பொன்னாங்கண்ணி
-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
பச்சை புல்லொன்று
வரப்பிலிருந்து மௌனமாகத் தலையசைத்தது!
அரக்கொட்டிப் பூச்சியோடு
விதைக்கப்படாத தண்டுவொன்று
சேற்றில் பதியமாகி
வயலில் பொன்னாங்கண்ணிகீரையானது!
பச்சைப் பசலென்ற நிறத்தோடு
நெற் கதிர்களோடு போட்டி போடும்!
காகம் ,குருவி, கொக்கு ,மைனா கூட்டங்களின்
கண்ணில்படாமல்
ஆடு , மாடு, நாய்களின்
காலில் மிதிபடாது
வயற்காரனின்
கரங்களுக்குள் நுழைந்து வயிற்றுக்குள் உணவானது…!
மனதுக்கும் புரிவதில்லை
நாவுக்கும் புரிவதில்லை
வயிற்றுக்கும் புரிவதில்லை
நோண்டிய கரங்களுக்கும் புரிவதில்லை
பார்த்த கண்ணுக்கும் புரிவதில்லை
இறைப் படைப்பின் அற்புதக் கொடைகளில்
இதுவும் ஒன்றென்று!
Mika arumai. Nanri. Hidhaya Rizvi.