Tag: ரா. பார்த்தசாரதி

  • சுதந்திர தினம் –  15, ஆகஸ்ட் 2025

    சுதந்திர தினம் – 15, ஆகஸ்ட் 2025

    ரா. பார்த்தசாரதி

    78  ஆண்டுகள் கடந்து  79 ஆம்  ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றோம்.

    சுதந்திர காற்றை சுகமாய் சுவாசித்த  நன்னாள்!
    அகிம்சை வழியில் கிடைத்த அன்புத்திருநாள்.
    அடிமைச்  சங்கிலியை உடைத்த அற்புதமான நாள்.
    வெள்ளையரை வெளியேற்றி வெற்றி பெற்ற பெருநாள்!
    கம்பிரமாய் மணிக்கொடி தரும் ஆனந்த திருநாள்.
    சுதந்திர காற்றை சுகமாய் சுவாசிக்கின்ற நன்னாள்!

    ஆம் ! இன்றைய பாரத சுதந்திர நாட்டின் நிலைமை என்ன?
    தொழில், மற்றும் எல்லா துறைகளிலும்  முன்னேற்றம் கண்டோம்,
    விண்வெளி ஆராய்ச்சியில் பிற நாட்டுடன் சேர்ந்து வெற்றிக்கொண்டோம்.
    நமது ராணுவப் படை  கொண்டு   எதிரிகளை அடிபணியச்  செய்தோம்.
    இருப்பினும் நாம் தீர்வு காண முடியாத, மதப்பிரிவினால் ஏற்படும் தீவிரவாதத்தை மட்டும் அடக்க முடிந்தபாடில்லை! மதப் பிரிவினையே எல்லா தீவிரவாதத்திற்கும்  அடித்தளமாக அமைகின்றது!!

    மணிப்பூர், காஷ்மீர்- நடந்த இனக் கலவரமே தீவரவாத்திற்கு முக்கிய காரணம்.

    காஷ்மீரில் பல ஆண்டுகளாக மத பிரச்சினை இருந்துவருகிறது.

    பல மொழி, பல ஜாதிகள்மாநிலத்தில் இருந்தாலும்  வேற்றுமையில் ஒற்றுமை  என்பதை  இத்தனை ஆண்டுகளாக நாம் காத்து வருகின்றோம்!

    மக்களே ! எந்நாளும், ஒற்றுமையுடன் இருந்து நம் பாரத தேசத்தைப் பேணி காப்போம்.

    பாரதி கூறுகிறார் – ஜாதிகள் இல்லையடி பாப்பா ! பயம் கொள்ளாதே பாப்பா, குலத்தாழ்ச்சி, உயர்ச்சி  சொல்லல் ஆகாது பாப்பா என்கிறார்.

    உச்சி மீது வானிடிந்து போயினும் அச்சமில்லை, அச்சமில்லை! என்றும் யாதும் ஊரே! யாவரும் கேளிர், தீதும், நன்றும் பிறர் தர வாரா! எனும் சங்கப் பாடலை உணர்த்தியதும் நம் நாடு!

    மேலும் பாரதி கூறுகிறார்:

    தாயின் மணிக்கொடி பாரீர் !
    அதை தாழ்ந்து பணித்திட வாரீர்!
    ஓங்கி வளர்ந்த்தோர்  கம்பம்
    அதன் உச்சியின் மேல்
    எங்கள் தாயின் மணிக்கொடி பறக்குது பாரீர் !
    வந்தே மாதரம் என்போம்
    நம் பாரதம்  காப்போம்

    எனக்  கூறுகிறார் !

    என்று தணியும் இந்த சுதந்திர தாகம்,
    என்று மடியும் இந்த அடிமையின் மோகம்,

    மற்றும் நெஞ்சம்  பொறுக்கவில்லையே இந்த நிலை கெட்ட  மானிடர்களை கண்டால் ! என்று முழங்கினார் பாரதி !

    நாம் அந்தமான்  தீவில் நமது  வீரத்  தியாகிகள் பட்ட  கஷ்டங்களை நினைந்து பார்த்தால்  நமக்கு சுதந்திரத்தின் அருமை புரியும். இன்று சுதந்திர காற்றை சுவாசிக்க அன்று பல உயிர்களின் மூச்சுக் காற்று நின்றது. மக்களே, நாம் சுகபோகத்தில் வாழ்ந்திடாமல் சுதந்திரம் பெற உழைத்தவர்களை மறக்காமல் நினைந்திடுவோம்!

    மக்களே, நல்ல தலைவர்களை தேர்ந்திடுங்கள்! பணத்திற்காக ஓட்டை அளித்து துரோகிகளாக நிற்காதீர்கள்.  ஓங்கி நமது குரல் ஒலிக்க நம் உரிமைகளை மீட்டெடுப்போமே! ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு, உடை உறைவிடம்  என அனைத்தும் கிடைக்கச்செய்வோமே!

    சாதிமத பேதம் நம் நாட்டிற்கு வேண்டாம்! நம் வீட்டிற்குள் சண்டையிட்டு வெளிநாட்டவரை விட வேண்டாமே! இளைஞர்களே! நாடு உனக்கு என்ன செய்தது, என்று நினையாமல் நீங்கள் நாட்டிற்கு என்ன செய்தீர்கள் என்பதையும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை சற்றே நினைந்து பாருங்கள் தலைமுறையிலியும் அணையாமல் காக்கப்படவேண்டிய  ஒளியே சுதந்திரம், அது வெறும் வார்த்தை அல்ல. அது பிறப்புரிமை, இளைஞர்களே!! எழுந்திருங்கள், விழித்திருங்கள் குறிக்கோள் அடையும் வரை உங்கள்   உரிமைக்கு  போராடுங்கள்.

    ஜெய் ஹிந்த்!

    Share
  • தும்பிக்கையானே நம்பிக்கை

    ரா.பார்த்தசாரதி 

    வேழமுகத்தோடு    பிறந்த  இறைவனே
    முழுமுதற் கடவுளாய்  காட்சி அளிப்பவனே
    ஔவைக்கு  காட்சி தந்த  விநாயகனே
    மூலைமுடுக்கு தெருவினில் குடிகொண்டவனே !

    கல்விக்கும், ஞானத்திற்கும் ஞான முதல்வனே
    சிவனின் மூத்த மகனே, வேலவனுக்கு  மூத்தவனே
    சிவபார்வதியின்  அருமை  புதல்வனே
    முதன்முதலில் அருந்ததியிடம் மோதகம் பெற்றவனே !

    கஜமுகாசுரனை  அழித்து கணேசா என பெயர்பெற்றவனே
    முருகனுக்கு காட்சியளித்து, திருமணம் செய்வித்தவனே
    அசுரனை அழித்து எலியாக வாகனம் அமைத்துக்கொண்டவனே
    சங்கடம் கொடுக்கும் சனிபகவானை அடக்கி ஆண்டவனே !

    மோதகப் பிரியனே, பாம்பினை இடுப்பில் அணிந்தவனே
    மஹாபாரதம் எழுத  வியாசருக்கு  உதவி செய்தவனே

    காட்சிக்கு  எளியவனே எல்லோராலும் கும்பிடப்படுபவனே

    தும்பிக்கையானே நம்பிக்கையுடன் நன்மை தருபவனே !

     

    Share
  • வெல்லும் சொல்

     

     

    பழகும் விதத்தில் பழகினால் பகைவனும் நண்பனே

    சொல்லும் விதத்தில் சொன்னால் தலையாட்டுவானே

    பேசும் பேச்சும்,சொல்லில் நயமும் நம்மை உயர்த்திடுமே

    பிறர் விரும்பும் சொல்லைக் கூறினாலே புகழுண்டாகுமே!

    சொல்வன்மை என்றாலே சொல்லை திறம்பட கூறுபவனே

    பிறர்மனம் நோகாமல் சொல்லை சொல்பவன் நல்லவனே

    இனிய சொற்கள் இருக்கும்போது தீச்சொல் கூறுவானேன்

    பழமாக இனிய சொல்லிருக்க, காயை சாப்பிடுவது தீமைதானே !

    அவையறிந்து சொல்லைச் சொல்பவன் அறிவுடையவன் ஆவான்

    தவறான சொல்லை சொல்பவனே முட்டாள் எனப்படுவான்

    சொல்லாற்றல் மனிதனை என்றும் மண்டியிடச் செய்யாது

    எவர் எதிர்த்து வரினும் அவர் எதிரில் தலை வணங்காது !

    சொன்னதை எல்லாமே உடனே செய்துவிட முடியுமா

    காலம் கருதி, உரிய சந்தர்ப்பத்தில் சொல்ல வேண்டாமா

    பழி பாவங்கள் வராமல் பார்த்து எடுத்துரைக்கவேண்டாமா

    நியாயத்தை நினைந்து உண்மையை நிலைநாட்டவேண்டாமா!

    கவிஞ்சன் சொல்லைக் கொண்டு வெல்லும் கவிதை புனைகிறான்

    பேச்சாளனோ பேச்சாற்றலால் சபையில் மதிக்கப்படுகின்றான்

    சொல்லாமல் சொன்ன சொல்லுக்கு ஏதாவது விலையுண்டா

    வெல்லும் சொல்லை உடையவனுக்கு பகைமை உண்டா !

    Share
  • என்றும் என் இதயத்தில்

     

     

    என்னருகில் நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலதே

    உன்னருகில் நான் இருந்தால் உன் இதயம் சிறகடுக்குதே

    காதல் இதுதானோ உன் கண் விழிப் பார்வையிலே

    என் இதயம் துடிக்காதோ உன் மோகன புன்னகையிலே !

    காதலுக்கு தேவை கனிவான பார்வையே

    இருவிழிகள் சந்திப்பின் காந்த பார்வையே

    இரு இதயங்கள் சேர்ந்து இணையம் சுகமே

    இரு மனங்கள் ஒரு மனமாய் திகழ்ந்திடுமே !

    காதலியே, நீ என் இதயவானில் ஓர் வெண்ணிலா

    உன் அழகை எண்ணி பாடுவேன் கவிதை உலா

    உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதினிலே

    இன்பம் எனும் சுவர்க்கம் தோன்றிடும் வாசலிலே !

    நான் சந்திரன் என்றால் நீ மலர்ந்திடும் அல்லிப் பூ

    நான் இமை என்றால் நீ என் கண்

    நான் உடல் என்றால் நீ என் உயிர்.

    நான் பேச்சு என்றால் நீ என் மூச்சு .

    காதல் எனும் மொழி பேச வருவேன் உன் வாசலுக்கே

    விழி நிறைய நீர் சுமந்து வழி நனைய உன்னை காண்பதற்கே

    உன்னை நான் பார்க்கும்போது நான் ஊமையாகின்றேன்

    உன்னை சிறை வைப்பேன் என்றும் என் இதயத்தில் !

    ரா.பார்த்தசாரதி

    Share
  • ஒரு தாயின் ஏக்கம்

       ரா.பார்த்தசாரதி

     

    நீ அயல்நாடு  சென்றாய் ! கடந்தன இருபது வருடங்கள் !

    நான் வளர்த்தேன், வீட்டின் பின்புறம் தென்னை, வாழை !

    இன்று அவைகள் உயர்ந்து  வளர்ந்து விட்டது !

    இவைகள் என் பசியையும்,  தாகத்தையும்   தணிக்கிறது!

     

    தினமும் இன்டர்நெட் மையத்திற்கு செல்வேன் !

    உன்னை ஸ்கைப்பில் காண ! உன் இரு வரி ஈமெயில்தான் பார்க்கமுடிந்ததே !

    பல நாள் ஈமெயில் தகவல் இல்லாமல் திரும்பியுள்ளேன் !

    மனமும், உள்ளமும் சோர்ந்து  தவிக்கின்றதே  !

     

    என்று உன்னை ஸ்கைப்பிளும்,  ஹாங் ஹௌட்டில் காண்பேனோ

    உன் நிலமைகண்டு நான் தவிக்கின்றேன்,

    ஏனோ, நீ அடிமைப்பட்டு அங்கே தவிக்கின்றாய் !

    நான் பச்சை தென்னை ஓலையில்  படுக்கும் முன்னே,

    என் உடம்பை  ஈக்கள் மொய்க்கும்  முன்னே,

    உனது  ஈமெயில், ஸ்கைப்பும்,ஹாங் ஹௌட்டிலும்

    என்  உ டலைக் காட்டும்மா !

    நான் தெரிந்துகொண்டது, பணம் எட்டிப்பார்க்கும்,

    பாசம், உறவு  இவைகள்  தொலைவில் நிற்கும் !

     

     

     

    Share
  • இயற்கையும், மனிதனும்! 

    -ரா.பார்த்தசாரதி 

    விதை  செடியாகி, மரமாகி நிமிர்ந்து நின்றதே!
    பூவாகி, காயாகி  கனிகளை கொடுக்கின்றதே!
    கதிரவன் ஒளி எல்லோர்க்கும் இன்றியமையாததே!
    அதன் ஒளியால் பல உயிர்கள் வாழ்கின்றதே!
    மழை மண்ணை நனைத்து  குளிர வைக்கின்றதே!
    இதுவே பயிருக்குச் சிறந்த நன் நீராகிறதே!
    நிலவும் குளிர்ச்சி தந்து தண்ணொளி வீசுகின்றதே!
    நிலவும், தென்றலும், நல்லுறக்கம்  அளிக்குதே!
    மனிதனே  மரங்களை அழித்துக் கூறுபோடாதே!
    நிலங்களை அழித்து வீடு மனை  ஆக்காதே!
    இயற்கையோடு இணைந்து வாழக் கற்றுக்கொள்!
    மரக்கன்றுகளை நட்டுச் சுற்றுப்புற சூழலை காப்பாற்றுங்கள்!
    நாடும், வீடும் சுத்தமாக இருந்தால் நோய்கள் அகலுமே!
    சுற்றுப்புறம்  அசுத்தமாய் இருந்தால் நோய்கள் வந்தடையுமே!

     

    Share
  • தொழிலாளர் தினம்  

    ரா.பார்த்தசாரதி

     

    கடவுள் எனும் முதலாளி,  கண்டு எடுத்த விவசாயி எனும்  தொழிலாளி

    வீதியை சுத்தம் செய்யும்   துப்புரவாளர்  எனும்  தொழிலாளி

    பூங்காவை சுத்தம் செய்யும் தோட்டக்காரன் எனும் தொழிலாளி

    சொல்லை வைத்து விளையாடும் கவிஞ்சன் எனும் தொழிலாளி !

    உழவுக்கும், தொழிலுக்கும்  வந்தனை செய்வோம்

    வீணில் உண்டு  களிப்போரை நிந்தனை செய்வோம்

    ஏரோட்டம் , நின்றால் , இங்கு காரோட்டம்  நிற்கும்

    விவசாயின் இறக்கம் , நாட்டில்  ஏற்படும்  கலக்கம்  !

    துப்புரவாளர்கள் நாட்டின் சுத்தத்திற்காக பாடுபடுகின்றான்

    பூந்தோட்ட தோட்டக்காரன் பூங்காவை அழகுற செய்கின்றான்

    அநீதிகள் நடப்பதை கவிஞ்சர்கள் எடுத்துரைக்க மறுக்கின்றான்

    ஆள்பவர்களும்,,அரசியல்வாதிகளும், தன்னையே காத்துக்கொள்கிறான்!

    தாய்தந்தையர், பட்ட கடனுக்கு பிள்ளைகள் கொத்தடிமை

    பலமணி நேரம் வேலை, படிப்பதற்கு நேரமில்லா  நிலைமை

    தீ பெட்டி , பட்டாசு தொழிலில்  சிறுவர்கள் கடன்பட்ட  கொத்தடிமைகள்

    இன்றும் தீர்க்கப்படாத அடிமைபட்டு கல்வியறிவு இல்லா சிறுவர்கள் !

     

    வியர்வினாலே  மேனி கரைந்து வெயிலாலே முகம் கறுத்து

    பசியாலே பலமும் குறைந்து, கேள்வி குறிபோல் முதுகு வளைந்து,

    துயரமடைந்த  கொத்தடிமைகள் இருக்கும்போது சந்தோஷ நாள் ஏது ?

    தொழிலாளர்களின்  மதிப்பை உணர்ந்து நலம்பெற செய்வது யாரு?

    தொழிலாளியின்  மதிப்பினை கார்ல் மார்க்ஸ் எடுத்துரைத்தான்

    இன்றைய முதலாளிகள் அதனை கவலையின்றி  மறுத்துரைத்தான்

    பேருக்காக தொழிலாளர் தினம் நாட்டில் கொண்டாடப்படுகின்றதே

    தொழிலாளர்களை  அடிமையாக முதலாளி மனம் நினைக்குதே !

    உலகை ஆளும் உழைக்கும் கரங்களே, ஒன்று கூடுங்களே

    இந்த நாடு முழுதும் மலரவேண்டும் புரட்சி மலர்களே !

    அடிமை எனும் மடமையை நீக்கி, உரிமையை நிலைநாட்டுங்கள்

    தொழிலாளர்  தினத்தை எண்ணியாவது வளம்பெற நினைத்திடுங்கள்  !

    Share
  • விளம்பியே விரும்புவதை தா !

     

    ஆண்டுக்கு ஆண்டு புது பெயருடன் பிறக்கின்றாய்

    அறுபது எண்ணிற்குள் அடங்கி வருகின்றாய்

    விளம்பி என்ற பெயருடன் பிறக்கின்றாய்

    நாங்கள் விரும்பியதை தர மறுக்கின்றாய் !

    புத்தாண்டிற்கு ஓர் தோரணம் கட்டுவோம்

    தமிழரிடையே ஒற்றுமை எனும் பாலம் அமைப்போம்

    ஆட்சியாளர்கள் அடிமைத்தனத்தை ஒழித்திடுவோம்

    நீதி,நியாத்தை என்றும் நிலை நாட்டிடுவோம் !

    நீரின்றி அமையாது இவ்வுலகம் என அறிந்ததே

    விவசாயம் நீரின்றி அழிவதும் எல்லோர்க்கும் தெரிந்ததே ,

    வாடிய பயிரை கண்டு வாடிய நந்தனாரே

    மனம் மாறாத தன்மையுடைய ஆட்சியாளர்களே !

    வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே அறிவுடைமை

    ஒன்று கூடி செயல் படுத்துவோம் நதிநீர் மேலாண்மை

    எங்கே சென்றிடும் காலம், அது நம்மை வாழவைக்கும்

    விளம்பி ஆண்டில் அடையவேண்டியதை அடைந்திடுவோம் !

    ரா.பார்த்தசாரதி

    Share
  • வளையல்

    ரா.பார்த்தசாரதி

     

     

    நன்மனத்துடன்  வளையல்களை அணிவிக்க கையை நீட்டச்சொன்னார்

    கைகளின்  அளவிற்கேற்ப வளையலை பெண்ணிற்கு அணிவித்தார்

    என்றுமே வண்ண  கண்ணாடி வளையல் அணிய விருப்பமுண்டு

    இதில் ஏழை, பணக்காரன் என்ற மாறுபாடு இல்லாமல் இருப்பதுண்டு!

     

    வண்ண வளையல் அணிய  கன்னிப்பெண்களுக்கு அதிக விருப்பமுண்டு

    அணிந்தவுடன் அவள் முகத்தில் புன்னகை மலர்வதுண்டு

    அந்த  வலையோசையுடன் பிறர்க்கு காண்பிப்பதில் பெருமையுண்டு

    வலையோசையும், மெட்டிஒசையுமே ஆடவன் மனதை அசைப்பதுண்டு!

     

    ஆபரணங்களிலே வளையலே பெண்களை அதிகம்  மகிழ்விக்கும்

    வலையோசையும், மெட்டி ஓசையுமே, ஈர்க்கும் தன்மை  அதிகம்

    பெண் வளையல்களை  அணிவதன் காரணம்தான்   ஏனோ ?

    கணவன் தன்னை வளைய,வளைய வருவதற்குத்தானோ ?

     

    தாய்மையின் சிறப்பை, வளைகாப்பின் மூலம் சிறப்படையச்செய்யுதே

    வண்ண வளையல்கள் அணிந்த கருவுற்ற  தாயும் மகிழிச்சி அடைந்ததே

    தானும் அணிந்து, பிறர்க்கும் அதனை வெகுமதியாய் கொடுக்கப்படுதே

    வளையலின் ஓசை அவள் குழந்தைக்கும், கணவனுக்கும் சொந்தமானதே !

     

     

     

     

    Share
  • குற்றமும், குறையும்

      ரா.பார்த்தசாரதி

     

    குற்றம்  சொல்லவும், குறைகளை பேசவும் முற்றம் தேவையில்லை

    வென்றவனை கண்டால் அதிர்ஷ்டம்  என்று அலட்டிக்  கொள்வர்

    தோற்றவனை  கண்டால் இது தேவைதானா என எகத்தாளம் பேசுவர்

    உள்ளவனை  கண்டால் கொள்ளை அடித்த பணம் என குற்றம் சொல்வர்

     

    குற்றம் சொல்பவன் என்றும் தன்குறையினை நினைக்க மாட்டார்

    கட்டின   வீட்டிற்கு நம் முன்னே குறை சொல்பபவர்கள் இருப்பர்

    வென்றவனை கண்டால்  அதிர்ஷ்டம் என்று அலட்டிக் கொள்வர்

    இல்லாதவனை கண்டால் பிழைக்கத் தெரியாதவன்  எனக் கூறுவர் !

     

    தப்பு செய்தவன்  தண்டனை பெற்றால், சட்டம் சரியில்லை என்பர்

    தப்பு செய்யாதவன் தண்டனை பெற்றால் சரியான நீதி  என்பர்

    பிழைப்பு தேடி பிற நாட்டிற்கு சென்றால் பேராசைக்காரன் என்பர்

    உழைப்பைத் தேடி உள் நாட்டில்  உலாவினால் ஊர் சுற்றி என்பர் !

     

    ஊருக்கு உதவினால்,  ஊர் கழுதை   என்று  பட்டம் சூட்டுவர்

    சும்மா இருந்தால் சோம்பேறி என்று  முத்திரை   குத்துவர்

    பிறர் குறை காண்பவன், தன் குற்றம்,குறைகளை உணர மாட்டார்

    இறைவனே புலவன் பாட்டில் குற்றம் கண்டுபிடித்தார் என்பர் !

     

    குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என  யாவரும் நினைப்பதில்லை

    குற்றம் கடிதலை பற்றி வள்ளுவன் கூறுவதை செவிசாய்ப்பதில்லை

    இறுமாப்பு, சீற்றம், இழிந்தகுணம் இவை குற்றத்தின் தூண்டிலாகும்

    குற்றங்களுக்கு  அஞ்சி நடப்பவன் மனமே மாணிக்க கோவிலாகும் !

     

     

     

    Share
  • கண்ணால் காண்பதும்

     

     ரா.பார்த்தசாரதி

     

    கண்ணால்   காண்பதும்,  மனத்தாலே நினைப்பதும்,

    கண்ணால்  உறவாடி,  உள்ளத்தால்  தவிப்பதும்

    காதலன், தன்  காதலை  காதலியிடம் உணர்த்துவதும்

    காதலர்கள்  இரு பார்வைகளால்  சொந்தமாவதும் !

     

    கண்ணிற்கு இன்றியமையாத  ஒன்று  இரக்கமோ

    கண்ணின் இரக்கமே,  பாசமாய்   மாறுமோ

    காதலனிடம், இரு விழிகள்  சிறகடித்து  பேசுமோ

    நினைக்கத்  தெரிந்த மனதிற்கு மறுக்கவும் தெரியுமோ !

     

    கண்ணால் காண்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்

    நல்லதையும், கெட்டதையும் வெளிப்படுத்தும் கண்களே

    மனம்  நினைப்பதை, கண்கள் என்றும்  மறுக்கும்

    கண்கள் சொல்வதை  மனம் நினைக்க மறுக்கும் !

     

    கண்கள் பார்க்காததை  மனம்  மறுக்குமா

    மனதினால்  தியானம்  செய்தால் ஞானம் கிடைக்குமா

    கண்களோடு கண்கள் கலந்தால் காதல் உண்டாகுமா

    நினைக்கத்  தெரிந்த  மனதிற்கு மறக்கத்  தெரியுமா !

     

    கண்களின் வார்த்தைகள் புரியாதா, காத்திருப்பதும் தெரியாதா

    இரு கண்கள்  சந்திப்பதால் என்றும்  காதல் மலராதா

    கண்ணின் அருகே, இமை இருந்தும் கண்கள் பார்ப்பதில்லை

    துணைவன் அருகில் இருந்தும், அவனது அருமை தெரிவதில்லை!

     

     

     

     

     

     

    Share
  • மழைநீர் போல

     

     ரா.பார்த்தசாரதி

     

     

    மழை  வேண்டாத  மக்கள்  உண்டோ !

    மழைநீர்  சேமிக்க  வழியும் உண்டோ !

    மழை வேண்டி யாகமும்,பூஜையும் நடக்கின்றதே!

    ஒரு சிலர் செய்த பாவத்தால் மழை வர தயங்குதே !

     

    மழைநீர்  இன்று மக்கள்  உயிரை காக்கும்  உயிர் நீர்

    மழைநீர் இல்லையெனில் பசும்புல்லையும் காணமுடியாது

    மழைநீர் வெள்ளமாய் உருவெடுத்து பலவற்றை அழிக்கிறது

    மழைநீர் இன்மையால்   பல இடங்கள் வறட்சியாயிருக்கிறது

     

    மழைநீரை  தேக்கி வைக்க திட்டங்களை அரசு செய்யவேண்டும்

    மழைநீர் வீணாவதை தடுக்க முயற்சி  செய்யவேண்டும்

    நதிநீர்  வீணாகி  கடலில் கலப்பதை தடுக்கவேண்டும்

    ஆறுகளையும் குளங்களையும்  தூர் வார  வேண்டும்

     

    மழைநீர் திட்டம் வீடு வரைக்கும் செயல் படுத்தியதே

    வெள்ளம் வரும்போது மழை நீரை சேமிக்க மறந்ததே

    மக்களுக்கு உதவியும், நிவாரணங்களும் அளிக்கப்பட்டதே

    மழைநீர் நிலத்தடியில் சேர்க்காமல் கடலில் கலந்ததே!

     

    மழைநீர்   மக்களுக்கும், விவசாயத்திற்கும் இன்றியமையாததே

    மழைநீரை அணையிலும், நிலத்தடியிலும் சேமிப்பது நல்லதே

    நீரின்றி  அமையாது உலகம் மக்கள் வாழ்க்கையும் சரிவர  நடக்காதே

    பருவ மழை பொய்த்ததாலே   மழைநீர்  தட்டுப்பாடு  ஏற்பட்டதே !

     

     

    Share
  • தனிமனிதன் ஒழுக்கம்

     

    ரா.பார்த்தசாரதி

     

    நிதி நீச்சலடிப்பதால்,  நீதி அதனை எதிர்த்து நிற்க தவிக்குது

    அதிகாரம் எதையும் செய்ய துணிவதால்,அமைதி அல்லல்படுகிறது

    பழக்க வழக்கங்கள் பாழானதால், தனிமனிதன் ஒழுக்கம் நிலைகுலைந்தது

    காலில் விழுந்தாலே காரியம் முடிகிறது, இதில் மனிதநேயம்   எங்கே?

     

    நீதிநெறிகள் பித்தலாட்டமாய் இருப்பதால் தனிமனிதஒழுக்கம் மறைந்தது

    காந்தி தேசம் என்று சொல்லி,பிராந்தி கடையால் வாந்தி தேசமாயிற்று

    தனிமனிதன் ஒழுக்கம் ஏற்படின், காவலும்,நீதித்துறையும் குறையும்

    தனிமனிதர்கள் சேர்ந்தாலே ஓர் கூட்டுவுறவு அமைப்பு உண்டாகும் !

     

    தனிமனிதன்  ஓட்டுரிமையை அட்சய பாத்திரமாக நினைத்துவிட்டான்

    அதனையே பணத்திற்காக பிச்சையிட்டு, பிச்சைக்காரனாகி விட்டான்

    பணத்தை கொண்டு மக்களை அடிபணியவைத்து அராஜகம் செய்கிறான்

    எதிர்த்து கேட்போரை கட்டப்பஞ்சாயத்தை காட்டி பயமுறுத்துகின்றான் !

     

    தனிமனித ஒழுக்கம்  பணத்தால் சீரழிந்து மக்களை படுகுழியில் தள்ளும்

    ஒன்று கூடி காந்திய வழியில் போராடினால் நமக்கு நன்மை கிடைக்கும்

    ஒன்று கூடி எதிர்த்தால், நியாயமும், தீர்வும் விரைவில்  கிடைக்கும்

    நமது ஆன்மிகமும், பண்பாடும்,தனிமனிதன் ஒழுக்கதை நிலைநாட்டும் !

     

     

     

     

     

     

    Share
  • மனைவி அமைவதெல்லாம்!

     ரா.பார்த்தசாரதி

     

    இளைஞனே !   மனைவியை தேர்ந்தெடுப்பதில்  எச்சரிக்கையாய் இரு

    அவசரத்தில் கல்யாணம் பண்ணி  சாவாசத்தில் சங்கடப்படாமல் இரு

    புற அழகைப் பார்க்கும்போது உடலும், மனமும இச்சை கொள்ளாமல் இரு.

    பார்த்தாலே கவர்ந்து இழுக்கும் அழகைக் கண்டு மயங்காமல்  இரு.

     

    பூரித்து நிற்கும் சரீரத்தில் உன் பார்வை லயித்துவிடாமல் கவனமாய் இரு

    எந்த பெண்ணை பார்த்தாலும், சரியான கண்ணோட்டத்தில் பார்க்க விரும்பு

    ஆத்ம பூர்வமாய், பார்க்கும் பார்வை உனது எண்ணத்தில் தோன்றட்டும்

    காதல், அன்பு  என்பது ஆத்மாவின் ராகம் அல்ல, சரீரத்தின் தாளமே !

     

    பெண் பேசும் போது, கனிவு, மரியாதை தெரிந்தவளா என எண்ணிப் பாரு

    அகங்கார பேச்சு, கட்டளை இடும் தோரணைகளை நினைத்துப் பாரு

    படித்தும் கர்வம் கொள்ளாமல், ஆடம்பரம்  இல்லாமல் இருப்பதை பாரு

    உன்  வார்த்தைக்கும், பேச்சுக்கும் மதிப்பு அளிப்பவளா என எண்ணிப் பாரு!

     

    அழகும், ஆடம்பரமும், நிலையற்றது, குணம் ஒன்றே மதிப்பளிக்கும்

    பெண்ணின் பார்வை ஆணை நோக்கும்போது அச்சம்,நாணம் தோன்றும்

    காலப்போக்கில் ஆண், பெண் வேலைக்கு செல்வதால் இவை மாறும்

    ஆடவனின் அழகு அதிர்ச்சி தந்தாலும், தன் குல இயல்புடன் நோக்கவேண்டும்

     

    மனைவி கணவனின் சினத்தை தனிப்பவளாக இருக்க வேண்டும்

    கோபத்தை எண்ணெய் ஊற்றி பெரிது படுத்தாமல் இருக்க வேண்டும்

    கணவன் அறிவாளியானாலும்,கெட்ட மனைவியால் வாழ்க்கை பாழ்படும்

    மனைவி அறிவாளியாக இருந்தால், மூடனும் அறிவாளியாக ஆவான் !

     

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமே

    கணவன் பெருமை அடைவதெல்லாம் மனைவி வந்த நேரமே

    மனைவி உணவு அளிப்பதில் தாயாக இருக்கவேண்டும்

    மனைவி மந்திரியாகவும்,கட்டிலில் கணிகையாகவும் இருக்க வேண்டும்

     

    கணவன் என்றாலே கண் + அவன்  என்பதாகும்

    அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும்

    மனைவி, கணவன் இடையே   ஊடல், கூடல் இருக்கும்

    ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே வாழ்க்கை இனிக்கும்!

     

     

    Share
  • சுதந்திரம் எங்கே

    ரா.பார்த்தசாரதி

     

    எழுபத்தொன்று ஆண்டுகள் சுதந்திர காற்றை சுவாசிக்கின்றோம்

    பெயரளவில்  வளர்ச்சியினை   கண்துடைப்பாக காட்டுகின்றோம்

    முக்கிய திட்டங்களுக்கு அரசாங்கம், முன்னுரிமை கொடுப்பதில்லை

    நதிநீர்  இணைப்பும்,  விவசாயிகளின் குறைகள் தீர்க்கப்படவில்லை !

     

    இன்று சுதந்திர நாட்டின் நிலைமை என்ன   நினைக்கத்தோன்றுதே

    அண்டை மாநிலங்களே  உதவி  அளிக்க மறுக்கிறதே

    ஜாதி, மத  பிரிவினையால் எல்லா திட்டங்களும் முடக்கப்படுகிறதே

    அரசியல் தலைவர்கள் ஒற்றுமை விலகி, பிளவு ஏற்படுகின்றதே !

     

    அன்றைய அரசியல் தலைவர்கள் நாட்டிற்காக பாடுபட்டனரே

    இன்றைய அரசியல் தலைவர்கள் தனக்காக பாடுபடுகின்றனரே

    லஞ்சமும், தீவிரவாதமும் எங்கும் தலைவிரித்து ஆடுகின்றதே

    கோடி, கோடியாக பணம் மந்திரிகள் கைகளில் புழங்குகிறதே     !

     

    இன்று சுதந்திரமாக எதிர்க்கவோ, எழுதவோ துணிவு    இல்லை

    பத்திரிகைகளும், இலைமறை,காய்மறைவாய்  வெளிப்படுத்துதே

    பத்திரிகை சுதந்திரமும், அரசியல் ஆதிக்கத்தால் ஒடுக்கப்படுகிறதே

    அரசியல் செல்வாக்கால் எல்லாவற்றையும் அடிபணிய வைக்கிறதே !

     

    சுதந்திரத்திற்காக  தன் உயிரையும் தியாகம்  செய்தனர்  அன்று

    சுதந்திரமாக கோடிகணக்கில் பணம் கொள்ளையயடிக்கின்றனர் இன்று

    நெஞ்சு பொறுக்கவில்லையே இந்த நிலை கெட்ட  அரசியல் அராஜகம்

    மக்களே ! இன்றே எழுமின் கடைசி வரை போராடி எதிர்த்து வெல்வீர்!

     

    சுதந்திர நாட்டில், சுதந்திரம் எங்கே என கேட்க தோணுதே?

    மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசியல்  அமையுமா

    நல்ல அரசியல் தலைவர்கள் ஆட்சிக்கு வரவேண்டாமா

    எழுபத்தோராவது சுதந்திர தினம் இதற்கு விடை காணுமா ?

    Share