நல்லது எல்லாம் தருவாயே!

-சரஸ்வதி ராசேந்திரன்

ஆற்றங்      கரை        ஓரத்திலும்
அரச         மரத்தடி        கீழும்
அமர்ந்தி   ருக்கும்        நந்தி மகனே!                   lordganesh
அன்னை    பராசக்தி    மைந்தனே
உன்னைத்     தினம்        பணிந்தேனே
சங்கரன்      மகனே     சட்டென வந்து
சங்கடம்      தீர்த்திடு    ஐங்கரனே!

யானை        முகம்    கொண்டவனே
யானுனைத்    தினம்     தொழுதேனே
வருவாய்    தருவாய்    அருள்தனை
வடிவேல்     அன்புச்       சோதரனே
குவலயம்     போற்றும்    குண நாதா
குருவாய்      வருவாய்    அருள்வாயே!

முழுமுதற்      கடவுள்   மூஷிகனே
கொழுக்        கட்டை    வடையுடன்
அப்பமோடு    அவல்       பொரியும்
தப்பாமல்       நான்       படைப்பேன்
வல்லபை     நாதா         வருவாயே
நல்லதை     எல்லாம்    தருவாயே!

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *