கந்தசக்ஷ்டி 3 ம் நாள் சங்கடம் அனைத்தும் போக்கிடு கந்தா!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா

சஷ்டி விரதம் நோற்கிறோம் கந்தா
சங்கடம் அனைத்தும் போக்கிடு கந்தா
காவடி சுமந்து சேவடி வருவோம்
காத்திடு எம்மை, கருணைக் கடவுளே

இல்லம் அனைத்தும் சிறக்க வேண்டும்
இருக்கும் குறையும் அகல வேண்டும்
சொல்லும் செயலும்  நன்றாய் இருக்க
நல்லைக் கந்தா அருள்வாய் நாளும்

மனத்தில் உறுதி நிலைத்திட வேண்டும்
வாக்கில் வாய்மை நிறைந்திட வேண்டும்
கனவும் நனவும் உந்தன் நினைப்பை
மனத்தில் இருக்க அருள்வாய் கந்தா

நாளும் உன்னை நயமாய்ப் பாட
நற்றமிழ் வல்லமை தந்திடு முருகா
சேவற் கொடியுடன் மயிலில் அமர்ந்து
சீரா யிருக்கச் செய்திடு முருகா

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *