கடுங்கோபம் கொண்டு கதிரவன் சினந்து எழுந்தான்

தன் வெப்பத்தை கடுமையாய் உமிழ்ந்தான்

சில இடங்களிலே முகில் சூழ்ந்து மழை பொழியும்

வீதிகள் தோறும் மழை நீரோடும் !

கோடை மழை வெப்பத்தை தணிக்கும்

மக்களின் தாகத்தை சற்றே தீர்க்கும்,

கோடை காலத்திலே குற்றால அருவிலே

நீராடும் போது மனம் மகிழும் வேளையிலே !

வெய்யிலில் அலைபவனுக்குத்தான் நிழலின் அருமை தெரியும்

குளிர் பானங்கள் எல்லாம் தாகம் தீர்க்கும்,

கோடை மழை வந்தாலும் சுகமாய் நனைவேனே

மழை வந்தாலே உள்ளத்தில் மகிழ்ச்சி கொள்வேனே !

ரா.பார்த்தசாரதி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.