால் இன்பம் உலகுய்யும்…..!

சாதிபேதம் தொலைத்தே தான் – நல்ல
சமத்துவம் வளர்த்தல் பணியாகும் !
நீதி நேர்மை செயல்நுட்பம் என்றும்
நெஞ்சில் அன்பு தனை வளர்த்து
மேதினிதன்னில் ஒற்றுமையாய் – நல்ல
மிடுக்காய் வாழ்வது வாழ்வாகும் !
சாதனை வேண்டும் வாழ்க்கையிலே – வரும்
சந்ததி வாழ்த்த வாழ்த்திடணும்…..!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *