நிறைமதியாளர்!

-வேதா. இலங்காதிலகம்

நாலடியார்

அதிகாரம் 25 –   அறிவுடைமை

பகைவர் பணிவிட நோக்கித்  தகவுடையார்
தாமேயு நாணித் தலைச்செல்லார் காணா
யிளம்பிறை யாயக்காற் றிங்களைச் சேரா
தணங்கருந் துப்பி னரா. (நாலடி: 241)

அணங்கு – வருத்தம் செய்யும், அரு – கொடிய, துப்பின் – வலியுடைய, அரா – பாம்பு, இளம்பிறை – இளையபிறைச் சந்திரனாயிருக்கும் போது, திங்களை – சந்திரனை, சேராது – வருத்துவதற்கு நெருங்காது, (அது போல) தகவு உடையார் – தகுந்த அறிவுடையார், பகைவர் – தம்முடன் மாறுபட்டவர், பணிவு இடம் நோக்கு – தாழ்ந்து இருக்கும் காலத்தைக் கவனித்து, தாமேயும் நாணி – தம்மில் தாமே வெட்கமுற்று, தலைசெல்லார் – அவரை அடக்குதற்கு எதிர்த்துச் செல்லமாட்டார், காணாய் – இதனை அறிக.

எனது வரிகள்:-

முழுமதிச் சந்திரனையே என்றும்
பழுதுடை கிரகணம் பற்றும்
பிறை நிலாவை அதன்
குறையோடு கிரகணம் பற்றா
இவ் விதியாய் எதிராளியின்
திடமற்ற நிலைப்பாடில் பலவீனரை
அடக்கார்  எதிர்க்கார்  தம்முள்
குறுகும் நிறை மதியாளர். 

 

Share

Comments

One response to “நிறைமதியாளர்!”

  1. மிக நன்றியை  வல்லமைக்கு மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.
    தலைப்பையிட்டு  திருப்தியடைந்தேன்.
    மறுபடியும் நன்றி.
    வாழ்க!….வாழ்க!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *