அன்னப்பறவையே தூது செல்வாயோ ?

0

-பா. ராஜசேகர்

 

aaa

நீர் பிரித்துப்
பாலருந்தும்
நீயறியாயோ
நான் வருந்தும்
காரணமே !

நீர் நிலம்
வான் உலவும்
நீயறியாயோ
என் மனமே !

மான் என்றான்
கண்ணிரண்டும்
மீன் என்றான்
மனம் கொய்தான்
என் காதல்
தூது செல்வாயோ?

வழிதேடி
விழி நொந்து
நீர் வடித்த
விழியிரண்டும்
ஒளியிழந்த
கதை சொல்வாயோ?

தேனென்ற
இதழிரண்டும்
அவன் நாமம்
உச்சரித்துச் சோர்வான
கதை சொல்வாயோ ?

அவன் உலவும்
நந்தவனம்
என்னிதயம்
வேதனையைச்
சொல்வாயோ?

கார்கூந்தல்
நீர் நனைத்துப்
பொலிவிழந்து
முடிந்து நாளான
கதை சொல்வாயோ?

திசையெல்லாம்
அவனுருவம்
முகர்பொழுது
அவன் வாசம்
சொல்வாயோ ?

சலசலக்கும்
சருகொலியில்
அவன் குரலே
ஒலிப்பதென்ன
என் மனம் சொல்வாயோ
அன்னப்பறவையே?

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.