– ராஜகவி ராகில் –
நீர்க் குமிழியுடையாமல் அதனுள்ளே உனை
அழைத்துச் செல்வேன் பார்
பேரெழில் சிதையாமல் எனக்குள்ளே உனை
இழுத்துண்பேன் பார்
தேர்க் குடையாய்க் கார்மேகம் வரச் சொல்லி
உன் கைதான் பிடித்து நடப்பேன் நானடி – செல்லம்மா
தேநீர்க் குவளைக்குள் பேரெழில் தனை இறக்கி
உன் கண்ணால் குடித்துக் கிடப்பேன் நானடி

Leave a Reply