-ரா.பார்த்தசாரதி

பண்டிகை நாட்களில் யாரோ
உணவு கொடுத்து உதவுகிறார்கள்! 
தலைவாழையில் விதவிதமான 
உணவு வகைகள் பல… 

வடையைப் பார்த்ததும்  பெரிய 
மகனுக்குப் பிடிக்குமே என்றது மனசு! 

மெல்லிய பூரியும், சப்பாத்தியும்
மகளுக்குப் பிடிக்கும் என்றது மனசு! 

இலையில் போட்ட பருப்பும், நெய்யும்
பேரனுக்குப் பிடிக்கும் என நினைத்தது! 

அப்பளம்  இளைய மகளுக்குப் பிடிக்குமே 
என எண்ணியது  மனசு! 

பால்பாயசம் மறைந்த கணவனுக்கு 
மிகவும் பிடிக்குமே என்றது உள்ளம்! 

இப்படி எல்லாவற்றையும் பார்த்துச் 
சாப்பிடப்  பிடிக்காமல் தன் விருப்பங்களைத் தள்ளிவைத்து 
நினைவலையில் நீந்திக்கொண்டு, தன்னலமற்ற தனிமரமாய் 
முதியோர் இல்லத்தில்  வசிக்கிறாள்  ஓர்  தாய்! 

தாய்மனம்  பித்து, பிள்ளைகள் மனம் கல்லு 
யாவரும் அறிந்த  பழமொழியன்றோ!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *