ரா.பார்த்தசாரதி

 

உலகில் மூன்று பங்கு தண்ணீரால் நிரம்பியதே

ஏனோ மாநிலத்திற்கு, மாநிலம் கலகம் ஏற்பட்டதே ,

வேற்றுமையில் ஒற்றுமை என்பது பொய்யானதே,

தண்ணீரால் மாநிலத்தில் ரத்தவெள்ளம் ஆனதே !

 

சுதந்திரம் அடைந்தது முதல் நதிநீர் இணைப்பு

இன்னும் இவை காகித திட்டமே என மக்களின் நினைப்பு,

நதிநீர் மாநிலத்தின் வேளாண்மைக்கு முக்கியத்துவம் ஆனதே

விவசாயிகளின் கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டமும் நியாயமானதே !

 

வாழ்க்கையில் விட்டு கொடுப்பவர்கள் என்றும் கெடுவதில்லை

இது மாநிலத்திற்கும், மத்திய அரசிற்கும் பொருந்தாமலில்லை

நீதி கேட்டும், சமரசம் செய்தாலும், பிரச்சனை தீர்ந்தபாடில்லை

வன்முறையால் எதையும் தீர்க்க முடியாது என தெரியாமலில்லை !

 

நடுவர் சொல்லுக்கும், நீதிபதி தீர்ப்புக்கும் மதிப்பு அளிக்கவேண்டும்,

நீதியை நிராகரித்தால் எந்த மாநிலமும் துன்பப்படவேண்டும்

இருவர் கூடி சமரசத்தால்  ஓர்   சமாதானம் ஏற்படவேண்டும்

இதனால் இருவர்க்கும் பயன் உள்ளதாக இருக்கவேண்டும் !

 

மக்களின் பொதுநலம் கருதியே நதிநீர் தீட்டப்படவேண்டும்

ஜாதி, அரசியல் போன்றவை கலவாமல் இருக்கவேண்டும்

மாநிலங்களிடையே இனவெறி நீங்கி, ஒற்றுமை நிலவ வேண்டும்

ஜாதி, இனம் இவற்றிற்கு  ஊறு விளையாமல் இருக்கவேண்டும் !

 

நதிநீர் பங்கீடு திட்டத்தை மத்திய அரசு விரைவில் அமலாக்கவேண்டும்

மாநிலங்களின் பிரச்சனைகளை ஒன்றுகூடி  தீர்மானிக்கவேண்டும்

நீரின்றி அமையாது உலகம் என்பது ஆன்றோர் மொழியாகும்

நீரே மக்களின் தேவைக்கும், உணவிற்கும் இன்றியமையாததாகும் !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *