வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு…!
-திருக்குறள்(ஊக்கமுடைமை)
புதுக்கவிதையில் (என் பாணி)…
தண்ணீருக்குத் தகுந்தபடி
தாமரை உயரும், தாழும்..
மனிதா உன்
எண்ணம்போல தான்
ஏற்றம் வரும் வாழ்வில்…!
குறும்பாவாய்…
தாமரை வளர்ச்சி தண்ணீரளவில்,
மனிதனுக்கு அவன்
மனம்போல்தான்…!
புதுப்பாவில்…
கதிரவனின் வெம்மைக்கரத்
தீண்டுதலில் பதறித் தாழ்ந்து
கண்விழிக்கிறது
தண்ணீர்க்காதலனின் முயக்கத்தில் உயர்ந்து
தன்னை மறந்திருந்த தாமரை..
உயர்வு வானில் பறக்க
ஏற்றதாய் இருக்கவேண்டும் மனிதனின்
எண்ணச் சிறகுகள்…!
படத்துக்கு நன்றி
http://centurystudios.blogspot.in/2011/08/30-lotus-blossom-chandelier.html


Leave a Reply