பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்
ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
++++++++++++++++++
28] முதிய கயாமுடன் வா, ஞானிகள் பேசட்டும்.
ஒன்று மட்டும் உறுதி, ஓடுகிறது வாழ்க்கை
மற்றவை பொய்யாகும் என்பதும் உறுதியே
ஒருமுறை உதிர்ந்த பூ நிரந்தரச் சருகு !
XXVIII. [28]
Oh, come with old Khayyam, and leave the Wise
To talk; one thing is certain, that Life flies;
One thing is certain, and the Rest is Lies;
The Flower that once has blown forever dies.
+++++++++++++++
[29] அடிக்கடி வாலிபத்தில் ஆர்வமாய் வாதிப்பேன்
அதைப் பற்றித்தான் மேதையர், புனித ரோடு;
தருக்கம் மீண்டும் மீண்டும் புரிந்தும் என்றும்
திரும்பத் திரும்ப வந்தேன் புகுந்த வாசல் வழி !
XXIX. [29]
Myself when young did eagerly frequent
Doctor and Saint, and heard great Argument
About it and about; but evermore
Came out by the same Door as in I went.
++++++++++++
[30] ஞான விதைகளை விதைத்தேன் அவருடன்,
மெய்வருந்தி உழைத்து அவற்றை வளர்த்தேன்;
கிடைத்த அறுவடை எனக்கிது மட்டுமே:
நீராக வந்தது, காற்றாகப் பறந்தது.
XXX. [30]
With them the Seed of Wisdom did I sow,
And with my own hand labour’d it to grow:
And this was all the Harvest that I reap’d –
‘I came like Water and like Wind I go.’
+++++++++++++++


Leave a Reply