மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
நேசிப்பது நான் உன்னை !
நீ மொழிய மாட்டாயா நான் விழைவதை !
எனக்குத் தெரியும்,
உண்மை, அது காட்டப் போகுது
ஒரு போதும் நான் கவலை யுறக் கூடாது.
இப்போது நீ என்னவள் !
அந்த மகிழ்ச்சி என் கண்ணை நிரப்புது !
கால நேரத்தில் உனக்கதன்
காரணம் புரியும் !
கவலையா என்னை அழ வைக்கும் ?
இல்லை ! இல்லை !
என்னை அழ வைப்பது,
எனக்கி ருப்பது நீ ஒருத்தி என்பது !
நம்ப வில்லை நான், எனக்கு
நட்பு நேர்ந்து விட்டது.
நானினித் துயரடையேன் !
ஏனென்று கேள் !
நானு ரைப்பேன் உன்னை நேசிப்பதாய்,
எப்போதும் உன்னையே நினைத்து !


Leave a Reply