இன்னம்பூரான்
கூகிளாண்டவரின் அசரீரி!
தேர்தல் வரும்பின்னே ! ஆருடங்கள் வரும் முன்னே!
கடந்த மூன்று மாதங்களாக ஒரு மக்களாலோசனை நடத்தி, கூகிளாண்டவர் எடுத்துரைப்பதாவது:
இணைய வாசிகள் இந்திய அரசியலை பற்றி நுட்பங்களும், நாட்டு நடப்பும் அறிய ஆவலாக இருக்கிறார்கள். வரும் தேசீய தேர்தலில், தலைவர்களின் மோதல் மட்டுமில்லை; கட்சிகளின் கோட்பாடுகளும், உகந்த/கூடாநட்புகளும் பற்றியும், ராகுல் காந்தி vs நரேந்திர மோடி என்ற ஜடுகுடு பற்றியும் அறிய விழைகிறார்கள். மேலும், ஆன்லைன் போர்க்களம் அமர்க்களம்; ஆவண யுத்தத்தில் சத்தம் மிகை; தெருக்கோடி சண்டைகள் மண்டையை பிளக்கின்றன.
2ஜீ மாயாமாலம், நிலக்கரி பதுக்கல், ஆதர்ஷம் இழந்த ஆதர்ஷ் கூத்து ஆகியவை பற்றி கூகிளாண்டவரின் கோயிலிலே உபாசனை. ராகுலரின் மஹாத்மியங்களும், ‘ஆம்’ ஆத்மி ‘இல்லை’ ஆன விவகாரமும் எங்கும் பேச்சு. 1984 & 2002 கலவரங்களும் வரலாற்று நோக்கில் மீள்பார்வையில் உளன.
முதற்கண்ணாக லஞ்ச லாவண்யமும் லோக்பால் பிரச்னையும் தலைமை வகிக்கின்றன.
இன்றைய பார்வை லோக்பால் பிரச்னை பற்றியது. சர்வ விசாரணை வல்ல லோக் பால் என்ற சூப்பர் தணிக்கையாளனை கண்டெடுப்பது பற்றி. மஹாராஜ ராஜ ஶ்ரீ அபிஷேக் சிங்வி என்ற காங்கிரஸ் ஒலிபெருக்கி தன் தலையிலேயே அபிஷேகம் செய்து கொண்டு, கண்டெடுப்பு கமிட்டியில் அமர ஃபாலி நாரிமென் என்ற பிரபல வழக்காளரும், மாஜி நீதிபதி கே.டி. தாமஸ் அவர்களும் மறுத்ததால் எமக்கு இக்கட்டு இல்லை என்று சப்பைக்கட்டு கட்டினார். ஃபாலி நாரிமென் என்ற பிரபல வழக்காளரும், மாஜி நீதிபதி கே.டி. தாமஸ் சொன்னதற்கு பதில் இல்லை. (அ-து) கண்டெடுப்பு கமிட்டி சிபாரிக்குமாம். அப்பறம் பிரதமர் தலைமையில், எதிர் கட்சி தலைவர் உட்பட்ட உப்பரிகை கமிட்டி பெரும்பான்மை முடிவு எடுக்குமாம்?
இந்தியா! நீ எங்கே செல்கிறாய்?
Image Credit: http://cdn.ndtv.com/tech/images/doodle_for_google_India_past_winners.jpg
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com


Leave a Reply