01
நாம் கேட்டுத்தான் அமையவில்லை
இப்பிறப்பு!
நாம் கேட்டேனும் அமையக் கூடாதா
இறுதி நாள் நமக்கு!
***********************
02
ஒருவனின் தொண்டைக் குழியினை
மரணம் அடைத்து விடுகின்ற
வேளையிலே
அவன் வேண்டுவது
என்னை விட்டுவிடு என்றிருக்காது
குதிங்காலிலிருந்து ஏறிவந்த நீ
கூடிய மட்டும் இதனையும் கடந்துவிடு
என்ற கருணை எதிர்பார்ப்பாகத்தானிருக்கும்!
***************************
03
இவ்வுலகின் இறுதி மனிதன்
இறக்கின்ற தருவாயில்
இம்மண்ணிற்கு இதனை வேண்டுகோளாய்
வைத்துவிட்டு மடியட்டும்!
அன்புகளைப் பிரிக்கும்
இவ்விறப்பு அற்ற இனமாய்
தோன்றட்டும்
இனி இங்கொரு இனம் பிறந்தால்!
http://www.sho.com/sho/time-of-death/home


Leave a Reply