நாகினி
சென்ற காலத்து துயரம் நினைந்து
வருங்காலத்து விளைவின் பயம் கொண்டு
நிகழ் காலத்து இன்பங்களைச்
சோக இருளாக்குதல் மனித இயல்பு…
நிகழ்கால நிகழ்வை ரசித்து இன்பமாய்
வாழ்வை மாற்றிக் கொள்வதும்
நொந்து வாழ்வைத் தூற்றிக் கொல்வதும்
உலகியலில் விரும்பி நடக்கும் மனித இயல்பு…
இரட்டை வேடதாரி மனிதன்
சோக இருளிலும் நகைப்பான்
மகிழ் இன்பத்திலும் அழுவான்
நேரத்திற்கேற்ப மாறும்மனமே மனித இயல்பு…
மாறும் மனத்தால் துயர் கழித்து
சமூகநலனின் ஏற்றம் பெருக்கி
பிறரை வழிநடத்தும் நேர்மை பண்பைக்
கடைபிடித்தல் மாமனித இயல்பு…
மாமனிதனாய் உயர்ந்து
மனத் துயர்களை உடைக்கும்
மனிதன் …மனிதன்…
இவனே மாமனிதன் என்றே மதிக்கும்
நிலைத்த நேர்வாழ்வு நடைபோடுதலே
தெய்வப் பிறவியாக உயரும் மனித(த்தின்) இயல்பு!
— நாகினி

Leave a Reply