Tag: பெருவை பார்த்தசாரதி

  • தற்கொலை செய்யும் கனவுகள்..!

    பெருவை பார்த்தசாரதி

     

     

     

     

     

     

     

    கனவுகள் இரண்டும் தோழியாம்…அதிலொன்று

    …….கண்ணான மற்றொன்றிடம் “வீண்சவால்” விட்டதாம்..!

    கனவு பொய்த்தால் தற்கொலை செய்வேன்! யார்

    …….கனவிலுமினி வரவே மாட்டேனென சபதமிமிட்டதாம்.!

    அனவரதம் சபதம் வேண்டாம்! சகதோழியுரைத்தது

    …….ஆனமட்டும் சொல்லியும் அத்தோழி கேட்கவில்லை.!

    மனதிற்கிட்ட கட்டளைக் குட்பட்டு..மீண்டுமொரு

    …….சனனமெடுக்க வழியில்லாக் கனவையே கண்டதாம்.!

     

     

    அண்டத்தில் நிறைந்திருக்கும் ஊழல் அனைத்தும்

    …….அருகிவந்து முற்றிலும் அழிந்தொழிந்து விட்டதாம்.!

    பண்டத்தின் விலை யனைத்தும் குறைந்ததாலின்று

    …….பரந்துதிரிந்த பரதேசிகளும் பாருலகில் இல்லையாம்.!

    அண்டை அயலார் நாடுகளெல்லாம் ஒன்றுகூடியே

    …….ஓருலகம் ஓருயிர் ஓரினமென்றே கொண்டாடியதாம்.!

    துண்டுவேட்டி கரையிலாத தூயவெண்மை ஆடை

    …….தரித்திவ் வுலகனைத்தும் நிரம்பியதோர்க் கூட்டமாம்.!

     

     

    துண்டாக்கும் எல்லைக்கோடு பூகோளத்தில் இல்லை

    …….தொண்டாற்றும் மனமுடையீர் மட்டுமே நிறைத்ததாம்.!

    உண்டாக்கி அழிக்கும் அணுவாயுதமில்லை! இதுபோல

    …….கண்ட கனவெலாம் மெய்யாகாமல் பொய்யானதாம்.!

    கண்டகனவால் கொண்ட தென்னவோ சோகம்தான்

    …….கனவுக்கே பொறுக்கவில்லை! வாக்கும் தவறவில்லை.!

    கொண்டசவாலை மனதாரயேற்று தற்கொலை செய்து

    …….கொண்டதிலதன் தோழிக்கு மிகுந்த தாளாத்துயரமே.!

     

    =============================================================

    நன்றி தினமணி வெளியீடு:: 11 th March’2018

     

    நன்றி:: கூகிள் இமேஜ்

    Share
  • காவிரியின் கண்ணீர்..!

    பெருவை பார்த்தசாரதி

     

    கூடி விவசாயம் செய்வோர்க்கிங்கு இன்பமில்லை

    குடியரசு நாடான பெருமைமிகு நம்பாரதத்திலே..!

    வாடிச் சாவதெல்லாமிந்த வறுமை விவசாயிதான்

    வகையாய் வேறொர் தொழில்செய்ய வழியில்லை..!

    நாடியே எங்கள் வாழ்வெல்லாமொரு….நதியோரம்

    நெடிதுழைப்பவர் என்ப தாருக்கும் புரிவதில்லை..!

    கேடில்லை இனியுமக்கு என்றொரு சொல்லில்லை

    கடிதுலகை..பிரளயம் போலழிக்குமெம் கண்ணீரே..!

     

     

    தஞ்சையிலே பிறந்தது எங்களின் தலையெழுத்தா

    தப்போவென இப்போதும் நினைக்கத் தோன்றும்..!

    பிஞ்சிலே கருகிவிடும் நெற்கதிரே எங்களையும்

    பஞ்சைப் பரம்பரை யாக்கிவிடுமோ என்றேபயம்..!

    எஞ்சியிருந்த தென்னவோ நம்பிக்கை ஒன்றுதான்

    அதுவுமெம் நெஞ்சைப் பிளந்து விட்டதிப்போது..!

    கொஞ்சம் காத்திருந்தோம்….நல்லசேதி வருமென..

    காவிரி குளிர்வாள் நம் இதயத்துள்ளே..!

     

     

    பூவிரியும் சோலையும் நெல்வயலும் தழைத்தபல

    பழஞ்சரித்திரத்தைச் சொல்லும் காவிரி வரலாறு..!

    பாவிசைக்கும் பாவலனும் புலவனுமே நேசித்த

    காவிரிநதியைப் பங்கிடும் உரிமை ஆருக்குண்டு..?

    காவிரியை நம்பியேயெம் காலமெலாம் கழிந்தது

    காலத்துக்கும் அந்நதியே கதியெனக் கிடந்தோம்..!

    காவிரி அன்னையின் கண்ணீர்ப் பெருக்கெடுத்து

    காட்டாறாயின் இனியெம் கவலையெலாம் தீரும்..!

     

    ===============================================================

     

    நன்றி:: கலைமகள் வெளியீடு:: March’ 2018

     

     

     

     

    Share
  • கொஞ்சி விளையாடும் கோபம்!

    -பெருவை பார்த்தசாரதி

    மனதில் நினைவிலாத கனவுகள் நூறாயிரமதில்
    ……….மங்காத கனவாக மனதில் நீங்காததொன்றாம்!
    எனதருமைக் காதலியைக் காண்ப தென்னாள்
    ……….என்புருகிப் போனேன்! எண்ணூறு இரவாயின!
    உனதருமைக் கொஞ்சலால்..காரிகை உன்மேல்
    ……….உன்மத்தம் பிடிக்கும்! நடுநிசியில் நீவருவாய்!
    எனத்துடித்தே எழுவேன்! இன்புறு மென்மேல்
    ……….எங்கேயுன்? கொஞ்சி விளையாடும் கோபம்!

    மஞ்சள்பூசி மதிமயக்கு முன்முக வசீகரத்தால்
    ……….முழுமதியும் வெட்கி வெளிச்சம் தரமறுக்கும்!
    மஞ்சத்தில் கிடக்கும் கடிமலரும் வாடிவிடும்
    ……….மனமாறும் நிலையில் மறுபடிநீ ஏமாற்றாதே!
    வஞ்சி வருவாளென வருந்தியயென் விழிகள்
    ……….வஞ்சியாமல் அவள் விழியை எதிர்நோக்கும்!
    நெஞ்சம் கனக்கிறது! ஏலா இருளில் உந்தன்
    …….கொஞ்சி விளையாடும் கோபமதை லேசாக்கும்!

    சேவலும் குயிலும்கூடக் கூக்குரலில் கூவியது
    ……….காவலனும் தாழிட்ட கதவைத் தட்டுகின்றான்!
    ஆவலில்லை! அவசரத்தில் எழும் மனமில்லை
    ……….அவளின்று கனவில் வடிவெடுத்து வரவில்லை!
    பாவமில்லை! பரிதாபமில்லை!…பஞ்சணை கூட
    ……….‘பூவுலகப் பெண்டிரே இப்படித்தான்’ வினவியது!
    சாவகாசமாய் எழுந்தேன்! சாதகமில்லை..அவள்
    ……….கொஞ்சி விளையாடும் கோபத்தை ரசிப்பதற்கு!

    *****
    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::04-03-18

     

     

    Share
  • எங்கும் எதிலும்!

    -பெருவை பார்த்தசாரதி

    எந்திரசக்தி அறிந்திராத அந்தக் காலத்திலேயே
    …….எழும்பி நின்ற விண்ணைமுட்டும் கோபுரமுண்டு..!
    மந்திரசக்தியால் நல்மழையும் காற்றும் பெற்று
    …….மண்நீர்வளம் காத்ததாகவும் சரித்திரமும் உண்டு..!
    தந்திரசக்தி ஏதுமின்றியே விண்ணும் மண்ணும்
    …….தரும் கொடைக்குத்தான் காரணம் ஏதுமுண்டா..?
    இந்திரிய மைந்தையடக்கி வாழ்நாளை நீட்டிக்கும்
    …….எங்கும் எதிலும் ஓர்சக்தியிருப்பதை உணர்வீரா.!

    அண்டத்தில் அனைவரிடமும் மறைந் திருக்கும்
    …….அற்புத சக்தியறிய இறையருளும் வேண்டும்..!
    கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையை
    …….கருத்தாகக் கணபதியை வழிபட் டெழச்செய்வர்.!
    கொண்டவற்றை வைத்துக் கொண்டு குவலயமே
    …….கொண்டாடும் சாதனை ஆக்குமோர் சக்திதான்.!
    உண்டதெலாம் இரைப்பையுனுள் செல்வது முதல்
    …….எங்கும் எதிலுமோர் உந்துசக்தி ஒளிந்திருக்கும்..!

    ஆயகலைகள் அறுபத்து நான்கையும் அறிகின்ற
    …….ஆவி பொருள் தேகமூன்றும் கொடுத்தவனவனே.!
    மாயசக்தியாய்த் தாயின் கருப்பையில் கருவாகும்
    …….மகத்தான உயிருக்கு உருக் கொடுப்பவனவனே.!
    நாயகனாய் நின்றிவ் வையத்து வாழுமுயிர்களின்
    …….நெஞ்சத்தினுள் நண்ணுகின்ற நின்னருள் வடிவே.!
    மாயவனாக மறைந்து மண்தலமும் விண்தலமும்
    …….எங்கும் எதிலும் நிறைகின்ற மறைப் பொருளே.!

    *****

    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::25-02-18
    நன்றி:: கூகிள் இமேஜ்

     

     

    Share
  • அந்நாளே திருநாள்!

    -பெருவை பார்த்தசாரதி

    எண்ணும் நல்மனத்தினுள் நற் சிந்தனையும்
    ……..எழுவது நின்று அழுக்காற்றால் சீர்கெட்டது..!
    உண்ணும் உணவில் கலப்படம் மிகுந்ததால்
    ……..உண்ட நம்முடலும் நோயால் கெட்டழிகிறது..!
    கொண்ட வாழ்வில் பேராசையால் குறிதவறிய
    ……..குறிக்கோளை மீட்டெடுப்பது எந் நாளோ..?
    மண்ணியல் வளம் மறைந்ததெலாம் மீண்டும்
    ……..மாறும்நிலை நமக்கு..அந்நாளே திருநாளாம்..!

    பாயும் ஏவுகணை கொண்டு பயமுறுத்துவார்
    ……..பக்கத்து நாடாயிருந்தும் பகையே கொள்வார்..!
    யுதமேந்திய கப்பலைக் கடலில் நிறுத்துவார்
    ……..அண்டை நாடுகளைக் குலைநடுங்க வைப்பார்..!
    தாயும் குழந்தையும் தவித்திருக்கும் போதில்
    ……..தன்கை யெறிகுண்டை வீசிக்கலகம் செய்வார்..!
    வாயும்முகமும் துணியால் மூடிய கயவரின்தீய
    ……..வெண்ணம்..! மாறும் அந்நாளே திருநாளாம்..!

    நடமாடும் தெய்வமாம் ஞானியரும் தேவரும்
    ……..நாளும் தவமிருந்தாரன்று பொதுநலம் கருதி..!
    உடலாலும் உள்ளத்தாலும் நாட்டுநலன் மீது
    ……..உறுதிபூண்ட நல்லோரும் பின்னர் தோன்றினர்..!
    இடவசதி பொருள்வசதி இல்லாத ஏழைக்கு
    ……..ஈயும் செயலையே எந்நாளும் செய்தனரவர்..!
    கடவுளாக இச்செயலனைத்தும் தன் மனத்துளே
    ……..காணும் அன்பர்க்கு அந்நாளே திருநாளாம்..!

    *****
    நன்றி:: தினமணி கவிதைமணி:: 17-02-18
    நன்றி:: கூகிள் இமேஜ்

     

    Share
  • தனிமையோடு பேசுங்கள்..!

     

    பெருவை பார்த்தசாரதி

    ==============================

    C2TQmRJWgAAlGl1

    மனிதப்பிறவி என்பது அரிதாகும் அதைவிடவும்..

    …….மனத்திலெழும் சிந்தனா சக்தியென்பது அற்புதமாம்.!

    கனியுமாமங்கே கருத்துடன் செறியும் எண்ணம்..

    …….காலத்தேயது வெளிப்படும் காதுக்கினிய பேச்சாக.!

    இனியசொல்லே இல்லாமல் இடைவிடாமல் பேசும்..

    …….இயல்புள்ள மனிதருமிங்கே உண்டு இவர்தவிர்த்து.!

    தனிமையிலே பேசினால்நம் தன்னிலை அறியலாம்..

    …….தக்கதோர் இடமதற்கு பொருத்தமா யமையவேணும்.!

     

     

    முனிவனும் யோகியும் முற்றுமெதையும் துறந்தாலும்..

    …….தனிமையில் சிந்தித்ததால் தன்னிகரற்று விளங்கினர்.!

    மனித வளமென்று சொல்வதெல்லாம் எதைவைத்து..

    …….மனிதரின் மனதிலெழுமுயர் எண்ணங்கள் வைத்தே.!

    பனிப்படலம் விலகவங்கு பகலவன் தோன்றியது..

    …….போலேநம் மனவழுக்ககல நற்சிந்தனை வேண்டும்.!

    இனியவை நாற்பது இன்னாநாற்பதெனும் காவியமும்..

    …….இன்புற இறுதிநிலையென இதைத்தான் இயம்பியது.!

     

     

    அண்டசராசரத்தில் அனுதினம் ஆயிரம் நிகழ்வுகள்..

    …….ஆண்டவனை அடிபணிய ஆங்கோர் சந்தர்ப்பமாம்.!

    பண்டிகை விழாவெனில் மண்டபத்தில் கூடிநின்று..

    …….பலருடன் பேசும்மனம் விசாலமடைய வழியதுவாம்.!

    கொண்டாடும் இடத்தினிலே கூடியிருக்கும் பலரும்..

    …….கொத்துமலர் கொண்டு வாழ்த்திப்பேச நலமுண்டாம்.!

    கண்டவருடன் கண்டதையும் பேசாமல் ஒதுங்கித்..

    …….தனிமையிலே பேசித்தன் சுகத்தை காப்போருமுண்டு.!

     

     

    தன்னையறியவே தனிமையில் பேசினர் சித்தர்கள்..

    …….தன்னுடலழகும் தகும் புறத்தோற்றமும் தவிர்த்தார்.!

    தன்சிந்தையை தன்சுற்றத்தை தன்னியல்பை நீக்கி..

    …….தனிமைத்தவம் கொண்டார்தன் ஐம்புலன்க ளடக்க.!

    தன்வாழ்வை இயற்கை யோடிணைத்து வித்தகரானார்..

    …….தமிழிலக்கியம் செழிக்கத் தன்னையு மர்ப்பணித்தார்.!

    பின்னரிந்த உண்மையறியாத மாந்தரும்–சித்தரைப்..

    …….பித்தனென்றே பேசினர்..வாழ்வியல் தத்துவமறியா.!

    ==============================================================

    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::12-02-18

    நன்றி:: கூகிள் இமேஜ்

    Share
  • வஞ்சம் செய்வாரோடு..!

     

    imgonline-com

     

    வஞ்சகிகூனியும் வஞ்சகசகுனியும் செய்ததாகப் பல..

    …….தந்திரமதைச் சொல்கிறது ராமகாதையும் மாபாரதமும்.!

    வஞ்சகத்திற் கெப்போது மிப்போதும் குறைவில்லை..

    …….வாகாகயதைக் கையாளத் தெரிந்தால் துன்பமில்லை.!

    பஞ்ச பாண்டவருக்கு துரோகமிழைத்த துரியோதனன்..

    …….பாரதப்போரிலே படுதோல்வி யடைந்தது எதனாலே.!

    அஞ்சாநெஞ்சம் கொண்ட சிங்கமாமந்த கர்ணனை..

    …….ஆட்டிவைத்து அழவைத்ததும் வஞ்சச் செயல்தானே.!

     

     

    லஞ்சமென்ப தெங்குமெதிலும் தலை விரித்தாடுமதில்..

    …….லாவகமாய்ச் சதித்திட்டம் பலவுமங்கே அரங்கேறும்.!

    கஞ்சியோ கூழோ நீராகாரமோ உண்டுவாழ்பவரைக்..

    …….கூடவாழ்விலே கெடவைக்கும் செயலாகும் வஞ்சமாம்.!

    பிஞ்சிலே பழுத்தகாதல் மஞ்சத்தில் முடியாதுபோவதும்..

    …….பாஞ்சாலங்குறிச்சி மன்னனைத் தூக்கிலிட்டது மதுவே.!

    கிஞ்சித்தும் யோசியாது வஞ்சம் செய்வோரவரே..

    …….கொஞ்சமும் யோசிக்கார்!துரோகமெனவும் நினையார்.!

     

     

     

    நெஞ்சத்தினிலே இதயத்தினிலே எத்துணை நாள்நாம்..

    …….நீதியநீதியைப் பிரித்துப் பார்க்கக் காக்கவேண்டும்.!

    வஞ்சகமில்லாத மனிதராகயினி மறுபிறப் பிலாவது..

    …….வாழ சண்டாளர்துணை நீங்கயிறையருள் வேண்டும்.!

    துஞ்சாத மனநிலையைத் தந்தருளயென் முன்வினைச்..

    …….செய்ததீச்செயல் யாவுமகற்ற உன்துணை வேண்டும்.!

    பஞ்சம்பசி பட்டினியின்றி நெஞ்சிற் கருணையொடு..

    …….பாருலகைப் படைக்க உன்னைத் தஞ்சமடைகிறேன்.!

    =============================================================

    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::01-02-2018

     

    நன்றி:: கூகிள் இமேஜ்

    Share
  • நல்லதோர் வீணை..!

    நல்லதோர்

     

    நல்வளமாம் நீர்வளமும் நிலவளமும் நிறைந்ததிருநாட்டில்..

    ……….நீதிவழுவாதோர் நாட்டுக்கு நல்லதெனப் பலசொன்னார்.!

    நல்லெண்ணம் கொண்டஞானியரும் முனிவரும் உதித்தநம்..

    ……….நானிலத்தில் நாட்டுப்பற்றுக்கு இனியதிகப் பஞ்சம்தான்.!

    வல்லரசாகும் நம்நாடுமென இளைஞரின் இளநெஞ்சினில்..

    ……….வல்லமை யெனும் விதையன்றே விதைத்தானொருவன்.!

    வெல்லமுடியா மகாகவியாமவன்!கேட்டான் சிவசக்தியிடம்..

    ……….நல்லதோர் வீணைசெய்து புழுதியில் எறியலாமாவென.?

     

     

    நல்லாட்சி நல்குதற்கே நாட்டுப்பற்றுடன் நாளுமுழைத்தார்..

    ……….கல்லுடைத்துச் செக்கிழைத்தார் சிறைக்கும் சென்றார் .!

    பொல்லாத சொப்பனமின்று கண்டாற்போல்நாம் பெற்றது..

    ……….எல்லாமும் மீண்டுமிழக்கும் நாளுமினி வந்துவிடுமோ.?

    சொல்லாட்சி செய்கின்ற சொற்பெருக்கராலே மக்களுக்குச்..

    ……….சேவையொன்று மில்லை நற்சிந்தனையும் இல்லையாம்.!

    பல்லுயிரும் பெறுகின்ற பரமசுகமந்த இயற்கைவளத்தைப்..

    ……….பலருமொன்றாகச் சுரண்ட நினைப்பதுதான் தகுமோ.!

     

     

    தீரன்வீரனென்றும் தியாகியென..தனக்குத்தானேச் சொல்லி..

    ……….தன்பெயருடன் இணைத்துக் கொள்வார் சுயநலவாதிகள்.!

    காரணங்கள் பலசொல்லி சிந்தைமழுங்கும் செயல்தனில்..

    ……….கட்டிளங்காளையரை..கன்னியரைத் தன்பக்கம் இழுப்பர்.!

    பீரங்கி முழங்கப் பெற்றபெருஞ்சுதந்திரம் சீர்குலையும்படி..

    ……….பாரம்பரியமழிக்கவே முயல்வார் நயவஞ்சகத்தார் பலர்.!

    வீரத்தையெழச் செய்யும்தம் பாட்டினால் மீண்டுமொரு..

    ……….வண்ணக் கொடியேந்த பாரதிபோலின்னும் பலர்தேவை.!

     

     

    நல்லதோர் வீணையின் நரம்பிலெழும் நாதம்போல்..

    ……….நம் மனதிலெழும் நல்லெண்ணமாமதை மீட்கவேண்டும்.!

    புல்வனத்திலே தோன்றியதொரு புதியமலரைப் போலவே..

    ……….பாருலகத்தில் பாரதத்தின் தனித்தன்மை ஓங்கிடவேணும்.!

    சொல்லிலேமயங்கிச் சொக்கிநின்று கேடுறும் வாழ்வுநீக்கி..

    ……….செல்லும் நல்லியலார்வழி தோன்றவகை செய்யவேணும்.!

    வல்லுனர்கள்நல் வாழ்வுக்கு வழிவகுத்த வரையரையை..

    ……….வகையாய்க் கற்பதற்கே கல்வியறிவு பெற்றிடல்வேணும்.!

     

    ====================================================================

    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::28-01-18

    நன்றி:: கூகிள் இமேஜ்.

     

     

     

    Share
  • கொண்டாடப்படும் தினங்கள்!

    -பெருவை பார்த்தசாரதி

    Time-Management-Tips

    நாட்களிலே  நல்லதுகெட்டதெது  என்பதொரு கேள்வியே.?
    ……….நாட்களைத்துமே கொண்டாட வேண்டிய  நற்தினங்களே.!
    நாட்காட்டியில்  நாளொன்றின்  தாளைநாம்  கிழிக்கும்போது..
    ……….நம்வாழ்வில்  நாளொன்று  கழிவதைநாம்  அறியவேண்டும்.!
    ஆட்டம்காணா  வாழ்வமைய  ஆன்றோர்  வகுத்துவைத்த..
    ……….இருங்கலையதைக்  கற்றுத்தேற  அரும்பாடு படவேண்டும்.!
    கோட்பாடுடன்  குறிக்கோளையும்  நாம்  கொண்டுவிட்டால்..
    ……….கோள்கள் கொடுக்கும்  கொடுமைகூட  விலகிவழிவிடும்.!

    வளைந்தாலும் நெளிந்தாலும் வீழ்ந்தாலும் தாழ்ந்தாலும்..
    ……….நாளைசெய்வோம்  எனவொரு  எண்ணம் எழவேண்டாம்.!
    இளைஞனே  நற்செயலைத்  திட்டமிடு! அச்செயலில்..
    ……….இறங்கியபின்  நாட்டமுடன்  நல்கியதை முடிக்கப்பழகு.!
    முளைக்கும் விதைக்கு மண்ணைப்பிளக்கும் வீரியமுண்டு..
    ……….மூளையில் உருவாகும் சிந்தனைக்குமொரு சக்தியுமுண்டு.!
    களைகளும் தடைகளும் தடங்கலின்றி தழைத்துவருமாம்..
    ……….தாங்கியதை  எதிர்ப்பின்  எல்லாதினமும் கொண்டாட்டமே.!

    ஒருதினத்தில்  இல்லையெனில்  மறுதினத்தில்  வந்துவிடும்..
    ……….ஓர்விழாவும்  பண்டிகையும்!…உலகமுழுதுமிது இயற்கை.!
    உருவமிலா  நிலையிலவன்  உலகத்தில்  நிறைந்திருப்பான்..
    ……….உருகும்  பக்தர்கள்  இறைஞ்சவெங்கும்  இரைந்திருப்பான்.!
    அருட்கொடை  யோனவன்  ஆசிபெற  அண்டத்திலுள்ள..
    ……….ஆலயமுழுதும்  அரங்கேறும்  அன்றாடம்  கொண்டாட்டம்.!
    இருளகற்றி  வாழ்வில்  வெளிச்சம்பெறும்  வரம்வேண்ட..
    ……….இறைவனைக்  கொண்டாடும்  தினத்திற்கே  பஞ்சமில்லை.!

    கொண்டாட  வேண்டியநல்  வாழ்வையும்  இழந்துவிட்டு..
    ……….திண்டாடும்  மாந்தர்களும்  இவ்வுலகில்  இருக்கிறார்கள்.!
    தண்டச்சோறு  தின்றுவிட்டுத்  திண்ணைக்கதை பேசியே..
    ……….தினமொரு  நாளைவீணே  கழித்தவர்கள்  இருக்கிறார்கள்.!
    துண்டறிக்கை  விடும்சினிமா  அரசியலின்  பின்னலைந்து..
    ……….தொலைத்ததைத்  திரும்பப்பெற  நினைப்பவரும் உண்டு.!
    கண்டறிந்து  கேட்டறிந்து  கற்றறிவுபெறு  தற்கிவர்கள்- நம்..
    ……….தண்டமிழிழைக் கொண்டாட  வேண்டும்  தினமுமதை.!

    ******

    நன்றி:: தினமணி  கவிதைமணி

    நன்றி:: கூகிள் இமேஜ்

     

     

    Share
  • தூரத்து வெளிச்சம்..!

    பெருவை பார்த்தசாரதி

    moon (1)

    ஆரம்பமாதிமூலம் ரிஷிமூலநதிமூலம் உண்டென்பர் ஞானியர்..

    ……….அதையறிய முனைந்தால் உலகிலெதுவுமிலை என்பதேயுண்மை.!

    ஈரடிப்புலவன் அய்யன்வள்ளுவனும் இதைத்தான் இயம்பினான்..

    ……….அகிலத்தையு மோர்வரியில் “ஆதிபகவன் முதற்றேயுலகென்றான்”

    தூரத்தில் நின்றுநிலையாய் வெளிச்சம்தருமந்த வெண்ணிலவும்..

    ……….துருவநட்சத்திரமும் விரிகதிரும்…நிலையாயது தோன்றாவிடின்.?

    பாரஞ்சுமக்கும் புவியில்தான் நுண்ணுயிர்கள் பிறக்கவழியுண்டா..

    ……….பார்புகழும் விஞ்ஞானியிடம் இதற்கொருபதிலும் உண்டாசொல்.?

     

    வருடத்திற் கொருமுறைதான் தோன்றுமாமந்த வானவேடிக்கை..

    ……….வருடமோராயிரம் கடந்தாலுமின்றுமது புரியாததொரு புதிராகும்.!

    பெருமக்கள் பெருந்திரளாயொருங்கே ஓரிடத்தில் கூடியிருப்பர்..

    ……….பேருலகத்தாரும் காலம்கருதாதங்கே வெகுநேரம் காத்திருப்பர்.!

    ஒருநொடியில் தோன்றுமதைக் கண்டுலகமனைத்துமே வியக்கும்..

    ……….ஓரொளியாய்ப் மகரஜோதியாய்த் தோன்றிமறையும் அதிசயமாம்.!

    அருகிலிருக்கும் ஒளியானது புறக்கண்ணுக்குத்தான் வழிகாட்டும்..

    ……….ஆங்கேதூரத்து வெளிச்சமோ நம்மகக்கண்ணுக்கே அறிவூட்டும்.!

     

    குருவென்பவன் மிகஅவசியம் கலையொன்றைக் கசடறப்பயில..

    ……….குருசீடன் உறவுக்குள்ளே ஒருமித்தகருத்தும் இருக்கவேணும்.!

    இருளைவிலக்கும் தன்மைகொண்ட ஒளிபோல உத்தமர்பலரும்..

    ……….இரும்பு மனமுடனேநம் மனயிருளையகற்றவும் முனைந்தனராம்.!

    பெருநிலத்தவதரித்த யோகியும் முனிவனுமிதை அறியுவண்ணம்..

    ……….பெருங்காப்பியமாய் வடித்துவைத்துநாம் வாழவழி வகுத்தனராம்.!

    கருத்துமிகு இதிகாசமும்காப்பியமும் கன்னல்தமிழை வளர்க்கும்..

    ……….காரிருளகற்றும் தூரத்துநிலா வெளிச்சம்போல் வாழவழிகாட்டும்.!

     

     

    Share
  • யுத்தம் செய்யும் கண்கள்..!

     

    ht1396

    =====================

     

    மொத்தநம் அங்கமும் பொய்யுடலில் பொழித்திருப்பின்..

    ……….ஒத்தயிரண்டு கண்களில்லா உருவத்தை ஏற்கமுடியுமா.?

    அத்துணை படைப்புக்குமற்புத உறுப்புண்டாம் அதில்..

    ……….அழகுமிகும் கண்களுக்கே..! அங்கத்தில் முதலிடமாம்.!

    தத்துவமாய்த் தெரிகின்றதோர் ஓவியத்தை உயிரூட்டத்..

    ……….தகும் சான்றொன்று உண்டென்றாலது கண்ணழகேயாம்.!

    வித்தைசெயும் வித்தகன்தன் விளையாட்டை விடுமுன்..

    ……….விழிகளுக் கங்கேயோர் விழிப்பான வேலையுண்டாம்.!

     

     

     

    முத்துக்கோர்த்த பற்களொடு முல்லையிதழ் சிரிப்பொடு..

    ……….மமதைமிகு கன்னியொருத்தி யெதிர்வந்தால்!.காளையர்..

    ரத்தநாளமும் கொதிக்குமவர் கண்களும் யுத்தம்செய்யும்..

    ……….முத்திநெறி பக்தியெல்லாம் பஞ்சுபோலப் பறந்தோடிடும்.!

    அத்தியாயம்போல…காதல்சரிதத் தையங்கே துவக்கும்..

    ……….அத்திரப் பிரயோகம்போல காதலுணர்வு ஆர்ப்பரிக்கும்.!

    யுத்தம்செயும் யுத்தவீரனின் கூர்வாளும் சிவந்தவிழியும்..

    ……….யுத்தகளம் நோக்காதந்த யுவதியின்கண் சாய்ந்துவிடும்.!

     

     

     

    உறங்காமல் கண்விழித்து..கண்ணழகி மனைவியின்கண்..

    ……….ஒளிகாக்க உச்சிவெயிலில் குடைபிடித்தான் ஒர்மறவன்.!

    உறங்காவில்லி தாசனெனும் உத்தமவீரனாம்! ஒப்பிலாத..

    ……….உறையூர் மன்னன்மெய் காப்பாளனென ஊரரிவான்.!

    உறவாடுமுற்ற துணையாமவன் மனைவியின் கண்ணே..

    ……….உலகுபோற்றும் பேரழகென ஊரெங்கும் உலாவருவான்.!

    துறவறம்பூண்ட இராமனுச முனிவனுமிதைப் பார்த்தான்..

    ……….திறன்வீரனிடம்…இதைவிடப் பேரழகு? உண்டென்றான்.!

     

     

     

    யுத்தம்செயும் கண்களில் கனல்நெருப்பைக் காணும்படி..

    ……….வெறித்தவீரனும் தன்வெறுப்பை முனிமீது யுமிழ்ந்தான்.!

    மொத்தயுலகமும் திரண்டு வந்தாலுமென் மனைவியின்..

    ……….முத்தான அவள்கண்ணே அழகென்றான்!வழக்காடினான்.!

    மெத்தனத்தால் மெய்யறியாத மெய்க்காப் பானவனுக்கு..

    ……….மெதுவாய்ப் புரியவைத்தார்! பெரும்பூதூர் மாமுனிமகான்.!

    அத்துணைபேரும் அறிந்த அழகான கண்ணென்றாலது..

    ……….அத்தன் அரங்கனுடைதென அறியவைத்தார் உலகுக்கே.!

     

    =================================================

    நன்றி கவிதைமணி வெளியீடு::14-01-18

    நன்றி:: கூகிள் இமேஜ்

    Share
  • பொங்கல் விழா – 2018

    வல்லமை ஆசிரியர் குழுவுக்கும், வல்லமை உறுப்பினர்களுக்கும், வல்லமை வாசகர்களுக்கும்… என் அகமகிழ்ந்த பொங்கல் வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

     

    pongal

    பாண்டவர்கள் புகழுடனாண்ட பழம்பெரும் நாடு..
    ……….பண்டிகைக்கிங்கே பஞ்சமில்லை பலவு முண்டாம்.!

    பாண்டியனும் சேரசோழனும் பார்த்துக் களித்தவிழா..
    ……….பாரத்தின் பெருமை சொல்லும் விழாவிலொன்றாம்.!.

    வேண்டும் வேண்டாமை எனுமெண்ணம் இலாமல்..
    ……….வேற்றுமை சிறிதுமிலா உதட்டிலன்று உவகையெழும்.!.

    ஆண்டுதோறும் நிறையும் அளவிலா மகிழ்ச்சியும்..
    ……….அனைத்துயிரும் இன்புற்றிருக்கும் பொங்கல் விழா.!

    வீண்போக்கு போக்காமை வீடெலாம் சுத்தம்செய்து..
    ……….விளைந்த தானியத்தால் விருந்தினரை உபசரிப்பர்.!.

    ஆண்பெண் எனும்பாகுபாடு இல்லா இனியவிழா..
    ……….அளவில்லாமல் தானம்செயும் எண்ணமெழும் விழா.!.

    மீண்டும் மீண்டும் வரவேண்டுமிப் பொங்கல் விழா..
    ……….மாண்டாலும் பெருமை சொல்லுமவ் மஞ்சுவிரட்டு.!.

    யாண்டும் நிலையாய் பொங்கலின் புகழோங்கவே..
    ……….ஈண்டிய பெருந்தகையும் பெருமையுடன் வாழ்த்துவர்.!

     

     

    Share
  • வீணையின் நாதம்..!

     

    120

    ======================

     

    பல்லவியே பாடலில் முதல்நிலையாய் முகம்காட்டும்..

    ……….பக்கவாத்யமும் அதனுடன் சேர்ந்தாலதுவே இன்னிசை.!

    உல்லாசமாய் ஊதுகின்ற நெடுங்குழல்நாத ஸ்வரத்துடன்..

    ……….உருளைத்தவிலும் மேளமுமொருங்கே சேர்மினது கச்சேரி.!

    புல்லாங்குழலெழுங் காற்றும்…பொங்கியெழும் அருவிப்..

    ……….புனலெழுப்பும் நீரோசையும் நமக்கொரு மெல்லிசையே.!

    வில்லுமிழ்ந்து சீறிப்பாயும் கூரான அம்பினொலியும்..

    ……….வீணையின் நாதம்போல காதுக்கினிய இசையொலியாம்.!

     

     

    நெல்கதிர்கள் தலைவணங்கி யசைந்தாடி இசைக்கும்போது..

    ……….நற்பாவலரும் கவிஞரும் பாடுவராம் முல்லைப்பண்ணில்.!

    பல்முளைக்காப் பாலகன்தன் பவளவாய்த் திறந்ததன்..

    ……….பல்வித மழலைப்பேச்சே பெற்றதாய்க்கு இன்னிசையாம்.!

    மெல்லிய இரட்டைக் குழல்மகுடியின் மயக்குமொலிக்கு..

    ……….மகாதேவன் முடிமேல் தவழும்நல்ல பாம்புமேயடங்கும்.!

    வல்லமை பொருந்திய இராவணனின் பண்ணிசையான..

    ……….வீணையின் நாதவொலிக்கந்த ஈஸ்வரனே மகிழ்ந்தானே.!

     

     

    பரந்த பசுமைக்காட்டில் குலைநடுங்கும் குரல்கேட்டு..

    ……….பலவிதவிலங்கும் பதுங்குகுழி தேடுமதுவே “சிங்கநாதம்”!

    பரமாத்மா பகவான் கிருஷ்ணனெழுப்பிய நாதமாம்..

    ……….பாரதத்போர் வீரரைக் கலக்கியததுவே “சங்கொலிநாதம்”!

    பரமனைத் திருப்திப்படுத்த முனிவர்களும் யோகிகளும்..

    ……….பல்குரலில் இனிதாய்வரும் நான்மறையே “வேதநாதம்”!

    சரஸ்வதியின் திருக்கரத்தில் வீற்றிருக்கும் வாத்தியஒலியே..

    ……….சகலஜீவியும் கேட்டறிவு பெறுமற்புத “வீணையின்நாதம்”!

    ==================================================================

    நன்றி:: தினமணி கவிதைமணி::07-01-18

    நன்றி:: கூகிள் இமேஜ்.

    Share
  • நினைவுப் பெட்டகம்-2017

    பெருவை பார்த்தசாரதி

    download (53)

     

     

    அனைத்துலக நிகழ்ச்சிகளும் ஆடி அமருமிடமாம்..

    ……….அருமைப் பெட்டகமதுவே நம்மரிய நினைவாகும்.!

    அனைவரிடமும் இருக்குமிந்த அரும் பொக்கிஷம்..

    ……….அதி லமிழ்ந்திருக்கும் ஆயிரமாயிரம் இன்பதுன்பம்.!

    எனையது உறக்கத்தில் தட்டியெழுப்பும் அதுநாம்..

    ……….ஈட்டிய சாதனைகளும் கூடவேசில சோதனையும்.!

    சுனையாய் மனதிலென்றும் மகிழ்வுடனே சுழலுவது..

    ……….சீறிப்பாய்ந்த செயற்கைக் கோளதற்கே முதலிடம்.!

     

     

    தினைவிளையும் புலமதில் வினைவிதைத்த செயல்..

    ……….தனைப்போல் துயரமுமப் பெட்டகத்துள் உண்டு.!

    பனைமரம் வேரொடு சாய்வதைப்போல்…சாய்த்து..

    ……….படுகுழி பறிக்கும்வரியும் வட்டியும்.!…குருதியில்

    நனைந்து நாடுகாக்கும் வீரரின் உயிர்த்தியாகமும்..

    ……….நாற்புரமும் நாளும் நடந்தேறிய சோகக்கதைகள்.!

    நினைவகலா மல்லுக்கட்டிய சல்லிக்கட்டு சடுத்தம்..

    ……….நினைவில் கடலலைபோல தினமும் புதைந்தெழும்.!

     

     

    கருங்குயிலின் முட்டையோ காக்கை கூட்டிலதுபோல..

    ……….கருப்புப்பணம் ஒளிந்து கொண்டது அயல்நாட்டில்.!

    கருடப் பார்வையால் கண்விழித்துப் பார்த்தாலும்..

    ……….கடந்துவிடு மெல்லை தாண்டிய தீவிரவாதச்செயல்.!

    பெருவினை புரிந்தபுயலும் இயற்கைப் பேரிடரும்..

    ……….திரும்பிநமைப் பார்க்கச் சொல்லும் விரும்பாமல்.!

    வருங்காலத்தில் கடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும்..

    ……….வரிசையாய் இடம்பெறும் நினைவுப் பெட்டகத்தில்.!

     

     

    பதவியிலே அமர்வதற்குப் பலவித போட்டிகளாம்..

    ……….பந்தாடும் அரசியலில் அரங்கேறும் சூழ்ச்சிகளாம்.!

    உதவிடும் மனப்பான்மை இல்லாத உள்மாநிலத்துள்..

    ……….உப்புக்கடலில் வீணேசேரும் நீருக்கு அடிதடியாம்.!

    எதற்கிந்த ஏவுகணை என்பதைநாம் அறியுமுன்னே..

    ……….ஏனிந்த உலகையழிக்கும் அணுவாயுத அச்சுறுத்தல்.!

    பதற்றமே நிறைந்தயிந்தப் பாருலகு வாழ்க்கையில்..

    ……….பதியுமாம் பல்நிகழ்வுகள் நினைவில்….பெட்டகமாக.!

    ==============================================

    நன்றி:: தினமணி வெளியீடு:: 30-12-17

    நன்றி:: கூகிள் இமேஜ்

    ============

    Share
  • மனத்திற்கிட்ட கட்டளை..?

     

    பெருவை பார்த்தசாரதி

    ====================

     

     

    மனத்திற்கிட்ட கட்டளைகள் மலைபோல் குவிந்தாலும்..

    ……….மனமதையேற்று மகிழ்வுடன் செய்வததன் கடமையாம்.!

    மனவலிமை பெற்றிட வேண்டுமென்றால் அடங்காத..

    ……….மனப்பேயையொரு கட்டுக்குள் வைக்க வேண்டுமாம்.!

    மனமொரு சேவகனெனில் மூளையதன் அரசனாகும்..

    ……….மனம்மூளை இரண்டும் ஒன்றுவதே இயற்கைவிதியாம்.!

    மனப்புரவி அடக்குதற்கு மனக்கடிவாளம் அவசியம்..

    ……….மனம்போன போக்கில் மனிதன் ஓடாவழியெதுவாம்.?

     

    வனவாசம் செய்தாலும் மனம்நோகும் செயலைத்தன்..

    ……….வசமாகாது திண்ணம் கொண்டவர்களே பாண்டவர்கள்.!

    தனக்கெதிரே தன்மனைவி பாஞ்சாலியாடை யுரித்ததும்..

    ……….தமக்கிட்ட கட்டளைக்குக் கீழ்ப்படிந்து மாண்புகாத்தார்.!

    தனஞ்செயனின் மனதில் பெருங்குழப்பம் இருந்தபோதும்..

    ……….தமக்கெதிர் வந்தவரை வில்லால் தகர்த்ததுமெதனால்.!

    தனக்குநிகர் தானேயென ஆனவர்கள் அனைவருமே..

    ……….தன்மனத்திற்கிட்ட கட்டளையைத் தவறாமல் செய்தவரே.!

     

    மந்தையாடுகள் குவிந்ததைப் போலெங்கும் போரிலே..

    ……….மாவீரர்கள் அம்படிபட்டுக் கிடந்தபாரதப் போர்க்களம்.!

    சிந்தையிலே சிகரமாக கொடைக்குணம் கொண்டவனும்..

    ……….சீறிப்பாய்ந்த கூரம்பால் சிறகொடிந்த பறவையானான்.!

    அந்தப்போதிலும் அந்தணனாக வந்து தானம்கேட்ட..

    ……….இந்திரனுக்குத் தானமீயாதே? தந்தையும் எச்சரித்தான்.!

    தந்தைதன் மனத்திற்கிட்ட கட்டளையேற்க மறுத்தகர்ணன்..

    ……….தர்மத்தையே குருதியில் தாரைவார்த்துக் கொடுத்தான்.!

     

    பல்வேறருஞ் செயலுக்கும் சாதனைக்கும் புகழுக்கும்..

    ……….பலமான மூளையும் மனதுமே மூலக்காரணமாகும்.!

    வில்லம்பு தொடுக்கும் வேடன்கண் வேற்றுநோக்கின்..

    ……….வைத்தகுறியும் தப்பிவிடும்!..வனவிலங்கும் நழுவிவிடும்.!

    சொல்லடுக்கும் கவிஞனின் சிந்தனைகள் சிதறினாலும்..

    ……….சொற்களங்கே உருவாகாது?சொல்லவந்ததும் புரியாது.?

    மெல்லநம் மனத்திற்கிட்ட நற்கட்டளை யாவையுமறுப்பு

    ……….மில்லாச் செய்யின்?..செயல்களனைத்தும் சாதனையாம்.!

     

    ======================================================

    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::

    நன்றி:: கூகிள் இமேஜ்

    Share