Tag: ரா. பார்த்தசாரதி

  • தண்ணீரும் இரத்தமும்

    ரா.பார்த்தசாரதி

     

    உலகில் மூன்று பங்கு தண்ணீரால் நிரம்பியதே

    ஏனோ மாநிலத்திற்கு, மாநிலம் கலகம் ஏற்பட்டதே ,

    வேற்றுமையில் ஒற்றுமை என்பது பொய்யானதே,

    தண்ணீரால் மாநிலத்தில் ரத்தவெள்ளம் ஆனதே !

     

    சுதந்திரம் அடைந்தது முதல் நதிநீர் இணைப்பு

    இன்னும் இவை காகித திட்டமே என மக்களின் நினைப்பு,

    நதிநீர் மாநிலத்தின் வேளாண்மைக்கு முக்கியத்துவம் ஆனதே

    விவசாயிகளின் கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டமும் நியாயமானதே !

     

    வாழ்க்கையில் விட்டு கொடுப்பவர்கள் என்றும் கெடுவதில்லை

    இது மாநிலத்திற்கும், மத்திய அரசிற்கும் பொருந்தாமலில்லை

    நீதி கேட்டும், சமரசம் செய்தாலும், பிரச்சனை தீர்ந்தபாடில்லை

    வன்முறையால் எதையும் தீர்க்க முடியாது என தெரியாமலில்லை !

     

    நடுவர் சொல்லுக்கும், நீதிபதி தீர்ப்புக்கும் மதிப்பு அளிக்கவேண்டும்,

    நீதியை நிராகரித்தால் எந்த மாநிலமும் துன்பப்படவேண்டும்

    இருவர் கூடி சமரசத்தால்  ஓர்   சமாதானம் ஏற்படவேண்டும்

    இதனால் இருவர்க்கும் பயன் உள்ளதாக இருக்கவேண்டும் !

     

    மக்களின் பொதுநலம் கருதியே நதிநீர் தீட்டப்படவேண்டும்

    ஜாதி, அரசியல் போன்றவை கலவாமல் இருக்கவேண்டும்

    மாநிலங்களிடையே இனவெறி நீங்கி, ஒற்றுமை நிலவ வேண்டும்

    ஜாதி, இனம் இவற்றிற்கு  ஊறு விளையாமல் இருக்கவேண்டும் !

     

    நதிநீர் பங்கீடு திட்டத்தை மத்திய அரசு விரைவில் அமலாக்கவேண்டும்

    மாநிலங்களின் பிரச்சனைகளை ஒன்றுகூடி  தீர்மானிக்கவேண்டும்

    நீரின்றி அமையாது உலகம் என்பது ஆன்றோர் மொழியாகும்

    நீரே மக்களின் தேவைக்கும், உணவிற்கும் இன்றியமையாததாகும் !

     

    Share
  •  எங்கே நிம்மதி ?

     

    ரா.   பார்த்தசாரதி 

    தனிமையையும், நிம்மதியையும் தேடாத மனிதன் இல்லை?

    எங்கே என்று பலரிடம் கேட்டும் சரியான பதில் இல்லை,

    ஒவ்வொருவரும்  வாழ்க்கையில் நினைக்காத நாள் இல்லை

    துறவிகள் காட்டிற்கு சென்றது தவத்திற்கா,தனிமைக்கா என்றறியவில்லை!

     

    நிம்மதியும், தனிமையும் எங்கே கிடைக்குமென மனிதன் எண்ணினான் ,

    அங்கே ஓர் இடம் தனக்கு வேண்டும்  என்றான் ,

    இருந்த இடத்தினிலே நிம்மதியும்,தனிமையும் கிடைக்குமா?

    இவை இரண்டும் மனம் மௌனமாய் இருந்தால் ஈடேறுமா ?

     

    நிம்மதியும், தனிமையும் அமைதியான இடத்தில்தான் தோன்றுமா ?

    இதனை நாளும் தேடித்தேடி  அலைவது வீண் என்று தோன்றுமா ?

    யோகிகளையும்  முனிவர்களையும்,கேட்டால் பதில் கிடைக்குமா ?

    அவர்களும்  அதை தேடித்தான் செல்கின்றனர் என கூறமுடியுமா ?

     

    தனிமையிலே இனிமை இல்லை,நடு இரவில் பகலவன் தெரிவதில்லை ,

    நிம்மதி என்பது    நம்   மனதிற்கு உட்பட்டதே என்று அறிவதில்லை ,

    தனிமையும், நிம்மதியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே ,

    இவ்வுலகில் எதுவுமே தனிமையில்லை,அமைதிகொண்ட மனமே நிம்மதி!

     

     

    Share
  • வாழநினைத்தால் வாழலாம்

    ரா.பார்த்தசாரதி

     

    வாழ்க்கையில்  ஏற்படும்  எதிர்பாராத  திருப்பங்கள் ,

    மனிதனின் மனதில் சட்டென்று மாறும் யோசனைகள்

    ஏன் நடந்தது என்று தெரியாத ஒரு   மன வருத்தம்

    மனதினில் சத்தம்  போடாமல் எழும்   ஆசைகள் !

     

    எதை கண்டும் நெஞ்சினுள் ஏற்படும் ஒரு ஏக்கம்

    கெட்டதை நினைத்து மனதினில் வேதனை கலந்த துக்கம் ,

    யார் மீதோ ஏற்படும் காரணம்மில்லாத  கோபம் !

    வெற்றி பெற முடியாமல், கண்ணீர் சிந்தும் தோல்வி !

     

    வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள்,

    வாழ்க்கையில் சந்தித்த மறக்க முடியாத உறவுகள்

    மனிதனின் மனதினில்  அலைபாயும் நிலையில்லாக் காதல்

    அவன் முன்னேற்றத்திற்காக செய்யும் செயல்கள்!

     

    மனித வாழ்க்கையில், விட முடியாத  தொடர்புகள்

    வாழ்க்கையில் விட்டொழிக்க முடியாத தொல்லைகள்

    வாழ்வில் மனிதனுக்கு ஏற்படும்   அவமானங்கள்

    உறங்கும்போது கலைய மறுக்கும் கனவுகள் !

     

    நிலையில்லாத வாழ்க்கையில் நிரந்தரத்தை நினைப்பதும்,

    வாழ்க்கையில், இன்ப, துன்பங்களை  சமமாக நோக்காமலிருப்பதும்  ,

    ஆறடி நிலமே சொந்தம் என அறியாமல் இருப்பதும்,

    உன்னுடன் வருவதோ நீ செய்த பாவ புண்ணியங்கள் என தெரிந்தும் !

     

    இன்றைய ஆடம்பரமும்,கலாசாரமும், மனிதனை வாழ விடுவதில்லை

    ஆண், பெண்  இருவர் சம்பாதித்தாலும்,  நிம்மதி என்பது இல்லை ,

    ஒருவக்கொருவர்  புரிதலுடன் , விட்டுக்கொடுத்தால் துன்பம்மில்லை

    மனிதனே, வாழ நினைத்தால் வாழலாம், வழியாய்  இல்லை !

     

     

     

    Share
  • கண் தானம் 

    ரா.பார்த்தசாரதி

     

    தானத்திலே  சிறந்தது அன்னதானம்

    தானத்திலே சிறந்தது ரத்ததானம்

    தானத்திலே  சிறந்தது  கண் தானம்

    இம்மூன்று  தானங்களும் சிறந்ததே

    இவ்வுலகில்  இன்றும் நடக்கின்றதே !

    அன்னதானம் பசியினைப் போக்கும்,

    இரத்ததானம்  உயிரினை   காக்கும் ,

    கண்தானம்   பார்வையை  அளிக்கும் !

    கண்ணாலே  காதல் மலரும்

    கண்ணே இரக்கத்தை உண்டாக்கும்

    இயற்கையின் எழிலை  ரசிக்கும்

    இறந்தபின்னும்  புகழ் சேர்க்கும்

    மனித வாழ்வினை ஒளிபெறச் செய்யும்

    கண் தானமே மனிதனுக்கு பெருமை சேர்க்கும்!

    கண் தானம் செய்வீர் ! அவனியில் சிறப்படைவீர் !

     

    Share
  • வெற்றி விநாயகனே

     

    ரா.பார்த்தசாரதி

     

                              பிரணவ  மந்திரத்தின்  முதலோனே 

                               வீனைதீர்க்கும் விநாயகப் பெருமானே ,

                               சங்கடங்கள்  தீர்க்கும்  இறைவனே 

                               வேழ முகத்தோடு  காட்சியளிப்பவனே 

                               அரக்கனை அழித்து மக்களை காப்பாற்றியவனே ,

                               மஹாபாரதத்தை வியாசருடன்  எழுதியவனே,

                               திருமாலின் மூத்த மருமகனே 

                               முருகனின்  மூத்த சகோதரனே 

                               அவ்வை பிராட்டிக்கு அருள் புரிந்தவனே

                               கடவுள்  எல்லாவற்றிலும் மிக எளியவனே

                               வீதியெங்கும்  எளிமையாய் காட்சியளிப்பவனே 

                               சதுர்த்தியில் பிறந்து, சங்கடங்களை போக்குபவனே,

                               உன் அருளை வேண்டுகின்றோம் வெற்றி விநாயகனே !

    Share
  • அவனவன் வாழ்க்கை

    ரா.பார்த்தசாரதி

     

    மழைத்துளிக்கு தெரியாது விழப்போவது நதியிலா, சேற்றிலா ?

    வீழ்ந்தபின்தான்  அதன்  விதி என்னவென்று  தெரிகிறது,

    ஆற்றில் விழுந்தால்  அனைவரது தேவையை தீர்க்கும்,

    சேற்றில் வீழ்ந்தால் துர்நாற்றத்துடன் பயனற்று போகும்!

     

    பூக்கும் மலருக்கு தெரியுமா,  சேருவது மணமாலையா, மரணமாலையா?

    அதன் விதி விற்பனை ஆகும்போதுதான் தெரிகின்றது,

    மணமாலையானால் எல்லோராலும் ஆசிர்வதிக்கப்படுகின்றது

    மரணமாலையானால் மிதிபட்டு மக்கி நாசமாய்  போகின்றது !

     

    மதிக்கும் பாதையில் செல்பவன் மகத்தான செயல் புரிகின்றான்

    மாபெரும் புகழுடன் சான்றோர்  போற்ற வாழ்கின்றான்

    மிதிக்கும் பாதையில் செல்பவன் மீளா தீமை அடைகின்றான்

    மிகுந்த வேதனைக்கு  ஆளாகி அனலிலிட்ட புழுவென துடிக்கின்றான் !

     

    மனிதனின் பிறப்பை  கணிக்கப்படுவது விதியின் தலை எழுத்தா?

    மனிதனின் குடிப்பிறப்பையும், சேரின்னத்தைச்  சேர்ந்ததா ?

    அவன் பிறந்த ஜாதகத்தினால் விதி  கணிக்கப்படுகிறதா ?

    அவனவன் வாழ்க்கை, அவனவன் கையில்தான் எனக் கூறுவதா?

     

     

    Share
  • மகனும் தாயும்

    ரா.பார்த்தசாரதி

     

    பிறந்த மேனியுடன் வெளியுலகிற்கு  வந்தேன்

    உனக்கு நான் மட்டற்ற மகிழ்ச்சி தந்தேன்

    எனக்காக  கண்விழித்து தூக்கத்தை மறந்தாய்

    உன் குருதியை எனக்கு பாலாகப் பொழிந்தாய்

    தோளையே  தூளியாக்கி  என்னை சுமந்து சென்றாய்

    கேட்டால், பிறக்கும்போது ஏற்பட்ட சுமையும், வலியை விடவா என்கிறாய் !

    உனக்கோ ஆயிரம்  பிரச்சனை  இருக்கும்

    என்னை கட்டியணைப்பதில் தான் ஆனந்தம் இருக்கும் !

    உனது மடியும், இருகால்களுமே எனக்குத்  தொட்டில்

    உனது மூச்சே எனக்கு அடைக்கலம் !

    நான் தவறு செய்தாலும் என்னிடம் அன்புடன் நேசிக்கும்

    நீயே  எனது கண்கண்ட தெய்வமாகும் !

     

     

     

    Share
  • கண்ணன் பிறந்தான்

     
    ரா.பார்த்தசாரதி

     
    இராமன் பிறந்தது நவமி தினத்திலே
    கண்ணன் பிறந்தது அஷ்டமி தினத்திலே,

    இராமனும், கிருஷ்ணனும் இரு அவதாரங்களே
    உலகில் அநீதியை அழித்த தெய்வங்களே

    ஒருத்தி மகனாய் சிறையில் பிறந்தான்
    ஓர் இரவில் மாறி கோகுலத்தில் வளர்ந்தான்

    சிறு வயதில் பல லீலைகள் புரிந்தான்
    சிறு விரலால் மலையை குடையாகப் பிடித்தான்

    ஆநிரை மேய்த்து கோபாலகிருஷ்ணன் என பெயர்பெற்றான்
    மலையை குடையாக பிடித்ததால் கிரிதரன் என அழைக்கப்பட்டான்

    மஹாபாரதத்தில் அர்ச்சுனனுக்கு தேர் ஓட்டினான்
    கீதை என்னும் வேதத்தை உபதேசித்தான்

    இராமன் தன்னுடன் பலரை சொர்க்கத்திற்கு அழைத்துச்சென்றான்
    கண்ணனோ வேடன் அம்பு பட்டு தனியே சொர்க்கத்திற்கு சென்றான் 

    Share
  •  சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!

    ரா. பார்த்தசாரதி

    எழுபது  ஆண்டுகள் சுதந்திரக்  காற்றைச் சுவாசித்தோமா?
    இன்றைய நாட்டின் நிலைமை அறிந்து  செயல்படுகின்றோமா?
    எதிலே முன்னேற்றம் கண்டோம் என அறிந்தோமா?
    சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என உணர்ந்தோமா?!

    ஒரு பக்கம் மனித மேம்பாடு, தொழில் மற்றும் விஞ்ஞான  வளர்ச்சி
    மறுபக்கம்  காட்டையும்,  விளை நிலங்களையும் அழிக்கும் முயற்சி
    நிலங்களைக் கூறு போட்டு விற்கும் அவலத்தைத் தடுப்பாருண்டோ?
    அரசாங்கமே  இதற்குத் துணைபோனால் நீதி நிலைப்பதுண்டோ? 

    நடுநிசியில் பெண் பயமின்றி வருவதே உண்மைச் சுதந்திரம்
    பட்டப் பகலில் பெண் தனிமையில் வருவதே இன்று மிகக் கடினம்
    கொலையும், கொள்ளையும் பட்டப் பகலிலே நடக்கின்றதே
    சுதந்திரத்தின் பெயரில் நாடகம் நடத்தப்படுகின்றதே!

    பல தியாகிகளின் உயிர்  அர்ப்பணிப்பில்  சுதந்திரம் பெற்றோம்
    அந்தமான்மற்ற சிறைகளில் தியாகிகள்  பட்ட துன்பத்தை அறியோம்
    இதனை அறிந்தால் எல்லோர்க்கும் சுதந்திரத்தின் அருமை புரியும்
    சுதந்திரம் சும்மா கிடைக்கவில்லை என உணர்ந்தாலே போதும்!

    சுதந்திரம் என்பது தந்திரமாகச் செயல்படுவது அல்ல
    பேச்சுரிமை, எழுத்துரிமை என்பது காகிதத்தில் மட்டும் அல்ல
    நாட்டின் உரிமைச் சாசனம் எழுதிவிட்டால் பெருமை அல்ல
    தனிமனிதனின் உரிமையும், மேம்பாட்டையும் கொண்டதாகும் அது!

    வேற்றுமையில் ஒற்றுமை மாநிலங்களிலே நிலவுகிறதா?
    ஜாதி, இனம் காட்டிச்  சலுகைகளைப்  பெற நினைப்பதா?
    நாட்டின் பொருளாதாரமும், நாணயத்தின் மதிப்பும் உயர்ந்ததா?
    நாட்டில் நதிநீர்ப் பிரச்சனையும், குடிநீர்ப் பிரச்சனையும் தீர்ந்ததா

    இளைஞர்களே!  உங்கள் கையில்தான் சுதந்திரத்தின் வளர்ச்சி
    கொடுமைகளையும், அநீதிகளையும் கண்டு  எழுகின்ற எழுச்சி
    தியாகிகளின் தியாகத்தை என்றும் நினைவு கூருங்கள்!
    நாட்டினை நல்வழிப்பாதையில்  அழைத்துச் செல்லுங்கள்!

     

     

    Share
  • வெள்ளைப் பனி மலை

    ரா.பார்த்தசாரதி

    Mt Rainer

    பனிபடர்ந்த மலையின் மேலே

    அழகினை கண்டு நின்றேன் சிலைபோலே ,

    பச்சை வண்ணப்போர்வை மலைமகளை சுற்றிட,

    நடுவே சுற்றி, நெளிந்து வாகனங்கள் சென்றிட !

    பச்சைவண்ண என்றும் கண்களுக்கு குளிர்ச்சி 

    அதுவே மனிதனின் மனதிற்கு தரும் புத்துணர்ச்சி !

    இயற்கை அன்னையின் அழகினை ரசித்தோமே  

    மனமகிழ்ச்சி கொண்டு மனதினில் பூரிப்படைதோமே!

    மலைமேல் கதிரவன் ஒளி பட்டாலே 

    வெண்ணிற பனிமலை தன் வெண்ணிறாடை நீக்காமலே !

    ஒளிர்ந்து தென்றல் காற்று வீசியதே 

    அருவியும், சிற்றோடையும் நடனமாடி வந்ததே !

    இயற்க்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமே 

    எனது உனது என்பதெல்லாம்  இடையில் மாறும்  எண்ணமே ! 

    Share
  • நினைக்கத் தெரிந்த மனமே

    ரா.பார்த்தசாரதி

     

    ஆயிரம் எண்ணங்கள் உதயம் நம் மனதினிலே

    எண்ணங்களும், ஆசைகளும், தோன்றும் நம் நெஞ்சத்தினிலே,

    அலை பாயும், எண்ணங்களை  வடிகாலாய் வடித்து

    பழைய திண்ணை பேச்சையும் சற்றே மறந்தோமே !

     

    உழைத்து களைத்த  வேளையில் உறவுகள் சூழ

    உணர்வுகளை பகிர்ந்து  மனம் தெளிந்தபோது

    தொலை காட்சிக்கு முன், கணிணிக்கு பின்

    நேரத்தை பிறர்க்கென நல்ல நேரத்தை வீணடித்தோமே!

     

    நல்ல நேரத்தை வீணடித்து, குறிக்கோள்  இல்லா நிலைமை,

    நேரம் நம்மை விழுங்கச் செய்வதே இக்கால  கொடுமை,

    கைபேசியும், வலைதளமும், நம்மை கடத்தும்மே

    எதையும், நினைத்துப் பார்க்கும் தகைமை இழந்தோமே !

     

    இன்றைய நாகரிகத்தின் பொருள்  ஆடம்பரம்

    இது  எழுதா சட்டமாகி   நம் உடைமையாகியதே ,

    நேர்மையையும், உழைப்பின் மேன்மையையும் மதிப்பதில்லை,

    கசங்காமல் காசு பணம் சேர்க்கத் தவறுவதில்லை !

     

    இருப்பதைக்  கொண்டு  ஆனந்தம்  காண மறுக்கின்றோமே

    பேராசையால் நற்குணத்தை தீயிலிட்டு பொசுக்கின்றோமே

    நேசத்தையும், பாசத்தையும் வெளிப்படுத்த நேரமில்லையே

    சுகம் என்பது நமக்கு   வரமாய் என்றும் கிடைப்பதிலையே !

     

    மனித நேயத்தை இழந்தே வாழ்க்கையினை தொலைகின்றோம்,

    பகிர்தல், பாசம்,அரவணைப்பு,  பண்பின் அடித்தளம் என்கிறோம்

    உள்ளங்களால்   உயர்ந்த  சமூகமே வரலாற்றில் ஏற்படட்டுமே

    நமது  வாழ்க்கை முழுதும் இன்பமும்,உறவும் மிளிரட்டுமே !

     

    Share
  • உலக யோகா தினம்

     

     

    ஆய கலைகள் அறுபது நான்கு கலையே
    யோகாவும் இதனில் அடங்கும் கலையே
    யோகிகளும், துறவிகளும் வளர்த்த கலையே
    நமது நாட்டினில் தோன்றிய கலையே !
    அனுதினம் யோகாசனங்களை செய்ய பழகுங்கள்
    அது உடலினை உறுதி செய்து, நோய் நீக்கும் இடமாகும் 1

    உடற்பயிற்சியும், நடை பயிற்சியும் தினமும் மேற்கொள்ளுங்கள்
    அது இளமை என்னும் ரகசியம் தோன்றும் இடமாகும் !

    யோகாசனங்களில் பல வகைகள் உண்டு
    சில யோகாசனங்களே மிகுந்த சிறப்புண்டு
    சிறுவர் முதல், முதியோர்கள் வரை யோகா பழகலாம்
    அனுதினம் இதனை கடைபிடித்தால் நோய்யின்றி வாழலாம் !

    நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்,
    யோகாசனங்களை செய்து உடல் நலனை பேணுங்கள்
    யோகாசனங்களின் நன்மையினை உலகிற்கு எடுத்துரையுங்கள்
    இதுவே உலக யோகா தினம் அறிவுறுத்தும் கருத்தென உணருங்கள் !

    ரா.பார்த்தசாரதி

    Share
  • பொன்னான வாழ்வு

    ரா.பார்த்தசாரதி

     

    உண்மை உறவுகள் கிடைப்பது அறிதன்றோ !

    கிடைத்திட்ட உறவினை இழப்பது கொடிதன்றோ

     

    நிழலுக்கு ஒரு போதும் மதிப்புண்டோ

    நிஜமில்லா உறவுகள் என்றும் நிரந்தரமுண்டோ !

     

    சொல்லும், பேச்சும் என்றும் சொந்தமில்லை

    வில்லற்ற அம்பு எய்யப்படுவதில்லை !
    பொய்மைக்கு என்றும் புகழிடம் இல்லை

    பொறுப்பில்லா பிள்ளைக்கு என்றும் வாழ்க்கையில்லை !
    பொறுமையோடு இருப்பவனுக்கு என்றும் தொல்லை இல்லை

    செல்வத்துடன் வாழ்பவனுக்கு இரக்கம் என்பதில்லை!
    வெகுளியாய் திரிபவனுக்கு வாழ்வில் வளமில்லை

    வளமோடு வாழ்ந்திட தகுதியான மனிதன் கிடைப்பதில்லை!
    தோல்வி ஒன்றே சந்தித்தவன் என்றும் சோர்வதில்லை

    வெற்றி கண்டவன் தலைகனத்தால் அழிவு உண்டாகாமலில்லை !

     

    சொல்லொன்றும் செயலொன்றும் என வாழ்வது,

    பிறர்சொல் படாமல் மடிவது பெரிது !

     

    பிறர் மனம் நோகாமல் வாழ்க்கை நடத்துவது நல்லது

    பிறர் வளம் செழிக்க பாடுபடுவதே நல்லது !
    பின் நாளில் எந்நாளும் பொன்னாக மாறிடுமே

    உந்தன் வாழ்வும் சீரும், சிறப்புடன் இருந்திடுமே !

    Share
  • கோடை மழை

     

    கடுங்கோபம் கொண்டு கதிரவன் சினந்து எழுந்தான்

    தன் வெப்பத்தை கடுமையாய் உமிழ்ந்தான்

    சில இடங்களிலே முகில் சூழ்ந்து மழை பொழியும்

    வீதிகள் தோறும் மழை நீரோடும் !

    கோடை மழை வெப்பத்தை தணிக்கும்

    மக்களின் தாகத்தை சற்றே தீர்க்கும்,

    கோடை காலத்திலே குற்றால அருவிலே

    நீராடும் போது மனம் மகிழும் வேளையிலே !

    வெய்யிலில் அலைபவனுக்குத்தான் நிழலின் அருமை தெரியும்

    குளிர் பானங்கள் எல்லாம் தாகம் தீர்க்கும்,

    கோடை மழை வந்தாலும் சுகமாய் நனைவேனே

    மழை வந்தாலே உள்ளத்தில் மகிழ்ச்சி கொள்வேனே !

    ரா.பார்த்தசாரதி

    Share
  • ஒரு தாயின் நினைவு!  

    -ரா.பார்த்தசாரதி

    பண்டிகை நாட்களில் யாரோ
    உணவு கொடுத்து உதவுகிறார்கள்! 
    தலைவாழையில் விதவிதமான 
    உணவு வகைகள் பல… 

    வடையைப் பார்த்ததும்  பெரிய 
    மகனுக்குப் பிடிக்குமே என்றது மனசு! 

    மெல்லிய பூரியும், சப்பாத்தியும்
    மகளுக்குப் பிடிக்கும் என்றது மனசு! 

    இலையில் போட்ட பருப்பும், நெய்யும்
    பேரனுக்குப் பிடிக்கும் என நினைத்தது! 

    அப்பளம்  இளைய மகளுக்குப் பிடிக்குமே 
    என எண்ணியது  மனசு! 

    பால்பாயசம் மறைந்த கணவனுக்கு 
    மிகவும் பிடிக்குமே என்றது உள்ளம்! 

    இப்படி எல்லாவற்றையும் பார்த்துச் 
    சாப்பிடப்  பிடிக்காமல் தன் விருப்பங்களைத் தள்ளிவைத்து 
    நினைவலையில் நீந்திக்கொண்டு, தன்னலமற்ற தனிமரமாய் 
    முதியோர் இல்லத்தில்  வசிக்கிறாள்  ஓர்  தாய்! 

    தாய்மனம்  பித்து, பிள்ளைகள் மனம் கல்லு 
    யாவரும் அறிந்த  பழமொழியன்றோ!

     

     

    Share