வெங்கட் சாமிநாதன்
இம்முறை மூன்று பேர்களின் கதைகள் முன் நின்றன. ஒன்று பார்வதி ராமச்சந்திரனின் சரயு, பழமை பேசியின் பேச்சி, தேமொழியின் அனிச்ச மலர்கள். தேர்ந்த கையான பழமை பேசியின் பேச்சி யில் கிராமத்து சூழல் மிக அடர்த்தியாக எழுப்பப்பட்டிருக்கிறது. கதையென்று ஏதும் இல்லாது சூழல் கொஞ்சம் அதிகமாகவே அடர்த்தி கொண்டுள்ளது. அனிச்ச மலரில் பிராமணப் பெண் என்று அழுத்திச் சொல்ல வேண்டாத இடங்களில் எல்லாம், பள்ளிக்கூடத்தில் கூட பிராமணப் பேச்சு வலிந்து புகுத்தப்பட்டுள்ளது. சிறு பெண்கள் சித்திரம் தடித்த கோடுகளால் வரையப்பட்டுள்ளது. மூன்று பேரில் பார்வதி ராமசாந்திரனின் சரயு கதை தான் சாதாரணமாக குடும்பங்களில் நடக்கும் நிகழ்வையும் அதன் பாரம்பரிய சிக்கல்களையே சொன்னாலும் குறைந்த சொற்களில் திறம்படச் சொல்வதில் வெற்றி கண்டுள்ளது.
என் தேர்வு பார்வதி ராமச்சந்திரனின் சரயு. அவருக்கு என் வாழ்த்துக்கள்.
பழமை பேசி, தேமொழி இருவருக்கும் கூட என் வாழ்த்துக்கள்.
கடந்த ஒரு வருட காலத்தில் மூன்று நான்கு புதிய திறன்களைக் கண்டு கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவர்களுக்கெல்லாம் என் வாழ்த்துக்கள்..
போட்டியில் பங்குபெற்ற சிறுகதைகள்:
உறக்கத்திலோர் உளறல் !!!
ஓடிப் போன புத்தர்
“பத்ரமா இருங்கப்பா!”
நான் வேற அப்பாவிற்குப் பிறந்திருக்கலாம்
அந்த நூறு நாட்கள்!
7.…விடுகதை!…
சரயு…
ஆங்காரியும் கோணங்கியும் இடையிலொரு அம்புஜவல்லியும்
முசுட்டுத் தாத்தா …
நன்றி
புரியாத புதிர்
டேய். நம்ம காலேஜ் சல்யூட்டை அடி!!!
பேச்சி
15. ‘நீர்’
17. அனிச்ச மலர்கள்
அன்பு நண்பர்களே,
வணக்கம். இப்பொழுதுதான் போட்டி ஆரம்பித்தது போல் இருக்கிறது. ஒரு வருடம் ஓடிவிட்டது. முதன் முதலில் நாம் ஒரு சிறுகதைப் போட்டி நடத்தினால் நன்றாக இருக்கும் என்று எழுத்தாளர் திரு வையவன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் உடனே மிக உற்சாகமாக, “நல்ல விசயம்தானே உடனே செய்யுங்கள், அதற்கான பரிசுத் தொகையும் அறிவித்துவிடுங்கள். எங்கள் டிரஸ்ட் மூலமாக நான் கொடுத்து விடுகிறேன். அதுமட்டுமல்லாமல், மாதம் ஒரு சிறுகதையைத் தேர்ந்தெடுத்து அதற்கும் 100 ரூபாய் பரிசு வழங்கலாம், பரிசு பெற்ற கதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாகவும் வெளியிடலாம்” என்று மனமுவந்து கூறினார். உடனடியாக அந்த மாதமே போட்டி ஆரம்பிக்கப்பட்டது, இதே ஜூலை மாதம் 2012ம் ஆண்டு. சிறுகதைப் போட்டிக்கு பல படைப்பாளிகள் தங்கள் அற்புதமான படைப்புகளை வழங்கி இப்போட்டியை வெற்றிப் பாதையில் இட்டுச் சென்றிருக்கின்றனர். போட்டிக்கான பரிசுக் கதையை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை முதுபெரும் எழுத்தாளர், மிகச் சிறந்த விமர்சகர் என்று அனைவராலும் போற்றப்படும் ஐயா வெங்கட் சாமிநாதன் அவர்கள் மிக மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்கள். தன்னுடைய பல்வேறு பணிகளுக்கிடையில் காலந்தவறாமல், குறிப்பிட்ட நேரத்தில் அதனைத் தேர்ந்தெடுத்து பாரபட்சமற்ற தீர்ப்பையும் வழங்கியுள்ளார்கள். இதற்கெல்லாம் அனைவருக்கும் நன்றி என்ற மூன்றெழுத்து வார்த்தையைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும். இப்போது அடுத்தக் கட்டத் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் நகர்கிறது. விரைவில் அதற்கான முடிவும் அறிவிக்கப்படும். இதுவரை போட்டியில் தங்கள் பங்களிப்புகளை அளித்துள்ள அனைத்து படைப்பாளர்களுக்கும், வெற்றி வாகை சூடியவர்களுக்கும், மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து நம் வல்லமைக்கு ஆதரவு அளித்து வரும் நம் வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றி. இன்னும் பலப்பல நல்ல நல்ல படைப்புகளை தங்களிடமிருந்து எதிர் நோக்கி காத்திருக்கிறோம். தொடர்ந்து எழுதுங்கள் நண்பர்களே.
அன்புடன்
பவள சங்கரி

Leave a Reply