-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

பச்சை புல்லொன்று 
வரப்பிலிருந்து மௌனமாகத் தலையசைத்தது!

அரக்கொட்டிப் பூச்சியோடு 
விதைக்கப்படாத தண்டுவொன்று                        ponnanganni-keerai
சேற்றில் பதியமாகி  
வயலில் பொன்னாங்கண்ணிகீரையானது! 

பச்சைப் பசலென்ற நிறத்தோடு  
நெற் கதிர்களோடு போட்டி போடும்!
காகம் ,குருவி, கொக்கு ,மைனா கூட்டங்களின்  
கண்ணில்படாமல்
ஆடு , மாடு, நாய்களின்
காலில் மிதிபடாது
வயற்காரனின் 
கரங்களுக்குள் நுழைந்து வயிற்றுக்குள் உணவானது…!

மனதுக்கும் புரிவதில்லை  
நாவுக்கும் புரிவதில்லை
வயிற்றுக்கும் புரிவதில்லை
நோண்டிய கரங்களுக்கும் புரிவதில்லை
பார்த்த கண்ணுக்கும் புரிவதில்லை
இறைப் படைப்பின் அற்புதக் கொடைகளில்
இதுவும் ஒன்றென்று!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பொன்னாங்கண்ணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *