Tag: பெருவை பார்த்தசாரதி

  • பெண் எனும் பிரபஞ்சம்..!

    பெருவை பார்த்தசாரதி

    விண்ணில் காணும் கார்மேகத்தையும் வெண்ணிலவையும்..
    வியந்து நோக்கும்போது என்னுளவளே தெரிகின்றாள்.!
    மண்ணில் உலவும் அனைத்துயிரிலும் அன்புணர்வுகள்..
    மலர்வதைப் பார்க்கின்றேன்!….அவளின் கருத்தரிப்பில்.!
    தண்ணீரில் மிதக்கும்தாமரையும் அல்லியுமலர்வது அவளின்..
    தளிர்நடை கண்டபிறகுதானென கவிதையும் பாடுவேன்.!
    மண்டலத்தில் மாறாத வாசமனைத்துமவள் சொந்தமோ?.
    பெண்ணவள் பிரபஞ்ச மனைத்திலும் நிறைந்திருப்பாள்.!

    மண்ணிலவதரித்த அழகான மனுஷியர்களங்கே கூடுவார்..
    மானுடர் நிறையுமேடையும் அண்டமும் இதைக்காணும்.!
    பெண்தானுலகிலேயே அழகுப் பண்டமெனக் கூடிப்பேசுவர்..
    பொன்னுமுத்துமணியாப் பேரழகி யாரெனறிய முனைவர்.!
    பெண்ணுக்குள் மறைந்திருக்கும் ரகசியத்தை? அழகியர்தன்..
    பேச்சில் நடையழகில் நாடுபுகழச்செய்வர்!.நடப்புவருடம்.!
    பெண்ணெனும் பிரபஞ்சழகியைப் பெற்றெடுத்த பெருமை..
    பாரதமென!..பாருலகு அறியவைத்தார் மானுஷிசில்லார்.!

    இரும்புமனுஷி எனவெப்போதும் இவரைப் புகழுவார்கள்..
    இழந்தும் இன்றுவரை இவர்தான் பெண்சிங்கமென்பார்.!
    பெரும்பேரன்பு இவர்மீது கொண்டவர்கள் ஏழரைகோடி..
    பெற்றவளைவிட்டு இவரையே தாயாகக் கொண்டார்கள்.!
    அருளும் அன்னதானமெனும் அருங்கொடை தந்ததால்..
    அலையுமேழையர் வயிற்றுப் பசியறியா உணர்வுற்றனர்.!
    பருவமங்கைமுதல் பிரகாசித்து பரலோகம் செல்லும்வரை..
    பிரபஞ்சமே புகழப் பெருமையுற்றவளொரு பெண்தான்.!

    தீவிரவாதத்துள் அமிழ்ந்திருந்த அத்தீயவர்களுக் கெதிராக..
    தீக்குரல்கொடுத்தவள் குண்டுகளைப் பரிசாகப் பெற்றாள்.!
    பாவியரின் கொடுஞ் செயலவளைப் பள்ளத்தாக்கிலிருந்து..
    பார்புகழும் ஐநாசபைவரை அழைத்துப் புகழ்சேர்த்தது.!
    ஜீவிதத்திற்குப் பெண்கல்வியும் சமத்துவமும் அவசியமென..
    சீராகயுழைத்து சிறப்புற்ற நோபல்பரிசினை வென்றாள்.!
    மாவீரத்துக் கடையாளமாய் மாலாலாவெனும் மகத்தான..
    முத்திரையை இளவயதுமங்கை பிரபஞ்சத்தில் பதித்தாள்.!

    ============================================

    நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::11-12-17

     

    Share
  • விடையில்லா விடுகதை..!

    Mahatma Gandhi with Cheering Female Fans at Greenfield Mill, Darwen, Lancashire

    விடையில்லா விடுகதைபோல வினாப்பல உண்டிங்கே..
    விடையில்லை இன்றளவும் எஞ்சுவது வினாவொன்றே.?
    படையுடன் போர்தொடுத்து பகையிலா நாட்டையும்..
    பழிதீர்க்கும் செயலுக்குத் தகும்காரணம் ஏதுமுண்டா.?
    இடைத்தரகர் இறாது எதையுமிங்கே செய்யமுடியுமா..
    எதுவும்முடியும் அவர்தயவால் என்பதுதான் நியாயமா.?
    கடையேழு வள்ளலையும்கூட வஞ்சகரெனக் கூறுவார்..
    குறையில்லா மனிதர்களும் இவ்வுலகில் இருக்கிறாரா.?

    பொதுச்சொத்தை அழிக்கும் புரட்சியின் நோக்கம்தான்..
    பொதுநலமெனச் சொல்லியது சழக்கரின் சதிச்செயலோ.?
    பொதுஊர்வலம் போராட்டம் மறியல் கண்டனமெனப் ..
    புதிதாக வெடிக்கும்பல விடையில்லா விளம்பரத்தோடு.!
    எதுக்காகப் பயணியர்செலும் பேருந்திற்கு தீவை
    என்னநோக்கம்? இன்னுமிது விடையில்லா விடுகதை.!
    கொதிக்கும் உள்ளத்தில் எழும்நல் எண்ணங்களால்..
    கொந்தளிக்கும் கேள்விக்கு இன்றுவரை பதிலில்லை.!

    உத்தமர்கள் பலருமுதித்த உலகுபுகழ் நம்திருநாட்டில்..
    உலவுகின்ற அவலங்கள்பல இன்னமும் தீரவில்லை.!
    ஒத்துவாழும் உணர்வுடன் உள்நாட்டு மாநிலங்களும்..
    ஒன்றுக்கொன்று உறவாடி ஒன்றிடும்நாள் எந்நாளோ.?
    அத்தியாயம்போல இச்சதிச்செயலெலாம் நீளும்..இந்த
    அநியாயத்துக்கிது தீர்ப்பென ஆய்ந்தவழி எதுவோ.?
    அத்துணைக்கும் ஒருநாளில் முற்றுப்புள்ளி வரும்..
    என்பதெலாம் “விடையில்லா விடுகதை” போலாகும்.!

    கைநிறையப் பணமீட்டி மனம்நிறைந்து வாழலாமென..
    கல்லூரிக்குக் கையூட்டு கொடுத்துக் கல்விபயின்றேன்.!
    பைநிறைக்கும் எண்ணமுடன் பலருமலையும் இந்தப்
    பைத்தியங்களில் நானொருவன் எனப் பின்பறிந்தேன்.!
    கையாலாகதவனெனும் பட்டப் பெயருடன் கடைசியில்..
    காலமிடும் விடுகதைக்கு விடைதேடி அலைகின்றேன்.!
    கைபார்த்துன் காலத்தைக் கணிக்காதே கையிலாதவருக்கும்..
    காலமுண்டு.!…கலாம் மொழிந்ததை நினைவுறுகிறேன்.!

    ================================================

    நன்றி:: தினமணி வெளியீடு::04-12-17
    நன்றி:: படம் கூகிள் இமேஜ்
    அன்புடன்
    பெருவை பார்த்தசாரதி

    Share
  • என் முதல் கனவு..!

     

     

    பெருவை பார்த்தசாரதி

    முதல் கனவு

     

     

     

     

     

     

     

    ஒருமுறைதான் உனைநான் நினைத்தேன் நீயோ..

    ……….ஓராயிரமுறை வந்தாயென் கனவில்!….நீயாரோ.!

    பருவமெய்திய நாள் முதல்கனவு கண்டபின்..

    ……….புரண்டு புரண்டு படுத்தாலும் நித்திரையில்லை.!

    ஒருநாள் விடாமலென் உறக்கத்தைக் கெடுத்தவன்..

    ……….ஊர்புகழும் அன்னவன் வாள்சுழற்றும் வீரன-வன்.!

    தருமின்ப மதிமயக்கமும் தழுவுமினிய சுகம்தனில்..

    ……….தழைந்துவந்த கனவிதுவேதான் என் முதல்கனவு.!

     

     

    கொல்லும் காதலெனும் பெருந்தீயை மூட்டிவிட்டு..

    ……….கண்ணைக்கட்டி காட்டில் விட்டகன்ற கட்டழகன்.!

    இல்லற சொர்க்கத்தை இயக்கிக் கொண்டிருக்கும்..

    ……….இன்ப அதிர்வலையில் திக்குமுக்காட வைத்தவன்.!

    கொல்லும் பகைகிழிக்கும் வீரமுடன் வேகமாகச்..

    ……….செல்லும் குதிரைஏறி வாளுடனெங்கு சென்றான்.!

    மெல்லமெல்ல நானுமெனை மறந்தேன் இதுதான்..

    ……….மென்மை நிலவொளியில் கண்டயென் முதல்கனவு.!

     

     

    பட்டகாலிலே படும் கெட்டகுடியே கெடுமென்பார்..

    ……….படாதபாடு படுத்துமாம் பருவக் காதல்தொல்லை.!

    கட்டான ஆண்டகையென் கனவில் வந்த-தாலென்..

    ……….கட்டுடல் குலைகின்றது காதலெனும் ஏக்கத்தாலே.!

    மொட்டவிழ்ந்த மலராகி இதழுதிர்ந்த காம்புபோல..

    ……….மெலிந்து விட்டேன்!கண்டவர்கள் சொல்கிறார்கள்.!

    பட்டுமேனி என்னழகைப் பார்த்து…,கருப்புநிலா..

    ……….பழிப்பதுபோல் உணர்ந்ததுதான் என் முதல்கனவு.!

     

     

    ஒற்றை நிலாவொளி உலகுக்கே வெளிச்சம்தரும்..

    ……….உன்னால் இளவரசி என்மேனியில் அனல்பரவும்.!

    அற்றைநாள் நீவிடுத்த விழிக்கூரம்பு தைத்ததால்..

    ……….அங்கயற்கண்ணி நான் படுந்துன்பம் அறிவாயோ.!

    பிற்றைநாளிலும் பிதற்றுவேன்! கனவு கலையுமுன்..

    ……….பற்றியமனத்தைப் பதைக்க விட்டுச் சென்றாயென.!

    இற்றைநாள் நடக்கும் மன்மதப்போரில் வெல்லும்..

    ……….ஈண்டிய மறவனைக் கண்டதேயென் முதல்கனவு.!

    =============================================

    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::25-11-17

    நன்றி:: கூகிள் இமேஜ்

     

    Share
  • யாருமில்லாத மேடையில்..!

     

    பெருவை பார்த்தசாரதி

    download (22) (1)

     

     

     

     

     

    பாருக்கு பாரதியும் பகன்றபல நற்கருத்தையெலாம்..

    ……….படித்துப் புரிந்துகொண்டோர் எத்துணை பேராவார்.!

    ஆருடம் சொல்லும் இடமங்கேதான் கூட்டமதிகமாம்..

    ……….அருந்தலைவர்கள் ஆற்றுவதைக் கேட்க ஆளில்லை.?

    ஊருடன் ஒத்துவாழ உலகமக்களுக்கு அறிவுறுத்திய..

    ……….ஒருமித்த கருத்துள்ள உத்தமரோயிரம் உண்டிங்கே.!

    யாருமில்லாத மேடையில்நான் கூச்சல் போடுகிறேன்..

    ……….வாருங்களய்யா!..வந்துஅவர் பேச்சைக் கேளுமென்று.!

     

     

    ஊருக்குள் இருப்பவருக்கு எங்கிருக்கிறது அக்கரை..

    ……….உலகில் யாவர்குமெளிதாய் வருமோ?…நாட்டுப்பற்று.!

    நேருவும் காந்தியும் நேத்தாஜியும் வ.உ.சிதம்பரமும்..

    ……….நெறிதவறி வருமானம்பெற வழிதவறிப் போகவில்லை.!

    ஆருமே அறியாதபல அற்புத வாழ்வியல்கல்வியை..

    ……….அய்யன் வள்ளுவனும் வாழ்வினுக்கு வழங்கினான்..!

    பெருமதிப்பு கொண்ட பெரியோர்களின் நல்லுரையை..

    ……….பெறமறவாதீர்! என்கிறேன் யாருமில்லா மேடையில்.!

     

    கம்பனும் இளங்கோவனும் காப்பியம் படைத்தார்கள்..

    ……….கலையுலகம் விழிப்புணர கண்ணுறங்காமல் எழுதினர்.!

    அம்பரீடன் சரித்திரத்தை ஒருமுறை படித்துப்பாரும்..

    ……….அகங்காரம் ஒருபோதும் நம்மிடமே வாராதுபோகும்.!

    இம்பருலகம் இறைஞ்சும் எதுவும் வேறெங்குமில்லை..

    ……….இந்தியாவின் காப்பியங்களில் கொட்டியே கிடக்கிறது.!

    பம்பரமாய்ச் சுழன்றே பாரதத்தின் பெருமைசொல்ல..

    ……….பரப்புரை செய்யவந்தேன்! யாருமில்லாத மேடையில்.!

     

    படிப்பறிவு இல்லாதவரே பள்ளிகல்லூரி நடத்துகிறார்..

    ……….படித்த மாமேதையங்கே பாடம் சொல்லித்தருகிறார்..!

    கொடிபடரக் கொழுகொம்பு தேவையென்பது போல..

    ……….பிடிதளராத மாணவனும் பட்டம்பெற மன்றாடுவார்..!

    மடிச்சுக்கட்டிய வேட்டியுடன் வளைத்துப் போடவே..

    ……….மதிப்புமிகு கல்வியைத் தொழிலாக்கும் விந்தையிதை..

    இடித்துரைக்க ஓடிவந்தேன் யாருமில்லா மேடையிலே..

    ……….இசைந்து வந்தவரெலாம் கொடிபிடிக்கச் சென்றனரே.!

     

    நன்றி:: தினமணி கவிதைமணி:: 11-11-17

    நன்றி:: படம் கூகிள் இமேஜ்.

    Share
  • உன் குரல் கேட்டால்..!

    பெருவை பார்த்தசாரதி 

    images (10)

     

     

     

     

     

     

     

     

     

    அத்தானென அழகாயுன்குரல் கேட்டால் போதும்..

    ……….அன்பின் உச்சத்துக்கு அச்சொல்லே பிரதானமாகும்.!

    முத்தான கனிச்சொல் பலவுண்டாம் தாய்மொழியில்..

    ……….முத்தமிழில் “என்அத்தான்” எனும்சொல் இனிக்கும்.!

    இத்துணையினால் பெறும் பேரின்பக் கிளர்ச்சியே..

    ……….இயக்கும்நம் பெரும்சக்திக்கு ஈடாகும் பாலமாகும்.!

    எத்தனை போராட்டங்கள் புவியில்பல நடந்தாலும்..

    ……….இத்“தஞ்சம்” எனும்முடிவு காதலிலே மட்டுமெழும்.!

     

    காதல் இயல்பாக எழவேண்டுமதில் எப்போதுமே..

    ……….கனலிருக்கும்!உரசிக்கொண்டால் பற்றிக் கொள்ளும்.!

    மோதலென்பது காதலில் வந்தாலது முற்றியவுடன்..

    ……….முடிவில் சரணாகதி என்பதேயதன் தத்துவமாகும்.!

    காதலியே!“காதலிக்கிறேன்”எனஉன்குரல் கேட்டால்..

    ……….காலத்திற்கும் அடிமையாவது காதலின் பண்பாகும்.!

    காதல் கைகூடாமல் மாந்தரழிந்தாலும் இவ்வுலகில்..

    ……….காலத்தால் அழியாதென்பது உண்மைக் காதலாகும்.!

     

    கவர்ச்சியென்பது காதலுக்கு முக்கிய இலக்கணமாம்..

    ……….காணும் பார்வையாலே யாவரையும் கவர்ந்திழுக்கும்.!

    கவண்கல்போல் வைத்தகுறி நோக்கி விரைந்துசெலும்..

    ……….கருவிழிகள் காதல்வயப்பட்டவரை சுண்டி இழுக்கும்.!

    அவசரத்தில் அரும்புகின்ற காதல்முதலில் இனிக்கும்..

    ……….அவகாசத்தில்……அடிநாக்கிலதுவே பின்பு கசக்கும்.!

    விவரமாகக் காதல்செய்யத் தெரியவேண்டும் அதில்..

    ……….விழிப்புடன் இருந்தால் மட்டுமேயது கைகூடிவரும்.!

     

    இருந்துபோதல் என்பதே இம்மனித வாழ்க்கையாம்..

    ……….இன்பக்காதல் இல்லையேல் வாழ்வென்பது சுமையாம்.!

    ஒருமித்த காதலுக்கு உண்மையன்பு பாசம்வேண்டும்..

    ……….உறவைச் செழிப்பாக்கும் உரமாவது காதலுணர்வாகும்.!

    ஒருஉயிர்பிறக்க ஈருயிர் வேண்டுமென்பது விதியாகும்..

    ……….ஈருறவில் காதல்விதி மாற்றமிருந்தால் பிறவியேது.!

    உருவாகும் உன்னதக் காதலிலெழும் எண்ணங்களை..

    ……….உரையாக்க….உன்குரல் கேட்டால்தான் அதுமுடியும்.!

     

    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::11-11-17

    நன்றி:: கூகிள் இமேஜ்

     

     

    Share
  • மேகத்தில் கரைந்த நிலா..!

    பெருவை பார்த்தசாரதி 

    moon

     

     

     

     

     

     

     

     

    மேகத்தினுள் கரைகின்ற வெண்ணிலவே உன்னை..

    ……….மென்மையென மேன்மையாகப் பாடாதவர் உளரோ.?

    மோகத்தில் திளைத்திருக்கும் இளைஞரும் உன்னை..

    ……….மனம்நாடும் மங்கையொடு ஒப்பிட்டே அழைப்பர்.!

    போகத்தில் கட்டுண்ட காளையரோ தன்கன்னியரைப்..

    ……….போற்றிக் கொஞ்சும்போது கண்ணே நிலவேயென்பர்.!

    தேகத்தின் அழகைவருணிக்கப் பெண்ணே நிலவுக்கு..

    ……….தகுதியான உவமையென..பாவலரும் பாப்புனைவர்.!

     

    காகமொன்று கரைந்தாலன்று விருந்தாளி வருவாராம்..

    ……….கன்னியொருத்தி நிலவுபோல வருவாளென் கனவில்.!

    மேகமீதமர்ந்து நானவள் மேனியழகை ரசிக்கையில்..

    ……….முகத்தைக் காட்டாமல் மறைத்தே வைத்திருப்பாள்.!

    யாகத்தீயின் வேதவொலியில் எழும் தேவதைபோல்..

    ……….யோகமிருந்தால் மட்டுமே மேகம்கிழித்து வருவாள்.!

    வேகமாய் விரைவாக விண்ணிலே கலந்துவிடுவாள்..

    ……….வெண்மேகத்தில் கரையும் விண்நிலவைப் போல்.!

     

    நிலவு ஒருபெண்ணாகி நீந்துகின்ற அழகோவெனும்..

    ……….நினைவில் நீங்காப்பாட்டெனக்கு பிடித்த பாட்டாகும்.!

    பலவண்ண மேகம்சூழநீ வருவாய் காதல்மயக்கத்தில்..

    ……….புழுதி மறைவதைப்போல் நீயும்சட்டென மறைவாய்.!

    நிலவொளியின் நிழலில்கூட நீயெங்கும் தெரிகிறாய்..

    ……….நீலமலர் இதழ்விரியும் நேரத்திலெனை அழைப்பாய் .!

    அலக்கழித்தது போதும் மீண்டுமெனையாட்டி வைக்காதே..

    ……….அழுக்குநிலா போல்வராமல் பளிச்சென்று நேரில்வா.!

     

    இரக்கமீகை என்பது தாகம்போல தானாகவரவேண்டும்..

    ……….இரண்டுமே கனவுக்கில்லை காண்பவருக்கு தெரியும்.!

    உறக்கத்தைக் கெடுக்குமுன் வேலையால்…காதலில்..

    ……….உன்மத்தம் பிடித்தவர்கள் உலகில் ஏராளமுண்டு.!

    மறக்கும் செயலை மறந்து….வாழுமிளங்காதலை..

    ……….மறப்பதற்கு மனிதனால் முடிவதில்லையாம்!-ஆசை

    துறக்கும் முனிவர்களின் முன்காதல் வந்தால்..கண்..

    ……….திறக்கும் ஞானியரும் காதல்செயும் கதையுமுண்டு.!

     

    ==========================================

    நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::04-11-17

     

    நன்றி:: கூகிள் இமேஜ்.

     

     

     

     

    Share
  • தீ தின்ற உயிர்..!

     பெருவை பார்த்தசாரதி

     

    Daily_News_2017_4252697229386

     

     

     

     

     

     

    விந்தையாய் அனைத்தும் மாறுகின்ற வியனுலகில்..

    ……….வியக்கும் வகையில் வீண்செயல்களும் உண்டாம்.!

    கந்தைத்துணியுடன் கடுமுழைத்து வாழும் வர்க்கம்..

    ……….காலம்தள்ளக் கந்துவட்டிக் கடனால் தத்தளிப்பார்.!

    சிந்தை கலக்கும்வட்டியும்.!அசலையே விழுங்கிவிட..

    ……….     சீர்கெடும் தம்வாழ்வைத் தடுக்கமுயன்று தோற்பார்.!

    தந்தையும்தாயும் எடுக்கும் தவறான கொடுமுடிவால்..

    ……….தளிர்க்குழந்தையும் தீக்குளிப்பது கொடுமை யன்றோ.!

     

    உள்ளத்தில் நல்லுள்ளம் கொண்டே பெற்றோர்தன்

    ……….பிள்ளையின் படிப்பினிலே  பெருமிதம் கொள்வார்கள்.!

    பள்ளிக்குச் செல்வார்கள்! சிறப்பாகப் படிப்பார்கள்!

    ……….போற்றும் வித்தகனாவார்! என்றேதான் எண்ணுவர்.!

    கள்ளமற்ற உள்ளத்தை உறவாய்க் கொண்டுவளர்ந்த

    ……….கபடமறியாப் பருவமதை யாரிழக்க நினைப்பார்கள்.!

    பள்ளியினுள் பாலகர்கள் கவனம் பாடத்திலிருக்க

    ……….பற்றியதீ தின்றது பச்சிளங்குழந்தைகளை உயிரோடு.!

     

    மேற்படிப்பு என்பது கனவாகுமெனும் நிலையினால்..

    ……….மேன்மையில் அரியமானுடப் பிறவியைத் துறக்க…!

    தற்கொலையெனும் முடிவை தனித்தே எடுப்பார்.!

    ……….தரணியில் வாழ்வதில்லை இனியெனச் சபதமேற்பார்.!

    கற்றபயனறியுமுன் தன்னுயிரைத் தீக்கிரை யாக்குவர்..

    ……….காலத்தின் கோளாறா?…….பருவத்தின் கோளாறா.?

    தற்கொலை ஒன்றுதான் நிரந்தரமான தீர்வென்றால்..

    ……….தரணியில் நிலையாய்வாழ கற்றகல்வி பயனுறாது!

     

    மாயோன்நம்மை மண்ணுலகில் படைத்து விட்டான்..

    ……….மானிடராய் வாழ்ந்து பிறர்க்குதவி செய்துவாழ்வோம்.!

    தீயோமண்ணோ ஏதோவொன்று இறந்தபின் உடலைத்..

    ……….தின்றுவிடும் எனுமெண்ணச் சிந்தனையில் வாழ்வோம்.!

    தூயோமாய் வருமெண்ணமே வாழ்விலுயர வழியாகும்..

    ……….தழைத்துயர வழிகோலும்!..தற்கொலையைத் தவிர்க்கும்.!

    ஐயோ.! இக்கொடுங்செய்கை இனிவேண்டாம் இறைவா?

    ……….அகத்தினில் இருள்நீக்கி ஜகத்தினில் சிறக்கவாழஅருள்.!

     

    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::28-10-17

    நன்றி:: படம் கூகுள் இமேஜ்

     

     

    Share
  • வான வேடிக்கை..!

    பெருவை பார்த்தசாரதி

    வான வேடிக்கை

     

     

     

     

     

     

     

    நானிலத்தில் நலமுடனே வாழும்நன் மக்களுக்கு..
    ……….நேரும் துன்பம்போக்க அவதரிப்பான் இறைவன்.!
    மனிதனாக மண்ணுலகில் மறைமுகமாய்ப் பிறந்து..
    ……….மக்களின் பக்திநலத்தை தன்னுள்ளே பேணுவான்.!
    புனிதனாமவன் பிறக்குமுன் அதிசயங்கள் நிகழவே..
    ……….புதியஜீவன் பூவுலகில் பிறக்குமென பெருங்குரலில்..
    தொனிக்குமொரு அசரீரிச்சொல் எழுமாம்..? அப்போது..
    ……….வானவேடிக்கை பலவுமங்கே விண்ணிலே நிகழும்.!

    இதிகாச மன்னரான இராமனையும் கண்ணனையும்..
    ……….இன்றுமென்றும் துதிக்கிறோம் இறையவன் ஆனதாலே.!
    அதிசயமாம் மனிதருக்கு அவர்களின் அருஞ்செயல்..
    ……….ஆகையாலதை விழாவாகக் கொண்டாடி மகிழ்வோம்.!
    மதியிலா அரக்கர் தம்மக்களையே துன்புறுத்தியதால்..
    ……….மானுடனாய் அவதரித்து அவர்களையே அழித்தான்.!
    மதிப்பில்லா அரக்கரழிந்ததை தீமையொழிந்த தினமாக..
    ……….மாபெரும் விழாவாக மண்ணுலகில் நடத்துகின்றோம்.!

    மதிக்கத்தக்க நம்பண்பாட்டில் மரணத்தைக் கொண்டாட..
    ……….மாபாவியசுரனெனும் தீமை அழித்தான் மாயக்கண்ணன்.!
    உதிக்கும் பண்டிகையில் வாழ்விலொளி ஏற்றும்நாளாக..
    ……….உருவான உன்னத விழாவாகியது தீபஒளித்திருநாள்.!
    கொதிக்கும் செங்கதிரெழுந்து வானம் சிவப்பாக்குமுன்..
    ……….கொளுத்திய பட்டாசுவெடித்து வானவேடிக்கை காட்டும்.!
    அதிசயமாய் அதிகாலை அன்றுமட்டும் கண்விழிப்போம்..
    ……….அதிகமான சப்தஒளியுடன் வானவேடிக்கை காண்போம்.!
    ==========================================
    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::23-10-17
    நன்றி:: படம்..கூகிள் இமேஜ்

     

    Share
  • நிசப்த வெளியில்..!

    பெருவை பார்த்தசாரதி 

    man-writing

     

     

     

     

     

     

     

     

    எத்தனையோ எண்ணங்கள் எழுகிறது ஏட்டிலெழுத..

    ……….ஏனைய கவிஞர்பாவலரின் எழுச்சிமிகு சிந்தனையால்.!

    புத்தகத்தைப் புரட்டிப்பார்த்து வித்தகனாய் வலம்வந்து..

    ……….பூவுலகில் வாழ்வோருக்கு புதியசெய்தி சொல்லவேணும்.!

    சொத்தாவதெலாம் எழுதிச்சேர்க்கும் வரிகளொன்றே..நாம்..

    ……….செத்தபிறகும் நிலைத்திருக்கும் எழுதிய எழுத்தேயாம்.!

    முத்தானக் கவிதைவரிகள் மூளையிலே முளைப்பதற்கு..

    ……….முனையும் எண்ணமும் நிசப்தமுமங்கே நிலவவேண்டும்.!

     

    காலத்தால் அழியாத காப்பியத்தைக் கவிச்சக்கரவர்த்தி..

    ……….கம்பனும் வடிவமைத்தான் கடவுளிடம் பெற்றருளாலே.!

    ஞாலத்தில் நிலைபெற்ற எழுச்சிதரும் கவிதையையே..

    ……….மணக்குள விநாயகனின்முன் புனைந்தான் மஹாகவியும்.!

    காலத்துக்கும் பொருந்துகின்ற கவிதையைக் கொடுத்தான்..

    ……….கவியரசன் கண்ணதாசன் தன்கையில் கோப்பை ஏந்தி.!

    நீலவானும் விண்வெளியும் கவியெழுதக் கைகொடுக்க..

    ……….நிசப்த வெளியிலமர்ந்து இயற்கையை நானெழுதுவேன்.!

     

    கண்ணில் தோன்றுமியற்கைக் காட்சிகளுக் கிடையில்..

    ……….கதிரவன் தோன்றுமற்புத நேரம்தெய்வ நினைப்பூறும்.!

    மண்ணிலோடும் சிற்றோடை மெல்லிசை எழுப்பும்போது..

    ……….மகரந்தக் கருத்தெலாம் மலர்போன்ற கவிதையிலுதிக்கும்.!

    விண்ணிலுலவும் விண்மீன்களைக் காண மண்ணின்மீது..

    ……….விரியும் பூஞ்சோலைக் களியூட்டுமதில் கவியூற்றெழும்.!

    பண்ணிலெழும் மகுடிச்சப்தத்திற் கெழும் பாம்புபோல..

    ……….எண்ணிலாச் சிந்தனைகளெழும் நிசப்தச் சூழ்நிலையில்.!

     

    அழகான சூழலில் அடர்த்தியான மரங்களுக்கிடையில்..

    ……….அடுத்திருக்கும் அருவியில் எழுமெல்லிசைச் சப்தமும்.!

    பழுத்திருக்கும் கனிகளைப் பறவைகளும் மந்திகளும்..

    ……….பகுத்துண்ணும் காட்சிகளால் பார்ப்பவர் மனம்துள்ளும்.!

    நிழல்தருமரமும் புல்வெளியும் மழைநோக்கி நிமிரும்..

    ……….நெடுநேரமங்கே அமர்ந்திருக்க நெஞ்சமும் இசையும்.!

    சூழலோடுசுற்றமும் சுகமானநிசப்தமும் சேரும் போது..

    ……….சாமரங்கள்வீசும் தென்றலால் பாவெழுதும் திறன்வரும்.!

     

    நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::14-10-17

    நன்றி படம்:: கூகிள் இமேஜ்

     

     

    Share
  • காந்திக்கு ஒரு கடிதம்..!

    பெருவை பார்த்தசாரதி

    காந்தி

     

     

     

     

     

     

     

     

    தந்தையாய் ஆசானாய் ஈடில்லாத் தலைவனாயிருந்து

    வந்தனை செய்யும்படி வையமுழுதும் அறிந்தோனே.!

     

    நிந்தனை செய்தவர்கூட நிழல்போலுமைத் தொடர்ந்து

    சிந்தனையில் தெளிவுற்றடிமை வாழ்வினைத் துறந்தார்.!

     

    வாள்பிடித்து வெற்றிகண்ட மன்னர் பலருக்கிடையே

    தாள்பணிந்து அகிம்சையை தரணிக் குணர்த்தியவனே.!

     

    எழுபது ஆண்டுகள்பல ஆனபின்னும் இன்னுமேனோ

    எழவில்லை எம்நாட்டுப் பற்றெனுமரிய சுயசிந்தனை.!

     

    அகத்தினில் தீயவஞ்சகம் கொண்டோர் நாளும்பெருகி

    ஜகத்தினில் பெற்றசுதந்திரத்தைத் தாழ்வுறச் செய்கிறார்.!

     

    இப்பாரிலெவரும் எவர்க்கும் அடிமையிலை என்பதை

    தப்பாக விடுதலையைப் தவறாகப் புரிந்துகொண்டார்.!

     

    சுகங்கள் பலவாம் சுதந்திரத்தைப் பெற்றுவிட்டாலென

    அகத்தில் தெளிவுற்றன்றே அறப்போரில் ஈடுபட்டோம்.!

     

    மண்ணில்பல வளமுண்டிதை அயலார் அபகரிக்காமல்

    திண்ணிய எண்ணமுடன் ஒன்றாகத்தான் போரிட்டோம்.!

     

    வானிலெழும் ஏவுகணைபோல் அன்றாடப் பொருட்கள்

    நானிலத்தில் விலையெகிறி விண்ணிலுயரப் பறக்குது.!

     

    பெருகிவிட்ட பெருமக்களால் பாரிலின்று பேதமுண்டு

    பருகும்நீர் விளையும்நிலம் எல்லைபேரமென ஏராளம்.!

     

    இயலாத ஒன்றுக்கும்…எளிதேகிட்டாத பலவற்றுக்கும்

    எழுந்த ஆசையினால் அடிமையின்னும் அகலவில்லை.!

     

    நல்லோரும் நாட்டுப் பற்றுடையோரும் நலிவுற்றதாலே

    நயவஞ்சகமெனும் கொடியநஞ்சு மீண்டும் உருவாகிறது.!

     

    உள்நாட்டில் கூடிவாழ்வோரிடம் குழப்பம் செய்வதை

    உள்ளத்தில் விஷமிடும் தொழிலாய் கொண்டோர்பலர்.!

     

    விண்ணிலிலுலவும் அண்ணலெனும் காந்தி அடிகளே

    விடுதலைக்காக விருதுவென்ற வியன்மிகு தலைவனே.!

     

    அவனியிலின்று நடந்தேறிக் கொண்டிருக்கும் அனைத்து

    அவலங்களையும் எழுதிவிட்டேன்.!ஏற்பீர்.!அண்ணலே.!

     

    நொந்திடும் இந்நிலைகள் முற்றிலுமடியோடு மாற..நீயும்

    வந்திங்கே பிறக்கவேணும்..மீண்டுமதே மஹாத்மாவாக.!

    =============

    நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::08-10-17

    நன்றி படம்:: கூகிள் இமேஜ்

    Share
  • புதிய ஓட்டம்..!

    பெருவை பார்த்தசாரதி

     

    puthiya ottam

    புதியபழைய ஓட்டமெலாம் மனிதருக்கே உண்டு
    புவிக்கது உண்டென்றால் பூலோகம் நிலைக்காது!
    போதிய ஊதியம் கிட்டாமல் பூவுலகிலுழல்பவர்
    புதிய ஓட்டமெடுக்க நினைப்பது இயற்கைவிதியே.!
    விதிவழியே செல்கின்ற வாழ்க்கையில் எதுவுமே
    விளங்காமல் ஓடுமானுடக் கூட்டம்தான் அதிகம்!
    நாதியற்ற ஏழைக்கிது நன்றாகவே பொருந்தும்..
    நாட்டில் பாதியிதுவென கணக்கிலிது விளங்கும்!

    சின்னஞ்சிறிய எறும்பும் கரையானும் தரையினில்
    சீராகப்பரவி ஓடிக்கொண்டே இருப்பது எதற்காக?
    பின்னங் கழுத்தில் முகத்தடிசுமந்து நாளுமிங்கே
    பளுயிழுக்கும் மாட்டையும் ஒட்டகத்தையும் பார்!
    தன்னந்தனியே மண்ணிலுள ஐந்தறிவு ஜீவியெலாம்..
    தானாக ஓடுதிங்கே ஆர்தூண்டுதலும் இல்லாமல்!
    பொன்னான எதிர்காலம் புலரநீ தொடங்குமொரு
    புதிய ஓட்டம்தான் உருப்படியாய் உயரவழிசெயும்.!

    பொற்காலம் வருமென்று பொன்னான நேரத்தை
    பூராவும் வீணடிக்கும் வெட்டியிளைஞராய் இராமல்!
    கற்காமல் பலர்வாழும் சீர்கெட்ட சமுதாயமெனும்
    கட்சிகளின் சிந்தனைமழுங்கும் செயலில் புகாமல்!
    கற்காலத்தின் நிலைமை பேசிப்பேசி நேரத்தையும்
    காலத்தையும் வீணடிக்கும் மேடையில் ஏறாமல்!
    தற்கால உலகத்தில் தலைதூக்க வேண்டுமெனில்
    தகுங்கல்விபயில தகுந்த ஓட்டத்தைநீ தேர்ந்தெடு!

    ============================================

    நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::01-10-2017

    நன்றி படம்:: கூகிள் இமேஜ்

    Share
  • பறவையின் மனசு..!

    பெருவை பார்த்தசாரதி

     

    கற்றால்தான் உலகுபயன் மிகுமென்பதை மக்களும்..

    ……….கற்றபின்தான் உணர்ந்தறிய முடிகிறது.!…ஆனால்

    கற்காமலேயுலகில் வாழுமரிய உயிரினங்கள் பலவும்..

    ……….கற்றவருக்கு தன்செயலால் மேலும்கற்க வைக்கிறது.!

     

    பரந்துதிரியும் பறவைமனசை ஆராய்ந்து பார்த்தால்..

    ……….பாடம்பல சொல்லுமது…ஆறறிவுபெற்ற மனிதனுக்கே.!

    பரபரப்பான இயற்கைச் சூழலில் அழகுகொஞ்சும்..

    ……….பறவைக் கூட்டத்தைக் கண்டால்மனம் அமைதியுறும்.!

     

    பெற்றவள் ஒருவளிருக்க மற்றொரு பறவையதற்கு..

    ……….பெருமையுடன் உணவீந்தும் உயர்ந்த குணமுண்டு.!

    வேற்றுமை நிறமிலிருப்பினுமது ஒற்றுமையாகக் கூடிப்..

    ……….பற்றுடன் வாழ்வதற்கு பறவையெங்கே கற்றனவோ.!

     

    பகுத்துண்ணும் குணம்கொண்ட பறவையைப் பார்த்து..

    ……….படித்த மாந்தர்கள் கற்கவேண்டியது பலவுண்டாமதை..

    தொகுத்துப் பார்க்கின் புரியாதபல ஆச்சரியங்களதில்..

    ……….தொக்கி நிற்குமது மனிதனுக்குச் சாத்தியமில்லையாம்.!

     

    உச்சாணி மரக்கிளையிலோரம் ஒடிந்துவிழும் நிலையில்..

    ……….உறுதியுடன் தொங்கியாடும் தூக்கணாங் குருவிக்கூடும்.!

    பச்சிலையைச்சேர்த்து பசையிலாமலே இலைக்கூட்டை..

    ……….பசுஞ்சிட்டால் கட்டுமாற்றலு மிவைநமக்குச் சாத்தியமா.?

     

    உண்ணாமல் வெகுதூரம் பறக்கும் தன்னினத்துடன்சேர..

    ……….ஓராயிரம் மைல்கடக்கு மபாரசக்தி அதனிடமுண்டு.!

    உண்ணத்துடிக்கும் தன்குஞ்சுகளுக்கு ஓயாமல் இரை..

    ……….ஊட்ட உண்டதையுமிழ்ந்து தரும் பெரியமனசுண்டு.!

     

    பறவைத்தேடல் என்பதொரு வாழ்க்கைத் தேடலாகுமாம்..

    ……….பிரபஞ்சத்தில் பிரமிக்குமொரு படைப்பே பறவையினம்.!

    பறவைமனசு மிகப்பரந்த மனசாக அமைந்ததினாலந்தப்..

    ……….பறவையைத்தன் வாகனமாகக் கொண்டானோ இறைவன்.!

     

     

    Share
  • குழந்தையின் குரல்

     பெருவை பார்த்தசாரதி

     

    crying-baby

     

     

     

     

     

     

     

     

     

    கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாமென்பர்

    குழந்தையில்லா வீட்டில் குதூகல இருக்காதெனலாம்..!

     

    குடும்பமொன்றில் குழந்தையின் குரலொன்று கேட்கநீ

    கோடி புண்ணியம் செய்திருத்தல் வேண்டுமம்மா..!

     

    பெருஞ்செல்வ மெளிதில் கிடைக்கும் குழந்தையெனும்

    அருஞ்செல்வம் இறையருளால் மட்டுமே கிட்டும்..!

     

    மண்டியிட்டு மண்சோறு உண்டபல நாட்கள்..

    வேண்டியவரம் கேட்டு கும்பிட்டபல கோவில்கள்..

     

    உள்ளம்குளிர நீராடிய புண்ணிய திருக்குளங்கள்..

    பிள்ளை வரம்வேண்டி பித்தாக அலைந்த நாட்கள்..

     

    இவை யனைத்தும் வீணாகவில்லை யொருநாள்..

    அவை யனைத்துப் பலனுமுடன் பலித்தது..!

     

    கும்பிடவந்த சாமியிடம் குழந்தைவரம் கேட்கும்போது..

    குழந்தையின் குரல்கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினேன்..

     

    வேண்டுவோர்க்கு வானத்தில் எழும் அசரீரிபோல..

    வேண்டாமென வீசிச்சென்ற குழந்தையினழு குரலொடு..

     

    அரும்புமலர் சோலைதனில் இறையருட் கொடையால்..

    ஆதரவின்றிக் கிடந்தன்று பிறந்த குழந்தையொன்று..!

     

    பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளைபோல்..

    பெரிதாக அரியசெல்வமென கிட்டிய தெனக்கும்..!

     

    அன்னையின் பிரசவலிகூட மறக்கும்…குழந்தையின்

    அழுகுரல் கேட்டவுடன்..பட்டதனைத்தும் மறந்தேன்..!

     

    குறையேதும் வலியேதும் இல்லாமல் குழந்தையொன்று..

    இறையருளால் பெற்றதுபெரும் பேறென்றன் பாக்கியமே..!

     

    கூப்பிடும் குரல் கேட்டு கண்ணன் வந்ததுபோலென்

    குழந்தையின் குரல்கேட்டால் ஓடோடி வருவேன்நான்

     

    குழலினிது யாழினிது என்பதம் மக்கள்

    மழலைச்சொல் கேளா தவர் . . . .எனும்

     

    ஐயன் வள்ளுவன் கூற்றுக் கிணையாக

    ஐயமுற வலிமை சேர்த்தோர் ஆருமில்லை

     

    இவ்வுலகில்..!

    ==================================================

     

    தினமணி கவிதைமணி தந்த தலைப்பு:: “குழந்தையின் குரல்”

     

    நன்றி கவிதைமணி வெளியீடு::22-05-17

     

    படஉதவி:: கூகிள் இமேஜ்

     

    Share
  • பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்..!

    பெருவை பார்த்தசாரதி

     

    rainy

     

     

     

     

     

     

     

     

     

    நஞ்சுக்கொடி மூலம்தான் பிள்ளையும் தாயுமோர்..

    ……….நல்லுறவுக்கு மேன்மையாய் உலகுக் குதாரணமாம்.!

    அஞ்சு விரலாலவள் தானீன்றமகவை அனுதினமும்..

    ……….ஆரத்தழுவி முத்தம் கொடுக்கும் அன்புத்தாயாம்.!

    விஞ்சி நிற்குமன்பைதன் பிஞ்சுமனங்களில் தேக்கி..

    ……….வெள்ளை மனதுடன் வெளிப்படுத்துவாள் அன்னை.!

    பிஞ்சுக்குழவிக்கு கொஞ்சி அமுதூட்ட!…அழைப்பாள்..

    ……….ஓடும்பிறை நிலவையும்! தூவும்செல்ல மழையையும்.!

     

    துஞ்சும் குழவியழகைத் தன்கருப்பையுள் உணர்ந்து..

    ……….தாலாட்டுப் பாடுபவள்தான் தாயெனும் தெய்வமாம்.!

    மிஞ்சுகின்ற துன்பமும் கவலையுமவள் மனதில்..

    ……….மறைந்தோடும்…நொடியில் தன்மகவை ஈன்றவுடன்.!

    அஞ்சும் குழந்தையை அரவணைக்க அவளழைத்தால்..

    ……….ஆவலோடு ஆவின் கன்றுபோலத் தவழ்ந்தோடிவரும்.!

    பிஞ்சுமனங்கள் பெரிதே மகிழ்ச்சியுற!..வான்முகிலும்..

    ……….பிறைநிலவும் மழைத்துளியும் அழையாமலே வருமாம்.!

     

    அழுமுன்னே குழந்தையின் தேவையெது வெனவறிந்து

    ……….அமுதூட்டும் செய்கையால் அவனியிலோங்கி நிற்பாள்.!

    தழுதழுக்கு மன்பைதன் தொண்டையுள் அடக்கும்..

    ……….தாய்காட்டும் அன்பைவிட மேலாகும் அன்பிலையாம்.!

    முழுநிலவை வான்மேகம் மறைக்கும் செயலைப்போல்..

    ……….முடங்காத அன்பைதன் முகத்திலே மறைத்திருப்பாள்.!

    வழுவாதிருக்கும் இப்பண்பினால் “அன்னை” என்பாள்..

    ……….வாழுமுலகில் தனக்கீடா யவருமிலாது சிறந்திருப்பாள்.!

    ========================================

    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::18-09-17

    நன்றி:: கூகிள் இமேஜ்.

    Share
  • சேர்த்து வைத்த கனவு..!

    பெருவை பார்த்தசாரதி

    dream girl

    பார்த்தமுதல் நாளிரவுமுதல் கனவில்வந்த நீதானெனக்கு

    ……….பத்தினியாய் ஆவாயென தினமும்நான் கனவுகண்டேன்.!

    ஊர்கூடி தேரிழுக்கும் வழக்கம்போல் உன்னைநானும்..

    ……….உற்றாறுறவினரொடு ஊரறியமணப்பது போல் கனவுவரும்.!

    கோர்க்கின்ற பூக்களெல்லாம் நாருடன் இணைவதுபோல்

    ……….கொண்டாடி மகிழத்தான் தினமும்நான் கனவுகண்டேன்.!

    சேர்த்துவைத்த கனவெலாம் சிலநாளில் நனவாகுமெனச்..

    ……….சென்றயிரவுகள்…..உறங்காததாக ஓராயிர மானதம்மா.!

     

    உருவத்தில் பெண்ணாய் உலகழகியாய்நீ வலம்வரவேணும்..

    ……….உனைப்படைத்திட்ட பிரம்மனே பெருமூச்சு விடவேணும்.!

    பருவநிலா புருவமுடன் படைத்திவளைப் படைத்தவனும்..

    ……….பாவலன்நானும்..கண்ட கனவுக்காட்சி நனவாகவேணும்.!

    ஒரு எண்ணிக்கையில் கண்டகனவுகள் கோடியானாலும்..

    ……….ஓரிரவுசேர்த்து வைத்தகனவுமொரு நொடியில் மறையும்..!

    வருத்தமுடன் குமுறுகிறேன்.!..வருவாயாநீ நிஜத்துடன்..

    ……….வாஞ்சையொடு வேண்டுகிறேன் இறைவாநீ அருள்வாயா.!

     

    எண்ணத்தில் தோன்றுவதில் ஆயிரம் வகையுண்டாமதில்..

    ……….ஏதொவொன்று ஆழமாய் ஊன்றிடினது கனவாகுமாம்.!

    கண்மூடியென் மனதில் கண்ணிறைந்த காரிகையாயுனைக்..

    ……….காண ஆவல்மிகுவதால்…அடிக்கடியென் கனவில்வருவாய்.!

    கிண்ணத்தில் நிரம்பியமதுவைப்போல்…கனவில் வந்தமாதுநீ..

    ……….கிட்டத்தில் வந்துவிடின் காதல்போதை உடன்தலைக்கேறும்.!

    பெண்ணெனும் உருவிலுன்னழகை உருவகமாய் என்மனதில்.

    ……….பெரிதாய்ச்சேர்த்து வைத்தகனவு….கலையுமோர் விடியலில்.!

    =============================

    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::11-09-17

    நன்றி:: படம் கூகிள் இமேஜ்

    Share