மான்யங்களின் காலம்!

எஸ் வி வேணுகோபாலன் 

துக்கம் தாளாமல் பழைய ஆண்டை
வழியனுப்பச் செல்லும் தந்தையும்
கொண்டாட்டமாகப் புத்தாண்டை
வரவேற்கக் காத்திருக்கும் மகனும்
தற்செயலாகச்
சந்தித்துக் கொள்ளவிருக்கும்
மதுக் கடையில்
அவர்களிடம் மான்யம் பெற
ஆதார் அட்டை வாக்குகளோடு
பாவம்
கடை கடையாய்
தெருத் தெருவாய்
ஊர் ஊராய்
மாவட்டம் மாவட்டமாய்
இரவுபகல் பாராது
காத்துக் கிடக்கிறது
நலத் திட்டங்கள் அமல்படுத்துவதாகச்
சொல்லிக் கொள்ளும் அரசு!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *