கோடை மழை
கடுங்கோபம் கொண்டு கதிரவன் சினந்து எழுந்தான்
தன் வெப்பத்தை கடுமையாய் உமிழ்ந்தான்
சில இடங்களிலே முகில் சூழ்ந்து மழை பொழியும்
வீதிகள் தோறும் மழை நீரோடும் !
கோடை மழை வெப்பத்தை தணிக்கும்
மக்களின் தாகத்தை சற்றே தீர்க்கும்,
கோடை காலத்திலே குற்றால அருவிலே
நீராடும் போது மனம் மகிழும் வேளையிலே !
வெய்யிலில் அலைபவனுக்குத்தான் நிழலின் அருமை தெரியும்
குளிர் பானங்கள் எல்லாம் தாகம் தீர்க்கும்,
கோடை மழை வந்தாலும் சுகமாய் நனைவேனே
மழை வந்தாலே உள்ளத்தில் மகிழ்ச்சி கொள்வேனே !
ரா.பார்த்தசாரதி