உலக செவிலியர் தினம் (மே 12)
க. பாலசுப்பிரமணியன்
தாய்மையை தத்தெடுத்த தனிக்குலமே,
தூய்மையைத் தோள்சுமக்கும் நற்குணமே !
துயர்நீக்கப் பறந்துவரும் புள்ளினமே
துயில்காத்துக் கண்விழிக்கும் உறவினமே!
கண்களிலே கொண்டதுவோ கருணைமொழி
கைகளிலே சேவைசெய்யும் கடமைவழி
கனிவுடை சொற்களெல்லாம் ஆற்றும்வலி
கலங்குகின்ற மனம் காக்கும் தீபஒளி !
கருவோடு பிறவாதாது உன் உறவன்றோ
கண்ணுக்குத் தெரிந்த கருணை வடிவன்றோ
மழலைக்கும் முதுமைக்கும் கண்மணியன்றோ
மாண்புடைய சேவைக்கு நீ அணியன்றோ!
கூகிள் படத்திற்கு நன்றி.