ரா.பார்த்தசாரதி

 

கண்ணால்   காண்பதும்,  மனத்தாலே நினைப்பதும்,

கண்ணால்  உறவாடி,  உள்ளத்தால்  தவிப்பதும்

காதலன், தன்  காதலை  காதலியிடம் உணர்த்துவதும்

காதலர்கள்  இரு பார்வைகளால்  சொந்தமாவதும் !

 

கண்ணிற்கு இன்றியமையாத  ஒன்று  இரக்கமோ

கண்ணின் இரக்கமே,  பாசமாய்   மாறுமோ

காதலனிடம், இரு விழிகள்  சிறகடித்து  பேசுமோ

நினைக்கத்  தெரிந்த மனதிற்கு மறுக்கவும் தெரியுமோ !

 

கண்ணால் காண்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்

நல்லதையும், கெட்டதையும் வெளிப்படுத்தும் கண்களே

மனம்  நினைப்பதை, கண்கள் என்றும்  மறுக்கும்

கண்கள் சொல்வதை  மனம் நினைக்க மறுக்கும் !

 

கண்கள் பார்க்காததை  மனம்  மறுக்குமா

மனதினால்  தியானம்  செய்தால் ஞானம் கிடைக்குமா

கண்களோடு கண்கள் கலந்தால் காதல் உண்டாகுமா

நினைக்கத்  தெரிந்த  மனதிற்கு மறக்கத்  தெரியுமா !

 

கண்களின் வார்த்தைகள் புரியாதா, காத்திருப்பதும் தெரியாதா

இரு கண்கள்  சந்திப்பதால் என்றும்  காதல் மலராதா

கண்ணின் அருகே, இமை இருந்தும் கண்கள் பார்ப்பதில்லை

துணைவன் அருகில் இருந்தும், அவனது அருமை தெரிவதில்லை!

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.