Author: க. பாலசுப்பிரமணியன்

  • வாழ்ந்து பார்க்கலாமே 50

    வாழ்க்கை – நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் ஒரு பரிசு

    வாழ்க்கையின் குறிக்கோளே மகிழ்ச்சியாக வாழ்வதுதான் என்ற சொற்கள் காதுக்குக் கேட்க இனிமையாக இருக்கின்றது. ஆனால் நம்மால் அப்படி வாழ முடிகின்றதா? நமக்கு எது மகிழ்வைத் தருகின்றது? பணம், புகழ் , பதவி, உறவுகள், ஆளுமை போன்ற பலவற்றை நாம் வாழ்க்கையில் சேர்த்துக்கொண்டும் மகிழ்ச்சியை நாம் தொடர்ந்து நிலை நாட்டிக்கொள்ள முடியவில்லையே!  மகிழ்ச்சி என்பது மிகச் சிறிய காலக் கட்டங்களில் வந்து மின்னலைப் போல ஒளிர்ந்துவிட்டு மறையக்கூடியதா அல்லது நீலவானில் குளிர்ந்து ஒளிவிட்டு நிற்கும் முழுநிலவைப்போன்றதா?  அது சரி, நாம் மகிழ்ச்சியாக இருந்தாலும் உள்ளத்தில் அமைதியோடு இருக்கின்றோமா? உள்ளத்தில் அமைதியைக் கொடுப்பது மகிழ்ச்சியா, நிறைவா அல்லது ஆளுமையா? நிறைவாக இருக்கும் நேரத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்கின்றோமா? பல கேள்விகள் நம் முன்னே தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன? இந்தக் கேள்விகள் புதிதல்ல. நம்முடைய புராண காலத்துக் கதைகளை படிக்கும் பொழுது நமக்குத் தெரியும் இது போன்ற கேள்விகளைத் தான் நசிகேதன் எமனின் அரண்மனை வாசலில் நின்றுகொண்டு எமனிடம் கேட்டான்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் அவனுக்கு பதில் கொடுத்த கூற்றுவன்-ஐம்பொறிகளால் கிடைக்கின்ற மகிழ்வுகளும் மற்றும் நாம் விரும்பும் தேவைகளின் நிறைவில் கிடைக்கின்ற மகிழ்வும் ‘பிரேயஸ்” என்று அழைக்கப்படும். இவைகள் நிரந்தரமல்ல. சிற்றின்பங்கள். அதே நேரத்தில் வாழ்க்கையின் முழுமையை நன்கு அறிந்து எல்லாமே நமக்குச் சொந்தம் என்ற எண்ணத்திலும் எதுவுமே நமக்குச் சொந்தமில்லை என்ற எண்ணத்திலும் பற்றற்ற பற்றை நாம் உணர்ந்து தாமரையிலைத் தண்ணீர்போல் வாழ்ந்தால் வாழ்வின் துயரங்கள் நம்மைத் தாக்காது என்ற ஒரு உண்மையை எடுத்துரைக்கின்றான்.

    அப்படியென்றால் நாம் மனத்தைக் கட்டுப்படுத்தவேண்டுமா? அல்லது நமது மனதில் ஏற்படும் ஆசைகளையும் உணர்வுகளையும் ஓரங்கட்டி ஒதுக்கிவிடவேண்டுமா ? இரண்டுமே மிகவும் கடினமான செயல்கள்தான்? பல துறவிகளால் கூட இந்த நிலையை அடையமுடியவில்லையே!! இதைப்பற்றி அலசி ஆராய்ந்த நமது முன்னோர்கள் மனதை ‘நிலைப்படுத்திடுவது’ மனதை ‘ஒருமுகமாக்குவது’ பற்றிய பல அறிய தத்துவங்களை நம் முன் வைத்தார்கள்.

    இதன் முதல் படியே மனதின் வேகத்தைக் கட்டுப்படுத்தி அங்கே ஏற்படும் சபலங்களையும் சஞ்சலங்களை சூறாவளியில் பறந்துசெல்லும் ஒரு இலையைப் போல் பறக்கவிடாமல் உண்மையை அறிந்து அமைதியாக இருக்கப்  பழக்கப்படுத்துவதான். இதையே யோகதத்துவங்களை விளக்கிக்கூறும் பதஞ்சலி முனிவர் தன்னுடைய முதல் பாடமாகக் கூறுகின்றார். ‘சித்தத்தை ஒருமுகப்படுத்துவதுதான் யோகநிலையென்று’.

    இப்படிப்பட்ட தத்துவங்களெல்லாம் எனக்குப் புரியாது. நடைமுறைக்கு உதவுவதுமாதிரி சொல்லுங்கள் என்கிறார் என் நண்பர். வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு என்ன வழி?

    1. வாழ்க்கை இனிமையானது. ஆனால் அந்தப் பாதையில் துயரங்களும் நமக்காகக் காத்திருக்கும். அதை நாம் இன்பத்திற்குச் சமமாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.
    2. நாம் இருக்கும் இடத்தில் நின்றுகொண்டிருந்தால் மகிழ்ச்சி நம்மைத் தேடி வராது. முயற்சிக்க வேண்டும் வாழ்ந்து பார்க்கவேண்டும். முயற்சி திருவினையாக்கும் .
    3. நமது வாழ்க்கை நமக்கு மட்டும் சொந்தமானது. இதை மற்றவர்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு நம்முடைய தரத்தையோ தனித்தன்மையையோ குறைத்துக்கொள்ளவோ மாற்றிக்கொள்ளவோ முயற்சி செய்வது தவறானது. நமது வாழ்க்கையை நாம் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும்.
    4. தனிமரம் தோப்பாகாது. ஒரு சமுதாயத்தில் நாம் சேர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். எனவே மற்றவர்கள் துயரப்படும்பொழுது நாம் மட்டும் மகிழ்வோடு இருக்கமுடியாது. நமது வாழ்வின் மகிழ்வே நாம் மற்றவர்களுக்கு எவ்வாறு உபயோகமுள்ளவர்களாக இருக்கின்றோம் என்பதை பொறுத்ததுதான். கூடிவாழ்ந்தால் கோடி நம்மை.
    5. உண்மையான மகிழ்வு பொருட்களையோ அல்லது செல்வத்தையோ சேர்ப்பது அல்ல. “பொருட் செல்வம் ” எவ்வளவுக்கெவ்வளவு தேவையோ அதுபோல ‘அருட் செல்வம்” தேவை. எனவே இறையுணர்வோடு வாழ்ந்து எல்லா உயிர்களிலும் இறைவனின் பிரதிபலிப்பை உணர்ந்து செயல்படுதல் அவசியம்.
    6. வாழ்க்கை ஒரு குதிரைப் பந்தயம் அல்ல. வேகம் தேவையில்லை. நிதானம் தேவை. இறைவனாலும் இயற்கையினாலும் நமக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தையும் காலத்தையும் சிறப்பாகப் பயன்படுத்தத் தெரிந்து கொள்ளவேண்டும். காலம் பொன்னானது. “உலகத்தில் உன்னை யார் வேண்டுமானாலும் மன்னித்து விடலாம். ஆனால் நீ நழுவவிட்ட நேரம் உன்னை என்றும் மன்னிக்காது.” என ஆங்கிலக் கவிஞர் உருட்யார்ட் கிப்ளிங் (Rudyard Kipling) என்பவர் கூறுகின்றார்.
    7. இருப்பதில் நிறைவு இல்லாமல் இல்லாததையோ அல்லது தேவையில்லாதையோ அல்லது நமது சக்திக்கும் முயற்சிக்கும் அப்பாற்பட்டதையோ தேடுதல் அறிவின்மைக்கு அறிகுறி. “நிறைவு” அமைதியான வாழ்க்கைக்கு முதல் படி.
    8. அறிவுக்கண்கள் எப்பபோழுதும் திறந்திருக்க வேண்டும். “கற்றல்” -தொட்டில் முதல் கடைசி மூச்சுவரை நடக்கக் கூடிய ஒரு இயல்பான செயல். கற்றலின் மூலமாக நமது வாழ்வை வளப்படுத்திக்கொள்ள வேண்டும். என்று நமது கற்றலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றோமோ அன்றே நமது வாழ்க்கையின் துடிப்புக்கள் அடங்க ஆரம்பித்துவிடும். கற்க மறுக்கின்ற ஒருவன் ஒரு நடைப்பிணத்திற்கு சமமானவன் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்.
    9. “வெற்றி-தோல்விகள்” வாழ்வில் ஏற்படும் சில நிகழ்வுகள். அவைகள் நம்மை பாதிக்கக்கூடாது. வாழ்வில் என்றும் “மேன்மை” (Excellence)யைத் தேடவேண்டும். “மேன்மையைத்” தேடும் பாதையில் பல வெற்றிகளும் சில தோல்விகளும் நமக்குக் கிடைக்கலாம். ஆனால் மேன்மை (Excellence) என்ற இலக்கு மிகச் சிறப்பானது.
    10. சிறப்பாக வாழ நமது வாழ்க்கைப் பாதைக்குச் சில ஒழுக்கங்களும் கட்டுப்பாடுகளும் தேவை. இவைகளை நமக்கு நாமே கொடுத்துக்கொள்ள வேண்டும். நமக்கு மற்றவர்களால் கொடுக்கப்படும் கட்டுப்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் நம்முடைய கட்டுப்பாடற்ற சிந்தனைக்கு உதாரணங்கள். நமக்கு நாமே முன்னுதாரணமாக இருத்தல் சிறப்பானது.
    11. தன்னம்பிக்கை வாழ்வின் வளர்ச்சிக்கு நாம் இடும் உரம். தன்னம்பிக்கை இல்லாத செயல்களும் தன்னம்பிக்கை இல்லாத ஈடுபாடுகளும் தன்னம்பிக்கையில்லாத முயற்சிகளும் விழலுக்கிறைத்த நீர்போல் காலப்போக்கில் தோல்விகளையே தரும்.
    12. மற்றவர்களைப் பாராட்டக் கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களை நாம் மனம் திறந்து பாராட்டும் பொழுது நம்முடைய ஆணவம் அடிபட்டுப் போகின்றது. ஆணவமற்ற பணிவுடன் கூடிய அறிவும் திறனும் எல்லோராலும் போற்றப்படும்.
    13. உடல் நலம், மன நலம் ஆகிய இரண்டையும் பேண வேண்டும். நலமில்லாத உடலும், நலமில்லாத மனமும் முரண்பாடுகள். ஆகவே சிறப்பாகவும், மகிழ்வோடும் வாழ்வதற்கு இந்த இரண்டையும் இணைந்து போற்றினால்தான் முழுமையான வாழ்வுக்கும் வளர்ச்சிக்குமான பலன் கிட்டும்.
    14. எப்பொழுதும் ஆக்கபூர்வமான நேர்மறை எண்ணங்களோடு (Positive Thinking) வாழவேண்டும். நேர்மறையான எண்ணங்கள் கொண்டவர்களின் சூழலில் இருத்தல் அவசியம். எதிர்மறையான எண்ணங்களும் அப்படிப்பட்ட சிந்தனைகளில் வாழ்பவர்களும், கூடஇருந்தே நமது தோல்விக்கு வித்திட்டுக் கொண்டிருப்பார்கள். எதிர்மறை எண்ணங்கள் நம்மை பின்னோக்கித் தள்ளும்.
    15. “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் வாழ்க்கை என்றும் இன்பமில்லை.” எதிர்பார்க்காத, நினைத்துக்கூடப் பார்க்க முடியாத சந்திப்புக்கள் வாழ்க்கையில் நம்முடைய திறன்களைக் காட்டக் கிடைக்கும் வாய்ப்புக்கள். அவைகளை சந்தித்து முன்னேறக் கற்றுக்கொள்ளவேண்டும்.

    வாழ்க்கை வாழ்வதற்கே !  வாழ்ந்து பார்க்கலாமே !!

    (நிறைவு)

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 49

    மகிழ்ச்சியை எங்கே தேடுவது? – க. பாலசுப்ரமணியன்

    “என்னங்க, ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிற மாதிரித் தெரியுதே ” என் மனம் என்னைப் பார்த்துக் கேட்டது.

    “அப்படியா… உங்கள் கண்ணுக்கு வேண்டுமானால் நான் மகிழ்ச்சியாக இருப்பதுபோலத் தெரியலாம். எனக்குத் தானே தெரியும் என் துயரம்…” நான் சற்றே முனகினேன்.

    பல நேரங்களில் நமக்கு நாம் மகிழ்ச்சியாக இருக்கின்றோமா அல்லது துயரத்தில் இருக்கின்றோமா என்று கூடாது தெரியாமல் இருக்கின்றோம். எது நமக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தருகின்றது எது துயரத்தைத் தருகின்றது என்றுகூட அறியாமல் தவிக்கின்றோம்.

    “அப்படியில்லீங்க.. நல்ல பசித்த வேளையில் அருமையான சுவையான சாப்பாடு கிடைத்தது, ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றது” என்கிறார் ஒருவர்.

    “சார். ரொம்ப நாள் கழித்து நான் எதிர்பார்த்த பதவி உயர்வு எனக்கு கிடைத்தது. மகிழ்ச்சியாக உள்ளது.” என்கிறார் இன்னொருவர்.

    “சாதித்துவிட்டேன் சார். என்னிடம் இதைச் செய்ய முடியாது என்று சவால் விட்டவர்கள் முகத்தில் கரிபூசிய மாதிரி நான் சாதித்துவிட்டேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றது. ” இது இன்னொரு நண்பர்.

    இப்படி பல பேர்கள் நடுவில் “அந்தப் பையன் படிக்க ரொம்ப கஷ்டப்படுகின்றான். அவனை சரியாக ஆதரிக்க யாருமில்லை. ஏதோ என்னால் முடிந்தது அவனுக்கு ஒரு வருட கல்லூரிப் படிப்புக்கான பணத்தை நான் கட்டினேன். ரொம்ப மகிழ்வாகவும் நிறைவாகவும் இருக்கிறது” என்று சொல்லும் இன்னொருவர்.

    தங்கள் மகிழ்ச்சிக்கான காரணங்களை பரிமாறிக்கொள்ளும் உலகில் உண்மையான மகிழ்ச்சி எங்கே இருக்கின்றது என்ற கேள்வி நம்முன்னே எப்பொழுதும் கேள்விக்குறியாகவே நிற்கின்றது.

    மகிழ்ச்சியின் பரிமாணங்களை அர்ச்சுனனுக்கு விளக்கும் கண்ணன் பகவத் கீதையில் மகிழ்வின் மூன்று பரிமாணங்களை விளக்குகின்றார். முதலாவதாக புலன்களால் கிடைக்கும் மகிழ்ச்சி. உணவு, தூக்கம், சிற்றின்பம் போன்ற பல அனுபவங்களால் ஒருவருக்கு கிடைக்கும் மகிழ்ச்சி. ஐம்பொறிகளின் பசியினால் தூண்டப்பட்டு நாம் செய்யும் பல செயல்களினால் நமக்கு கிடைக்கின்றது. இது சிறிய நேரத்திற்கு மட்டும் கிடைக்கக் கூடியது. இந்த அனுபவங்களால் கிடைக்கும் உணர்வுகள் காலாவதியாகும் பொழுது இதன் தேவைகளும் தாக்கங்களும் மீண்டும் மீண்டும் நம்மை வாட்டிவதைக்கும். இது ஒரு தீராப் பசி.

    இரண்டாவதாக பதவி, புகழ், மரியாதை, மற்றும் நம்முடைய தொழில் சாதனைகளால் நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி. இது முந்தியத்தைக் காட்டிலும் சற்றே உயர்வானது. இருந்தாலும் இவைகளும் காலத்தால் கட்டுப்பட்டவை. தொடர்ந்து புகழும், பதவியும், மரியாதையும் கிடைக்கும்வரை மனம் ஒருவிதமான பெருமையையும் நிறைவையும் அனுபவித்துக்கொண்டிருக்கும். அவை நீங்கியவுடன் அவைகள் இல்லாத தாக்கத்தில் மனம் வேதனையில் துவண்டு விடும். அவை ஒரு மனிதனின் உண்மை நிலையை மறைத்து மனதில் ஒருவித மாயையை உருவாக்கிக்கொண்டிருக்கும்.

    மூன்றாவதாகக் கிடைக்கின்ற மகிழ்ச்சி நம்முடையது என்று நாம் நினைக்கின்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பொழுதும், தனித்துவத்தை விட்டு விலகி இந்த உலகிற்கு நம்மை அர்பணித்துக் கொள்ளும்பொழுதும், சேவை மனப்பான்மையுடன் செயல் படும்பொழுதும், தியாக மனப்பான்மையுடன் செயல்படும்பொழுதும் கிடைக்கின்ற ஒரு நிறைவே ஆகும். இதுவே உண்மையான மகிழ்ச்சி.

    எனவே மகிழ்ச்சியின் பல நிலைகளை நாம் புரிந்துகொண்டு செயல்படும் பொழுது நமக்கு அதன் உண்மையான பொருளும் அதனுடன் சேர்ந்த உயரிய உணர்வுகளும் தெளிவாகின்றன.

    “மனித வாழ்க்கையின் அடிப்படை ஆதாரமே மகிழ்ச்சிதான்” என்று பகவான் ரமண மகரிஷி கூறுகின்றார். “மகிழ்ச்சியைத் தேடுவது தவறல்ல. ஆனால் அதை உன்னுள்ளே தேடவேண்டும். வெளியே தேடுவதால் பயனில்லை.” இதே கருத்தை பிரதிபலிக்கும் வண்ணம் பல அறிஞர்கள் “துயரம் நம்மைத் தேடி வருவதில்லை. நாம்தான் துயரத்தைத் தேடித் செல்லுகின்றோம்” என்ற கருத்தை முன்வைக்கின்றனர். “மகிழ்ச்சியே வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளும் பொருளுமாகும்.” என்று பேரறிஞர் அரிஸ்டாட்டில் விளக்குகின்றார்.

    ஆங்கில மொழியின் மிகச் சிறந்த கவிஞராக விளங்கிய மில்டன் தனது பாரடைஸ் லாஸ்ட் என்ற கவித்தொகுப்பில் “மனம் அது இருக்கும் இடத்தில தான் இருக்கின்றது. அதை சொர்கமாகவோ அல்லது நரகமாகவோ ஆக்குவது நமது கையில்தான் இருக்கின்றது.” (“The mind is its own place, and in itself can make a heaven of hell, a hell of heaven..”)என்று எளிதாக எடுத்துரைக்கின்றார்.

    “அதுசரிங்க… இந்த மகிழ்ச்சியை அடைய என்னதான் வழி?” தூரத்திலிருந்து ஒருவரின் கேள்வி எனது காதில் விழத்தான் செய்கின்றது.

    கெளதம புத்தர் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் கூறுகின்றார்.
    “மகிழ்ச்சிக்கு வழியென்று எதுவும் கிடையாது. மகிழ்ச்சியேதான் வழி.”(There is no path to Happiness: Happiness is the path” ) என்ன அருமையான வார்த்தைகள் !

    எப்பொழுது மகிழ்ச்சியை நமது உள்ளுணர்வாக ஏற்றுக்கொள்ளுகின்றோமோ அப்பொழுது நாம் செய்யும் எல்லாச் செயல்களிலும் மகிழ்ச்சியைக் காண முடியும். செய்யும் செயல்களின் பலன்களில் கிடைக்கும் மகிழ்வைவிட அதைச் செய்யும் செயல்பாடுகளிலும் அந்த நோக்கத்திலும் அந்த முயற்சியிலும் நமக்கு அளவற்ற மகிழ்ச்சி கிடைக்கின்றது.

    இதை நன்கு உணர்ந்து வாழும் பொழுது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளிலும் மகிழ்ச்சியின் முத்திரை பதிந்திருக்கும்.

    இனிய புத்தாண்டில் ஒவ்வொரு நாளும் அனைவரும் மகிழ்வோடும் அமைதியோடும் வாழ இறைவன் அருள்புரியட்டும். நல்வாழ்த்துக்கள். !

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 48

    நேரம் எங்கே இருக்கு? – க. பாலசுப்ரமணியன் 

    “நீங்க சொல்வதெல்லாம் உண்மைதாங்க.. கடந்த காலத்திலும் வருங்காலத்திலும் நினைவுகளை உலா வர விட்டு நிகழ்காலத்தைத் தொலைத்து நிற்கின்றோம். ஆனால் நிகழ்காலம் ஒரு பெரிய போராட்டம். வாழ்வதே மிகவும் கடினமாகி விட்டது.” என்று எனது நண்பர் அங்கலாய்த்தது காதில் விழுந்தது.

    “:என்னங்க.. இந்தக் கேள்விக்கு உங்களுடைய பதில் என்ன?” என்று எனது மனத்திடம் கேட்டேன்.”

    “அப்படியா. இந்த நிகழ்காலச் சோதனைகளுக்கெல்லாம் யார் கரணம்? அவைகள் எங்கிருந்து வந்தன? சற்றே யோசித்துப் பாருங்களேன்” என்று சொன்ன எனது மனம் தொடர்ந்தது.

    ” ஹலோ, ஒரு நிமிடம். என்னைக் கேட்டுவிட்டு அப்புறம் உங்கள் பதிலைச் சொல்லுங்கள். நான் நினைப்பதை உங்களுக்குத் சொல்லாவிட்டால் தலை வெடித்துவிடும் போல இருக்கிறது.” என்றேன்.

    “இதுதானே உங்கள் பிரச்சனையே. பல எண்ணங்களையும் பல கருத்துக்களையும் பல உணர்வுகளையும் தலையில் போட்டுக்கொண்டு எதை முன்னால் செய்வது எதைப் பின்னால் செய்வது என்று தெரியாமல் எல்லாமே உடனடியாக நடக்க வேண்டும் என்று விரும்புவது, ஒரு வேலை நடந்து கொண்டிருக்கும்பொழுது அதை ஒதுக்கிவிட்டு இன்னோர் வேலையைத் தேடிச் செல்லுவது, நம்முடைய வேலையை விட்டுவிட்டு அடுத்தவர் வேலையின் முக்கியத்துவத்தைப் பாராட்டுவது, குறிக்கோள் இல்லாமல் ஏதாவது வேலையைச் செய்துவிட்டு ‘எனது நேரம் வீணாகி விட்டதே’ என்று துயரப்படுவது – இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இதற்கெல்லாம் யார் காரணம்?”  என் மனத்தின் கேள்விக்கணைகள்    என்னைத் தாக்கின.

    உண்மைதான். பல நேரங்களில் நாம் இதைச் செய்வதா அதைச் செய்வதா என்று தெரியாமல் தலையைப் பிடித்துக்கொண்டு நிற்கின்றோம். கண்களின் முன்னே செய்யவேண்டிய செயல்கள் எல்லாம் ஒவ்வொன்றாக ஊர்வலம் வர மன உளைச்சலுக்கு ஆளாகி கண்கள் ஒளி இழந்து ஏதோ நோய்வாய்ப்பட்டவர் போல ஆகிவிடுகின்றோம்.”எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு வேலை? வேலையே இல்லாமல் எத்தனைபேர் பொழுது போக்கிக்கொண்டிருக்கின்ரார்கள்? பாதிபேர் தண்டத்திற்குச் சம்பளம் வாங்குபவர் போல இருக்கின்றது” என்றும் “நான் தான் இளிச்சவாயன் போலிருக்கின்றது. எல்லாவேலையும் என்தலையிலே கட்டுகின்றார்கள்” என்றெல்லாம் நம்மைப் பற்றி நாமே விமர்சனம் செய்து கொள்ளுகின்றோம். இது தேவைதானா? இந்தக்கேள்விகளுக்கெல்லலாம் எங்கே பதில் தேடுவது?

    மால்கம் கிளாட்வெல் என்று ஒரு சிந்தனை மேதை மனிதர்களின் இந்த மனப்போக்கை நன்கு அலசி ஆராய்ந்து இதற்குக்  காரணம் அவர்கள் தங்களுடைய காலத்தை எவ்வாறு பயன் படுத்துகின்றார்கள் அதை எவ்வாறு நிர்ணயிக்கின்றார்கள், அவர்களின் கால நிர்ணயத்தைப் பற்றிய தவறான ஈடுபாடுகள் என்ன என்பதை நமக்கு எடுத்துக் கூறுகின்றார்.

    “நீங்கள் உங்கள் முன்னால் இருக்கும் அனைத்து வேலைகளின் மீதும் ஒரு கண்ணோட்டம் விடுங்கள். அவைகளைக் கூர்ந்து கவனியுங்கள். உங்களுக்கு அவைகளில் ஒரு இருபத்தி ஐந்து விழுக்காடு வேலைகள் தேவையற்றவை என்றும் அவைகளில் ஈடுபாடு உங்களுக்கு நிச்சயமாகத் தேவையில்லை என்பதும் தெரியவரும். இது போன்ற வேலைகளை நம்மில் பலர் தங்கள் அதிகாரப் போக்கினாலோ, ஆணவத்தினாலோ அல்லது தங்களது முட்டாள்தனத்தினாலோ தங்களிடம் வைத்துக்கொள்ளுகின்றனர். அவைகளை உங்கள் பார்வையிலிருந்து விலக்கி விடுங்கள். (DUMP)

    மீதி இருக்கின்ற எழுபத்தி ஐந்து விழுக்காடு வேலையிலே ஒரு இருபத்தி ஐந்து விழுக்காடுகள் நீங்களே செய்ய வேண்டிய அவசியமில்லை. அவைகளை வேறு யார் வேண்டுமானாலும் செய்யலாம். அவைகளை மற்றவர்களின் வேலைத்திறன் அறிந்து அவர்களிடம் ஒதுக்கிவிடுங்கள் . (DELEGATE)

    மீதி இருக்கின்ற ஐம்பது விழுக்காடு வேலைகளில் இருபத்தி ஐந்து விழுக்காடு வேலைகள் இன்றே இப்பொழுதே செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இல்லை. அவைகளே சற்றே தாமதித்து  மற்றவைகளுக்கு முன்னுரிமை அளித்து உங்கள் வேலைகளைத் தொடரலாம். (DELAY)

    கடைசியாக உங்கள்  முன்னால் இருப்பது வெறும் இருபத்தி ஐந்து விழுக்காடு வேலையே. அதில் உங்கள் முழுக்கவனத்தையும் வைத்து  சிறப்பாக செய்து முடியுங்கள் (DO)

    என்னே அருமையான ஆலோசனை! “நேரம் நம்மை நிர்வகிப்பதில்லை. நாம்தான் நேரத்தை நிர்வகிக்கிறோம்”  என்பது அன்றாட வழக்குமொழி.

    சற்றே சிந்தித்து நமது நிகழ்காலத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தலாமே !

    (தொடரும்)

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 47 – க. பாலசுப்ரமணியன்

    காலங்களில் நிகழ்காலமே வசந்தம்.

    ” என்னங்க… கொஞ்சமாவது ஓய்வு எடுத்தீங்களா….” என் மனம் என்னைத் தட்டி எழுப்பியது.

    “ம்ம்ம் ….” சற்றே முனகிக்கொண்டே எழுந்தேன்…” தூக்கம் சரியாக இல்லை.. தூங்கும் போதுகூட நீங்க தொடர்ந்து எதையாவது செய்து கொண்டிருந்தீர்களானால் நான் எப்படி நிம்மதியாகத் தூங்குவது..”  என்  மனத்தைச் சற்றே சாடினேன்.

    “எனக்குத்தான் நீங்கள் பிறந்ததிலிருந்து உங்கள் கடைசி நேரம் வரை ஓய்வே கிடையாதே… நான் ஓய்வெடுக்க ஆரம்பித்துவிட்டால் உங்கள் கதி என்னாவது?”  என் மனம் நக்கலாகச் சிரித்தது.

    உண்மைதான். நாம் தூங்கும்பொழுது கூட நமது மனம் எதையாவது சிந்தித்துக்கொண்டே இருக்கின்றது. நமது பழைய செயல்கள், நமது கடந்தகாலத் துன்பங்கள், நமது நிறைவேறாத ஆசைகள், நம்முடைய தோல்விகளின் நினைவுச் சிதறல்கள் உள்ளிருந்து நமக்கு மகிழ்ச்சியைத் தந்தவண்ணமோ அல்லது துன்பங்களைத் தந்த வண்ணமோ இருக்கின்றன.  இதை நம்மால் நிறுத்த முடியுமா? இதிலிருந்து விடுபட்டு நாம் வாழ முடியுமா?

    “முடிந்து போன காலம் ஒரு சரித்திரம். வருங்காலம் ஒரு மாயை. நிகழ்காலம் ஒரு அன்பளிப்பு.” என்ற வார்த்தைகளை உணர்வது மிகவும் அவசியம். பல பேர்கள் வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் பல சாதனைகளைப் படைத்திருந்தாலும் தங்களுடைய பழைய காலத்திலேயே வாழ்ந்துகொண்டிருப்பவர்களாக இருக்கின்றார்கள். முடிந்தவைகளை முடிந்தவைகளாகக் கருதாமல் அவைகளின் சரித்திரத்தை பொன்னேடுகளில் போற்றி நித்தம் ஒரு முறை வழிபட்டுக்கொண்டு வருகின்றார்கள். ஒவ்வொரு சிறிய துன்பம் வரும் பொழுதும்  தங்களுடைய பழைய சரித்திரத்தை மீண்டும் மீண்டும் படித்து அந்தத் துன்பங்களின் நாளேடுகளில் தங்கள் பதிவுகள் எத்தனை முறை வந்திருக்கின்றன என்பதை நினைவுகூர்ந்து தங்களுடய நேரத்தை வீணடிப்பது மட்டுமின்றி தங்களுடைய புதிய எண்ணங்களுக்கும் முயற்சிகளுக்கும் தடைக்கற்களைத் தொடர்ந்து வைத்துக்கொண்டு வருகின்றார்கள். இவ்வாறு பழமையில் பொழுதைக் கழிப்பவர்கள் தங்கள் தோல்விகளுக்குத் தாங்களே முகாந்திரமாக இருந்து வருகின்றனர்.

    நான் எனது மனத்திடம் கேட்டேன் “ஏன் நீ பழைய நினைவுகளை பிடித்துக்கொண்டு கட்டி அழுகின்றாய்? அவைகளை உதறி எறிய மாட்டாயா?”  என் மனம் என்னைக் கூர்ந்து நோக்கியது.

    “என்ன சொன்னீங்க?  நான் பிடித்துக் கொண்டு விடமாட்டேன் என்று சொல்கின்றேனா? சற்றே யோசித்துப்  பாருங்கள்.நீங்கள் தான் அவைகளைக் கட்டி அணைத்து உங்களையே வதைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். அன்றே சொன்னேனே. எனது கடிவாளம் உங்கள் கையில் இருக்கின்றதென்று.”

    நான் சற்றே யோசித்தேன். அது மீண்டும் தொடர்ந்தது.  “நீங்கள் ஒரு பலமான யானையைப் போல. உங்களிடம் எவ்வளவு சக்தி இருக்கின்றதென்று உங்களுக்கே தெரியாது. ஆனால் எப்படி ஒரு யானை ஒரு சிறிய கயிற்றினால் தூணில் கட்டப்பட்டிருக்கின்றதோ அதுபோல் நீங்களும் உங்கள்  பழங்காலத்தோடு கட்டப்பட்டிருக்கின்றீர்கள். அதை அறுத்து எறிந்துவிட்டு ஒரு சுதந்திரனாக மாறுங்கள். உங்கள் பழமையின் வலியும் தெரியாது. அதன் நினைவுகளும் வாட்டாது.”

    என்னுடைய மனதின் வாதம் எனக்குச் சரியாகப் புரிந்தது.

    நம்முடைய பழைய காலம் நமக்கு பல பாடங்களைக் கற்றுத்தந்துள்ளது. அதை நிச்சயமாக மனதில் கொள்ளுதல் அவசியமே. ஆனால் அந்தப் பாடங்களுக்கு அப்பால் முடங்கிக்கிடக்கின்ற சிறிய தகவல்கள், அனுபவங்கள், உணர்வு சார்ந்த நிகழ்ச்சிகள், அதனுடன் சம்பந்தப்பட்ட மனிதர்கள், அவர்களுடைய உறவுகள் போன்ற பல நமக்கு வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தேவையற்றவை..எனவே அவைகளுடைய பாரத்தை நாம் சுமக்காக் கூடாது. அவை நம்மைப் பின்னோக்குப் பாதைக்குத் தள்ளிவிடும்.

    தற்போதைய நிலையில் பல வெற்றிகளை சாதித்துக் கொண்டிருப்பவர்களும், சாதனைகளை படைத்துகொண்டிருப்பவர்கள், விழிப்புணர்ச்சியுடன் வருங்காலத்தை எதிர்நோக்கிக் கொண்டிருப்பவர்களும் தன்னுடைய நிகழ்காலத்தின் பொன்னான நேரங்களை வருங்கால எதிர்பார்ப்புகளுக்கு  அடமானம் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

    வருங்காலத்திற்கான விழிப்புணர்ச்சி மிகவும்  தேவை. அதற்குத்  தேவையான அடித்தளங்களை உருவாக்குவதும் நிகழ்காலத்தின் ஓர் முக்கிய கடமை.

    ஆனால்  நிகழ்காலத்தின் கடமைகளையும், அனுபவங்களையும், அதிசயங்களையும் நாம் வருங்காலத்திற்கான எதிர்பார்ப்புக்களுக்காக அடமானம் வைக்கக்கூடாது.

    நிகழ்காலம் நம்மிடமிருந்து செயலை எதிர்பார்க்கின்றது. நிகழ்காலம் நமக்குக் கொடுக்கும் நேரத்தை புத்திசாலித்தனமாகவும் திறனுடனும் உற்பத்திப் போக்குடனும் செயல்படுத்த விழைகின்றது;. எனவே அதை உணர்ந்து நாம் செயல் பட வேண்டும்.

    வருங்காலம் பல பேருக்கு ஒரு பயத்தை ஏற்படுத்துகின்றது. வருங்காலம் பலருக்கு ஒரு இருள்படர்ந்த காடாகத் தென்படுகின்றது. வருங்காலம் பலருக்கு அச்சத்தோடு கலந்த ஒரு நிலையாமையை க்குறிக்கின்றது. இந்த அச்ச உணர்வுகள், நமது நிகழ்காலத்தின் விழிகளை மருள வைத்து அதன் பார்வையிலிருந்து நிகழ்காலக் கடமைகளை மறைத்து விடுகின்றது. அந்த அச்ச உணர்வு நிகழ்காலத்தில் நமது நடையில் தளர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

    எனவே வருங்காலத்தை சற்றே அமைதியாகக் காத்திருக்கும்படிச் செய்துவிட்டு நாம் நிகழ்காலத்தை நல்ல முறையில் அமைப்பதை கருத்தில் கொள்ளுதல் மிக அவசியம்.

    “நான் கேட்டுக்கொண்டுதானிருக்கின்றேன். ” என் மனது எனக்கு தைரியம் சொன்னது.

    நீங்களும் உங்கள் மனத்தைக் கேட்டுப்பாருங்களேன்..

    நிகழ்காலத்தில் நல்ல முறையில் வாழ்ந்து பார்க்கலாமே.. !

    (தொடரும்)

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 46

    மனதோடு மனம்விட்டுப் பேசலாமே !

    உங்களோட கொஞ்சம் பேசலாமா? என்று நான் எனது மனதின் அருகில் சற்றே அமர்ந்தேன்., :”‘தாராளமா. உங்களோடு பேசத்தான் பல நாட்களாகக் காத்துக்கொண்டிருந்தேன். நான் உங்கள் கூடவே இருந்தாலும் நீங்கள் என்னைக் கவனிப்பதில்லை. நீங்கள் அவ்வளவு பிஸி… ” என்று எனது மனம் நக்கலாக என்னைப் பார்த்துச் சிரித்தது. ‘என்ன செய்வது?பார்த்துப் பேச எத்தனை பேர் இருக்கின்றார்கள்.. எல்லோருக்கும் நேரம் கொடுக்கவே முடியவில்லை…”

    “அது சரி.. ஆனால் நான் உங்களோடு இருப்பவனாயிற்றே.. எனக்குக் கூடவா .நேரமில்லை. சரி. வந்த விஷயத்தைச் சொல்லுங்கள்.. ‘ என்று எனது மனம் சொன்னது..

    “எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை..கொஞ்சம் தயக்கமாக உள்ளது…”

    “இதுதான் உங்கள் பிரச்சனையே… எதை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. யாருக்கு எவ்வளவு நேரம் கொடுப்பது என்று தெரியவில்லை. எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்று தெரியவில்லை.. எங்கே எப்படி பேசுவது என்று தெரியவில்லை. யாரை நம்புவது எதை நம்புவது என்று தெரியவில்லை.. எடுத்ததை எப்படி முடிப்பது என்று தெரியவில்லை…”

    ‘சார். கொஞ்சம் நிறுத்துங்க.. ஒரேடியாக என்னை மட்டம் தட்டாதீங்க.. ”

    “நான்.உங்களைக் குறை கூறவில்லையே. உங்களை மட்டம் செய்ய வில்லையே.. உள்ளதை உள்ளபடி சொன்னேன். உங்கள் பிரச்சனையே உள்ளதை உள்ளபடி பார்க்கவும் மாட்டீர்கள்.. உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்ளவும் மாட்டர்கள்…”

    “நான் உங்களடா பேசவா அல்லது எழுந்து போய்விடவா… ” என்று எனது மனதை கொஞ்சம் அதட்டிக் கேட்டேன்.

    “கோபப்படாதீர்கள். முதலில் கொஞ்சம் அமைதி காக்க முயலுங்கள்.. அவசரமும் கோபமும் படுவதால் நீங்கள் எதையும் சாதிக்கப் போவதில்லை… சொல்லுங்கள் உங்களுக்கு என்ன பிரச்சனை?” எனது மனம் என்னிடம் கேட்டது..

    உங்களுக்குத்  தெரியாதா என்ன? எல்லோரும் சொல்லுகின்றார்கள்.. நீங்கள் என்னோடு சரியான தொடர்பு கொள்வதில்லை என்று.. உங்கள் மனம் ஒரு நிலையிலில்லை.. உங்கள் மனம் அழுத்தத்தில் இருக்கின்றது.. அதனால் தான் நீங்கள் ஒரு மன நோயாளிபோல் இருக்கின்றீர்கள் என்று.  ஆகவே எனக்குப் பிரச்சனையே நீங்கள்தான். ”

    இதைக்கேட்ட என் மனம் வாய்விட்டுச் சிரித்தது..

    ” நானா? பிரச்சனையா..? எனக்கென்று ஒரு போக்கு கிடையாதே…. நீங்கள் என்ன செய்யச் சொல்லுகின்றீர்களையோ அதை நான் செய்கின்றேன். நீங்கள் என்ன நினைக்கச் சொல்லுகின்றீர்களோ அதைதத்தானே நான் நினைக்கின்றேன். எனக்கென்று ஒரு தனி வாழ்வேது? ” மனம் அலுத்துக்கொண்டது

    “அப்படியென்றால் “மனம் போல் வாழ்வு” என்றும் “மனம் போன போக்கில் போகின்றார்கள்”  என்றும் ஏன் சொல்லுகின்றார்கள்?” அது மட்டுமல்ல.. “உங்களை இன்னும் கேவலமாக மனம் ஒரு குரங்கு. கொஞ்சம் இடம் கொடுத்தால் இங்கிருந்து அங்கு தாவும்’ என்றல்லவா சொல்லுகின்றார்கள்..

    எனது மனம் சிரித்தது.

    “சார். நீங்களாக ஒரு பழமொழி எழுதிக்கொள்வது. அதற்கு ஒரு அர்த்தம் சொல்லிக்கொள்வது.. அதன்பின் பழியை மற்றவர்களிடம் போடுவது… இது வேடிக்கையாக இருக்கின்றதே..  என்னை நீங்கள் ஒரு குதிரை என்று சொல்லியிருந்தால் நான் ஏற்றுக்கொண்டிருப்பேன்… என் கடிவாளம் உங்கள் கையில் இருக்கின்றது. என்னை எந்தப்பக்கம் போக வேண்டும். எந்த வேகத்தில் போக வேண்டும்.. எங்கே நிற்க வேண்டும்.. என்றெல்லாம் என்னுடைய கடிவாளத்தைப்  பிடித்துக்கொண்டு சாதிக்க முடியும்.  அதை விட்டுவிட்டு உங்களுக்கு ஏதோ சம்பந்தமே இல்லாதது போலப் பேசுகின்றீர்களே.”

    என்னால் ஏன் மனத்திற்குப் பதில் சொல்ல முடியவில்லை. யோசிக்க ஆரம்பித்தேன். என் மனம் என் கையிலா இருக்கின்றது?.. அதை என்னால் கையாள  முடியுமா?”  யோசிக்க ஆரம்பித்தேன்.

    நமது மனம் நமது எண்ணங்களின் தாக்கத்தில் நமது ஆசைகளின் எதிர்பார்ப்புகளில் நமது உணர்வுகளின் கைப்பொம்மையாகச் செயல்படுகின்றது. எனவே நமது எண்ணங்கள், நமது ஆசைகள் மற்றும் நமது எதிர்பார்ப்புகளை நாம் நன்றாக அலசி ஆராய்ந்து அவைகளின் தேவைகள் அவைகளின் பாதிப்புக்கள் மற்றும் அவைகளின் வளர்ச்சிக்கான உள்ளீடுகள் ஆகியவற்றை நன்றாக அறிந்து புரிந்து வாழவேண்டும். தேவையற்ற ஆசைகள், நிறைவேற முடியாத ஆசைகள், நமது வாழ்வு முறைகளுக்கு அப்பாற்பட்ட ஆசைகள் ஆகியவற்றை தவிர்த்தல் மிக்க அவசியம். இல்லாவிட்டால் இவை அனைத்தும் நமது மனதிற்குள் தேங்கி அவைகள் நிறைவேறும் வரை அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கும். அவைகள் நிறைவேறும் வரை மனதில் பல வித போராட்டங்களை ஏற்படுத்தி நம்மைத் துன்புறுத்தும். அதன் விளைவாக பொறாமை, போட்டிகள், இயலாமை, வெறுப்பு, வெறி போன்ற பல உணர்வுகள் ஏற்பட்டு நமது மனத்தையும் உடலையும் தொடர்ந்து பாதித்துக் கொண்டே இருக்கும்.

    நமது மனதிற்குக்  கடிவாளம் எப்படிப் போடுவது? மிகவும் கடினமான செயல்தான். அதற்க்கு நல்ல பயிற்சி எடுக்க வேண்டும். நல்ல முயற்சிகள் செய்ய வேண்டும். நமது ஆக்கசக்திகளை உணர்ந்து, நமது முன்னேற்றப் பாதையில் உள்ள நன்மை தீமைகளையும் அறிந்து சரியான வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நமது ஆசைகளும் தேவைகளும் கொடுக்கும் வேக உணர்வுகளை சற்றே கட்டுப்படுத்தி இடம், பொருள் ஏவல் ஆகிய மூன்ருடனும் கைகோர்த்து முன்னே செல்ல முயற்சிக்க வேண்டும்.

    “ஒவ்வொரு மனிதனும் அவனுடைய எண்ணங்களின் உருவகம்” என்று அண்ணல் காந்தி அடிகள்மிக அழகாகக் கூறியுள்ளார். அழகான எண்ணங்கள், நேர்மையான எண்ணங்கள், தூய்மையான எண்ணங்கள், ஆக்கபூர்வமான எண்ணங்கள் ஆகியவை நமது வெற்றிக்கு முதல் படிகள். நமது மனநலத்திற்கும் வாழ்க்கையில் வெளிச்சத்திற்கும் வழிகாட்டிகள். இதை உணர்ந்து செயல் பட வேண்டும். நேர்மறையில்லாத எதிர்மறையான எண்ணங்கள் நமது மனதின் அமைதியை அழித்துவிடுகின்றன.

    மனதோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருப்போமே !!

    தொடரும்..

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 45

    க. பாலசுப்பிரமணியன்

    கொஞ்ச நேரம்.. உங்கள் மனதோடு..

    அந்த மாலை நேரத்தில் கோவிலைச் சுற்றி வந்துகொண்டிருந்தேன். அங்கே அந்த மண்டபத்தின் அருகில் எனக்குப் பழக்கமான ஒரு நண்பர் தூணில் சாய்ந்தபடி அமர்ந்திருப்பதைக் கண்டு வியந்தேன். பொதுவாக அவரை அந்தக் கோவில் பக்கம் நான் பார்த்ததில்லை. மிகவும் அவசரமான முற்போக்கான வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவர் அவர். அவர் எதற்கு அன்று அங்கே வந்துள்ளார் என்பதை அறிய ஆர்வம் தூண்டியது. மெதுவாக அவர் அருகில் சென்று “அய்யா வணக்கம்” என்றேன். “வாங்க தம்பி.. நல்லா இருக்கீங்களா..” என்று ஒரு சோர்ந்த புன்னகையை அள்ளி வீசியவாறு என்னைப் பார்த்தார்.

    “நான் நலம்தான் அய்யா.. நீங்க எங்கே இந்தப் பக்கம்?” என மெதுவான குரலில் கேட்டேன்.

    சிரித்துக்கொண்டே அவர் சொன்னார் “ஒண்ணுமில்ல தம்பி. கொஞ்சம் மனசு சரியில்லாமல் இருந்தது. அதனால் மக்கள் நடமாட்டமில்லாத பகுதியாக கோவிலிலே இந்த மண்டபத்திலே ஒரு ஓரமாக அமர்ந்து என்னோடவே நான் பேசிக்கொண்டிருந்தேன்.”

    அவர் சொன்னது எனக்குப் புதுமையாக இல்லை. “என்னோடவே நான் பேசிக்கொண்டிருந்தேன்” அவருடைய தனிமையை பாதிக்க விரும்பாமல் நான் “அப்படியா… அப்போ நான் உங்களைத் தொந்தரவு செய்யக்கூடாது.. உங்கள் தனிமையை நீங்கள் பாராட்ட வேண்டும்..” என்று விடைகூறி மேலே நகர்ந்தேன்.

    அவருடைய அந்த வார்த்தைகள் என்னை சற்றே உலுக்கிவிட்டன. “மனசு சரியாக இல்லை…” நம்மில் எத்தனை பேர் இந்த மாதிரியான சூழ்நிலைகளை அடிக்கடி சந்திக்கின்றோம். ஏதாவது ஒரு காரணத்திருக்காக இந்த மனசு சரியில்லாமல் போய்விடுகின்றது. என் மனதிடமே நான் கேட்டேன்: “ஏன் அடிக்கடி நீ பேய் பிடித்தாற்போல் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு துன்புறுத்துகின்றாய்?”

    அதைக் கேட்ட என் மனம் சிரித்தது..

    அது சொன்னது:

    1, நான் கேட்டது கிடைக்கவில்லையென்றால் நான் தளர்வடைகின்றேன்.
    2. நான் நினைத்தது நடக்கவில்லையென்றால் நான் துடித்துப் போகின்றேன்
    3.என்னை மற்றவர்கள் பாராட்டவில்லையென்றால் தன்மானம் பாதிக்கப்பட்டுச் சோர்வடைகின்றேன்.
    4. நான் சொன்னதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் என் இயலாமையைக் கண்டு வருந்தி களைத்து விடுகின்றேன்றேன்.
    5. என் மனதின் வேகத்திற்கு உடலோ சூழ்நிலைகளோ அல்லது சார்ந்தவர்களோ ஈடு கொடுக்கவில்லையென்றால் வெறுத்துப் பொய் மூலையில் அமர்ந்து விடுகின்றேன்.
    6. நான் செய்த பல நற்செயல்களை சுற்றமும் சூழலும் மறந்து அவைகளை ஏணிப்படிகளாக்கிக் கொண்டு என்னை ஒதுக்கிவிடும்போது புண்பட்டு நோயாளியாகி விடுகின்றேன்.

    என்ன செய்வது.? அடிக்கடி இப்படி பல பிரச்சனைகள் வந்தவண்ணம் இருக்கின்றேதே! உனக்குத் தெரியாதா என்ன? உன் மனதிலும் நான் இவ்வாறுதானே வேலை செய்கின்றேன்.”

    உண்மைதான்! நம் அனைவருடைய மனமும் பலவித காரணங்களுக்காக புண்பட்டு நோய்வாய்ப்பட்டு அதற்கான சரியான மருந்தைத் தேடிக்கொண்டிருக்கின்றது. அதற்கு என்ன மருந்து போடலாம்? எந்த வைத்தியரிடம் நம் மனத்தைக் காட்டி மருந்து கேட்கலாம் ?

    அந்தக் காலத்தில் வீடுகளில் “பாட்டி வைத்தியம்” என்று இருந்தது. இருமலுக்கும், உடம்பு வலிக்கும், மற்றும் சிறிய உபாதைகளுக்கு பாட்டி ஒரு கசாயத்தையோ அல்லது ஒரு லேகியத்தையோ நமக்கு கொடுப்பார்கள். முதலுதவி போல பல நேரங்களில் இவையே நம்முடைய உடல் நோயைக் கட்டுப்படுத்திவிடும். அதுபோல நம்முடைய மன உளைச்சல்களுக்கும் மன அழுத்தங்களுக்கும் முதல் வைத்தியம் நமது மனதேதான். அதனிடம் நாம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் “உனது நோயை நீ எவ்வாறு தீர்த்துக் கொள்ளப்போகின்றாய்? உன் புண்களுக்கு நான் என்ன மருந்து போடுவது?” இதற்கு நாம் நமது மனதோடு பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்.

    உலகத்தில் உள்ள பல மனிதர்களோடு நாம் நித்தம் எத்தேனையோ மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருக்கின்றோம், எப்போதாவது நாம் நம்முடைய மனதோடு பேசியது உண்டா? எப்பொழுதாவது அதை ஒரு பொருட்டாக மதித்ததுண்டா? சற்றே யோசித்துப் பாருங்கள்.

    நம் மனதோடு நாம் பேசுவது என்பது நமது வாழ்க்கையின் ஒரு முக்கியமான நிகழ்வு. அது நமக்கு நம்மையே அடையாளம் காட்ட உதவுகின்றது. நம்முடைய உள்ள நலத்தையும் நம்முடைய சிந்தனைகளின் வளத்தையும் நம்முடைய திறன்களையும் வல்லமைகளையும் மற்றும் இயலாமைகளையும் நமக்கு படம் போட்டுக் காண்பிக்கின்றது. நம்முடைய உறவு முறைகளில் உள்ள சிறப்புக்களையும் அதில் நாம் கையாளும் முறைகளில் உள்ள தவறுகளையும் நமக்கு உணர்த்துகின்றது. “யாரிடமாவது நம்முடைய குறைகளைச் சொல்லி அழமாட்டோமா’ என்று நாம் நினைக்கும்பொழுது நமது மனம் அருகில் அமர்ந்து “நான் இருக்கின்றேன் உன் துன்பங்களைக் கேட்பதற்கு” என்று சொல்லி தோழமையுடன் கேட்க அமர்கின்றது. நமக்கு எது சரியென்று தெரியவில்லையென்றால் அது ஒரு நீதிமானாக அமர்ந்து சரியான வழியைக் காட்டுகின்றது. ஒரு நிகழ்வு இப்படி நடந்துவிட்டதே என்று நாம் வருந்தும் பொழுது “அட போப்பா, இதெல்லாம் வாழ்க்கையில் நடக்கறதுதானப்பா. எழுந்து அடுத்த வேலையைப் பாரு” என்று ஊக்கம் அளிக்கின்றது.!

    “நான் எழுதிய இந்த அருமையான கவிதையைக் கேட்பதற்கு யாருமில்லையே.. என்ன உலகமடா இது” என்று நான் நொந்துபோகும்பொழுது “நண்பா. நானிருக்கின்றேன். உன் கவிதையை நீ எத்தனை முறை வேண்டுமானாலும் படி. திரும்பாத திரும்பப் படித்து ஆனந்தப்படு. நான் உன்னருகில் அமர்ந்து கேட்கின்றேன்” என்று சொல்லி உள்ளே என்னுடைய கவியரங்கத்திற்கான மேடையைத் தயார் செய்து கொடுக்கின்றது !
    இப்படி பல உதவிகளை செய்து ஒரு நண்பனாக, ஒரு ஊழியனாக, ஒரு உறவாக, ஒரு மருத்துவனாக நமக்கு உழைக்கும் மனதுக்கு மரியாதை கொடுத்து தினம் ஒரு சில மணித்துளிகள் அதோடு பேசிக்கொண்டிருந்தால் குறைந்தா போகும்? நாம் ஏன் செய்வதில்லை?

    “தினசரி உங்கள் மனதோடு கொஞ்ச நேரம் பேசுங்கள். அதை போன்ற ஒரு மருத்துவம் உலகில் இல்லை” என்று ஒரு மனநல மருத்துவர் மிக அழகாக எடுத்துரைத்தார்.

    “அய்யா. அதெல்லாம் சரிதான், என் மனதோடு தனியாக உட்கார்ந்து பேசுவதற்கு எங்கு நேரம் இருக்கின்றது?” என்று ஒருவர் குமுறினார். மற்ற அனைத்திற்கும் நேரத்தைத் தேடித்தடி வீணடிக்கின்ற நாம் இதற்கும் சில மணித்துளிகளைத் தேடி அதை ஒரு தினசரி பழக்கமாகக் கொண்டாலென்ன?சற்றே யோசியுங்கள். உங்கள் மனம் உங்களோடு பேசக் காத்துக்கொண்டிருக்கின்றது. என்ன பேசவேண்டும்? எப்படிப் பேசவேண்டும்? அதனால் நமக்கு உடனடிப் பலன்கள் என்ன கிடைக்கும்? – தொடர்ந்து பார்க்கலாமே!

    உங்கள் வாழ்க்கை – உங்கள் கைகளில் .. வாழ்ந்து பார்க்கலாமே !
    (தொடரும்)

    Share
  • சாப்பாடு இலவசம் !!

    க. பாலசுப்ரமணியன்

    அந்தக் கட்டிடத்தைச் சுற்றி சுமார் நூறுபேர் நின்று கொண்டிருந்தார்கள். அந்தக் கட்டிடத்தின் வாயிலில் இருந்த ஒரு பலகையில் “சாப்பாடு இலவசம்” என்று எழுதப்பட்டிருந்தது. அதன் கீழே சாப்பாட்டு நேரம் மதியம் 1 மணி முதல் 2.30 வரை’ என்றும் எழுதப்பட்டிருந்தது. பக்கத்தில் போவோர் வருவோர் தங்கள் கடிகாரங்களை ஒரு முறை பார்த்துக்கொண்டிருந்தார்கள். “இன்னும் சற்று நேரம் கழித்து வரலாமே’ என்று சொல்லிக்கொண்டே ஒருவர் அங்கிருந்து நகர்ந்தார்.பகல் ஒரு மணிக்கு அந்தக் கட்டிடத்தின் வெளிவாயில் மூடப்பட்டு அருகே உள்ளே ஒரு சிறிய வாயில் அருகே இரண்டு பேர்கள் நாற்காலி மேஜை போட்டுக்கொண்டு அமர்ந்தனர். ஒருவர் உள்ளே நுழைய முயன்ற போது அவரை நிறுத்தி “எங்கே போறீங்க” என்றனர். “சாப்பாட்டுக்காக உள்ளே ” என்றார் அவர்.

    “நுழைவுக் கட்டணம் இருபது ரூபாய் செலுத்திவிட்டு உள்ளே போங்கள்” என்கிறார். “சாப்பாடு இலவசம் தாங்க” ஆனால் அந்த இலவசச் சாப்பாட்டு மண்டபத்திற்குள் செல்ல அனுமதிக் கட்டணம் இருபது ரூபாய்.”

    சற்றே வியந்த அந்த மனிதர் நினைத்தார் “என்ன அநியாயமாக இருக்கு” என்று முனகிக்கொண்டே நினைத்தார் “சரி போனால் போகுது. வெளியிலே ஹோட்டல்லே சாப்பிட்டால் எண்பது ரூபாய் ஆகுது. இங்கே இருபதோடு முடியுதே.”. தன் மனதைத் தேற்றிக்கொண்டு அனுமதிச் சீட்டை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றார்.

    அந்த மண்டபத்தில் இரண்டு வரிசைகள் அமர்வதற்காக நாற்காலிகளும் மேசைகளும் போடப்பட்டிருந்தன. அருகில் இரண்டு வரிசைகள் கீழே அமர்ந்து உண்பதற்காக பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன அதைத் தொடர்ந்து இரண்டு வரிசைகள் பாய்கள் போடப்படாமல் அமர்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்தவர் ஒரு நாற்காலியில் அமர முயன்றபோது அங்கிருந்த ஒரு சிப்பந்தி “அய்யா. டிக்கெட் வாங்கிட்டீங்களா” என்று கேட்டார். ” வாங்கிட்டேனே ” என்று சொன்னவாறு தனது அனுமதிச் சீட்டைக் காண்பித்தார். ” இது இல்லீங்க..” நாற்காலியில் உட்கார்ந்து சாப்பிட டிக்கெட் வாங்கிட்டிங்களா” எனக் கேட்டார். ” நாற்காலிக்கு டிக்கெட்டா ” என்று என்று திகைத்தவாறே வினவினார். உடனே அந்த சிப்பந்தி ‘ஆமாங்க…நாற்காலிக்கு பத்து ரூபாய் டிக்கெட். பாய்க்கு ஐந்து ரூபாய் டிக்கெட். தரையில் உட்கார்ந்து சாப்பிட இரண்டு ரூபாய் டிக்கெட்..”

    “என்னங்க இது. வெளியிலே சாப்பாடு இலவசம்னு போட்டிருக்கு.. நீங்கள் உள்ளே நுழைய டிக்கெட் வாங்குறீங்க . உட்காருகின்ற இடத்துக்கு டிக்கெட் வாங்குகிறீங்க” எனச் சிறிது கோபத்துடன் கேட்டார்.. “ஆமாங்க சாப்பாடு உண்மையிலேயே இலவசம் தாங்க. மத்தது எல்லாத்துக்கும் கட்டணம் உண்டு. முணுமுணுத்துக்கொண்டே தன்னுடைய பையிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அந்த மேசை மீது வைத்துவிட்டு அமர்ந்தார்.

    சிறிது நேரத்தில் இன்னொரு சிப்பந்தி இவரை அணுகி “அய்யா இலை வேணுங்களா? ” எனக் கேட்டார். “பின்னே எப்படி.. இலையில்லாமல் எப்படி சாப்பிடறது?” என்றவுடன் ” அய்யா.. இலை ஐந்து ரூபாய்.”

    உள்ளே நுழைந்த அன்பரால் என்ன செய்வதென்றே புரியவில்லை. வேண்டா வெறுப்பாக ஒரு ஐந்து ரூபாய் கொடுத்து இலையைக் கையில் வாங்கிக் கொண்டார். அதைத் தொடர்ந்து வந்து சிப்பந்தி “அய்யா. தண்ணி வேணுங்களா.” எனக்கேட்க அவரிடம் வேறு ஏதும் கேட்காமல் “இது எவ்வளவு” என்று முகத்தைச் சுழித்துக்கொண்டே கேட்டார். “பாட்டில் தண்ணி இருபது ரூபாய். டம்ளரிலே தண்ணி வேணுமென்றால் டம்ளர் ரெண்டு ரூபாய் .. தண்ணி மூணு ரூபாய். ” அவர் பையில் இருந்த பணம் கரைந்து கொண்டிருந்தது. தான் தவறு செய்து விட்டோமோ என்ற எண்ணம் மனதை உறுத்தியது.

    உடனே இலவசச் சாப்பாடு இலையில் விழுந்தது. அதுவும் அளவுச் சாப்பாடுதான். “சார், ரெண்டாவது தடவை பொரியல் கூட்டு என்று கேட்கக்கூடாது. ஒரு முறைதான் போடுவோம்” என்று சொல்லிக்கொண்டே அந்த சிப்பந்தி பந்தியில் முன்னேறினார்.

    பந்தியில் இருந்த இன்னொரு நபர் “என்னங்க… சாம்பாரில் உப்பே இல்லீங்களே” என்கிறார். அதைப் பரிமாறிக் கொண்டிருந்தவர் “எங்களுக்கு எப்படீங்க உங்களுக்கு உப்பு வேணுமா வேண்டாமா என்று தெரியும். வேணுமென்றால் ரெண்டு ரூபாய் கொடுத்து உப்பு வாங்கிப் போட்டுக்கொள்ளுங்கள்.:”என்றார்

    உடனே அந்தப் பந்தியில் இருந்தவர்கள் அனைவருக்கும் அடக்க முடியாத கோபம் வந்தது. அவர்கள் எழுந்து நின்று கூச்சல் போட ஆரம்பித்து விட்டனர். “என்ன ஏமாற்று வேலை இது.. வெளியிலே இலவசச் சாப்பிடு எனப் பலகை வைத்துவிட்டு ஒவ்வொன்றிற்கும் காசு வாங்குகின்றனர். மொத்தத்தில் கூட்டிப் பாரத்தால் வெளியே ஒரு நல்ல உணவகத்தில் சாப்பிடும் கட்டணத்தை விட இது அதிகமாக இருக்கிறதே.” கொந்தளிப்பு அதிகமானது.. உடனே வண்ண உடைகளுடன்  டையும் அணிந்திருந்த மேலதிகாரி அங்கே வந்தார்.

    “அமைதி… அமைதி.. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாங்கள் எதுவும் தவறாகச் செய்யவில்லையே.. சாப்பாடு இலவசம் என்று எழுத்து மூலமாக அறிவித்தோம். அதை நாங்கள் நிறைவேற்றுகின்றோம். சட்டப்படி நாங்கள் செய்தது உண்மையானது. நேர்மையானது…”

    “அய்யா.. நான் சாப்பிட அமரவே இல்லை. எனக்கு சாப்பாடு வேண்டாம். நான் கட்டிய பணத்தை மட்டும் திருப்பிக் கொடுங்கள்”

    “தாராளமாக. ஆனால் ஒரு முறை டிக்கெட் வாங்கிவிட்டால் அதில் தொண்ணுறு விழுக்காடு சேவைக் கட்டணமாக கழித்துக்கொண்டு மீதியைத் தான் தருவோம்.”

    அந்த அன்பர் மயங்கி விழுந்தார்..

    கூட்டம் சற்றே கலைந்து வரும் தருவாயில் ஒருவர் வாசலில் இருந்த சிப்பந்தியிடம் சொன்னார். “நல்ல வியாபாராமய்யா .. இலவசமென்று சொல்லிவிட்டு மக்களை ஏமாற்றும் வேலை.. எங்கேதான் கத்துக்கிட்டாங்களோ.”

    வெளியே அமர்ந்து வசூலித்துக்கொண்டிருந்தவர் சொன்னார். “அய்யா.. இந்த அமைப்பை நடத்தக்கூடிய ஆறு பேர் போன மாதம் வரைக்கும் ஒரு விமானக் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அங்கே ஆட்குறைப்பு ஏற்பட்டு வெளியே வந்தவுடன் அதே வழிமுறைகளை வைத்து இந்த வியாபாரத்தை ஆரம்பித்து விட்டார்கள்…”

    காதில் விழுந்ததைச் சரியாகக் கேட்க முடியாதவர்க்கு மேலே சென்று கொண்டிருந்த ஒரு நீல வண்ண விமானத்தின் சத்தம் காதை அடைத்தது. தலையை உயர்த்தி விமானத்தை நோக்கியவாறு “அய்யோ.. வேணாமப்பா.. அதை பார்ப்பதற்கு வேறே காசு வசூலிக்கப் போறாங்க…” என்று சொல்லிக்கொண்டே மேலே நடந்தார்.

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 44

    க. பாலசுப்பிரமணியன்

    தோல்விகள் தொடர்கதையானால் ..

    “சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்; நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்” – தொலைக்காட்சியில் இந்தப்பாடல் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. கவியரசு கண்ணதாசனின் இந்தப்பாடலின் ஆழமான கருத்து மனோதத்துவ அடிப்படையில் அலசிப்பார்க்கும் பொழுது ஒரு மனதின் பல பரிமாணங்களையும் உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் துயரங்களையும் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது. வெற்றி – தோல்வி, மகிழ்ச்சி – துயரம், உயர்வு -தாழ்வு, வளமை -வறுமை  ஆகிய அனைத்தும் பிணைந்ததுதான் வாழ்க்கை என்பதை எல்லோரும் அறிகின்றோம். ஆனாலும் தோல்விகளையும் துயரங்களையும் தாங்குகின்ற பக்குவம் நமது மனதிற்கு ஏற்படுவதில்லை.

    “நீங்கள் சொல்வது சரிதான் அய்யா. தோல்விகளைத் தாங்குகின்ற பக்குவத்தை அடைய முயற்சிக்கின்றேன். ஆனால் துயரங்களும் தோல்விகளும் திரும்பத்திரும்ப வரும்பொழுது எப்படி சம்மாளிப்பது?. தோல்விகளின் தொடர்ச்சியில் மனம் துவண்டு விடுகின்றதே – என்ற கூற்று காதில் விழத்தான் செய்கின்றது. “பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும் “என்ற பழமொழி நினைவுக்கு வருகின்றதே !

    ஆங்கிலத்தின் மிகப்பெரிய கவிஞர் செகப்பிரியர் (Shakespeare)  ஓர் நாடகத்தில் கூறுகின்றார் : “துயரங்கள் வரும்பொழுது தனித்து வருவதில்லை. அணி அணியாக வருகின்றன” (When Sorrows come, they come not in a single spies, but in battalions) பலரும் அனுபவிக்கும் உண்மை இது! இதற்கு வழி என்ன? மன உறுதிதான் !

    அமெரிக்காவின் மிகச் சிறந்த தலைவராக விளங்கிய ஆப்ரகாம் லிங்கன் ஒரு சாதாரண தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்து எத்தனையெத்தனை சோதனைகளைச் சந்தித்தார். எத்தனை தோல்விகள் அவரைப் பின்தொடர்ந்தன ! தளர்ந்தாரா அவர்? ஒவ்வொரு தோல்வியையும் ஒரு பாடமாக ஏற்றுக்கொண்டு அவற்றை தன் முன்னேற்றத்திற்கான அடிக்கல்லாக மாற்றிக்கொண்டாரே! மற்றவர்களைக் கவரும் வசீகரமும் உடல்வாகும் இல்லாதவராக இருந்தாலும் தன் திறன்களால், தன் தொண்டால், தன் முயற்சிகளால் எல்லோரையும் ஈர்க்கும் காந்த சக்தி படைத்த மனிதராக மாறினாரே !  தோல்விகள் அனைவருக்கும் வரும். ஆனால் தொடர்ந்த தோல்விகள் அனைவருக்கும் வருவதில்லை. அப்படி வரும்பொழுது துவண்டுவிடாமல் எழுந்து ஒரு சிங்கத்தைப் போல சீறு நடை போடுகின்ற தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ளலாமே!

    ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் கதைகள் அவருடைய ஆரம்பக்காலத்தில் எத்தனை முறை திருப்பியனுப்பப்பட்டது. அவர் முயற்சியைக் கைவிடவில்லையே ! உலகம் தன்னை ஒரு மிகச் சிறந்த எழுத்தாளராகப் போற்றும் வரையில் அவர் தளரவில்லை! உலகின் பல முன்னோடிகள் பெர்னார்ட் ஷாவோடு பேசவும் கருத்து பரிமாறவும் துடித்தார்களே!

    சர் ஐசாக் நியூட்டன் என்ன சொன்னார் “ஆயிரமாவது தடவை நான் ஒரு  பல்பை கண்டுபிடித்த போது  எவ்வாறு அதை 999 வழிகளில் செய்யக்கூடாது எனக் கற்றுக்கொண்டேன்”

    சரித்திரம் என்ன சொல்கின்றது?  – கீழே விழுந்தவர்கள் எழுந்து நின்றார்கள்; தடுக்கி விழுந்தவர்கள்- மீண்டும் எழுந்து நடக்க முயன்றார்கள்; தோல்வி அடைந்தவர்கள் – மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வெற்றி அடைந்தார்கள். சாதனை படைத்தார்கள் ! இப்படி சரித்திரம் படைத்தவர்கள் ஒன்றல்ல-இரண்டல்ல-ஆயிரமாயிரம்பேர்கள் ! இவர்கள் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டாமா?

    பல நேரங்களில் நமது தவறான முடிவுகளால் நாம் தோல்வியைச் சந்திக்கிறோம். அந்த நேரங்களில் நமது முடிவுகள் தவறு எனது தெரிந்துவிட்டால் அதை ஏற்று மாற்றிக்கொள்ள துணியவேண்டும். தொடர்ந்து நமது தவறான முடிவுகளோட வாழ நினைத்தாலோ அல்லது நம்முடைய அகந்தை ,தற்பெருமை காரணமாகவோ நமது முடிவுகளைத் தொடர்ந்து போற்றிவந்தாலோ எப்படி வெற்றிப்படிகள் மீது ஏற முடியும்?

    அறிவியல் ஆராய்ச்சிகளில் “பிழை பகுப்பாய்வு” (Error Analysis) என்ற ஒரு முறை பல இடங்களில் நடத்தப்படுகின்றது. அதன் பொருள் என்ன? நமது கண்டுபிடிப்புக்கள் ஆராய்ச்சிகள் ஆகியவற்றில் பிழைகள் ஏற்படுவதும், பிழைகள் கண்டுபிடிக்கப்படுவதும் ஒரு சாதாரண நடப்பு. ஆனால் அந்தப் பிழைகள் ஏன் ஏற்பட்டன? அதற்கான மூல காரணங்கள் என்ன? அந்தப் பிழைகளை எப்படி சரி செய்யலாம்? என்ற ஆய்வு நடத்தப்படுகின்றது. இது தவறுகளை மறுமுறை வராமல் இருப்பதற்கான கற்றலையும் திறன்களையும் நமக்கு அளிக்கும். இந்தப் பழக்கத்தை நாம் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திக் கொள்ளவேண்டும். தோல்விகளை அலசி ஆராய்ந்து தவறுகளை ஏற்று அதற்கான மாற்று வழிகளை கண்டுபிடித்து மாற்றத்தைக் கொணருதல் வெற்றிக்கான அறிகுறிகளை நமக்கு காட்டும்.

    மூளை-நரம்பியல் வல்லுநர்கள் தவறுகள் ஏற்படுவதற்கான காரணங்களிப் பற்றி செய்த ஆராய்ச்சியில் கவனக்குறைவுகளைத் தவிர மூளையில் ஒரு முறை ஏற்பட்ட கற்றலின் தாக்கங்கள் தொடர்வதாகவும் அவைகளுக்கான நியூரான்களின் வலைப்பின்னல்கள் வலுப்பட்டதால் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தாமதிப்பதாகவும் அதனால் தொடர் தவறுகள் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். இந்த நிலையை மாற்றுவதற்கான சூழ்நிலைகளை புதிய கற்றல்களே உருவாக்கும். எனவே, தவறைத் தவறு என்று அறிந்து கொள்ளாத வரையில் தொடர் தவறுகள் ஏற்பட்டுக்கொண்டிருக்க வாய்ப்புக்கள் உண்டு.

    இந்த மாதிரியான தொடர் தவறுகளால் ஏற்பட்ட தோல்விகளால் மூடப்பட்ட நிறுவனங்களும் உண்டு. பல்லாண்டு காலங்கள் மிகச் சிறந்ததாக இருந்த நிறுவனங்கள் தங்களுடைய மூளைகளைச் சலவை செய்து புதிய கற்றலுக்கான சூழ்நிலைகளை ஏற்படுத்த வில்லை  ஒரு தனி மனிதனுக்கோ அல்லது ஒரு நிறுவனத்துக்கோ பல காலங்கள் சிறப்பான உயர்நிலை சமூக அந்தஸ்து கிடைத்ததாலும் எவ்வளவு நாட்கள் அவை தொடரும் என்பதற்கான எந்த உத்திரவாதமும் இல்லை. ஒரு காலத்தில் மிகச் சிறப்பான காமெராக்களை கண்டுபிடித்த கோலோச்சிய கோடக் என்னும் நிறுவனம் வருகின்ற மாற்றங்களைக் கண்டுபிடித்து அதற்கான  தயாரிப்புகளில் ஈடுபடாததால் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

    இந்த நிலைக்கு வந்த பல நிறுவனங்களின் வழக்கு ஆய்வுகள் ஒன்றை மட்டும் தெளிவாகத் தெரியப்படுத்துகின்றன. தோல்விகள் பெரும்பாலும் ஒரு கணத்தில் வருவதில்லை. அவை வருவதற்கான பல அறிகுறிகள் நமக்கு முன்னமே கிடைத்து விடுகின்றன. நாம் விழிப்புடன் இருத்தல் மிக்க அவசியம்.

    நண்பர்களே ! தோல்வியையும் தொடர் தோல்விகளையும் கண்டு அஞ்சவேண்டியதில்லை… அவைகள் நமக்கு பின்னால் வரும் வெற்றிக்கு நிச்சயமான வழிக்காட்டல்களைக் கொடுக்கும்.

    துணிந்து முயற்சிக்கலாமே!!.. இன்றைய தோல்விகளை நாளைய வெற்றிகளாக மாற்றலாமே!!

    (தொடரும்)

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 43

    க. பாலசுப்பிரமணியன்

     

    மன அழுத்தங்களும் தோல்விகளும்

    வாழ்க்கையிலே பல பேர்கள் நல்ல அறிஞர்களாக இருந்தாலும், நன்கு படித்தவர்களாக இருந்தாலும், நல்ல திறனுடையவர்களாக இருந்தாலும் அடிக்கடி தோல்வியைத் தழுவிக்கொள்கின்றனர். “இவ்வளவு இருந்தும் நாம் வாழ்க்கையில் வெற்றி பெற முடியவில்லையே” என்ற ஆதங்கத்தில் தங்களைத் தாங்களே வருத்திக்கொள்கின்றனர். இதற்கு ஒரு முக்கிய காரணம் – அவர்களில் பலர் மன அழுத்தங்களுக்கு இரையாகித் தங்கள் வெற்றிப்பாதைகளுக்குத் தேவையான சக்தியையும் முழுக்கவனத்தையும் இழந்து தடுமாறுவதால் மட்டுமே.

     தற்கால சமுதாயத்தின் வாழ்க்கை மேடையில் பலரும் இந்த மன அழுத்தத்திற்கு இரையாகி நிம்மதியையும் மகிழ்ச்சியையும் இழந்து நிற்கின்றனர். தேவைகளை அதிகரித்துக்கொண்டு அவைகளை அடைய முடியாததால் ஒரு பொய்யான சமாளிக்க முடியாத வழிமுறைகளை மேற்கொண்டு சிறிது காலத்திலேயே மன அழுத்தங்களுக்கு இரையாகி வாழ்க்கையிலே தோல்வியடைந்துவிட்டோம் என்ற தவறான கருத்தை மனதில் நிறுத்தி வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்குத் தயாராகி விடுகின்றனர்.

    இந்த மாதிரியான மன அழுத்தங்களுக்குப் பல காரணங்கள் உண்டு.

    1. நாம் செய்கின்ற எல்லா வேலைகளையும் நூறு விழுக்காடு சரியாகச் செய்யவேண்டும் (urge for perfection) என்ற ஒரு ஆதங்கம். இது ஒரு உன்னதமான எண்ணம்தான். இது ஒரு உயரிய நோக்கம்தான். ஆனால் இது அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் எல்லாச் சூழ்நிலைகளும் நடக்கக்கூடியது அல்ல. ஆனால் அதற்கான முயற்சிகளை நாம் நிச்சயமாகக் கைவிடக் கூடாது. எந்தச் செயலிலும் குறைகள் இருக்க வாய்ப்புகள் உண்டு. அவைகளை அறிந்து அந்தக் குறைகளைத் தொடர்ந்து களைந்து கொண்டு வருதலே வாழ்க்கையின் சிறப்பு. இதுவன்றி குறைகளுக்காகவும் இயலாமைகளுக்காகவும் மனதில் வீணான பயம் மற்றும் தாழ்வு மனப்பான்மைகளை வளர்த்துக்கொள்ளுதல் தோல்விக்குத் தேவையான அடித்தளத்தை அமைந்துவிடும்.
    2. “தங்கள் வாழ்க்கையில் தாங்களே புயலை ஏற்படுத்திக்கொள்பவர்கள் சிலர் உண்டு.” என்பது ஒரு மனோதத்துவக் கணிப்பில் காணப்பட்ட உண்மை. தங்களுடைய அறியாமையினாலேயோ, அரைகுறை அறிவினாலேயோ அல்லது தங்களிடம் இல்லாத ஒரு திறனை இருப்பதாக மற்றவர்களுக்குக் காட்டத்துடிக்கின்ற பொய்யான பக்குவமின்மை காரணமாகவோ ஒரு செயலில் இறங்கி திக்கு முக்காடுபவர்கள் பலருண்டு. பல நேரங்களில் தங்களுக்குத் தெரியாத வியாபாரங்களைத் தொடங்கி அதன் நுணுக்கங்களை அறியாமல் பண இழப்புகளுக்கு ஆளாகி மன அழுத்தத்தில் முன்னேறமுடியாமல் தவித்து தோல்வியைத் தழுவிக்கொண்டவர்கள் பல பேர். ஒரு அலுவலகத்தில் மிகச் சிறப்பாகப் பணிசெய்துக்கொண்டிருந்த ஒருவருக்குப் பாராட்டுகள் குவிந்தவண்ணம் இருந்தன. அதனால் ஏற்பட்ட தன்னுடைய தகுதியைப் பற்றிய ஒரு மாயை அவரைத் தான் அது போன்ற நிறுவனத்திற்குத் தலைவராகவே ஆகிவிட வேண்டும் என்ற ஒரு வெறியை உண்டாக்கி தற்போது இருக்கும் வேலையைத் தூக்கி எறியத் தூண்டியது. அதன்பின் ஓராண்டிற்கும் மேலாக இன்னொரு வேலை கிடைக்காமல் வேறு தொழிலும் தொடங்க முடியாமல் மன அழுத்தங்களுக்கு ஆளாகி மனநல நிபுணர்களைச் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஒரு சுவரில் தலையை நாமே முட்டிக்கொண்டு வலிக்கின்றதே என்று சொன்னால் அது முட்டாள்தனமான செயலன்றோ? அதைப்போலத்தான் பல நேரங்களில் சிலர் தனக்குத் தானே வேதனைகளையும் துன்பங்களையும் ஏற்படுத்திக்கொள்கின்றனர் ஆகவே தோல்விகளை நாமே ஏற்படுத்திக் கொள்வதைத் தவிர்த்தல் மிக அவசியம்.
    3. பதட்டம், அவசரம் காரணமாக மன அழுத்தங்களை ஏற்படுத்திக்கொண்டு தவறுகளுக்கு இலக்காகி மேலும் மேலும் அதே தவறுகளை திரும்பத் திரும்பச் செய்து “உதவாக்கரை” என்று பலரால் அடைமொழி கொடுக்கப்பட்டு தோல்வியைத் தழுவியவர்கள் சிலர். பதட்டங்கள் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. மற்றவர்களைவிட தான் அதிகமாகச் சாதிக்க வேண்டும், மற்றவர்களைவிட தான் அதிகம் சேகரிக்க வேண்டும், காலங்கள் கனிவதற்கு முன்னேயே தான் சாதனைகளை நிகழ்த்த வேண்டும், தன்னுடைய சாதனைகளையும் சேகரிப்புகளையும் விட மற்றவர்கள் அதிகம் சேகரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் – என்ற சிந்தனைகள் மன அழுத்தத்தில் பதட்டங்களை ஏற்படுத்துகின்றன. அது மட்டுமின்றி, நாம் ஒரு செயலைச் செய்யும் பொழுது மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்களா அவர்கள் நம்மை எவ்வாறு மதிப்பீடு செய்திருப்பார்கள் என்ற ஒரு சிந்தனை பதட்டங்களை ஏற்படுத்துகின்றது. உதாரணமாக தேர்வுகளுக்குச் செல்லும் மாணவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ” நீ இதைப் படித்துவிட்டாயா?”  “இந்த கேள்விகளெல்லாம் வந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியவில்லையே” என்ற கேள்விகள் அவர்களுடைய பதட்டங்களுக்கும் மன அழுத்தங்களுக்கும் சில முன்னுதாரணங்கள். பல நேரங்களில் தேர்வுகளில் மாணவர்கள் இந்த பதட்ட நிலை காரணமாகவே தங்கள் முழுத் திறமையைக் காட்டாமல் தவறி விடுகின்றனர்.

    இதே போன்று மிகச் சிறப்பான தகுதி உடையவர்கள் கூட நேர்காணல்களில் பதட்டத்தினாலும் உடனே பதில் சொல்லவேண்டும் என்ற அவசர புத்தியினாலும் தவறுகள் இழைத்துத் தோல்வியை தழுவிக்கொள்கின்றனர்.

    மன அழுத்தங்களைத் தவிர்ப்பதற்கான வழிகள் என்ன?

    1. நம்மை நாமே புரிந்துகொள்ளுதல்
    2. நமது திறன்களையும் நமது சூழ்நிலைகளையும் ஏற்றுக்கொள்ளுதல்
    3. நமது செயல்களுக்கான இலக்குகள், வழிமுறைகள், எண்ணப்போக்குகள், திறன்கள் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து செய்தல்

    4.நம்முடைய தனித்தன்மையை உணர்ந்து மற்றவர்களோடு போட்டிபோடாமல் இருத்தல்

    1. இன்ப-துன்பங்களைச் சமமாக நினைத்துச் செயல்படுதல்
    2. உடல்-மனம் இரண்டையும் ஒருங்கிணைத்துக் கட்டுப்பாடாக வைத்தல்
    3. நிகழ்காலத்தில் வாழ்தல் (இறந்த மற்றும் வருங்காலச் சிந்தைங்களுக்கு இரையாகாமல் இருத்தல்)

    இது போன்ற பல கருத்துக்கள் நம்மை மன- அழுத்தம் இல்லாத வாழ்வு வாழ்வதற்கு உதவும்.  முயன்று பார்க்கலாமா ?

    வாழ்க்கை ஒரு போராட்டம்தான் -ஆனால் இனியது !! – வாழ்ந்து பார்க்கலாமா ?

    (தொடரும் )

    Share
  • ஆறுபடை அழகா…. (6)

     

     

    திருத்தணிகை

     

    விண்ணசையும் மண்ணசையும் கோளசையும் கண்ணசைவில்

    வேலசையும் வேகத்தில் விதியசையும் நல்லிசையாய்

    பண்ணிசைத்துப் பாடிடவே உன்புகழைப் பேரழகா

    காற்றிசைக்கும் தென்றலாய் காலமெல்லாம் மாறாதோ ?

     

    பணியேதும் இனியில்லை உன்னருகில் அமர்ந்திடுவேன்

    தணிகைமலைப் புகழ்பாடி தனிப்பொழுதைக் கழித்திடுவேன்  

    மணியோசை ஒலித்துவிடும் திருக்கோவில் வாசலிலே

    அணிசெய்த உன்னழகை அனுதினமும் பார்த்திருப்பேன் !

     

    அகத்தியனுக்கே தமிழ்த்தந்தாய் அகிலமெல்லாம் பயனுறவே

    அகமுவந்து வாசுகிக்கே அருள்புரிந்தாய்  நோய்தீர்த்து

    அசுரனின் சக்கரத்தை அன்புடனே நெஞ்சிலேநிறுத்தி

    அகிலமெல்லாம் காத்துநின்றாய் ஆறுமுகனே அடைக்கலமே !

     

    மனத்துள்ளே கோயில்கட்டி மலையப்பா அழைத்துடுவேன்

    எனக்குள்ளே நீயிருந்தால் இல்லையென்றும் எதிர்மறைகள்

    குகைக்குள்ளே நீயிருந்த தவக்கோலம் போதுமய்யா

    குடியிருக்க நீவருவாய் எனக்குள்ளே குருபரனே !

     

    மலர்தூவி மாலையிட்டு மனதாரப்  போற்றிவிட்டேன்

    மறக்காமல் பாலோடுதேனும் பஞ்சாமிர்தம் படைத்துவிட்டேன்

    மறைக்காமல் என்குறைகள் உன்னிடமே சொல்லிவிட்டேன்

    மனமிரங்கி வாராயோ மனத்தினிலே  ஆட்சிசெய்ய ?

     

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 42

    க. பாலசுப்பிரமணியன்

     

    நம்மை முதலில் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்

    நம்மைத் தோற்கடிக்க உலகில் நம்மைத் தவிர வேறு எந்த சக்தியும் தேவையில்லை. நம்மில் பலரும் நம்மை நாமே தோற்கடித்துக்கொண்டிருக்கின்றோம். முந்தைய பகுதிகளில் நாம் கண்டது போல வெற்றியும் தோல்வியும் ஒரு பார்வைகள்தான். எந்த இரண்டு பேருடைய வெற்றியையும் தோல்வியையும் ஒப்பிட்டுப் பார்த்தல் மிகவும் தவறானது.

    ஒரு பள்ளியில் படித்த இரண்டு பெண் குழந்தைகள். ஒரு பெண் நல்ல புத்திசாலி. நல்ல உழைப்பாளி. நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால் உழைத்து முன்னுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் உடையவர். அந்தப் பெண்ணின் தோழி வாழ்க்கையை சற்றே எளிதாக எடுத்துக்கொண்டு மேலே சொல்லக்கூடியவர். அவருடைய தந்தை ஒரு பெரும் செல்வந்தர். திரைப்படத் துறைகளில் சாதனை படைத்தவர். ஆகவே அந்தப் பெண் ஒரே குழந்தை என்பதனால் வாழ்க்கை வசதிகளை அதிகம் கொடுத்தவர். இந்த இரண்டு நண்பர்களும் பள்ளி முடித்து கல்லூரிக்குச் சென்ற பொழுது முதலாவது பெண் மேலாண்மைத் துறையில் முதுநிலை படிப்பு முடித்து நிர்வாக வல்லுனராக வேலையில் சேர்ந்தார். இரண்டாவது பெண்ணோ  இளநிலை படிப்பு முடித்ததுமே தன்னுடைய தந்தையின் தொழில் நிர்வாகத்தில் பங்கேற்றுக் கொண்டார். ஒரு நிலையில் முதல் பெண்ணுக்குச்  சரியான வேலை கிடைக்காமல் தேடி ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த பொழுது அந்த நிறுவனத்தின் சொந்தக்காரராக இருப்பது தன்னுடைய தோழி எனத் தெரிய வந்தது.

    அதன் காரணமாக ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திக்கொண்டு தன் விதியையும் தன்னுடைய இயலாமையையும் மேற்கோளாக்கி மன உளைச்சலை உண்டாக்கிக்கொண்டார். நாளடைவில் இது வளர்ந்து ஒரு மன நோயாகவே உருவாகிவிட்டது.

    இது போன்ற பல நிகழ்வுகளை நாம் வாழ்க்கையில் சந்திக்க நேரிடும். அந்த நேரங்களில் நாம் ஏதோ தவறு செய்து விட்டது போன்ற குற்ற உணர்ச்சி ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த மனப்பான்மை நம்முடைய முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தடைக்கல்லாக மாறி வாழ்க்கையைத் தடம் புரளச் செய்யும். எனவே இந்த மாதிரி உணர்வுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளுதல் மிக அவசியம். வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் ஒருவருடைய பதவியினாலோ அல்லது புகழினாலோ அல்லது செல்வத்தினாலோ மட்டும் வருவதில்லை. ஒருவருடைய வாழ்க்கைத் தரம் எப்படிப்பட்டது -அதில் நேர்மையும் வாய்மையும் உழைப்பும் சேவை மனப்பான்மையும் எவ்வாறு ஓங்கி நிற்கின்றன என்பதைப் பொருத்துத் தான் ஒருவரை எடை போட வேண்டும்.

    பல செல்வந்தர்கள் வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் இருந்தாலும் வெளி உலகிற்குத் தம்மை ஒரு பெரிய மனிதனாக காட்டிக்கொள்வதில் பெருமைப் படுகின்றனர். அதே நேரத்தில்தொழிலில் வீழ்ச்சி ஏற்பட்டால் தங்களுடைய கடன்களைத் திருப்பிக் கொடுக்காத நிலையில் மனமொடிந்து தற்கொலை செய்து கொள்வதற்கும் தயங்குவதில்லை. எனவே வாழ்க்கையில் செல்வம் மட்டும்  ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று நினைப்பு முட்டாள்தனமானது.

    நம்மை நாமே ஏற்றுக்கொள்ளுதல்  (Self-Acceptance ) என்பது ஒரு மிகப் பெரிய வெற்றி  மற்றும் முதிர்ச்சியின் அறிகுறி.. அதுவே வாழ்க்கையின் முழு மகிழ்ச்சிக்கு அடிப்படை. நம்முடைய உடல், அழகு, நிறம், குடும்பம், கல்வி, சந்தர்ப்ப சூழ்நிலைகள், கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு விட்டால் நம்மை விட அறிவாளிகள் யாரும் இருக்க முடியாது. நம்முடைய உடமைகள் நமக்கு இறைவனால் அளிக்கப்பட்டவை. அதில் நிச்சயமாகக் குறையிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவைகளை நாம் எப்பொழுது மற்றவர்களின் உடமைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றோமோ அப்பொழுதே நமது துயரங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு விடுகின்றது. இதை நாம் உணர வேண்டும்.

    ஒரு முறை எனக்கு ஒரு விருது கிடைத்தது. அதைக் கொடுக்க வந்தவர் ஒரு நீதியரசர். சுமார் ஒரு மணி நேரம் மிகவும் நன்றாகப் பேசிக்கொண்டிருந்தோம். சில நாட்களுக்குப் பின் அலுவலகத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கு காரணமாக  நீதிமன்றத்தில் நேரில் வரும்படி உத்தரவிடப்பட்டது. அன்று நான் சென்ற பொழுது அமர்ந்திருந்த நீதியரசர் எனக்கு விருது கொடுத்தவர். அந்த நேரத்தில் அவர் என்னைத் தெரிந்ததாகக் கூடக் காட்டிக்கொள்ளவில்லை. அது அவர் தொழில் தர்மம். நேர்மையின் விளக்கம். நான் வருத்தப்பட முடியுமா? அல்லது அவருடன் பழகியிருக்கிறேன் என்பதற்காக சலுகைகள் எதிர்பார்க்க முடியுமா? அவருடைய அந்தச் செயலுக்காக நான் அவரைப் பெரிதும் மதித்தேன்.

    இதுதான் வாழ்க்கையின் உண்மை. பல நேரங்களில் நம்முடைய உறவுகள், நண்பர்கள், தெரிந்தவர்கள், கூட வேலைபார்த்தவர்கள், நெருங்கிப் பழகியவர்கள் வாழ்க்கையில் வெவ்வேறு பாதைகளில் சென்றிருப்பார்கள். அவரவர்களுடைய சாதனைகள், பதவிகள், வாழ்க்கை நிலைகள் வேறு வேறாக இருக்கும். அதன் காரணமாக நாம் நம்மைத் தாழ்த்திக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

    சமீபத்தில் வந்த செய்தி. காவல் துறையில் இருக்கும் ஒரு போலீஸ்காரருடைய மகன் நன்கு படித்து அதே போலீஸ் துறையில் ஒரு மேலதிகாரியாக வந்த பொழுது அவருடைய தந்தை தன் மகன் முன் நின்று சல்யூட் அடித்தார். உண்மையில் தன் மகனை அந்தப் பதவியில் பார்த்த தந்தைக்கு நிச்சயம் பெருமிதமாக இருந்திருக்க வேண்டும். தன் மகன்கீழே வேலை பார்க்க வேண்டியிருக்கின்றதே என்று வருத்தப்பட முடியுமா? அல்லது தாழ்வு மனப்பான்மை கொள்ள முடியுமா?

    தந்தைக்கு உபதேசம் செய்ய முருகன் துணிந்தபொழுது தந்தையை தன் முன்னே ஒரு சீடனாக மண்டியிட்டு அமர வைக்கவில்லையா? வாழ்க்கையின் ஏற்றங்களும் தாழ்வுகளும் நம்முடைய வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயிப்பதில்லை. இரண்டும் வாழ்க்கையின் நிகழ்வுகளின் மீது நாம் கொள்ளும் பார்வைகள்தான்.

    பல ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு பள்ளியில் ஆசிரியராக இருந்த நேரத்தில் என்னோடு வேலை பார்த்த ஒரு ஆசிரியர் சில மாதங்களுக்கு முன்னே சந்தித்தார். ” பார்த்தீர்களா சார். நம்மகிட்டே படித்த அந்த மாண்வர்களெல்லாம் எங்கேயோ மேல போய்விட்டார்கள். நாம தான் அப்படியே இருக்கோம்” நான் சிரித்தேன். உண்மை. நீதியரசர்கள் பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், என்று பல சிறப்பான தொழிலில் அவர்களை பார்க்கும் பொழுது நமக்குப் பெருமையாக இருக்கின்றது. அதற்காக நாம் ஏன் நம்மைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்? ஏணிப்படிகள் ஏற்றிவிட்ட பின் தங்களுக்குச் சொந்தமான மூலையிலே ஒதுங்கிவிடுவதுதான் வாழ்க்கையின் நியதி?

    “செய்யும் தொழிலே தெய்வம்” என்ற மனப்பான்மையுடன் செய்யும் பொழுது எல்லாத் தொழில்களும் தெய்வீகத் தன்மை அடைந்து விடுகின்றனவே? இதற்காக நாம் ஏன் வாடி வதங்க வேண்டும்? ஒவ்வொரு நாளும் நாம் இன்று நன்றே செய்ய வேண்டும் என்று எழுந்து அதை நடத்திக் காட்டும் பொழுது அந்த ஒவ்வொரு நாளும் வெற்றியின் அறிகுறி தானே?

    தினமும் நாம் நமது வெற்றிகளைக் கொண்டாடலாமே? முயன்று பார்க்கலாமா?

    (தொடரும்)

    Share
  • ஆறுபடை அழகா…. (5)

     

     

    பழமுதிர்ச்சோலை

     

    தோகைமயில் பாதையிலே தோரணங்கள் போட்டிருக்கும்

    பாகைவழி நீக்கிவிட்டுக் கோள்களெலாம் கூடிநிற்கும்

    வாகைசூடி வருபவனை வாழ்த்திடவே காத்திருக்கும்

    தேவையென்றுத் தேடியிங்கே கந்தனவன் கண்விழியை !

     

    நாசியிலே காற்றடக்கி நானறியத் துடிப்போரும்

    ஆசையுடன் பாசம்விட்டு அகமகிழும் பெரியோரும்

    பூசையெனச் சேவையிலே புண்ணியத்தைச் சேர்ப்போரும்

    பாசத்துடன் குமரய்யா  பாதங்கள் தேடியிருப்பார் !

     

    பட்டமரம் மேலிருப்பாய் பசுமேய்க்கும் பாலகனாய்

    சுட்டப்பழம் கேட்டுவிட்டால் சுடாதபழம் தந்திடுவாய்

    வெட்டவெளி விண்ணெல்லாம் வேலவனே மறைந்திருப்பாய்

    கிட்டவந்தே கேட்டிருப்பாய் கிரங்கியிந்தன் தமிழ்ப்பாட்டை !

     

    வள்ளியுடன் தெய்வானை வளைத்திருக்க வேலவனை

    வெள்ளிமலை தம்பதியர் வாழ்த்திவிட பாலகனை

    அள்ளிவந்த ஆசியுடன் வானகத்து வித்தகரும்

    துள்ளிவந்தார் தேடியிங்கே சோலைமலை சூட்சுகனை.!

     

    கரையில்லாக் கருணைக்கடல் கலையறியா எழில்வண்ணம்

    மறையறியா முன்தோன்றல் மனம்நிறையும் ஒளிப்பிழம்பு

    சிறைப்பட்டேன் உன்நினைவில் சிதறாத சிந்தனையில்

    நிறைவாக  நிலைபெறுவாய் நித்தியனே என்னுயிரில் !

     

    Share
  • ஆறுபடை அழகா…. (4)

     

     

    சுவாமிமலை (திருவேரகம்)

     

    ஓங்காரப் பொருளை உலகிற்குச் சொன்னவனே

    ஏங்காத நாளில்லை உன்னருளைத் தேடித்தேடி

    தாங்காத துயரெல்லாம் தானாக விலகிடுமே

    தணியாத அன்போடு திருவேரகம் கண்டிடவே !

     

    தந்தைக்கும் குருவாகி தர்மத்தைக் காத்தவனே

    தவிக்கின்ற நெஞ்சத்தின் தாகங்கள் தீர்ப்பவனே 

    தானென்ற அகந்தையைத்  தகர்த்திடும் கந்தா

    தரணியிலே உனையென்றித் துணையேது முருகா!

     

    குருவாக அமர்ந்தாலும் குழந்தை வடிவன்றோ

    வருவாயே நானழைத்தால் வாடாத முகத்தோடு

    அருவாக உருவாக எதுவாக நீயிருந்தாலும்

    கருவாக இருப்பாயே காலமெல்லாம் சிந்தனையில் !

     

    ஓமென்று சொல்லிடுவேன் ஓராயிரம் முறைகள்

    உள்ளத்தில் நீயிருப்பாய் உணர்வாகி நிறைவோடு 

    உயிரோடு ஒன்றான ஓங்காரத் தத்துவமே

    உனையன்றித் துணையேது உய்ந்திடவே இப்புவியில் ?

     

    நீராட்டி சீராட்டி தாலாட்ட அழைத்திடுவேன்

    நீயென்றும் குழந்தாய் என்றே நினைத்திடுவேன்

    நீலமயில் மீதேறி வருவாயோ நித்தியனே

    நிலையாத என்மனதின் நிலைகாக்க வாராயோ ! 

     

    Share
  • ஆறுபடை அழகா…. (3)

     

     

    பழனி  (திருவாவினன்குடி)

     

    பழமெதற்குப்  பூவெதற்கு பழனிமலை ஆண்டவனே

    பழமாகக் கனிந்து தரணியெல்லாம் மணப்பவனே

    நிழலாக நின்றாலும் நினைவெல்லாம் நிறைபவனே

    நிசமாக வருவாயோ நின்னருளைத் தந்திடவே ?

     

    பாலெதற்குத் தேனெதற்கு பழனிமலைப் பாலகனே

    வேலெடுத்த உனைக்கண்டால் வேதனைகள் மறையாதோ?

    சொல்லெடுத்துப் பாட்டிசைத்து உனையழைக்க முருகா

    சொல்லாமல் நீவருவாய் சோதனைகள் விலக்கிடவே !

     

    தோள்சுமக்கத் துணைதேடி உனைநாடும் காவடிகள்

    கண்ணிமையில் உனைநிறுத்தித் தேடிடுமே சேவடிகள்

    பவனிவரும் பழநியிலே பொங்கிவரும் பால்குடங்கள் 

    பாசத்துடன் அணைத்திடுவாயே பக்தர்களை பழனியப்பா !

     

    தோகைமயில் சேவல்கொடி ஏதுமின்றி நின்றாய்

    போகமில்லா வாழ்வென்றும் புதிதென்று சொன்னாய்

    சோகமெல்லாம் நீங்கிடுமே சொல்லிடவே உன்பெயரை

    போதகனே சாதகனே புவிக்காக்கும் வேலவனே !

     

    அவ்வையின் தமிழ்கேட்க ஓடிவந்த வடிவேலா

    அகத்தியனுக்கு அருள்புரிந்த ஆனந்தத் தமிழ்வேளே!

    ஆண்டியாகி நின்றாலும் அளவில்லா அருட்சுனையே

    ஆவினன்குடி மலையப்பா அருள்வாயே குறைவின்றி !

     

    Share
  • ஆறுபடை அழகா…. (2)

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருச்செந்தூர் (திருச்சீரலைவாய்)

    சூரனை அழித்திடவே சுடர்நெருப்பாய் பிறந்தவனே

    சீரலைக் கடலருகில் சீறிவந்து போர்தொடுத்தாய்

    சிங்கமுகன் அண்ணனின் சிரமனைத்தும் கொய்திட்டாய்

    சேவலுடன் மயிலாக்கி தன்னருளைத் தந்திட்டாய்

     

    ஒருமுகமும் மறுமுகமும் உனக்கென்றும் ஈடில்லை 

    அறுமுகமும் ஒருமுகமாய் அசுரனையே அழித்தவனே

    திருமுகத்தின் கண்ணிரண்டில் திருவருளைப் பெருகவிட்டு

    இன்முகமாய் அடியார்கள் இதயத்தில் அமர்ந்தவனே !

     

    விண்ணோரும் வந்திட்டார் செந்தூரில் சீர்கொண்டு 

    வினைதீர்க்கும் வேலோடு விளையாடும் உனைக்காண

    வாகையுடன் கொடிசேர்த்து மயிலோடு மனங்கவர்ந்த

    வாரணத்தின் இளையோனே செந்தூரின் சிங்காரா !

     

    கடலோரம்  நீயிருக்கக் கடலலைகள் களைப்பாறும்

    காற்றோடு தாளமிட்டுக் கருமேகம் கவிபாடும்

    கடலினங்கள் கரைவந்து காலடியில் விளையாடும்

    கருணையுள்ள குருநாதா கண்திறந்து பாராயோ !

     

    நலமனைத்தும் பெருகிடுமே நாழியிலே நீராட

    பலமனைத்தும் வந்திடுமே பார்வையுந்தன் அருளாலே

    புலனனைத்தும் அடங்கிடுமே பொன்மேனி கண்டாலே

    தலமென்று சொல்லிடவே திருச்சீரலைவாய் திருத்தலமே

     

     

    Share