க. பாலசுப்பிரமணியன்

nurse

தாய்மையை  தத்தெடுத்த தனிக்குலமே,

தூய்மையைத்  தோள்சுமக்கும் நற்குணமே !

துயர்நீக்கப்  பறந்துவரும் புள்ளினமே

துயில்காத்துக் கண்விழிக்கும் உறவினமே!

 

கண்களிலே கொண்டதுவோ கருணைமொழி

கைகளிலே சேவைசெய்யும் கடமைவழி

கனிவுடை சொற்களெல்லாம் ஆற்றும்வலி

கலங்குகின்ற மனம் காக்கும் தீபஒளி !

 

கருவோடு பிறவாதாது உன் உறவன்றோ

கண்ணுக்குத் தெரிந்த கருணை வடிவன்றோ

மழலைக்கும் முதுமைக்கும் கண்மணியன்றோ

மாண்புடைய சேவைக்கு நீ அணியன்றோ!

 

கூகிள் படத்திற்கு நன்றி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *