விஞ்சுமெழில் வண்ணக் காட்சி!

0

பவள சங்கரி

motherindia

எண்ணமதில் தோன்றுதொரு காட்சி – வண்ணக்
கோலங்களில் நல்லோரின் ஆட்சி!
வீடுதோறும் மங்கல முழக்கம்
வீதிதோறும் நவீனமயமான பள்ளி
கேடுதீரும் பெற்றோரும் துள்ளி
நாடு முற்றிலும் நல்லுழைப்பாளிகள்
விஞ்சுமெழில் நலமுடன் வந்துதித்தே
கொஞ்சுமொழி சிறாருடன் கூடிக்களித்தே
கேடின்றி வாழ வழியமைப்போர் நாடியே
கேண்மை கொண்டே ஏற்பீர் அவராட்சியே!
மேன்மை கொண்டே ஒளிருமேயவர் மாட்சியே!
தங்குமின்பம் என்றும் தகைமையின் நீட்சியே!
தரணிபோற்றும் பாரதத் தாயவள் காட்சியே!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.